பூ(வில்) மன்மதன் அம்பு - தைத்ததா உங்களுக்கும்??

v981_8db_u4a4u.jpg


படம் வந்த உடனே பார்க்க ஆயத்தமாகி கடைசியில் சூழலால் இயலாது போனதன் ஏமாற்றம் நெஞ்சில் இருப்பதை உணர்ந்து மீண்டும் ஒரு சில நாட்களில் காண ஏக பரபரப்பில் கிளம்பி மகிழ வைத்தார் என்னவர்.

கதைச் சுருக்கம் சொல்லப் போவதில்லை.. படத்தைப் பற்றிய பலவாறான கருத்துகளோடு பார்க்கச் சென்றாலும் கதை பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றேன்.


படத்தில் ஆரம்பமே நம்ம சூர்யா வந்து வரவேற்பாளரானார். மகிழ்ச்சி இரட்டிப்பானது. என்னே ஒரு நடனம். அந்த துள்ளல் மனதில் தொற்றிக் கொள்ள கதையில் ஐக்கியமானது மனம்.


திரிஷா, மாதவன் காம்பினேசன் புதிதாக இருந்தது. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை கொட்டக் கொட்டப் பார்த்ததில் எனக்கு எந்த பெரிய தவறும் தெரியவில்லை.. ஏனெனில் நான் சிந்திக்கும் நிலையில் இல்லை.. வயிறு வலிக்கச் சிரித்துக் கொண்டிருந்தேன்.. ஏன் திரையரங்கத்தில் அனைவருமே அப்படியான நிலையில் தான் இருந்தனர்.


கமல் வெகு அடக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். பல இடங்களில் கண்கள் நடிப்பில் பின்னுகின்றன. மாதவன் கலக்கியிருக்கிறார். நகைச்சுவை ததும்புகிறது. சங்கீதா வெகு அசால்ட்டாக நடித்திருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன்.. என்று அவர் பாடும் காட்சி வெகு அருமை. அதே நேரம் தான் கொடுப்பது போல் கேமிராவை தண்ணீரில் போட்டு மாதவனிடம் ஏன் போட்டீர்கள் என்று பேசுமிடம் வெகு வேடிக்கை.. நல்ல டைம்மிங்..


மாதவன் படம் முழுதும் தண்ணீரிலேயே வசனம் பேசுகிறார். ஆனாலும் புரிகிறது. பாத்ரூமில் தன் செல்போனை தவற கீழே விடுவதும் அதன் பின்னான வசனங்களும் திரையரங்கையே அதிர வைக்கின்றன.


நிறைய நல்ல நகைச்சுவைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள்.. ஒவ்வொரு வசனத்திலுமே. தேவையற்ற சில இடங்கள் இழுவையாகத் தோன்றுவதாக பலர் சொன்னார்கள். எமக்கும் அது திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்துவதாகவே கருதுகிறேன். ஆயினும் நகைச்சுவை நம்மை அதையெல்லாம் யோசிக்க விடுவதில்லை.


நீல வானம்,, பாடல் வித்தியாசமான முயற்சி.. கலக்கல்.. அதுவும் ஒரு ஆங்கிலப் படத்திலிருந்து எடுக்கப்பட்ட யோசனை தான் எனும் பொழுது கொஞ்சம் வருத்தம். இப்பாடல் தான் படத்தின் ஹைலைட்.


திரீஷா - கமல் காதல் எப்படி திடீரென்று பூத்ததென்று கதையில் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.. அது ஒரு சிறு நெருடல்.


கமல் பார்வையில் ஏதோ ஒரு வருத்தம் தோய்ந்திருக்கிறது படம் முழுதும். அது நம்மை என்னவோ செய்கிறது.


சினிமோட்டோ கிராஃபி கலக்குகிறது. பிரான்சும், இறுதியில் வரும் குரூசும் வெகு அழகு. படத்தைப் பார்த்ததிலிருந்து பிரான்சைப் பார்க்கும் எண்ணம் வலுத்தது.


மொத்தத்தில், மன்மதன் அம்பு எல்லோர் மனதையும் நகைச்சுவையால் தைக்கத் தவறவில்லை.


எந்திரனை விட எனக்கு பல மடங்கு இப்படம் பிடித்திருக்கிறது. ரஜினி ரசிகர்கள் கோவிக்காதீர்கள் ப்ளீஸ்..!!
 
படம் சரியில்லை எனும் பெரும்பாலானப் பேச்சுக்கள் மத்தியில் உங்களின் பாஸீடிவ் ஆன விமர்சனம்.. வாழ்த்துக்கள்ங்க..
 
படத்தை ரசிச்சுப் பாத்திருக்கம்மா. நானும் பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லாமத்தான் பார்த்தேன். எனக்கும் பிடிச்சிருக்கு. குறிப்பா சங்கீதாவும், மாதவனும் கலக்கியிருக்காங்க.

படத்தின் நல்லவிஷயங்களைப் பற்றிப் பேசிய தங்கைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

(ஆனாலும் எந்திரனை விட நல்லாருக்குன்னு சொல்றது ட்டூஊஊஊ மச்....எங்க தலைவர் படத்தை இப்படி சொல்லிட்டியேம்மா.....:frown:)
 
பார்க்கலாம் ரகம்தான்..

நீல வானம் பாடலுக்குள் ஒரு கதையையும், திரிஷாவை கமல் பக்கம் திரும்பவும் வைத்த உத்திக்கு சபாஷ்.
 
நான் படம் இன்னும் பார்க்கவில்லை ,
இன்று நேரம் கிடைக்குமாயின் செல்லலாம் எனும் எண்ணம் உள்ளது.

ஆனால் மன்மதன்பு பட இசை-பாடல் வெளியீட்டை
மலேசிய தொலைகாட்சியில் கண்ட போதும்,
அதன் தொடர்ச்சி ஸ்டார் குரூஸில் நடத்தபட்டத்தையும்
பார்த்த பொழுது எனது அபிமான நடிகர் கமலஹாசன் பார்வையிலும் முகத்திலும்
ஒரு சிறிய மாறுதல் கண்டேன். அந்த மாறுதல் எதனால்? தங்கை
பூமகள் கூறியது போல சோகம் - எனக்கென்னவோ அது முதுமையின்
பாதிப்பாக இருக்குமோ என சந்தேகம் -
கமல்ஹாசன் திரையில் பாடிய நீலவானம் பாடலை நேரடியாக ரசிகர்கள் முன்
கமல்பாடியதை தொலைகாட்சியில் மிக அருகாமையில் கண்டபோது
புரிந்தது , கமல் டென்ச்சர்ஸ் (denture) உபயோகிக்கிரார் , அதனால் அவர்
முகத்தில் மாறுதல் தென்படுகரது, நமக்கு சோகத்தை காட்டுவது போலுள்ளது.

மனோ.ஜி
 
மனோண்ணா..

படத்தில் கமல் ஒரு சோகதாங்கியாகவே வருகிறார்.

மகளிர்மட்டுமில் நாகேஷ் பிணமாக நடித்தது போல இதில் ரமேஷ் அரவிந்த் கட்டிலில் படுத்தபடியே நடித்திருக்கிறார்.
 
இதுவரை நான் பார்த்த கமல் படங்களிலே படு மொக்கையான படம் மன்மத அம்பு தான், (சாரி பூ மகள்)..

படத்தை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த படக்குழுவினர், படத்தின் கதையையும், திரைக்கதையையும், குறிப்பாக வசனத்தையும் முடிவு செய்து இருக்க வேண்டும்.....

ரவிக்குமார் தன் பணியை தவறவிட்ட படங்களில், பாறைக்கு அப்புறம் இது மிகவும் முக்கியமான படமாகும்.....

தாசாவதாரம் வசனகர்த்தா கமல், தேவர்மகன் திரைக்கதையாளன் கமலோடு, மன்மத அம்பு கமலை ஒப்பிட்டுக்கூட பார்க்க முடியவில்லை, முன்னதானவர்கள் 100 என்றால் பின்னதானவர் 0. சம்திங்கில் இருக்கிறார்.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சி, படுமொக்கை.....

தேவையில்லாமல் சொகுசு கப்பலை தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள், இந்த கதையை கொகுசு பஸ்ஸில் கூட எடுத்து இருக்கலாம்,,,,

திரி இடியட்ஸ், ரங்தே பசந்தி, அன்பே சிவம் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்த மாதவன் எப்படி இந்த படத்தை தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை....

திரிஷா மட்டும் அழகாக இந்த படத்தில் பிரகாசிக்கிறார்,....... அழகாக....

ரேடியோவில் நாம் காலையில் கேட்கும் பாடல் எப்படி அன்று முழுவதும் நம் மனதில் கேட்டுக் கொண்டே இருக்குமோ அப்படி பட்ட ஒரு அருமையான பாடல் தான் ஜூலியட்....... ஆனால் சோகமான பாடல்.

உன் pantலும் என் ஜாக்கெட்டிலும் எதுக்கு ஜிப்பும் கொக்கியும் இருக்கோ, அதுபோல தான், கேரவானில் இருக்கும் இன்டர்செக்ஸன் கதவும்...

bull filght நடக்கும் இடத்தில் பல நூற்றாண்டுக்கு முன்பு கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று சொல்லும் இடத்தில் நாயகன் சொல்லும் வசனங்கள்

ஆகிய இடத்தில் வசனகர்த்தா கமல் ஜொலிக்கிறார்,,,,,,,,,,,, அந்த இடத்தில் மட்டும் தான் ஜொலிக்கிறார்........

வசனத்தை கிரேசி மோகனிடம் கொடுத்து இருந்தால், அவ்வை சண்முகி, பம்மல் கே சம்பந்தம், பஞ்சதந்திரம் ஆகிய படங்களை போல இதுவும் வெற்றி படம் ஆகி இருக்கும்......

இப்படிக்கு

கமலின் தீவிர ரசிகன்....
 
படத்தில் வரும் சோக்குகளை விட தங்கம் சீரியலில் வரும் சின்ன நாச்சியார், மங்காக்கா கூட்டணி சோக்குகள் எவ்வளவோ மேல்..

பூமகள் எழுதிய விமர்சனம் தான் மிகவும் நல்லா இருக்கு.

பாபா படத்தைவிட மொக்கையோ என்பது போல் தான் தோன்றுகிறது. பாபால கூட ரஜினி சொந்தக் காசுல தான் சூன்யம் வச்சுக்கிட்டார். கே.எஸ். ரவிக்குமார் கேரியரும் சேர்ந்து இந்தப் படத்தில் பாலாய் போய்விட்டது..
 
ரொம்ப பிரமாதம்னு சொல்ல முடியாது, ஆனாலும் ஒரு முறை மட்டுமே பார்க்கலாம்.


கமலின் 'ரிவஸ்' பாடல் துள். கமலின் சிறந்த 50 படத்தில் 'கடைசி சீட்' பிடிக்கலாம். கமலின் ஜோடி சரி :)

அது எப்படி 2 பிள்ளையின் அம்மாவை ஒரு பணக்கார அழகான வாலிபனுக்கு உடனே காதலியாக ஆக்கிட்டார் டைரக்டர், :redface::redface:

அதுவும் 'ஓவியா' வடை பச்சி எல்லாம் சுட்டு கொடுத்து கவனிக்கிறா.. :D கூடவே ஒரு வில்லி அம்மாவும் இருக்க,
அந்த அழகு மன்மதனை இப்படியா... 'சென்ஸ்' இல்லாமல் கதையை முடிப்பது... செ என்ன கொடுமை இது.
 
Back
Top