எந்திரன் - விபரீதத்தின் விளைவுகள்.

உணர்வுகள் இல்லாததால்தான் மானம் என்பது எந்திரனுக்குத் தெரியலை என்று சொல்றாங்களாம். அந்தச் சாவுக்குக் காரணம் எந்திரனாம்.

அதை சிஎன்என், பிபிசி, டைம்ஸ் இல எல்லாம் நேரடியாக ஒளி/லி பரப்பி கிழி, கிழினு கிழிக்கிறாங்களாம்..!! :D, இதே சம்பவம் ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ நடந்திருந்தா அந்த பொண்ணு தற்கொலை பண்ணியிருக்குமா..??, இல்லையானு கூடவா யோசிக்கத் தெரியாது சிஎன்என்னுக்கும் டைம்ஸூக்கும்....

அத்துடன் இன்னொன்று இருக்கு, எந்திரன் எந்த பெண்ணைக் காப்பாற்றாமல் போயிருந்தாலும் அவள் தீயில் கருகி இறந்துதானே இருந்திருப்பாள், ஆகவே அவள் இறப்புக்கு காரணம் எந்திரனல்ல ஒரு துணி கொடுத்து உதவாமல் வேடிக்கை பார்த்தவர்கள்தான் காரணம் என்பது ஏற்கத்தக்கது.
 
எழுத்துப்பிழைன்னா ஏதாவது ஒரு இடத்தில வந்திருக்கும்., ஆனா, ஆரம்பித்தில் சானா ஆனவர் கடைசி வரைக்கும் சானாவாகவே இருக்காரே!!!! அப்படியென்றால் இதை எழுத்துப்பிழை லிஸ்டில் சேர்க்க முடியாது (ஹிஹி)

அர்த்ததையே மாத்துகிற மாதிரி வரும் பிழைகள்தான் சொற்பிழை.. எழுத்துப் பிழை ஒரு இடத்தில் வேணும்னாலும் வரலாம்..

பில்லா சானாவும், எந்திரன் சனாவும் இடம் மாறிப் போயிட்டாங்க...:icon_b:
 
நோ பார்க்கிங் என்றால் எந்த காருக்கும் நோ பார்க்கிங் என்றுதானே பொருந்தும், அதை ஏன் சிட்டி வசிகரன் கார் நோ பார்க்கிங் அப்படி போடலையேனு கேட்கலாம்...?? :confused:
 
அடுத்த காட்சி எந்திரனை ஆர்மி அதிகாரிகள் பரிசோதனை செய்வது. A.I.R.D (ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்)நிறுவனம் முதல்ல ரிஜெக்ட் செய்ததை ஆர்மி ஏன் மறுபடி எவால்யூவேட் செய்யுது.

ஏன்னா சங்கர் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லலை. அதாவது நம்ம போரா எந்திரன் பிரசவம் பார்த்த உடனே நான் அப்ரூவ் பண்ணிருவேன் என்று சொல்றார் இல்லையா, அதை வச்சு அவங்க அப்ரூவ் செய்திட்டாங்க என நாம எடுத்துக்கணும்.

எனக்கென்னவொ வசீகரன் 10,15 விஜய்காந்த் அப்புறம் அர்ஜூன் படமெல்லாம் போட்டுக் காட்டி டார்ச்சர் பண்ணிட்டு எவால்யுவேஷனுக்கு கூட்டிகிட்டுப் போயிருந்தா அந்த மாதிரி ரோஜாவை வெடிகுண்டில் சொருகி கவிதை பாடியிருக்காது எந்திரன் என்று தோணுது.

எந்திரன் வேண்டுமென்றே சொதப்பியதால் கோபமாகிற அப்பா (நிஜமாவே விஞ்ஞானி கேரக்டர் எந்திரனோட அப்பா மாதிரிதான் காட்டி இருக்காங்க) நிஜமாவே வெட்ட்டிப் போடறார். கொண்டு போய் குப்பையில் கொட்டச் சொல்றார்.

இந்த இடத்தில் கொஞ்சம் நிற்க...

படத்தில் பேட்டரி லோ ஆகி ட்ரெய்ன்ல இருந்து தூக்கி வீசப்பட்ட எந்திரன் கொஞ்சம் கழிச்சு ரீபூட் ஆகி எழுந்து சார்ஜ் செய்துக்கிறார்.

இங்கேயும் அப்படித்தான். ரொம்ப நேரம் கழிச்சி மயக்கத்தில் இருந்து விழிச்சு வெட்டப்பட்ட கை கால் எல்லாம் தூக்கி தாறுமாறா மாட்டிகிட்டு கிடைச்ச கார்ல ஏறிக்கிறார். இதைக் கொஞ்சம் தெளிவாக காட்டி இருக்கலாம்.

எந்திரனை வெட்டிப் போடற வசீகரன் உணர்ச்சி வசத்தில் செய்யற இன்னொரு தப்பு அதனுடைய சாஃப்ட்வேரை அழிக்காம விடுவது. அதாவது வெறும் மூர்க்கத்தனமான கோபத்தில் வெட்டிப் போட்டு கொண்டு போய் குப்பையில் போடுங்கன்னு சொல்றாரே தவிர எப்படி இறுதியில் மற்ற எந்திரங்களை அழிக்கிறாரோ, எந்திரன் பிடிபட்ட எந்திரத்தை அழிக்குதோ அப்படி அழிப்பதில்லை.

அதாவது வசீகரனுக்கும் எந்திரனுக்கும் இடையில் உள்ள உணர்ச்சிப் பூர்வமான பிணைப்பை இந்தக் காட்சி கலைக்காம காட்டுது.

குப்பையில் எந்திரனைக் கொட்டி விட்டு மறக்க முடியாமல் கவலையோடு இருக்கும் வசீகரனை சனா பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தேத்தறாங்க என்பதையும் ஒரே காட்சியில் சட்டுன்னு முடிச்சி, கிளிமஞ்சாரோ பாட்டைப் போட்டு ரிலாக்ஸ் பண்ணி ரெடியாகுங்க இனி மசாலா ஆரம்பம் என்று சொல்றார் சங்கர்.

கிளிமஞ்சாரோ என்பது ஒரு அணைந்த எரிமலை ஆப்ரிக்காவில் இருக்க.

http://en.wikipedia.org/wiki/Mount_Kilimanjaro

மொகஞ்சதாரோ என்பது இறந்தவர்கள் மேடு..

http://en.wikipedia.org/wiki/Mohenjadaro

இப்படி சம்பந்தமே இல்லாத பெயர்களை எல்லாம் இணைத்து ஒரு காதல் பாட்டு எழுதி அதை சூப்பர்னு சொல்ல தமிழனை விட்டா ஆள் கிடையாது.

ஆப்பிரிக்காவில் உள்ள மலையின் பேரு, இந்தியாவில் உள்ள் ஒரு புதையுண்ட நகரத்துப் பேரு எல்லாம் சேர்த்து அச்சுபிச்சு ன்னு ஒரு பாட்டு எழுதி பெரு நாட்டின் மச்சுபிச்சு மலையில் சுட்டிருக்காங்க.

காதல் பாட்டு.. மன்னிச்சுடலாம்.

குப்பையில் கொட்டப்பட்ட எந்திரனோட நியூரா ஸ்கீமை ஹேக் செய்வதற்காக அவனைத் தேடிப் போற போராவுக்கு எந்திரன் இன்னும் நினைவோட இருக்கறதைப் பார்த்து மகிழ்ச்சி. தான் வாழணும், சனா தனக்கு வேண்டும் அப்படின்னு அழும் எந்திரனோட டீல் பேசறார். நியூரா ஸ்கீமை டௌன் செய்து எந்திரனுக்கு வாழ்வு கொடுக்கிறார்.

எந்திரன் எழுந்த உடனே கேள்விப்படுவது சனா / வசீகரன் கல்யாணம் செய்து கொள்ளப் போவதைப் பற்றிதான். சனாவை கடத்த கிளம்பறார்.

தொடரும்
 
அது எசி இல்லாம டிசி தானே அது ஒண்ணும் பண்ணாது..!! :D:D:D

இந்த சின்னப் புள்ளையை யாரு இங்கே விட்டது :icon_rollout:, எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாரு..!! :D:D:D


ஏசியோ டிசியோ, கூட இருக்கிறவங்க பயத்தோடதானே இருப்பாங்க??? அப்படியும் விக்கிட்டு நிக்கிதுன்னு வையுங்க... (நல்லா கவனியுங்க, விக்கிட்டு நிக்கும்) கலரெல்லாம் எங்கிருந்து வந்ததாம்??? கடைசியா அந்நியன் ரெமோ மாதிரி ஆயிடுவார். அப்போ ஷாக் அடிச்சா ஹேர்ஸ்டைலை எப்படி வேணும்னாலும் மாத்திக்கலாமா என்ன? இதுக்கெல்லாம் வசீகர்ன் டோப்பா வைக்கும் போது ஒரு சின்ன விளக்கம் கொடுத்திருக்கலாம்... அதாவது மண்டையில எலக்ட்ரோ ஹேர்ஸ்டைல் ஜெனரேட்டர் இருக்கு, விதவிதமா மாத்திக்க முடியும்னு....
 
அதை சிஎன்என், பிபிசி, டைம்ஸ் இல எல்லாம் நேரடியாக ஒளி/லி பரப்பி கிழி, கிழினு கிழிக்கிறாங்களாம்..!! :D,

அது போரா சொன்னது.. நம்பகமானது இல்லைன்னு படத்திலயே தெளிவா சொல்லிடறாங்க.... சோ அது சரிதான்!!

அர்த்ததையே மாத்துகிற மாதிரி வரும் பிழைகள்தான் சொற்பிழை.. எழுத்துப் பிழை ஒரு இடத்தில் வேணும்னாலும் வரலாம்..

பில்லா சானாவும், எந்திரன் சனாவும் இடம் மாறிப் போயிட்டாங்க...:icon_b:

அர்த்தம் மாறுவது பொருள் பிழைன்னு நினைச்சேனே.
ஒரு சொல் தான் சொல்லவரும் தனது உண்மையான அர்த்தத்தை (எழுத்தாலும் அர்த்தத்தாலும்) இழந்து வருமேயானால் அது சொற்பிழை (இதை தொல்காப்பியர் என் கனவில் வந்து சொன்னார்..) :D
 
அடுத்த காட்சி எந்திரனை ஆர்மி அதிகாரிகள் பரிசோதனை செய்வது. A.I.R.D (ஆர்ட்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் ரிசர்ச் அண்ட் டெவலப்மெண்ட்)நிறுவனம் முதல்ல ரிஜெக்ட் செய்ததை ஆர்மி ஏன் மறுபடி எவால்யூவேட் செய்யுது.

ஏன்னா சங்கர் சொல்ல வந்ததை தெளிவாகச் சொல்லலை. அதாவது நம்ம போரா எந்திரன் பிரசவம் பார்த்த உடனே நான் அப்ரூவ் பண்ணிருவேன் என்று சொல்றார் இல்லையா, அதை வச்சு அவங்க அப்ரூவ் செய்திட்டாங்க என நாம எடுத்துக்கணும்.

எனக்கென்னவொ வசீகரன் 10,15 விஜய்காந்த் அப்புறம் அர்ஜூன் படமெல்லாம் போட்டுக் காட்டி டார்ச்சர் பண்ணிட்டு எவால்யுவேஷனுக்கு கூட்டிகிட்டுப் போயிருந்தா அந்த மாதிரி ரோஜாவை வெடிகுண்டில் சொருகி கவிதை பாடியிருக்காது எந்திரன் என்று தோணுது.

எந்திரன் வேண்டுமென்றே சொதப்பியதால் கோபமாகிற அப்பா (நிஜமாவே விஞ்ஞானி கேரக்டர் எந்திரனோட அப்பா மாதிரிதான் காட்டி இருக்காங்க) நிஜமாவே வெட்ட்டிப் போடறார். கொண்டு போய் குப்பையில் கொட்டச் சொல்றார்.

இந்த இடத்தில் கொஞ்சம் நிற்க...

படத்தில் பேட்டரி லோ ஆகி ட்ரெய்ன்ல இருந்து தூக்கி வீசப்பட்ட எந்திரன் கொஞ்சம் கழிச்சு ரீபூட் ஆகி எழுந்து சார்ஜ் செய்துக்கிறார்.

இங்கேயும் அப்படித்தான். ரொம்ப நேரம் கழிச்சி மயக்கத்தில் இருந்து விழிச்சு வெட்டப்பட்ட கை கால் எல்லாம் தூக்கி தாறுமாறா மாட்டிகிட்டு கிடைச்ச கார்ல ஏறிக்கிறார். இதைக் கொஞ்சம் தெளிவாக காட்டி இருக்கலாம்.

எந்திரனை வெட்டிப் போடற வசீகரன் உணர்ச்சி வசத்தில் செய்யற இன்னொரு தப்பு அதனுடைய சாஃப்ட்வேரை அழிக்காம விடுவது. அதாவது வெறும் மூர்க்கத்தனமான கோபத்தில் வெட்டிப் போட்டு கொண்டு போய் குப்பையில் போடுங்கன்னு சொல்றாரே தவிர எப்படி இறுதியில் மற்ற எந்திரங்களை அழிக்கிறாரோ, எந்திரன் பிடிபட்ட எந்திரத்தை அழிக்குதோ அப்படி அழிப்பதில்லை.

அதாவது வசீகரனுக்கும் எந்திரனுக்கும் இடையில் உள்ள உணர்ச்சிப் பூர்வமான பிணைப்பை இந்தக் காட்சி கலைக்காம காட்டுது.

குப்பையில் எந்திரனைக் கொட்டி விட்டு மறக்க முடியாமல் கவலையோடு இருக்கும் வசீகரனை சனா பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தேத்தறாங்க என்பதையும் ஒரே காட்சியில் சட்டுன்னு முடிச்சி, கிளிமஞ்சாரோ பாட்டைப் போட்டு ரிலாக்ஸ் பண்ணி ரெடியாகுங்க இனி மசாலா ஆரம்பம் என்று சொல்றார் சங்கர்.

கிளிமஞ்சாரோ என்பது ஒரு அணைந்த எரிமலை ஆப்ரிக்காவில் இருக்க.

http://en.wikipedia.org/wiki/Mount_Kilimanjaro

மொகஞ்சதாரோ என்பது இறந்தவர்கள் மேடு..

http://en.wikipedia.org/wiki/Mohenjadaro

இப்படி சம்பந்தமே இல்லாத பெயர்களை எல்லாம் இணைத்து ஒரு காதல் பாட்டு எழுதி அதை சூப்பர்னு சொல்ல தமிழனை விட்டா ஆள் கிடையாது.

ஆப்பிரிக்காவில் உள்ள மலையின் பேரு, இந்தியாவில் உள்ள் ஒரு புதையுண்ட நகரத்துப் பேரு எல்லாம் சேர்த்து அச்சுபிச்சு ன்னு ஒரு பாட்டு எழுதி பெரு நாட்டின் மச்சுபிச்சு மலையில் சுட்டிருக்காங்க.

காதல் பாட்டு.. மன்னிச்சுடலாம்.

குப்பையில் கொட்டப்பட்ட எந்திரனோட நியூரா ஸ்கீமை ஹேக் செய்வதற்காக அவனைத் தேடிப் போற போராவுக்கு எந்திரன் இன்னும் நினைவோட இருக்கறதைப் பார்த்து மகிழ்ச்சி. தான் வாழணும், சனா தனக்கு வேண்டும் அப்படின்னு அழும் எந்திரனோட டீல் பேசறார். நியூரா ஸ்கீமை டௌன் செய்து எந்திரனுக்கு வாழ்வு கொடுக்கிறார்.

எந்திரன் எழுந்த உடனே கேள்விப்படுவது சனா / வசீகரன் கல்யாணம் செய்து கொள்ளப் போவதைப் பற்றிதான். சனாவை கடத்த கிளம்பறார்.

தொடரும்
 
அது போரா சொன்னது.. நம்பகமானது இல்லைன்னு படத்திலயே தெளிவா சொல்லிடறாங்க.... சோ அது சரிதான்!!



அர்த்தம் மாறுவது பொருள் பிழைன்னு நினைச்சேனே.
ஒரு சொல் தான் சொல்லவரும் தனது உண்மையான அர்த்தத்தை (எழுத்தாலும் அர்த்தத்தாலும்) இழந்து வருமேயானால் அது சொற்பிழை (இதை தொல்காப்பியர் என் கனவில் வந்து சொன்னார்..) :D


ஆனா அதுக்கு சானா, சனா இரண்டுக்கும் என்ன அர்த்த வேறுபாடு என்று சொல்லணும் தம்பி!!!
 
நேற்றுத்தான் வெள்ளித்திரையில் படம் பார்த்தேன் , பெரிய பெரிய ஓட்டைகள் .... திரையில் இல்லை கதையில் .... சுஜாதா இல்லாத குறை பரவலாகத் தெரிகிறது.

உலகத்திலேயே யாருமே கண்டுபிடிக்காதா அதிநவீன ரோபோவை எந்த வித பாதுகாப்பும் இல்லாமல் நம்ம ஊரு பார்க் - க்கு நடுவுல ஒரு வீட்டைக்கட்டி அதில ரெண்டு அல்லக்கை உதவியாளர்களை வைத்து ரஜினி ரோபோவை தயார் செய்கிறாராம் ..... ரோபோ ரஜினியை வெறும் கோடாலியால் உடம்பில் பெரிய வலு இல்லாத வசிகரன் வெட்டி சாய்ப்பது சிரிப்பாக வருகிறது ... அப்போதைய டயலாக் டெலிவரி தளபதி படத்தை நினைவு படுத்துகிறது ........படத்தில் பல காட்சிகளில் என் மனதில் கேள்விக்குறியே ......

மிகவும் நோகடித்தது கேமிராமேன்தான் . சில பிரமாண்டங்களை மனதில் பதிய வைக்க தவறிவிட்டார். காட்சிகள் அதிகமாக மிகவும் கிளோசப் காட்சிகளாகவே படம் எடுக்கப்ப்பட்டு உள்ளது . ஐஸை அருகில் பார்க்க ஆசை பட்டார் போலும்.

ARR என்ன ஆச்சு இவருக்கு .... பாடல்களை தவிர பின்னணியில் உங்க கிட்ட இன்னும் அதிகமா எதிர்பார்க்கிறோம் பாஸ்.

டைரக்டர் - சங்கர் பல காட்சிகளில் ஆதிக்கம் செலுத்தியதால் ரஜினிக்கு நடிக்கும் வாய்ப்பு குறைந்து விட்டதாகவே நினைக்கிறேன். ஒருசில காட்சிகளில் ரஜினி அதையும் மீறி ஜொலித்திருக்கிறார். படத்தில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் ரஜினி என்னும் சூப்பர் கம் போட்டு ஒட்டி இருக்கிறார்கள்.

எல்லோரும் சம்பாதிக்க .....திரை அரங்கினருக்கு கையை கடிக்கத்தான் செய்யும்.....:traurig001: :traurig001: :traurig001:
 
நேற்று குடும்பத்தோடு இரவு காட்சிக்கு சென்றிருந்தேன். முதல் ஷாக்.... சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்துக்கு போன உடனேயே டிக்கெட் கிடைத்தது.... இரண்டாவது ஷாக்....படம் வெளியாகி 20 நாட்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் தியேட்டரில் ஆட்களே இல்லாமல் வெறிச்சோடி கிடந்தது....!

படத்தை பற்றி என்னத்த சொல்ல....? முதல்பாதி கொஞ்சம் பரவாயில்லை ரகம்.....! இரண்டாம் பாதி....? ப்ச்ச்ச்ச்ச்ச்......!!!!! ஒண்ணும் சொல்றதுக்கில்ல.....! ஸயின்ஸ்ஃபிக் ஷன் என்ற பெயரில் மொத்தத்தில் பல நூறு கோடி ரூபாய்களை கொட்டி பிரமாண்டமான ஒரு அறுவையை கொடுத்திருக்கிறார்கள். ஷங்கரும் ரஜினியும் ரஹ்மானும் இணைந்து கொடுத்த சிவாஜியின் அமோக வெற்றி இந்த படத்துக்கு நிச்சயமாக இல்லை.

இந்த படத்துக்கு போயே ஆக வேண்டும் என ஆர்வத்தோடு எங்களை அழைத்துச்செல்ல வைத்தனர் என் மகளும் மகனும்...! ஆனால் பாவம்..... படம் முடிந்து வெளியே வந்தபின் அவர்களின் முகத்தில் ஓடிய ஏமாற்றரேகையை என்னால் நன்கு உணரமுடிந்தது.

.
 
அன்பர் ஆதவா அவர்களே ,

இந்திரன் படத்தை தயாரித்தவர்கள் எந்தளவு கடின உழைப்பை மேற்கொண்டார்களோ அதே அளவு உழைப்பைக் கொடுத்து நீங்கள் விமர்சனம் கொடுத்து இருக்கிறீர்கள் . வாழ்த்துக்கள்
 
இந்த வயதிலும் சூப்பர்ஸ்டாரின் உழைப்பும்.. ஆர்வமும்.. வேகமும் அதிசயிக்க வைக்கிறது...
வெத்து பந்தாவுக்காய் அலையும் இப்போதைய
இளம் நடிகர்கள் நிச்சயம் சூப்பர் ஸ்டாரை பின்பற்ற வேண்டும்...

அதே அதே சபாபதி!!! :icon_b::icon_b:

கமல் பண்ணியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோன்னு தோனுது.
ஏன் இந்த கொடூர ஆசை?? ரஜனி அளவிற்கு கமல் இறங்கி படத்தில் நடித்திருக்க மாட்டார். எல்லாவற்றிலும் தலையை நுழைத்து எல்லாவற்றையும் கூழ் ஆக்கியிருப்பார்.
கணனி வரை கலை பயன்படுத்த வேண்டிய இடங்களிலும் தானே நடிக்க வேண்டும் என்றெல்லாம் அடம்பிடித்திருப்பார் (நன்றி: ஒரு தொடர் எஸ்.எம்.எஸ்). :smilie_abcfra:

புத்த மதத் தத்துவங்களை இந்தப் படத்தை மாதிரி எந்தப் படமும் விளக்கவில்லை.

"ஆசையே அழிவிற்குக் காரணம்"
ஆசை துறத்தலை அடிப்படையாகக் கொண்ட புத்த மதத்தின் கதை என்பது தாமரை அண்ணா எழுதும் வரை உறைக்கவில்லையேஏஏஏ!!!
 
படம் வெளியாகி கிட்டத்தட்ட 40 நாட்களுக்குப் பிறகுப் பார்த்தேன். அதுவும் இரவுக் காட்சி. திரையரங்கத்தில் 75 சதவீதம் நிரம்பியிருந்தது. அதில் பலர் இந்தப் படத்தை பலமுறை பார்த்தவர்கள்.

நான் குடும்பத்துடன் பார்த்தேன். படம் முடிந்ததும் என் மனைவியும், மகளும் சொன்னது...இன்னொருமுறை பார்க்க வேண்டும். ஒரு நிமிடம்கூட போரடிக்காமல்....பிரம்மாண்டத்தைத் திரையில் காட்டிய உழைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்.

நான் பொதுவாய் உழைப்புக்கு மதிப்புக்கொடுப்பவன். அதனால் ஓட்டைகளை எண்ணுவதற்க்காகப் படம் பார்க்கப் போவதில்லை. நல்லவற்றை ரசிக்க மட்டுமே போவதால் இந்தப் படத்தை என்னால் ரசிக்க முடிந்தது.

ரஜினி....உண்மையான திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். ரோபோக்களுக்கு இடையில் வசீகரனைக் கண்டுபிடிக்க....முயற்சி செய்து...”ரோபோ” எனக் கிண்டலாக சொல்லும் அந்த வசன உச்சரிப்பு அவரால் மட்டுமே முடியும் ஒன்று.

மொத்தத்தில் பிரம்மாண்ட வசூலைக் குவித்து, திரையரங்க உரிமையாளர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்த எந்திரன்.....மிக அருமை. திருப்தியளித்த படம்.
 
திரையரங்குக்குச் சென்று பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்..
வாய்ப்பு அமையவில்லை.

குறுந்தகடு ஒன்று நேற்று வீடு தேடி வந்தது. வீட்டுத் திரையரங்கில் ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது. எதிர்ப்பார்ப்புக்கள் அதிகமாக இருந்ததால் இருக்கலாம்.. ஓரளவுக்கு ஏமாற்றமும். அதிலும் இரண்டாம் பாகம், கார்ட்டூன் படங்களைப் போல் ஆகி விட்டது.

பிரம்மாண்டத்தை ரசிக்கலாம் என்றாலும், அடி மனதில் ஒரு நெருடல் .. ஓர் 'எந்திரனின்' உழைப்பு, பணம், முதலியவையைக் கொண்டு 100 'பசங்க' வந்தால் எப்படி இருக்கும் என்று...!!:)
 
பிரம்மாண்டத்தை ரசிக்கலாம் என்றாலும், அடி மனதில் ஒரு நெருடல் .. ஓர் 'எந்திரனின்' உழைப்பு, பணம், முதலியவையைக் கொண்டு 100 'பசங்க' வந்தால் எப்படி இருக்கும் என்று...!!:)

அருமையாய் சொன்னீர்கள் பால்ராசு
 
விமர்சனங்கள், வியாபாரம், மசாலாத்தனம், ரசிகர் கூட்டம் என்பதையெல்லாம் தாண்டி இந்தப்படம் இளைஞர்களுக்கு ஒரு விஷயத்தில் படிப்பினை.அதுதான் உழைப்பு.

நன்றி!
 
Back
Top