எது சரி ?

பாரதியார் நூறு ஆண்டுக்குமுன்பெ பாடினார் :
" மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் பேசுவதிலோர் மகிமையில்லை
திறமான புலமையெனில் வெளிநாட்டார் அதைவணக்கம் செய்தல்வேண்டும் "
என்று ; ஆனால் நாம் இன்னமும் மறைவாக நமக்குள் பழங்கதை பேசித்தான் வருகிறோம் .
மூன்று சங்கங்கள் தொல்பழங் காலத்தில் இருந்தன . கடைச் சங்க காலம், பொ.யு.மு. 2 ஆம் நூற்றாண்டு முதல் , பொ.பி. 2ஆம் நூற்றாண்டுவரை . அப்போது இயற்றப்பட்டவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் என்பது நம் முடிவு . இதை அயல் நாட்டார் ஒப்புகிறார்களா ? இல்லையே . அவர்கள் பாட்டும் தொகையும் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டுக்கு உரியவை என்கிறார்கள் .
யார் அவர்கள் ?
1 - ஹாலந்து நாட்டு இந்தியவியல் பேராசிரியர் ஹெர்மன் டீக்கன் ;
2 --சிக்காகோ பல்கலைக்கழகச் சமற்கிருதப் பேராசிரியர் ஷெல்டன் போலாக்
3 -- ஜப்பான் நாட்டு ஆய்வறிஞர் தக்கநோபு தக்கஹாசி ;
4 - பிரஞ்சு நாட்டறிஞர் பிரான்சுவா க்ரோ .
( ஆதாரம் : முனைவர் த . அன்புச்செல்வன் எழுதிய நூல் - பண்டைத் தமிழரின் அரசமைப்புச் சிந்தனைகள் - முதல் பதிப்பு 2010 . பக் .12 )
அவர்கள் தனித் தனியாய் ஆய்ந்து கண்ட முடிவைத் தம் நூல்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள் . அவர்களுடைய கூற்றை மறுத்துத் தக்க ஆதாரங்கள் காட்டி, நம் இலக்கியங்களின் பழமையை நிலைநாட்டுவதற்கு ஆற்றல் வாய்ந்த அறிஞர் யாரும் தமிழரிடையே இருப்பதாகத் தெரியவில்லை .
--------------------------------------------------------------------
 
பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியங்கள் என்றால் தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தங்களைப் பற்றிய குறிப்புகள் நிச்சயமாக அதில் இடம் பெற்றிருக்கும்.
 
பத்துப்பாட்டும், எட்டுத்தொகையும் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியங்கள் என்றால் தேவாரம், திருவாசகம், திவ்ய பிரபந்தங்களைப் பற்றிய குறிப்புகள் நிச்சயமாக அதில் இடம் பெற்றிருக்கும்.[/Q

இப்படித்தான் நாம் பொத்தாம் பொதுவாகக் கருத்துச் சொல்வோம் . ஆராய்ச்சி என்பது வேறு . அதில் எஸ் . வையாபுரி பிள்ளை தவிர மற்றவர்கள் எல்லாம் மனம்போன போக்கில் முடிவு செய்பவர்களே .
 
பாட்டும், தொகையும் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்பதற்கு மேலை நாட்டு ஆசிரியர்கள் காட்டும் சான்றுகள் என்ன என்று கூறமுடியுமா?

தேவநேயப் பாவாணர் போன்றவர்கள், வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாகக் கணிக்கவில்லை என்றும் , கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் என்று திராவிடக் கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தன. இன்னும் ஒருசாரார் அவரைத் " தமிழ் இனத் துரோகி " என்று கூறவும் தலைப்பட்டனர்.

திருக்குறள் இலக்கியம் 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது அன்னாரின் முடிபு. இது தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
 
Last edited:
பாட்டும், தொகையும் 8 அல்லது 9 ஆம் நூற்றாண்டில் தோன்றியவை என்பதற்கு மேலை நாட்டு ஆசிரியர்கள் காட்டும் சான்றுகள் என்ன என்று கூறமுடியுமா?

தேவநேயப் பாவாணர் போன்றவர்கள், வையாபுரிப்பிள்ளை தமிழ் இலக்கியங்களின் காலத்தை சரியாகக் கணிக்கவில்லை என்றும் , கிறிஸ்துவுக்கு முற்பட்ட தமிழ் இலக்கியத்தைப் பிற்பட்ட காலத்தது என்று கூறுவதாகவும் கண்டித்தனர். தமிழின் பழம் பெருமைக்கு எதிரானவர் என்று திராவிடக் கட்சிகள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தன. இன்னும் ஒருசாரார் அவரைத் " தமிழ் இனத் துரோகி " என்று கூறவும் தலைப்பட

..

.திருக்குறள் இலக்கியம் 6 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது அன்னாரின் முடிபு. இது தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

அந்த ஆய்வாளர்கள் கூறியுள்ள காரணங்கள் எனக்குத் தெரியாது . அவர்களின் நூல்கள் எனக்குக் கிடைக்கவில்லை . பாவாணர் , மறைமலையடிகள் முதலியோரின் ஆய்வு முடிவுகள் குறைபாடு உடையன . வையாபுரியாரைத் துரோகி எனத் தூற்றுவது ஆள்மீது தாக்குதல் . அவரது முடிவுகளைக் காரணம் காட்டி மறுப்பதே செய்யத்தக்கது . அப்படி யாரும் செய்யக் காணோம் . நமக்குப் பிடிக்காததைச் சொல்பவரைத் தூற்றுதல் மிக எளிது . அவர் தமிழுக்குச் சிறந்த தொண்டு ஆற்றியவர்களுள் ஒருவர் .
 
நல்ல அலசல். திரு சொ.ஞா, MJ இருவருக்க்கும் நன்றி.. தொடரலாமே?

ஒருவர் தம் மொழியின் மீது வைக்கும் அன்பால் கூட்டிச் சொல்லும் வாய்ப்புகள் இருக்கலாம்..

ஆதாரங்கள் காட்டி அறிவியல் முறைப்படி மெய்ப்பிப்பதே உலக அரங்கில் செல்லுபடியாகும்..

அப்படி ஏதும் உண்டா??
 
பல்லவர் காலத்திலிருந்து பல மன்னர்களின் சான்றுகள் உள்ளன. சங்கப் பாடல்களில் வரும் மன்னர்கள் யாருமே பல்லவர் காலத்திற்கு பிந்தியவர் அல்ல. அப்படி இருக்க இவை பல்லவர் காலத்திற்கு பிந்திய இலக்கியம் என்று சொல்ல முடியாது.வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப் பெருவழுதி பெரும்பெயர் வழுதி
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன் மதிவாணன்
பசும்பூண் பாண்டியன் பொற்கைப் பாண்டியன்
இளம் பெருவழுதி அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
வெற்றிவேற் செழியன் கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
உக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி
நல்வழுதி குறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945
வீரபாண்டியன் கி.பி. 946-966
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரகேசரி கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர தேவன் கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)


உதாரணமாக சங்கப் பாடலில் வரும் கரிகால் வளவன் கட்டிய கல்லணை இன்றும் உள்ளதல்லவா?
 
பல்லவர் காலத்திலிருந்து பல மன்னர்களின் சான்றுகள் உள்ளன. சங்கப் பாடல்களில் வரும் மன்னர்கள் யாருமே பல்லவர் காலத்திற்கு பிந்தியவர் அல்ல. அப்படி இருக்க இவை பல்லவர் காலத்திற்கு பிந்திய இலக்கியம் என்று சொல்ல முடியாது.வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன்
முதுகுடுமிப் பெருவழுதி பெரும்பெயர் வழுதி
கடைச்சங்க காலப் பாண்டியர்
முடத்திருமாறன் மதிவாணன்
பசும்பூண் பாண்டியன் பொற்கைப் பாண்டியன்
இளம் பெருவழுதி அறிவுடை நம்பி
பூதப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
வெற்றிவேற் செழியன் கூட காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
உக்கிரப் பெருவழுதி மாறன் வழுதி
நல்வழுதி குறுவழுதி
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்
இடைக்காலப் பாண்டியர்கள்
கடுங்கோன் கி.பி. 575-600
அவனி சூளாமணி கி.பி. 600-625
செழியன் சேந்தன் கி.பி. 625-640
அரிகேசரி கி.பி. 640-670
ரணதீரன் கி.பி. 670-710
பராங்குசன் கி.பி. 710-765
பராந்தகன் கி.பி. 765-790
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790-792
வரகுணன் கி.பி. 792-835
சீவல்லபன் கி.பி. 835-862
வரகுண வர்மன் கி.பி. 862-880
பராந்தகப் பாண்டியன் கி.பி. 880-900
பிற்காலப் பாண்டியர்கள்
மூன்றாம் இராசசிம்மன் கி.பி. 900-945
வீரபாண்டியன் கி.பி. 946-966
அமர புயங்கன் கி.பி. 930-945
சீவல்லப பாண்டியன் கி.பி. 945-955
வீரகேசரி கி.பி. 1065-1070
சடையவர்மன் சீவல்லபன் கி.பி. 1145-1150
பராக்கிரம பாண்டியன் கி.பி.1150-1160
சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி.1150-1162
மாறவர்மன் சீவல்லபன் கி.பி. 1132-1162
சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162-1175
சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1175-1180
விக்கிரம பாண்டியன் கி.பி. 1180-1190
முதலாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1190-1218
முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1216-1238
இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் கி.பி. 1238-1250
இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1239-1251
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251-1271
இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251-1281
சடையவர்மன் விக்கிரமன் கி.பி. 1149-1158
முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1268-1311
மாறவர்மன் விக்கிரம பாண்டியன் கி.பி. 1268-1281
இரண்டாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276-1293
தென்காசிப் பாண்டியர்கள்
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422-1463
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429-1473
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473-1506
குலசேகர தேவன் கி.பி. 1479-1499
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534-1543
பராக்கிரம குலசேகரன் கி.பி. 1543-1552
நெல்வேலி மாறன் கி.பி. 1552-1564
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564-1604
வரதுங்கப் பாண்டியன் கி.பி. 1588-1612
வரகுணராம பாண்டியன் கி.பி. 1613-1618
கொல்லங்கொண்டான் (தகவல் இல்லை)


உதாரணமாக சங்கப் பாடலில் வரும் கரிகால் வளவன் கட்டிய கல்லணை இன்றும் உள்ளதல்லவா?
 
மேற்கண்ட பட்டியலைக் காண்கிற போது 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது சங்க இலக்கியம் எனப் புரியும். அதற்கு முன்னர் பல்லவ சாம்ராஜ்யமும் முன்னூறு ஆண்டுகள் களப்பிரர் ஆட்சியும். தொண்டை மண்டலம் கரிகால் சோழன் காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்ததெனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடுபற்றி அறிய முடிகிறது.

ஆகவே சங்கத் தமிழ் நூல்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையவை. இவை களப்பிரர் காலத்தில் மறைந்திருந்து பிற்கால சோழர் மீட்டெடுக்கப்பட்டிருக்கலாம். அவ்வகையில் வெளினாட்டு அறிஞர்கள் தவறான முடிவுக்குச் சென்றிருக்கலாம்.
 
மேற்கண்ட பட்டியலைக் காண்கிற போது 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது சங்க இலக்கியம் எனப் புரியும். அதற்கு முன்னர் பல்லவ சாம்ராஜ்யமும் முன்னூறு ஆண்டுகள் களப்பிரர் ஆட்சியும். தொண்டை மண்டலம் கரிகால் சோழன் காலத்தில் சோழர் ஆட்சிக்கு வந்ததெனப் பட்டினப்பாலை முதலிய தமிழ் நூல்கள் கூறுகின்றன. முதல் சோழர் மரபினர் ஒருவர் தொண்டை மண்டலத்தை ஆண்ட செய்தி சங்கநூல்களில் காணக்கிடைக்கின்றது. 'திரையன்' அருவாவடதலை நாட்டை ஆண்டபோது, 'இளந்திரையன்' அருவா நாட்டை ஆண்டனன். தொண்டைமான் இளந்திரையன் என்பவன் காஞ்சியை ஆண்ட தமிழ் அரசனாகப் பெரும்பாணாற்றுப்படையில் சிறப்பிக்கப்படுகிறான். இந்த அளவே அகநானூறு முதலிய சங்க நூல்களால் பல்லவர் ஆட்சிக்கு முன்னிருந்த தொண்டை நாடுபற்றி அறிய முடிகிறது.

ஆகவே சங்கத் தமிழ் நூல்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முந்தையவை. இவை களப்பிரர் காலத்தில் மறைந்திருந்து பிற்கால சோழர் மீட்டெடுக்கப்பட்டிருக்கலாம். அவ்வகையில் வெளினாட்டு அறிஞர்கள் தவறான முடிவுக்குச் சென்றிருக்கலாம்.
 
Back
Top