Sundaram77
New member
பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறன் பற்றி....
முகத்தில் முகம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால் ஆ...
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என் முன்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம் - மானே உன்
முகத்தில் முகம் பார்க்கலாம்
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே அதன்
எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம்
இளமை பொங்கும் அங்கம் சிந்தும் - அழகில்
தங்கம் மங்கும் நிலையில் - நின்று
தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலென்னச் சோலைதனில்
பொழுதெலாம் மகிழலாம்
கலையெலாம் பழகலாம் சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும்
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
படம்: தங்கப் பதுமை 1959
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ், விஸ்வநாதன், டி.கே. இராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
அருமை நண்பர்களே,
பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறனைப் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை...
இருந்தாலும் விரிவாக இன்னொரு தடவை ...தற்போதைக்கு மனதில் தோன்றும் ,படித்ததில் இரு நினைவுகள் மட்டும்...
இள வயதிலேயே இறந்து போனவர் என்பது தெரியும் ...அப்போதைய சோவியத் ஒன்றியத்துக்கு பயணத்துக்கு
ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது ...காலன் முந்தி விட்டான்..
விசுவனாதன் அஞ்சலி செலுத்த சென்றபோது அவரின் உடல் மீது பொதுவுடமைக்கட்சியின் சின்னம் கொண்ட
துணி போர்த்தப்பட்டிருப்பது கண்டுதான் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றே அவருக்குத் தெரிந்ததாம். ஆச்சரியம்தான்...இல்லையா..!?
அடுத்து , அவர் மரணத்தில் அடியோடு மனம் உடைந்து போனவர் ஏ.எம்.ராஜா...
'கல்யாணப் பரிசு' படத்திற்கு அனைத்து பாடல்களும் பட்டுக்கோட்டையார்தானே...இன்றளவும் நினைவில் நிற்கும்
இலக்கியத் தரத்திலான அப்பாடல்களுக்கு இசை அமைத்ததையும், அவரும் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளராக
அங்கீகரிக்கப்பட்டதையும் அவர் மறக்கவில்லை...அவர் மிகவும் உணர்ச்சிமயமானவர்...ஈமச்சடங்குகளுக்குக் கடைசி
வரை நின்றது மட்டுமல்லாமல் அதில் பெரும்பகுதி செலவும் அவரதுதான்...
அது அவரது நன்றிக்கடனாக மட்டும் இருக்க இயலாது , நண்பர்களே ...ஒரு உன்னதக் கவிஞனுக்கு ஒரு பெரும்
இசைக்கலைஞனின் ஆத்மார்த்தமான அஞ்சலியாகத்தான் இருக்க முடியும்...சரிதானே...!
இதை , இன்றைக்கு , வாலிக்கு யார்யாரெல்லாம் துக்கம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதோடு ஒப்பிட்டால்தான்
ஏ.எம்.ராஜாவின் உயர்வை நிதானிக்கலாம்...
அன்புடன்,
சுந்தரம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால் ஆ...
வகுத்த கருங்குழலை மழை முகில் எனச்சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என் முன்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம்
வளைந்து இளந் தென்றலில் மிதந்து வரும் கைகளில்
வளையலின் இசை கேட்கலாம் - மானே உன்
முகத்தில் முகம் பார்க்கலாம்
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
இகத்தில் இருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே அதன்
எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
அகத்தினில் அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம்
இளமை பொங்கும் அங்கம் சிந்தும் - அழகில்
தங்கம் மங்கும் நிலையில் - நின்று
தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலென்னச் சோலைதனில்
பொழுதெலாம் மகிழலாம்
கலையெலாம் பழகலாம் சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும் குறும்பு படர்ந்திடும்
முகத்தில் முகம் பார்க்கலாம் விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்
முகத்தில் முகம் பார்க்கலாம்
படம்: தங்கப் பதுமை 1959
இயற்றியவர்: பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்
இசை: மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ், விஸ்வநாதன், டி.கே. இராமமூர்த்தி
பாடியோர்: டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா
அருமை நண்பர்களே,
பட்டுக்கோட்டையாரின் பாட்டுத்திறனைப் பற்றி நான் சொல்லவேண்டியதில்லை...
இருந்தாலும் விரிவாக இன்னொரு தடவை ...தற்போதைக்கு மனதில் தோன்றும் ,படித்ததில் இரு நினைவுகள் மட்டும்...
இள வயதிலேயே இறந்து போனவர் என்பது தெரியும் ...அப்போதைய சோவியத் ஒன்றியத்துக்கு பயணத்துக்கு
ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது ...காலன் முந்தி விட்டான்..
விசுவனாதன் அஞ்சலி செலுத்த சென்றபோது அவரின் உடல் மீது பொதுவுடமைக்கட்சியின் சின்னம் கொண்ட
துணி போர்த்தப்பட்டிருப்பது கண்டுதான் அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்றே அவருக்குத் தெரிந்ததாம். ஆச்சரியம்தான்...இல்லையா..!?
அடுத்து , அவர் மரணத்தில் அடியோடு மனம் உடைந்து போனவர் ஏ.எம்.ராஜா...
'கல்யாணப் பரிசு' படத்திற்கு அனைத்து பாடல்களும் பட்டுக்கோட்டையார்தானே...இன்றளவும் நினைவில் நிற்கும்
இலக்கியத் தரத்திலான அப்பாடல்களுக்கு இசை அமைத்ததையும், அவரும் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளராக
அங்கீகரிக்கப்பட்டதையும் அவர் மறக்கவில்லை...அவர் மிகவும் உணர்ச்சிமயமானவர்...ஈமச்சடங்குகளுக்குக் கடைசி
வரை நின்றது மட்டுமல்லாமல் அதில் பெரும்பகுதி செலவும் அவரதுதான்...
அது அவரது நன்றிக்கடனாக மட்டும் இருக்க இயலாது , நண்பர்களே ...ஒரு உன்னதக் கவிஞனுக்கு ஒரு பெரும்
இசைக்கலைஞனின் ஆத்மார்த்தமான அஞ்சலியாகத்தான் இருக்க முடியும்...சரிதானே...!
இதை , இன்றைக்கு , வாலிக்கு யார்யாரெல்லாம் துக்கம்கூடத் தெரிவிக்கவில்லை என்பதோடு ஒப்பிட்டால்தான்
ஏ.எம்.ராஜாவின் உயர்வை நிதானிக்கலாம்...
அன்புடன்,
சுந்தரம்