சராசரி மனிதனுக்கு அதிக பீஸ் வாங்கும் பள்ளி, வழக்கறிஞர் என்று பல வகைகளில் அல்லாடல் உள்ளது. இன்சுரன்ஸ் கட்ட மறந்து டிராபிக்கில் மாட்டினால் மேஜிஸ்ட்ரேட்டிடம் முறையிட்டு ஏதாவது செய்ய முடிகிறதா? இரண்டு மூன்று வருடம் பிரீமியம் கட்டாதவரும் இரண்டு நாள் மட்டும் கட்டாதவரும் ஒரே அபராதம்தான் கட்டுகிறார்கள். நீதிமன்றம் சென்றவருக்கு வக்கீல் பீஸ் கட்டிய இரசீது நிச்சயம் இருக்காது. அது நுகர்வோர் மோசடி லஞ்சம் இல்லையா?
நாங்கள் மந்தைவெளியில் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து 20 ஆண்டுகள் இருந்தோம். வாடகைக்கு இரசீது கிடையாது. இரசீது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நல்ல முறையில்தான் கேட்டோம். உடனே என் மகனுக்கு வீடு வேண்டும் என்று காலி செய்ய சொல்லி விட்டார். ரூ6000/- வாடகை என்ற நிலை மாறி இப்பொழுது ரூ10000/- கொடுத்து வேறு வீடு மாற்றி நாங்கள் இழந்ததெல்லாம் ஒரு வகை நுகர்வோர் மோசடிதானே!
திட்டம் போட்டு திருடுபவர்களை என்ன சொல்ல. சரியான வீடு கிடைக்கவில்லை என்று நாங்கள் கூறியும் தன் பிள்ளையின் மைத்துனரிடம் கூறி எங்களுக்கு வீடு பார்க்கும் ஏற்பாடு செய்து பின் அதற்கான செலவு என்று அட்வான்ஸையும் சரியாக திருப்பவில்லை. நாங்கள் இடம் பெயர்ந்த வீடு அவர்கள் பார்த்துக் கொடுத்த வீடும் இல்லை. நாங்கள் காலி செய்த வீட்டில் அவர் மகனும் குடி வரவில்லை. Mylapore Timesல் விளம்பரம் செய்து ரூ9000/-க்கு வாடகைக்குதான் கொடுத்துள்ளார். இவ்வாறான ஊழல் கலாச்சாரம் வாழ்கையுடன் பின்னிப் பிணைந்திருப்பது 'லஞ்சம் கொடுக்க மாட்டோம்' என்ற வைராக்கியத்தால் நுகர்வோர் மன்றங்கள் சென்று சரிசெய்ய முடியாது.
நாங்கள் மந்தைவெளியில் ஒரு வீட்டில் வாடகை கொடுத்து 20 ஆண்டுகள் இருந்தோம். வாடகைக்கு இரசீது கிடையாது. இரசீது கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று நல்ல முறையில்தான் கேட்டோம். உடனே என் மகனுக்கு வீடு வேண்டும் என்று காலி செய்ய சொல்லி விட்டார். ரூ6000/- வாடகை என்ற நிலை மாறி இப்பொழுது ரூ10000/- கொடுத்து வேறு வீடு மாற்றி நாங்கள் இழந்ததெல்லாம் ஒரு வகை நுகர்வோர் மோசடிதானே!
திட்டம் போட்டு திருடுபவர்களை என்ன சொல்ல. சரியான வீடு கிடைக்கவில்லை என்று நாங்கள் கூறியும் தன் பிள்ளையின் மைத்துனரிடம் கூறி எங்களுக்கு வீடு பார்க்கும் ஏற்பாடு செய்து பின் அதற்கான செலவு என்று அட்வான்ஸையும் சரியாக திருப்பவில்லை. நாங்கள் இடம் பெயர்ந்த வீடு அவர்கள் பார்த்துக் கொடுத்த வீடும் இல்லை. நாங்கள் காலி செய்த வீட்டில் அவர் மகனும் குடி வரவில்லை. Mylapore Timesல் விளம்பரம் செய்து ரூ9000/-க்கு வாடகைக்குதான் கொடுத்துள்ளார். இவ்வாறான ஊழல் கலாச்சாரம் வாழ்கையுடன் பின்னிப் பிணைந்திருப்பது 'லஞ்சம் கொடுக்க மாட்டோம்' என்ற வைராக்கியத்தால் நுகர்வோர் மன்றங்கள் சென்று சரிசெய்ய முடியாது.