arun karthik
New member
“ஹலோ... ராமு, நல்லா இருக்கியா?” தன் மகனை தொலைபேசியில் அழைத்தார் ரங்கராஜன்.
“இருக்கேன் இருக்கேன்” என்று ராமு கடிந்த வாறே பதில் கூறினான்..
“எங்கப்பா இருக்க?”
“ஆபீஸ்ல”.
“இன்னைக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை ஆச்சே!“
“எங்க ஆபீஸ் லீவு இல்லப்பா. நானும் மேனேஜர் பாலு சாரும் சேர்ந்து தான் வொர்க் பண்ணிட்டு இருக்கோம்.”, என்றான் ராமு.
“சரி. உங்க அம்மாதான் உன்கிட்ட எதோ பேசனும்னு போல இருக்குன்னு சொன்னா. இரு அவ கிட்ட பேசு” என்றார் ரங்கராஜன்.
“சீக்கிரம் கொடுங்கப்பா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ”.
“ராமு, உன்ன பார்க்கணும் போல இருக்கு வீட்டுக்கு வாடா” என்று ஆசையாக அழைத்தாள் ராமுவின் அம்மா கனகா.
“இல்லம்மா. எனக்கு வேலை இருக்கு. வர முடிஞ்சா போன் பண்ணிட்டு வரேன்" என்றான் ராமு .
“சரிப்பா. உடம்ப பத்திரமா பார்த்துக்க. நான் வைக்கறேன்” என்று போனை துண்டித்தாள் கனகா.
“பார்த்தியாப்பா! கஷ்டப்பட்டு படிக்க வச்சு, ஒரு வேலையும் வாங்கி கொடுத்து,கல்யாணமும் பண்ணி வச்சு,வீட்டுக்கு வாடா பார்க்கணும்னு சொன்னா, இப்படி பொய் சொல்றான்.” என்று ரங்கராஜன் புலம்பினார், தனது வீட்டிற்கு வந்திருந்த,நெருங்கிய தோழனும், ராமுவின் மேனேஜருமான பாலுவிடம்.
“இருக்கேன் இருக்கேன்” என்று ராமு கடிந்த வாறே பதில் கூறினான்..
“எங்கப்பா இருக்க?”
“ஆபீஸ்ல”.
“இன்னைக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை ஆச்சே!“
“எங்க ஆபீஸ் லீவு இல்லப்பா. நானும் மேனேஜர் பாலு சாரும் சேர்ந்து தான் வொர்க் பண்ணிட்டு இருக்கோம்.”, என்றான் ராமு.
“சரி. உங்க அம்மாதான் உன்கிட்ட எதோ பேசனும்னு போல இருக்குன்னு சொன்னா. இரு அவ கிட்ட பேசு” என்றார் ரங்கராஜன்.
“சீக்கிரம் கொடுங்கப்பா, எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு ”.
“ராமு, உன்ன பார்க்கணும் போல இருக்கு வீட்டுக்கு வாடா” என்று ஆசையாக அழைத்தாள் ராமுவின் அம்மா கனகா.
“இல்லம்மா. எனக்கு வேலை இருக்கு. வர முடிஞ்சா போன் பண்ணிட்டு வரேன்" என்றான் ராமு .
“சரிப்பா. உடம்ப பத்திரமா பார்த்துக்க. நான் வைக்கறேன்” என்று போனை துண்டித்தாள் கனகா.
“பார்த்தியாப்பா! கஷ்டப்பட்டு படிக்க வச்சு, ஒரு வேலையும் வாங்கி கொடுத்து,கல்யாணமும் பண்ணி வச்சு,வீட்டுக்கு வாடா பார்க்கணும்னு சொன்னா, இப்படி பொய் சொல்றான்.” என்று ரங்கராஜன் புலம்பினார், தனது வீட்டிற்கு வந்திருந்த,நெருங்கிய தோழனும், ராமுவின் மேனேஜருமான பாலுவிடம்.