சொ.ஞானசம்பந்தன்
New member
கைதியிடம் , " இரு " எனச் சொல்லிவிட்டு தருய் அறைக்குப் போனார் .வாயிலைக் கடந்தபோது எண்ணம் மாறி ரிவால்வரை எடுத்துத் தம் பையில் திணித்தார் ; பின்பு திரும்பிப் பாராமல் அறைக்குள் நுழைந்தார் .
சோபாவில் நெடு நேரம் படுத்துக்கொண்டு வானம் கொஞ்சஞ் கொஞ்சமாய் மூடுவதையும் அமைதி நிலவுவதையும் கவனித்தார்
அவர் எழுந்தபோது வகுப்பறையிலிருந்து எந்த ஒலியும் வரவில்லை. அராபியர் ஓடியிருப்பார் , எந்த முடிவும் செய்யத் தேவை இன்றி மீண்டும் தனிமையும் தாமுமாய் இருக்கப் போகிறோம் என்ற அந்த ஒரே எண்ணம் விளைவித்த மகிழ்ச்சி அவருக்கெ வியப்பளித்தது . ஆனால் கைதி அங்கே இருந்தார் .. " வா " என்றார் தருய் . அராபியர் பின்தொடர்ந்தார் .அறையில் ஒரு நாற்காலியை ஆசிரியர் அவருக்குக் காட்டினார் . அராபியர் அமர்ந்தார் .
- பசிக்கிறதா ?
- ஆமாம் .
தருய் கேக் செய்து ஆம்லெட்டும் தயாரித்தார் . பையில் இருந்த ரிவால்வரில் கை இடித்தது . வகுப்பறை போய் மேசையின் இழுப்பறையில் வைத்துவிட்டு வந்தார் .
இரவு கவிந்தது . விளக்கு ஏறிவிட்டுப் பரிமாறினார் .
- சாப்பிடு .
- நீ ?
- உனக்குப் பின்பு சாப்பிடுவேன் .
உண்டதற்கு அப்புறம் கேட்டார் :
- நீயா நீதிபதி ?
- இல்லை ; நாளைவரை உன்னைக் காக்கிறேன் . ஏன் அவனைக் கொன்றாய் ?
- அவன் ஓடினான் ; நானும் பின்னால் ஓடினேன் . இப்போது என்னை என்ன செய்யப்போகிறார்கள் ?
- பயப்படுகிறாயா ? கழிவிரக்கம் கொள்கிறாயா ?
அராபியர் ஆசிரியரை நோக்கினார் ; அவருக்குப் புரியவில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது .
தருய் ஒரு மடக்குக் கட்டிலை விரித்து , " படுத்துக்கொள் . இது உன் கட்டில் " என்றார் .
- பட்டாளத்தார் நாளை வருவாரா ?
- தெரியாது .
- எங்களுடன் நீ வருகிறாயா ?
- தெரியாது ; ஏன் ?
- எங்களுடன் வா .
நள்ளிரவு ஆகியும் தருய் தூங்கவில்லை. முன்னமே கட்டிலில் படுத்துவிட்டார் . தயக்கமாய் இருந்தது : தாக்குதலுக்கு ஆளாகலாம் என உணர்ந்தார் . பின்பு தோள்களைக் குலுக்கிக்கொண்டார் . விளக்கை அணைத்தபோது இருள் உடனடியாய் இறுகினாற்போல் தோன்றிற்று .
கொஞ்ச நேரத்துக்குப் பின் அராபியர் லேசாய் அசைந்தபோது ஆசிரியர் விழித்துத்தான் இருந்தார் . கைதியின் இரண்டாம் அசைவு கண்டு எச்சரிக்கை கொண்டார் . அவர் மெதுவாய் எழுந்து சிறிதுஞ் சந்தடி செய்யாமல் கதவை நோக்கி நடந்து தாழ்ப்பாளை ஓசையின்றி நீக்கித் திறந்து வெளியேறினார் .
"நழுவுகிறான் , சங்கடம் தீர்ந்தது " என்று தருய் நினைத்தார் . சிறிது நேரத்தில் அராபியர் உள்ளே வந்து கவனமாய்க் கதவைச் சாத்திவிட்டு ஓசையின்றிப் படுத்துக்கொண்டார் . அப்போது தருய் மறுபக்கம் திரும்பி உறங்கினார் .
பின்பும் ஒரு தடவை ஆழ்ந்த தூக்கத்தினிடையே பள்ளியைச் சுற்றித் திருட்டுத்தனமான காலடி ஒலிகள் கேட்டதாய்த் தோன்றிற்று . " கனவு , கனவு " எனச் சொல்லிக்கொண்டே தூங்கினார் .
விழித்தபோது வானம் தெளிந்திருந்தது . இருவரும் ரொட்டி தின்று காப்பி பருகினர் .
ஆசிரியர் வெளியில் போனார் . நீல வானில் சூரியன் ஏறியிருந்தான் . அராபியரின் முட்டாள்தனமான குற்றம் அவருக்கு வெறுப்பூட்டியது ; ஆனால் அவரை ஒப்படைப்பது தம் கெளரவத்துக்குப் பாதகம். அராபியரைத் தம்மிடம் அனுப்பிய தம்மவரையும் கொல்லத் துணிந்த ஆனால் தப்பியோட அறியா இந்த ஆளையும் ஒரே சமயத்தில் சபித்தார் . பள்ளியுள் நுழைந்தார் . அறைக்குள் சென்று ரஸ்க் ரொட்டி , பேரீச்சை , சீனி ஆகியவற்றை ஒரு பார்சலாக்கினார் . இருவரும் வெளியேறும் முன்பு , ஆசிரியர் வகுப்பறையில் மேசைக்கெதிரில் ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு வாயிலைத் தாண்டிக் கதவைப் பூட்டினார் .
" இந்தப் பக்கமாய் " என்று சொல்லிக் கிழக்கு நோக்கி நடந்தார் , கைதி பின்தொடர . ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிறிது இளைப்பாறி மேலும் ஒரு மணி நேரம் நடந்தனர் . தருய் பார்சலை அராபியரிடம் அளித்தார் : " எடுத்துக்கொள் ; பேரீச்சை , ரொட்டி இருக்கிறது; இரண்டு நாளுக்குத் தாக்குப் பிடிக்கலாம் . இதோ ஆயிரம் பிரானும் " அராபியர் பெற்றுக்கொண்டார் .
கிழக்குத் திக்கைக் காட்டி ஆசிரியர் கூறினார் : " இதுதான் தைங்கித்துக்குப் போகிற பாதை . இரண்டு மணி நேரம் நடக்கவேண்டியிருக்கும். அங்கே அரசும் காவல்துறையும் உனக்காகக் காத்திருப்பார்கள் ."
அவரைத் தெற்கு நோக்கித் திருப்பி , " அதோ அது பீடபூமியைக் கடக்கும் அடிச்சுவடு . ஒரு நாள் நடந்தபின் நாடோடிகளைக் காண்பாய் ; அவர்கள் உன்னை வரவேற்று அவர்களின் சட்டப்படி உனக்குப் புகலிடம் அளிப்பார்கள் " என்றார் .
அராபியர் தருய் பக்கம் திரும்பினார் முகத்தில் ஒருவித பீதி படர்ந்தது . " நான் சொல்வதைக் கேள் " என்றார் .
தருய் தலையை ஆட்டி , " வேண்டாம் , ஒன்றுஞ் சொல்லாதே . இப்போது உன்னைவிட்டு நான் போகிறேன் " எனக் கூறிவிட்டுப் பள்ளியை நோக்கி இரண்டு பெரிய அடி வைத்து அசையாமல் நின்றிருந்த அராபியரைத் தயக்கத்துடன் பார்த்துவிட்டுப் புறப்பட்டார் . நீண்ட தொலைவுக்குப் பின்தான் திரும்பிப் பார்த்தார் .குன்றின்மீது யாருமில்லை ; தருய் தயங்கினார் ; திரும்பி வந்தார் . சிறைக்குப் போகுஞ் சாலையில் மெதுவாய் நடந்துகொண்டிருந்த அராபியரைக் கனத்த இதயத்துடன் கண்டார் .
பிற்பாடு பள்ளிச் சன்னலின் எதிரே நின்றபடி வானின் உச்சியிலிருந்து பீடபூமியின் முழுப் பரப்பிலும் வீழ்ந்துகொண்டிருந்த வெளிச்சத்தை மேலோட்டமாய்ப் பார்த்தார் . அவருக்குப் பின்புறம் கரும்பலகையில் , பிரஞ்சு ஆறுகளின் வளைவுகளுக்கு இடையே , திறமை குறைந்த கையொன்றால் எழுதப்பெற்றிருந்தது ஒரு சுண்ணக்கட்டி வாசகம் :
" எங்கள் சகோதரனை நீ ஒப்படைத்துவிட்டாய் ; விலை கொடுப்பாய் "
அதைச் சற்று முன்தான் தருய் வாசித்திருந்தார் .
-------------------================---------------------------
.
சோபாவில் நெடு நேரம் படுத்துக்கொண்டு வானம் கொஞ்சஞ் கொஞ்சமாய் மூடுவதையும் அமைதி நிலவுவதையும் கவனித்தார்
அவர் எழுந்தபோது வகுப்பறையிலிருந்து எந்த ஒலியும் வரவில்லை. அராபியர் ஓடியிருப்பார் , எந்த முடிவும் செய்யத் தேவை இன்றி மீண்டும் தனிமையும் தாமுமாய் இருக்கப் போகிறோம் என்ற அந்த ஒரே எண்ணம் விளைவித்த மகிழ்ச்சி அவருக்கெ வியப்பளித்தது . ஆனால் கைதி அங்கே இருந்தார் .. " வா " என்றார் தருய் . அராபியர் பின்தொடர்ந்தார் .அறையில் ஒரு நாற்காலியை ஆசிரியர் அவருக்குக் காட்டினார் . அராபியர் அமர்ந்தார் .
- பசிக்கிறதா ?
- ஆமாம் .
தருய் கேக் செய்து ஆம்லெட்டும் தயாரித்தார் . பையில் இருந்த ரிவால்வரில் கை இடித்தது . வகுப்பறை போய் மேசையின் இழுப்பறையில் வைத்துவிட்டு வந்தார் .
இரவு கவிந்தது . விளக்கு ஏறிவிட்டுப் பரிமாறினார் .
- சாப்பிடு .
- நீ ?
- உனக்குப் பின்பு சாப்பிடுவேன் .
உண்டதற்கு அப்புறம் கேட்டார் :
- நீயா நீதிபதி ?
- இல்லை ; நாளைவரை உன்னைக் காக்கிறேன் . ஏன் அவனைக் கொன்றாய் ?
- அவன் ஓடினான் ; நானும் பின்னால் ஓடினேன் . இப்போது என்னை என்ன செய்யப்போகிறார்கள் ?
- பயப்படுகிறாயா ? கழிவிரக்கம் கொள்கிறாயா ?
அராபியர் ஆசிரியரை நோக்கினார் ; அவருக்குப் புரியவில்லை என்பது வெளிப்படையாய்த் தெரிந்தது .
தருய் ஒரு மடக்குக் கட்டிலை விரித்து , " படுத்துக்கொள் . இது உன் கட்டில் " என்றார் .
- பட்டாளத்தார் நாளை வருவாரா ?
- தெரியாது .
- எங்களுடன் நீ வருகிறாயா ?
- தெரியாது ; ஏன் ?
- எங்களுடன் வா .
நள்ளிரவு ஆகியும் தருய் தூங்கவில்லை. முன்னமே கட்டிலில் படுத்துவிட்டார் . தயக்கமாய் இருந்தது : தாக்குதலுக்கு ஆளாகலாம் என உணர்ந்தார் . பின்பு தோள்களைக் குலுக்கிக்கொண்டார் . விளக்கை அணைத்தபோது இருள் உடனடியாய் இறுகினாற்போல் தோன்றிற்று .
கொஞ்ச நேரத்துக்குப் பின் அராபியர் லேசாய் அசைந்தபோது ஆசிரியர் விழித்துத்தான் இருந்தார் . கைதியின் இரண்டாம் அசைவு கண்டு எச்சரிக்கை கொண்டார் . அவர் மெதுவாய் எழுந்து சிறிதுஞ் சந்தடி செய்யாமல் கதவை நோக்கி நடந்து தாழ்ப்பாளை ஓசையின்றி நீக்கித் திறந்து வெளியேறினார் .
"நழுவுகிறான் , சங்கடம் தீர்ந்தது " என்று தருய் நினைத்தார் . சிறிது நேரத்தில் அராபியர் உள்ளே வந்து கவனமாய்க் கதவைச் சாத்திவிட்டு ஓசையின்றிப் படுத்துக்கொண்டார் . அப்போது தருய் மறுபக்கம் திரும்பி உறங்கினார் .
பின்பும் ஒரு தடவை ஆழ்ந்த தூக்கத்தினிடையே பள்ளியைச் சுற்றித் திருட்டுத்தனமான காலடி ஒலிகள் கேட்டதாய்த் தோன்றிற்று . " கனவு , கனவு " எனச் சொல்லிக்கொண்டே தூங்கினார் .
விழித்தபோது வானம் தெளிந்திருந்தது . இருவரும் ரொட்டி தின்று காப்பி பருகினர் .
ஆசிரியர் வெளியில் போனார் . நீல வானில் சூரியன் ஏறியிருந்தான் . அராபியரின் முட்டாள்தனமான குற்றம் அவருக்கு வெறுப்பூட்டியது ; ஆனால் அவரை ஒப்படைப்பது தம் கெளரவத்துக்குப் பாதகம். அராபியரைத் தம்மிடம் அனுப்பிய தம்மவரையும் கொல்லத் துணிந்த ஆனால் தப்பியோட அறியா இந்த ஆளையும் ஒரே சமயத்தில் சபித்தார் . பள்ளியுள் நுழைந்தார் . அறைக்குள் சென்று ரஸ்க் ரொட்டி , பேரீச்சை , சீனி ஆகியவற்றை ஒரு பார்சலாக்கினார் . இருவரும் வெளியேறும் முன்பு , ஆசிரியர் வகுப்பறையில் மேசைக்கெதிரில் ஒரு நொடி தயங்கி நின்றுவிட்டு வாயிலைத் தாண்டிக் கதவைப் பூட்டினார் .
" இந்தப் பக்கமாய் " என்று சொல்லிக் கிழக்கு நோக்கி நடந்தார் , கைதி பின்தொடர . ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிறிது இளைப்பாறி மேலும் ஒரு மணி நேரம் நடந்தனர் . தருய் பார்சலை அராபியரிடம் அளித்தார் : " எடுத்துக்கொள் ; பேரீச்சை , ரொட்டி இருக்கிறது; இரண்டு நாளுக்குத் தாக்குப் பிடிக்கலாம் . இதோ ஆயிரம் பிரானும் " அராபியர் பெற்றுக்கொண்டார் .
கிழக்குத் திக்கைக் காட்டி ஆசிரியர் கூறினார் : " இதுதான் தைங்கித்துக்குப் போகிற பாதை . இரண்டு மணி நேரம் நடக்கவேண்டியிருக்கும். அங்கே அரசும் காவல்துறையும் உனக்காகக் காத்திருப்பார்கள் ."
அவரைத் தெற்கு நோக்கித் திருப்பி , " அதோ அது பீடபூமியைக் கடக்கும் அடிச்சுவடு . ஒரு நாள் நடந்தபின் நாடோடிகளைக் காண்பாய் ; அவர்கள் உன்னை வரவேற்று அவர்களின் சட்டப்படி உனக்குப் புகலிடம் அளிப்பார்கள் " என்றார் .
அராபியர் தருய் பக்கம் திரும்பினார் முகத்தில் ஒருவித பீதி படர்ந்தது . " நான் சொல்வதைக் கேள் " என்றார் .
தருய் தலையை ஆட்டி , " வேண்டாம் , ஒன்றுஞ் சொல்லாதே . இப்போது உன்னைவிட்டு நான் போகிறேன் " எனக் கூறிவிட்டுப் பள்ளியை நோக்கி இரண்டு பெரிய அடி வைத்து அசையாமல் நின்றிருந்த அராபியரைத் தயக்கத்துடன் பார்த்துவிட்டுப் புறப்பட்டார் . நீண்ட தொலைவுக்குப் பின்தான் திரும்பிப் பார்த்தார் .குன்றின்மீது யாருமில்லை ; தருய் தயங்கினார் ; திரும்பி வந்தார் . சிறைக்குப் போகுஞ் சாலையில் மெதுவாய் நடந்துகொண்டிருந்த அராபியரைக் கனத்த இதயத்துடன் கண்டார் .
பிற்பாடு பள்ளிச் சன்னலின் எதிரே நின்றபடி வானின் உச்சியிலிருந்து பீடபூமியின் முழுப் பரப்பிலும் வீழ்ந்துகொண்டிருந்த வெளிச்சத்தை மேலோட்டமாய்ப் பார்த்தார் . அவருக்குப் பின்புறம் கரும்பலகையில் , பிரஞ்சு ஆறுகளின் வளைவுகளுக்கு இடையே , திறமை குறைந்த கையொன்றால் எழுதப்பெற்றிருந்தது ஒரு சுண்ணக்கட்டி வாசகம் :
" எங்கள் சகோதரனை நீ ஒப்படைத்துவிட்டாய் ; விலை கொடுப்பாய் "
அதைச் சற்று முன்தான் தருய் வாசித்திருந்தார் .
-------------------================---------------------------
.