தென்மேற்கு பருவகாற்று

sharavanan

New member
தென்மேற்கு பருவகாற்று:

இது ஒரு அம்மா காவியம். அப்பா இல்லாத ஒரு மகனை ஒரு தாய் எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்க்கிறாள் என super அஹ் சொல்லி இருக்கும் படம் இது.

Thenmerku-Paruvakatru1.jpg


கதை :

அம்மா தனக்கு புடிச்ச ஒரு கருப்பான அழகான ஒரு பெண்ணை தன் மகனுக்கு கல்யாணம் பண்ண முடிவு எடுக்கிறாள். But அந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்க மகனுக்கு இஷ்டம் இல்லை. ஒரு நாள் தன் ஆடுகளை திருடும் கூட்டத்தை பிடுக்கும் போது அவளை ஒரு திருடியாக பார்க்கிறான், ஆனால் அவள் அவன் மனதையும் திருடிவிடுகிறாள். பின்னர் அவள் பற்றி details collect செய்கிறார் ஹீரோ. சத்துணவு கூடத்தில் வேலை சாயும் ஆவலுடன் காதல், ஆடு திருடியதற்காக ஜெயிலுக்கு போகும் அவளின் அண்ணன்களுடன் மோதல், அம்மாவிடம் காதலை சொல்லி அம்மா மறுக்க ஒரு நோதல்… என படம் நீளுகிறது … .


தாய் மகன் பாசம் , ஒரு அழகான காதல் , ஆடுகளை திருடி வாழும் ஒரு குடும்பம் அதன் விளைவுகள், மகன் தன் தாயை எதிர்த்து பேசும் வசனம், அதே சமயம் அம்மாவுக்கு கட்டுப்பட்டு நடப்பது இதுபோன்ற ரத்தமும் சதையும் கலந்த ஒரு பாச காவியமாக எந்த படம் எனக்கு தெரிந்தது.

பிடித்தது :

1)”கலைவாணி குடும்பத்தில் உன் அம்மா பொண்ணு எடுக்குமா ?” அதற்கு ஹீரோ reaction and timing.

2) குடித்து விட்டு வந்த மகனுக்கு சோறு போடும் அந்த sean.

3 )கெடா சண்டை கோப்பையை மீண்டும் வாங்கும் sean.

4 )”உன் மகனை உன்னோடே உசுரோட வச்சுக்க ” என heroin சொல்லும் சீன்.

5 )தேனி busstand காமெடி.

6 )”மரம் வெச்சா போதுமா யார் தண்ணி ஊத்தறது, தேனி la தண்ணி Rs.1 தெரியுமா?” இந்த dialog.

பிடிக்காதது:

1 )சரண்யா தானே போய் கத்தி குத்து பட்டு சாவது.



தென்மேற்கு பருவகாற்று : ஒரு அழகிய பாச தென்றல்:icon_b:
 
அடுத்த ஒரு களவாணி - எனக்கு ரொம்ப பிடிச்ச படம் - உங்களின் விமர்சனம் அருமை
 
அடுத்த ஒரு களவாணி - எனக்கு ரொம்ப பிடிச்ச படம் - உங்களின் விமர்சனம் அருமை

நன்றி. கலைவாணி படத்தில் உள்ள அளவு இதில் நகைச்சுவை இல்லை என்றாலும் அதே மண்வாசம் உள்ளது.
 
டைட்டில் சாங் நல்லா இருக்கு, காட்சியமைப்பு Powerpoint-ல செய்தது போல இருந்தது. கணவன் இல்லாமல் மனைவி கஷ்டப்பட்டு வளர்த்துவது போல் நம்ம தான் புரிஞ்சுக்கணும். தெளிவான காட்சியமைப்புகள் எதுவும் சாட்சியில்லை, மீண்டும் டைட்டில் சாங் தான் சாட்சி.

அதெப்படி திருட வந்த பொண்ணோட கண்ணைப் பார்த்தவுடன் காதல் வருகிறது. Just like that கண்ணைப் பார்த்தவுடன் காதல் வருவது போல் காண்பித்தது, காதலை அழுத்தமாக கூறத் தெறியவில்லையோ என்று தோன்றுகிறது.

எத்தனை படம் தான் மண்வாசனையோட எடுக்கிறேனு சொல்லி இனி வருமோ.. கத்தி குத்து பட்டும், தானே ஆஸ்பத்திரிக்கு செல்லும் அளவுக்கு தெம்புள்ள சரண்யாவை சாகடித்தது எதற்கு? Typical தமிழ் படம் என்று காண்பிக்கவா??

சில படங்களின் கதை நல்லா இருக்கும், திரைக்கதையில் சொதப்புவார்கள். சில திரைப்படங்களின் திரைக்கதை நல்லா இருந்தாலும், கதைக்கரு நல்லா இருக்காது. இந்தப் படத்தில் இரண்டும் நல்லா இல்லையோ? என்று என்னத் தோன்றியது படம் பார்த்தபின்.

வம்சம் போலவே கதை, மண்வாசனை, இடையில் ஒரு ஃப்ளாஷ் பேக். ஆனால், வம்சத்துக்கும் தென் மேற்கு பருவக்காற்றுக்கும் உள்ள வித்தியாசம். அந்தப்படம் நகர்வது தெரியும். இந்தப்படம் பார்ப்பவர்கள் நெளிவது (bore) தெரியும்.
 
Back
Top