முத்தத்துக்கும் கண்ணில்லை...

ஒரு மொட்டை பாலையில்
ஆளரவம்மற்ற தனிமையில்
எவ்வேக்கங்களும்
எத்தேவைகளும் இல்லாமல்
நிறைவான அமைதியில்
அதுவாகவே இருக்கிறது இதயம்
பாதங்களடியில் நீளும் நிலத்தின் நெடுமையில்
நிரம்புமும் அசையும் இமைகளின் லயமன்றி
தகிப்போ தவிப்போ தத்தளிப்போ இல்லாது
மௌனித்திருக்கும் மனம்
ஆழ் சூன்யத்தில் ஒருபடுகின்றது
அரூப விரல்களால் மீட்டப்படுகிற
நிசப்த சுரத்தில்...

ஏதோ என்னால முடிஞ்சது, பிழைகள் இருக்கலாம் பொருத்தருள்க*

ஆதியின் கைவண்ணத்தில் மொழிப்பெயர்ப்பு ஜென் வரிகளுடன் மிளிர்கிறது
நிறைவான அமைதியில்
அதுவாகவே இருக்கிறது இதயம்
குறிப்பாக இவ்வரிகள் .....நன்றி ஆதி !
 
இல்லை இல்லை ஜான்
இக்கவிதையில் நான் பாராட்டுக்குரியவனில்லை!

இதை எழுதிய அந்த ஆங்கில கவிஞர்தான்
என்னை மிகவும் தாக்கம் கொள்ள வைத்தவரிகள்

Covering the vastness
Of the firmament

இக்கவிதையை பதிந்த ரிமாவிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!
 
இல்லை இல்லை ஜான்
இக்கவிதையில் நான் பாராட்டுக்குரியவனில்லை!

இதை எழுதிய அந்த ஆங்கில கவிஞர்தான்
என்னை மிகவும் தாக்கம் கொள்ள வைத்தவரிகள்

Covering the vastness
Of the firmament

இக்கவிதையை பதிந்த ரிமாவிற்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்!
மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் பிள்ளை !!
92-94 வருடங்களில் தோன்றியதை எழுதியது...
இப்போது பதிந்தால் நன்றாக இருக்குமா என தயங்கியபடியே பதிந்தேன்...

இன்று மொழிப்பெயர்த்தவர்களால் சிறப்புற்றது என் கவிதை....மீண்டும் நன்றி !!
 
ரிமா அவர்களே
ஒரு பொறிக்கவிதை
எத்தனை இதழ்களை விரித்தது
இந்த தமிழ்தளத்தில்!
கலையழகு பொழிந்த
கலைவேந்தன் வரிகள்!
மனவோட்டத்தை மயக்கிய
ஜானின் ஜாலங்கள்!
ஆதியின் ஆழமான
ஜென்வரிகள்!
ஆன்ம வெளிப்பாடுடைய
ஜானகியம்மாவின் வரிகள்!
எத்தனை முகங்களோடு
எழுந்தது அந்த கவிதை!
எழுதுங்கள் தொடர்ந்து!
 
மௌனம் எல்லோரையும் பேசவைக்கிறது.........விந்தையாக இல்லை ?
 
ரிமா அவர்களே
ஒரு பொறிக்கவிதை
எத்தனை இதழ்களை விரித்தது
இந்த தமிழ்தளத்தில்!
கலையழகு பொழிந்த
கலைவேந்தன் வரிகள்!
மனவோட்டத்தை மயக்கிய
ஜானின் ஜாலங்கள்!
ஆதியின் ஆழமான
ஜென்வரிகள்!
ஆன்ம வெளிப்பாடுடைய
ஜானகியம்மாவின் வரிகள்!
எத்தனை முகங்களோடு
எழுந்தது அந்த கவிதை!
எழுதுங்கள் தொடர்ந்து!

ஊக்கத்திற்கு மிக்க நன்றி பிள்ளை !!
எத்தனை இதழ்களை விரித்தது என அழகாக விவரித்த பாங்கு வியக்க வைத்தது...!!
நிச்சயம் தொடர்வேன் .... மிக்க நன்றி !!
 
அருமையான கவிதை ரேமா! என் பங்குக்கு நானும்...


”உயிரினம் ஏதுமிலாப்
பாலையொன்றில்
ஏக்கங்களை ஆசைகளைத்
துறந்து விட்ட
சலனமில்லா
இதயத்துடன் நான்!


இமைகளின் இயல்பான
சிமிட்டலைத் தவிர
அதிர வைக்கும்
வேறெந்த அசைவுமில்லை!


பரந்து விரிந்த வானுக்கும்
காலுக்குக் கீழான பூமிக்குமிடையே
பசியோ தாகமோ இன்றி
பரிபூரண அமைதியில்
வியாபித்திருக்கிறது என் மனம்.

ஓசை சிறிதுமில்லா அந்த
ஆழ்ந்த மெளனத்தில்
நெஞ்சைத் தழுவிச் செல்கிறது
அமைதியான சங்கீதம் ஒன்று.
உருவமில்லா அதன் விரல்கள்
மனதை வருடிக் கொடுத்து
அழைத்துச் செல்கிறது
மீளாத் துயிலை நோக்கி!
 
உங்கள் பங்களிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி கலையரசி....
 
THE BLIND KISS

I was just blind
when i kissed you !
My lips read your face ,
the contours of it

touching every cell
from top to down
and ear to ear...

My lips were then
my fingers ...
Your face was full of letters..
The beautiful braille !

Out of the blue
I opened my eyelids
And.....Alas !
I no longer
wished to kiss you !

Beauty is all but skin and
only a little touch !!

முத்தத்துக்கும் கண்ணில்லை...
.
கண்ணில்லாமலிருந்தேன்...
உனை முத்தமிடுகையில்...
என் இதழ்கள் உன் முகம் படித்தன...
அதன் ஏற்ற இறக்கங்களையும்..!

அணுஅணுவாய் தொட்டன...
காது மடல் முதல்...
முக மேலிருந்து கீழும்

இதழ்கள் விரல்களாயிருந்தன அக் கணங்களில்...
உன் முகமெங்கும் எழுத்துக்கள்...
அழகிய ப்ரெய்ல் எழுத்துகள் !

சடீரென இமை திறந்தேன்..
பின்பு.....அந்தோ !
அதற்கு பின் உன்னை
முத்தமிட விருப்பமில்லை...

அழகு என்பது நிறைய
தோற்றமும் கொஞ்சம் தொடுதலும் !!


சுமாராக மொழிப்பெயர்த்துள்ளேன்...
விரும்புவர்கள் இன்னும் சிறப்பாக மொழிப்பெயர்க்கக் கூடும்... நன்றி !
 
Last edited:
Back
Top