நல்ல ரசம் வைக்க கற்றுக் கொடுங்களேன்... ப்ளீஸ்...

சரி சரி அடிச்சிக்காதீங்க. எல்லோருக்கும் சம(மா)ரசம் தருகிறேன்.
 
முதல்ல தக்ஸ்சுக்கு ஒரு டெலிபோன் அடிச்சுப்பாருங்க...

என்னானாரோ...
என்ன செய்றாரோ...
ஆராரோ... ச்ச்சே ஒரு ப்ஃளோவில வந்துட்டு...
 
ஒரு மனுஷன் கொஞ்சம் அசந்து போயி இந்த பக்கம் வரலன்னா...

அதுக்குள்ள என்னை ஆஸ்பிட்டலில் அனுமதிச்சிட்டீங்களா..... மச்சி முரா உனக்கு இருக்குது....... அப்புறம் வந்து உன்ன ஊட்டான்ட பாக்குறேன் இரு.... மூஞ்ச கொயப்பி கையில குடுக்கிறேன்.....:sauer028::sauer028::sauer028:

கிரிக்கெட் மாற்றம், அரசியில் மாற்றங்கள் என்று கொஞ்சம் பிசியாகி விட்டேன்.

உலக கோப்பை போட்டியில், பாகிஸ்தானை வென்று இந்திய அணியினர் சொன்னார்களே.......

"வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா....." என்று

அந்த கொண்டாட்டத்தில் தான் ஜானகியம்மா சொன்ன ரசத்தை வைத்தேன்... இரவு 11 மணி.... நெய் ஊற்றி செய்யப்பட்ட வித்தியாசமான ரசம் அது... அவர்கள் சொன்ன செய்முறையில் தான் செய்தேன்....

சுட சுட பச்சரிசி சாதம், ஜானகியம்மாவின் ரசம், சைடு டிஷ்ஷாக அப்பளமும், துவரம் பருப்பு கொத்தமல்லி துவயல்.....

இவை அனைத்தையும் எதிரில் வைத்துக் கொண்டு, இரண்டு உள்ளங்கை அளவுள்ள தட்டில் ஆவி பறக்கும் சாதத்தை போட்டுக் கொண்டு, வெதவெத ப்பான ரசத்தை உள்ளங்கையில் குழி போல செய்துக் கொண்டு அதில் ஊற்றி, பயபக்தியோடு அதை உரிவதற்கு முன்பு, ரசத்தின் அருமையான மணம் மூக்கின் வழியாக மூளைக்கு சென்று, வயிற்றுக்கு வந்து என்னுடைய பசியை தூண்டும் அமிலங்களை சுரக்க வைத்தது. .........உருஞ்சினேன்.....

நல்ல அருமையான சுவை... அருமையான பசி....

நன்கு பழுத்த பப்பாளி பழத்தைப் போல வெந்திருந்த பச்சரிசி சாதத்தில், சதாபிஷேகம் செய்யும் தம்பதிகளின் தலையில் தண்ணீரை ஊற்றுவது போல ஜானகியம்மாவின் ரசத்தை ஊற்றி பிசைந்து, அப்பளத்தை கொஞ்சம் உடைத்து அத்துடன், விரல் இடுக்கில் ரசம் வழிய, ஒரு கை உருண்டையை சாதத்தை எடுத்து வாயில் போட்டு, பாதி விழுங்கி.... மீதி இருக்கும் நாக்கு கேப்பில்,.... கல்யாண சீமந்தத்தில் பெண்ணின் கன்னத்தில் தடவப்படும் சந்தனம் போல, கொஞ்சம் துவயலை எடுத்து தடவினேன்...... அடிநாக்கு வரை சுவைத்து அந்த ரசம்....

சொர்க்கம் வேறு எதுவும் இல்லை, இவ்வாறான சுவையான உணவுகளை மீறி.....

நன்றி ஜானகியம்மா.....

அடுத்து சகோதரிகள் கொடுத்த செய்முறைகளை பயன்படுத்தி பார்க்க வேண்டும்.... கீதம் அக்கா, லீலூமா, பூமகள்.

இதில் லீலூமா சொன்ன செய்முறை என்னை பயம் கொள்ள வைக்கிறது....... இருப்பதிலே செய்வதற்கு சுலபமானது ரசம் என்று சொல்லுவார்கள்..... ஆனால் இவளோ, கறிகுழம்பிற்கு வைக்கும் செய்முறைகளை விட அதிகமான செய்முறைகளில் ரசம் வைக்க சொல்லுகிறாள்...

அடுப்புல வைக்கனுமாம், இறக்கணுமாம், கொதிக்கணுமாம், தாளிக்கணுமாம்....... சாப்பிட்டு மயக்கம் போட்டு விழணுமாம், காரியத்துக்கு வரணுமாம், சொத்தை அவள் மேல் எழுதி வைக்கணுமாம்....... எத்தன..... ஹா ஹா செஞ்சி தான் பாப்போம்....

காரணம் அவள் நல்ல ருசியுடன் சாப்பிடக்கூடியவள் என்று எனக்கு தெரியும், அதுவும் ருசியா, நேற்று மதியம் போன் செய்து பேசினேன்...

"எப்படிடா இருக்க, என்ன அதிசயமா போனு"

"சும்மா தான், நீ எப்படி இருக்க"

"ம்ம் இருக்கேன்"

"ஏன் ஒரு மாதிரி பேசற உடம்பு சரியில்லையா"

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல, ஒரு மாதிரி இருக்கு உடம்பு, பேசினா வாய் வலிக்குது"

"ஏன் சாப்பிடலையா"

"சாப்பிட்டேனே"

"என்ன சாப்பிட்ட" தெரியாமல் கேட்டு விட்டேன், அடுத்து ஐந்து நிமிடம் விளக்கத்தோடு என்ன சாப்பிடாள் என்பதை சொன்னாள்.

"சாதம், சாம்பார், ரசம்,............. கொள்ளு ரசம்"

"கொள்ளு ரசமா இந்த குதிரை சாப்பிடுமே அதுவா"

"அது மனுஷங்க சாப்பிடறது தான், குதிரைக்கு குடுத்து அதை கெடுத்துட்டாங்க"

"சரி சொல்லு"

"கொள்ளு ரசம், தயிர், பீட்ரூட் பொறியல், .....ம்ம் அப்புறம் பால்கோவா"

"இந்த மாதிரி தின்னா வாயி வலிக்காம என்ன செய்யும்"

"போடா நான் எப்பவும் இப்படி தான் சாப்பிடுவேன்"

புருஷன் சொத்தையெல்லாம் தின்னே அழிச்சுடுவா போல... ஹா ஹா இந்த பதிவை பார்த்து என்னை அவ கொல்ல போறா,...எத்தனை பேருக்கு இப்படி சாப்பிட கொடுத்து வைத்திருக்கும்,..... கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கை தான்..... (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.... பயபுள்ள பொய் சொல்ட்டான் போல இருக்கு :lachen001::lachen001::lachen001:)
 
என்னது ரசம் நல்லா இருந்துதா?:aetsch013: நீ சொன்ன பதில் ஜானகி மேடத்துக்கே ஆச்சரியமா இருக்கும்:lachen001:.இரவு 11 மணிக்கு ரசம் செய்ததால தூக்க கலக்கத்துல அவங்க சொன்ன பக்குவத்துல செய்யாம மாத்தி செய்திருக்க.
தப்பி பிழைத்த தக்ஸ்க்கு என் வாழ்த்துக்கள்:D
 
நன்கு பழுத்த பப்பாளி பழத்தைப் போல வெந்திருந்த பச்சரிசி சாதத்தில், சதாபிஷேகம் செய்யும் தம்பதிகளின் தலையில் தண்ணீரை ஊற்றுவது போல ஜானகியம்மாவின் ரசத்தை ஊற்றி பிசைந்து, அப்பளத்தை கொஞ்சம் உடைத்து அத்துடன், விரல் இடுக்கில் ரசம் வழிய, ஒரு கை உருண்டையை சாதத்தை எடுத்து வாயில் போட்டு, பாதி விழுங்கி.... மீதி இருக்கும் நாக்கு கேப்பில்,.... கல்யாண சீமந்தத்தில் பெண்ணின் கன்னத்தில் தடவப்படும் சந்தனம் போல, கொஞ்சம் துவயலை எடுத்து தடவினேன்...... அடிநாக்கு வரை சுவைத்து அந்த ரசம்....

இதிலிருந்தே தெரியலையா?
கண்ணு சிவந்திருந்ததால் சாப்பாடு சிவப்பா தெரிஞ்சது.
கண்ணு சிவக்கக் காரணம் என்னவா இருக்கும் மு.ரா?
 
இதிலிருந்தே தெரியலையா?
கண்ணு சிவந்திருந்ததால் சாப்பாடு சிவப்பா தெரிஞ்சது.
கண்ணு சிவக்கக் காரணம் என்னவா இருக்கும் மு.ரா?

வேறேன்ன இதான் :food-smiley-012:
ஆனா அது பொதுவா குடியை கெடுக்கும்னு சொல்லுவாங்க
ஆனா இவர காப்பாத்தில இருக்கு:D
 
ர.ராஜன் அவர்களே, தங்கள் பதிவால் என் எதிர்காலம் பிழைத்தது...! நன்றி.

ரசம் செய்ததைவிட, அதனை அனுபவித்துச் சாப்பிட்ட அழகு இருக்கிறதே.....இப்படி ருசியாகச் செய்ய முடியாதவர்கள் பொறாமையால், ஏதேதோ பிதற்றுகிறார்கள்...போகட்டும்....

ஆமாம்...அது என்ன, துவரம்பருப்பு, கொத்தமல்லித் துகையல்...புதிதாக இருக்கிறதே ?


மு.ராவுக்கு என்றே ஸ்பெஷலாக, கொட்டு ரசம் அனுப்ப இருக்கிறேன்....!
 
Last edited:
ர.ரா அவர்களே, தங்கள் பதிவால் என் எதிர்காலம் பிழைத்தது...! நன்றி.

ரசம் செய்ததைவிட, அதனை அனுபவித்துச் சாப்பிட்ட அழகு இருக்கிறதே.....இப்படி ருசியாகச் செய்ய முடியாதவர்கள் பொறாமையால், ஏதேதோ பிதற்றுகிறார்கள்...போகட்டும்....

மு.ராவுக்கு என்றே ஸ்பெஷலாக, கொட்டு ரசம் அனுப்ப இருக்கிறேன்....!

கொட்டு ரசம்னா?
உப்பு மிளகாய் புளி
எல்லாத்தையும் கொட்டி
ரசம் வச்சு
கொண்டுபோய்
சாக்கடையில் கொட்டுவாங்களே
அந்த ரசமா?

அதை முராவே நல்லா செய்வார். உங்களுக்கு அனுபவம் பத்தாது! :D:D:D
 
நேரமில்லாதவர்களுக்கு [சோம்பேறிகளுக்கு] கொட்டு ரசம் இதோ...

2 டம்ளர் ரசத்திற்குத் தேவையானவை :

புளி...சிறிய எலுமிச்சம்பழ அளவு

ரசப்பொடி1/2 டீஸ்பூன்

உப்பு...3/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் வற்றல்...2 அல்லது 3

கறிவெப்பிலை, பெருங்காயம், தாளிக்க நெய், கடுகு, துவரம்பருப்பு..1/2 டீஸ்பூன்

ரசச் சொம்பில், 2 டம்ளர் ஜலம் விட்டு, புளியையும் அதில் உருட்டிப் போட்டு, உப்பு, ரசப் பொடி சேர்த்துக் கொதிக்க விடவும்.

பாதியாகச் சுண்டியபின், சிறிது நெய்யில், கடுகு, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, ரசத்தில் போட்டு, மேலும் 1 டமளர் ஜலம் விட்டு, நுரைத்துக்கொண்டு வரும்போது இறக்கிவிடவும்.

சிறிது வெல்லம் சேர்த்தால் ருசி கூடும். வாசனை ருசி பிடித்தவர்கள், தாளிக்கும்போது, கொஞ்சம் வேப்பம்பூவையும் தாளித்துச் சேர்க்கலாம்.

சுட்ட அப்பளத்துடன் ஜோராக இருக்கும். சாப்பிடும்போது, புளியை எடுத்துவிடவும்.
 
இதிலிருந்தே தெரியலையா?
கண்ணு சிவந்திருந்ததால் சாப்பாடு சிவப்பா தெரிஞ்சது.
கண்ணு சிவக்கக் காரணம் என்னவா இருக்கும் மு.ரா?

பெருமாளே இந்த அறியாதவர்களை மன்னிப்பாராக.....
 
ர.ராஜன் அவர்களே, தங்கள் பதிவால் என் எதிர்காலம் பிழைத்தது...! நன்றி.

ரசம் செய்ததைவிட, அதனை அனுபவித்துச் சாப்பிட்ட அழகு இருக்கிறதே.....இப்படி ருசியாகச் செய்ய முடியாதவர்கள் பொறாமையால், ஏதேதோ பிதற்றுகிறார்கள்...போகட்டும்....

ஆமாம்...அது என்ன, துவரம்பருப்பு, கொத்தமல்லித் துகையல்...புதிதாக இருக்கிறதே ?


மு.ராவுக்கு என்றே ஸ்பெஷலாக, கொட்டு ரசம் அனுப்ப இருக்கிறேன்....!

ஏற்கனவே சொல்லி இருக்கிறேன்..... ஜானகியம்மா.... இந்த அவர்களே இவர்களே..... அப்படினு கூப்பிடாதீங்கன்னு...... இன்னோரு முறை கூப்பிட்டால்...... கலைஞரின் பொன்னர் சங்கர் படத்திற்கு டிக்கெட் அடுத்து கொடுத்து உங்களை பார்க்க சொல்வேன்........ ஜா....ஜாக்கிரதை........:lachen001::lachen001::lachen001:

துகையல்,.... இது நானே தயாரிச்சது,... கொஞ்சம் பருப்பு மீந்து போச்சு, புளி, தேங்காய், கடலப்பருப்பு, துவரம் பருப்பு, இரண்டு சிகப்பு மிளகாய், பூண்டு, இவையெல்லாம் போட்டு வதக்கி, கொத்தமல்லி போட்டு அரைத்து..... தாளிக்காமல் சாப்பிட்டால்..... சூப்பரா இருக்கும்.....

இதுக்குனு செய்முறையெல்லாம் இல்லை,,,,,,,, மனதிற்கும் கையிற்கும் கண்ணிற்கும் நாக்கிற்கும் தெரிந்ததை போட வேண்டியது தானே சமையல்.... ஆனால் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு முன்பு நாம் சாப்பிட்டு விடுவது உத்தமம்....
 
ர.

ஆமாம்...அது என்ன, துவரம்பருப்பு, கொத்தமல்லித் துகையல்...புதிதாக இருக்கிறதே ?

கூட்டு என்பது இனிமையானது எனத் தெரியும். அதில் தொக்கு சுவையா அல்லது தொகை(துவையல்) சுவையா எனத் தெரியலையே?
(கருத்தூண்டிய பேராசிரியர் நன்னனுக்கு நன்றி)

தொக்கு என்பது ஊறுகாய் வகை (தக்காளித் தொக்கு, மாங்காய்த் தொக்கு). தொக்கில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால் இரண்டு மூன்று நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.

துவையல் என்பது சட்னி வகை (தேங்காய்த் துவையல்). சட்டென்று செய்ய முடிவதால் சட்னி. துவையல் அரைப்பார்கள்.

சமையலானந்தாவுக்குச் சவாலா?

அவரை(க்), கடலை(பருப்பு) போட்டு செய்யும் கூட்டில், தொக்கி நிற்கும் காரமும் மணமும் எவ்வளவு தொகை என்றாலும் தரலாமே! :lachen001:


சாப்பிடாம அப்படியே வச்சிருந்தா புதுசாத்தான் இருக்கும் அம்மா!!!
 
பாதியாகச் சுண்டியபின், சிறிது நெய்யில், கடுகு, மிளகாய் வற்றல், துவரம்பருப்பு கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, ரசத்தில் போட்டு, மேலும் 1 டமளர் ஜலம் விட்டு, நுரைத்துக்கொண்டு வரும்போது இறக்கிவிடவும்.
.

எல்லாம் சரி.. அந்த நுரைத்துக் கொண்டு வரும்பொழுது என்ற வாசகங்களைப் படிக்கறப்ப எல்லாம் வாயில் நுரை வர்ர மாதிரியே ஒரு ஃபீலிங்கு... :rolleyes::rolleyes::rolleyes:
 
சரி, உங்களுக்காக, நுரைக்காத, கண்டதிப்பிலி ரசம் அனுப்புகிறேன்.

உடம்பு வலியெல்லாம் பறந்து போகும் ! பித்தமும் தெளியும்....?
 
Last edited:
சரி, உங்களுக்காக, நுரைக்காத, கண்டதிப்பிலி ரசம் அனுப்புகிறேன்.

உடம்பு வலியெல்லாம் பறந்து போகும் !

உடம்பு வலி??? :confused::confused::confused:

அடிச்ச பின்னாடியா? :sport-smiley-002::sport-smiley-002::sport-smiley-002:

ஆஹா வந்ததுடா ஆபத்து!!!:Nixe_nixe02b::Nixe_nixe02b::Nixe_nixe02b:

எஸ்கேப்!!!:auto003:
 
இதில் லீலூமா சொன்ன செய்முறை என்னை பயம் கொள்ள வைக்கிறது....... இருப்பதிலே செய்வதற்கு சுலபமானது ரசம் என்று சொல்லுவார்கள்..... ஆனால் இவளோ, கறிகுழம்பிற்கு வைக்கும் செய்முறைகளை விட அதிகமான செய்முறைகளில் ரசம் வைக்க சொல்லுகிறாள்...

அடுப்புல வைக்கனுமாம், இறக்கணுமாம், கொதிக்கணுமாம், தாளிக்கணுமாம்....... சாப்பிட்டு மயக்கம் போட்டு விழணுமாம், காரியத்துக்கு வரணுமாம், சொத்தை அவள் மேல் எழுதி வைக்கணுமாம்....... எத்தன..... ஹா ஹா செஞ்சி தான் பாப்போம்....



புருஷன் சொத்தையெல்லாம் தின்னே அழிச்சுடுவா போல... ஹா ஹா இந்த பதிவை பார்த்து என்னை அவ கொல்ல போறா,...எத்தனை பேருக்கு இப்படி சாப்பிட கொடுத்து வைத்திருக்கும்,..... கிராமத்து வாழ்க்கையே வாழ்க்கை தான்..... (எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.... பயபுள்ள பொய் சொல்ட்டான் போல இருக்கு :lachen001::lachen001::lachen001:)

உனக்கெல்லாம் நல்ல ரசம் வைக்க கத்துக்கொடுத்தா நிறைய சாப்பிட்டு அதை ஜீரணம் செய்ய ரசம் குடிச்சிட்டு திரும்பவும் சாப்பிடுவே... அதனால தக்ஸ்-க்கு யாரும் (முக்கியமாக ஜானகி அவர்கள்) ரசம் வைக்க கத்துக்கொடுக்க வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் சாப்பிட்டதையெல்லாம் லிஸ்ட் போட்டு மன்றத்தில் சொல்லி கண்ணு பட வச்சிட்டே.. இன்னிக்கு போய் சுத்திப் போடனும்ப்பா....:D

என் வீட்டுக்கு வா ரசத்துக்கு பதில் விஷம் வைக்கிறேன்...:aetsch013::D
 
என் வீட்டுக்கு வா ரசத்துக்கு பதில் விஷம் வைக்கிறேன்...:aetsch013::D

விஷம் வைக்காதீங்க... விஷம் வைக்காதீங்க...
தக்ஸுக்கு விஷம் வைக்காதீங்க...
வைச்சாலும் பிரயோசனம் இல்லை...
தக்ஸுக்கு விஷமெல்லாம் மேட்டரே இல்ல...

தக்ஸ கவுக்கிறதின்னா, பேசாம உங்க ரசத்தையே வச்சுடுங்க... :rolleyes:
 
Back
Top