ஆதவா
New member
அதிகாலை 6-8
மதியம் 12-2
சாயங்காலம் 6-7
இரவு 9-10
நள்ளிரவு 11-12
என்ன... இதெல்லாம் நான் சாப்பிடும் நேரம் என்று நினைக்கிறீர்களா?.... வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் என்னை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது இங்கே குறித்த எண்கள் தவிர்த்த மீதி நேரங்கள்...
நண்பர்களே...
மேற்குறித்த நேரங்கள் மட்டும்தான் திருப்பூரில் மின்சாரம் இருக்கிறது. மீதி நேரமெல்லாம் துண்டிப்புதான். இரண்டு மணிநேரம் ,மூன்று மணிநேரம் என்று இருந்த மின்சார துண்டிப்பு இப்பொழுது தலைகீழாய், இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும்படி ஆகிவிட்டது... நான் ஒருநாள் முழுக்க வேலை செய்தால்தான் என் வாழ்க்கை மெல்ல மெல்ல நகரும். இப்பொழுது ஒருநாளைக்கு ஐந்து மணிநேரம் கூட வேலை செய்வதில்லை.. இருக்கிற இந்த நேரத்திலும் என்னடா இவன் டைப்படித்துக் கொண்டிருக்கிறானே என்று எண்ணாதீர்கள். மின்சாரம் இல்லாததால் வேலை எதுவும் தொடர்ந்து எடுக்க முடியவில்லை. எனது வாடிக்கையாளர்களை நான் இழந்து வருகிறேன்.. ஒரு UPS வாங்க என்னிடம் திறமில்லை. வாங்கினவர்களுக்கோ அதனை முழுதாய் உபயோகிக்க இடமில்லை. திருப்பூர் ஏற்கனவே நசிந்து வரும் சூழலில் மின்சாரம் மேலும் நசுக்குகிறது. நைய்ந்த பின் எழுந்த வர திராணியில்லை மக்களே.
பொறுப்பற்ற அரசின் கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டு இப்படி புலம்புவது தவறுதான்... வேறுவழியில்லை. நம்முடைய கோபம் வெறும் ஓட்டு மாற்றுவ்தில்தான் இருக்கிறதேயொழிய வேறெதிலும் இல்லை.
இன்னும் ஒருமணிநேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். எனக்கு கட்டாய ஓய்வு. ஒருவேளை இது தொடர்ந்து வந்தால் நான் மின்சாரமே இல்லாத தொழிலுக்குச் செல்லவேண்டியிருக்கும்.. இது ஒரு கட்டாய்த்திணிப்பு.
அரசே.... நீங்கள் ஒரு ம.. உதவியும் எங்களுக்குச் செய்யவேண்டாம்.... ஒழுங்கான நிர்வாகத்தோடு ஆட்சியை நடத்தினாலே போதும்.. நீங்கள் எவ்வளவு கோடிவேண்டுமானாலும் கொள்ளை அடித்துக் கொள்ளுங்கள். எங்கள் வயிற்றில் உங்கள் காலை வைத்து மிதிக்காதீர்கள்...
அன்புடன்
பாதிக்கப்பட்டவன்.
மதியம் 12-2
சாயங்காலம் 6-7
இரவு 9-10
நள்ளிரவு 11-12
என்ன... இதெல்லாம் நான் சாப்பிடும் நேரம் என்று நினைக்கிறீர்களா?.... வைத்துக் கொள்ளுங்கள்.. ஆனால் என்னை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது இங்கே குறித்த எண்கள் தவிர்த்த மீதி நேரங்கள்...
நண்பர்களே...
மேற்குறித்த நேரங்கள் மட்டும்தான் திருப்பூரில் மின்சாரம் இருக்கிறது. மீதி நேரமெல்லாம் துண்டிப்புதான். இரண்டு மணிநேரம் ,மூன்று மணிநேரம் என்று இருந்த மின்சார துண்டிப்பு இப்பொழுது தலைகீழாய், இரண்டு மணிநேரம்தான் மின்சாரம் இருக்கும்படி ஆகிவிட்டது... நான் ஒருநாள் முழுக்க வேலை செய்தால்தான் என் வாழ்க்கை மெல்ல மெல்ல நகரும். இப்பொழுது ஒருநாளைக்கு ஐந்து மணிநேரம் கூட வேலை செய்வதில்லை.. இருக்கிற இந்த நேரத்திலும் என்னடா இவன் டைப்படித்துக் கொண்டிருக்கிறானே என்று எண்ணாதீர்கள். மின்சாரம் இல்லாததால் வேலை எதுவும் தொடர்ந்து எடுக்க முடியவில்லை. எனது வாடிக்கையாளர்களை நான் இழந்து வருகிறேன்.. ஒரு UPS வாங்க என்னிடம் திறமில்லை. வாங்கினவர்களுக்கோ அதனை முழுதாய் உபயோகிக்க இடமில்லை. திருப்பூர் ஏற்கனவே நசிந்து வரும் சூழலில் மின்சாரம் மேலும் நசுக்குகிறது. நைய்ந்த பின் எழுந்த வர திராணியில்லை மக்களே.
பொறுப்பற்ற அரசின் கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டு இப்படி புலம்புவது தவறுதான்... வேறுவழியில்லை. நம்முடைய கோபம் வெறும் ஓட்டு மாற்றுவ்தில்தான் இருக்கிறதேயொழிய வேறெதிலும் இல்லை.
இன்னும் ஒருமணிநேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிடும். எனக்கு கட்டாய ஓய்வு. ஒருவேளை இது தொடர்ந்து வந்தால் நான் மின்சாரமே இல்லாத தொழிலுக்குச் செல்லவேண்டியிருக்கும்.. இது ஒரு கட்டாய்த்திணிப்பு.
அரசே.... நீங்கள் ஒரு ம.. உதவியும் எங்களுக்குச் செய்யவேண்டாம்.... ஒழுங்கான நிர்வாகத்தோடு ஆட்சியை நடத்தினாலே போதும்.. நீங்கள் எவ்வளவு கோடிவேண்டுமானாலும் கொள்ளை அடித்துக் கொள்ளுங்கள். எங்கள் வயிற்றில் உங்கள் காலை வைத்து மிதிக்காதீர்கள்...
அன்புடன்
பாதிக்கப்பட்டவன்.