ரங்கராஜன்
New member
வணக்கம் உறவுகளே...
சமையலில் எனக்கு எப்போதும் ஒருவிதமான ஈர்ப்பு உண்டு, செடிகள் எல்லாம் துளிர் விட ஆரம்பித்த போதே, போட்டோசின்தஸிஸ் என்ற முறைபடி தன்னை அறியாமல் பசி ஆற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. அதே போல தான் நானும் என் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் இருந்தே சமைக்க ஆரம்பித்து விட்டேன்......... ஆனால் யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை, புத்தகத்தை படித்து தெரிந்துக் கொள்ளவில்லை,, எனக்கு பிடித்த பொருட்களைப் போட்டு சமைக்க ஆரம்பித்தேன், பிடித்து விட்டது. 13 வயதில் சமைக்க ஆரம்பித்தேன்.............. இப்போது 27........ ஆகிவிட்டது....... 14 வருடங்கள்.........
இப்போது எதற்கு இந்த முக் கதை சுருக்கம் என்கிறீர்களா.....
இந்த 14 வருடத்தில் எனக்கு வராத ஒரே பதார்த்தம் ரசம் மட்டும் தான்.....சிக்கன், மட்டன், மீன், நண்டு, கீரை, வாழைத்தண்டு, பீட்ரூட், இப்படி எல்லா விஷயத்தையும் பின்னி பெடல் எடுக்கும் எனக்கும் ரசத்திற்கும் எப்போதும் எட்டாம் பொருத்தம் தான்.. எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம் என்பதாலோ என்னவோ, எனக்கு ரசம் மட்டும் செய்ய வரமாட்டுது....... அல்லது நான் செய்யும் டேஸ்டு எனக்கு பிடிக்க மாட்டுது.... இதுவரை வாழ்நாள் மறக்கமுடியாத சுவையான ரசம் இரண்டே முறை தான் சாப்பிட்டு இருக்கிறேன்....
முதல் முறை... கல்லூரி தோழி ஒருத்தி எடுத்து வந்து இருந்தாள்.... அந்த ரசத்தின் சுவை இன்றும் என்னுடைய நாக்கில் இருக்கிறது...
"ஏய் சூப்பர்டி எப்படி செஞ்ச"
"தெரியலையே டா"
"நீ தானே செஞ்ச"
"ஆமா"
"அப்புறம் எப்படினு சொல்லும்மா, நிஜமா சூப்பர் ரசம்"
"டேய் எனக்கு வெட்கமா இருக்கு இப்படியெல்லாம் சொல்லாத"
"வெட்கமா இருக்கா நான் என்ன தப்பாவா கேட்டேன், ரசம் எப்படி வச்சேன்னு சொல்லச்சொன்னா... சனியனே சொல்லித் தொள"
"டேய் சத்தியமா எனக்கு தெரியாது டா, எப்பவும் போல தான் வச்சேன்"
"நாசமா போச்சு போ, சரி இந்த என் சாப்பாடு, நீ உன் ரச சாப்பாட குடு"
"டேய் கைய வச்சிட்டேன்"
"நீ காலையே வச்சி இருந்தாலும் பரவாயில்லை குடு"
நான் புகழ்ந்த வெட்கத்தில் அவள் முகம் சிவந்து போனது, உண்மையில் அருமையான ரசம் அது..........
அடுத்ததாக, என் நண்பனின் ஓட்டலில் ஒருமுறை சாப்பிட்டேன்.... பிறந்தநாள் பார்ட்டி அது, சிக்கன், மட்டன், இறால், எல்லாம் சாப்பிட்டோம், வாயை திறந்தால் காக்கா கொத்தும் அந்தளவு சாப்பிட்டு விட்டு, அனைவரும் மலைபாம்பு கணக்கா கையை கழுவகூட எழுந்து செல்ல முடியாமல் சீட்டிலே அமர்ந்து இருந்தோம். அப்போது சமையல்காரர் ஒருவர் வந்து
"இந்தாங்க தம்பிங்களா, கொஞ்சம் ரசம் சாப்பிட்டு அப்புறம் கையை கழுவுங்க"
"அய்யய்யோ நம்மாள முடியாது சாமி"
"தம்பி சாதத்தோட சாப்பிட முடியலைன்னா, பரவாயில்லை கொஞ்சம் குடிங்க"
"ஏங்க என்னலா முடியாது வேணும்னா, எல்லாருடைய சட்டை பாக்கெட்டிலும் கொஞ்சம் ஊத்திட்டுப் போங்க, அப்புறம் நாங்க குடிச்சிக்கிறோம்"
சிரிக்க முடியாமல் அனைவரும் சிரித்தோம்....
எவ்வளவு சொல்லியும் வற்புறுத்தி எங்களை அவர் ரசம் குடிக்க வைத்தார். முதல் முடக்குலே, அனைத்தும் சீரணமாகி போனது போல ஒரு உணர்வு... மிக மிக அருமையாக இருந்தது... அவரை பாராட்டி விட்டு அனைவரும் நகர... நான் மட்டும் அவரின் பின்னாடி சென்று
"அண்ணே ரசம் சூப்பருண்ணே"
"தாங்க்ஸ் பா"
"எப்படி செஞ்சிங்க"... என்னை பார்த்து சிரித்தவர்...
"பொம்பளைங்க கிட்ட என்ன கேட்ககூடாது" என்றார். நான் சிரித்தபடியே
"சை.......ச்சி ச்சி ச்சி வ வ வ வயசு"
"ஆம்பளைங்க கிட்ட"
"அது எவ்வளவோ இருக்கு"
"சொல்றா தம்பி"
"சரி சம்பளம்".. அவர் எதுக்கு வராருனு எனக்கு புரிஞ்சிப் போச்சு....
"ம்ம் சமையல் காரர் கிட்ட"
"இத.... யாரு செஞ்சதுனு." ..... என் மனதிற்குள்.... ஹா ஹா ஹா அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் என்று நினைத்துக் கொண்டேன்... அவரும் சிரித்தபடி
"சமையல் காரர்கிட்ட கேட்க கூடாதது, இத எப்படி செஞ்சிங்கனு சொல்லுங்களேன்.... என்ற வார்த்தையை"
"இதுக்கு முன்னாடியே சொல்லமாட்டேன்னு நேரா சொல்லி இருக்கலாமே"
"சரி சாரி சொல்லமாட்டேன் தம்பி..." என்றார் அசராமல்...
மனதிற்குள் போடாங்கோ......... என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்....... ஆனால் உண்மையில் இந்த இரண்டு ரசங்களும் வாழ்நாளில் மறக்கமுடியாத ரசங்கள்........
மூன்றாவதாக அருமையான சுவையான ரசத்தை யாராவது வைக்க கற்றுத் தந்தால் பெருமைப்படுவேன்....... என் வரலாற்றில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்....... ஹா ஹா ஹா ஹா
எத்தனை விதமான ரசமாக இருந்தாலும் பரவாயில்லை..... செய்முறையை ஒழுங்காக பதியுங்கள்.... நான் கொஞ்சம் ட்யூப் லைட்......
நன்றி...
சமையலில் எனக்கு எப்போதும் ஒருவிதமான ஈர்ப்பு உண்டு, செடிகள் எல்லாம் துளிர் விட ஆரம்பித்த போதே, போட்டோசின்தஸிஸ் என்ற முறைபடி தன்னை அறியாமல் பசி ஆற்றிக் கொள்ள ஆரம்பித்து விடுகின்றன. அதே போல தான் நானும் என் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறு வயதில் இருந்தே சமைக்க ஆரம்பித்து விட்டேன்......... ஆனால் யாரிடமும் கற்றுக் கொள்ளவில்லை, புத்தகத்தை படித்து தெரிந்துக் கொள்ளவில்லை,, எனக்கு பிடித்த பொருட்களைப் போட்டு சமைக்க ஆரம்பித்தேன், பிடித்து விட்டது. 13 வயதில் சமைக்க ஆரம்பித்தேன்.............. இப்போது 27........ ஆகிவிட்டது....... 14 வருடங்கள்.........
இப்போது எதற்கு இந்த முக் கதை சுருக்கம் என்கிறீர்களா.....
இந்த 14 வருடத்தில் எனக்கு வராத ஒரே பதார்த்தம் ரசம் மட்டும் தான்.....சிக்கன், மட்டன், மீன், நண்டு, கீரை, வாழைத்தண்டு, பீட்ரூட், இப்படி எல்லா விஷயத்தையும் பின்னி பெடல் எடுக்கும் எனக்கும் ரசத்திற்கும் எப்போதும் எட்டாம் பொருத்தம் தான்.. எனக்கு மிகவும் பிடித்த பதார்த்தம் என்பதாலோ என்னவோ, எனக்கு ரசம் மட்டும் செய்ய வரமாட்டுது....... அல்லது நான் செய்யும் டேஸ்டு எனக்கு பிடிக்க மாட்டுது.... இதுவரை வாழ்நாள் மறக்கமுடியாத சுவையான ரசம் இரண்டே முறை தான் சாப்பிட்டு இருக்கிறேன்....
முதல் முறை... கல்லூரி தோழி ஒருத்தி எடுத்து வந்து இருந்தாள்.... அந்த ரசத்தின் சுவை இன்றும் என்னுடைய நாக்கில் இருக்கிறது...
"ஏய் சூப்பர்டி எப்படி செஞ்ச"
"தெரியலையே டா"
"நீ தானே செஞ்ச"
"ஆமா"
"அப்புறம் எப்படினு சொல்லும்மா, நிஜமா சூப்பர் ரசம்"
"டேய் எனக்கு வெட்கமா இருக்கு இப்படியெல்லாம் சொல்லாத"
"வெட்கமா இருக்கா நான் என்ன தப்பாவா கேட்டேன், ரசம் எப்படி வச்சேன்னு சொல்லச்சொன்னா... சனியனே சொல்லித் தொள"
"டேய் சத்தியமா எனக்கு தெரியாது டா, எப்பவும் போல தான் வச்சேன்"
"நாசமா போச்சு போ, சரி இந்த என் சாப்பாடு, நீ உன் ரச சாப்பாட குடு"
"டேய் கைய வச்சிட்டேன்"
"நீ காலையே வச்சி இருந்தாலும் பரவாயில்லை குடு"
நான் புகழ்ந்த வெட்கத்தில் அவள் முகம் சிவந்து போனது, உண்மையில் அருமையான ரசம் அது..........
அடுத்ததாக, என் நண்பனின் ஓட்டலில் ஒருமுறை சாப்பிட்டேன்.... பிறந்தநாள் பார்ட்டி அது, சிக்கன், மட்டன், இறால், எல்லாம் சாப்பிட்டோம், வாயை திறந்தால் காக்கா கொத்தும் அந்தளவு சாப்பிட்டு விட்டு, அனைவரும் மலைபாம்பு கணக்கா கையை கழுவகூட எழுந்து செல்ல முடியாமல் சீட்டிலே அமர்ந்து இருந்தோம். அப்போது சமையல்காரர் ஒருவர் வந்து
"இந்தாங்க தம்பிங்களா, கொஞ்சம் ரசம் சாப்பிட்டு அப்புறம் கையை கழுவுங்க"
"அய்யய்யோ நம்மாள முடியாது சாமி"
"தம்பி சாதத்தோட சாப்பிட முடியலைன்னா, பரவாயில்லை கொஞ்சம் குடிங்க"
"ஏங்க என்னலா முடியாது வேணும்னா, எல்லாருடைய சட்டை பாக்கெட்டிலும் கொஞ்சம் ஊத்திட்டுப் போங்க, அப்புறம் நாங்க குடிச்சிக்கிறோம்"
சிரிக்க முடியாமல் அனைவரும் சிரித்தோம்....
எவ்வளவு சொல்லியும் வற்புறுத்தி எங்களை அவர் ரசம் குடிக்க வைத்தார். முதல் முடக்குலே, அனைத்தும் சீரணமாகி போனது போல ஒரு உணர்வு... மிக மிக அருமையாக இருந்தது... அவரை பாராட்டி விட்டு அனைவரும் நகர... நான் மட்டும் அவரின் பின்னாடி சென்று
"அண்ணே ரசம் சூப்பருண்ணே"
"தாங்க்ஸ் பா"
"எப்படி செஞ்சிங்க"... என்னை பார்த்து சிரித்தவர்...
"பொம்பளைங்க கிட்ட என்ன கேட்ககூடாது" என்றார். நான் சிரித்தபடியே
"சை.......ச்சி ச்சி ச்சி வ வ வ வயசு"
"ஆம்பளைங்க கிட்ட"
"அது எவ்வளவோ இருக்கு"
"சொல்றா தம்பி"
"சரி சம்பளம்".. அவர் எதுக்கு வராருனு எனக்கு புரிஞ்சிப் போச்சு....
"ம்ம் சமையல் காரர் கிட்ட"
"இத.... யாரு செஞ்சதுனு." ..... என் மனதிற்குள்.... ஹா ஹா ஹா அசிங்கப்பட்டான் ஆட்டோகாரன் என்று நினைத்துக் கொண்டேன்... அவரும் சிரித்தபடி
"சமையல் காரர்கிட்ட கேட்க கூடாதது, இத எப்படி செஞ்சிங்கனு சொல்லுங்களேன்.... என்ற வார்த்தையை"
"இதுக்கு முன்னாடியே சொல்லமாட்டேன்னு நேரா சொல்லி இருக்கலாமே"
"சரி சாரி சொல்லமாட்டேன் தம்பி..." என்றார் அசராமல்...
மனதிற்குள் போடாங்கோ......... என்று நினைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்....... ஆனால் உண்மையில் இந்த இரண்டு ரசங்களும் வாழ்நாளில் மறக்கமுடியாத ரசங்கள்........
மூன்றாவதாக அருமையான சுவையான ரசத்தை யாராவது வைக்க கற்றுத் தந்தால் பெருமைப்படுவேன்....... என் வரலாற்றில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்....... ஹா ஹா ஹா ஹா
எத்தனை விதமான ரசமாக இருந்தாலும் பரவாயில்லை..... செய்முறையை ஒழுங்காக பதியுங்கள்.... நான் கொஞ்சம் ட்யூப் லைட்......
நன்றி...