முத்தத்துக்கும் கண்ணில்லை...

rema

New member
Against Nature....

On a desert
Without a single creature
With no longings
With no desire
With a heart
That is still !
All is calm
No angry movements
Only the even flutter
Of the eyelids
Covering the vastness
Of the firmament
And the stretch of the land
below my feet...
No quench or apetite
For , A palatable peace
fills my mind
Not a single sound
Yet a silent music
Gently touches my heart
The formless fingers
Soothing and leading it
On and on to a
devouring sleep...
 
Last edited:
ரெமா.. மேலே பதிக்கப்பட்ட பாடலுக்கு நீங்கள் மொழியாக்கம் செய்திருந்தால் அதனுடன் சேர்த்து பதியுங்கள். ஆங்கிலத்தில் மட்டுமே பதிவுகள் பதிதல் கூடாது.

புரிதலுக்கு நன்றி.
 
ரெமா.. மேலே பதிக்கப்பட்ட பாடலுக்கு நீங்கள் மொழியாக்கம் செய்திருந்தால் அதனுடன் சேர்த்து பதியுங்கள். ஆங்கிலத்தில் மட்டுமே பதிவுகள் பதிதல் கூடாது.

புரிதலுக்கு நன்றி.

அப்படியா ? மாலைக்குள் மொழிப்பெயர்ப்புடன் இடுகிறேன் ;... தகவலுக்கு நன்றி !
 
நல்லா இருங்க தாயி.. :) இங்கே எனக்கு தமிழே தாளம் போடுது. இதுல இங்லிபீசு கவிதை எல்லாம் எப்படி புரிஞ்சுக்கினு பின்னூட்டம் போடறது..?


ஒரு பொட்டல் வெளியில்
யாருமில்லா மோனத்தில்
ஓர் அமைதி
கருவுற்று விரிவுற்றுக்
காத்திருக்கிறது..

ஆங்கே ஓர்
ஆசையில்லை..
வில்லங்கமான
விசனமில்லை...

கண்ணிமைகள் அசைத்தல் கூட
கடூரமான சத்தங்களாய் மாறிப்போய்
என் காலடியில்
விரிந்து பரவும் ஓர்
கவினுலகம் இது..

ஈங்கே
வாட்டிவதைக்கும்
பசியில்லை எனவே பட்டினியில்லை..
துவட்டித் துவளவைக்கும்
தாகங்கள் இல்லை எனவே
தட்டிப்பறித்தல்
இல்லவே இல்லை...

அமைதிப் பூங்காவாய் என் மனம்..
மவுனமே இனிய சங்கீதமாய்
மனதைக் கொள்ளை கொள்ளும்
உருவிலா விரல்கள் என் மனதை
வீணையாய் மீட்டி நிற்கும்..

ஓர் மென்மையான
ஆழ்நிலை உறக்கத்தை
மெல்லப்பரவ விட்டு
உயிரை இலேசாக்கி
எங்கோ பறக்க வைக்கும்..!!


ஏனுங்... எனக்கு தெரிஞ்ச இங்க்லீசுல கொஞ்சூண்டு எழுதிப்பார்த்தனுங்க.. நல்லா இருக்குங்களா..?

( அருமையான கவிதை ஒன்றை பார்வைக்குக் கொணர்ந்த எங்கள் அன்பு ரேமாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்..! )
 
நல்ல மொழியாக்கம் கலைவேந்தரே..

ரேமா உங்க மொழிபெயர்ப்பையும் இடுங்கள்.. உங்கள் பதிவையே எடிட் செய்து..!
 
ஆகா....மௌனத் [ தமிழ் ] ஊஞ்சல், சுகமாகத் தாலாட்டுகிறதே... அருமை !
இரு படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள் !
 
மௌனம் சம்மதமானால் மனமெங்கும் மயக்கும் சங்கீதமோ..?!:)

கலையண்ணா... நீங்க இரட்டை புலவர்ன்னு எங்களுக்கு தெரியுமாக்கும்..!!:icon_b:
 
நல்லா இருங்க தாயி.. :) இங்கே எனக்கு தமிழே தாளம் போடுது. இதுல இங்லிபீசு கவிதை எல்லாம் எப்படி புரிஞ்சுக்கினு பின்னூட்டம் போடறது..?


ஒரு பொட்டல் வெளியில்
யாருமில்லா மோனத்தில்
ஓர் அமைதி
கருவுற்று விரிவுற்றுக்
காத்திருக்கிறது..

ஆங்கே ஓர்
ஆசையில்லை..
வில்லங்கமான
விசனமில்லை...

கண்ணிமைகள் அசைத்தல் கூட
கடூரமான சத்தங்களாய் மாறிப்போய்
என் காலடியில்
விரிந்து பரவும் ஓர்
கவினுலகம் இது..

ஈங்கே
வாட்டிவதைக்கும்
பசியில்லை எனவே பட்டினியில்லை..
துவட்டித் துவளவைக்கும்
தாகங்கள் இல்லை எனவே
தட்டிப்பறித்தல்
இல்லவே இல்லை...

அமைதிப் பூங்காவாய் என் மனம்..
மவுனமே இனிய சங்கீதமாய்
மனதைக் கொள்ளை கொள்ளும்
உருவிலா விரல்கள் என் மனதை
வீணையாய் மீட்டி நிற்கும்..

ஓர் மென்மையான
ஆழ்நிலை உறக்கத்தை
மெல்லப்பரவ விட்டு
உயிரை இலேசாக்கி
எங்கோ பறக்க வைக்கும்..!!


ஏனுங்... எனக்கு தெரிஞ்ச இங்க்லீசுல கொஞ்சூண்டு எழுதிப்பார்த்தனுங்க.. நல்லா இருக்குங்களா..?

( அருமையான கவிதை ஒன்றை பார்வைக்குக் கொணர்ந்த எங்கள் அன்பு ரேமாவுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்..! )
நல்லாருக்கு கலையண்ணா...
எனக்கு உங்களைப்போல் கவித்துவமான மொழிப்பெயர்ப்பு வரவில்லை...
நேரடியாக மொழிப்பெயர்க்கத் தான் வருகிறது...எனவே உங்க கவிதை படிக்க நன்று !
 
நல்ல மொழியாக்கம் கலைவேந்தரே..

ரேமா உங்க மொழிபெயர்ப்பையும் இடுங்கள்.. உங்கள் பதிவையே எடிட் செய்து..!

இதோ...


உயிர்கள் ஏதுமற்ற
ஓர் பாலையியில் நான் !
ஏக்கங்களோ
ஆசைகளோ எதுவுமின்றி
நிச்சலன இதயத்துடன்…
எல்லாம் அமைதியாக இருக்க..
கோப அசைவுகள் இல்லை
ஒரே இடைவேளை ஜதியில்
அசையும் இமைகளைத் தவிர..
முன்தெரியும் வான்பரப்பையும்
என் பாதங்கின் கீழ்
நீளும் நிலப்பரப்பையும் அளப்பதாய்..
தாகமோ பசியோ இல்லை…
ருசியான ஓர் அமைதியில்
மனம் நிறைந்திருந்ததால்…
சத்தமில்லா…நிசப்தம்
என்றாலும்…. ஒரு மௌன இசை
என் இதயத்தை மென்மையாய் தொட்டு
அதன் வடிவமில்லா விரல்கள்…
என் இதயத்தை வருடி
மோகனமாய்
இழுத்துச்…..செல்லும்…
ஒரு மரண சயனத்திற்கு !
 
ஆகா....மௌனத் [ தமிழ் ] ஊஞ்சல், சுகமாகத் தாலாட்டுகிறதே... அருமை !
இரு படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள் !

நன்றி ஜானகி !
 
Against Nature....

On a desert
Without a single creature
With no longings
With no desire
With a heart
That is still !
All is calm
No angry movements
Only the even flutter
Of the eyelids
Covering the vastness
Of the firmament
And the stretch of the land
below my feet...
No quench or apetite
For , A palatable peace
fills my mind
Not a single sound
Yet a silent music
Gently touches my heart
The formless fingers
Soothing and leading it
On and on to a
devouring sleep...


ஏதுமற்றுப்போன மணல்வெளியென
ஏதுமற்றிருக்கிறதென் மனவெளி ...
ஆசையின்றி நிராசையின்றிப் பேராசையின்றி
அமைந்துவிட்ட மனதுடன்
உணர்வற்ற சட நிலையில்
ஏதுமற்றிருக்கிறதென்
இதயம்


கண்ணிமையின் அசைவும்
காலடி நீளும் மணலும் தவிர்த்து
தாகமின்றி மோகமின்றித் தவிப்பின்றி '
சயனித்திருக்கிறதென் மனம் ....



அப் பெருவெளியில்
உறையவைத்த இசைக் குறிப்பொன்று
தன்
உருவமிலாக் கரங்களால்
எனை குலவித் தழுவிச் செல்கையில்
அமைதிஎனும் உறக்கத்தில்
மீளவும் ஆழ்கிறேன் நான்
 
அடடா ஆளுக்கு ஆள் மொழி பெயர்ப்பில் பின்னுராங்களே, இன்னும் ஒருவர் இதை மொழி பெயர்த்தாலும் பண்பலையில் ஒரு நிகழ்ச்சியா செய்துடலாமே
அந்த இன்னொருத்தர் யாரு மக்கா ?

சீக்கிரம் மொழி பெயர்ப்பு செய்ங்க நிகழ்ச்சியாக்கிடலாம்
 
Against Nature....

On a desert
Without a single creature
With no longings
With no desire
With a heart
That is still !
All is calm
No angry movements
Only the even flutter
Of the eyelids
Covering the vastness
Of the firmament
And the stretch of the land
below my feet...
No quench or apetite
For , A palatable peace
fills my mind
Not a single sound
Yet a silent music
Gently touches my heart
The formless fingers
Soothing and leading it
On and on to a
devouring sleep...


ஏதுமற்றுப்போன மணல்வெளியென
ஏதுமற்றிருக்கிறதென் மனவெளி ...
ஆசையின்றி நிராசையின்றிப் பேராசையின்றி
அமைந்துவிட்ட மனதுடன்
உணர்வற்ற சட நிலையில்
ஏதுமற்றிருக்கிறதென்
இதயம்


கண்ணிமையின் அசைவும்
காலடி நீளும் மணலும் தவிர்த்து
தாகமின்றி மோகமின்றித் தவிப்பின்றி '
சயனித்திருக்கிறதென் மனம் ....



அப் பெருவெளியில்
உறையவைத்த இசைக் குறிப்பொன்று
தன்
உருவமிலாக் கரங்களால்
எனை குலவித் தழுவிச் செல்கையில்
அமைதிஎனும் உறக்கத்தில்
மீளவும் ஆழ்கிறேன் நான்

ஆகா...என்னையும் தழுவாதோ இசைக்கும் இந்தப் பேருறக்கம்.... " தூங்காமல் தூங்கி சுகம் காணும் "பெரு விழிப்பு...!
 
கன்னி முயற்ச்சியாக என்னிலிருந்து!


இமைத்துடிப்பன்றி வேறெதும் இலையசையா
இறுக்கமான மௌனம் தூவிய பொட்டல்வெளி!
உயிர்களின் உரசல்களில்லை!
உந்தேத்தும் கோபங்களில்லை!
தேடுதல்களும் தேவைகளுமில்லாத
நிச்சலனத்தில் நின்றுபோனது மனம்!


வீசலாய் எறிந்துகிடந்த வானதிற்க்கும் காலடியில்
விசாலமாய் விரிந்துகிடந்த புமிக்குமிடையே
கொல்லென்றே பரந்து அழுத்திகொண்டிருந்த
அந்தகாரமௌனத்தை மெல்ல மெல்ல கண்சிமிட்டி
விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தேன்!
பாலைவணத்தாகமில்லை! அடிவயிற்றில்
பசியேதுமில்லை!
இதயமெங்கும் திகட்டாத மௌனம் ஒன்று
அடர்த்தியாய் அப்பிக்கொண்டது!
உள்ளேயும் வெளியேயும் ஊடாடும் நிசப்தம் ஆனாலும்
அது ஒரு இதயம் தாலாட்டும் மெளனராகம்!
உருவமில்லா விரல்களாலே என்
உள்ளம்தடவி உறங்க வைக்கும்
மீண்டும்! மீண்டும்!
 
ஆகா...என்னையும் தழுவாதோ இசைக்கும் இந்தப் பேருறக்கம்.... " தூங்காமல் தூங்கி சுகம் காணும் "பெரு விழிப்பு...!

நன்றி ஜானகி
 
கன்னி முயற்ச்சியாக என்னிலிருந்து!


இமைத்துடிப்பன்றி வேறெதும் இலையசையா
இறுக்கமான மௌனம் தூவிய பொட்டல்வெளி!
உயிர்களின் உரசல்களில்லை!
உந்தேத்தும் கோபங்களில்லை!
தேடுதல்களும் தேவைகளுமில்லாத
நிச்சலனத்தில் நின்றுபோனது மனம்!


வீசலாய் எறிந்துகிடந்த வானதிற்க்கும் காலடியில்
விசாலமாய் விரிந்துகிடந்த புமிக்குமிடையே
கொல்லென்றே பரந்து அழுத்திகொண்டிருந்த
அந்தகாரமௌனத்தை மெல்ல மெல்ல கண்சிமிட்டி
விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தேன்!
பாலைவணத்தாகமில்லை! அடிவயிற்றில்
பசியேதுமில்லை!
இதயமெங்கும் திகட்டாத மௌனம் ஒன்று
அடர்த்தியாய் அப்பிக்கொண்டது!
உள்ளேயும் வெளியேயும் ஊடாடும் நிசப்தம் ஆனாலும்
அது ஒரு இதயம் தாலாட்டும் மெளனராகம்!
உருவமில்லா விரல்களாலே என்
உள்ளம்தடவி உறங்க வைக்கும்
மீண்டும்! மீண்டும்!

முயற்சி முதல் முயற்சியாக இருக்கலாம்.....

ஆனால் ஆழ்ந்து சிந்தித்து எழுதியுள்ளீர்கள் பிள்ளை...வெகு சிறப்பு
 
ஒரு மொட்டை பாலையில்
ஆளரவம்மற்ற தனிமையில்
எவ்வேக்கங்களும்
எத்தேவைகளும் இல்லாமல்
நிறைவான அமைதியில்
அதுவாகவே இருக்கிறது இதயம்
பாதங்களடியில் நீளும் நிலத்தின் நெடுமையில்
நிரம்புமும் அசையும் இமைகளின் லயமன்றி
தகிப்போ தவிப்போ தத்தளிப்போ இல்லாது
மௌனித்திருக்கும் மனம்
ஆழ் சூன்யத்தில் ஒருபடுகின்றது
அரூப விரல்களால் மீட்டப்படுகிற
நிசப்த சுரத்தில்...

ஏதோ என்னால முடிஞ்சது, பிழைகள் இருக்கலாம் பொருத்தருள்க*
 
கன்னி முயற்ச்சியாக என்னிலிருந்து!


இமைத்துடிப்பன்றி வேறெதும் இலையசையா
இறுக்கமான மௌனம் தூவிய பொட்டல்வெளி!
உயிர்களின் உரசல்களில்லை!
உந்தேத்தும் கோபங்களில்லை!
தேடுதல்களும் தேவைகளுமில்லாத
நிச்சலனத்தில் நின்றுபோனது மனம்!


வீசலாய் எறிந்துகிடந்த வானதிற்க்கும் காலடியில்
விசாலமாய் விரிந்துகிடந்த புமிக்குமிடையே
கொல்லென்றே பரந்து அழுத்திகொண்டிருந்த
அந்தகாரமௌனத்தை மெல்ல மெல்ல கண்சிமிட்டி
விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தேன்!
பாலைவணத்தாகமில்லை! அடிவயிற்றில்
பசியேதுமில்லை!
இதயமெங்கும் திகட்டாத மௌனம் ஒன்று
அடர்த்தியாய் அப்பிக்கொண்டது!
உள்ளேயும் வெளியேயும் ஊடாடும் நிசப்தம் ஆனாலும்
அது ஒரு இதயம் தாலாட்டும் மெளனராகம்!
உருவமில்லா விரல்களாலே என்
உள்ளம்தடவி உறங்க வைக்கும்
மீண்டும்! மீண்டும்!

கன்னி முயற்சி போல தெரியவில்லை பிள்ளை !
நன்று ! வாழ்த்துகள் !
 
Back
Top