அதிமுக விலிருந்து சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் நீக்கம்

Nivas.T

New member
உடன்பிறவா சகோதரிகளாக வளம் வந்து நாட்டை ஆண்ட ஜெயலலிதாவுக்கும் சசிகலாவிற்கும் இடையில் ஏற்ப்பட்ட விரிசலால் சசிகலா மற்றும் அவரது கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரையும் ஜெயலலிதா கட்ச்சியை விட்டு அதிரடியாக நீக்கியுள்ளார் .
 
சற்று முன்னர் தான் இந்த செய்தியை இணையத்தில் படித்தேன்.

http://www.firstpost.com/politics/jayalalithaa-expels-close-aide-sasikala-from-aiadmk-159770.html

சும்மா கண்துடைப்பாக இருக்கும் பிரதர்.
தன மேல் இருக்கும் வழக்குகள் பற்றிய சர்ச்சைகளை திசைதிருப்ப இப்படி செய்து இருப்பார்


நம்பிக்கை துரோகம் செய்வதில் ஜெயலலிதா கைதேர்ந்தவர்

[media]http://www.brokenglass.co.in/blog/wp-content/uploads/2011/12/sasikala_removed_from_admk.jpg[/media]
 
Last edited by a moderator:
இல்லை சரண்

எனக்கு என்னவோ இது அதிகாரப் போட்டியின் விளைவால் இருக்க கூடுமோ என்று தோன்றுகிறது
 
சற்று முன்னர் தான் இந்த செய்தியை இணையத்தில் படித்தேன்.

http://www.firstpost.com/politics/jayalalithaa-expels-close-aide-sasikala-from-aiadmk-159770.html

சும்மா கண்துடைப்பாக இருக்கும் பிரதர்.
தன மேல் இருக்கும் வழக்குகள் பற்றிய சர்ச்சைகளை திசைதிருப்ப இப்படி செய்து இருப்பார்

நம்பிக்கை துரோகம் செய்வதில் ஜெயலலிதா கைதேர்ந்தவர்

[media]http://www.brokenglass.co.in/blog/wp-content/uploads/2011/12/sasikala_removed_from_admk.jpg[/media]

ஒரு மாநிலத்தின் முதல்வரை இப்படி ஒருமையில் அழைப்பது கண்டிக்க தக்கது..

இனி இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ளவும்
 
Last edited:
இல்லை சரண்

எனக்கு என்னவோ இது அதிகாரப் போட்டியின் விளைவால் இருக்க கூடுமோ என்று தோன்றுகிறது

இது போலொரு நாடகம் முன்பும் நடந்திருக்கிறது
 
இது போலொரு நாடகம் முன்பும் நடந்திருக்கிறது

இருக்கலாம் ஆதன் நீங்கள் சொல்வது போல் நாடகமாய் இருந்தால் இப்பொழுது அவசியம் என்ன என்று விளங்கவில்லை
 
இருக்கலாம் ஆதன் நீங்கள் சொல்வது போல் நாடகமாய் இருந்தால் இப்பொழுது அவசியம் என்ன என்று விளங்கவில்லை

91 முதல் 96 அம்மா ஆண்டபின் பல ஊழல் புகாரில் சிக்கினார், 97 சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினார், பிறகு 11 மாதம் சசிகலாவும் ஜெவும் சந்தித்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது, அதன் பிறகு அம்மாவே நேரே சென்று சசிகலாவை சந்தித்தார், நேற்று நிலவரப்படி அவர்க்களுக்கு இடையில் நடந்த பிரச்சனையில் சமாதன பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது, 2 நாட்களுக்கு முன்பே அம்மா வீட்டைவிட்டு வெளியேறிய சசிகலா, கடற்கரை சாலையில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது, சமாதாண பேச்சு வார்த்தையும் நடப்பதாக கூறப்பட்டது, இன்று நீக்கப்பட்டார் எனும் செய்தி வெளியாகி உள்ளது, செய்திதாள்களின் ஊகங்கள் என்னென்னவாக இருந்தாலும், உண்மையான காரணம் எதுவென தெரியவில்லை... முடிச்சுக்கள் அவிழும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்..
 
91 முதல் 96 அம்மா ஆண்டபின் பல ஊழல் புகாரில் சிக்கினார், 97 சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கினார், பிறகு 11 மாதம் சசிகலாவும் ஜெவும் சந்தித்துக் கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது, அதன் பிறகு அம்மாவே நேரே சென்று சசிகலாவை சந்தித்தார், நேற்று நிலவரப்படி அவர்க்களுக்கு இடையில் நடந்த பிரச்சனையில் சமாதன பேச்சு வார்த்தை நடந்திருக்கிறது, 2 நாட்களுக்கு முன்பே அம்மா வீட்டைவிட்டு வெளியேறிய சசிகலா, கடற்கரை சாலையில் உள்ள தன் உறவினர் வீட்டில் தங்கி இருப்பதாக தகவல் வெளியானது, சமாதாண பேச்சு வார்த்தையும் நடப்பதாக கூறப்பட்டது, இன்று நீக்கப்பட்டார் எனும் செய்தி வெளியாகி உள்ளது, செய்திதாள்களின் ஊகங்கள் என்னென்னவாக இருந்தாலும், உண்மையான காரணம் எதுவென தெரியவில்லை... முடிச்சுக்கள் அவிழும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்..

கடந்த தேர்தல் வரை அதிமுக தென்மாவட்டங்களில் வலிமையாகவும், பெரும்பான்மையகாவும் இருந்தது, அனால் இப்பொழது தலைகீழாக மாறி அதிமுக தென்மாவட்டங்களில் வலுவிழந்து வடமாவட்டங்களில் வலிமை பெற்றுவிட்டதால் இந்த பிரிவு நிரந்தரமாக வாய்ப்பு உண்டு.

இதற்குமேல் ஏன் யானையை கட்டி தீனி போட வேண்டும் ?

எப்படி இருந்தாலும் இந்தபிரிவு நிரந்தரமானால் எதிர்கால அரசியலில் நிச்சயமா ஒரு மாற்றம் நிகழும்

மீண்டு இருவரும் இணைந்து விசயம் ஒன்றும் இல்லாமல் போனாலும் போகலாம்

பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
சசிகலா மற்றும் தினகரன் உட்பட்ட அவரது உறவினர்கள் 14 பேர் நீக்கப்பட்ட செய்தியை ஜெயா டிவி உடனடி செய்தியாக திரையில் ஓட்டியது. கவனிக்கத் தக்க ஒரு விஷயம் ஜெயா டிவியின் எம்.டி. அனுராதா தற்சமயம் நீக்கப்பட்டதாக சொல்லப்படும் முன்னாள் எம்.பி.யான தினகரனின் மனைவி. அப்ப இனிமேல் ' கலைஞர் டிவி' போல 'எம்.ஜி.ஆர். டிவி'யோ அல்லது 'சந்தியா டி.வி.'யோ. எதிர்பார்க்கலாமா? இல்லைனா எப்பவும் போல இதுவும் கடந்து போகுமா? விரைவில் 'அங்கே ' நடந்தது போல கண்கள் பனித்து இதயம் இனிக்குமா?
 
திரையில் நடித்து நடித்து பழக்கப்பட்டவர்களுக்கு அரசியலில் நடிப்பதா கடினம்?

ஏற்கனவே இது போல் ஒரு நாடகத்தை தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். இதையும் பார்க்க வேண்டியது நம் மக்களின் தலையெழுத்து.

இன்னும் ஓரிரு மாதமோ? ஆண்டுகளுக்கு பிறகோ??, "மனமிருந்தது மாற்றம் நிகழ்ந்தது" என்று சொல்லி கை கோர்த்து கொண்டு தமிழக மக்களே நீங்கள் முட்டாள்கள் தான் என்று அடித்து சொல்வார்கள். :mad::mad:
 
முந்தா நாள் மதியம் இரண்டு மணியில் இருந்து இரவு பதினோரு மணி வரை இந்த பதினாலு பெரும் அழைக்கப்பட்டு தனித்தனியே மற்றும் கூட்டாக விசாரிக்கப்பட்டு, எழுத்து பூர்வமாக இனிமேல் கட்சியிலோ , அரசிலோ எந்த ஒரு தலையீடும் செய்ய மாட்டோம் என்று உறுதி அளித்ததன் பிறகே நேற்று நீக்கப்பட்டிருக்கிரர்கள். இது மீண்டும ஒன்று சேரா. போயஸ் கார்டனில் ஜெயாவுக்கு கொடுக்கப்பட்டிருந்த சிறப்பு பாதுகாப்பு படையில் முக்கிய வீரர்கள் சசிகலாவின் ஆட்கள். இந்த குடும்பத்தால் ஜெயாவின் உயிருக்கு ஆபத்து மட்டுமல்ல, இந்த தமிழக அரசு மற்றும் கட்சியை கைப்பற்ற முனைகிறார்கள் என்ற ஜெயாவின் நம்பிக்கைக்குரிய உளவுத்துறை அதிகாரிகளின் ரிப்போர்ட் மற்றும் சசிகலா குடும்பத்தினரின் ஆடியோ மற்றும் வீடியோ ரகசிய பதிவுகளை பார்த்து இந்த நடவடிக்கை.- நன்றி : விண் டிவி.
 
டீ கடை பேச்சு

அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆட்களை, மீண்டும் "செல்வி" ஜெ சேர்க்க வாய்ப்புள்ளது. சமரசம் ஆக வாய்ப்புள்ளது. அவர்கள் மிரட்டவும் வாய்ப்புள்ளது. ஆம், அவ்வாறு சேர்ந்த பின், நீக்கியது சரிதான் என்று ஜால்ற்ற போட்டவர்கள் தலை உருளவும் வாய்ப்புள்ளது.
 
Last edited by a moderator:
இது மட்டும் உண்மையாக இருந்தால் அதிமுகாவின் உண்மையான தொண்டர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி..
 
இதுவும் ஒரு அரசியல் தான் ! எல்லா சொத்துக்களும் சசிகலாவின் பெயரிலும் அவர்களது உறவினர்களின் பெயரிலும் தான் இருக்கிறது அப்படி இருக்க எப்படி நிரந்தரமாக அவர்களை ஒதுக்கி வைத்து விட முடியும்? சுத்தமாக நம்பும்படி இல்லை ! ஒரு வேளை தீர்ப்புக்கான நேரம் நெருங்கி விட்டதோ என்னவோ அதன் தாக்கமாக கூட இந்த நீக்கம் இருக்கலாம்
 
திலீப்ராம்கி!

சாதியைக் கொண்டு உருவாக்கப்படும் உங்களுடைய பல பதிவுகள், திரியைத் திரித்து, கலகம் மூட்டி விடும் அபாயம் உள்ளது. முன்னொரு தடவையும் தவிர்க்குமாறு கேட்டிருந்தோம். இப்போதும்...

இனியொரு தடவை இதேபோல் இருந்தால், தடை செய்யபடுவீர்கள்.

நன்றி.
 
தற்போது மீண்டும் சசிகலா கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்து போயஸ் தோட்டத்தில் அனுமதிக்கப் படுவார். " உடன்பிறவா சகோதரி மீது எவ்வளவு பாசம் ! இது அல்லவோ நட்பு! " என்று மக்கள் பாராட்டத்தான் போகிறார்கள்.
 
ஏற்கனவே கணித்தது பலித்திருக்கிறது. (அங்கே நடந்ததைப் போல் இங்கேயும் கண்கள் பனித்து, இதயம் இனித்து விட்டது). ததாஸ்து............
 
Last edited:
Back
Top