இராஜிசங்கர்
New member
அன்புள்ள மன்ற உறவுகளுக்கு,
ராஜியின் அன்பு வணக்கங்கள்.
வரும் 21-ஆம் தேதி 'உலகத் தாய்மொழி நாள்'. எது எதற்கோ விழா கொண்டாடுகிறோம். இது போன்று உருப்படியான நாளினையும் கொஞ்சம் கொண்டாடுவோமா?
என்ன செய்யலாம்???? தமிழை நினைக்க வேண்டும். தமிழை வளர்க்க வேண்டும். உலர்வாய் இருக்காமல், ரசனையாகவும் இருக்க வேண்டும்.
என்னுடைய கருத்துக்கள்:
• அன்று பேசும் (அலுவலகம் சாராத) அத்தனை தொலைபேசி அழைப்புகளிலும் ‘ஹலோ’விற்குப் பதிலாக ‘வணக்கம்’ என்று சொல்லலாம். உரையாடலை முடிக்கும் போது ஒரு திருக்குறள் சொல்லி முடிக்கலாம்.
• அன்று அனுப்பும் (அலுவலகம் சாராத) அத்தனை மின்னஞ்சல்களிலும் கடைசியில் Regards பகுதியில் ஏதேனும் பாரதியார் கவிதை வரிகளை சேர்க்கலாம்.(signature ஆக)
• அன்று போடும் அத்தனை முகநூல் பதிவுகளையும் தமிழில் பதியலாம்.
• முடிந்தால் அன்று முழுவதும் பிற மொழிக் கலப்பில்லாமல் தமிழில் பேசுவதற்கு முயலலாம். (‘ஐயா…என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற அளவுக்குப் போக வேண்டியதில்லை. அப்படிப் போனால் நம்மால் இதைத் தொடர முடியாது. வீண் கேலிக்குள்ளாவோம். ‘நண்பா! என்ன டா செய்ற?’ என்பதும் தமிழ் தான். ‘hello..wat’s up’ என்பதற்குப் பதிலாக தமிழிலேயே எளிமையாகப் பேசலாம் என்பது என் கருத்து.)
மேற்சொன்ன அனைத்தையும் ஆரம்பிக்கும் போது கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கும். ஆனால் தொடரத் தொடர புது அனுபவமாக இருக்கும் என்பது உறுதி. கண்டிப்பாகக் கஷ்டமாக இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒரு நாள் தானே, தமிழுக்காக இதைக் கூட செய்ய மாட்டோமா என்ன?
முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே! நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும். உங்கள் அனுபவங்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் நாளின் கடைசியில்.
மன்ற உறவுகளே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இதைப் பற்றி???
ராஜியின் அன்பு வணக்கங்கள்.
வரும் 21-ஆம் தேதி 'உலகத் தாய்மொழி நாள்'. எது எதற்கோ விழா கொண்டாடுகிறோம். இது போன்று உருப்படியான நாளினையும் கொஞ்சம் கொண்டாடுவோமா?
என்ன செய்யலாம்???? தமிழை நினைக்க வேண்டும். தமிழை வளர்க்க வேண்டும். உலர்வாய் இருக்காமல், ரசனையாகவும் இருக்க வேண்டும்.
என்னுடைய கருத்துக்கள்:
• அன்று பேசும் (அலுவலகம் சாராத) அத்தனை தொலைபேசி அழைப்புகளிலும் ‘ஹலோ’விற்குப் பதிலாக ‘வணக்கம்’ என்று சொல்லலாம். உரையாடலை முடிக்கும் போது ஒரு திருக்குறள் சொல்லி முடிக்கலாம்.
• அன்று அனுப்பும் (அலுவலகம் சாராத) அத்தனை மின்னஞ்சல்களிலும் கடைசியில் Regards பகுதியில் ஏதேனும் பாரதியார் கவிதை வரிகளை சேர்க்கலாம்.(signature ஆக)
• அன்று போடும் அத்தனை முகநூல் பதிவுகளையும் தமிழில் பதியலாம்.
• முடிந்தால் அன்று முழுவதும் பிற மொழிக் கலப்பில்லாமல் தமிழில் பேசுவதற்கு முயலலாம். (‘ஐயா…என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்ற அளவுக்குப் போக வேண்டியதில்லை. அப்படிப் போனால் நம்மால் இதைத் தொடர முடியாது. வீண் கேலிக்குள்ளாவோம். ‘நண்பா! என்ன டா செய்ற?’ என்பதும் தமிழ் தான். ‘hello..wat’s up’ என்பதற்குப் பதிலாக தமிழிலேயே எளிமையாகப் பேசலாம் என்பது என் கருத்து.)
மேற்சொன்ன அனைத்தையும் ஆரம்பிக்கும் போது கொஞ்சம் தயக்கமாகத் தான் இருக்கும். ஆனால் தொடரத் தொடர புது அனுபவமாக இருக்கும் என்பது உறுதி. கண்டிப்பாகக் கஷ்டமாக இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒரு நாள் தானே, தமிழுக்காக இதைக் கூட செய்ய மாட்டோமா என்ன?
முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே! நிச்சயம் நல்ல அனுபவமாக இருக்கும். உங்கள் அனுபவங்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் நாளின் கடைசியில்.
மன்ற உறவுகளே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் இதைப் பற்றி???