nandagopal.d
New member
ஜான், குட்டிப் பையன். அவனுக்குப் பசி வந்துவிட்டது. அவனுடைய அம்மா கண்ட நேரத்தில் அவன் சாப்பிடக் கூடாதென்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டதால் பசியால் துடித்துக் கொண்டிருந்தான். அம்மா கடைக்குப் போன சமயம், ஜான் சமையலறைக்குள் போனான். அங்கே ரொட்டி இருந்தது. அதை ரகசியமாக எடுத்துத் தின்றுவிட்டான்.
கடைக்குப் போய் வந்த அம்மாவுக்கு ரொட்டியை ஜான் எடுத்தது தெரிந்துவிட்டது. திருட்டுப் பழக்கம் அவனுக்கு வரக் கூடாது என்பதற்காக, ""மகனே... நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் பார்த்துக் கொண்டு இருப்பார். அதனால் திருடக் கூடாது என்றாள்''
அதற்கு ஜான், ""நான் ரொட்டியை எடுக்கும்போது கடவுள் பார்த்தாரே'' என்றான் துள்ளலுடன்.
""கடவுள் என்ன சொன்னார்?'' என்று கேட்டாள் அம்மா.
அதற்கு ஜான், ""இங்கே நம்மைத் தவிர யாருமில்லை. அதனால் ஒரு ரொட்டியை நீ எடுத்துக் கொள். இன்னொரு ரொட்டியை எடுத்து எனக்குத் தா என்று கடவுள் சொன்னார் அம்மா'' என்றான்.
அம்மா ஒன்றும் பேசவில்லை. ஜான் திருடுவதற்கு மட்டுமல்ல, பொய் சொல்லவும் கற்றுக் கொண்டானே என்று மெனமானாள்.
கடைக்குப் போய் வந்த அம்மாவுக்கு ரொட்டியை ஜான் எடுத்தது தெரிந்துவிட்டது. திருட்டுப் பழக்கம் அவனுக்கு வரக் கூடாது என்பதற்காக, ""மகனே... நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் கடவுள் பார்த்துக் கொண்டு இருப்பார். அதனால் திருடக் கூடாது என்றாள்''
அதற்கு ஜான், ""நான் ரொட்டியை எடுக்கும்போது கடவுள் பார்த்தாரே'' என்றான் துள்ளலுடன்.
""கடவுள் என்ன சொன்னார்?'' என்று கேட்டாள் அம்மா.
அதற்கு ஜான், ""இங்கே நம்மைத் தவிர யாருமில்லை. அதனால் ஒரு ரொட்டியை நீ எடுத்துக் கொள். இன்னொரு ரொட்டியை எடுத்து எனக்குத் தா என்று கடவுள் சொன்னார் அம்மா'' என்றான்.
அம்மா ஒன்றும் பேசவில்லை. ஜான் திருடுவதற்கு மட்டுமல்ல, பொய் சொல்லவும் கற்றுக் கொண்டானே என்று மெனமானாள்.