கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?

கீதம்

New member
நடுநிசியில் சடக்கென எழுந்துகொண்டு
இமைக்குவளை நிறைத்த மதுரசமேந்தி
உன் உடல் உள்ளம் யாவற்றையும்
ஏன் அர்ப்பணித்திருந்தாய் என் காலடியில்?
கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?

இந்த சலுகையை எங்கிருந்து பெற்றாய் என்றேன்
மேற்கொண்டு என்னைப் பேசவிடாமல்
என் அதரங்களில் உன் அதரங்களை
அழுத்தமாய்ப் பதித்திருந்தாய்!
கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?

வாழ்வின் அக்கணமானது அமரத்துவமானது…
இன்றென் மனமெழுப்பும் இன்னிசை யாவும்
அன்றென் இதயத்தில் நீ
அதீதமாய் நிரப்பியவற்றின் அதிர்வெதிரொலிகள்தாமே!
கணப்பொழுதும் ஏன் என்னைக் காதலித்திருந்தாய்?

(மூலம்: ஹரிவம்ஷ்ராய் பச்சன் அவர்கள் எழுதிய ‘Shan Bhar Ko Kyon Pyar Kiya Tha?’ என்னும் இந்திக்கவிதை.)
 
இந்த கவிதையின் நாயகன் கொடுத்துவைத்தவன். கவிதை அழகாக இருக்கிறது. இன்னும் நிறைய கொடுங்கள்.
 
உள்ளடக்கம் அருமை..
நேரடியான மொழி பெயர்ப்பு..எனவே ப்ளெயின் ஆக இருக்கிறது
 
இந்த கவிதையின் நாயகன் கொடுத்துவைத்தவன். கவிதை அழகாக இருக்கிறது. இன்னும் நிறைய கொடுங்கள்.

ஊக்கமிகுப் பின்னூட்டத்துக்கு நன்றி ஆரென் அவர்களே.. இன்னும் தருகிறேன்.
 
உள்ளடக்கம் அருமை..
நேரடியான மொழி பெயர்ப்பு..எனவே ப்ளெயின் ஆக இருக்கிறது

மனந்திறந்த பின்னூட்டத்துக்கு நன்றி ஜான். கவிதை இறந்தகாலத்தின் இன்வாழ்வு பற்றிப் பேசுவதால் கொஞ்சம் வறட்சியாகத்தான் தோன்றியது. அதை வார்த்தைகளால் அலங்கரித்து அதன் வறட்சியை மாற்ற விரும்பவில்லை. அதனால்தான் அப்படியே மொழிபெயர்த்தேன். ரசிக்கும்படி இல்லையெனில் இனி மொழிபெயர்க்கும் கவிதைகளில் தங்கள் கருத்தைக் கவனத்தில் கொள்கிறேன்.
 
Back
Top