lenram80
New member
நேற்று இரவு படம் பார்த்திலிருந்து அதே நினைப்பாகவே இருக்கிறது. இப்படி ஒரு படத்தை நான் எந்த மொழியிலும் இதுவரை பார்க்கவில்லை. இப்படி என்னை எந்த படமும் இந்த நாள் வரை பாதிக்கவில்லை. இந்த படத்தை பற்றி நான் எதுவும் எழுதப் போவதில்லை. பாலாவே இப்படி ஒரு படத்தை எடுத்து விட்டு அடக்கமாக இருக்கும் போது, நான் சும்மா 3 மணி நேரம் 'பார்த்து' விட்டு அளப்பது நன்றாக இருக்காது என்று நினைக்கிறேன். தேனீர் நீங்கள் எப்போதாவது குடித்து இருந்தால் கூட, இந்தப் படத்தை பார்க்க கடமைப் பட்டவர்கள் நீங்கள்.
"நரகக் குழியிலே வந்து மாட்டிகிட்டியே அங்கம்மா" என்ற இறுதிக்காட்சியின் இறுதி அலறல் இன்னும் என்னுள் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. நம் நாட்டிலேயே சொல்ல வேண்டிய, பள்ளிக் கூடங்கள் சொல்ல மறந்த கதையை அரவான், பரதேசி போன்ற படங்கள் பார்க்கும் போது இயக்குநர்களின் உழைப்பு வியக்க வைக்கிறது.
அனைவரிடமும் உழைப்பை இப்படி அநியாயமாய் உறுஞ்சியிருக்கும் 'கங்கானி' பாலாவுக்கு ஒரு கமர்சியல் வெற்றியாகவும் இந்த படம் அமையவேண்டும். இனி தமிழ் படங்களைச் சொல்லும் போது "உலக" தரத்துடன் என்ற வார்த்தைக்குப் பதிலாக "பரதேசி" தரத்துடன் என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரே ஒரு திஷ்டி:-
எல்லாம் தெரிந்த நாயகனை ஏன் சில இடங்களில் "சின்னதம்பி (பிரபு)" வாக காட்டவேண்டும் என்று புரியவில்லை.
"நரகக் குழியிலே வந்து மாட்டிகிட்டியே அங்கம்மா" என்ற இறுதிக்காட்சியின் இறுதி அலறல் இன்னும் என்னுள் அதிர்ந்து கொண்டே இருக்கிறது. நம் நாட்டிலேயே சொல்ல வேண்டிய, பள்ளிக் கூடங்கள் சொல்ல மறந்த கதையை அரவான், பரதேசி போன்ற படங்கள் பார்க்கும் போது இயக்குநர்களின் உழைப்பு வியக்க வைக்கிறது.
அனைவரிடமும் உழைப்பை இப்படி அநியாயமாய் உறுஞ்சியிருக்கும் 'கங்கானி' பாலாவுக்கு ஒரு கமர்சியல் வெற்றியாகவும் இந்த படம் அமையவேண்டும். இனி தமிழ் படங்களைச் சொல்லும் போது "உலக" தரத்துடன் என்ற வார்த்தைக்குப் பதிலாக "பரதேசி" தரத்துடன் என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஒரே ஒரு திஷ்டி:-
எல்லாம் தெரிந்த நாயகனை ஏன் சில இடங்களில் "சின்னதம்பி (பிரபு)" வாக காட்டவேண்டும் என்று புரியவில்லை.
Last edited: