Keelai Naadaan
New member
அன்பு நண்பர்களுக்கு வணக்கங்கள்.
இந்த திரியிலே கதைகளைப் பற்றி சிலாகித்து பேச விரும்புகிறேன்.
சிறுவயது முதலே வீட்டில் கதை கேட்டு வளர்கிறோம். சில கதைகள் நம் மனப்போக்கையும், வாழ்க்கையின் போக்கையும் மாற்றி விடுகின்றன.
செய்யுள் கவிதை வெண்பா போன்ற வடிவங்களை விட கதைகள் எளிதில் யாவர்க்கும் - பாமரருக்கும் விளங்கும் வண்ணம் இருக்கிறது.
கதைகள் படிப்பது நம் மனதை செம்மை படுத்துகிறது. வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளை விளக்குகிறது
பிறர் நிலையில் நம்மை வைத்து பார்த்து சிந்திக்க வைக்கிறது. சிலசமயங்களில் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்கிறது.
பல தரப்பட்ட மனிதர்களை, அவர்களின் பிரச்னைகளை புரியவைக்கிறது.
காலங்களை தாண்டி நம் முன்னோர்களின் வாழ்க்கையையும் அறிய தருகிறது.
நண்பர்கள் தங்களை பாதித்த, தங்களுக்கு பிடித்த கதைகளை பற்றியும் எழுதும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லோரும் எல்லா கதைகளையும் படித்தது கிடையாது.
இதன் மூலம் நாம் படிக்காத சில சிறந்த கதைகளை அறிமுகம், அடையாளம் காண முடியும் என நம்புகிறேன்.
நண்பர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.
இந்த திரியை துவக்க ஊக்கமளித்த அன்பு நண்பர் பாரதி அவர்களுக்கு மிகவும் நன்றி.
.........................................................................................................................................................
ஒரு பிடி சோறு - ஞான பீடம் திரு ஜெயகாந்தன்
கதை சுருக்கம்:
பக்கது வீட்டில் திருடி தின்று விட்டு வந்து, சிறுவர்களுக்கே உரிய செல்லத்துடன் வாங்கி சாப்பிட காசு கேட்கிறான் மண்ணாங்கட்டி சிறுவன். காசு இல்லாததால் திட்டுகிறாள் அவன் தாய் ராசாத்தி. அவள் நிறைமாத கர்ப்பினியாய் இருக்கிறாள். இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு பெண் மாரியாயி வந்து, வேலைக்கு போயிருக்கும் தன் புருஷனுக்கு எடுத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டதற்காக மண்ணாங்கட்டியை அடிக்கிறாள். ராசாத்திக்கும் மாரியாயிக்கும் வாய்தகராறு முற்றுகிறது. அடித்து கொள்கிறார்கள். அதற்குள் மாரியாயி புருஷன் மாணிக்கம் வந்து சத்தம் போட்டு சண்டையை நிறுத்துகிறான். இதற்கிடையில் சிறுவன் எங்கோ ஓடிவிட்டான்.
கோணி + கந்தல் பாய் + மூங்கில் தட்டி + சினிமா போஸ்டர் = ஒரு கூரை! என்ற நிலையில் உள்ள குடிசையில் வாழும் ராசாத்திக்கு வயிற்றில் பசி அல்லது வலி. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.
படுத்தவாறே கால்களை தேய்த்து கொண்டிருக்கும் போது மாரியாயி வருகிறாள். வலி வந்திடுச்சா என விசாரிக்கிறாள். ராசாத்தி தன் பசியை சொல்ல, மாரியாயி தன்னிடமிருந்த அரிசி கொண்டுவந்து தந்துவிட்டு விறகு சுமக்க போகிறாள் மாரியாயி. கடுமையான வலியோடு சுள்ளிகளை பற்ற வைத்து கஞ்சி காய்ச்சுகிறாள் ராசாத்தி. கடுமையான வலியுடனும் பசியுடனும் காலை தேய்த்து கொண்டு இடுப்பு சேலையை தளர்த்தி கொண்டும் சோறு கொதிக்கும் மணத்தை சுவாசித்தபடி ஊறுகாய் எடுத்து வைத்துகொண்டு நாக்கில் எச்சில் ஊற காத்திருக்கிறாள். அந்த நேரத்தில் பசியோடு வந்து விட்டன் சிறுவன் மண்னாங்கட்டி. பசிக்குது பசிக்குது என அழுது புரள்கிறான். ராசாத்தி தனக்கிருக்கும் பசியிலும் வலியிலும் அவன் முதுகில் சுளீரென போடுகிறாள். அவன் அதற்கெல்லாம் அசரவில்லை.
அவள் சாப்பிட வாயருகே கொண்டு போகும் நேரம், யம்மா எனக்கும்மா என அவன் கஞ்சி கலயத்தை எடுக்க, அவள் பிடுங்க.... கலயம் உடைந்து போகிறது.
கொட்டிய சோற்றை கையில் அள்ளியபடி ஓட்டம் எடுக்கிறான் மண்ணாங்கட்டி. வந்த கோபத்தில் கலயத்தை அவன் மேல் வீசி எறிகிறாள் ராசாத்தி. அழுகிறாள்.
அதே நேரத்தில் அவளுக்கு பிரசவ வலி வர துடிக்கிறாள். அவளுடைய ஒரே உறவான மகனை அழைக்கிறாள். ஒருவாய் சாப்பிட வந்தவனை விரட்டி விட்டோமே என அழுகிறாள்.
அப்படியே இறந்து போகிறாள்.
எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலை வீடு வந்த மண்ணாங்கட்டி தாயை பார்த்து பிரமை பிடித்தாற்போல் இருக்கிறான்
மாரியாயிக்கு இரவு சாப்பிடும் நேரத்தில் மண்ணாங்கட்டி நினைவு வர மாணிக்கத்திடம் அவனை அழைத்து வர சொல்கிறாள். மண்ணாங்கட்டியை தேடும் போது அவன்
சுடுகாட்டில் இருப்பதாய் சொல்கிறார்கள் அங்கிருக்கும் சிறுவர்கள். சுடுகாட்டில் நின்று கொண்டிருக்கும் மண்ணாங்கட்டியை அழைத்து ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார்கள்
அவனுக்கு சாப்பிட சோறு தரும்போது சோறை வெறித்து பார்க்கும் அவன் ஒரு கவள சோற்றை அங்கிருந்த தகர குவளையில் போட்டு கந்தல் துணியால் மூடி வைக்கிறான்
மாரியாயி அவனிடம் அதை சாப்பிட சொல்லும் போது
"அது... எங்கம்மாவுக்கு!" என்கிறான்
குறும்புத்தனமும் துடிதுடிப்பும் குடியோடிப்போய், சாந்தமும் ஏக்கமும் நிறைந்த அவன் கண்கள் மீண்டும் வானத்தை வெறித்தன. கண்களில் நீர் பளபளத்தது-
"என்னடா, அப்படிப் பார்க்கறே?" என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் மாரி.
"அம்மா...ஆ...ஆ!" - அழுகையில் குரல் கரகரக்க மாரியைப் பிடித்து அணைத்துக்கொண்டு கதறினான் மண்ணாங்கட்டி.
"மவனே!" என்று அவனை உச்சிமோந்து இறுகத் தழுவிக் கொண்டு அழுதாள் மாரி.
இந்த கதையை படிக்கும் ஒவ்வொரு முறையும் கண் கலங்குகிறேன்
ஒரு கதாசிரியன் இந்த அளவுக்கு அத்தனை கதாபாத்திரமாகவும் மாற முடியுமா என் அதிசயிக்கிறேன்.
கதாசிரியரை வணங்குகிறேன்
இந்த திரியிலே கதைகளைப் பற்றி சிலாகித்து பேச விரும்புகிறேன்.
சிறுவயது முதலே வீட்டில் கதை கேட்டு வளர்கிறோம். சில கதைகள் நம் மனப்போக்கையும், வாழ்க்கையின் போக்கையும் மாற்றி விடுகின்றன.
செய்யுள் கவிதை வெண்பா போன்ற வடிவங்களை விட கதைகள் எளிதில் யாவர்க்கும் - பாமரருக்கும் விளங்கும் வண்ணம் இருக்கிறது.
கதைகள் படிப்பது நம் மனதை செம்மை படுத்துகிறது. வாழ்வில் ஏற்படும் சூழ்நிலைகளை விளக்குகிறது
பிறர் நிலையில் நம்மை வைத்து பார்த்து சிந்திக்க வைக்கிறது. சிலசமயங்களில் நாம் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டவும் செய்கிறது.
பல தரப்பட்ட மனிதர்களை, அவர்களின் பிரச்னைகளை புரியவைக்கிறது.
காலங்களை தாண்டி நம் முன்னோர்களின் வாழ்க்கையையும் அறிய தருகிறது.
நண்பர்கள் தங்களை பாதித்த, தங்களுக்கு பிடித்த கதைகளை பற்றியும் எழுதும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
எல்லோரும் எல்லா கதைகளையும் படித்தது கிடையாது.
இதன் மூலம் நாம் படிக்காத சில சிறந்த கதைகளை அறிமுகம், அடையாளம் காண முடியும் என நம்புகிறேன்.
நண்பர்களின் ஆதரவை வேண்டுகிறேன்.
இந்த திரியை துவக்க ஊக்கமளித்த அன்பு நண்பர் பாரதி அவர்களுக்கு மிகவும் நன்றி.
.........................................................................................................................................................
ஒரு பிடி சோறு - ஞான பீடம் திரு ஜெயகாந்தன்
கதை சுருக்கம்:
பக்கது வீட்டில் திருடி தின்று விட்டு வந்து, சிறுவர்களுக்கே உரிய செல்லத்துடன் வாங்கி சாப்பிட காசு கேட்கிறான் மண்ணாங்கட்டி சிறுவன். காசு இல்லாததால் திட்டுகிறாள் அவன் தாய் ராசாத்தி. அவள் நிறைமாத கர்ப்பினியாய் இருக்கிறாள். இந்த நேரத்தில் பக்கத்து வீட்டு பெண் மாரியாயி வந்து, வேலைக்கு போயிருக்கும் தன் புருஷனுக்கு எடுத்து வைத்திருந்த உணவை சாப்பிட்டதற்காக மண்ணாங்கட்டியை அடிக்கிறாள். ராசாத்திக்கும் மாரியாயிக்கும் வாய்தகராறு முற்றுகிறது. அடித்து கொள்கிறார்கள். அதற்குள் மாரியாயி புருஷன் மாணிக்கம் வந்து சத்தம் போட்டு சண்டையை நிறுத்துகிறான். இதற்கிடையில் சிறுவன் எங்கோ ஓடிவிட்டான்.
கோணி + கந்தல் பாய் + மூங்கில் தட்டி + சினிமா போஸ்டர் = ஒரு கூரை! என்ற நிலையில் உள்ள குடிசையில் வாழும் ராசாத்திக்கு வயிற்றில் பசி அல்லது வலி. சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு.
படுத்தவாறே கால்களை தேய்த்து கொண்டிருக்கும் போது மாரியாயி வருகிறாள். வலி வந்திடுச்சா என விசாரிக்கிறாள். ராசாத்தி தன் பசியை சொல்ல, மாரியாயி தன்னிடமிருந்த அரிசி கொண்டுவந்து தந்துவிட்டு விறகு சுமக்க போகிறாள் மாரியாயி. கடுமையான வலியோடு சுள்ளிகளை பற்ற வைத்து கஞ்சி காய்ச்சுகிறாள் ராசாத்தி. கடுமையான வலியுடனும் பசியுடனும் காலை தேய்த்து கொண்டு இடுப்பு சேலையை தளர்த்தி கொண்டும் சோறு கொதிக்கும் மணத்தை சுவாசித்தபடி ஊறுகாய் எடுத்து வைத்துகொண்டு நாக்கில் எச்சில் ஊற காத்திருக்கிறாள். அந்த நேரத்தில் பசியோடு வந்து விட்டன் சிறுவன் மண்னாங்கட்டி. பசிக்குது பசிக்குது என அழுது புரள்கிறான். ராசாத்தி தனக்கிருக்கும் பசியிலும் வலியிலும் அவன் முதுகில் சுளீரென போடுகிறாள். அவன் அதற்கெல்லாம் அசரவில்லை.
அவள் சாப்பிட வாயருகே கொண்டு போகும் நேரம், யம்மா எனக்கும்மா என அவன் கஞ்சி கலயத்தை எடுக்க, அவள் பிடுங்க.... கலயம் உடைந்து போகிறது.
கொட்டிய சோற்றை கையில் அள்ளியபடி ஓட்டம் எடுக்கிறான் மண்ணாங்கட்டி. வந்த கோபத்தில் கலயத்தை அவன் மேல் வீசி எறிகிறாள் ராசாத்தி. அழுகிறாள்.
அதே நேரத்தில் அவளுக்கு பிரசவ வலி வர துடிக்கிறாள். அவளுடைய ஒரே உறவான மகனை அழைக்கிறாள். ஒருவாய் சாப்பிட வந்தவனை விரட்டி விட்டோமே என அழுகிறாள்.
அப்படியே இறந்து போகிறாள்.
எங்கெங்கோ சுற்றிவிட்டு மாலை வீடு வந்த மண்ணாங்கட்டி தாயை பார்த்து பிரமை பிடித்தாற்போல் இருக்கிறான்
மாரியாயிக்கு இரவு சாப்பிடும் நேரத்தில் மண்ணாங்கட்டி நினைவு வர மாணிக்கத்திடம் அவனை அழைத்து வர சொல்கிறாள். மண்ணாங்கட்டியை தேடும் போது அவன்
சுடுகாட்டில் இருப்பதாய் சொல்கிறார்கள் அங்கிருக்கும் சிறுவர்கள். சுடுகாட்டில் நின்று கொண்டிருக்கும் மண்ணாங்கட்டியை அழைத்து ஆறுதல் படுத்தி அழைத்து வருகிறார்கள்
அவனுக்கு சாப்பிட சோறு தரும்போது சோறை வெறித்து பார்க்கும் அவன் ஒரு கவள சோற்றை அங்கிருந்த தகர குவளையில் போட்டு கந்தல் துணியால் மூடி வைக்கிறான்
மாரியாயி அவனிடம் அதை சாப்பிட சொல்லும் போது
"அது... எங்கம்மாவுக்கு!" என்கிறான்
குறும்புத்தனமும் துடிதுடிப்பும் குடியோடிப்போய், சாந்தமும் ஏக்கமும் நிறைந்த அவன் கண்கள் மீண்டும் வானத்தை வெறித்தன. கண்களில் நீர் பளபளத்தது-
"என்னடா, அப்படிப் பார்க்கறே?" என்று அவனைப் பிடித்து உலுக்கினாள் மாரி.
"அம்மா...ஆ...ஆ!" - அழுகையில் குரல் கரகரக்க மாரியைப் பிடித்து அணைத்துக்கொண்டு கதறினான் மண்ணாங்கட்டி.
"மவனே!" என்று அவனை உச்சிமோந்து இறுகத் தழுவிக் கொண்டு அழுதாள் மாரி.
இந்த கதையை படிக்கும் ஒவ்வொரு முறையும் கண் கலங்குகிறேன்
ஒரு கதாசிரியன் இந்த அளவுக்கு அத்தனை கதாபாத்திரமாகவும் மாற முடியுமா என் அதிசயிக்கிறேன்.
கதாசிரியரை வணங்குகிறேன்
Last edited by a moderator: