தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - விமர்சனம்

மதி

New member
அன்பு மன்ற உறவுகளுக்கு


இனிதே துவங்கியது நம் மன்ற பண்பலை. நிகழ்ச்சியை அனைவரும் கேட்டிருப்பீர். இதைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை பதியுங்கள். எப்படி நம் பண்பலையையும் ஒலிபரப்பும் தன்மையையும் மெருகேற்றலாம் என்று உங்கள் எண்ணங்களையும் முன் வையுங்கள்..


நன்றி


தமிழ்மன்ற பண்பலைக்குழு
 
மிக மிக அருமையான தொடக்கம் மதி. தொகுத்து வழங்கிய விதம் மிக அருமை. மதியும் மனசாட்சியும் அருமையான காம்பினேஷன். கீதமின் தொகுப்பு கைதேர்ந்த அறிவிப்பாளரைப்போல் அமைந்திருந்தது. குறை என்று சொல்ல வேண்டுமானால் - சிலரின் குரல் மிகவும் மெலிதாக ஒலித்ததுதான். ( எனது குரலும் தான். ) அதற்குக் காரணம் ஒலிப்பதிவு செய்த விதம்தான் என்பது புரியவருகிறது. இதற்கு ஒரு யூனிஃபார்மல் ஒலிப்பதிவு ஐடியா சொன்னால் நன்றாக இருக்கும்.

அடாசிட்டி மற்றும் அதன் தொடர்பான தரவிறக்கம் நான் முயற்சி செய்து ஏனோ சிறு பிரச்சினை காரணமாய்த் தவிர்த்துவிட்டேன். மீண்டும் முயர்சிக்கிறேன். கலந்துகொள்ளும் அனைவருக்கும் இதனைப்பற்ரி எடுத்துரைத்து ஒலியின் தரத்தை மேம்படுத்தி சிறப்பாக ஒலிபரப்பாக ஆவன செய்யுங்கள்.

தமிழ்மன்றப் பண்பலைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..!
 
தவழ்வோம் என எண்ணினேன். தாவியல்லவா ஓடிவிட்டோம்...

அருமையிலும் அருமை...
 
இனிய துவக்கம் ...கலை அவர்கள் கூறுவது போல் உறவுகள் குரல் ஒலிபரப்பில் உள்ள சிறு குறைகளினை களைந்தால் இன்னும் நன்றாயிருக்கும் ..
 
பொங்கல் நிகழ்ச்சியில் சரி செய்துடலாம் மக்கா
 
குளக்கோட்டனின் கொஞ்சும் இலங்கைத் தமிழிலில் (ஒரு காலம் வரை நானும் பேசிகொண்டிருந்ததுதான்...) பேட்டி கேட்டேன்.

பிடித்திருந்தது...
 
அசத்தலான தொடக்கம் அற்புதமான தொகுப்பு
மகிழ்ச்சியும் மனநிறைவும் தந்த பேட்டிகள்
அவருக்கு பிடித்த பாடல் அதுதானா என்கிற ஆச்சரியம்
அப்பப்பா...வாழ்க நமது பண்பலை... வளர்க அதன் பின் ஓயாது உழைக்கும் உறவுகள்
 
தொடக்கம் முதல் இறுதி வரை சுவாரசியமாய்த் தொகுப்பட்டிருந்தது. மச்சியின் கிண்டலும் கேலியும்! மச்சிக்கு நான் ரசிகையாகி விட்டேன். இதற்காக உழைத்த மதி, ஆதி, கீதம் ஆகியோர்க்கு நன்றி!
 
ஏற்கனவே சொன்னபடி நிறைய பங்களிப்பு இருந்ததால் நிகழ்ச்சி மூணரை மணிநேரத்துக்கும் மேலாகிவிட்டது. சிரமம் ஏற்பட்டிருப்பின் மன்னிக்கவும்
 
பண்பலை ஒலிபரப்பினை வெற்றிகரமாக நடத்திக்காட்டியுள்ள உழைப்பாளிகளுக்குப் பாராட்டுக்கள் !

இயல்பான நடையில், பழகிய உணர்வுடன், சீராக இருந்தது.

குரல்களைப் பதிவு செய்வதில் சிறு திருத்தங்கள் செய்துவிட்டால் மேலும் அருமையாகிவிடும்.

பாடல்களும் இதமாக இருந்தன.

மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் !

[ மன்ற சொந்தங்களுக்கான எனது தீபாவளி வாழ்த்துக்களைத் தன் குரல் மூலம் சேர்ப்பித்த ஆதிக்கு நன்றி. ]
 
Last edited:
கடைசி நேரத்தில்தான் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. மறு ஒலிபரப்பு எப்ப மக்கா?
 
தம்பி மதியும் அவரது மனசாட்சியும் சேர்ந்து படைத்த இந்த சிறப்பு தீபாவளி நிகழ்ச்சி அருமையோ அருமை, தங்கை கீதத்தின் முகவுரை, தம்பி தாமரையின் தீபாவளி பண்டிகை கொண்டாடும் முறைகளில் தொடங்கியது மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு, நான் எதிர்பார்க்கத ஒன்று எனது பேட்டியை முதலில் ஒலியேற்றியது. மாலை 7.30 மணிக்கு எனது ஐ போனுடன் எனது அறையில் அமைதியாக கேட்க நுழைந்தேன் சரியாக 11.05 ஆதியின் நன்றியுரையோடு தற்காலிகமாக முடிந்து அடுத்த நிகச்சியில் தொடரும் வரையில் கேட்டுகொண்டிருந்தேன்.

பண்பலை குழுவினரே சாதிச்சுட்டீங்க
வாழ்த்துக்கள்
 
எனது ஒரே ஒரு வருத்தம் என்ன என்றால் சிலர் தமது ஒலிபரப்பு நேரத்தில் மிகச்சரியாக வந்து பின்னர் மற்றவர் ஒலிபரப்பின் சமயத்தில் கழண்டு கொண்டது தான். அனைத்தும் அனைவராலும் கவனிக்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால் இது நேர்கிறது. இது போன்ற சுயநலவாதிகளைக் கண்டு களைவோம். தமிழ்மன்றத்தில் நுழைந்த இத்தகு களைகளைக் களைவோம். ஒன்று முழு உணர்வுடன் கலந்திருங்கள். இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள். இது தான் அவர்களுக்கு நான் விடும் செய்தி. இதனால் எத்தகு விமர்சனம் வரினும் நான் கவலையுறவில்லை.
 
முதல் நாளே - முழு வீச்சில்- அறிவிப்பாளர்கள் அனுபவமிக்கவர்களாயும் மிக ஈடுபாட்டோடும் தொடங்கியிருப்பது அருமை! பாராட்டுக்கள்.
 
அன்பு மன்ற உறவுகளுக்கு


இனிதே துவங்கியது நம் மன்ற பண்பலை. நிகழ்ச்சியை அனைவரும் கேட்டிருப்பீர். இதைப் பற்றிய உங்கள் விமர்சனங்களை பதியுங்கள். எப்படி நம் பண்பலையையும் ஒலிபரப்பும் தன்மையையும் மெருகேற்றலாம் என்று உங்கள் எண்ணங்களையும் முன் வையுங்கள்..


நன்றி


தமிழ்மன்ற பண்பலைக்குழு

அன்பின் தமிழ்மன்ற பண்பலைக்குழு,

பணி முடிந்து வேகமாக வீட்டுக்கு வந்தேன் சிறப்பு நிகழ்ச்சிகளைக்கேட்க....

குறை ஒன்றுமில்லை பாட்டின் கடைசி வரி கேட்டேன்...

அதன்பின் லியோ மோகன், கோவிந்த், கலாட்டாமதி :) எல்லோரின் பேட்டியும் மிக சிறப்பாக இருந்தது....

கீதத்தின் குரல் மிக அருமையாக இருந்தது... மதியின் குரலில் செம்ம கலாட்டா...

லியோமோகனின் பேட்டி அசத்தல்... கோவிந்த் பேட்டி ரசிக்க வைத்தது..... மதி....ம்ம்ம்ம்ம்ம்ம்

அனைவரின் உழைப்புக்கும் முயற்சிக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள்....

அதன்பின் வீட்டில் பூஜை, நண்பர்கள் வீட்டுக்கு செல்வது என்று இருந்துவிட்டதால் கேட்க இயலாமல் போய்விட்டதே... இப்ப தான் வீடு திரும்பினோம்...

அனைவருக்கும் மீண்டும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்....
 
இந்த தீப ஒளி திருநாள் நிகழ்ச்சியில் துவக்கத்தில் என் குரலுடன் சிற்சில உறவுகளின் குரலையும் கேட்கவியலாமல் போய்விட்டது ..இறுதியில் இரவு எட்டுமணிக்கு பிறகு ஒலிபரப்பான உறவுகளின் தொகுப்பினை முழுவதும் கேட்கநேர்ந்தது .அருமை தொகுப்புகள் ஒவ்வொன்றும் அதே நேரத்தில் கேள்விகள் கேட்ட விதத்தில் சிறிது மாற்றம் வேண்டும் அதே போல் வாசிப்பிலும் உள்ள பிழைகளும் ,குறைகளும் களைய வேண்டும் .குறிப்பாக தமிழ்மன்றம் எனும் சொல் வாசிக்க படும் போது பிரித்து நிறுத்தி வாசிக்காமல் ஒரு சேர வாசித்தால் அதன் தனிசுவையினை அறியலாம் ..மேலும் நிகழ்ச்சி நிரலிலனை தொகுத்தால் இன்னும் நன்றாக இருக்கும்..இந்த இனிய நாளில் பண்பலையில் ஒலிபரவ உழைத்த பண்பலை நிர்வாக உறவுகளுக்கு இதயம் கலந்த இனிய வாழ்த்துக்களுடன் ... ஆனால் வெளியில் இருந்து கேட்கும் உறவுகள் பண்பலை தீண்டும் காதுகளின் எண்ணிக்கை நடப்பை காட்டிலும் அதிகம் ....
எனது ஒரே ஒரு வருத்தம் என்ன என்றால் சிலர் தமது ஒலிபரப்பு நேரத்தில் மிகச்சரியாக வந்து பின்னர் மற்றவர் ஒலிபரப்பின் சமயத்தில் கழண்டு கொண்டது தான். அனைத்தும் அனைவராலும் கவனிக்கப்படுகிறது என்னும் உணர்வு இல்லாததால் இது நேர்கிறது. இது போன்ற சுயநலவாதிகளைக் கண்டு களைவோம். தமிழ்மன்றத்தில் நுழைந்த இத்தகு களைகளைக் களைவோம். ஒன்று முழு உணர்வுடன் கலந்திருங்கள். இல்லையென்றால் போய்க்கொண்டே இருங்கள். இது தான் அவர்களுக்கு நான் விடும் செய்தி. இதனால் எத்தகு விமர்சனம் வரினும் நான் கவலையுறவில்லை.

விடுங்க கலைஜி இதெல்லாம் பார்த்தா எதையாச்சும் முழுசா நடத்த முடியுமா ? நாம தமிழ்மன்றத்துல பார்க்காததா புதுசா நடந்துகிடிருக்கு.....மன்ற பண்பலையில் முன்னெடுத்து செல்கையில் இதை காணாது நம் பங்களிப்பை அளிப்போம் ...
 
தீபாவளிப் பண்டிகைக்குத் தாமரை கொடுத்த விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. மதியின் மனசாட்சியாய் வந்த மச்சியின் குரல்வளம் நன்றாக இருந்தது. யார் அந்த மச்சி ? தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி முழுவெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. மதி, ஆதி கீதம், செல்வா மற்றும் வெற்றிக்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.இனி பண்பலையில் மன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்பதைத் தெரிவியுங்கள்!
 
தீபாவளிப் பண்டிகைக்குத் தாமரை கொடுத்த விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது. மதியின் மனசாட்சியாய் வந்த மச்சியின் குரல்வளம் நன்றாக இருந்தது. யார் அந்த மச்சி ? தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி முழுவெற்றி என்று சொன்னால் அது மிகையாகாது. மதி, ஆதி கீதம், செல்வா மற்றும் வெற்றிக்கு உழைத்த அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்கள்.இனி பண்பலையில் மன்ற உறுப்பினர்கள் எவ்வாறு பங்கு கொள்ளலாம் என்பதைத் தெரிவியுங்கள்!

எனக்கும் அதே கேள்விதான்
யார் அந்த மச்சி ???

நம்ப பண்பலையில
யார் அந்த மச்சி ???
கண்டுபிடிக்க ஒரு போட்டி நடத்தனும்.

எனக்கேன்னமோ மச்சி ஆதவா மாதிரி இருக்கு

பார்ப்போம்

மனோ,ஜி
 
பண்பலையின் துவக்க நாளே அதிரடி துவக்கமாய் துவங்கியது மிக்க மகிழ்ச்சி..

ஆரம்பத்தில் இருந்து கேட்க முடியாமல் போயிற்றே என்ற வருத்தம் தான்..

ஆதி, மதி, கீதம் அக்கா மற்றும் நிகழ்சிக்காக பாடுபட்ட அனைவரின் உழைப்புக்கு கிடைத்த மிகபெரிய அங்கீகாரம் நேற்று நிறைய பேர் கேட்டு ரசித்தது தான்..

நான் பார்கையில் 30பேர் கேட்டுக் கொண்டு இருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி என்று தான் சொல்லனும் ...

மதி , மச்சி அருமை....மச்சி கலக்கிடீங்க.. நிகழ்ச்சியின் highlight மச்சி தான்....
மதியின் உழைப்பு வீண்போகவில்லை...எடிட்டிங் முதற்கொண்டு படித்து செய்தது வியக்க வாய்த்த ஒன்று...மதி வாழ்த்துக்கள்..
கீதம் அக்கா பற்றி செல்லவே வேண்டாம் ...முதல் நிகழ்சியில் இருந்த கூச்சம் எல்லாம் போய் கைதேர்ந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகிடீங்க...வாழ்த்துக்கள் அக்கா...
ஆதி எப்படி இருக்கீங்க ? இணைய இணைப்பு பிரச்சனையா ? வாழ்த்துகள் ஆதி... பண்பலை துவக்கம் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கும் என்று நம்புகிறேன்...
எல்லோருடைய பேட்டியும் அருமை, மலேசியா ஆல்பம் பாடல்கள் மிக அருமை...

மொத்தத்தில் பெரிய தீபாவளி கொண்டாட்டத்தை அனுபவித்தோம்.....

மேலும் மேலும் நல்ல நிகழ்ச்சிகளை தொடர்ந்து பண்பலை தந்து நல்லதொரு பண்பலையாக வானில் உலாவர வாழ்த்துகிறேன்...
 
ஹாஹா.. மச்சியை கண்டுபிடிப்பவருக்கு ஆயிரம் ரூபாய் பரிசு என்று அறிவித்துவிடலாமா?:cool:
 
Back
Top