கற்பனையல்ல... நிஜம்...
அக்னி அலைபேசியில் சிவா.ஜி யோடு...
அக்னி: freeயா நிக்கிறீங்களா... இல்லே வேலையா...
சிவா.ஜி: இதுவரைக்கும் freeயாத்தான் நின்னேன். இப்போ லஞ்ச் பிரேக்.
அக்னி: சாப்பிட ரெடியாயிட்டீங்களா...
சிவா.ஜி: வேனில காம்புக்குக் கூட்டிட்டுப் போய்விடுவாங்க. அப்புறம்தான்...
அக்னி: ராஜஸ்தான் ஸ்பெஷல்???
சிவா.ஜி: நம்மூருதுதான். ஏதாச்சும் ரசம், சாதம் எல்லாம் கிடைக்கும்.
அக்னி: எனக்கு ரசத்தில வரைட்டீஸ் தெரியாதுங்க...
சிவா.ஜி: அப்பிடியா... இந்தியா வாங்க. வச்சுத்தாறேன்.
அக்னி: நம்ம ஜானகி அம்மா ரசம் மாதிரியா...
சிவா.ஜி: அதெல்லாம் ஜூஜுபி... நாம பச்சிலர்ஸ்ஸா இருக்கேக்க, ரசம், சாம்பார் இரண்டையும் ஒண்ணாவே வைப்பமில்ல...
அக்னி: எப்பூடி...
சிவா.ஜி: அதுவா... சாம்பார கொஞ்சம் அதிகமா தண்ணியூத்தி வச்சு...
அக்னி: ம்ம்ம்...
சிவா.ஜி: எல்லாம் அவிஞ்சதுக்கப்புறமா, அடையவிட்டு...
அக்னி:
சிவா.ஜி: மேல இருக்கிறத அள்ளியெடுத்தா ரசம், கீழே இருக்கிறத கலக்கி எடுத்தா சாம்பார்... எப்பூடீ...
அக்னி: அலோ... அலோ... ட்டீட்... ட்டீட்... ட்டீட்...