நல்லெண்ணெய் - இயற்கை அளித்த கொடை

shreemurali

New member
* நல்லெண்ணெய், சற்றுக் கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக் கூடியது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.

* நல்லெண்ணெய், சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. ரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்கிறது.

* நல்லெண்ணெயை, ‘இயற்கை நமக்கு அளித்த கொடை’ என்று தாராளமாகச் சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்குக் காரணம். நல்லெண்ணெய், புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றைத் தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றைத் தணிக்கிறது.

* நல்லெண்ணெயை தினமும் இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழிமுட்டை வெண்கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மீது பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும்.

* நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல், மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும் என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
Last edited by a moderator:
பெயருக்கு ஏற்றாற்போல் நல்லெண்ணெய் ஒரு நல்ல எண்ணை. இதய நோயாளிகள் நல்லெண்ணெயை பயன்படுத்தலாம்; ஏனெனில் அதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது.

முரளிக்கு நன்றி.
 
நல்லெண்ணெயின் நன்மைகளை இங்கு பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஸ்ரீமுரளி.

நல்லெண்ணெய் வாய்ப்புண், வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மையுடையது.

வாய்ப்புண்ணை ஆற்ற தினமும் காலையில் நல்லெண்ணையை சிறிது நேரம் வாயில் வைத்திருந்து கொப்பளித்துத் துப்புவது நல்ல பலனைத் தரும்.
 
வாய்ப்புண்ணை ஆற்ற தினமும் காலையில் நல்லெண்ணையை சிறிது நேரம் வாயில் வைத்திருந்து கொப்பளித்துத் துப்புவது நல்ல பலனைத் தரும்.

இதயம்... இதயம் .... இதயம் நல்லெண்ணை வாங்குங்கள்! சாஸே .... ருபாய்தான்!

:lachen001:......:lachen001:.....:aetsch013: .... சும்மா விளையாட்டுக்த்தான்!

தகவல் உண்மை! கைகூடாக பலனளிப்பது!
 
நல்லெண்ணெய் பகிர்வுக்கு நன்றி, நல்லெண்ணெய் என்றவுடன் வடிவேலு நகைச்சுவைதான் ஞாபகத்திற்கு வருகிறது.
 
இதை ஆலிவ் ஆயிலுக்கு நிகரானது என்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை நல்லெண்ணெயைவிட சிறப்பான எண்ணெய் எதுவுமில்லை.
 
Back
Top