ரமணியின் ஆன்மீக மஞ்சரீ

ரமணி

New member
========================================================================
குறை ஒன்றும் இல்லை: kuRai onRum illai
========================================================================
http://en.wikipedia.org/wiki/Kurai_Onrum_Illai
========================================================================
This song is unique in many respects which include:

• RAjAji was not a regular composer of lyrics or known as a musician, only as a statesman and a sage; yet this song became a masterpiece and will be sung for ever in the Hindu world.

• The Tamizh word kuRai has several overtones of meaning. Here the word is used to mean that the devotee has no wants to ask for, finds no blemishes in the Lord's creation, or has no grievances at not being able to see the Lord as the JnAnis do.

• Usually, a devotee prays to the Lord to get things done for him/her. Here, the devotee realizes that God is always there to grant him his/her wishes, so requires nothing.

• The names KRShNa (KaNNA in Tamizh), Kesava, VenkaTEsha, Govinda are used interchangeably for the one and the same God.

• This song was sung by MS Subbulakshmi at her United Nations concert in 1969 arranged by the then UN Undersecretary-general C.V.Narasimhan. The song was set to music by KaDayanallur VenkaTaraman who has worked with MS for decades. It is now a highly popular song in the concert circuit. Almost every musician keeps it in his/her repertoire to be rendered either as a regular item towards the end or to be rendered at the request of the audience.

I have with all humility, attempted an English versified translation of the lyric, which can be sung in the same tune as the original composition in Tamizh. I have presented the Tamizh original, English transliteration and my translation in stanzas one after another, with the corresponding pauses marked with a vertical bar (|). I have retained the Tamizh forms of the Lord's 'nAmAvaLi' to have the same devotional fervor.

The best way to try the English translation is to sing along with the original Tamizh song, an mp3 file of which can be found online for listening or downloading easily, by a google search.

English Transliteration (Baraha scheme)
rAgamm: rAgammAlikA
tAlam: Adi
Lyrics: Chakravarti RAjagopalAcharyAr
Artiste: M.S.Subbulakshmi
Music: Kadayanallur VenkaTaraman

rAgamm: shivaranjani
pallavi:
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா ஆஆஆ
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

kuRai onRum illai | MaRaimUrtti kaNNA,
kuRai onRum illai kaNNA | Ah Ah Ah,
kuRai onRum illai | gOvi~ndA!

No blemishes are there, | MaRaimUrtti KaNNA,
No regrets for me KaNNA | Ah Ah Ah,
No grievance for me | GOvindA!


anupallavi:
கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

kaNNukkut teriyAmal | ~niRkinRAy | kaNNA,
kaNNukkut teriyAmal | ~ninRAlum | enakku,
kuRai onRum illai | MaRaimUrtti kaNNA!

Invisible to the eyes | standing there | KaNNA,
Invisible to the eyes | though you be | for me,
No grievance is there | MaRaimUrtti KaNNA!


charaNam 1:
வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க
வேண்டியதே வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

vENDiyadait ta~ndiDa | vE~gkaTEsan enRirukka,
vENDiyadE vERillai | MaRaimUrtti kaNNA,
maNivaNNA malaiyappA | gOvi~ndA gOvi~ndA!

To grant what's prayed for | as VenkaTEsan you are there,
None else is needed | MaRaimUrtti KaNNA
MaNivaNNA MalaiyappA | GOvindA GOvindA!


rAgam: kApi
charaNam 2:
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
கண்ணா திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார்
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

tiraiyin pin | ~niRkinRAy | kaNNA,
kaNNA | tiraiyin pin | ~niRkinRAy | kaNNA--unnai
maRai Odum | ~jAniyar maTTumE | kANbAr,
tiraiyin pin | ~niRkinRAy | kaNNA--unnai
maRai Odum | ~jAniyar maTTumE | kANbAr,
enRAlum kuRai onRum | enakkillai | kaNNA,
enRAlum kuRai onRum | enakkillai | kaNNA!

Veiled in you | stand there | KaNNA
KaNNA | veiled in you | stand there | KaNNA--only
Veda-chanting | JnAnIs will always | see you,
Veiled in you | stand there | KaNNA--only
Veda-chanting | JnAnis will ever | see you,
Even so grievances | not for me | KaNNA,
Even so grievances | not for me | KaNNA!


charaNam 3:
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குன்றின் மேல் கல்லாகி நிற்கின்ற வரதா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

kunRin mEl | kallAgi | ~niRkinRa varadA
kunRin mEl | kallAgi | ~niRkinRa varadA
kuRai onRum illai | MaRaimUrtti kaNNA
kuRai onRum illai | MaRaimUrtti kaNNA
maNivaNNA malaiyappA | gOvi~ndA gOvi~ndA

On the rock | as a stone | standing there VaradA
On the rock | as a stone | standing there VaradA
No grievance for me | MaRaimUrtti KaNNA
No grievance for me | MaRaimUrtti KaNNA
MaNivaNNA MalaiyappA | GOvindA GOvindA!


rAgam: sindhubhairavi
Charanam 4:
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி
நிலையாகக் கோயிலில் நிற்கின்றாய் கேசவா
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

kali~nALukkira~ggi | kallilE iRa~ggi
~nilaiyAgak kOyilil | ~niRkinRAy kEsavA
kali~nALukkira~ggi | kallilE iRa~ggi
~nilaiyAgak kOyilil | ~niRkinRAy kEsavA
kuRai onRum illai | MaRaimUrtti kaNNA

Sympathizing Kali Days | on a stone descending
Fixed up in temples, | and standing there KesavA
Sympathizing Kali Days | on a stone descending
Fixed up in temples, | and standing there KesavA
No grievance for me | MaRaimUrtti KaNNA


Charanam 5:
யாதும் மறுக்காத மலையப்பா
யாதும் மறுக்காத மலையப்பா
உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைகடலன்னை
என்றும் இருந்திட ஏது குறை எனக்கே
என்றும் இருந்திட ஏது குறை எனக்கே
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!

yAdum | maRukkAda | malaiyappA
yAdum | maRukkAda | malaiyappA--un mArbil
Edum tara ~niRkum | karuNaikaDalannai
enRum iru~ndiDa | Edu kuRai enakkE
enRum iru~ndiDa | Edu kuRai enakkE
onRum kuRai illai | MaRaimUrtti kaNNA
onRum kuRai illai | MaRaimUrtti kaNNA
maNivaNNA malaiyappA | gOvi~ndA gOvi~ndA
gOvi~ndA gOvi~ndA gOvi~ndA gOvi~ndA!

Nothing | you say no to, | MalaiyappA
Nothing | you say no to, | MalaiyappA--On your chest,
there to grant anything, | that Mother of compassion,
When she's ever there, | what shortfalls for me, (what short befAlls me,)
When she's ever there, | what shortfalls for me,
No grievance for me | MaRaimUrtti KaNNA
No grievance for me | MaRaimUrtti KaNNA
MaNivaNNA MalaiyappA | GOvindA GOvindA!
GOvindA GOvindA GOvindA GOvindA!


*** *** ***
 
இந்தப்பாடலைக் கேட்கும் போதெல்லாம்
கண்ணிர்மல்காமலிருந்ததில்லை!
கலிகாலம் முடியும்வரை
குறைதீர்கவெண்றே குன்றத்தில் குடியிருப்பவனிடம் (அவதாரத்தத்துவம்)
குறையேதுமில்லை கண்ணா! என்றுரைப்பது திகைப்பை உண்டடாக்குவது
ஆழமான அர்தமுடையதை சர்வ சாதாரணமாக சொலலும் இப்பாடல்
நெஞ்சை உருகவைக்கும் நாதமுடைத்தது.
 
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம்
(இணைக்குறள் ஆசிரியப்பா)

எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம்
தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு.
நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும்
நகையென மின்னும்
தகைசால் தெய்வீகத் துறவி
ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே.

மராட்டிய மாநில மூதூர் ஒன்றில்
விராட்டுரு முனியின் வீதியோர முகாம்.
யானைமேல் அமர்ந்து
நாலுபேர் சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே அழைத்து உசாவினார்:
இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ?

நாங்கள் ஓர்காலம் நீங்காத செல்வமுடன்
பாங்காக வாழ்ந்தோம் ஸ்வாமீ!
எந்தைதம் காலம் எய்திய காலை
விந்தையான முறையில்
தனங்கள் அனைத்தும் தானம் செய்துவிட்டு
வனமிகிவ் வானை எம்வசம் தந்து
கற்றது ஊரெல்லாம் சொற்றியே
உற்ற காலம் கழித்து வாழ்வீர்
என்று சொல்லி நன்று மறைந்தாரே!

அதன்படி நாங்களும் அங்கும் இங்கும்
மெதுவாக யானைமேல்
ஊர்விட்டு ஊர்சென்று
பேர்மிகு புராணக் கதைகள் சொல்கிறோம்
பக்திப் பாக்கள் பாடுகிறோம்
ஏதோ கொஞ்சம்
தீதில்லாப் பொருள்கிடைக்கும் எமக்கும் யானைக்குமே!

ஹாஹா என்று சிரித்தார் பெரியவர்.
இங்கேயும் இதுதான் நடைமுறை!
இவர்களும் என்னை யானைபோல்
தவறாது ஊர்விட்டு ஊராக
அழைத்துச் செல்லும் இடங்களில் நானும்
உழைக்கிறேன் பக்தி உள்பலம் பெருகவே.

இவர்கட்கும் சாப்பாடு பணமெனக் கிடைக்கும்
எனக்கும் பக்தர்கள்
எனக்கும் உமக்கும் ஒரேதொழில்!
பெரியவர் சிரிப்பில் நகைச்சுவை உணர்வும்
சரிசம உள்ளமும் கண்ட பக்தருளம்
விரிவும் உவகையும் வியப்பும் உற்றதே!

--ரமணி 08/01/2013

*****
 
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

02. எச்சில் தோஶம்
(கலிவிருத்தம்)

காளஹஸ்திக் கொருமுறை காஞ்சிமஹான் சென்றபோதவர்
காலடி பட்டுக் குலம்தழைக்கத் தம்மில்லம்
தினமும் வேண்டிநின்ற திடபக்தர் இல்லத்தில்
அனுக்கிரகம் செய்யவெண்ணி அகமுவந்தார் காஞ்சிமஹான்.

பக்தர் ஒருநாள் பூசையை முடித்து
பக்தியுடன் நைவேத்தியக் கற்கண்டை வாய்நிறைக்க
வெளியினில் யாரோவர வந்து பார்த்தால்
விளித்தபடி காஞ்சிமஹான் வீட்டின்முன் நிற்கிறார்!

கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை
மெய்சிலிர்க்கும் பக்தர்க்கு வாய்நிறையக் கற்கண்டு!
வந்தேன் நானிங்கு அனுதினம்நீ அழைத்ததால்
வந்தவனை வாவென்று வரவேற்க மாட்டாயோ?

வழியேதும் தெரியாமல் உமிழ்ந்துவிட்டுக் கற்கண்டை
விழிநீர் வரபக்தர் ’அபசாரம், அபசாரம்!
அபசாரம் பண்ணிவிட்டேன்’ என்றுரைத்துப் பதறினார்
உபசரித்த கரங்களால் உதவாத வாய்புதைத்து.

மஹான்தம் விழிகளில் மிகுந்த கருணையுடன்
தகாதது எதுவும்நீ செய்யவில்லை பக்த!
வாயில் புலால்வைத்தும் வாய்ஜலம் கொண்டும்
நாயனார் கண்ணப்பன் நாயகனை வழிபட்டான்!

தவறென்று நமக்கது தோன்றினும் தகவென்று
உவந்தான் அன்றோ உமைபாகன் இத்தலத்தில்!
சிவானந்த லஹரியில் ஆச்சார் யாளுமே
சிலாகித்துச் சொல்கிறாரே இத்தகு பக்தியை!*

கண்ணப்பன் வாழ்ந்த காளஹஸ்தித் திருத்தலத்தில்
எண்ணமே பெரிது எச்சில் தோஷமில்லை
என்று காஞ்சிமஹான் உரைத்த பின்னரே
நன்றென பக்தர் ஆறுதல் அடைந்தார்.

--ரமணி, 15/01/2013

*****

Source:
http://sskrishnan.blogspot.in/2012/03/6.html

குறிப்பு:
*காஞ்சி மஹான் குறிப்பிட்ட சிவானந்த லஹரிச் செய்யுள்:

मार्गावर्तितपादुका पशुपतेरङ्गस्य कूर्चायते
गण्डूषांबुनिषेचनं पुररिपोर्दिव्याभिषेकायते ।
किंचिद्भक्षितमांसशेषकबलं नव्योपहारायते
भक्तिः किं न करोत्यहो वनचरो भक्तावतंसायते ॥ ६३ ॥

mArgA-vartita-pAdukA pashupater-a~ggasya kUrchAyate
gaNDUShAMbu-niShechanaM pura-ripor-divyA-bhiShekAyate |
kiMchid-bhakShita-mAMsa-sheSha-kabalaM nav-yopahArAyate
bhaktiH kiM na karotyaho vanacharo bhaktAvat-aMsAyate || 63 ||

The way faring sandals become the kusa crown of Pashupathi,
The gargled mouthful of water become the holy water of bath ,
To him who destroyed the three cities,
The just tasted pieces of the remaining meat ,
Become the holy offering to the Lord,
And wonder of wonders, the hunter who lives in the forest
Becomes the king of devotees.
What is there in this world that devotion to the Lord cannot do?

*****
 
03. காஞ்சி முனிவரும் பூக்காரியும்
(குறள் வெண்செந்துறை)

காஞ்சிமடம் அருனிகிலோர் பூக்காரி. காமாட்சி என்பதவள் பெயராகும்.
காஞ்சிமகா பெரியவரை வணங்கிடுவாள் வாஞ்சையுடன் அப்பாவென் றேவிளித்து.

அனுதினமும் பெரியவரை அர்ச்சிப்பாள் விநயமுடன் ஒருகூடைப் பூக்கொணர்ந்து.
வினவுவார் பெரியவர் அவளிடம்: வீணாக்கு கிறாயம்மா பூவினை!

வீணாகும் பூவிற்றுன் பிழைப்பினைப் பேணுதல் வேண்டாமா என்பாரவர்.
காசென்ன பெரியது சாமீயுன் ஆசிதான் வேண்டும் என்பாளவள்.

மடத்திலோர் நியதியுண்டு: இரவினில் மாமுனிவர் துயில்கொள்ளச் சென்றபின்
இடமில்லை அவரை எழுப்புதற்கு. இதற்கோர் விதிவிலக்கு காமாட்சி.

பெரியவர் கட்டளை அவளுக்கு: பூவிற்றல் முடிந்தபின் தரிசனம்.
கருணையுளம் ஒப்புமோ அவள்கொண்ட கனிபக்தி பிழைப்பினைக் கெடுக்கவே?

ஓரிரவு நாகராஜனைப் பணித்தார் ஒன்பதுமணி செய்திகேட்டுச் சொல்ல.
பாரினில் நடப்பது குறித்துப் பரிவுடன் கேட்டார் பெரியவர்.

இகமறுத்த ஜகத்குரு என்றாலும் இன்னல்கள் தீர்க்க உலகியலும்
உகந்தவர் கேட்டு அலசி உன்னதத் தீர்வுகள் சொல்வார்.

பெரியவர் கால்களில் வெல்வெட்டுப் பாதுகை. புதுக்கோட்டை ஜானாவெனும்
பெண்மணியின் அன்புக் காணிக்கை. பாதுகை வேண்டினார் நாகராஜன்.

பெரியவர் அன்று முழுவதும் பாதுகையைக் கழற்றாமல் அணிந்திருந்தார்.
பரிவுடன் அளித்தார் பாதுகையைப் பூக்காரி தரிசனம் செய்தபோது.

’இந்தாஇது உனக்குத்தான், எடுத்துக்கோ!’ விந்தையில் உறைந்த காமாட்சி
வந்தனையுடன் பெற்றுக் கொண்டாள் அந்தமில் கருணைப் பரிசினை!

எத்தனைபேர் பாதுகை விழைந்தனர் அவளிடம்! ’வட்சரூபாய் தருகிறோம்
அத்தனையும் உனக்கே’ என்றபோதும் அசையவில்லை அவளது அசலபக்தி.

பெரியவர் அவள்தேவை அத்தனையும் பரிவுடன் நிறைவேறச் செய்தார்
திருமணம் அவள்வீட்டில் நிகழ்ந்த தருணம் பொருளுதவி பலசெய்தார்.

பெரியவர் சித்தியான பின்னரும் பூக்காரியின் அர்ச்சனையவர் சமாதிக்கு.
ஒரேஒரு வித்தியாசம் பெரியவர் இருந்தபோது வெறுமனே அனுப்பமாட்டார்.

அப்பா நீயிருந்தால் எனக்குத் தப்பாமல் பிரசாதம் அளிப்பாயே
இப்போதுநான் வெறுங்கூடை யுடனே! என்றவள் உட்கார்ந்து புலம்பினாள்.

புலம்பியவள் கூடையில் அதிட்டானம் உள்ளிருந்து யாரோ எறிந்ததுபோல்
மலரொன்று விழுந்தது செம்பருத்திப் பூவின் பிரசாதம் என்றே!

பெரியவர் மறைந்ததுநம் விழிகளில் இருந்தே. இதுபோன்ற நிகழ்வுகளால்
பிரத்தியட்ச மாகநின்று அவரென்றும் அருள்பாலித்தல் பலரது அனுபவம்.

*****
 
04. அறிவுரையில் நகைச்சுவை
(பலவிகற்பக் கலித்துறை)

காஞ்சிமகா பெரியவர் கால்நீட்டி சயனித்த காலை
காய்ந்த முகத்துடன் கிழவர் ஒருவர் வந்தார்.
பிரபோ! எதுவுமே முடியலை ஜுரம்வருது அடிக்கடி
பெரியவாதான் காக்கணுமென் இதயமும் பழுதென அங்கலாய்த்தார்.

பெரியவர் முனகிக் கொண்டே பேசினார் அவரிடம்
அருகில் உட்கார் உனக்கோர் சிறுகதை சொல்கிறேன்.
கிழவர் அமர்ந்தார் குழந்தையின் ஆர்வத்துடன் கதைகேட்க.
முனிவர் கதைசொன்னார் கனிவுடன் சன்னக் குரலிலே.

குறிசொல்லும் பூசாரி ஒருவர் கிராமத்தில் இருந்தார்
அறிவித்த தெல்லாம் பலித்திடும் ஆற்றல் உள்ளவரவர்
ஒருநாள் கோவிலைத் திறந்தபோது பொருட்கள் பலவும்
திருடுபோ னதுகண்டு தோழனைத் தேடி விரைந்தார்.

அந்தப் போலீஸ் தோழனோ இவரைத்தேடி விரைந்தோடி
வந்ததால் இருவரும் வழியில் சந்தித்தது விந்தை!
தேடிப்போன மூலிகை காலிலகப் பட்டதென்றார் பூசாரி.
கும்பிடப் போனதெய்வம் குறுக்கே வந்ததென்றார் காவலர்.

என்சைக்கிள் திருடு போய்விட்டது நீதான் குறிசொல்லணும்
உன்னைத் தேடிவரக் காரணம் இதுவென்றார் காவலர்.
அடராமா! கோயில் திருட்டை உன்னிடம் சொல்லவே
படபடத்து நான்வந்தேன் உன்னிடம் என்றார் பூசாரி.

உனக்கு குணமாக வந்தாய்நீ என்னிடம் இவ்வயதில்!
எனக்கே இங்கு மூன்று தினம்போலக் காய்ச்சல்!
பூசாரியும் போலீஸும் சந்தித்தது போலில்லை யாஇது?
ஆசாரியர் சிரிக்க சிரித்துவிட்டார் அந்தக் கிழவருமே.

*****
 
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி


05. காஞ்சி முனிவரின் கருணா கடாட்சம்
(நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா)

தரவு (ஆறடி)
சாதுர்மா சியம்போது சாதுகைசால் மாமுனிமுன் ... [சாதுகை=சாத்துவிகம்]
மாதொருவர் இரண்டாவது மகளுடனே தழைந்துநின்றார்
கல்யாண மங்கைக்குக் கோளாறு மூளையிலே
பல்வகையில் முயன்றுபார்த்தும் பலனில்லை குணமில்லை.
பெரியவர்முன் குடமொடுங்கும் பாம்பாக நின்றவள்மேல்
அருட்பார்வை சொரிந்தார்முனி அவளைக்கூர்ந் துநோக்கியே.

தாழிசை (நாலடி மூன்று)
அளவில்லாக் கவலையுடன் அங்குநின்ற அன்னையவள்
உளம்தனிலே ஜயசங்கர உச்சாரணத் துடன்சோர்ந்து
முந்தையநாள் இரவினிலே மகளுடனே தங்கிவிட்டாள்
எந்தையவர் தரிசனமே வந்துசேர்ந்தும் கிடைக்காமல்.

காதல்மகள் புத்தியெல்லாம் பேதலித்துக் கத்திமயங்க
மாதவளும் மனதினிலே முனிநாமத் துடனுறங்கப்
போததுவே புலர்ந்தவுடன் பெரியவரை தரிசித்துப்
பேதையைக் காப்பாற்றப் பரிவுள்ளம் வேண்டிநின்றாள்.

மூன்றுநாட்கள் முன்னின்று மஹாமுனியைத் தரிசிக்க
ஆன்றவிந்து அடங்கிய சான்றோரின் அருட்பார்வையில்
மூன்றாம்நாள் மகளுக்கு மாமுனிவர் ஆணையிட்டார்
ஆன்மவுயர் தருகின்ற அபிராமி அந்தாதிசொல.

தனிச்சொல்
எனவாங்கு

சுரிதகம் (ஆசிரியச் சுரிதகம்)
’தாரமர்க் கொன்றையும் சண்பக மாலையும்’
வாரணக் கடவுளை விளித்து மகளவள்
பெரியவர் தாமரைத் திருவடி நோக்கியே
வரிசையில் அடிகளை விளம்பித் தொடரப்
பாடிய வள்தனைப் பெரியவர் பார்க்க
நாடிய அதிசயம் நிகழ்ந்த தப்போது
கணீரென்ற குரலில் கற்றது சொற்றவள்
திடீரென நடுவில் திணறியே மயங்க
அவளை அப்படி யேவிடப் பணித்த
தவமுனி கண்ணொளித் தகவினில் மகளவள்
கொஞ்ச நேரத்தில் மயக்கம் தீர்ந்து
சிந்தை தெளிந்து எழுந்த விந்தையைக்
கண்ட தாய்மகள் கண்ணீர் பெருகத்
தண்டம் ஏந்தியார் திருவடி வீழ்ந்தனர்.
குருவின் கருணைப் பார்வை விழுந்தால்
அருகாத அல்வினை அவனியி லுண்டோ?

*****
 
ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்
ரமணி

06. சாது போர்த்திய சால்வை

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
[அரையடி = மா காய் மா; சீர்கள் ஒன்றிலும் ஐந்திலும் எதுகை/மோனை]


கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கினான்
. வானுயர் புகழ்பேகன்
தீனச் சிறுவர்க்குப் போர்வை நல்கினார்
. மாமுனி காஞ்சிமகான்
தான தருமத்தின் மூல வேரென
. ஆன வேதமெலாம்
கான ஸ்வரத்தோடு கற்றுப் பயின்றிடும்
. மாணவச் சிறுவரவர்.

வேத மாணவர்கள் பயணம் சென்றனர்
. வரையுயர் பூமியிலே
வேத மானவரும் உடன்சென் றாரே
. பாத யாத்திரையில்
ஆத வன்மேற்கில் மறையப் பொங்கியே
. ஆர்த்திடும் குளிரிரவில்
ஊதற் காற்றடிக்கச் சிறுவர் தவிப்பரெனப்
. பதைத்தது முனிவருளம்.

மறையின் கணம்கற்றுப் பழமாய்க் கனிந்த
. மறைமுது புலவருக்கே
முறையென் றளித்தவர்க்கு முகமன் செயவுள
. விலைமிகு சால்வைகளை
அறையில் சிறுவர்கள் போர்வை களின்றி
. உறங்கிடப் பாடுபடும்
குறைகள் நீக்கியவர் குளிரைப் போக்கி
. உறையிடக் கோடுத்தாரே.

அந்த நேரத்தில் தரிசித் திடவென
. வந்தார் மறைமுதியார்
விந்தப் பாதவிணை பற்றும் முதியவர்
. சிந்தை மகிழ்ந்திடவே
வந்த விருத்தர்க்குப் பரிசில் எனவே
. தந்திடச் சால்வையினை
இந்தக் கணத்தினிலே கொண்டு வாவெனத்
. தந்தையன் ஆணையிட்டார்.

மடத்தின் மேலாளர் சால்வை தேடியும்
. உடனடிக் கிடைக்கவில்லை
கொடுத்த உத்தரவின் ஏவல் இடம்பொருள்
. காத்திடும் எண்ணமுடன்
அடுத்த வர்யாரும் அறியா வண்ணம்
. சிறுவன் ஒருவனிடம்
உடைமை யென்றிருந்த சால்வை ஒன்றினை
. எடுத்துக் கொடுத்துவிட்டார்.

சால்வை பறிகொடுத்த சிறுவன் வருந்தியே
. வேறுவழி யேதுமின்றிக்
காலை முடக்கிவைத்துக் கையை மடக்கியே
. கண்ணுறங்கிப் போனானே
காலை கண்விழிக்க சொகுசுப் போர்வை
. கதகதப் புடன்தன்மேல்!
சாலப் பரிவுடனே மேல வர்வினவ
. நிகழ்ந்தது புரிந்துகொண்டான்.

கூர்த்த பார்வையிலே சிறுவன் ஒருவனுக்கு
. நேர்ந்தது அறிந்தமகான்
வார்த்தை யெதுவுமுடன் பேசா மலேயே
. வழிபாடுகள் முடித்தார்.
ஆர்த்த குளிர்போக நண்பன் பெற்ற
. ஆறுதல் தனக்கிலையெனப்
பார்த்து துக்கத்தில் வருந்தா தோவப்
. பாலகன் எனக்கேட்டார்.

எங்கே மகான்தன் சால்வை யையெடுத்து
. பங்கம் தீர்த்திடவே
அங்கே தூங்குகிற அறியாச் சிறுவன்மேல்
. தங்கும் சால்வையென
அங்கம் தெரியாது போர்த்தி விடேன்றே
. அறிவித்து விடுவாரோ?
பொங்கும் கவலைவர மேல வர்தானே
. சங்கடம் தீர்க்கவந்தார்.

என்பால் இரண்டுள்ள சால்வை களிலொன்றை
. நன்றாய்த் தருகின்றேன்
என்றே மேலாளர் சொல்ல முனிவரும்
. நன்கு தூங்குவோன்மேல்
மென்மை யாகமிகப் போர்த்தி விட்டுச்செல்
. என்று விடைகொடுத்தார்.
நன்மை விளைவித்து நம்மைக் காப்பவர்
. நடமாடும் தெய்வமன்றோ?

--ரமணி, 21/04/2013

*****
 
கணிதத்தில் அத்வைத, த்வைத, விசிஷ்டாத்வைதத் தத்துவங்கள்
http://www.periva.proboards.com/thread/4175/perivas-exposition-on-mathematical-formulae

Source: Email message from our respected member Sri M K Anantha raman

From one of the Great talks of Kanchi Periyava – short, simple yet profound, lucid, humorous too.

நாம அத்வைதத்த எடுத்துட்டாலும், த்வைதமா இருந்தாலும், விசிஷ்டாத்வைதமா இருந்தாலும் ஒரு ஜீவனுக்கு இறுதி இலக்கு பரமாத்மா தான். இதுல 'செகண்ட் தாட்'டே கிடையாது. ஆனா என்ன ஒவ்வொரு மார்க்கமும், ஒரு ஜீவாத்மா எப்படி, எந்தசூழ்நிலைல, என்ன வழிமுறைல பரமாத்மாவை அடையும்கறதுல வேறுபடறது.

இங்கே இருக்கற நிறைய பேர் கணிதம் படிச்சிருப்பீங்க என்ற நம்பிக்கைல சொல்றேன். மத்வாசார்யாரின் த்வைத மார்க்கம் கொஞ்சம் ஸ்ட்ரிட். சங்கரரின் அத்வைத மார்கத்துல பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு சதுரத்தின் பக்கத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு மாதிரி. அதாவது பக்கத்தை மிகச் சரியாக நாலு மடங்கு செய்தால் அதன் சுற்றளவு வந்து விடும். நான்கு என்பது ஒரு RATIONAL நம்பர். எந்த Ambiguityயும் கிடையாது.

ஆனால் த்வைத மார்க்கத்தில் ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பு ஒரு வட்டத்தின் விட்டத்துக்கும் அதன் சுற்றளவுக்கும் உள்ள தொடர்பு போன்றது.விட்டத்தை பை (Pi)மடங்கு பண்ணா அதன் சுற்றளவு வரும். ஆனால் நீங்க படிச்சிருப்பீங்க பை என்ற நம்பர் ஒரு Irrational number என்று. அதாவது அதை இரண்டு முழுஎண்களின் விகிதமாக எழுத முடியாது. இருபத்து இரண்டு bi ஏழு அப்படீங்கறது ஒரு approximation தான்.

பை (Pi) என்ற இந்த விகிதம் முடிவில்லாமல் அனந்தமாகப் போய்க்கொண்டே இருக்கும் என்று உங்களுக்குத் தெரியும். மூணு புள்ளி ஒண்ணு நாலு அப்படீன்னு எழுதி அதற்குப் பிறகு கோடி கோடி இலக்கங்கள் போட்டாலும் பை (Pi) என்ற எண் முடிவு பெறாது. எனவே வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தைப் போல இத்தனை மடங்கு அப்படீன்னு சரியாக, உறுதியா சொல்லவே முடியாது. விட்டத்தின் எல்லை அதன் சுற்றளவு தான். சுற்றளவு என்பது ஒரு முழுமையான எண். வட்டத்தின் விட்டமும் ஒரு முழுமையான எண். ஆனால் இவை இரண்டின் விகிதம் ஒரு முற்றுப்பெறாத எண். விட்டம் தான் ஜீவாத்மா, சுற்றளவு தான் பரமாத்மா என்று எடுத்துக்கொண்டால் பரமாத்மா ஜீவாத்மாவின் இலக்கு என்றாலும் அது ஜீவனின் இத்தனையாவது படிநிலை என்று உறுதியாக சொல்ல முடியாது.

விட்டத்தின் ஏதோ ஒருமுடிவிலி மடங்கில் சரியாக வட்டத்தின் சுற்றளவு வரலாம். ஆனால் எத்தனை துல்லியமாக கணக்குப் போட்டாலும் (Pi)பையை கோடி தசம ஸ்தானம் வரை எடுத்துக்கொண்டாலும் விட்டத்தின் மடங்குக்கும் சுற்றளவுக்கும் ஒரு சிறிய மைன்யூட்வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும். அதே போல ஜீவனின் இலக்கு பரமாத்மா என்று சொன்னாலும் பரமாத்வை அடைய (பரமாத்மாவாக மாற) ஜீவாத்மா எண்ணிலாத, கணக்கற்ற படிகளை கடக்க வேண்டி இருக்கிறது. ஒரு ஜீவன் சாதனைகளை செய்து படிப்படியாக எவ்வளவு தான் முன்னேறினாலும் அது சுற்றளவை நெருங்கலாமே தவிர சுற்றளவாக மாற முடியாது.

த்வைதம் ஸ்ரீமன் நாராயணனை சுற்றளவாக நிர்ணயம்செய்கிறது. உலகின் எண்ணிறைந்த ஜீவன்கள் தான் வட்டத்தின் எண்ணிறைந்தவிட்டங்கள். விட்டம் சுற்றளவாக மாற எண்ணிறைந்த முடிவிலியான படிநிலைகளைக்கடக்க வேண்டும். இதை தான் அவர்கள் தாரதம்யம் என்று அழகாகச் சொல்கிறார்கள்.

அதாவது ஒரு ஜீவாத்மா பரமாத்மாவாக முழுவதும் மாறி விடுவதை , எப்படி கணிதம் விட்டம் சுற்றளவாக மாறி விடுவதை தடை செய்கிறதோ , அப்படி த்வைதத்தின் பஞ்சபேத தத்துவம் தடை செய்கிறது. விட்டம் சுற்றளவா மாறுது அப்படீன்னா பை (Pi) அப்படீங்கறது ஒரு Rational நம்பர் அப்படீன்னு ஆயிடும். கணிதத்தின் முக்கிய எண்ணான பையின் அழகே அது கணிக்க முடியாமல் irrational ஆக இருப்பது தான்.எனவே ஜீவன் மற்றும் பரமாத்வாவின் உறவும் இப்படி நிச்சயமற்று Irrational ஆகஇருக்கிறது என்கிறார் மத்வாச்சாரியார்.

ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா ஐன்ஸ்டீனின் ஈர்ப்பு பற்றிய சமன்பாடுகளிலும் இந்த பை அப்படீங்கற நம்பர் வருது. அப்படீன்னா நம்மால் பிரபஞ்சத்தில் எதையும் இதுஇதன் இத்தனை மடங்கு அப்படீன்னு சொல்ல முடியாது. எதிலும் ஒரு நிச்சயமின்மைஇருக்கவே செய்யும். இதை தான் மத்வாச்சாரியார் பஞ்சபேதம் , அதாவது சமமின்மைஎன்கிறார். ஒரு ஜடப்பொருளும் ஜீவாத்மாவும் பேதப்பட்டது, ஏன் ஒரு ஜீவன் இன்னொன்றில் இருந்து பேதப்பட்டது. ஒரு ஜீவன் பரமாத்மாவிடம் இருந்துபேதப்பட்டது. என்கிறார்.

சங்கரர் மாதிரி சி இஸ் ஈக்குவல் டு ஃபோர் ஏ (C= 4A) அப்படீன்னு சொல்லிட்டா, பரமாத்வா ஜீவனின் இத்தனையாவது படி அப்படீன்னு சொல்லிட்டா நாம பரமாத்மாவை வரையறை செய்து ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ள அடைச்சுட்ட மாதிரிஇருக்கும். ஆனால் வேதாந்தம் பரமாத்மாவை நி-சீமா , எல்லையற்றவன், வரம்பு வரையறை அற்றவன் என்று சொல்கிறது.

எனவே மத்வாச்சாரியார் ரொம்ப சைன்டிபிக்-கா சி இஸ் ஈக்குவல் டு பைடி அப்படீங்கறார். ஒரு சுவாரஸ்யம் என்ன அப்படீன்னா திரிகோணமிதில சைன் (sine) மற்றும் காஸ் (cos) மதிப்புகளை கண்டுபிடிக்கும் 'டைலர்' சீரீஸை அப்பவே கண்டுபிடித்தவர் மத்வாசாரியார். அவர் ஒரு பெரிய கணிதவியல் மேதை கூட .அவர் எவ்வளவு அழகா தன் சித்தாந்தத்தை கணிதத்தில் இருந்து, கணிதத்தின் ஒரு அழகான எண்ணில் இருந்து எடுத்திருக்கார் என்பது அற்புதம்.


சரி இங்க விசிஷ்டாத்வைதம் ,அதாவது ஆண்டாள் போன்ற ஆழ்வார்களின் நெறி என்னஅப்படீன்னா, பரமாத்மா என்பது வட்டம் போல மாயத்தோற்றம் காட்டும் ஒரு சதுரம்என்பது. இந்த மார்க்கம் த்வைதம் மற்றும் அத்வைதம் இரண்டையும் ஓரளவுஒத்துக்கொள்கிறது.

அரிஸ்டாடிலின் கோல்டன் மீன் (Golden Mean) அப்படீன்னுசொல்வாளே அது மாதிரி .ஒரேயடியாக ஒரு ஜீவனிடம் நீ தான் பரமாத்மா அப்படீன்னு சொல்ல முடியாது. அவனுக்கு மிதப்பு வந்து விடும். அதே போல உன்னால்எத்தனை சாதனை செய்தாலும் பரமாத்மாவாக எப்போதும் மாற முடியாது என்று சொன்னால் அவன் மனமுடைந்து விரக்தியாகி விடுவான். எனவே நீ அஞ்ஞானத்தில்இருக்கும் வரை பரம்பொருள் உனக்கு ஒரு குழப்ப வட்டம். நீ ஞானம் பெற்றால் அதுஉனக்கு ஒரு தெளிந்த சதுரம் என்று சொல்கிறது இந்த நெறி.

அதாவது வெளியே குப்பன்,சுப்பன், கந்தன், கண்ணன் என்று பலபேர்களில் அழைக்கப்படுபவர்கள் பஸ்ஸில் ஏறியதும் கண்டக்டருக்கு 'டிக்கெட்' ஆக மாறி விடுவது போல.

பெரியாவாளுக்கு நிகர் பெரியவாள்தான்.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara !

*** *** ***
 
07. அற்புதங்கள் நிகழ்வன, நிகழ்த்தப்படுவன அல்ல!
(நேரிசை யொத்தாழிசைக் கலிப்பா)

தரவு
நகரத்தார் குடும்பத்திலொரு சிவபக்த செட்டியார்
அகரத்தின் ஆதியாக அவதாரப் பிரம்மமாகக்
கருணையலை பாயவிட்டுக் கரைசேர்க்கும் காஞ்சிமகான்
அருள்புரிந்த அனுபவத்தை அகம்நெகிழச் சொல்லுவரே.
ஆசார சீலமுடன் மாசற்ற பக்தியுடன்
பாசமிகு தன்மகனைப் பரிவுடனே அழைத்துக்கொண்டு
திருப்தியுடன் செட்டியாரும் தரிசனம் செய்துகொண்டு
திரும்பும்போ தவர்மகனும் திடீரென்று கிசுகிசுத்தான்.

தாழிசை
காதலுடன் சிறுவனவர் காதிட்டதைக் கண்ணுற்று
ஆதவன்நேர் அருமுனிவர் அருள்சுரக்க வினவினரே
குழந்தையவன் உங்களிடம் காதிட்ட தென்னவோ?
பிழையில்லை தயங்காமல் என்னிடம்நீர் கூறலாமே.

சற்றேதயங் கியவண்ணம் செட்டியார் சொன்னதிது
குற்றங்கள் பொறுத்தருள்வீர் குழந்தையவன் கேட்கின்றான்
பெரியவர் மடியினிலே பச்சைநிறப் பாவாடையில்
பரிவுடனே அமர்ந்திருக்கும் பாப்பாஅவள் யாரென்று.

யாருக்கும் தென்படாத தாயுருவக் குழவிசெட்டி
யார்பையன் கண்ணுக்குத் தெரிவதனை நம்புவதா
கூடாதா எனக்குழம்பி கூடிநின்றோர் ஆவலுடன்
ஆடாமல் அசையாமல் ஆன்றவிந்தார் முகநோக்கினர்.

தனிச்சொல்
எனவாங்கு

சுரிதகம் (ஆசிரியச் சுரிதகம்)
சிறுவன் சொன்னது வாஸ்தவ மென்று
குறுமுனிச் சித்தர் கூற லுற்றார்:
திருமடக் குருவினர் பரம்பரை தனக்கு
வருமருள் இப்படி வரப்பிர சாதமாய்.
எங்கள் மடிதனில் சாரதா தேவீ
தங்குவ ளென்பது தரணியி லைதிகம்
குபேர னுக்கே காட்சி தெரியும்
குபேர னாவான் குழந்தை விரைவில்.
அன்று நடுத்தர வர்க்கமா யிருந்தும்
ஆண்டுக ளிரண்டு ஓடிய பின்னர்
செட்டியார் பையன் சட்டென வேறு
செல்வக் குடியினில் வளர்மக னானான்.
அறுபத் தொன்பது வயதில் இன்றவர்
சிறுவர் இருவரை ஈன்று வளமுடன்
சீரும் சிறப்புமாய் வாழ்ந்து வருகிறார்.
பாரில் அதிசயம் யாவும்
நேருவ துண்டு நிகழ்த்துவ தில்லை.

--ரமணி 13/05/2013

பயன்பட்ட சுட்டிகள்:
INCARNATION OF BHRAHMA SWARUPAM ! | Kanchi Periva Forum
http://balhanuman.wordpress.com/2010/11/13/பிரம்மத்தின்-அவதாரம்/

*****
 
Last edited:
08. இருவினைப் பலன்கள்

(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
[அரையடி = விளம் மா தேமா; அடியெதுகை, சீர்கள் ஒன்றிலும் நான்கிலும் மோனை.]

அடியவர் ஒருவர் நெஞ்சில்
. அரித்திடும் கேள்வி யொன்று
விடைதெரி யாமல் நின்றார்
. வினைகளின் பலன்கள் பற்றி.
உடலினை உகுத்து ஆவி
. உலகினை விட்டுச் செல்லும்
நடைமுறை வாழ்வில் எங்கு
. நல்வினை பாவத் துய்ப்பு? ... 1

நரகினில் பாவம் யாவும்
. நலங்கெடத் துய்த்த பின்னர்
இருந்திடும் மீதி புண்யம்
. ஏகிடும் சுவர்க்க வாழ்வில்!
பிறப்பினில் மீண்டும் துய்க்க
. பேறுகள் வினைகள் ஏது?
இருமுறை சிட்சை என்றே
. பிறவிகள் ஆகு மன்றோ? ... 2

இழிநிலைப் பிறவி வாய்க்க
. இருக்குமே பாவ மூட்டை
செழுமையில் பிறக்க உண்டு
. செறிந்திடும் புண்ய மூட்டை
பழுதிலாக் கதியீ தென்று
. பனுவலும் உரைத்து நிற்க
பிழையிது என்றே தோன்ற
. பக்தரும் அல்ல லுற்றார். ... 3

பெரியவர் காஞ்சி யோகி
. பக்தரின் மனத றிந்து
அருளுரை சொன்ன போது
. அகன்றதே ஐய மெல்லாம்!
பரிவுடன் முனிவர் சொன்ன
. பொருள்மிகு உவமை தன்னில்
பரிதிமுன் மூட்டம் போலச்
. சடுதியில் தெளியும் உள்ளம்! ... 4

குளிர்ந்திடும் போது தண்ணீர்
. திரவமாய் இருப்ப துண்டு
ஒளிர்ந்திடும் கதிரில் தண்ணீர்
. திரவமாய் இருப்ப துண்டு
குளிர்தழல் அளவை விஞ்ச
. உறைந்திடும், ஆவி யாகும்!
அளவுடன் இருந்தால் தண்ணீர்
. நிலையினிற் பிறழா தன்றோ? ... 5

நல்வினை பாவம் எல்லாம்
. நம்முடன் தொடரும் சன்மம்,
வல்வினை யாக அன்றி
. வரம்பினில் இவையே நின்றால்!
எல்லையை இரண்டும் மீறி
. எடுப்பினில் நிற்கும் போது
தொல்லைதான் நரகம் சொர்க்கம்
. தீர்ந்தது தொடரும் சன்மம்! ... 6

முத்தியே கால எல்லை
. மரபுகள் மீறி நிற்கும்
உத்தியாய் நிற்கும் மேல்கீழ்
. உலகினில் காலம் உண்டு
நத்திடும் சுவர்க வாழ்வு
. நல்வினை தீரத் தீரும்
அத்தனை நரக வாழ்வும்
. அற்றிடும் காலம் உண்டு. ... 7

பாவமே எஞ்சிப் போக
. பாரினில் துக்க வாழ்வு!
ஆகவே தருமம் செய்து
. புண்ணியம் சேர்த்துக் கொள்வாய்!
ஆகம நூல்கள் சொல்லும்
. அறவழி இதுவே என்று
யோகமாய் வாழ்ந்து பார்த்து
. உயர்வதில் கிட்டும் முக்தி! ... 8

--ரமணி, 01/06/2013

பயன்பட்ட சுட்டிகள்:
Doubt clarified through Maha Periyavaa's lecture | Kanchi Periva Forum

*****
 
09. ’அவருன்னை என்னடா பண்ண முடியும்?’

(கலித்துறை)
காஞ்சிமா முனிவரது கருணையிலே கனிந்துவந்த கோமகனார்
வாஞ்சையுடன் அவரிவரை வாடாவென் றழைக்கும் வாக்காளர்
காஞ்சனமாம் எழுத்துலகில் பரணீதர மெரினாவாம் ஶ்ரீதர்சொலும்
ஆஞ்சனேயர் போல்நின்று அவராசான் காத்தருளிய அனுபவமிது. ... 1

அற்புதங்கள் நிகழ்த்திவரும் கற்பனைமிகு சித்தர்களில் அவரொருவர்
பற்பலவாம் நோய்களையும் குணமாக்கும் திறமைகள் படைத்தவரவர்
தற்செயலாய் உருவான சூழ்நிலையில் சகோதரர்க்குத் தாளாத
வற்றாத வயிற்றுவலி வந்திடவே சென்றேன்நான் வினைதீர்க்க. ... 2

பூசைசெய்து அண்ணனுக்குத் தந்தாரவர் திருநீற்றுப் பிரசாதம்
ஆசையுடன் அவர்பற்றி எழுதுவதைச் சித்தரவர் எதிர்நோக்கி
வாசலுக்கு ஈர்த்திட்ட சூழ்நிலையில் வேறேதும் வழியின்றி
ஆசையோ ஆர்வமோ ஏதுமின்றிச் சென்றேன்நான் அழைப்பேற்று. ... 3

நடுநிசியில் அறைக்கதவைத் தாளிட்டவர் அற்புதங்கள் நிகழ்த்தினார்
வடித்துவைத்த சாதமவர் வன்கையில் அரிசியானது வற்றிப்போய்
அடுப்பினிலே சமைத்திட்ட பருப்பெல்லாம் துவரையாய் ஆயிற்று
தடையின்றிப் பழனி-மதுரை திருச்சானூர்ப் பிரசாதங்கள் தருவித்தார்! ... 4

வேறென்ன வேண்டும்*ஓய் ஏனெதுவும் பேசவில்லை வியக்கவில்ல
பாறங்கல் மனதினிலே நினைவென்ன என்றாரவர் ஆறாது
கூறுவதற் கேதுமிலை இன்னும்பல அற்புதக் கூத்தர்நீர்
வேறென்ன சொல்லநான் என்றவுடன் கோபத்தில் வீறிட்டார். ... 5

எழுத்தாளர் என்பதனால் பேச்சினிலே சாமர்த்திய எண்ணமோ
வழுத்துகிறேன் இப்பொழுதே உபதேச மந்திரத்தை வாருமையா
எழுதிக்கொள் வீரென்றார் வந்ததுவே காகிதமுடன் எழுதுகோலும்
பழுத்தபழம் காஞ்சிமகான் படம்நெஞ்சில் தொட்டுப் பார்த்தேன். ... 6

உபதேசம் வேண்டாமே என்றவுடன் சத்தமிட்டார் உரத்தகுரலில்
விபரீதம் தாமுமக்குப் பலபேரென் உபதேசம் வேண்டிநிற்பார்
அபவாதம் அடியேனின் அடிவயிற்றில் அச்சமென அழுத்தியது
கபடமுடன் அவரெழவே பெரியவரைத் தியானித்தேன் காப்பதற்கே. ... 7

வந்தவரென் வலதுபக்கத் தோள்தொட்டுப் பேசினார் வன்சொற்கள்
இந்தக்கை யால்தானே எழுதுகிறீர் நிறுத்தவாவிதன் இயக்கத்தை
பந்தெனவே மென்மையாயவர் அழுத்திடவே என்வலக்கை பந்தமற்றுக்
கந்தலாகத் திகில்பற்றிப் பெரியவரை நினைத்தேனே கண்ணீருடன். ... 8

வாய்பேசா ஊமையெனநான் அந்நிலையிலும் காத்தேனென் உறுதியினை
பேய்கண்ட என்முகத்தில் மாளாத பயம்கண்ட பொல்லாதவர்
செயென்று நான்கருதி இப்பொழுதே உம்கையைச் சரிசெய்கிறேன்
ஆய்ந்துநீர் பார்த்தேயென் ஆற்றல்களை எழுதிடுவீர் அகமுவந்து. ... 9

போகலாமா எனக்கேட்டு விடைபெற்றேன். பயமெல்லாம் போனவுடன்
ஆகட்டும் பார்க்கலாம் மீண்டொருநாள் என்றாவர் தாகத்தில்.
ஏகியதும் வீட்டிற்குக் காண்பித்தேன் அவர்பொருட்கள் ஏவியதை
மேவியதே நீங்காத அச்சமென் தூக்கத்தை மாய்த்தவண்ணம். ... 10

ஆழமாக உறைந்ததுவே துயரமுடன் துன்பமுடன் அச்சமுமே
வேழமாக இருந்தவன்நான் வீட்டெலியாய் மாறிவிட வெதும்பினேனே
தோழனிடம் பகிர்ந்துகொண்டேன் துயரமெலாம் புறமேகத் தீர்வுகாண
ஏழைமனம் வலிமைபெறப் பெரியவரிடம் ஏகுவோமே என்றானவன். ... 11

பெரியவரோ யாத்திரையில் ஆந்திரமா நிலவெல்லைப் பகுதியிலே
இரண்டுமூன்று இடங்களிலே கார்நிறுத்திக் கேட்டோமவர் இருக்குமிடம்
இரவுமணி பதினொன்றோர் மரத்தடியில் கூண்டுவண்டி யிருந்திடவே
பெரியவருமோர் பாழடைந்த மண்டபத்தில் இருந்தாரே பக்கத்தில். ... 12

காவலராம் சுப்பையா மரத்தடியில் மெய்மறந்து கண்ணுறங்க
ஆவலுடன் பார்த்தபோது வாசலிலே கண்ணனுமே அமர்ந்திருந்தார்
தாவியே இறங்கினோம் கார்விட்டு நடந்தோம் துறைநோக்கி
நாவெடுத்தார் கண்ணனுமே எங்கேடா வந்தீங்க நடுநிசியில்? ... 13

கதையெல்லாம் அப்புறந்தான் பெரியவரை உடன்நாங்கள் காணவேண்டும்
அதுதானே முடியாது இந்நேரம் உறக்கத்தில் ஆழ்ந்திருப்பார்
அதோசாக்குத் திரைபின்னால் தரையினிலே உள்ளதுவே அவர்படுக்கை
எதுவாயினும் விடிகாலையில் தூங்குங்கள் உம்காரில் அதுவரையில். ... 14

கார்நோக்கிப் புறப்பட்டோம் திரைபின்னால் பெரியவர்குரல் கேட்டதுவே
யார்வந்தது ஶ்ரீதரா வரச்சொல்லு என்றாரவர் கார்மேகமாய்
ஆர்வமுடன் உட்சென்று அடிபணிந்து அழுதேனே ஆற்றாமையால்
தீர்வெனவே அவரன்புடன் என்னப்பா வெனக்கேட்டார் தீங்குரலில். ... 15

வான்மழையாய் வாத்சல்யம் வாஞ்சைபொங்கும் குரலிலவர் வர்ஷிக்க
நானெதுவும் ஒளிக்காது அவரிடம் விவரித்தேன் நாணம்விட்டு
ஏனிந்த சஞ்சலமுடன் பயம்துயரம் இதிலிருந்து எனைமீட்பீர்
தானெல்லாம் பொறுமையாய்க் கேட்டுவிட்டுக் கேட்டாரவர் ஏன்போனாய்? ... 16

சுருக்கென்று கேள்விதைக்க அண்ணனின் வயிற்றுவலி பொறுக்காமல்
மருத்துவரின் அறுசிகிச்சை ஆனபின்னும் அந்நோய்தான் மாளாது
வருத்துவதை உடனடியாய் ஏதேனும் அற்புதங்கள் வாயிலாக
சுருக்கவே குணமாக்கு வாரவரே எனுமாசையில் சென்றேன்நான். ... 17

பெரியவரிடம் ஆசிபெற்றபின் வேறொருவர் ஆசைகாட்டப் போனதற்கு
ஒருவாரமாய் அனுபவிக்கிறேன் தண்டனையை என்றேன்நான். அவராலே
வரும்வினைகள் நினைத்தாலே என்னுடலும் என்மனதும் விறைக்கிறது
பெரியவர்தான் காப்பாற்ற வேண்டுமெனை மன்னித்து பயம்போக்கி. ... 18

என்னபயம் அவராலுனை என்னடா பண்ணமுடியும்? என்றாசான்
சொன்னதுமே நன்றியிலே அழுதேன்நான் குறைந்ததுவே சுமையேல்லாம்
இன்னம்நீ இதுபோலே செய்பவரிடம் போகாதே என்றுரைத்தார்
இன்னலிலை பத்திரமாய் ஊருக்குச் செல்வாய்நீ இப்போதே. ... 19

பன்னிரண்டு மணியாகவே இரவுக்குத் தங்கிவிட்டுப் போகிறேனே
என்றுநான் சொன்னதற்கு ஒருபயமிலை கிளம்புநீ இப்போதே
என்றுமீண்டும் பெரியவரும் உத்திரவு தந்தவுடன் எழுந்துமீண்டும்
அன்னாரின் தாள்பணிந்து புறப்பட்டோம் ஊர்நோக்கி இருவருமே. ... 20

பூரணமாய் நிலவொளிரப் பூரணமாய் மனமமைதி பெற்றிடவே
பூரணனவர் சொன்னசொல் அவராலே உனையென்ன பண்ணமுடியும்
காரணத்துடன் காதொலித்துக் காத்துநிற்க விடைதெரிந்தது கேள்வியிலே
வேறொருவர் பயமெதற்கு நானிருக்க என்றதுவே விடிவானது. ... 21

அவர்சொன்னது கவசமென அமைந்திடவே நீங்கியதென் அச்சமெலாம்
தவமுனிவர் அரண்சொற்களில் துயர்நீங்கி நிம்மதியும் தோன்றியதே
அவமானம் புறமேகிட ஆனந்தம் பிறந்ததென் அகத்தினிலே
உவப்புடனே நண்பனுடன் உரையாடிப் பயணித்து ஊர்சேர்ந்தோம். ... 22

--ரமணி, 21/06/2013

மூலம்:
பரணீதரனின் புத்தகம் ’அன்பே... அருளே...’
WHAT CAN HE DO TO YOU ? | Kanchi Periva Forum

*****
 
10. தீயும் தீண்டாத் திருமேனி

(ஓரிரு விகற்பக் கலிவிருத்தம்?)
அறுபதுடன் எட்டோடு ஆயிரம் தொள்ளாயிரம்
செறிந்தவோர் ஆண்டினிலே திருவுருவ தரிசனம்
நிகழ்ந்ததோர் பக்தர்க்குக் காஞ்சிமகா முனிவரது
செகந்திராபாத் குன்றுமஹா கணபதியின் கோவிலிலே. ... 1

பெரியவர் அவர்க்குத்தன் திருவுருவப் படத்துடனே
திருப்பதி ஶ்ரீநிவாசப் பெருமாளின் படத்தையும்
கருணையுடன் தரபக்தர் அகமகிழ்ந்து விரைவாகத்
திரும்பினார் ஊருக்குத் திருவுருவப் படங்களுடன். ... 2

படங்களைப் பெரிதாக்கிச் சட்டமிடத் திட்டமிட்டுக்
கடைதனிலே கொடுத்தார் படங்களைச் சென்னையிலே.
இடிபோல் ஒருசெய்தி இருநாளில் வந்ததுவே
கடையினிலே தீப்பற்றிப் பொருளெல்லாம் எரிந்தனவாம்! ... 3

அடித்துப் பிடித்தோடி அடியவர் வந்துபார்க்க
கடையின் நிர்வாகி அவரிடம் சொன்னதிது:
கவலைப்பட வேண்டாம்சார் காஞ்சிமுனி பெருமாளின்
நகல்களைச் சிறிதும்தீ நாக்குகள் தீண்டவில்லை! ... 4

மகிழ்ச்சியுடன் படம்பெற்று நண்பருடன் காரினிலே
ஜகத்குரு முகாம்கார்வேட் நகர்நோக்கிச் சென்றார்கள்.
வழியிலோர் பிள்ளையார் ஆலயத்துள் சென்றிவர்கள்
வழிபட்ட போதின்னோர் ஆச்சரியம் வந்துற்றது! ... 5

ஶ்ரீமடப் பாரிஷாதர் தேடிவந்தார்; பெரியவர்
தாமதம் இல்லாமல் வரச்சொன்னார் உங்களை;
இரண்டுபேர் படத்துடன் மெட்ராஸில் இருந்துகாரில்
வருவரோரை உடனடியாய் அழைத்துவா என்றாரவர். ... 6

அல்பமாந்தர் இருவருமே ஆடித்தான் போனார்கள்
கல்யாண குணத்தவர்தம் அடியவர்கள் வந்தவுடன்
சொல்லாமல் ஏதுமே பூச்சொரிந்தார் படங்கள்மேல்
பல்லாயிரம் ஆசிதந்து பக்தர்களை அனுப்பிவைத்தார். ... 7

அதேபக்தர் திருக்கடையூர் ஆலயத்தில் ஓர்முறை
அதேநண்பர் அருகிருக்க அமிர்தகட ஈஸ்வரர்க்கு
அபிஷேகம் நடப்பதனை ஆனந்தமாய் தரிசித்தார்
அபிஷிக்தன் அடியாரின் ஆனந்தம் அதிகரித்தான்! ... 8

கருவறை லிங்கம்மேல் உருவொன்று தெரிந்தது
உருவதுவே தெளிவாகி முழுமதியாம் முகத்துடனும்
அபயம்தரும் கரத்துடனும் ஆன்றவிந்தார் காட்சிதந்தார்.
உபயமாம் தரிசனம்தம் உளம்விரித்த தெனநினைத்தார். ... 9

அருகிருந்த நண்பரிவர் கரம்தொட்டுக் காண்பித்தார்:
பெரியவா கருவறை லிங்கம்மேல் பார்த்தீரா
சங்கரா என்னபாக்யம்! எங்களுக்கா? இப்படியா?
அங்கவரே அமிர்தகட அத்தனென்று உணர்த்திவிட்டார்! ... 10

குருபிரம்மா குருவிஷ்ணு குருதேவ மஹேஸ்வரராம்
குருமூலம் பரப்பிரம்ம உருவற்ற பரவொளியாம்
குருவுருவே சகுணகுணத் திருவுருவம் தனைத்தாங்கி
அருமருந்தாய்த் தரிசனம்தரும் அனுபூத அடியார்க்கே. ... 11

--ரமணி 31/07/2013

*** *** ***
 
11. சந்திரமௌலீஸ்வரர்க்கு சங்கர வில்வார்ச்சனை
(வெண்டளைக் கலிவிருத்தம்)

சந்த்ரமௌ லீஸ்வரரின் தாள்போற்றி நாள்தோறும்
மந்த்ரஶ்ரீ ருத்ர திரிசதியா ராதனை
இந்த்ர சரஸ்வதி பேர்கொண்ட காஞ்சிமுனி
சந்திர சேகர சங்கரரின் வில்வார்ச்சனை. ... 1

வில்வதளம் எல்லாம் இலைமூன்று கொண்டவையாய்
சொல்வதற் கேதும் துளையின்றி வாடாத
நல்லவகை வில்வதளம் வல்லிதின் வேண்டுமே
நல்வழியில் வில்வதளம் கொய்யவும் வேண்டுமே. ... 2

பணியாள் ஒருவர் வழிபாடு முன்னே
அணியுள்ள வில்வ தளங்கள் பிரித்தே
மணிபோலத் தேர்ந்தெடுத்து வைப்பார் தனியே
பணியாள் அவரை அழைப்பதே வில்வமென. ... 3

ஏதோவோர் காரணத்தால் வில்வம் வருவது
நாள்தோறும் குன்றி நலிந்துபோக லானது
ஏதோகண் பட்டாலும் ஏற்ற இலைகளிலை
மாதேவன் கோவிலின்று கொள்வதும் கூடாது. ... 4

ஹிந்திப் புலவரைக் கேளென்றார் காஞ்சிமகான்
சந்தடி இல்லா நகராட்சிப் பூங்காவில்
சிந்தை கனிந்ததோர் முஸ்லிம்*ஆ சானுக்கு
அந்தப் புலவர் தினம்பாடம் சொல்லிவந்தார். ... 5

மாமுனியின் சிப்பந்தி பண்டிதரைக் கேட்கவே
தாமத மின்றியவர் காண்பித்தார் பூங்காவில்
நாமம் அறியா மரஞ்செடி மத்தியில்
மாமரம்போல் பச்சை மரகத வில்வம். ... 6

கண்படாத ஓரிடத்தில் தண்பச்சை வில்வமரம்
பண்டிதர் மட்டும் அறிந்திருத்தல் மாமுனிக்குத்
திண்மையாய்த் தோன்றிய தெங்ஙனம் தந்தையே?
பெண்நானென் தந்தையிடம் கண்விரித்துக் கேட்டேன். ... 7

பெரியவரின் லீலைகளில் ஒன்றம்மா இஃது
சிரித்தவாறே என்தந்தை சொன்னதைநான் நம்பவில்லை
பெரியவரின் ஊகமிது ஹிந்திப் புலவர்
அரன்பக்த ராகையால் கண்டிருக்க லாமென்று. ... 8

அப்படி யில்லையது மைதிலி, இப்படியோர்
ஒப்பிலா ஸித்தி துறவிக்கே கைகூடும்.
அப்படி யாயின் அவருக்கே பூங்காவில்
செப்பமாய் ஓர்வில்வம் தென்பட வேண்டாமோ? ... 9

பெரியவர் சக்திப் பெருமை யதுவே
அரியதோர் ஸித்தியொன்று ஆன்றவிந்து வந்ததைத்
தெரியாமல் உள்ளே மறைத்துப் பிறர்முன்
அறியாத வர்போல ஆடுமோர் ஆட்டம்! ... 10

பூங்கா மரம்பற்றிச் சொன்னாலென் னாகும்பார்!
தூங்காது சீடரும் போவோர் வருவோர்கண்
ரீங்கார வண்டுபோல் செய்தி பரப்பிமகான்
ஓங்கார ப்ரம்மமென தண்டோரா போட்டிருப்பார்! ... 11

இதனால் சுவாமிகள் இந்த நிகழ்வில்
இதமுறும் காரணமாய்ப் பின்நின்று, என்னை
முதனிறுத்தி சற்றே புகழ்தந்து, தன்னைப்
பதமாகத் தன்னுள் மறைத்துச் செயல்பட்டார். ... 12

நெஞ்சுருகிப் போனேன் செவியுற்ற தத்துவத்தில்!
தஞ்சம் அடியார்க்குத் தந்து விளையாடி
கிஞ்சித்தும் தன்னிலை இன்னதெனக் காட்டாது
விஞ்சிடும் வாஞ்சை விளைத்திடும் ஞானி! ... 13

--ரமணி, 17/08/2013

மூலம்:
’மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’
ஏழாம் தொகுதி, பக்.7-11
வானதி பதிப்பகம்

*** *** ***
 
12. முருக பக்தர் பெற்ற அனுபவம்
(பக்தர்: க. இராஜா)
(அறுசீர் விருத்தம்: விளம் மா தேமா விளம் மா தேமா நிரல்)

வாவியுள் உறையும் அன்னம்
. ஆவியுள் உறையும் சாது (1)
பாவியர் வினைகள் குன்ற
. நாடெலாம் அலையும் சித்தர் (2)
மேவியே காஞ்சி பீடம்
. மெய்யறி வித்த வேந்தர் (3)
யாவரும் வணங்கிப் போற்றும்
. காஞ்சிமா முனிவ ராவார். ... 1

அடியவன் அவரை நாடி
. தனிப்பெருங் கருணை பெற்றேன்
அடியவர் யாரு மில்லா
. நாற்பது நிமிட நேரம்
முடிவிலாக் காட்சி தந்தென்
. உயிரினுக் குயர்வு தந்தார்
கடிதிலே பொழுது சென்றும்
. மனதிலே என்றும் நிற்கும். ... 2

ஒருதினம் மனைவி யோடு
. தரிசனம் செய்யச் சென்றேன்
அருகிலே அழைத்துக் கேட்டு
. ஊர்பெயர் சொன்ன உடனே
திருப்பழ னம்பஞ் சாபன் (4)
. பேத்தியின் கணவன் நீரா
ஹரிகதா கதைசொல் வாரா
. அவர்மகன் கூட என்றார்! ... 3 (5)

என்பிதா கந்த சாமி
. வேலவன் பக்தர் நாங்கள்
என்சிறு பிராயம் தொட்டு
. வீட்டிலே தினமும் பூசை
சென்னைகந் தகோட் டத்தில்
. திருப்புகழ் இராம லிங்கம் (6)
சொன்னதோர் உரையை நானும்
. சந்தமாய்ப் பண்ணி சைத்தேன். ... 4

பஞ்சமு தவண்ணம் என்று (7)
. பாம்பனூர் சுவாமி செய்து
கொஞ்சிடும் தமிழில் சொன்ன
. ஒப்பிலாக் கவியை நானும்
அஞ்சுபண் களிலே சந்தப்
. படுத்திநான் பாடி யின்னும்
கொஞ்சமாய் வண்ணம் செய்து
. திருப்புகழ் பாடு கின்றேன். ... 5

பெரியவர் வியப்பைக் காட்டி
. இரண்டினைப் பாடச் சொல்லிப்
பரிவுடன் கேட்டுச் சொன்னார்
. அந்தஶ்ரீ பாம்பன் சாமி
அறிமுகம் எனக்கு இல்லை
. சுவாமியோ ஜகநா தன்னோ (8)
ஒருவரும் சொல்ல வில்லை!
. முதன்முதல் கேட்ட தின்பம். ... 6

சொன்னவர் சால்வை தந்து
. அருளுடன் ஆனுப்பி வைத்தார்
என்பெயர் சுவாமி நாதன்
. எந்தைசுப் பிரமண் யம்தான்
உந்தையும் கந்த சாமி
. சுவாமியே முருகன் கீர்த்தி!
அன்னவர் அருளால் என்றும்
. அறுமுகன் பாட்டென் வாழ்வாம். ... 7

--ரமணி, 22/08/2013, கலி.06/05/5114

மூலம்:
’முருகனிடம் முருகிய பக்தி’, க. இராஜா
’மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’
இரண்டாம் தொகுதி, பக். 211-214
வானதி பதிப்பகம்

குறிப்பு:
(1) ’பரமஹம்ஸ’ என்று மூலத்தில் உள்ளது
(2) ’பரிவ்ராஜக’ என்று மூலம்
(3) ’மஹாசந்நிதானம்’ என்று மூலம்
(4) ஹரிகதா காலட்சேப சக்ரவர்த்தி,
திருப்பழனம் பிரம்மஶ்ரீ பஞ்சாபகேச சாஸ்திரிகள்
(5) அவர்மகன்: ஶ்ரீ டி.பி. கல்யாணராம சாஸ்திரிகள்
(6) திருப்புகழ் சதுரர் திரு.இராமலிங்கம் பிள்ளை (பள்ளி ஆசிரியர்)

(7) ஶ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த பாடல்
’பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம்’
தரவிறக்கம்: http://www.adiyaar.com/Adiyaar_Com - Panchamirtha Vannam.Pdf

(8) ’சுவாமி’ = மஹாமஹோபாத்யாய ஶ்ரீ சுவாமிநாத அய்யர்
ஜகநாதன் = கி.வா.ஜகந்நாதன்

*****
 
14. தமி நிற்கும் ழகரம்
(அறுசீர் விருத்தம்: விளம் விளம் தேமா விளம் விளம் தேமா)

முத்தமிழ்க் காவல ரெல்லாம் மூக்குமேல் அங்குலம் வைத்த
வித்தகம் தமிழினில் காட்டி பெரியவர் வியப்புறச் செய்வார்
இத்தமிழ் இப்பெயர் எங்ஙன் பெற்றது தெரியுமா என்றார்
அத்தனைத் தமிழும் ஆய்ந்த கிவாஜகந் நாதனி டத்தே.

அருமறை சமஸ்கிரு தம்பேர் அழகுறச் செய்வதா லன்றோ?
பொருளெனத் தமிழ்மொழி பேரில் இருப்பதி யாதெனக் கேட்டார்.
பெரியவா சொல்வதென் றால்நான் தெரிந்துகொள் வேனென பக்தர்
அருமையா யெளிமையாய்ச் சொன்னார் பணிவுடன் திருமுகம் நோக்கி.

எம்மொழி யிலுமிலாச் சீர்மை யெழுத்தென ழகரமா யிங்கு
நம்மொழி தமிழ்மொழிப் பேரில்! நலமெழில் இனிமையா மர்த்தம்!
அம்மொழிச் சொற்களின் பாங்கு! குழந்தைம ழலைப்பழம் யாழே!
தமியெனும் ழகரவெ ழுத்தால் தமிழ்-எனும் பெயர்வரக் காணீர்!
[தமி = ஒப்பற்றது, தனித்து நிற்பது--unique]

அதன்பினே பெரியவர் யாமா* மாலைமாற் றுப்பதி கத்தைப்
பதம்பிரித் துப்பொருள் சொன்னார் பதங்களை எளிமையில் தோய்த்தே
கதம்பமாய்ப் பாடிய காளி தாசனின் காலரைச்* செய்யுள்
இதம்விரி விதங்களைச் சொல்லி அதனழ கினிமையி லாழ்ந்தார்.

பெரியவர் பொழிவினைக் கேட்ட பெருமொழிப் புலமையோ ரெல்லாம்
அரியதோர் பேறினைப் பெற்ற அருமையில் களிப்புடன் சென்றார்
பொருந்திடும் தமிழ்மொழிப் பேரின் பொருளினைக் கிவாஜகந் நாதன்
பெருமையா யினிவரும் மேடைப் பேச்சிலே விளக்குவே னென்றார்.

--ரமணி, 03/09/2013, கலி.18/05/5114

குறிப்பு:
1. யாமா மாலைமாற்றுப் பதிகம்:

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
--திருஞானசம்பந்தர், சீகாழிப் பதிகம், முதல் பாடல்
[பொருள்: http://thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=3&Song_idField=31170]

2. காளிதாசனின் காலரைச் செய்யுள்

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது.
[பொருள்: http://www.visvacomplex.com/BinnanggaLin_Pinnal_Paattu.html]

3. உதவி:
http://www.periva.proboards.com/thread/5056/
https://groups.google.com/forum/#!topic/sathvishayam/v1O7mK62X2I

*****
 
17. நந்தன் தரிசனம்
(அறுசீர் விருத்தம்: அனைத்தும் காய்ச்சீர்)

ஏதோவோர் கிராமத்தில் முகாமிட்ட
. ஏகம்பக் கச்சிமுனி யோர்காலை
யாதோவோர் காரணமாய் வயல்வரப்பில்
. பரிவாரம் உடன்வரவோர் நடைசென்றார்
சாதாவென் றோருழவர் தூரத்தே
. தண்டனிட்டார் கோவணமே ஆடையென
மாதேவன் பார்த்துவிட்டுச் சென்றாரே
. யாதொன்றும் பேசாத உருவெனவே.

மீள்வந்த ஐயனின்முன் வரப்பினிலே
. ஏருழவர் காய்கறிகள் குவித்திருந்தார்
தாள்நிறுத்திக் கைசொடுக்கி உழுவாரைத்
. தன்முன்னே கூப்பிட்டார் தவஞானி
’ஆளெனவே எனைக்கருதிப் பெறுவீரோ
. மாட்டீரோ என்றிவைநான் இவண்குவித்தேன்!’
காளகண்ட னானமுனி கோவணரைக்
. கருணையொடு கண்கூர்ந்தே ஏற்றாரே.

’இற்றைநாள் பிக்ஷைக்குச் சேர்த்துக்கோ’
. செப்பிடுவார் ஐயனும்தம் அடியவர்க்கே
நிற்காது அத்துடனே கருணைவெள்ளம்
. நிமலனொரு நாடகமும் நடத்திடுவார்
சற்றுதூரம் சென்றவரும் நட்டநடு
. சாலையிலே வெய்யிலிலே போய்நின்றே
மற்றவர்போல் சிறுசெய்தி பேசிடுவார்
. மனமில்லா தோரடியார் பின்தொடர.

வற்றியதம் மேனியினை மெல்லசைத்தே
. வத்திரமும் தலைக்கேறத் தலையிறங்கத்
தெற்காலே கிழக்காலே மேற்காலே வடக்காலே
. சிறுகுனிந்தும் தலைநிமிர்ந்தும் கரம்நடித்தும்
ஒற்றைக்கால் மடித்துநின்றும் விடுத்துநின்றும்
. ஒருமணிநே ரம்நின்று ’படுத்திடவே’
உற்றடியார் பாலுவென்பார் பட்டபாடு
. உப்பேதும் இல்லாத ஆட்டமதோ?

அதன்பிறகு முகாம்சென்று பூசனைகள்
. வழக்கம்போல் பிக்ஷைபின் ஓய்வெடுத்தார்
மெதுவாக பாலுவிடம் வினவினரே
. வெகுநேரம் வெய்யிலிலே நின்றாயோ?
அதுவெல்லாம் இல்லையென்றும் விடாப்பிடியில்
. காரணம்கேள் என்றாரே பாலுவிடம்
இதுவேறே என்றுகொஞ்சம் சலிப்புடனே
. என்னவென்று பாலுவுமே கேட்டாரே.

’என்னையேநீ முன்னாடி பின்னாடி
. ஏறெடுத்துப் பார்ப்பதென்றால் என்னசெய்வாய்?’
’முன்னாலே பின்னாலே போய்நிற்பேன்
. ஒருபக்கம் பார்ப்பதுவும் அப்படியே’
இன்றுகாலை வயல்வேலை பார்த்தவனாய்
. என்முன்னே நின்றவனோர் நந்தனடா
’அன்னவனுக் கேதுநேரம் அதனாலே
. நன்றவனே பார்த்திடவே செய்தேனே!’

--ரமணி, 25-26/12/2013, கலி.11/09/5114

உதவி:
http://www.periva.proboards.com/thread/6046/

*****
 
18. குட்டு விளைத்த கூட்டு!
(அறுசீர் விருத்தம்: விளம்/மா காய் மா, அரையடி)

வந்தனர் ஐந்தாறு நபர்கள்.
. வைணவர். கறைவேஷ்டி. திருமண்.
வந்தனம் செய்தேதாள் பணிந்தார்.
. வயதான ஒருவரைத் தவிர.
சிந்தையில் நிற்பதில்லை எதுவும்
. இந்தவோர் பெரியவர்க்கே! இன்னும்
எந்தவோர் ஆலயமோ? இவரை
. பெரியவா சரியாக்க வேண்டும்!

பெரியவர் பெரியவரைப் பார்த்தார்.
. விஷ்ணுச ஹஸ்ரநாமா வளியில்
அரியதோர் ஸ்லோகத்தைக் கொடுத்தே
. அவரைநூற் றெட்டுமுறை தொடர்ந்து
வரிபிச காதுசொலச் சொன்னார்
. அச்சுதா னந்தகோ விந்த...*
அருமுனி அடுத்ததாய்ச் செய்தார்
. அதிரவைக் கும்செயலா யொன்றே.

மல்லனைப் போன்றொருவர் தம்மை
. மறைமுனி விளித்தார்கை சொடுக்கி
வல்லிய குட்டுவொன்றை அந்த
. வயதினர் தலைவைக்கச் செய்தார்
கல்லெனத் தலைவிழுந்த குட்டில்
. கணத்திலே தெளிந்ததவர் சித்தம்!
மெல்லிய குரலெடுத்துக் கிழவர்
. விழிகளை உயர்த்தினார் வியப்பில்!

ஏண்டா ரகுநாதா நாம
. எங்கே இருக்கோம்னு சொல்லு?
ஆண்டாள் சன்னதில இருந்தோம்
. அப்புறம் என்னாச்சு சொல்டா
காண்பது எல்லாமே இங்கே
. கபாலி சின்னமாவே இருக்கே?
ஈண்டெவண் வந்தேன்நான் பார்த்தால்
. இதுவோர் மடம்போல உளதே?

பெருகிய விழிநீரும் வழிய
. பெரியவர் காத்தனரே என்றார்
பெரியவர் கையுயர்த்தி யேதம்
. பெருமையை மறைத்தபடி சொன்னார்
பெருமாளே காப்பாற்றி யுள்ளார்
. எத்தனை திவ்யதேசம் சென்றீர்!
அருமுனிக் குறுமுனியா யவர்தம்
. அருமையைப் போற்றுதலை யொப்பரோ?

குறிப்பு:
பெரியவா சொல்லச் செய்த விஷ்ணு ஸஹஸ்ரநாம வரிகள்
அதன் கிரமபாடத்தில் த்வாதஷ நாம பஞ்சரம் பகுதியில்
15-ஆம் ஸ்லோகமாக வருவன:
"அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் |
நஶ்யந்தி சகலா ரோக, சத்யம் சத்யம் வதாம்யஹம் ||"‘
http://vthuppal.tripod.com/ipd_str5.pdf

--ரமணி, 02/01/2014, கலி.18/09/5114

*****
 
19. பாமரனின் பரிணாமம்
(குறும்பா)

கலியுகத்தில் கண்படவே நிதமாடி
நிலையுயர்த்தி யாட்கொள்ளும் இதமாகக்
. கச்சிமுனி சென்னைமுகாம்
. இச்சையுடன் மன்பதையாம் ... [மன்பதை = மனித இனம்]
நிலைகொண்டார் ஈராண்டு விதமாக. ... 1

மயிலையிலே நிலைகொண்டார் மையமென
அயலிடங்கள் பயணித்தார் மெய்யனவர்
. இருந்தவிடம் ஆலயமாம்
. மருந்தெனவே பாலனமாம்
உயிருக்கும் உடலுக்கும் உய்வெனவே. ... 2

ஒருகாலை அடியார்கள் உடனுறவே
திருவான்மி யூர்சாலை நடைச்செலவாய்
. மருந்தீசர் கோவிற்றிசை
. அருளீசர் பாதவிசை ... [பாதவிசை = பாதங்களின் வேக நடை]
ஒருவிளைஞன் எதிர்கொண்டான் தடையெனவே. ... 3

செருக்குடனே முன்நின்றே நோக்கியவன்
செருப்புகளைக் கழற்றாத போக்கினிலே!
. அடியார்கள் சூழ்நிற்க
. அடியவரின் தாள்நிற்க
விருப்பெனவென் றார்முனிதன் வாக்கினிலே. ... 4

வினவினனே இளைஞனுமே நேராக
’எனக்கேதும் தேவையிலை ஈடாக
. தவமுனிவர் சங்கரரே
. இவரென்று இங்குறுவோர்
நினைப்பவரும் போற்றுவரும் நீர்தானா?’ ... 5

’அதுவோர்புறம், உன்பேரைச் சொல்வாயா?
அதிகாலையில் எங்குநீயும் செல்வாயோ?’
. பெயர்சொல்லி ஏளனமாய்
. பயனுள்ள வேலையென
’அதிகாலையில் வேலைக்குச் செல்வேனே.’ ... 6

உன்வேலை யெங்கெனவே பரிவுடனே
அன்னையெனக் கேட்டாரே திருவுடையார்
. கிண்டியிலே வேலையென்றான்
. உண்டெனக்கோர் கேள்வியென்றான்
’இந்துமதம் யாராலுரு வானதுவோ?’ ... 7

தவசிதெரி யாதப்பா என்றாரே
அவனுரையோ வாதத்தில் வென்றானாய்
. சாத்திரத்தின் சொல்மேலே
. ஊத்துபாலைக் கல்மேலே
அவிநெருப்பில் ஊத்துநெய்யை என்பீரே, ... 8

நல்லதுக்கே இவையெல்லாம் என்பதையே
வல்லவர்சொல் நம்பிடுமே மன்பதையே
. தெரியாதே சொல்வதுவே
. சரியான சொல்லதுவா
நல்லதெனில் எப்படிநான் நம்புவதோ? ... 9

சிறிதேனும் சலனமுறா நாட்டுடையார் ... [நாட்டு = நிலை]
பரிவுடனே தண்குரலில் கேட்டிடுவார்
. ’அதுவோர்புறம் இருக்கட்டும்
. பொதுவழியாய் பலருக்கும்
உருவான இதுகிண்டி சேர்த்திடுமா?’ ... 10

’அதுதானே தினமும்நான் போறேனே!’
இதுவென்ன கேள்வியென ஏறிட்டான்
. நாட்டானின் இதயவீணை
. மீட்டவெண்ணி இதயவாணர் ... [வாணர் = வாழ்பவர்]
பொதுவான கேள்வியொன்றை வேரிட்டார். ... 11

’போட்டதியார் இந்தரோடு?’ என்றாரே
’பாட்டன்முப் பாட்டன்நாள்’, என்றானே
. ’இந்தரோடு உள்ளதுவே
. அந்தவழிச் செல்வதுவே
போட்டதுயார் கேள்வியேனோ’ என்றானே. ... 12

’நிச்சயமாய்ச் சொல்லுகிறாய் கிண்டிபோகும்?’
’நிச்சயம்தான் ஏன்-ஐயம் உண்டாகும்?
. பலகையுண்டே கைகாட்டி
. பலசாலை வழிகாட்டி
அச்சமேனோ சர்க்காரே செய்ததாகும்!’ ... 13

அன்புவலைப் பட்டதுவே அம்மானும்
வம்புபேசி வலைப்பட்டான் அன்னானும்
. அல்லவது சிறைக்காப்பு
. நல்லதொரு இறைமீட்பு
அன்னவனுக் கருள்செய்தார் பெம்மானே. ... 14

’உன்போலத் தானப்பா நானுமே
முன்னாளில் போட்டதுயார் ஏனென
. அலட்டலேது மில்லாமல்
. கலக்கமேதும் கொள்ளாமல்
இந்துமதப் பாதையிலே போவனே.’ ... 15

’கைகாட்டும் பலகைநீ நம்புகிறாய்
மெய்காட்டும் வேதம்நான் நம்புகிறேன்
. காற்றினிலே மழையினிலே
. காட்டுமிது பிழையுறலாம்
உய்வழியை வேதமுமி யம்பிடுமே.’ ... 16

’பாட்டன்முப் பாட்டனாக என்னைவிட
நாட்டத்தில் பெரியோரும் சொன்னதுவே
. வருடங்கள் ஆயிரமாய்
. உருவான தாயிதுவே
நாட்டுமறச் சாலையெனக் குன்னதமே.’ ... 17

’நம்பியென்றன் சாலவழிப் போவேனே
நம்புவதை நாலுபேர்க்குச் சொல்வேனே
. உன்வழியில் வேலைபல
. என்வழியில் ஏதுமில
உம்பனனுனைக் காத்திடுவான் செல்வாயே.’ ... 18 ... [உம்பன் = கடவுள்]

செருப்புகளை மறுகணமே உதறியவன்
செருக்கதுவும் தெறித்திடவே பதறியவன்
. மன்னிப்புக் கோரினனே
. கன்னங்கள் நீரிடவே
பெரியவர்தாள் பணிந்தவனும் கதறினனே. ... 19

ரசவாதப் பரிணாமம் பெற்றவனாய்
வசமாகிப் பெரியவரைப் பற்றினனே
. ஏளனம்செய வந்தவனும்
. தாள்பணிந்த வந்தனையை
உசவுவதில் நம்வினைய கற்றுவமே. ... 20 ... [உசவுதல் = ஆராய்தல்]

--ரமணி, 09-11/03/2014, கலி.27/11/5114

உதவி:
http://periva.proboards.com/thread/5287/common-mans-change-heart-devotion


*****
 
Back
Top