முழு மதுவிலக்கு இனி தமிழகத்தில் சாத்தியமா?

ravisekar

New member
நண்பர்களே

பல லட்சம் பேர் அடிமையான மா-நிலத்தில் பலப்பல லட்சம் பேர் பழகிவிட்ட காலத்தில் சில அரசியல் கட்சிகள் வாக்குறுதிப்படி முழு மதுவிலக்கு நடைமுறைக்குச் சாத்தியப்படுமா?

வந்தாலும் கள்ளச்சாராயமும் பெர்மிட்டும் லஞ்சமும் தாண்டவமாடி கத்தி போயி வாலு வந்திச்சே என கதற வைக்குமா?

என்ன நினைக்கிறீங்க? சொல்லுங்க. அலசுங்க.


-அன்பன் ரவிசேகர்
 
முழு மதுவிலக்கு முற்றிலும் சாத்தியமே....

அரசுக்கு வருமானம் அவசியம்தான். ஆனால் அரசின் வருமானம் எப்படி இருக்க வேண்டும்?

மக்களின் வருமானத்தின் ஒரு பகுதியாக அரசின் வருமானம் இருக்க வேண்டுமே தவிர மக்களின் செலவின் ஒரு பகுதியாக அரசின் வருமானம் இருக்கக் கூடாது.

அதாவது அரசுக்கு 1 ரூபாய் வருமானம் வருகிறது என்றால் குடிமகன் யாருக்காவது 3 ரூபாய் வருமானம் வரவேண்டும். அப்படி இருந்தால் வருமானம் உயர உயர நாடு உயரும்.

அரசுக்கு 1 ரூபாய் வருமானம் வர ஒரு குடிமகன் 3 ரூபாய் செலவழிக்க வேண்டும் என்றால் வருமானம் அதிகமாக அதிகமாக நாடு திவாலாகும்.

முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கைகள் செலவை அடிப்படையாகக் கொண்டவை. அதனால்தான் அங்கே செலவழிக்கும் திறன் பெரிதாக பேசப்படுகிறது, செலவழிக்கும் திறன் எதனால் வருகிறது என்பறால் இயற்கை வளங்களை கொள்ளையடித்து விற்பதால் மட்டுமே வருகிறது, எந்த நாட்டில் இயற்கை வளங்கள் அதிகம் கொள்ளையடிக்கப்படுகிறதோ அங்க்கே செலவழிக்கும் திறன் அதிகரிக்கும்,

அமெரிக்கா போன்ற வல்லரசுகள், உலக நாடுகளை கொள்ளையடிக்கும் உரிமை பெற்று மட்டுமே தங்கள் இயற்கை வளங்களை பாதுகாத்துக் கொள்கின்றன. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் பிற நாட்டு இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது குறைவு. அதனால் இங்கு செலவு அடிப்படையிலான பொருளாதாரம் நாட்டை அதலபாதாளத்திற்குத் தள்ளும்.

எனவே மது அடிப்படையிலான பொருளாதாரம் தமிழ் நாட்டின் நிதி நிலைமையை மோசமாக்குமே தவிர வளர்க்காது, ஆரம்பத்தில் திடீர் வருமானக் குறைவு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் உழைப்பை அதிகரித்து உற்பத்தி பெருக்கம் செய்தால் மீண்டெழ வாய்ப்புண்டு.

உதாரணமாக இன்று மது வருமானம் 22400 கோடிகள் என சொல்கிறது அரசு. அப்படியானால் மது உற்பத்தி, வினியோகம், அனைத்து முதலாளிகளின் இலாபம் என கணக்கு பார்த்தால் குடிமக்கள் குறைந்த பட்சம் ஒண்ணரை இலட்சம் கோடி செலவு செய்தால்தான் அரசுக்கு இவ்வளவு வருமானம் வரும். ஆக மக்கள் இந்த ஒண்ணரை இலட்சம் கோடி மக்களுக்கு எப்படி கிடைக்கும்?????????
 
அரசுகள் பொருளாதார ரீதியில் யோசித்தால் பூரண மது விலக்கை அமுல் படுத்த முடியும். ஆனால் இலவசங்களை குறைக்க வேண்டும்.
வேறு வகைகளில் வருமானத்தை கூட்ட திட்டம் இயற்ற வேண்டும். இலவசங்கள் என்பது ஓட்டுக்காக கொடுக்கப்படும் மறைமுக பணம்.
ஓட்டை இழக்க எந்த கட்சிக்கு மனம் வரும்...?

அண்டை மாநிலங்களில் மது விலக்கு நடைமுறை படுத்தாமல் இங்கு மட்டும் பூரண மது விலக்கு என்பது கடத்தல், கள்ள சாராயம்
போன்ற குற்றங்களை அதிகரிக்கவே செய்யும். அதனால் பலனடைபவர்கள் அதிகார வர்க்கத்தில் உள்ளவர்கள் தான்.
வெளிநாடுகளிலிருந்து வருவோரும் மதுபானம் கொண்டு வர கட்டுப்பாடு வேண்டும் அல்லது முற்றுமே தவிர்க்கப்பட வேண்டும்.

எவ்வளவோ கட்டுப்பாடுகள் இருந்தும் ஐக்கிய அமீரகம் போன்ற நாடுகளில் குடிக்க தடை இருந்தும் மது கிடைக்கிறது.
இங்கே தமிழ் நாட்டில் சொல்லவே வேண்டாம். இன்றைக்கு பலருக்கும் குடியை பழக்கப்படுத்திவிட்டு அதை முற்றிலுமாக உடனே ஒழிக்க முடியும் என்றும்
எல்லோரும் நம்பவில்லை. சிறிது சிறிதாக குறைக்க முற்படலாம். அது தான் குடித்து பழகாத பலரின் விருப்பமும் கூட.
ஆனால் இங்கே நடப்பது ஒவ்வொரு வருடமும் மது விற்பனை இலக்கை அதிக படுத்துகிறார்கள்.

திரைப்படங்களில் முன்பெல்லாம் பெரும்பாலும் கதாநாயகனுக்கு எதிரிகளாக இருப்பவர்கள் தான் குடிப்பதாக காண்பிப்பார்கள்.
ஆனால் இப்பொதெல்லாம் கதாநாயகனே குடிப்பதாக காட்டப்படுகிறது. இளைஞர்கள், உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் கூட குடியில் விழ இதுவும் ஒரு காரணம்.
அதை ஒரு வீரமாக(!) நினைக்கும் போக்கு அதிகரிக்கிறது. முன்பெல்லாம் குடும்ப பிரச்னைகளை சமாளிக்க இயலாமல் போதையை நாடினர். இப்போது கேளிக்கைக்காக
குடிக்கும் போக்கு அதிகரிக்கிறது. இன்றைக்கு கேளிக்கைக்காக குடிப்பவர்கள் நிச்சயம் நாளை சிறு சிறு குடும்ப பிரச்னைகளுக்காக மதுவின் போதையை நாடுவார்கள்.

அரசே மதுக்கடைகளை நடத்துவதால் பலரும் குடிப்பழக்கத்தை தவறில்லை என எண்ண ஆரம்பித்து விட்டார்கள். விளைவு ஒவ்வொரு நாளும் குடிப்பழக்கத்துக்கு
ஆளாகுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது. சாலையில் ஆங்காங்கே யாராவது ஒருவர் குடித்து விட்டு விழுந்து கிடக்கிறார். இப்படியே போனால் இன்றைய
பொருளாதார வளர்ச்சியில், மாறிவரும் கலாச்சார சூழலில், ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலைக்கு செல்லும் நிலையில், பல்வேறு மன இறுக்கத்துக்கு ஆளாகும்
பெண்களும் கூடிய விரைவில் குடிக்க ஆரம்பித்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை.

மது விலக்கு விற்பனையை கட்டுப்படுத்துவது மிக அவசியமானது.
 
தாமரையின் பொருளாதார, வரவு-செலவு பார்வை, கருத்து மிக ஆழமானது. கீழைநாடனின் கவலைகள் எனக்கும் உண்டு. வீரம் படத்தில் ஹீரோ மிதமிஞ்சிய போதையில் கோழியிடம் பேசுவது எல்லாம் ஹீரோயிசம் வரிசையில் இப்போது வந்துவிட்டது.

அப்பாவுக்கும் கணவனுக்கும் பீர் வாங்கி கொடுப்பதும் ஃபாஷன் ஆகிவிட்டதுபோல் காண்பிக்கும் சமூக நிலவரம் இப்போது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் காட்சிகளும் சகஜமே.

இந்த அங்கீகாரமே பெரும் ஆபத்துதானே..?

இன்னும் அலசுங்கள்
 
வளர்ந்த நாடுகளில் பெரும்பாலும் மதுவிலக்கு இல்லை. தன் வருமானம் அறிந்து செலவு செய்யும் பாங்கு அங்கே இருப்பதால். மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை மிக குறைவே. மேலும் ஒவ்வொரு குடிமகனின் அடிப்படித் தேவைகளை நிறைவேற்றுவது அங்குள்ள அரசுகளின் கடமையாக் கருதப்படுகிறது.
சுருங்கக் கூறின் மனித உயிர்களின் மதிப்பு வளர்ந்த நாடுகளில் மேன்மையானது. நம் நாட்டில் அது இல்லை என்பது வருத்தப்படவேண்டிய உண்மை.

அதிகாரம் பதவி இரண்டிற்கும் வருமானம் வேண்டும். அது மிக எளிதில் கிகைப்பது மது விற்பனையில். அரசு இயந்திரம் மதுவை மட்டும் சார்ந்திருக்க வேண்டிய கேவலமான நிலைக்கு போகவேண்டிய அளவு தொழில்வளர்ச்சி குறைந்திருக்கிறது. முதலில் அதை சரி செய்ய வேண்டும்.

தனிமனித பார்வையில் பூரண மதுவிலக்கு சாத்தியமா என்றால், இல்லை. அதற்கு அவசியமும் இல்லை.
ஆனால் ஒரு அரசே மதுவிற்பனைக்கு ஊக்கம் தரும்போது அது தவறு இல்லை என்பதும், எளிதில் கிடைப்பதால் அடிக்கடி பயன்படுத்தப்படும் பொருளாகவும் மாறிவிட்டது. இதனால் ஒழுக்க சீர்கேடு ஏற்பட்டு சமுதாய சீரழிவு வந்துவிடும்.

மது விலக்கு வேண்டுமா? என்பதை விட மதுவிலக்கு சத்தியமா என்பதை ஆராய வேண்டும்.
இதற்கு தீர்வுதான் என்ன?
மதுக்கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். எளிதில் கிடைக்கும் என்ற நிலையை மாற்றவேண்டும். ஊடகங்களில் மதுவினைப் பற்றிய எதிர்மறை எண்ணங்கள் பறைசாற்றப் படவேண்டும். மது குடித்தல் நாகரீகமற்ற செயல் என்பது இளைஞர்கள் மனதில் ஏற்படுத்தப்பட வேண்டும்
 
டெல்லாஸ் சொல்லும் தீர்வுக்ள் ஆலோசனைக்கு உரிய்வை. அரசாங்கமே திறந்து விற்பனை இலக்கை கூட்டிக்கொண்டே போவதால் மது பழக்கத்துக்கு கிடைத்த அங்கீகாரம் பாவகரமான பயங்கரம்.
 
முழுமையான மது விலக்கு சாத்தியமே!!!

நண்பர்கள் இதனை தாராளமாய் பகிர்ந்து மக்களுக்கு தெளிவு கொடுக்குமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மதுவிலக்கு முற்றிலும் சாத்தியமே....

அரசுக்கு வருமானம் அவசியம்தான். ஆனால் அரசின் வருமானம் எப்படி இருக்க வேண்டும்?

மக்களின் வருமானத்தின் ஒரு பகுதியாக அரசின் வருமானம் இருக்க வேண்டும். ஆனால் நமது வரியமைப்பு முறையில் வருமான வரி தவிர மற்ற அத்தனையும் தவிர மக்களின் செலவின் ஒரு பகுதியாக இருக்கிறது. அதாவது ஒரு பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் அனைத்து வரிகளையும் நுகர்வோரிடமிருந்து பெற்றே செலுத்துகிறார்கள். ஆக எவ்வளவு அதிகமாக வியாபாரம் நடக்கிறதோ அவ்வளவு அதிகம் அரசுக்கு வருமானம்.

அரசுக்கு 1 ரூபாய் வருமானம் வர ஒரு குடிமகன் 3 ரூபாய் செலவழிக்க வேண்டும். அப்படியானால் மக்கள் அதிகம் செலவழித்தால் நாடு முன்னேறுமா என யோசிக்க வைக்கும்.

அப்படி அல்ல. மக்கள் முறையாக செலவழிப்பார்களானால் நாடு முன்னேறும்.

முறையற்று செலவழித்தால் நாடு முன்னேறுவதைப் போல ஆரம்பத்தில் தோன்றினாலும் காலம் போகப்போக மக்களின் கையிருப்பு குறையும். நாடு சிக்கலில் மாட்ட ஆரம்பிக்கும்.

ஒரு நாட்டின் மொத்த மதிப்பானது நான்கு வகைகளில் பிரிந்து கிடக்கிறது.

1. இயற்கை வளம்
2. மக்களின் உழைப்பு
3. அறிவியல் முன்னேற்றம்

மற்றும்
4. மக்களின் செலவு பழக்கங்கள்.

1. இயற்கை வளம்

இது அளவானது. எனவே இதை மாற்ற முடியாது. இயற்கை வளம் நாட்டை விட்டு வெளியேறுவதைக் குறைத்தல், இயற்கை வளத்தை குறைவாக உபயோகித்தல் ஆகியவை மட்டுமே சாத்தியம்

2. மக்களின் உழைப்பு

உழைப்பை சடாரென உயர்த்த முடியாது. உழைப்பை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். திறன்கள் அதிகரிக்கப்பட வேண்டும். மக்களிடம் நம்பிக்கையும் தெளிவும் இருக்க வேண்டும். ஏமாற்றி பிழைத்தால்தான் வாழமுடியும் என மக்கள் சோர்ந்து விடாத மாதிரி சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். உழைப்பிற்கான சரியான பலன் கிடைக்க வேண்டும். சட்டப்படி வாழ்வது எளிதாகவும், சட்டம் மீறி வாழ்வது கடினமாகவும் இருக்குமாறு சட்டங்கள் இருக்க வேண்டும். அரசே இதில் தனது சட்டத்தை கூர் நோக்கி திருத்த வேண்டும். மக்களின் திறன் பெருக்கும் திட்டங்கள் அறிவியல் வளர்ச்சி மூலமே சாத்தியம். ஆனால் மக்களின் உழைப்பு நோக்கிய முனைப்பை உருவாக்குவது நல்ல சட்ட விதிமுறைகள். அரசு சட்டங்களை மதிப்போரின் வாழ்வை எளிதாக்க வேண்டும். மிதிப்போரின் வாழ்வை மிகக்கடினமானதாக ஆக்க வேண்டும். இதனால் உழைப்பின் மீது ஆர்வம் கூடும். உற்பத்தி கூடும். வியாபாரம் விருத்தியாகும். அரசின் வருமானம் கூடும்.

3. அறிவியல் முன்னேற்றம்.

உற்பத்தி பெருக்கத்தில் அறிவியல் முன்னேற்றம் மிக முக்கியமானது. இயந்திரங்களின் திறன் அதிகரிக்கப்பட்டு, குறைந்த மூலப்பொருள், குறைந்த நேரம், குறைந்த மனித முயற்சியில் உற்பத்தி செம்மையாக்கப்பட வேண்டும். கழிவுகளைக் குறைக்க வேண்டும். இதனால் மட்டுமே நீண்ட காலத்திற்கு நமது இயற்கை வளத்தை தக்க வைக்க முடியும்.

சக்தி உற்பத்திக்கு முதல் தேர்வாக சூரிய ஒளி, காற்று அலை சக்தி, நீரோட்டம் போன்ற வீணாகும் சக்திகளை உபயோகிக்க வேண்டும். தாவர எரிபொருள் போன்ற நம்மால் தயாரிக்க இயலும் சக்திகளை இரண்டாவது தேர்வாக வைக்க வேண்டும்.

புதிய புதிய தொழில் வாய்ப்புகளை உண்டாக்க வேண்டும். உட்கட்டமைப்பை மிகச் சிறந்ததாக மாற்ற வேண்டும்.

நமது செலவில் ஒரு பகுதி இப்படி அறிவியல் முன்னேற்றத்தில் செல்லுமானால் அரசின் வருமானம் பன்மடங்காகும்.

4. மக்களின் செலவு பழக்கங்கள்.

மக்களுக்கு ஐந்து வகை செலவு பழக்கங்கள் உண்டு.

1. அத்தியாவசிய செலவுகள். உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவம், புத்துணர்ச்சியூட்டும் பொழுதுபோக்கு

2. வருமானம் பெருக்குவதற்கான செலவுகள். புதிய தொழில் நுட்பம் கற்றல். புதிய இயந்திரங்கள் உருவாக்குதல். வாங்குதல் என தொழில் மேம்பாட்டுக்காக செலவு செய்வது

3. ஆடம்பர செலவுகள். அத்தியாவசியமில்லா செலவுகள். உதாரணமாக 20 ஆயிரம் ரூபாய் கைபேசி போதுமென்றாலும் வீண்பெருமைக்காக 60 ஆயிரம் ரூபாய் கைபேசி வாங்குவது.

4. பொழுது போக்கும் செலவுகள்.

விளையாட்டு, கலைகள் போன்றவற்றில் செலவு செய்வது. இவற்றால் நேரடியான பலன் இல்லாவிட்டாலும் மனதையும் உடலையும் புத்துணர்வாக்கி சோர்வை போக்கும். இதனால் புதிய சக்தியுடன் வேலையில் ஈடுபட முடியும்.

5. தண்டச் செலவுகள்

மது, சூது, புகைப் பழக்கங்கள், போதை பழக்கங்கள் போன்ற பலன் இல்லா உடலையும் மனதையும் கெடுக்கும் வழிகளில் பணத்தை செலவிடுவது. இதனால் அரசுக்கு ஒரு முறை வருமானம் வரும். ஆனால் இதில் சுழலும் பெரும்பான்மையான பணம் வெறும் செலவாக மாத்திரமே இருப்பதால் இது போகப் போக மனித சக்தியை அழித்து விடும். அறிவியல் முன்னேற்றத்திற்கு தகுந்த அளவு மூலதனம் கிடைக்காமல் தடுக்கும். இதன் வகையில் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க மற்ற வகைகளில் வரும் வருமானம் குறைய ஆரம்பிக்கும். ஒரு காலகட்டத்திற்கு பின் ஒட்டு மொத்த வருமானம் குறையும்.
.

உதாரணமாக இன்று மது வருமானம் 22400 கோடிகள் என சொல்கிறது அரசு. அப்படியானால் மது உற்பத்தி, வினியோகம், அனைத்து முதலாளிகளின் இலாபம் என கணக்கு பார்த்தால் குடிமக்கள் குறைந்த பட்சம் ஒண்ணரை இலட்சம் கோடி செலவு செய்தால்தான் அரசுக்கு இவ்வளவு வருமானம் வரும்.ஆக தமிழக பட்ஜெட் அளவிற்கு தமிழக மக்கள் தங்கள் பணத்தை மதுவுக்கு செலவு செய்கிறார்கள். அந்த செலவினால் விருத்திக்கு பயன்படுவது இந்த 22400 கோடி மட்டுமே.. அதாவது ஒட்டுமொத்தமாக தமிழம் ஒரு இலட்சம் கோடியை மதுவால் இழக்கிறது. இதுதானே உண்மை நிலை.அதாவது பலன் தராத உடலைக் கெடுக்கும் மதுவுக்கு தமிழ் நாட்டு பட்ஜெட்டை விட அதிகம் மக்கள் செலவு செய்யத்தான் வேண்டுமா? இது நாட்டை வளர்க்குமா? அழிக்குமா?

எனவே மது அடிப்படையிலான பொருளாதாரம் தமிழ் நாட்டின் நிதி நிலைமையை மோசமாக்குமே தவிர வளர்க்காது, இன்னும் இருபது ஆண்டுகளில் அரசின் ஒட்டு மொத்த வருமானம் குறைய ஆரம்பிக்கும். தொலை நோக்கு இல்லாத தலைவர்களுக்கு இது தெரியாது. தெரிந்தவர்களும் இதை வெளிப்படையாக சொல்வதில்லை.

ஆரம்பத்தில் திடீர் வருமானக் குறைவு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் மக்கள் மதுவுக்கு செலவு செய்யும் பணத்தை வருமானம் பெருக்குவதற்கான செலவுகளாக மாற்ற அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுமானால் மதுவின் வருமானத்தை விட பல மடங்கு வருமானத்தை அரசு பெறலாம்.

உதாரணமாக கட்டமைப்பை உண்டாக்க அரசு பங்கு பத்திரங்கள் வெளியிட்டு இந்த 75000 கோடி ரூபாயில் 25000 கோடி ரூபாயை எளிதில் பெறலாம். சரியான திட்டமிட்ட பரப்புரை உண்டெனில் வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறாமல் மக்களிடம் இருந்தே பணம் புரட்டலாம். அதன் மூலம் உற்பத்தியை பெருக்கினால் ஐந்தாண்டுகளில் நாம் பாதை முன்னேற்றத்தை நோக்கி திரும்பிவிடும்.

இறுதியாக

1. சட்டங்கள் சட்டப்படி வாழ்வதை எளிதாக்க வேண்டும். சட்டத்தை மீறுவோர் வாழ்க்கை கடினமானதாக வேண்டும். அப்படி இந்தியாவின் சட்டங்கள் மீளமைக்கப்பட வேண்டும்.

2. மக்களின் திறன் கூட்டல், அறிவியல் வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

3. இயற்கை வளங்கள் கொள்ளை தடுக்கப்பட்டு, இயற்கை வளங்கள் மிகச் சிக்கனமாக திறனுடன் உபயோகிக்கப்பட வேண்டும்

இந்த மூன்றும் செய்தாலே போதும். மது என்னும் அரக்கன் தேவையே இல்லை.!!!
 
முழுமையான மது விலக்கு சாத்தியமே!!!

நண்பர்கள் இதனை தாராளமாய் பகிர்ந்து மக்களுக்கு தெளிவு கொடுக்குமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

முழு மதுவிலக்கு முற்றிலும் சாத்தியமே....

அரசுக்கு வருமானம் அவசியம்தான். ஆனால் அரசின் வருமானம் எப்படி இருக்க வேண்டும்?

மக்களின் வருமானத்தின் ஒரு பகுதியாக அரசின் வருமானம் இருக்க வேண்டும். ஆனால் நமது வரியமைப்பு முறையில் வருமான வரி தவிர மற்ற அத்தனையும் தவிர மக்களின் செலவின் ஒரு பகுதியாக இருக்கிறது. அதாவது ஒரு பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனம் அனைத்து வரிகளையும் நுகர்வோரிடமிருந்து பெற்றே செலுத்துகிறார்கள். ஆக எவ்வளவு அதிகமாக வியாபாரம் நடக்கிறதோ அவ்வளவு அதிகம் அரசுக்கு வருமானம்.

அரசுக்கு 1 ரூபாய் வருமானம் வர ஒரு குடிமகன் 3 ரூபாய் செலவழிக்க வேண்டும். அப்படியானால் மக்கள் அதிகம் செலவழித்தால் நாடு முன்னேறுமா என யோசிக்க வைக்கும்.

அப்படி அல்ல. மக்கள் முறையாக செலவழிப்பார்களானால் நாடு முன்னேறும்.

முறையற்று செலவழித்தால் நாடு முன்னேறுவதைப் போல ஆரம்பத்தில் தோன்றினாலும் காலம் போகப்போக மக்களின் கையிருப்பு குறையும். நாடு சிக்கலில் மாட்ட ஆரம்பிக்கும்.

ஒரு நாட்டின் மொத்த மதிப்பானது நான்கு வகைகளில் பிரிந்து கிடக்கிறது.

1. இயற்கை வளம்
2. மக்களின் உழைப்பு
3. அறிவியல் முன்னேற்றம்

மற்றும்
4. மக்களின் செலவு பழக்கங்கள்.

1. இயற்கை வளம்

இது அளவானது. எனவே இதை மாற்ற முடியாது. இயற்கை வளம் நாட்டை விட்டு வெளியேறுவதைக் குறைத்தல், இயற்கை வளத்தை குறைவாக உபயோகித்தல் ஆகியவை மட்டுமே சாத்தியம்

2. மக்களின் உழைப்பு

உழைப்பை சடாரென உயர்த்த முடியாது. உழைப்பை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும். திறன்கள் அதிகரிக்கப்பட வேண்டும். மக்களிடம் நம்பிக்கையும் தெளிவும் இருக்க வேண்டும். ஏமாற்றி பிழைத்தால்தான் வாழமுடியும் என மக்கள் சோர்ந்து விடாத மாதிரி சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். உழைப்பிற்கான சரியான பலன் கிடைக்க வேண்டும். சட்டப்படி வாழ்வது எளிதாகவும், சட்டம் மீறி வாழ்வது கடினமாகவும் இருக்குமாறு சட்டங்கள் இருக்க வேண்டும். அரசே இதில் தனது சட்டத்தை கூர் நோக்கி திருத்த வேண்டும். மக்களின் திறன் பெருக்கும் திட்டங்கள் அறிவியல் வளர்ச்சி மூலமே சாத்தியம். ஆனால் மக்களின் உழைப்பு நோக்கிய முனைப்பை உருவாக்குவது நல்ல சட்ட விதிமுறைகள். அரசு சட்டங்களை மதிப்போரின் வாழ்வை எளிதாக்க வேண்டும். மிதிப்போரின் வாழ்வை மிகக்கடினமானதாக ஆக்க வேண்டும். இதனால் உழைப்பின் மீது ஆர்வம் கூடும். உற்பத்தி கூடும். வியாபாரம் விருத்தியாகும். அரசின் வருமானம் கூடும்.

3. அறிவியல் முன்னேற்றம்.

உற்பத்தி பெருக்கத்தில் அறிவியல் முன்னேற்றம் மிக முக்கியமானது. இயந்திரங்களின் திறன் அதிகரிக்கப்பட்டு, குறைந்த மூலப்பொருள், குறைந்த நேரம், குறைந்த மனித முயற்சியில் உற்பத்தி செம்மையாக்கப்பட வேண்டும். கழிவுகளைக் குறைக்க வேண்டும். இதனால் மட்டுமே நீண்ட காலத்திற்கு நமது இயற்கை வளத்தை தக்க வைக்க முடியும்.

சக்தி உற்பத்திக்கு முதல் தேர்வாக சூரிய ஒளி, காற்று அலை சக்தி, நீரோட்டம் போன்ற வீணாகும் சக்திகளை உபயோகிக்க வேண்டும். தாவர எரிபொருள் போன்ற நம்மால் தயாரிக்க இயலும் சக்திகளை இரண்டாவது தேர்வாக வைக்க வேண்டும்.

புதிய புதிய தொழில் வாய்ப்புகளை உண்டாக்க வேண்டும். உட்கட்டமைப்பை மிகச் சிறந்ததாக மாற்ற வேண்டும்.

நமது செலவில் ஒரு பகுதி இப்படி அறிவியல் முன்னேற்றத்தில் செல்லுமானால் அரசின் வருமானம் பன்மடங்காகும்.

4. மக்களின் செலவு பழக்கங்கள்.

மக்களுக்கு ஐந்து வகை செலவு பழக்கங்கள் உண்டு.

1. அத்தியாவசிய செலவுகள். உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவம், புத்துணர்ச்சியூட்டும் பொழுதுபோக்கு

2. வருமானம் பெருக்குவதற்கான செலவுகள். புதிய தொழில் நுட்பம் கற்றல். புதிய இயந்திரங்கள் உருவாக்குதல். வாங்குதல் என தொழில் மேம்பாட்டுக்காக செலவு செய்வது

3. ஆடம்பர செலவுகள். அத்தியாவசியமில்லா செலவுகள். உதாரணமாக 20 ஆயிரம் ரூபாய் கைபேசி போதுமென்றாலும் வீண்பெருமைக்காக 60 ஆயிரம் ரூபாய் கைபேசி வாங்குவது.

4. பொழுது போக்கும் செலவுகள்.

விளையாட்டு, கலைகள் போன்றவற்றில் செலவு செய்வது. இவற்றால் நேரடியான பலன் இல்லாவிட்டாலும் மனதையும் உடலையும் புத்துணர்வாக்கி சோர்வை போக்கும். இதனால் புதிய சக்தியுடன் வேலையில் ஈடுபட முடியும்.

5. தண்டச் செலவுகள்

மது, சூது, புகைப் பழக்கங்கள், போதை பழக்கங்கள் போன்ற பலன் இல்லா உடலையும் மனதையும் கெடுக்கும் வழிகளில் பணத்தை செலவிடுவது. இதனால் அரசுக்கு ஒரு முறை வருமானம் வரும். ஆனால் இதில் சுழலும் பெரும்பான்மையான பணம் வெறும் செலவாக மாத்திரமே இருப்பதால் இது போகப் போக மனித சக்தியை அழித்து விடும். அறிவியல் முன்னேற்றத்திற்கு தகுந்த அளவு மூலதனம் கிடைக்காமல் தடுக்கும். இதன் வகையில் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க மற்ற வகைகளில் வரும் வருமானம் குறைய ஆரம்பிக்கும். ஒரு காலகட்டத்திற்கு பின் ஒட்டு மொத்த வருமானம் குறையும்.
.

உதாரணமாக இன்று மது வருமானம் 22400 கோடிகள் என சொல்கிறது அரசு. அப்படியானால் மது உற்பத்தி, வினியோகம், அனைத்து முதலாளிகளின் இலாபம் என கணக்கு பார்த்தால் குடிமக்கள் குறைந்த பட்சம் ஒண்ணரை இலட்சம் கோடி செலவு செய்தால்தான் அரசுக்கு இவ்வளவு வருமானம் வரும்.ஆக தமிழக பட்ஜெட் அளவிற்கு தமிழக மக்கள் தங்கள் பணத்தை மதுவுக்கு செலவு செய்கிறார்கள். அந்த செலவினால் விருத்திக்கு பயன்படுவது இந்த 22400 கோடி மட்டுமே.. அதாவது ஒட்டுமொத்தமாக தமிழம் ஒரு இலட்சம் கோடியை மதுவால் இழக்கிறது. இதுதானே உண்மை நிலை.அதாவது பலன் தராத உடலைக் கெடுக்கும் மதுவுக்கு தமிழ் நாட்டு பட்ஜெட்டை விட அதிகம் மக்கள் செலவு செய்யத்தான் வேண்டுமா? இது நாட்டை வளர்க்குமா? அழிக்குமா?

எனவே மது அடிப்படையிலான பொருளாதாரம் தமிழ் நாட்டின் நிதி நிலைமையை மோசமாக்குமே தவிர வளர்க்காது, இன்னும் இருபது ஆண்டுகளில் அரசின் ஒட்டு மொத்த வருமானம் குறைய ஆரம்பிக்கும். தொலை நோக்கு இல்லாத தலைவர்களுக்கு இது தெரியாது. தெரிந்தவர்களும் இதை வெளிப்படையாக சொல்வதில்லை.

ஆரம்பத்தில் திடீர் வருமானக் குறைவு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் மக்கள் மதுவுக்கு செலவு செய்யும் பணத்தை வருமானம் பெருக்குவதற்கான செலவுகளாக மாற்ற அரசு திட்டங்கள் வகுத்து செயல்படுமானால் மதுவின் வருமானத்தை விட பல மடங்கு வருமானத்தை அரசு பெறலாம்.

உதாரணமாக கட்டமைப்பை உண்டாக்க அரசு பங்கு பத்திரங்கள் வெளியிட்டு இந்த 75000 கோடி ரூபாயில் 25000 கோடி ரூபாயை எளிதில் பெறலாம். சரியான திட்டமிட்ட பரப்புரை உண்டெனில் வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறாமல் மக்களிடம் இருந்தே பணம் புரட்டலாம். அதன் மூலம் உற்பத்தியை பெருக்கினால் ஐந்தாண்டுகளில் நாம் பாதை முன்னேற்றத்தை நோக்கி திரும்பிவிடும்.

இறுதியாக

1. சட்டங்கள் சட்டப்படி வாழ்வதை எளிதாக்க வேண்டும். சட்டத்தை மீறுவோர் வாழ்க்கை கடினமானதாக வேண்டும். அப்படி இந்தியாவின் சட்டங்கள் மீளமைக்கப்பட வேண்டும்.

2. மக்களின் திறன் கூட்டல், அறிவியல் வளர்ச்சி திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட வேண்டும்.

3. இயற்கை வளங்கள் கொள்ளை தடுக்கப்பட்டு, இயற்கை வளங்கள் மிகச் சிக்கனமாக திறனுடன் உபயோகிக்கப்பட வேண்டும்

இந்த மூன்றும் செய்தாலே போதும். மது என்னும் அரக்கன் தேவையே இல்லை.!!!
 
பொருளாதார ரீதியாக நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் அபாரமானது. அக்கறை பாராட்டுக்குரியது.

அரசு நினைத்தால் முழுமையான மது விலக்கு சாத்தியமே. இதில் மாற்றுக்கருத்து இல்லை.

தற்போதைய சூழலில் மது விற்பனை மூலம் இவ்வளவு வருமானமிருந்தும் தமிழகம் கடன் இல்லாமல் இல்லையே.


இவ்வளவு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வெறும் தமிழகத்துக்கு வருமானத்துக்காக மட்டும் அரசுகள் TASMAC நடத்துகிறார்கள் என்று நம்ப முடியவில்லை.

இத்தனை போராட்டங்களுக்குப் பின் இப்போது மது விலக்கை கொண்டுவந்தால் எதிர்கட்சிகள் வென்றாதாகிவிடும். அரசு தோற்றுவிட்டதாகி விடும் என்ற மனப்பான்மை

ஒரு காரணமாக இருக்க கூடும். மேலும் எதிர்கட்சிகள் நல்ல பெயர் சம்பாதிக்கவும் வாய்ப்பு உண்டாகி விடும் என்ற எண்ணமும் இருக்கலாம். இவையெல்லாம் ஒரு புறமிருக்க

ஏற்கனவே பல ஆண்டுகளாய் மதுவுக்கு அடிமையானவர்கள் அதிகம். அவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை விடுவது கடினமான காரியம்.

கிட்டத்தட்ட மது வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறி விட்டது. சிலருக்கு மது இல்லாவிட்டால் கைகளில் நடுக்கம் கூட ஏற்படுகிறது. அந்த அளவுக்கு ஆரோக்கியமான(!)

சமூகத்தில் இருக்கிறோம். இவர்கள் மூலமாகவும் வருமானமும் ஒரு பக்கம் வரட்டுமே என்றுதான் அரசுகள் நினைக்கின்றதோ என்னவோ..!


உடல் உழைப்பின் அசதிக்காக குடிப்பவர்கள், வீட்டு பிரச்னைகள் கவலைகளை மறக்க குடிப்பவர்கள், அலுவலக மற்றும் திருமண விழாக்கள் போன்றவற்றில் குடிப்பவர்கள்

கேளிக்கைக்காக நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பவர்கள் என ஒரு விழா, கொண்டாட்டம் என்றாலே மதுவை துணைக்கழைப்பவர்கள் அதிகம். சிலருக்கு குடிக்காவிட்டால்

தூங்க முடியாது. இந்நிலையில் உடனடியாக மது விலக்கு என்றால் இவர்களுக்கு எல்லாம் என்ன மாற்று வழி இருக்கிறது? பழகியிருக்க கூடாது. எப்படியோ பழகி விட்டது.

அண்டை மாநிலங்களில் மது விற்பனை அமோகமாய் நடக்கும் போது இங்கு ஏற்கனவே பழகியவர்கள் நிச்சயம் தவறான வழியிலாவது மதுவை பெற வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.

மேலும் இப்போது TASMACஐ எதிர்த்து போராடுபவர்களை எதிரிகளாகத்தான் பார்ப்பார்கள்.

சில மாதங்களில் கள் விற்பனையும் கள்ளச்சாரய விற்பனையும் களை கட்டும். அதனால் யாருக்கு லாபம் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.


இதையெல்லாம் யோசிக்கும் போது படிப்படியாக மது வியாபரத்தை குறைத்தால் கூட போதுமென்று தோன்றுகிறது.

உடனடியாக மது விலக்கை கொண்டு வந்தாலும் நல்லதே. ஆனால் நடக்குமா என்பதே என் சந்தேகம்.
 
மதுவிலக்கு பற்றி பேசினா அது அரசியலுக்கு தான் நிக்கும். அதனால நான் மதுவிலக்கை பத்தி பேச விரும்பல. ஆனால் நமக்கு தெரிஞ்ச குடிப்பழக்கம் உள்ள நன்பர்கள் உறவினர்களையாச்சும் நாம எப்படி மாத்தலாம் என்பதை பத்தி யோசித்து இதை பகிர்கிறேன்.

தனிமனித பார்வையில் பூரண மதுவிலக்கு சாத்தியமா என்றால், இல்லை. அதற்கு அவசியமும் இல்லை.
உங்கள் பதிவில் அவசியமும் இல்லை என்ற வார்த்தை தான் என்னை மிகவும் கவர்ந்தது. சிலருக்கு மது அருந்துவது அசிங்கம் என்பதற்காக ஒட்டு மொத்தமாய் அனைவரையும் மது அருந்த கூடாது என்று சொல்ல வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. மது அருந்துவது என்பது ஏதோ இன்றோ நேற்றோ வந்த பழக்கம் அல்ல அது காலம் காலமாய் சிலரிடம் இருந்து வருகிறது. ஆனால் மதுவை பற்றிய எதிர்மரை பிரச்சாரங்களே மதுவை பாப்புலாரிட்டி ஆக்கி விட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.

எந்த ஒரு விசயத்துக்கு அதிகம் மதிப்பு கொடுத்து அதை பற்றி ஊடகங்கள் அதிகம் விவாதிக்கிறதோ அந்த விசயத்தின் மதிப்பும் அதிகரித்து விடும், ஒழுக்கம் என்பது தனி மனிதனா பார்த்து பின்பற்றனும், சட்டம் மூலம் ஒழுக்கத்தை பின்பற்ற வைக்க முடியாது, அதாவது இது எல்லாம் ஒழுங்கீனம் என்று எதை எல்லாம் தடை செய்கிறோமோ அது அதிகரிக்கவே செய்யும். இது தான் காலம் காலமாய் நடந்து வருகிறது.

பாசிட்டிவான அங்கீராகம் கிடைக்கவில்லை என்பதால் சிலர் குடிக்கிறார்கள். கீழை நாடானின் பதிப்பும் இதை காட்டுகிறது.
அதை ஒரு வீரமாக(!) நினைக்கும் போக்கு அதிகரிக்கிறது.
குடிக்காதே, குடிப்பழக்கம் கேடானது என்று அவனிடம் பலர் சொல்லி அப்படியாச்சும் ஒரு நம்மை கண்டுக்கறாங்க, நம் செயலை கண்டுக்கராங்க என்று அவன் அதை நெகட்டிவ் அங்கீராகம் கிடைச்சதா எடுத்துக்கிட்டு மேலும் குடிப்பான்.
ஆகையால் நமக்கு தெரிஞ்ச குடிகாரன் யாராச்சும் இருந்தா அவனை கண்டுக்காம விட்டுட்டா மதிக்காம விட்டுட்டா ஒரு வேலை அவனே திருந்தி விடுவான் என்று நம்புகிறேன். அதாவது எல்லாரும் நம்மை பத்தி பேசனும் என்று அப்பப்ப குடிக்கும் சிலருக்கு இந்த டெக்னிக் வேலை செய்யும். மற்றபடி போதைக்கு அடிமையானவர்களுக்கு இது தாமதமா செயல்படலாம், அல்லது செயல்படாம போலாம்.

சிகரட்டை நிறுத்தக் கூட இந்த டெக்னிக் உதவலாம்
 
மதுவிலக்கு பற்றி பேசினா அது அரசியலுக்கு தான் நிக்கும். அதனால நான் மதுவிலக்கை பத்தி பேச விரும்பல. ஆனால் நமக்கு தெரிஞ்ச குடிப்பழக்கம் உள்ள நன்பர்கள் உறவினர்களையாச்சும் நாம எப்படி மாத்தலாம் என்பதை பத்தி யோசித்து இதை பகிர்கிறேன்.

தனிமனித பார்வையில் பூரண மதுவிலக்கு சாத்தியமா என்றால், இல்லை. அதற்கு அவசியமும் இல்லை.
உங்கள் பதிவில் அவசியமும் இல்லை என்ற வார்த்தை தான் என்னை மிகவும் கவர்ந்தது. சிலருக்கு மது அருந்துவது அசிங்கம் என்பதற்காக ஒட்டு மொத்தமாய் அனைவரையும் மது அருந்த கூடாது என்று சொல்ல வேண்டிய அவசியம் நிச்சயம் இல்லை. மது அருந்துவது என்பது ஏதோ இன்றோ நேற்றோ வந்த பழக்கம் அல்ல அது காலம் காலமாய் சிலரிடம் இருந்து வருகிறது. ஆனால் மதுவை பற்றிய எதிர்மரை பிரச்சாரங்களே மதுவை பாப்புலாரிட்டி ஆக்கி விட்டிருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.

எந்த ஒரு விசயத்துக்கு அதிகம் மதிப்பு கொடுத்து அதை பற்றி ஊடகங்கள் அதிகம் விவாதிக்கிறதோ அந்த விசயத்தின் மதிப்பும் அதிகரித்து விடும், ஒழுக்கம் என்பது தனி மனிதனா பார்த்து பின்பற்றனும், சட்டம் மூலம் ஒழுக்கத்தை பின்பற்ற வைக்க முடியாது, அதாவது இது எல்லாம் ஒழுங்கீனம் என்று எதை எல்லாம் தடை செய்கிறோமோ அது அதிகரிக்கவே செய்யும். இது தான் காலம் காலமாய் நடந்து வருகிறது.

பாசிட்டிவான அங்கீராகம் கிடைக்கவில்லை என்பதால் சிலர் குடிக்கிறார்கள். கீழை நாடானின் பதிப்பும் இதை காட்டுகிறது.
அதை ஒரு வீரமாக(!) நினைக்கும் போக்கு அதிகரிக்கிறது.
குடிக்காதே, குடிப்பழக்கம் கேடானது என்று அவனிடம் பலர் சொல்லி அப்படியாச்சும் ஒரு நம்மை கண்டுக்கறாங்க, நம் செயலை கண்டுக்கராங்க என்று அவன் அதை நெகட்டிவ் அங்கீராகம் கிடைச்சதா எடுத்துக்கிட்டு மேலும் குடிப்பான்.
ஆகையால் நமக்கு தெரிஞ்ச குடிகாரன் யாராச்சும் இருந்தா அவனை கண்டுக்காம விட்டுட்டா மதிக்காம விட்டுட்டா ஒரு வேலை அவனே திருந்தி விடுவான் என்று நம்புகிறேன். அதாவது எல்லாரும் நம்மை பத்தி பேசனும் என்று அப்பப்ப குடிக்கும் சிலருக்கு இந்த டெக்னிக் வேலை செய்யும். மற்றபடி போதைக்கு அடிமையானவர்களுக்கு இது தாமதமா செயல்படலாம், அல்லது செயல்படாம போலாம்.

சிகரட்டை நிறுத்தக் கூட இந்த டெக்னிக் உதவலாம்
 
Back
Top