நெல்லிக்காய் சாதம்

கசங்காத சாரீஸ்க்கான டிப்ஸ் இது....

காட்டன் சாரீஸ்களை கட்டாத, விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. அழகாக கஞ்சி போட்டு அயர்ன் செய்த சாரீஸ் கட்டிய பெண்களை பார்க்கவே சூப்பராக இருக்கும். இந்த வெயில் காலத்திற்கு காட்டன் சாரிகளே ஏற்றது. நாமே வீட்டில் கஞ்சி போட்டு , அழகாக உடுத்தும்போது , எல்லோரையும் புதுப் புடவையா என்று கேட்க தூண்டும்.


STEP -1

மைதா மாவு அல்லது ஜவ்வரிசி மாவிலேயே கஞ்சி தயார் செய்யலாம்.இதற்காக காஸ்ட்லி ஸ்டார்ச் பவுடர் வாங்க வேண்டாம். 1 டேபிள் ஸ்பூன் ஜவ்வரிசி அல்லது மைதா மாவினை நீரில் கரைத்து, கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.

STEP---2

கட்டிகள் இல்லாமல் வடிகட்டவும். நன்கு உலர்ந்த புடவையை மட்டுமே கஞ்சியில் நனைக்கவும். மிகவும் இறுக்கமாக கசக்கி பிழியக் கூடாது.

STEP---3
டார்க் கலர் புடவைக்கு கொஞ்சம் சொட்டு நீலம் கூட கஞ்சியில் சேர்க்கலாம். கஞ்சியில் நனைத்த பின் , நன்கு உதரி, மடிப்புகளின்றி வெயிலில் உலர்த்தவும்.


STEP---4
உங்களுக்கு பிடித்த வாசனை திரவியத்தை(perfumes) கஞ்சியில் சில சொட்டு விடும் போது கஞ்சியின் அழுக்கு வாடை அடிக்காமல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.

STEP ---5
நன்கு நீவி அயர்ன் செய்யவும்.


இளசுகள் ,""தேரடி வீதியில் தேவதை வந்தா"".....என்று பாடுகிறார்களா ? உங்களை பார்த்து தாங்க.
 
ஆலு பீஸ் ஸ்ட்யூ

இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றிர்க்கு வித்தியாசமான சைட் டிஷ் இந்த ஸ்ட்யூ வகைகள். எந்த காய்கறி இருந்தாலும் செய்யலாம். அசைவ பிரியர்கள் இதில் காய்களுக்கு பதிலாக சிக்கன், மட்டன் சேர்த்துக் கொள்ளலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


ஆலு பீஸ் ஸ்ட்யூ

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு ---கால் கிலோ
பச்சை பட்டாணி --1கப்
நறுக்கிய கேரட் --1கப்
தேங்காய் பெரியது ஒன்று
இஞ்சி சிறு துண்டு,
பச்சைமிளகாய்---4
மிளகு தூள் 1ஸ்பூன்
உப்பு தேவையானது

உருளைக்கிழங்கை சிறு சதுர துண்டுகளாக வெட்டவும். பட்டாணியை வேகவைக்கவும்.
தேங்காயை அரைத்து பால் எடுக்கவும். முதல் பாலை தனியாகவும், 2, 3 ,பாலை தனியாக வைக்கவும்.
2,3 தேங்காய் பாலில் உருளைக்கிழங்கை நன்கு வேகவைக்கவும். பட்டாணி சேர்த்து மசிக்கவும்.காரட் சேர்க்கவும்.
இஞ்சி ,பச்சை மிளகாய், மிளகு தூள் சேர்க்கவும்.
உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
இறுதியில் முதல் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.
 
ஹெல்தியான ப்ரூட் சாலட்

சாலட் வகைகளில் காய்கறி சாலட், ப்ரூட் சாலட் போன்றவற்றில் தினமும் ஏதாவது ஒன்றை உண்பது மிகவும் நன்று. இது உடலில் கொலஸ்ட்ராலை குறைத்து, சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். பச்சையாக உண்பதால் அனைத்துவித மினரல்களும் கிடைக்கும்.

ப்ரூட் சாலட் செய்ய தேவையான பொருட்கள்

வாழை பழம்--1
கறுப்பு திராட்சை---1கப்
ஆரஞ்சு பழம்--1
பப்பாளி பழ துண்டுகள்--1கப்
மாதுளை முத்துக்கள்---1கப்
தேன் 3 ஸ்பூன்
சாட் மசாலா தூள்--- 2ஸ்பூன்
சிறிதளவு எலுமிச்சை சாறு

பெரிய வாயகன்ற கிண்ணத்தில் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து அதோடு தேன், சாட் மசாலா சேர்த்து கிளறி விடவும். பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிடவும். கூல் செய்ய வேண்டாம் என்றால் அப்படியே கலந்த உடனேயே சாப்பிடலாம்.
 
வாழை பழக் கூழ்

இந்த வெயில் காலத்தில் குளிர்ச்சியாகவும் ,ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் தரும் பழச்சாறுகளை அருந்துவதே சாலச் சிறந்தது.வெயிலி்ல் சென்று வருவதால் ஏற்படும் நீர்ச்சத்து பற்றாக்குறையை போக்க எளிய வழி பழச்சாறுகள் குடிப்பது. அதற்காக கார்பன் ஏற்றப்பட்ட குளிர்பானங்களை அருந்துவது உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும்.

வாழை பழக் கூழ் செய்ய தேவையானவை


வாழை பழம்-2
ஆரஞ்சு சாறு--1கப்
தயிர் ---1கப்

ஐஸ் துண்டுகள் சிறிது
தேன் சிறிது

எல்லா பொருட்களையும், அரவை இயந்திரத்தில் 2 நிமிடம் வரை நன்கு அடித்து கலக்கவும். உயரமான கண்ணாடி டம்ளரில் போட்டு , சிறிதளவு புதினா தழையை மேலே தூவி அலங்கரித்து பரிமாறவும்.
 
பழைய பருத்தி புடவைகளை மெருகேற்ற...

பருத்தி புடவைகளை கட்டாத, விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. அழகாக கஞ்சி போட்டு இஸ்திரி செய்து புடவை கட்டிய பெண்களை பார்க்கவே அழகாக இருக்கும். இந்த வெயில் காலத்திற்கு பருத்தி புடவைகளே ஏற்றது. நாமே வீட்டில் கஞ்சி போட்டு , அழகாக உடுத்தும்போது , எல்லோரையும் புதுப் புடவையா என்று கேட்க தூண்டும்.

படி--1

மைதா மாவு அல்லது ஜவ்வரிசி மாவிலேயே கஞ்சி தயார் செய்யலாம்.இதற்காக விலையுயர்ந்த பவுடர் வாங்க வேண்டாம். 1 கரண்டி ஜவ்வரிசி அல்லது மைதா மாவினை நீரில் கரைத்து, கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் இறக்கவும்.

படி--2

கட்டிகள் இல்லாமல் வடிகட்டவும். நன்கு உலர்ந்த புடவையை மட்டுமே கஞ்சியில் நனைக்கவும். மிகவும் இறுக்கமாக கசக்கி பிழியக் கூடாது.

படி3
அடர்நிற புடவைக்கு கொஞ்சம் சொட்டு நீலம் கூட கஞ்சியில் சேர்க்கலாம். கஞ்சியில் நனைத்த பின் , நன்கு உதரி, மடிப்புகளின்றி வெயிலில் உலர்த்தவும்.

படி4
உங்களுக்கு பிடித்த வாசனை திரவியத்தை கஞ்சியில் சில சொட்டு விடும் போது கஞ்சியின் அழுக்கு வாடை அடிக்காமல் நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
படி 5
நன்கு நீவி இஸ்திரி செய்யவும்.


இளசுகள் ,""தேரடி வீதியில் தேவதை வந்தா"".....என்று பாடுகிறார்களா ? உங்களை பார்த்து தாங்க.
 
பட்டுப் புடவை பளபளப்புடன் இருக்க எளிய உபாயங்கள்

பட்டுப்புடவைகளை விரும்பாத நங்கையர்களே இருக்க முடியாது.அதிக விலை தந்து வாங்கும் புடவையை எப்படி பராமரிப்பது? சில டிப்ஸ் .....


புடவையை கட்டிய பிறகு வியர்வை வாடை போக சிறிது நேரம் நிழலில் காயவைத்து பின் எடுத்து மடித்து வைக்க வேண்டும்.
அடிக்கடி துவைத்துக் கொண்டே இருக்க கூடாது.அப்படி செய்வதால் பளபளப்பு குறையும்.

புடவையை துவைக்க கடினமான சோப்புகள், பவுடர்கள் பயன்படுத்தக் கூடாது. அதற்கு பதிலாக தலைக்கு போடும் ஷாம்புவை சிறிது நீரில் கலந்து அதில் புடவையை நனைத்து துவைக்கலாம்.

நம்மை அறியாமல் ஏதேனும் கரை படிந்து விட்டால் கவலை வேண்டாம்... சிறிது யூகலிப்டஸ் தைலம் பயன்படுத்தி, பஞ்சினால் துடைத்தால் கரை பளிச்.

புடவையை மடித்து வைக்கும் போது அதன் ஜரிகை பகுதி உள்புறமாக இருக்கும் படி வைத்து மடிக்க வேண்டும். இதனால் ஜரிகை கறுத்து போகாது. மேலும் ஏதாவது துணியின் உள் வைத்து மூடி வைக்க வேண்டும்.

இரும்பு பீரோவில் வைப்பதை முடிந்தவை தவிர்த்தல் நலம்.
 
பானி பூரி

சாட் வகைகளில் இதுவும் ஒன்று. நம் ஊரிலேயே இப்போதெல்லாம் தெருவோர கடைகளில் கூட பானி பூரி விற்கிறார்கள். வட இந்தியாவில் இதை "கோல் கப்பா " என்று ஆசையோடு அழைத்து வெளுத்து கட்டுவாங்க பாருங்க அதை பார்க்கும் போது , நமக்கே எச்சில் ஊறும். இதை செய்வதும் ரொம்ப ஈஸி

பானி பூரி


பூரி செய்ய தேவையானவை

ரவை---1கப்
மைதா--2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு சிட்டிகை
உப்பு தேவையான அளவு
பொரிக்க தேவையான அளவு எண்ணை

ரவை,மைதா, சோடாஉப்பு, உப்பு சேர்த்து நன்கு மிருதுவான சப்பாத்தி மாவு போல் பிசைந்து ,ஈரத்துணியால் மூடி 30 நிமிடம் ஊறவிடவும்.
பிறகு சிறு சிறு பூரிகளாக திரட்டி, (ஒரு பூரி ஒரே வாயில் உள்ளே சென்றுவிட வேண்டும் ) அதற்கு ஏற்ப சைஸ் சிறியதாகஇருக்கட்டும்) .எண்ணையில் நன்கு அழுத்தி விட்டு உப்பி வரும் படி பொரித்து எடுத்து சூடு ஆறிய உடன் காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

அதன் உள்ளே வைக்க பூரணம்

வேகவைத்த உருளைக்கிழங்கு---3
மிளகாய்தூள் 2ஸ்பூன்
சீரகத்தூள் --1 ஸ்பூன்
கரம் மசாலா--1 ஸ்பூன்(விரும்பினால் மட்டும் சேர்க்கவும்)
உப்பு தேவையானது

உருளைக்கிழங்கை மசித்து ,அதில் மிளகாய் தூள், சீரகத்தூள், உப்பு ,கரம் மசாலா நன்கு சேர்த்து கலந்து வைக்கவும். உருளைக்கிழங்கிற்கு பதிலாக கொண்டைக்கடலை கூட பயன்படுத்தலாம்.

பானி செய்ய தேவையான சட்னி

இதற்கு மூன்று வகை சட்னி செய்வார்கள். புளி சட்னி, பச்சை சட்னி, இனிப்பு சட்னி.
மூன்றையும் கூறுகிறேன் உங்களுக்கு எது விருப்பமோ அதை செய்து கொள்ளவும்.

1 புளி சட்னி
புளி எலுமிச்சை சைஸ்
கொத்தமல்லி தழை--1கட்டு
புதினா --1கட்டு
பச்சை மிளகாய்---காரத்திற்கேற்ப
மிளகுதூள்-1ஸ்பூன்
சீரகத்தூள்--1ஸ்பூன்
இஞ்சி சிறு துண்டு
உப்பு தேவையான அளவு

புளியை கெட்டியாக கரைக்கவும். கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பச்சைமிளகாயை அரைக்கவும். புளித்தண்ணீரை கொதிக்கவைத்து அதில் அரைத்த விழுதை போட்டு , தேவையான உப்பு போட்டு 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.

2 பச்சை சட்னி

கொத்தமல்லி தழை--1கட்டு
தேங்காய் துருவல் --1கப்
பச்சைமிளகாய்--3
உப்பு தேவையான அளவு

எல்லாவற்றையும் சேர்த்து அரவையில் அரைத்து ,நீர்க்க கரைத்து வைக்கவும்.

3 இனிப்பு சட்னி
பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது ---கால் கப்
கெட்டியாக கரைத்த புளித்தண்ணீர் சிறிது
வெல்லம் ---1சிறிய கரண்டி
சீரகத்தூள் --1ஸ்பூன்
மிளகாய் தூள் --அரை ஸ்பூன்
உப்பு சிட்டிகை

எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்து கரைத்து வைக்கவும்.


பானி பூரி பரிமாறும் முறை

5--6 பூரிகளை தட்டில் வைத்து நடுவில் துளை செய்து பூரணம் வைத்து அதன் மீது நறுக்கிய வெங்காயம், மல்லித்தழை, தூவி பானி ( சட்னியை 1 ஸ்பூன் ஊற்றி ) உடன் பரிமாறவும். சட்னி நீர்க்க இருக்கவேண்டும்.
 
ஆலு டிக்கி

சாட் வகை உணவுகள் வட இந்தியாவில் பிரசித்தி பெற்றது. பானி பூரி, பேல் பூரி, பாவ் பாஜி ......இப்படி நிறைய உண்டு .அவர்கள் இப்படியான உணவுகளை மிகவும் விரும்பி உண்பர். அதில் ஒரு வகை தான் இந்த
ஆலு டிக்கி.


தேவையான பொருட்கள்

வேகவைத்த உருளைக்கிழங்கு-- 3
வேகவைத்த பச்சை பட்டாணி--- கால் கப்
கொத்தமல்லி தழை---கால் கப்
இஞ்சி சிறு துண்டு
சீரகம்---கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் விருப்பத்திற்கேற்ப
மிளகாய் தூள்--- 1ஸ்பூன்
கரம் மசாலா தூள்--1 ஸ்பூன்
மிளகு தூள்---கால் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை தேவையான அளவு

அலங்கரிக்க

பொடியாக நறுக்கிய வெங்காயம், வௌ்ளரிக்காய், தயிர், சாட் மசாலா, புளி சட்னி அல்லது சாஸ்

இவை இருந்தால் செய்வது சுலபம்

வேகவைத்த உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி , நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், வறுத்து பொடியாக்கிய மிளகு தூள், சீரகத் தூள் , கொத்தமல்லி தழையில் பாதி, உப்பு சேர்த்து மசிக்கவும்.

சிறு சிறு உருண்டை போல் செய்து தேவையான வடிவில் தட்டிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணை காய வைத்து ,மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்.

பரிமாறும் முன்
பொரித்த ஆலு டிக்கியின் மீது கொஞ்சம் தயிர், சாட் மசாலா, வெங்காயம், வௌ்ளரிக்காய், கொத்தமல்லி தழை தூவி மீண்டும் சிறிது தயிர் மேலாக ஊற்றி , சாஸ் அல்லது புளிச்சட்னியுடன் பரிமாறவும்.
 
தினமும் ஒரே மாதிரியான சமையல் செய்து போரடித்துவிடுகிறது. சற்று வித்தியாசமான சமையலை செய்தால் சுவையாக இருக்குமல்லவா?கலவை சாதம் என்றால் உடன் நினைவுக்கு வருவது எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் .இன்று வித்தியாசமாய்
நெல்லிக் காய் சாதம் செய்யலாமா?

தேவையானவை

பெரிய நெல்லிக்காய் --10
1கப் அரிசி
உப்பு ருசிக்கேற்ப

தாளிக்க தேவையானவை

எண்ணை ---2 குழிக்கரண்டி
பச்சை மிளகாய்---- 4
காய்ந்த மிளகாய் ---2
கடுகு--சிறிது
கடலைப்பருப்பு--- 2ஸ்பூன்
வேர்கடலை--- 2ஸ்பூன்

செய்முறை

முதலில் சாதத்தை உதிரயாக வடித்துக் கொள்ளவும்.பின் நெல்லிக்காய்களையும் லேசாக வேகவைத்து, கொட்டை நீக்கி துண்டுகளாக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணை விட்டு .கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளிதம் செய்து
அதோடு நெல்லிக்காய் ,சாதம், உப்பு போட்டு லேசாக கிளறவும். இறுதியில் சிறிதளவு கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி மேலே தூவி அலங்கரித்தால் சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.

பயன்கள்
விட்டமின் சி நிரம்பி இருக்கிறது. அசிடிட்டி வராமல் தடுக்கும் .சளித் தொல்லை நீங்கும்.
 
நெல்லிக்காய் சேர்த்திருப்பதால் உணவை உட்கொள்ளும் நேரத்தில் நீர் அருந்தும் போது இனிக்குமோ..?
 
நெல்லி இனிக்குது நீர் அருந்தும்போது...
அது ஏன் தெரியல?
பகிர்வுக்கு மிக்க நன்றி...
 
குழந்தைகளுக்கான சத்தான உணவுகள்

பாசிப் பயறு சூப்

தேவையானவை
பாசிப்பயறு--100 கிராம்
வெங்காயம் நறுக்கியது--1
பச்சை மிளகாய்--2
மிளகுத் தூள் ---1 ஸ்பூன்
உப்பு தேவையானவை
வெண்ணை 1 ஸ்பூன்

பட்டை சோம்பு தாளிக்க
கொத்தமல்லி தழை --அலங்கரிக்க

பாசிப்பயறை 1 மணி நேரம் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும்.
குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் வெண்ணை விட்டு பட்டை சோம்பு தாளித்து, பச்சை மிளகாய், வெங்காயம் போட்டு வதக்கவும். வெந்த பாசிப்பயறை போட்டு கிளறவும். தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். உப்பு , மிளகுத்தூள் போட்டு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏற்ற சத்தான சூப் இது. கொடுத்துள்ள அளவில் 4 பேர் சாப்பிடலாம்.
 
நானும் சமைத்து பார்க்கறேன்; அப்புறம் ஃபீட்பக் சொல்றேன்.
 
கிருஷ்ண சுப்பராவ் நண்பரே...

சமையல் குறித்த உங்களது பதிவுகளை ஒரே திரியில் பதியுங்கள். பரவலாக இருப்பதற்கும் ஒரே திரியில் எல்லாமே கிடைப்பதற்கும் உள்ள வசதியை உற்றுநோக்குங்கள்!

அன்புடன்
ஆதவா.
 
கிருஷ்ண சுப்பராவ் நண்பரே...

சமையல் குறித்த உங்களது பதிவுகளை ஒரே திரியில் பதியுங்கள். பரவலாக இருப்பதற்கும் ஒரே திரியில் எல்லாமே கிடைப்பதற்கும் உள்ள வசதியை உற்றுநோக்குங்கள்!

அன்புடன்
ஆதவா.

ஐயா கணிணியை கையாள்வதில் புதியவன் நான் இப்போது தான் பழகி வருகிறேன். ஒரே திரியில் எப்படி தொகுப்பது என்று விளக்கினால் அவ்வாறே தருகிறேன். நன்றி. என்றென்றும் அன்புடன்.
கிருஷ்ணன்.
 
Back
Top