தாய்ப்பாலில் உள்ள நோயை விரட்டும் மருத்துவ குணங்கள்

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தருவது சிறந்த தொடக்கம். ஆனால் நோய்களை விரட்டும் மருத்துவ குணமும் தாய்ப்பாலுக்கு உண்டு என்பதை விஞ்ஞானிகள் இப்போது தெரிவித்திருக்கிறார்கள்.

தாய்ப்பாலின் உள்ள மூலசெல்களுக்கு மறதி வியாதி முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு என்று சர்வதேச நிபுணர் குழு தெரிவித்துள்ளது. மூலசெல்களுக்கு உடலில் உள்ள எந்தச் செல்லின் தன்மையையும் மாற்றியமைக்கும் ஆற்றல் உண்டு.

புற்றுநோய், நீரிழிவுநோய், பார்வைக் குறைபாடு, பக்கவாதம் போன்ற நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் இச்செல்களுக்கு உண்டு என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மூலசெல் மருத்துவத்தில் தாய்ப்பால் புதிய ஆராய்ச்சி வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளது என்று மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழக பேராசிரியர் ஹசியோடோவ் தெரிவிக்கிறார்.

தாய்ப்பாலில் உள்ள மூலசெல்கள் பன்முகப் பயன்பாட்டுத் தன்மை மிக்கது என்று நிரூபிக்க நிறைய ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. ஆனால் அவை கருத்தன்மை மிக்கதாக இருந்தால் மூலசெல்களைப் பெற இது ஒரு புதிய வழியாக அமையும் என்று லண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிரிஸ் மேசன் தெரிவித்தார்.

அவற்றுக்கு பன்முகப் பயன்பாட்டுத்தன்மை இல்லை என்றாலும் தாய்மார்கள் தங்கள் தாய்ப்பாலில் உள்ள மூலச்செல்களை சேர்த்து வைத்து பிற்காலங்களில் வரும் நீரிழிவு போன்ற நோய்களை குணமாக்க பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நியு கேசில் பல்கலைக்கழக விஞ்ஞானி லைல் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்தார்.

நன்றி: http://tamil.webdunia.com/miscellaneous/health/news/1301/29/1130129054_1.htm
 
குறைந்தது ஆறு மாதமாவது குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கவேண்டும். தாய்ப்பால் உடல் வளச்சிக்கும் , அறிவு வளர்ச்சிக்கும் உதவும். தாய்ப்பாலுக்கு ஈடு எதுவும் இல்லை. பயனுள்ள கட்டுரையைப் பகிர்ந்துகொண்ட அமினுதீன் அவர்களுக்கு நன்றி.
 
தாய்ப்பால் குழந்தைகளுக்கு மிக சிறந்த வர பிரசாதம். சில தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு ஒரு வருடம் கழிந்தும் தாய்ப்பால் கொடுப்பதை கேள்விப்பட்டு இருக்கிறேன். சிலர் பிறந்த உடனேயே கூட குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் வேதனைகளும் நிகழ தான் செய்கிறது.
 
Back
Top