சிவா.ஜி
நட்சத்திரப் பதிவாளர்
தனது அலுவலக மேலாளரை சந்திக்க அவரின் அழைப்பின் பேரில் அவரது வீட்டு வந்திருந்தான் சுகுமார். வீட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தவனுக்கு ஏதோ வித்தியாசமாய் பட்டது. அங்கிருந்த அனைத்து மேசை நாற்காலி, அலமாரி எல்லாமே ஏதோ ஒரு உலோகத்தாலேயே செய்யப்பட்டிருந்தது. சுகுமார் ஆச்சர்யப்பட்டான். மேலாளர் வந்து அவனை வரவேற்று இருக்கையில் அமரச் சொன்னார். அவன் இன்னமும் வியப்புடன் பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்து விட்டு,
“என்னங்க சுகுமார் ஆச்சர்யமா பாக்கறீங்க...என்னடா எல்லாம் ஏதோ உலோகத்துல செஞ்சதாவே இருக்கேன்னுதானே?”
“ ஆமாங்க சார். இன்னைக்கு எல்லா வீட்லயும் தேக்குல செஞ்சது, ரப்பர் மரத்துல செஞ்சது அது இதுன்னு எல்லாம் மரத்துலதான் இருக்கும் நீங்க வித்தியாசமா உலோகத்துல செஞ்சியிருக்கீங்க...ஏதாவது பிரத்தியேக காரணமா?”
“ம்...காரணம்ன்னா....முதலாவது மரங்களை வெட்டிப் பாழாக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அது மட்டுமில்லாம உயிருள்ள அந்த மரங்களை வெட்டி சாகடிச்சிட்டு அதால செஞ்ச நாற்காலியில உக்காந்தா பிணத்து மேல உட்காருற மாதிரியிருக்கு. அதனலத்தான் பிளாஸ்டிக் மரம் இதையெல்லாம் தவிர்க்கிறேன். ஆனா இந்த வீட்லயும் மரம் இருக்கு எங்க இருக்கனுமோ அங்க. என் தோட்டத்துல செழிப்பா வளர்ந்து உயிரோட இருக்கு”
சொல்லிவிட்டு சிரித்தவரை ஆச்சர்யமாகவும் மரியாதையோடும் பார்த்தான் சுகுமார்.
“என்னங்க சுகுமார் ஆச்சர்யமா பாக்கறீங்க...என்னடா எல்லாம் ஏதோ உலோகத்துல செஞ்சதாவே இருக்கேன்னுதானே?”
“ ஆமாங்க சார். இன்னைக்கு எல்லா வீட்லயும் தேக்குல செஞ்சது, ரப்பர் மரத்துல செஞ்சது அது இதுன்னு எல்லாம் மரத்துலதான் இருக்கும் நீங்க வித்தியாசமா உலோகத்துல செஞ்சியிருக்கீங்க...ஏதாவது பிரத்தியேக காரணமா?”
“ம்...காரணம்ன்னா....முதலாவது மரங்களை வெட்டிப் பாழாக்குறதுல எனக்கு உடன்பாடு இல்ல. அது மட்டுமில்லாம உயிருள்ள அந்த மரங்களை வெட்டி சாகடிச்சிட்டு அதால செஞ்ச நாற்காலியில உக்காந்தா பிணத்து மேல உட்காருற மாதிரியிருக்கு. அதனலத்தான் பிளாஸ்டிக் மரம் இதையெல்லாம் தவிர்க்கிறேன். ஆனா இந்த வீட்லயும் மரம் இருக்கு எங்க இருக்கனுமோ அங்க. என் தோட்டத்துல செழிப்பா வளர்ந்து உயிரோட இருக்கு”
சொல்லிவிட்டு சிரித்தவரை ஆச்சர்யமாகவும் மரியாதையோடும் பார்த்தான் சுகுமார்.