ஆதி
Active member
மதிப்புக்குரிய திரு.விஜயகாந்த் அவர்களுக்கு,
இரு திராவிடக் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் கைநீட்டி குற்றஞ் சொல்லியவாறு, முதுகு வழியாக தமிழக மக்களின் முகத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், நீங்கள் தமிழகத்தின் மூன்றாவது மிக பெரிய சக்தியாக உருவெடுத்து கட்சி துவங்கினீர்கள்.
மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் சொந்த பணத்தை போட்டு கட்சி துவங்கி, 2006-ஆம் ஆண்டு மக்களோடும் கடவுளோடும் மட்டுமே கூட்டணி எனும் புது மந்திரத்தோடு தேர்தலையும் தனியாக சந்தித்தீர்கள்..
உங்கள் வாக்கின் மீதும், வருகையின் மீதும் நம்பிக்கை கொண்ட எங்கள் ஜனங்கள், உங்கள் கட்சிக்கு கணிசமான வாக்களித்ததோடு மட்டுமன்றி, உங்களை விருத்தாச்சலத் தொகுதியில் ஜெய்கவும் வைத்தார்கள்..
ஆளும் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களும் பிஜேபி தலைவர்களும் கூட உங்களுக்கு கிடைத்த ஓட்டுக்களை பற்றியும் உங்களின் வெற்றி பற்றியும் நன்முறையிலேயே கருத்து தெரிவித்தார்கள்.தங்களுக்கு வாழ்த்துச் சொன்னதோடு, நீங்கள் எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டதற்கு பதிலாக, 20-30 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் மட்டும் போட்டியிட்டிருந்தால் இன்னும் அதிகமாய் ஜெய்திருக்கலாம் நீங்கள் என்று தங்களுக்கு பக்குவமான ஆலோசனைகளை சொன்னார்கள்..
அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த போது தங்கள் கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது, அதிமுக போட்டியிட்ட இடைத்தேர்தலில் மூன்றாம் இடம் கிடைத்தது, 10 சதவிகிதம் வரை வாக்கு வங்கி உயர்வும் தங்கள் கட்சிக்கு கிடைத்திருப்பதை பார்த்து, உங்களால் தங்கள் வாக்கு வங்கி பாதிக்கப்படுகிறது என்பது உணர்ந்து கோபமுற்ற அம்மையார் அவர்கள், தாங்கள் சட்டப்பேரவைக்கு குடித்து விட்டு வருவதாக குற்றஞ்சொன்னார்கள்...
அதற்கு நீங்களும் அநாகரீகமான பதிலும் அளித்தீர்கள், அப்போது கூட நாங்கள் அம்மையார் மீதுதான் கோபமுற்றோம், தேவையில்லாமல் உங்களை சீண்டி உங்களிடம் வாங்கி கட்டி கொள்கிறாரே என்று அம்மாவுக்காக பரிதாபப்பட்டோம்...
ஆளும் கூட்டணியை நீங்கள் பாரபட்சமின்றி விமர்சித்து வந்த போது, அவர்கள் செய்யும் தவறுகளை பகிரங்கமாக எதிர்த்து அறிக்கைகள் கொடுத்து வந்த போது தங்களின் துணிச்சல் கண்டு வியந்தோம், ஒரு நாள் தமிழகத்தை நீங்கள் ஆளப்ப்போவது உறுதி என்று உளமார சொன்னோம்...
ஆனால் கேப்டன் அவர்களே, சேலம் மாநாட்டுக்கு பிறகு உங்களின் போக்கில், பேச்சில், செயல்களில் செருக்கும், அகந்தையும், ஆணவமும், திமிரும் ஆக்ரமித்திருப்பதை கண்கூடாக காணமுடிகிறது..
சேலம் மாநாட்டிலேயே நீங்கள், தண்ணீரில் நீந்திக் கொண்டு பேசினீர்கள் என்பதை உங்கள் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது, ஆனாலும் அதை ஒரு குறையாக நாங்கள் கருதவில்லை..
அதிமுக கூட்டணியில் உண்டான சலசலப்பில், உங்கள் தலைமையின் கீழ் மூன்றாம் அணி உருவாக வாய்ப்பிருக்கிறது என்றொரு சூழல் உண்டான போது, நீங்கள் தலைமை ஏற்க வேண்டும், இரு திராவிட கட்சிகள் கண்களிலும் விரலைவிட்டு துளாவ வேண்டும் என்று ஒருமித்த ஆசை கொண்டோம், ஆனால் அது நிகழவில்லை..
ஆனாலும் அதற்காக நாங்கள் உங்கள் மீது அதிருப்தி அடையவில்லை, உங்கள் பயத்தை கண்டு உங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை, உங்களின் முடிவுக்கு பின்னால் ஒரு நியாயமான காரணமிருக்கும் என்று நம்பினோம்...
ஆனால் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கைகளை மட்டுமல்ல மதிப்பையும் நீங்கள் குறைத்துக் கொண்டே சென்று கொண்டிருக்குறீர்கள்..
கருணாநிதி தங்களை தன் நண்பர் என்று சொல்லி இருக்கிறாரே என்று பத்திரையாளர்கள் கேட்ட போது, சோ.ராமசாமி அவர்கள், அவர் அதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் என்னை நண்பர் என்று சொல்லி இருந்தால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதோடு, 13 ஆண்டுகளாக ஆட்சியிலேயே இல்லாத ஒரு கட்சியை உடையாமல் கட்டுக்கோப்பாக பாதுகாத்து, எம்.ஜி.ஆருக்கு பின்னர் தேர்தலை சந்திந்து செய்து மீண்டும் முதலமைச்சராக அமர்வது என்பது சாதார்ண விடயமல்ல, உண்மையிலேயே அதன் பின்னால் இருக்கும் அவரின் உழைப்பு மிக அதிகமானது, குறைந்த கல்வி தகுதியே கொண்டிருந்தாலும், பிழையில்லாமல் ஆங்கிலமும் பேச இயல்கிறது அவரால். அனைத்திருக்கும் அவரின் உழைப்பே காரணம் என்று நாகரிகமாக பதில் சொன்னார் சோ.
சோ அவர்களின் இந்த செயலுக்கு பெயர் தானே சபை நாகரீகம் கேப்டன் அவர்களே, ஆனால் நீன்களோ கருணாநிதிக்கு ஒரு பைல் கூட பார்க்க தெரியாது என்று ஒரு நேரடி பதில் சொல்லும் நிகழ்ச்சியில் 5 முறை முதல்வராக இருந்வரை பற்றி கண்மூடித்தனமாக விமர்சனம் சொன்ன உங்களின் பேச்சு மீது முகசுழிப்பு உண்டாகாமல் இல்லை. நீங்கள் இது போல் அம்மையாரை குறித்து விமர்சித்தாலும் அது எங்கள் முகத்தை சுழிக்கவே வைக்கும். அம்மையார் அவர்களும் தமிழகத்தை இருமுறை ஆண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமா, சமீபகாலமாய் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிச்சயமாய் தெளிவு இல்லை..
கட்சி எம்.எல்.ஏவை எம்.ஜி.ஆர் கூட அடித்திருப்பதாக சொல்லுவார்கள், ஆனால் அவை சொல்லப்படுபவைகளே அன்றி நேரடியாக பொதுமக்கள் நடுவில் நிகழ்ந்தவை அல்ல..
ஒரு வேளை அப்படி ஒரு நிகழ்வு நிகழவே இல்லை, நான் அடிக்கவே இல்லை என்று நீங்கள் சொல்லியிருந்தால் கூட, அது தவறு இல்லை. ஆனால் என் வேட்பாளரை தானே நான் அடித்தேன், என் கிட்ட அடிவாங்கினவன் மகாராஜன் ஆவன் என்று சொல்வதில் என்ன பண்பு இருக்கிறது கேப்டன் அவர்களே.
உங்கள் கட்சியின் முதல் மாநாட்டின் போது, தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வ*ந்த முதியவரை கன்னத்தில் அறைந்தது எவ்வளவு பெரிய அநாகரீகம் கேப்டன் அவர்களே, நீங்கள் கட்சியை ஆரம்பித்திருப்பது எங்களை போன்ற மக்களை நம்பித்தான், நாங்கள் உங்களை வெறுத்துவிட்டால், உங்களை நிராகரித்துவிட்டால், உங்களின் நிலையென்ன என்று யோசித்துப்பாருங்கள்.
உங்களின் படத்தை பணம் கொடுத்து பார்த்தோம் என்பதற்காகவா ? அல்லது உங்களை நடிகராக ஏற்றுக் கொண்டோம் என்பதற்காகவா ? அல்லது நீங்கள் படித்தில் பேசியதை எல்லாம் கேட்டு விசிலடித்து கைத்தட்டினோம் என்பதற்காகவா ? எங்களை அறைகுறீர்கள். நாங்கள் உங்களின் அடிமைகளில்லை கேப்டன் அவர்களே.
என் மக்களை நான் கைவிடமாட்டேன், என் மக்களுக்கு நானிருக்கேன், என்றெல்லாம் பேசி கைத்தட்டு வாங்கினீர்களே, இப்படி எங்களின் முகத்தில் அறைவதுதான் நீங்கள் எங்களை கைவிட மாட்டேன் என்று சொன்னதின் பொருளா ?
"நான் பேசும் போது எவனும் பேச கூடாது"
"கொங்கு வேளாளர் என்ன நுங்கு திங்கிறவங்களா"
"கீழ எறங்குடா"
"யோவ் போலிசு, அவனை பிடிச்சு என்கிட்ட ஒப்படைங்க"
"புரட்சி தலைவி அம்மா, ஓ ஓ னுட்டு இருக்க"
"அந்த கொடிய கிழ போடுடா"
"அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் சிறையில் இருக்கார், அதனால் அதிமுகவின் கொள்கையும் சிறையில் இருக்கு, ராஜா சிறையில் இருக்கார்" (கேப்டன் அவர்களே, ராஜா திமுகவின் கொள்கை பரப்பு செயலாளார்)
"நான் என் கட்சிக்குத்தான் ஓட்டு கேக்க வந்திருக்கேன், அதிமுகவுக்கு இல்ல"
இன்னும் இன்னும் உங்களின் பிரச்சாரங்களின் நீங்கள் பேசும் பேச்சுக்கள், உங்களை நம்பி எங்களின் மனதை உலைச்சலுக்குத்தான் உள்ளாக்குகின்றன..
ஒரு பொது கூட்டம் என்றால் சலசலப்புக்கள், கோசங்கள், சத்தங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும், அதை எல்லாம் அமைதியாக்கி, மக்களை நாம் பேசுவை கேட்க செய்வதுதான் ஒரு தலைவன் திறமை, வைகோ, கலைஞர், அண்ணா, நாஞ்சில் சம்பத், நாவலர், புரட்சி தலைவர் எல்லோரிடமும் அது இருந்தது, இருக்கிறது.
"ஸூ பேச கூடாது"
"என்ன பேச விடு இல்ல நீ வந்து பேசு"
"பேசிக்கிட்டிருக்கேன்ல்ல"
இப்படி எங்களை மிரட்ட, நீங்கள் ஒன்றும் எங்களின் வாதியாரில்லையே கேப்டன் அவர்களே. நாங்கள் கீழே நின்று தங்களை அண்ணாந்து பார்ப்பதால் தான் உங்களால் மேலே நின்று பேச முடிகிறது. நீங்கள் மேலே நின்று பேசுவதற்கு பின்புலமாகவும், பக்கபலமாகவும் இருப்பதே இந்த கூட்டம் தான் கேப்டன் அவர்களே, அதை மறந்து, எங்களை அவமான செய்யாதீர்கள்.
அவங்களுக்கு ஆப்படிக்க ஆஃப் அடிக்கனும் என்று ஒரு பொது கூட்டத்தில் எப்படி உங்களால் கூச்சமில்லாமல் பேச முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது..
ஒரு கூட்டத்தையே உங்களுக்கு ஆள தெரியவில்லையே, நீங்கள் எப்படி தமிழ்நாட்டை ஆளுவீர்கள் ? பொருமை, பொறுப்பு, நிதானம், சொல்லாலுமை, கருத்தாளுமை, சபையாளுமை என்று எதுவுமே இல்லாத உங்களுக்காகவா நாங்கள் விரலில் மை வைத்துக் கொள்வோம். அப்படி நாங்கள் வைத்துக் கொண்டால் அது எங்கள் முகத்தில் நாங்கள் பூசிக் கொள்ளும் கரி மை அல்லவா ?
கேப்டன் அவர்களே, தங்களின் இந்த போக்கு, தங்களுக்கு இருக்கு 10 சதவிகித வாக்கு வங்கியை 1 சதவிகிதமாக மாற்றிவிடும், மக்கள் தங்களை மனப்பூர்வமாக வெறுக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் மீண்டு எழ பல ஆண்டு பிடிக்கும், அதற்குள் தங்கள் முதலமைச்சர் கனவு மற்ற சிறு கட்சிகளை போல நளித்துவிடும்..
அதிமுகவுக்கு, திமுகவுக்கு மாற்று நீங்கள் என்று மக்கள் நம்புவதை பொய்யாக்கி அவர்களின் முகத்தில் கரி பூசிவிடாதீர்கள், உங்களின் வண்ண வண்ண கனவுகளையும் தங்களின் அகந்தையால் கரியாக்கி கொள்ளாதீர்கள்..
முடிந்தால் தேர்தல் பிரச்சாரத்துக்கு குடித்துவிட்டு செல்லாதீர்கள், சென்றாலும் என்ன பேச வேண்டுமோ அதை எழுதிவைத்து வாசித்துவிட்டு போங்கள்..
பேசுவதற்கு முன் ஒருமுறை சிந்தித்து பேசுங்கள்..
புரட்சி தலைவர் சொல்லுவார், பேசாத வார்ததைக்கு நீ எஜமான், பேசிய வார்த்தை உனக்கு எஜமான், கவனத்தில் கொள்ளுங்கள்...
இப்படிக்கு ஒரு தமிழகத்தின் குடிமகன்...
இரு திராவிடக் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் கைநீட்டி குற்றஞ் சொல்லியவாறு, முதுகு வழியாக தமிழக மக்களின் முகத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் தருணத்தில், நீங்கள் தமிழகத்தின் மூன்றாவது மிக பெரிய சக்தியாக உருவெடுத்து கட்சி துவங்கினீர்கள்.
மக்கள் பணத்தை சுருட்டிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் சொந்த பணத்தை போட்டு கட்சி துவங்கி, 2006-ஆம் ஆண்டு மக்களோடும் கடவுளோடும் மட்டுமே கூட்டணி எனும் புது மந்திரத்தோடு தேர்தலையும் தனியாக சந்தித்தீர்கள்..
உங்கள் வாக்கின் மீதும், வருகையின் மீதும் நம்பிக்கை கொண்ட எங்கள் ஜனங்கள், உங்கள் கட்சிக்கு கணிசமான வாக்களித்ததோடு மட்டுமன்றி, உங்களை விருத்தாச்சலத் தொகுதியில் ஜெய்கவும் வைத்தார்கள்..
ஆளும் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தலைவர்களும் பிஜேபி தலைவர்களும் கூட உங்களுக்கு கிடைத்த ஓட்டுக்களை பற்றியும் உங்களின் வெற்றி பற்றியும் நன்முறையிலேயே கருத்து தெரிவித்தார்கள்.தங்களுக்கு வாழ்த்துச் சொன்னதோடு, நீங்கள் எல்லா தொகுதிகளிலும் போட்டி இட்டதற்கு பதிலாக, 20-30 தொகுதிகளை தேர்ந்தெடுத்து அதில் மட்டும் போட்டியிட்டிருந்தால் இன்னும் அதிகமாய் ஜெய்திருக்கலாம் நீங்கள் என்று தங்களுக்கு பக்குவமான ஆலோசனைகளை சொன்னார்கள்..
அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த போது தங்கள் கட்சிக்கு இரண்டாம் இடம் கிடைத்தது, அதிமுக போட்டியிட்ட இடைத்தேர்தலில் மூன்றாம் இடம் கிடைத்தது, 10 சதவிகிதம் வரை வாக்கு வங்கி உயர்வும் தங்கள் கட்சிக்கு கிடைத்திருப்பதை பார்த்து, உங்களால் தங்கள் வாக்கு வங்கி பாதிக்கப்படுகிறது என்பது உணர்ந்து கோபமுற்ற அம்மையார் அவர்கள், தாங்கள் சட்டப்பேரவைக்கு குடித்து விட்டு வருவதாக குற்றஞ்சொன்னார்கள்...
அதற்கு நீங்களும் அநாகரீகமான பதிலும் அளித்தீர்கள், அப்போது கூட நாங்கள் அம்மையார் மீதுதான் கோபமுற்றோம், தேவையில்லாமல் உங்களை சீண்டி உங்களிடம் வாங்கி கட்டி கொள்கிறாரே என்று அம்மாவுக்காக பரிதாபப்பட்டோம்...
ஆளும் கூட்டணியை நீங்கள் பாரபட்சமின்றி விமர்சித்து வந்த போது, அவர்கள் செய்யும் தவறுகளை பகிரங்கமாக எதிர்த்து அறிக்கைகள் கொடுத்து வந்த போது தங்களின் துணிச்சல் கண்டு வியந்தோம், ஒரு நாள் தமிழகத்தை நீங்கள் ஆளப்ப்போவது உறுதி என்று உளமார சொன்னோம்...
ஆனால் கேப்டன் அவர்களே, சேலம் மாநாட்டுக்கு பிறகு உங்களின் போக்கில், பேச்சில், செயல்களில் செருக்கும், அகந்தையும், ஆணவமும், திமிரும் ஆக்ரமித்திருப்பதை கண்கூடாக காணமுடிகிறது..
சேலம் மாநாட்டிலேயே நீங்கள், தண்ணீரில் நீந்திக் கொண்டு பேசினீர்கள் என்பதை உங்கள் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது, ஆனாலும் அதை ஒரு குறையாக நாங்கள் கருதவில்லை..
அதிமுக கூட்டணியில் உண்டான சலசலப்பில், உங்கள் தலைமையின் கீழ் மூன்றாம் அணி உருவாக வாய்ப்பிருக்கிறது என்றொரு சூழல் உண்டான போது, நீங்கள் தலைமை ஏற்க வேண்டும், இரு திராவிட கட்சிகள் கண்களிலும் விரலைவிட்டு துளாவ வேண்டும் என்று ஒருமித்த ஆசை கொண்டோம், ஆனால் அது நிகழவில்லை..
ஆனாலும் அதற்காக நாங்கள் உங்கள் மீது அதிருப்தி அடையவில்லை, உங்கள் பயத்தை கண்டு உங்கள் மீது நம்பிக்கை இழக்கவில்லை, உங்களின் முடிவுக்கு பின்னால் ஒரு நியாயமான காரணமிருக்கும் என்று நம்பினோம்...
ஆனால் உங்கள் மீதான எங்கள் நம்பிக்கைகளை மட்டுமல்ல மதிப்பையும் நீங்கள் குறைத்துக் கொண்டே சென்று கொண்டிருக்குறீர்கள்..
கருணாநிதி தங்களை தன் நண்பர் என்று சொல்லி இருக்கிறாரே என்று பத்திரையாளர்கள் கேட்ட போது, சோ.ராமசாமி அவர்கள், அவர் அதை எந்த அர்த்தத்தில் சொன்னார் என்று தெரியவில்லை, ஆனால் அவர் என்னை நண்பர் என்று சொல்லி இருந்தால் அதனை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதோடு, 13 ஆண்டுகளாக ஆட்சியிலேயே இல்லாத ஒரு கட்சியை உடையாமல் கட்டுக்கோப்பாக பாதுகாத்து, எம்.ஜி.ஆருக்கு பின்னர் தேர்தலை சந்திந்து செய்து மீண்டும் முதலமைச்சராக அமர்வது என்பது சாதார்ண விடயமல்ல, உண்மையிலேயே அதன் பின்னால் இருக்கும் அவரின் உழைப்பு மிக அதிகமானது, குறைந்த கல்வி தகுதியே கொண்டிருந்தாலும், பிழையில்லாமல் ஆங்கிலமும் பேச இயல்கிறது அவரால். அனைத்திருக்கும் அவரின் உழைப்பே காரணம் என்று நாகரிகமாக பதில் சொன்னார் சோ.
சோ அவர்களின் இந்த செயலுக்கு பெயர் தானே சபை நாகரீகம் கேப்டன் அவர்களே, ஆனால் நீன்களோ கருணாநிதிக்கு ஒரு பைல் கூட பார்க்க தெரியாது என்று ஒரு நேரடி பதில் சொல்லும் நிகழ்ச்சியில் 5 முறை முதல்வராக இருந்வரை பற்றி கண்மூடித்தனமாக விமர்சனம் சொன்ன உங்களின் பேச்சு மீது முகசுழிப்பு உண்டாகாமல் இல்லை. நீங்கள் இது போல் அம்மையாரை குறித்து விமர்சித்தாலும் அது எங்கள் முகத்தை சுழிக்கவே வைக்கும். அம்மையார் அவர்களும் தமிழகத்தை இருமுறை ஆண்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமா, சமீபகாலமாய் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நிச்சயமாய் தெளிவு இல்லை..
கட்சி எம்.எல்.ஏவை எம்.ஜி.ஆர் கூட அடித்திருப்பதாக சொல்லுவார்கள், ஆனால் அவை சொல்லப்படுபவைகளே அன்றி நேரடியாக பொதுமக்கள் நடுவில் நிகழ்ந்தவை அல்ல..
ஒரு வேளை அப்படி ஒரு நிகழ்வு நிகழவே இல்லை, நான் அடிக்கவே இல்லை என்று நீங்கள் சொல்லியிருந்தால் கூட, அது தவறு இல்லை. ஆனால் என் வேட்பாளரை தானே நான் அடித்தேன், என் கிட்ட அடிவாங்கினவன் மகாராஜன் ஆவன் என்று சொல்வதில் என்ன பண்பு இருக்கிறது கேப்டன் அவர்களே.
உங்கள் கட்சியின் முதல் மாநாட்டின் போது, தங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வ*ந்த முதியவரை கன்னத்தில் அறைந்தது எவ்வளவு பெரிய அநாகரீகம் கேப்டன் அவர்களே, நீங்கள் கட்சியை ஆரம்பித்திருப்பது எங்களை போன்ற மக்களை நம்பித்தான், நாங்கள் உங்களை வெறுத்துவிட்டால், உங்களை நிராகரித்துவிட்டால், உங்களின் நிலையென்ன என்று யோசித்துப்பாருங்கள்.
உங்களின் படத்தை பணம் கொடுத்து பார்த்தோம் என்பதற்காகவா ? அல்லது உங்களை நடிகராக ஏற்றுக் கொண்டோம் என்பதற்காகவா ? அல்லது நீங்கள் படித்தில் பேசியதை எல்லாம் கேட்டு விசிலடித்து கைத்தட்டினோம் என்பதற்காகவா ? எங்களை அறைகுறீர்கள். நாங்கள் உங்களின் அடிமைகளில்லை கேப்டன் அவர்களே.
என் மக்களை நான் கைவிடமாட்டேன், என் மக்களுக்கு நானிருக்கேன், என்றெல்லாம் பேசி கைத்தட்டு வாங்கினீர்களே, இப்படி எங்களின் முகத்தில் அறைவதுதான் நீங்கள் எங்களை கைவிட மாட்டேன் என்று சொன்னதின் பொருளா ?
"நான் பேசும் போது எவனும் பேச கூடாது"
"கொங்கு வேளாளர் என்ன நுங்கு திங்கிறவங்களா"
"கீழ எறங்குடா"
"யோவ் போலிசு, அவனை பிடிச்சு என்கிட்ட ஒப்படைங்க"
"புரட்சி தலைவி அம்மா, ஓ ஓ னுட்டு இருக்க"
"அந்த கொடிய கிழ போடுடா"
"அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் சிறையில் இருக்கார், அதனால் அதிமுகவின் கொள்கையும் சிறையில் இருக்கு, ராஜா சிறையில் இருக்கார்" (கேப்டன் அவர்களே, ராஜா திமுகவின் கொள்கை பரப்பு செயலாளார்)
"நான் என் கட்சிக்குத்தான் ஓட்டு கேக்க வந்திருக்கேன், அதிமுகவுக்கு இல்ல"
இன்னும் இன்னும் உங்களின் பிரச்சாரங்களின் நீங்கள் பேசும் பேச்சுக்கள், உங்களை நம்பி எங்களின் மனதை உலைச்சலுக்குத்தான் உள்ளாக்குகின்றன..
ஒரு பொது கூட்டம் என்றால் சலசலப்புக்கள், கோசங்கள், சத்தங்கள் எல்லாம் இருக்கத்தான் செய்யும், அதை எல்லாம் அமைதியாக்கி, மக்களை நாம் பேசுவை கேட்க செய்வதுதான் ஒரு தலைவன் திறமை, வைகோ, கலைஞர், அண்ணா, நாஞ்சில் சம்பத், நாவலர், புரட்சி தலைவர் எல்லோரிடமும் அது இருந்தது, இருக்கிறது.
"ஸூ பேச கூடாது"
"என்ன பேச விடு இல்ல நீ வந்து பேசு"
"பேசிக்கிட்டிருக்கேன்ல்ல"
இப்படி எங்களை மிரட்ட, நீங்கள் ஒன்றும் எங்களின் வாதியாரில்லையே கேப்டன் அவர்களே. நாங்கள் கீழே நின்று தங்களை அண்ணாந்து பார்ப்பதால் தான் உங்களால் மேலே நின்று பேச முடிகிறது. நீங்கள் மேலே நின்று பேசுவதற்கு பின்புலமாகவும், பக்கபலமாகவும் இருப்பதே இந்த கூட்டம் தான் கேப்டன் அவர்களே, அதை மறந்து, எங்களை அவமான செய்யாதீர்கள்.
அவங்களுக்கு ஆப்படிக்க ஆஃப் அடிக்கனும் என்று ஒரு பொது கூட்டத்தில் எப்படி உங்களால் கூச்சமில்லாமல் பேச முடிகிறது என்று வியப்பாக இருக்கிறது..
ஒரு கூட்டத்தையே உங்களுக்கு ஆள தெரியவில்லையே, நீங்கள் எப்படி தமிழ்நாட்டை ஆளுவீர்கள் ? பொருமை, பொறுப்பு, நிதானம், சொல்லாலுமை, கருத்தாளுமை, சபையாளுமை என்று எதுவுமே இல்லாத உங்களுக்காகவா நாங்கள் விரலில் மை வைத்துக் கொள்வோம். அப்படி நாங்கள் வைத்துக் கொண்டால் அது எங்கள் முகத்தில் நாங்கள் பூசிக் கொள்ளும் கரி மை அல்லவா ?
கேப்டன் அவர்களே, தங்களின் இந்த போக்கு, தங்களுக்கு இருக்கு 10 சதவிகித வாக்கு வங்கியை 1 சதவிகிதமாக மாற்றிவிடும், மக்கள் தங்களை மனப்பூர்வமாக வெறுக்க ஆரம்பித்துவிட்டால், நீங்கள் மீண்டு எழ பல ஆண்டு பிடிக்கும், அதற்குள் தங்கள் முதலமைச்சர் கனவு மற்ற சிறு கட்சிகளை போல நளித்துவிடும்..
அதிமுகவுக்கு, திமுகவுக்கு மாற்று நீங்கள் என்று மக்கள் நம்புவதை பொய்யாக்கி அவர்களின் முகத்தில் கரி பூசிவிடாதீர்கள், உங்களின் வண்ண வண்ண கனவுகளையும் தங்களின் அகந்தையால் கரியாக்கி கொள்ளாதீர்கள்..
முடிந்தால் தேர்தல் பிரச்சாரத்துக்கு குடித்துவிட்டு செல்லாதீர்கள், சென்றாலும் என்ன பேச வேண்டுமோ அதை எழுதிவைத்து வாசித்துவிட்டு போங்கள்..
பேசுவதற்கு முன் ஒருமுறை சிந்தித்து பேசுங்கள்..
புரட்சி தலைவர் சொல்லுவார், பேசாத வார்ததைக்கு நீ எஜமான், பேசிய வார்த்தை உனக்கு எஜமான், கவனத்தில் கொள்ளுங்கள்...
இப்படிக்கு ஒரு தமிழகத்தின் குடிமகன்...
Last edited: