தெரியாததைக் கேளுங்கள்....

முயன்று பார்த்து கருத்து பதிந்ததற்கு நன்றி, நானும் இது சம்ப்ந்தமாக தகவல் கிடைத்தால் இங்கே பதித்து அறிய தருகிறேன்.
 
நண்பர்களே.. இது எனது சந்தேகமல்ல... ஒரு தேவை.

எனது நண்பரொருவர் பல்கலைக்களகத்தில் முகாமைத்துவம் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். தற்போது அவர் Impact of training & Employees job performance, in banking sector என்னும் தலைப்பில் Desi ஒன்றை செய்யவேண்டி இருக்கிறது. இதற்காக தரவுகளை இணையம் மூலம் பெற்றுக்கொள்ள என் உதவியை நாடியுள்ளார். (எனக்கென்னதெரியும்...?).
னீங்கதான் உதவணும்...! மேற்படி தலைப்பில் அல்லது அது சம்பந்தபட்ட தலைப்புகளில் ஏற்கனவே இவ்வாறான கல்வி செயற்பாடுகளை மேற்கொண்டிருக்ககூடிய நண்பர்கள் அவற்றை எனக்கு தந்து உதவுவீர்களா...? அல்லது, தகுந்த இணையத்தளத்தை இனங்காட்டியாவது உதவுங்களேன்..!

என் மின்னஞ்சல் முகவரிக்கும் தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வளங்கலாம்.
jptheepan@yahoo.com

உங்கள் உடனடி ஆதரவை எதிர்பார்க்கிறேன்.
 
Last edited:
அன்பு மஸாகி,

சாதா கார்பனின் அணு எடை 12.
காஸ்மிக் கதிர்களால் உண்டாகும் ஐசோடோப் கார்பனின் எடை 14.
உயிருள்ளவை காற்றில் உள்ள கார்பன் - டை- ஆக்ஸடை உள்வாங்கி
வளரும்போது 12-கார்பனும், 14 -கார்பனும் காற்றில் உள்ள அதே விகிதத்தில் அவற்றின் உடம்பிலும் இருக்கும்.

உயிர் பிரிந்தபின்னர், 14-கார்பன் குறைய ஆரம்பிக்கும்.
பாதியாக 5730 ஆண்டுகள்.
கால் பாகமாக 11460 ஆண்டுகள் இப்படி.
எனவே ஒரு உயிர் பிரிந்தது 50000-60000 அண்டுகள் வரை முன்னரா என தோராயமாக இந்தக் கணிப்பில் சொல்ல முடியும்.
அதைத் தாண்டி மில்லியன் கணக்குக்கு இது சரிப்படாது.

உயிரற்ற பாறை ( எரிமலைப்பாறை) போன்றவற்றை காலக்கணக்கிட
வேறு தனிம ஐசோடோப்புகள் ( ரேடியும், யுரேனியும், ) இப்படி விசேஷ முறைகள் உண்டு.

எல்லா கணக்குகளும் தோராயமானவையே.

இங்கே மேல் விவரங்கள்:

http://www.answersingenesis.org/docs2002/carbon_dating.asp

http://www.howstuffworks.com/carbon-14.htm

http://en.wikipedia.org/wiki/Radiocarbon_dating

http://hyperphysics.phy-astr.gsu.edu/hbase/nuclear/cardat.html

அடடே.. அசத்திட்டீங்க..
நீங்கள் இளசு அல்ல - பெருசு...

நட்புக்கு - மஸாகி
19.03.2008
 
பிரேசில் நாட்டை பற்றி தெரிந்தவர்கள் கூறவும்
 
அன்பு நண்பர்களே,

ஒருவர் இணையத்தைப் பயன்படுத்தும்போது,
அவருடைய IP Address யிலிருந்து
அவர் இணையத்தை பயன்படுத்திய நாட்டைக் கண்டுபிடிக்கலாம் என்கிறார்களே - அதனை எவ்வாறு கண்டுபிடிக்கிறார்கள்
என்பதை யாராவது விளக்க முடியுமா..?

நட்புக்கு - மஸாகி
17.06.2008
 
என் கேள்வியை பார்த்து யாரும் சிரிக்க கூடாது. இவ்வளவு நாளும் இது தெரியாமல்தானா இதையெல்லாம் உண்டாயென நகைக்காமல்:icon_ush: சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் நண்பர்களே.:icon_b:

நாம் உண்ணும் பல பதார்த்தங்களின் மூலம் எதுவென்பதில், அவை எப்படி தயாரிக்கப் படுகின்றன என்பதிலேயே என் சந்தேகம்.

1) பாயாசம் செய்ய பயன் படும் சவ்வரிசி. (மரவள்ளி கிழங்கு சீவல்களிலிருந்தும் பெறப்படுவதனெ யாரோ சொன்னார்கள். உண்மையா...)

2) உப்புமா, லட்டு போன்றன செய்ய பயன்படும் ரவா (ரவை).

3) நூடில்ஸ்.

4) அவல் (எல்லா வகை அரிசியிலிருந்தும் இது பெறப்படலாமா...)

5) மைதா மா. (கோதுமை மா என்பதும் மைதா மா என்பதும் ஒன்றா...? அல்லது என்ன வித்தியாசம்...?)

6) புழுங்கல் அரிசி. (இதன் தேவை என்ன?)

7) மைசூர் பருப்பு (இது எப்படி இருக்கும்... செடியில்/பயிரில்?)

8) மாசி (கருவாடு). இது குறிப்பிட்ட வகை மீனிலிருந்து தயாரிக்க படுவதா.. அல்லது எல்லா வகை மீனிலிருந்தும் குறித்த முறையில் தயாரிக்க படுவதா..?

9) அப்பளம் (வண்ண வண்ண நிறங்களில் சின்ன சின்ன வடிவங்களிலெல்லாம் இப்போ வருகிறது...)

10) மீனெண்ணை குளிசை. (இதன் வெளித்தோல் எதனால் ஆனது...? எண்ணை எந்த வகை மீன்களிலிருந்து எடுக்க படுகிறது..?


இப்போதைக்கு இவ்வளவுதான். விடைகள் வந்தபின் என் சந்தேகத்தை தொடர்கிறேன்.
 
1) பாயாசம் செய்ய பயன் படும் சவ்வரிசி. (மரவள்ளி கிழங்கு சீவல்களிலிருந்தும் பெறப்படுவதனெ யாரோ சொன்னார்கள். உண்மையா...)

ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுவது உண்மைதான்

2) உப்புமா, லட்டு போன்றன செய்ய பயன்படும் ரவா (ரவை).

ரவை கோதுமையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

3) நூடில்ஸ்.

கோதுமை மாவு, அரிசி மாவு, கிழங்கு மாவு, மக்காச்சோள மாவு மைதா மாவுன்னு பலவகைப்பட்ட மாவுகளில் இருந்து நூடுல்ஸ் தயாரிக்கலாம்..

4) அவல் (எல்லா வகை அரிசியிலிருந்தும் இது பெறப்படலாமா...)

எல்லா வகை அரிசியில் இருந்தும் அவல் தயாரிக்கலாம். ஆனால் அளவு மற்றும் ருசி வித்தியாசங்கள் வரும். அதுக்காக நொய்யரிசி, தினை அரிசின்னு முயற்சி செய்யாதீங்க.

5) மைதா மா. (கோதுமை மா என்பதும் மைதா மா என்பதும் ஒன்றா...? அல்லது என்ன வித்தியாசம்...?)

http://www.arusuvai.com/tamil/forum/no/1817

6) புழுங்கல் அரிசி. (இதன் தேவை என்ன?)

நெல்லை அரைவேக்காடு வேகவைத்து உலரவைத்து பிறகு அரைத்து உமி நீக்கிய அரிசி புழுங்கல் அரிசி எனப்படும். உமியில் உள்ள வைட்டமின்கள் இதன் மூலம் அரிசிக்குள் இரங்குகின்றன. பச்சை அரிசியை விட புழுங்கல் அரிசி வைட்டமின்கள் அதிகம் கொண்டது,

7) மைசூர் பருப்பு (இது எப்படி இருக்கும்... செடியில்/பயிரில்?)

செடி

8) மாசி (கருவாடு). இது குறிப்பிட்ட வகை மீனிலிருந்து தயாரிக்க படுவதா.. அல்லது எல்லா வகை மீனிலிருந்தும் குறித்த முறையில் தயாரிக்க படுவதா..?

மாசிக் கருவாடு என்பது வஞ்சிரம் மீனை கருவாடாக்குவதால் கிடைப்பது. அனைத்துவகை மீன்களையும் கருவாடாக்கலாம். அதே போல் ஆட்டு மாமிசம், கோழி மாமிசம் போன்றவற்றையும் உப்பு நீரில் ஊற வைத்து காய வைத்து உப்புக் கண்டமாக்கிச் சேமிக்கலாம்.தேவைப் படும்பொழுது கல்லில் நசுக்கி தண்ணீரில் அவிப்பதால் மாமிச உணவைச் சமைக்கலாம்,

9) அப்பளம் (வண்ண வண்ண நிறங்களில் சின்ன சின்ன வடிவங்களிலெல்லாம் இப்போ வருகிறது...)

அப்பளம் உளுந்து மாவு, அரிசிமாவு, சாதம், ஜவ்வரிசி இப்படி பலவிதமாவுகளில் இருந்து தயாரிக்கப் படுகிறது. ருசிக்காகவும் மணத்திற்காகவும் மிளகாய், வெந்தயம், பெருங்காயம், சீரகம், சில காய்வகைகள், எள், உப்பு இப்படி பல பொருட்கள் கலக்கப்படலாம். தமிழ்நாட்டு அப்பளம் உளுந்த மாவு / வெந்தயக் கலவையிலிருந்துதான் அதிகம் தயாரிக்கப் படுகிறது

10) மீனெண்ணை குளிசை. (இதன் வெளித்தோல் எதனால் ஆனது...? எண்ணை எந்த வகை மீன்களிலிருந்து எடுக்க படுகிறது..?

மீனெண்ணை மற்றும் பூண்டு குளிகைகள் சாஃப்ட்ஜெல் பேக்கேஜிங் முறையில் தயாரிக்கப் படுகின்றன,

கூகுளாய வித்மஹே விக்கிபீடியாய தீமஹி
தன்னோ நெட்சர்ச் ப்ரச்சோதயாத்.


http://en.wikipedia.org/wiki/Fish_oil
http://en.wikipedia.org/wiki/Softgel
 
Last edited:
ஆஹா... அசத்திட்டிங்க கண்மணி. இப்போ மேலதிக விளக்கத்திற்கு...

1) ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுவது உண்மைதான்

ஆனால், அதிலிருந்து மட்டும்தான் தயாரிக்க படுகிறதா... அல்லது வேறு பொருட்களிலிருந்தும் தயாரிக்க படுகிறதா...?

7) செடி
அது எப்படி இருக்கும்... பயறைப் போலவா...?

10) மீனெண்ணை குளிசை. (இதன் வெளித்தோல் எதனால் ஆனது...? எண்ணை எந்த வகை மீன்களிலிருந்து எடுக்க படுகிறது..?
 
ஆஹா... அசத்திட்டிங்க கண்மணி. இப்போ மேலதிக விளக்கத்திற்கு...

1) ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படுவது உண்மைதான்

ஜவ்வரிசி மற்ற மூலப்பொருட்களில் இருந்து தயாராவதாக இதுவரை எந்தச் செய்தியுமில்லை.

7) செடி
அது எப்படி இருக்கும்... பயறைப் போலவா...?

மைசூர் பருப்பு, துவரம் பருப்பைப் போன்று செடியில் காய்ப்பது..
ஹி ஹி துவரம் பருப்பு எப்படின்னு கேட்காதீங்க ஆமாம்.. உண்மையான பெயர் மசூர் தால்.. வண்ணம் வெளிப்புரம் பழுப்புதோல் பருப்பு செவ்வண்ணம்.

http://en.wikipedia.org/wiki/Masoor_dal
 
மைசூர் பருப்பு, துவரம் பருப்பைப் போன்று செடியில் காய்ப்பது..
ஹி ஹி துவரம் பருப்பு எப்படின்னு கேட்காதீங்க ஆமாம்..

அடடா..... சந்தேகம் கேட்டதாலா ஒரேயடியா ஒண்ணும் தெரியாதுன்னு முடிவே கட்டிட்டியளா....

நன்றி நன்றி.

மீனெண்ணை குழிசைக்கு காயத்திரி மந்திரம் சொல்றதெல்லாம் நல்லால்ல.... அப்புறம் மத உணர்வ பாதிக்கிறதா யாராச்சும் கண்டனம் சொல்லிடுவாங்க...:D
 
அடடா..... சந்தேகம் கேட்டதாலா ஒரேயடியா ஒண்ணும் தெரியாதுன்னு முடிவே கட்டிட்டியளா....

நன்றி நன்றி.

என் மீனெண்ணை கேள்விக்கும் யாராச்சும் தெரிஞ்சவங்க பதில் சொல்லுங்க....

அதான் விக்கி விக்கி தந்திருக்கேனே
 
அதான் விக்கி விக்கி தந்திருக்கேனே

இன்னும் கேள்வி கேட்டா விக்கி விக்கி அழுகிற பழக்கம் விட்டு போகலையா...:aetsch013:
சரி சரி... இனி கேக்கல...:D
நன்றி கண்மணி.. உடனடி பதில்களுக்கு.:icon_b:
 
"ரிஷிப் பிண்டம் இராத் தங்காது” என்பதற்கு என்ன அர்த்தம் என்று யாராவது விளக்கம் தெரிந்தவர்கள் சொல்லுங்ளேன்....
 
கண்மணியின் பதில்கள் அனைத்தும் அபாரம். குறிப்பாக மைதா மாவு பற்றிய விளக்கம் எனக்கு இன்றுதான் தெரியும். அதை விடக் கொடுமை இது பல்கலைக் கழகத்தில் நான் கேட்ட ஆசிரியர்களுக்கு தெரியாமல் போனது.

புழுங்கல் அரிசியின் விளக்கமும் மிகச்சரி. புழுங்கல் அரிசி ஒன்றையும் பச்சரிசியையும் ஒப்பிடுங்கள். புழுங்கல் அரிசி சற்று முழுமை பெற்றும், பச்சரிசி ஒரு முனையில் சற்று குறைபாட்டுடனும் காணப்படும். அரிசி அரை வேக்காடாக இருக்கும் போது அரிசியில் உள்ள கெலட்டின் அந்த குறையை நிறைத்து விடுமாம்.

முத்தான கேள்விகள் கேட்ட தீபனுக்கு நன்றி.

ஆமாம், தீபனின் ரூபாய்கள் கேள்விக்கும், என் பதாகை என்ற பதத்திற்கான பொருள் கேள்விக்கும் பதில்?

என் கேள்விக்கென்ன பதில்? பதாகைகள் என்றால் கொடி? ஆனால் வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்.

என் பதாகை தாங்கிய ............
தாமரை அவர்கள் விளக்க முடியுமா? (செல்வரானாலும் சரி கவிதாயினி தாமரையானாலும் சரி)
 
Last edited:
தீபன் புண்ணியத்தில் ( எனக்கும் முக்கால் பங்குக்கும் மேல் தெரியாது) கேள்விகள்..
கண்மணி கடாட்சத்தில் பதில்கள்...

நன்றி இருவருக்கும்!
 
அட... அப்ப மக்கள் பலரும் நம்மைப்போலதான் இருக்காங்களா....:lachen001::lachen001::lachen001:
 
ஆமாம், தீபனின் ரூபாய்கள் கேள்விக்கும், என் பதாகை என்ற பதத்திற்கான பொருள் கேள்விக்கும் பதில்?

முகிலன் நினைவுபடுத்தியபோது அதென்ன என் ரூபாய் சந்தேகம் என யோசிக்க தொடங்கி பின் பழைய பக்கங்களை தூர்வாரி கண்டுபிடித்தேன். மீழவும் அதையும் மேலும் விடவராமலிருக்கும் என் வேறு சந்தேகத்தையும் முகிலனின் பதாகை கேள்வி பதிவையும் இங்கு தருகிறேன். இப்பவாச்சும் விடை கிடைக்குதான்னு பாக்கலாம்.

அப்படியே, வலசு என்னும் புதியவர் ஒருவர் சில பதிவுகள் முன்பதாக ரிஷிப் பிண்டம் இராத் தங்காது என்பதற்கு என்ன பொருள் எனவும் கேட்டுள்ளார்... (இருக்கிற சந்தேகம் பத்தாதுன்னு புதுசு புதுசா கிளப்புறாங்கப்பா....). அதற்கும் பதில் தெரிந்தோர் சொல்லுங்க...

என் ரூபாய் சந்தேகமும் அதற்கு கிடைத்த பதிலும் தொடரும் என் சந்தேகமும்...
பணத்தை நாம் ரூபாய் எனும் அலகில் நம் நாடுகளில் அளவிடுகிறோம். ஒரு ரூபாய் என்பது சரி. அதையே பல ரூபய்களுக்கு சொல்லும்போது ரூபாய்கள் என்றல்லவா சொல்ல வேண்டும்....? உதாரணமாக, 10 ரூபாய் என்றால் உண்மையில் 10 ரூபய்கள் என்றல்லவா சொல்ல வேண்டும்...! ஆனால் நாம் அதய்யும் 10 ரூபாய் என்றுதானே சொல்கிறோம். எது சரி... ஒருமை பன்மையில் தவறில்லையா? ஆங்கிலத்தில் சரியாக பன்மையிலேயே குறிப்பிடுகிறார்கள்தானே...

நம் புழக்கத்தில் ஏற்பட்ட தவறு.

அப்படி சாதாரணமாய் சொல்லிவிட முடியாது... நம் நாட்டு தாழ் நாணயங்களில்கூட இப்படித்தான் அச்சிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 100 ரூபாய் தாளை எடுத்துப் பார்த்தால் அதில் தமிழில் 100 ரூபாய் என்றும் ஆங்கிலத்தில் one hundred rupees என்றும் அச்சிடப்பட்டுள்ளது. (இலங்கய் நாணயத்தையே நான் இங்கு குறிப்பிடுகிறேன். இந்திய நானயத்தை சரியாக நான் அவதானிக்கவில்லை.)
மேலும் ஆங்கிலத்தில் one hundred என வருவதால் அது ஒருமைதானே...? அப்படியானால் ஆங்கிலத்தில் rupee என்றுதானே சொல்லவேண்டும்? தமிழில் ரூபாய்கள் என்றும் ஆங்கிலத்தில் rupee என்றும் வரவேண்டியது ஏன் மாறி வருகிறது...? எனது சந்தேகத்தில் தவறு எங்கே உள்ளதென விளக்குவீர்ர்களா..?

விடை வராத மேலுமொரு சந்தேகம்...
பெற்றோலில் இருந்து மண்ணெண்ணை உருவாக்க முடியுமா? எவ்வாறு..?

முகிலனின் பதாகை சந்தேகம்...
வேட்டையாடு விளையாடு படத்தில் "பார்த்த முதல் நாளில்" என்று தாமரையின் வரிகளில் பாம்பே ஜெயஸ்ரீ உருகியிருப்பார் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அதில் " என் பதாகை தாங்கிய உன் முகம்" என்றொரு வரி வரும். பதாகை என்றால் "கொடி" என்ற பொருள் கொடுக்கும். ஆனால் இந்தப் பாடலில் அதே பொருளில் கையாளப் பட்டிருக்கிறதா இல்லை வேறு பொருளா என யாரேனும் விளக்க முடியுமா?
 
பெற்றோலில் இருந்து மண்ணெண்ணை உருவாக்க முடியுமா? எவ்வாறு..?

முடியும்...
polymerization என்ற முறையால் பேற்றோலில் இருந்து மண்ணெண்ணை உருவாக்க முடியும்...
 
என் கேள்வியின் மூலப்பதிவையும் பாருங்கள் பென்ஸ். இக் கேள்வி கேட்கப்பட்ட சூழ்நிலை அங்கு சொல்லியுள்ளேன்.
எவ்வாறு மாற்றலாம், அதற்காகும் செலவு, நவீன வசதிகள் தேவையா என்பது பற்றி சுருக்கமாக சொல்லலாமே...
 
சைவ உணவுகளில் அதிகம் சேர்க்கப்படும் அப்பளம் அல்லது பப்படம் அதிகமாக உண்பது உடலுக்கு நல்லதா? தீயதா?
 
Back
Top