நமது நினைவிற்கு....

ஜானகி

New member
இன்று...ஜனவரி - 12, சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ; தேசிய இளைஞர் தினம்.

"சிங்கங்களே , வீறு கொண்டு எழுங்கள் ! நீங்கள் ஆடுகள் என்கின்ற மாயையை உதறித் தள்ளுங்கள் ! நீங்கள் அழியாத ஆன்மாக்கள். சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தரமான ஆன்மாக்கள் !"

சுவாமி விவேகானந்தர்.
 
ஆன்மீகவாதிகளில் விவேகானந்தர் ஒரு பகுத்தறிவுவாதி என்பது நமக்கு ஆச்சர்யமூட்டும் உண்மை. அவர் மூட நம்பிக்கைகளை ஒருபோதும் ஆதரித்ததில்லை.
 
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளில் அவரை நம் நினைவுக்குக் கொண்டுவந்த ஜானகி அவர்களுக்கு நன்றி.

விவேகானந்தரின் பொன்மொழிகள் சிலவற்றையும் நினைவுக்குக்கொணர்வோம்.

எதிரிகளை அழிக்க ஒரே வழி அவர்களை நண்பர்களாக்குங்கள்.

யார் ஒருவன் தனக்குள் கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தை தான் அடைகிறான்.

இவனை நம்பு அல்லது அவனை நம்பு என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால், நான் சொல்கிறேன். முதலில் உன்னிடத்திலேயே நீ நம்பிக்கை வை. அதுதான் வாழ்க்கைக்கு வழி.

அடக்கப்படாமல் சரியான வழியில் செலுத்தப்படாத மனம், நம்மை மேலும் மேலும் என்றென்றைக்கும் கீழே இழுத்துச் சென்றுவிடும். ஆனால், அடக்கப்பட்டுச் சரியான வழியில் செல்கின்ற மனம் நம்மை என்றென்றைக்கும் காத்து இரட்சிக்கும்; நம்மை விடுதலைப் பெறச் செய்யும்.

பசியால் நலிந்து வாழும் மக்களிடையே சென்று சமயப் பிரசாரம் செய்வது அவர்களை அவமதிப்பதாகும். பட்டினி கிடக்கும் மனிதனை அணுகி, அவனுக்குத் தத்துவ போதனைகள் செய்வது மேலும் அவனை அவமதிப்பதாகும்.

பிறருடைய உத்தரவுக்குப் பயந்து பயந்து நடப்பவர்கள் நாளடைவில் சிந்திக்கும் சக்தியை இழந்து விடுகிறார்கள். உங்களுக்குள் இருப்பதை உங்கள் உழைப்பாலே வெளிக்கொணர முயலுங்கள். பிறரைப் பார்த்து நடிக்காதீர்கள். பிறரிடம் காணப்படும் நல்ல பண்புகளைப் கற்றுக் கொள்ளுங்கள்.

விட்டுக் கொடுத்து, எவன் பிறருடைய கருத்துகளை ஏற்க ஆயத்தமாய் இருக்கிறானோ இறுதியில் அவனுடைய கருத்துகள் வெற்றி அடைகின்றன.

கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல விஷயங்களைத் திணிப்பதன்று, அப்படித் திணிக்கப்படும் அந்த விஷயங்கள் நன்றாக ஜீரணமாகிக் பயன்படவேண்டும்.

மனிதன் தோல்வியின் மூலமே புத்திசாலி ஆகின்றான்.

பிறரிடமிருந்து நல்லனவற்றைக் கற்றுக் கொள்ள மறுப்பவன், இறந்தவனுக்கு ஒப்பாவான்.

காயம்படாதவன் தான் தழும்மைக் கண்டு நகைப்பான்.
 
சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் ; தேசிய இளைஞர் தினம்.

வாழ்த்துத் திரி தொடங்கிய ஜானகி அவர்களுக்கும்..,

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகளை
பகிர்ந்து கொண்ட கீதம் அவர்களுக்கும்
பாராட்டுக்கள்....மிக்க நன்றி.
 
இன்று திருவள்ளுவர் தினம்.

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்டது நம் தமிழ்நாடு.

வள்ளுவன் வகுத்த பாதையில் செல்வதே, நாம் அவருக்குச் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
 
இன்று ஜனவரி - 23.... தீரர் நேதாஜி அவர்களின் பிறந்தநாள்.

அவரை நினைவு கூர்வோம்.
 
Last edited:
இன்று ஜனவரி - 26.... குடியரசு தினம்.

" இன்னல் வந்துற்றிடும்போது அதற்கு அஞ்சோம்

ஏழையராகி இனி மண்ணில் துஞ்சோம்

தன்னலம் பேணி இழிதொழில் புரியோம்

தாய்த்திரு நாடெனில் இனிக்கையை விரியோம்

பொன்னொளிர் பாரத நாடெங்கள்நாடே

போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே.

பாரதியார்.
 
Last edited:
இன்று ஜனவரி - 30......காந்திஜி அவர்கள் அமரர் ஆன தினம்.அவரை நினைவுகூருவோம்.

வாழ்க நீ எம்மான் ! இந்த வையத்து நாட்டிலெல்லாம்

தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்

பாழ்பட்டு நின்றதாமோர் பாரத தேசம் தன்னை

வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா ! நீ வாழ்க ! வாழ்க !

முடிவில்லாக் கீர்த்தி பெற்றாய் ! புவிக்குள்ளே முதன்மையுற்றாய் !

பாரதியார்
 
Last edited:
இன்று பிப்ரவரி - 20......பகவான் ராமகிருஷ்ணரின் பிறந்தநாள்.

அவரது பொன்மொழிகளை நினைவுகூறுவோமாக....

" மீன்கொத்திப் பறவை போல, உலகில் வாழ்ந்திரு. அது நீருக்குள் மூழ்குகிறபோது சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அது வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும், நீர் அகன்று போய் விடுகிறது. அவ்வாறு உலகில் நீ பற்றற்று இரு. "

"தடாகத்தின் கீழ்ப் பகுதியில் சேறு இருக்கிற வரையில் நீர்க் குமிழிகளும் அங்கிருந்து கிளம்பிக்கொண்டிருக்கும். அதே விதத்தில், மனிதனுக்கு, சரீரம் இருக்கும் வரையில், கர்மமும் இருந்தாகவேண்டும்."
 
Last edited:
மகான்களை நினைவுகூர்கிறோம் உங்கள் தயவால். நினைவூட்டலுக்கு நன்றி ஜானகி அவர்களே.
 
நல்லதொரு தகவற்திரி.
அதுவும் உலகின் மதிப்புப்பெற்ற மனிதரைக் கௌரவிக்கும் திரியாகப் பெரிதும் ஒளிர்வது சிறப்பு.

திரி என்றென்றும் ஒளிர்ந்திருக்க வாழ்த்துகின்றேன்...

இத்திரியை ஒட்டி வைக்க, நிர்வாகக்குழுவிடம் பரிந்துரைக்கின்றேன்...
 
தகவல் களஞ்சியத்தை பயனுள்ள தகவல்கள் பகுதியில் ஒட்டியாக்கியுள்ளேன்.

நினைவுகளுடன் இழை நீளட்டும் அம்மா
 
இன்று மார்ச் - 8....உலக மகளிர் தினம் !

" பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா !

பெண்மை வெல்கென்று கூத்திடுவோமடா !

துன்பம் தீர்வது பெண்மையினாலடா !

சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம் !

வலிமை சேர்ப்பது தாய் முலைப் பாலடா !

மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் ;

கலி அழிப்பது பெண்கள் அறமடா !

கைகள் கோர்த்துக் களித்து நின்றாடுவோம் !

பாரதியார்
 
Last edited:
நன்றி ஜானகி, அருமையான திரி, நல்ல பதிவுகள்.

மகளிர்களுக்காக மகாகவியின் வரிகள்.

//"நிமிர்ந்த நன்னடை நேர்கொண்டபார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவதில்லையாம்.
அமிழ்ந்து பேரிருளாமறியாமையில்
அவலமெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறமாகுமாம்
உதயகன்னி உரைப்பது கேட்டீரோ!"//

பாரதி கூறியது போல் பெண்கள் வாழகிறார்களா என்று கேட்டால், விடையே கிடைக்கவிலை. :)
 
நன்றி. பங்கேற்பவர்களின் பதிவுகள் கூடினால், இத்திரி தொடங்கிய நோக்கம் நிறைவேறும்...
 
மார்ச் - 15 - இன்று உலக ஊனமுற்றோர்...மன்னிக்கவும், மாற்றுத் திறனாளர் தினம்....

பிரேம் அவர்களின் " மாற்றுத் திறனாளிகள்" கவிதையை அர்ப்பணிக்கிறேன்.

நம்மாலான ஒத்துழைப்பை அவர்களுக்கு நல்குவோமாக !
 
ஏப்ரல்..21...பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்...

அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, எழுச்சிமிக்க அவரது பாடல்களை நினைவு கூறுவோமாக....
 
ஏப்ரல்..21...பாவேந்தர் பாரதிதாசன் நினைவுநாள்...

அன்னாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, எழுச்சிமிக்க அவரது பாடல்களை நினைவு கூறுவோமாக....

தமிழே! நீ ஓர் பூக்காடு,
நானோர் தும்பி! - பாவேந்தர்.
 
இன்னோர் அரும்பணி..

பாராட்டுகிறேன் ஜானகி அவர்களே..


------------------------------

பாவேந்தரின் கவிதைகளுக்கான திரி இருக்கிறது மன்றத்தில்.

இடம் பிரிக்கப்படாமல் புதைந்திருக்கும் பொன்மணிகளில் அதுவும்...


எனக்குக் கிட்டிய இரு திரிகள் --

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=23873
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=18771
 
Back
Top