எந்திரன் - விபரீதத்தின் விளைவுகள்.

ஆடிமாசம் பைனல் எக்ஸாம் வராது ஆனா ஃபைனல் எக்ஸாம் வர்ற அன்னிக்கு மாரியம்மாவுக்கு கூழ் ஊத்துவோம்ல....

அந்த ஃபைட்ல பார்த்தீங்கன்னா, இரும்பு ராடுல அடிவிழுகிறமாதிரி சவுண்டு எஃபெக்ட் கொடுத்திருப்பாங்க.. அப்படி அடிச்சா, மாரியம்மாவுக்கு கூழ் ஊத்தின கை, இப்ப கூழாகியிருக்கும், பார்க்க வரும் ஆடியன்ஸ் முகம் சுளிக்கிறமாதிரி ஆயிடும். சிலபேர் வாந்தி எடுப்பாங்க.. அதனால நாம U சர்டிஃபிகேட்டுக்கு ஏத்தமாதிரிதான் எடுக்கணும். அதெஇயே நல்லா கவனிச்சீங்கன்னா, கிட்டத்தட்ட முப்பது நாப்பது பேரு, குறுகலான இடம், சுமார் பதினஞ்சு நிமிசத்தில அடிச்சு முடிக்கிறார் எந்திரன். தனுஷா இருந்தா, மைதானத்தை தேடி ஓடவேண்டியிருக்கும்.

அட ஆமாம்.. தனுஷ் எந்திரனா நடிச்சிருந்தா சிலரைத் தள்ளி விட்டுட்டு ஐஸோட டிரெய்னை விட்டு இறங்கி இருப்பாரு. அடியாட்கள் செயினைப் பிடிச்சி இழுத்து ட்ரெய்னை நிப்பாட்டிட்டு வந்து அடிவாங்குவாங்க.
 
இதற்கடுத்து வரும் காட்சி படத்தின் அடுத்த திருப்பம். நிராகரிப்பால் நொந்து வரும் எந்திரன் தீப்பிடித்து எரியும் கட்டிடத்தில் இருந்து சிலரைக் காப்பாற்றுகிறான். அதில் கடைசியாகக் காப்பாற்ற வேண்டியது ஒரு பெண்ணை.

அந்தக் கட்டிடம் என்னவோ அரசின் அடுக்குமாடிக் குடியிருப்பு மாதிரி இருக்கு. அதில் குளியல் தொட்டியில்(??) குளித்துக் கொண்டிருக்கும் பெண்ணைக் காப்பாற்றுகிறான் எந்திரன்.

அந்தப் பெண்ணை கூடியிருக்கும் கூட்டத்தினர் புகைப்படம் எடுக்க அவமானத்தில் குறுகிப் போகும் பெண் சாலையில் ஓடும் வாகனத்தில் பாய்ந்து இறந்து விடுகிறாள்.

ஆமாங்க அதேதான். பழி சுமத்த ஒருத்தர் கிடைச்சுட்டா சாதாரணமா நம்ம மனுசங்க என்ன செய்வாங்களோ அதையேத்தான் செய்யறாங்க, உணர்வுகள் இல்லாததால்தான் மானம் என்பது எந்திரனுக்குத் தெரியலை என்று சொல்றாங்களாம். அந்தச் சாவுக்குக் காரணம் எந்திரனாம்.

உணர்வுகள் புரிந்த மனிதர்கள்தான் ஃபோட்டோ எடுத்தாங்க என்பதை வசதியா எல்லோரும் மறந்து போயிடறாங்க. உண்மையில் உலகத்தில் இன்று நடந்து கொண்டிருப்பது இதுதான், ஒரு அப்பாவி தவறிப் போய் செய்கின்ற சிறிய தப்பு கிடைச்சா போதும் தங்களோட தப்பு எல்லாத்தையும் அவன்மேல் சுமத்தி அவனை ஒரு மாபெரும் குற்றவாளியா நடத்தறதுதான் இன்று உலகத்தில் நடந்துகிட்டிருக்கு. எந்திரன் என்ன செய்திருக்கணும் என்று பேசறவங்க யாருமே தான் என்ன செய்திருக்கணும் என்று சொல்ல மாட்டாங்க. அதாங்க உலகம்.

இங்கும் அதிபுத்திசாலியான வசீகரனுக்கு அது எந்திரன் தவறில்லை என்றுச் சொல்லத் தெரியலை, விமர்சனம் படிச்சி கவிதையை மாத்திக்கிற ஆதன் மாதிரி தன் படைப்பை யாரும் குறைசொல்லாத ஒண்ணா மாத்தணும்னு நினைக்கிறாரே தவிர அதில எந்திரனோட தப்பு ஒண்ணுமே இல்லையேன்னு யொசிக்கறதே இல்லை. கொடூரமா எரிஞ்சிகிட்டிருக்கிற தீயின் வெப்பநிலை 700 டிகிரி. இதில துணியை எடுத்துப் போர்த்தணும்னு சொல்லி பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டறாரு. துணி எடுத்து போர்த்த வேண்டிய பெண்கள் ஐயய்யோன்னு அலற, தலையைத் திருப்பிக்க வேண்டிய ஆண்கள் கேமிராக்களைத் திருப்பறாங்க. ஆனால் எந்திரன் செய்தது மாத்திரம்தான் தப்பாம்.

ஆக தன் படைப்பு சரியா இருந்தாலும் விமர்சனத்தில் சொன்னது தப்புன்னு எதிர்த்துச் சொல்ல வாதத் திறமை இல்லா வசீகரன், எந்திரனுக்கு உள்ள உணர்வுகளை ஊட்ட முடிவு எடுக்கிறார்.

ஆக கதையின் முடிச்சு எந்திரனுக்கு உள்ள உணர்வுகள் இல்லாத குறை என்பதை விட தன் படைப்பை வியாபாரப் படுத்தத் தெரியாத, அறிவிருந்தும் வாதத் திறமையற்ற ஒரு விஞ்ஞானி என்பதுதான் உண்மை.


அதனால் கடைசியில் அவர் தன் புத்திசாலித்தனத்தால் எந்திரனை மடக்கினாலும் அவர் ஹீரோ இல்லை. வெறும் துணைக் கதாபாத்திரம்தான்.

ஒரு இயல்பான காட்சியை இங்கு வடிவமைத்த சங்கர் ஊடகங்களுக்கு குட்டு கொடுக்க கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஏன் என்பதற்கு காரணங்கள் இருக்கலாம். (:D:D:D:D)

உணர்வுகள் கிடைக்கும் பொழுது இன்னொரு ஆக்ஸிடெண்டும் நடக்குது. மின்னல் தாக்குது எந்திரனை. அறிவியல் வல்லுனர் இல்லாமல் ஒரு விஞ்ஞானக் கதையை நகர்த்துவது இதில் கஷ்டம்தான்.

எந்திரன் உண்மைக் குறை அதுதான். மின்னல்தாக்கினால் எந்திரன் சேதமடைந்தால் அது எப்படி யுத்த களத்தில் போராட முடியும்? இயந்திர மனிதனுக்கு அது மாபெரும் பலவீனம். அதுவும் பருவ மழை பொழியும் இந்தியாவில் மின்னல் என்பது சகஜமான ஒன்று. எந்திரனை கோடாலியால் கொத்த முடிந்தால் லேசர் பீமை எதிர்த்து என்ன செய்வான் எந்திரன்? இதெல்லாம் எந்திரன் வடிவமைப்பில் உள்ள குறைகள். ஆக அதியற்புத புத்திசாலி என்று காட்டப்படும் வசீகரன் பாத்திரம் அவ்வளவு ஒன்றும் புத்திசாலித்தனமாகச் செதுக்கப்படவில்லை என்பதே உண்மை. ஒருவேளை சுஜாதா இருந்திருந்தால் இந்தக் காட்சியை அனுமதித்து இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். மின்னல் தாக்குதல் சொதப்பல்.

எந்திரனுக்கு மன உணர்வுகள் உண்டான பின் ஏற்படும் வாக்குவாதம் ரசிக்கத் தக்கதாய் இருக்கிறது.

ஏண்டா, ஏண்டா இப்படித் தப்புத் தப்பா செய்கிற..

நீங்க சொல்ற எல்லாத்தையும் நான் சரியாத்தான் செய்யறேன், அப்படியும் அது தப்பாகுதுன்னா, தப்பு என்னிடத்தில் இல்ல, உங்களிடத்தில்தான் இருக்கு.


இதான் என்னைப் பொறுத்த வரை .. சரியான அணுகுமுறை.. இப்படித்தான் அணுகணும் பிரச்சனைகளை. தெளிவான அணுகுமுறை. நம்மைக் குற்றம் சொல்றாங்களே என்று பார்க்காமல் எது தவறு எது சரி என நிதானமா பார்க்கணும். இதே அணுகுமுறையில்தான் காட்சிகளையும் நான் பார்த்தேன்.

ஆக உணர்வு வந்த எந்திரன் எப்படி வித்தியாசமா செயல்பட்டு மக்களின் பேராதரவைப் பேறுகிறான் என்பது அடுத்த சீன்.

தொடரும்
 
ஏற்கனவே வசீகரன் மனசொடைஞ்சு போனதால போராவோட போரிட அவ்வளவு தைரியமில்லாம போறாரு. விஞ்ஞானிக்கும் அடிக்கடி மூளை சருக்குமில்ல.
அந்தச் சாவுக்குக் காரணம் எந்திரனாம்.
இதை போரா போன் பண்ணி சொல்றப்போ வசீகரனால எதுவும் பேசமுடியலை, போராவோட வில்லத்தனத்தை முழுசா நம்பிட்டார் வசீ. தப்பு எங்க இருக்குன்னு அவரால சட்டுனு தீர்மானிக்க முடியலை... அதனலதான் கார்ல போறப்போ, வசீ, சிட்டியிடம், துணி போர்த்தி எடுத்துட்டு வரணூம்னு தெரியாதான்னு கேட்கிறார். அதுக்கு சிட்டி சாமர்த்தியமா தன்னோட கட்டளைகளை மட்டுமே செஞ்சதை சொல்லும்>..

சரி நீங்களே சொல்லுங்க, அந்த பெண்ணை எப்படி காப்பாத்தியிருகக்முடியும்? துணிகள் எல்லாம் எரிஞ்சு போச்சு, (அப்படியும் சிட்டி துணிகளைத் தேடும் முதலில்..) சிட்டியோட கட்டளையே எல்லாரும் உயிரோட இருக்கணும்ங்கறதுதான்.. ஆனா அந்த பெண்ணுக்கு அந்த நிலைமையில சிட்டி ஒரு ரோபோ அப்படின்னு நினைக்கற அளவுக்கு நேரமில்லை. தன்னை இத்தனை பேரும் பார்க்கவெச்சுட்டது என்பதுதானே அவளது மரணத்துக்குக் காரணம்? அப்போ அந்த மரணத்துக்கு காரணம் சிட்டிதானே? பேசாம கட்டிடத்திலயே எரிஞ்சு போயிருந்தா குறைஞ்சபட்சம் “மானம்” போகமலிருந்திருக்கும் இல்லையா? அதுவும் ஒரு லைவ் டெலிகாஸ்ட் வேற...

அந்த மின்னல் காட்சி, அதிக பவர் காரணாக இருக்கலாம். அதுக்குப் பிறகு அதை அவர் சரிசெய்துவிடுவதாக காட்சிகள் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்!!

பல பேர் சொன்னாங்க, எப்படி அறைமுழுக்க தியரி நடத்தி உணர்வுகளைப் புரியவைக்க முடியும்னு.... ஆனா பாருங்க, தியரிக்கு அப்பறம் ப்ராக்டிகல் நடத்தினார் (சுடுகாடு, குழந்தை சப்தம்,) எந்திரம் சீக்கிரமாவே புரிஞ்சிக்கும் இல்லையா?
 
சரி நீங்களே சொல்லுங்க, அந்த பெண்ணை எப்படி காப்பாத்தியிருகக்முடியும்? துணிகள் எல்லாம் எரிஞ்சு போச்சு, (அப்படியும் சிட்டி துணிகளைத் தேடும் முதலில்..) சிட்டியோட கட்டளையே எல்லாரும் உயிரோட இருக்கணும்ங்கறதுதான்.. ஆனா அந்த பெண்ணுக்கு அந்த நிலைமையில சிட்டி ஒரு ரோபோ அப்படின்னு நினைக்கற அளவுக்கு நேரமில்லை. தன்னை இத்தனை பேரும் பார்க்கவெச்சுட்டது என்பதுதானே அவளது மரணத்துக்குக் காரணம்? அப்போ அந்த மரணத்துக்கு காரணம் சிட்டிதானே? பேசாம கட்டிடத்திலயே எரிஞ்சு போயிருந்தா குறைஞ்சபட்சம் “மானம்” போகமலிருந்திருக்கும் இல்லையா? அதுவும் ஒரு லைவ் டெலிகாஸ்ட் வேற...

அந்த மின்னல் காட்சி, அதிக பவர் காரணாக இருக்கலாம். அதுக்குப் பிறகு அதை அவர் சரிசெய்துவிடுவதாக காட்சிகள் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்!!

பல பேர் சொன்னாங்க, எப்படி அறைமுழுக்க தியரி நடத்தி உணர்வுகளைப் புரியவைக்க முடியும்னு.... ஆனா பாருங்க, தியரிக்கு அப்பறம் ப்ராக்டிகல் நடத்தினார் (சுடுகாடு, குழந்தை சப்தம்,) எந்திரம் சீக்கிரமாவே புரிஞ்சிக்கும் இல்லையா?

ஏம்பா ஆபத்துக்கு பாவம் இல்லை என்கிற பழமொழியை யார் கண்டுபிடிச்சது? மனுஷனா இல்லை எந்திரனா? மானத்தை உயிரா நினைக்க வேண்டிய மக்களே வெட்கமில்லாம ஃபோட்டோ எடுக்கறப்ப ஒரு எந்திரனைத் தப்பு சொல்லலாமா?

இதே நம்ம சமூகத்தில்தான் வன்கொடுமைக்கு ஆளான பெண்களை மணம் செய்து கொண்டு மறுவாழ்வு கொடுங்க என்று காந்தி சொன்னார். ஞாபகமிருக்கா?

இந்த விஷயத்தில் தவறு மனிதர்கள் மீதுதான். உணர்வுகளை ஊட்டும் காட்சியை நான் தப்பு சொல்லலை, ஆனால் மின்னலால் இயந்திரமனிதன் பாதிக்கப் படக் கூடாது. அப்படி வடிவமைத்தால்தான் அதை ஏற்றுக் கொள்வார்கள்.

நீங்க சொன்னமாதிரி எந்திரன் எதிரி கையில் மாட்டினால் அழித்துவிடலாம். அதற்கும் கண்ட்ரோல் இருக்கு என்று காட்டுகிறார்கள் தெரியுதா?

அப்புறம் நியூரோ சிஸ்டத்தை போராவால் எடுக்க முடியலை. எந்திரனாத்தான் தருகிறான். உண்ர்வில்லாவிட்டால் கட்டளையை மீறியே இருக்க மாட்டானே.

அத்தனை எந்திரன்களையும் ஒரே இடத்தில் இருந்து கட்டுப்பாடு செய்யவும், செயலிழக்கவும், அழிக்கவும் முடியும் என்பதை முதல்ல சொல்லாமல் கடைசியில் காட்டறாங்க. தொழில் நுட்பத்தில் அதெல்லாம் சாத்தியம்.

அணுகுண்டு பொத்தானை வச்சிருக்கிற கமாண்டோ மட்டும் எப்பவும் நல்லவனாவே இருப்பான் என்று எந்த அடிப்படையில் நம்பறோமோ அதே நம்பிக்கையை இராணுவத்தளபதிகள் மேல வச்சிதான் ஆகணும்.
 
எந்திரன் பிரசவம் பார்க்கும் காட்சி எல்லோரும் பாராட்டப்படுகின்ற காட்சி. எந்திரன் தானா முன்வந்து தனக்கு பிரசவ மருத்துவம் தெரியும் சொன்னவுடன் டாக்டர் அனுமதிக்க முடியாதுன்னு சொல்ல, டாக்டரின் அனைத்து சந்தேகங்களையும் பதில் சொல்லி நம்பிக்கை பெற்றி பிரசவம் பார்க்கிறான் எந்திரன்.

இந்தக் காட்சியில் இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ்மெண்ட் முடிகிற காரியம்தான். எந்திரன் தான் சொல்கிற முறையை முதலில் புரஜக்ட் செய்து டாக்டருக்கு விளக்கி, டாக்டர் இது சரியா வரும் என்ற ஒப்புதல்களைக் கொடுத்து இருக்கலாம். வெறும் பேச்சு மட்டுமே போதும் என முடிவு செய்ததை விட இது இன்னும் அதிக வரவேற்பு கொடுத்திருக்கும். எந்திரன் குழந்தையை ஸ்கேன் செய்து வை-ஃபை வழியாகக் காட்டுவது நல்ல வரவேற்பைப் பெற்றது இல்லையா? அதுமாதிரிதான்.

ஆக்சுவலா உள்ள உணர்வுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமில்லை. எந்திரனுக்கு உள்ள உணர்வு இல்லையென்றால் கூட இதைத்தான் செய்திருப்பான் இல்லியா? ஆனா நம்முடைய உணர்வு எந்திரனுக்கு உணர்வு இருப்பதால்தான் இது நடந்தது என்று நினைச்சுக்க வைக்குது.

அதன்பின் சானா கொடுக்கிற முத்தம் எந்திரனுக்கு காதல் உணர்வைத் தூண்டுது. இதுதான் உள்ள உணர்வினால் உண்டான ஒண்ணு. பிரசவத்தில் வெற்றி அல்ல. ஆனால் உணர்ச்சிப் பெருக்கில் இருக்கிற நாம் அதைக் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

போனமுறை சானா முத்தம் கொடுத்தப்ப அதுக்கு ஏன் கன்னத்தை எச்சில் பண்ற என்று கேட்கிற எந்திரன் இப்ப அப்படியே இலேசாகி காதல் தென்றல் உரச மெல்லிய இறகாக பறக்க ஆரம்பிக்கிறான். பாருங்க வில்லன் என்னை மாதிரியே உணர்ச்சி உள்ள எந்திரனால்தான் பிரச்சனையே வரும்னு கரெக்டா சொல்லறார்.

இதுக்கு பின்னால் அடுத்த அதிகம் விவாதத்திற்கு உள்ளான காட்சி "ரங்கூஸ்கி". இந்தக் காட்சியை நவீனத்துவ கோணத்தில் இரசித்தால்தான் புரியும்.

காதல் வயப்பட்ட எந்திரனுக்கு படுக்கை நோகிறது. காதல் மின்சாரம் அவனோட சாப்பாட்டு மின்சாரத்தை விட சுவையாக இருக்கு. எதுக்கு இராத்திரி முழுக்க சார்ஜ் பண்ணிக்கிறது? ஒரு முத்தத்தில் ஜிவ்வுன்னு சார்ஜ் ஏறிடாதான்னு மதி கவித்துவமா சிந்திக்குது.

அதென்னமோ தெரியலை எல்லா ஹீரோயின்களும் " பப்பரப்பா " ன்னு ஜன்னலைத் திறந்து வச்சுட்டேத் தூங்கறாங்க. எந்திரன் வந்து முத்தம் கேட்க, அப்ப நீ சாதிச்ச, முத்தம் தந்தேன். இப்ப என்ன சாதிச்ச என்று சானா கேட்க, என்ன செய்யணும்னு கேட்கிறான் எந்திரன். என்னை கடிச்ச கொசுவைக் கூட்டிகிட்டு வந்து என்கிட்ட மன்னிப்புக் கேட்கச் சொல்லு என்கிறாள்.

காதல்னா புத்திகெட்ட காரியமெல்லாம் செய்யத் தோணும். அதைக் காட்டத்தான் இந்தக் கொசு மேட்டர். அது ஒரு படிமம். உருவகம். பைசா பிரயோஜனம் இல்லாத காரியமெல்லாம் காதலிக்காகச் செய்யும் பொழுது பெரிய சாதனையாத் தோணும் என்பதை அழகா இந்தக் காட்சியில் காட்டறார் சுஜாதா. இது சுஜாதாவோட கடி என்பதைக் காட்டத்தான் சுஜாதாவின் ஒரிஜினல் பேரான ரங்கராஜன் என்பதில் இருந்து ரங்கூஸ்கி என்று பெயர் வச்சிருக்கார் அது. ( இந்த சீன் பார்க்கும் போது இனி என் பேரும் ஞாபகம் வருமே!)

காதல் முட்டாள்தனமான காரியங்களைக் கூடச் சிரத்தையாய் செய்ய வச்சிருது என்பதைத்தான் இந்தக் காட்சியில் சொல்லி இருக்கார் சுஜாதா. கொசுவைத் துரத்திகிட்டு கூவத்திற்கு போய் அங்கே கோடிக்கணக்கான கொசுக்களுடன் மல்லுக்கு நின்னு ரங்கூஸ்கியை அழைக்க அது போடற மூணு கண்டிஷன்களில் ஒண்ணு...

1. AB+ இரத்தம் வேணும் (ஐஸ்வர்யாவை கல்யாணம் கட்டிகிட்ட அபிஷேக் பச்சன் - ஹி ஹி, அவங்க அப்பா அமிதாப் பச்சன் ... இத்யாதி இத்யாதி வசீகரனின் இரத்தமும் AB+ என்று பின்னால் எந்திரன் சொல்றான்... )


கொசு சானா கிட்ட மன்னிப்பு கேட்க... முத்தப் பரிசு...

காதல் ஒரு மனுசனை எவ்வளவு முட்டாள்தனமான காரியத்தையும் சிரத்தையோட செய்ய வைக்கிறது என்பதை நக்கலாக எந்திரனின் நிக்கல் போல்ட்டு கழண்டு போனதைக் காட்டும் இந்தக் காட்சியை "இண்டெலெக்சுவல் இரசிகர்கள்" என்று தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளும் எழுத்தாள விமர்சகர்கள் கொஞ்சம் கூடப் புரிஞ்சிக்கலை. இந்தக் காட்சிதான் அவர்களின் மிகப் பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கு. ஆனால் இது ஒரு நவீனத்துவக் கவிதைத்துவமான காட்சி என்பதை அவர்கள் உணரும் பொழுது எந்திரன் தியேட்டரில் இருக்க மாட்டான் என்பது உண்மை.

தொடரும்
 
AB+ *(அபிஷேக்/அமிதாப் பச்சன்) அருமையான முடிச்சு.
(இந்தமுறை எல்லாமே நிறையாகவே எழுதிட்டீங்களே.... ஏதாச்சும் சொல்லணுமே!!????)

///ஆக்சுவலா உள்ள உணர்வுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமில்லை எந்திரனுக்கு உள்ள உணர்வு இல்லையென்றால் கூட இதைத்தான் செய்திருப்பான் இல்லியா? .///

இதை நான் ஒத்துக்கமாட்டேன். உணர்வில்லாத சிட்டி, வெறும் கட்டளையை மட்டுமே செய்யும். ஆனா உணர்வு வந்தப்பிறமாகத்தான் சிட்டி தானா முன்வந்து ஆப்ரேஷன் செய்யட்டுமான்னு கேட்குது. சிட்டியோட உள்ள உணர்வு ஆப்ரேஷன் செய்யத் தூண்டுது. ஆப்ரேஷன் பண்ணும்போதும் கூட ” பையன் உன்னமாதிரியே இருக்கான், பார்க்கிறயா? என்று சிட்டி பேசுவதும் உள்ள உணர்வு உள்ளதால்தான்

<அப்பாடி!>
 
AB+ *(அபிஷேக்/அமிதாப் பச்சன்) அருமையான முடிச்சு.
(இந்தமுறை எல்லாமே நிறையாகவே எழுதிட்டீங்களே.... ஏதாச்சும் சொல்லணுமே!!????)

///ஆக்சுவலா உள்ள உணர்வுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமில்லை எந்திரனுக்கு உள்ள உணர்வு இல்லையென்றால் கூட இதைத்தான் செய்திருப்பான் இல்லியா? .///

இதை நான் ஒத்துக்கமாட்டேன். உணர்வில்லாத சிட்டி, வெறும் கட்டளையை மட்டுமே செய்யும். ஆனா உணர்வு வந்தப்பிறமாகத்தான் சிட்டி தானா முன்வந்து ஆப்ரேஷன் செய்யட்டுமான்னு கேட்குது. சிட்டியோட உள்ள உணர்வு ஆப்ரேஷன் செய்யத் தூண்டுது. ஆப்ரேஷன் பண்ணும்போதும் கூட ” பையன் உன்னமாதிரியே இருக்கான், பார்க்கிறயா? என்று சிட்டி பேசுவதும் உள்ள உணர்வு உள்ளதால்தான்

<அப்பாடி!>

ஏம்பா அறிவுக்கும் உணர்வுக்கும் இருக்கும் வித்தியாசத்தை நீயே சரியாச் சொல்லிட்ட.. தானா முன்வருவது எந்திரன் முன்னாலேயே செய்கிறான் இல்லையா?

உணர்வு வருவதற்கு முன்னால பிட்டடிக்க ஐடியா குடுக்கலையா என்ன? மாடிக்குப் போய் ஆன்சரை புரஜக்ட் பண்ணுதில்ல. அதையெல்லாம் கேட்டுட்டா செஞ்சது? அதே மாதிரி உணர்வில்லாட்டியும் ஆபரேஷன் செய்யறேன்னு சொல்லி இருக்கும். உணர்வுக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னா,

ஆப்ரேஷன் பண்ணும்போது ” பையன் உன்னமாதிரியே இருக்கான், பார்க்கிறயா? என்று சிட்டி பேசுவது உள்ள உணர்வு.

அது ஆறுதல் சொல்லுகிற, உள்ள உணர்வைப் புரிந்து கொள்கிற உணர்வு.
ஒருவேளை அதைச் செய்யாமல் இருந்திருந்தால் டாக்டரோ அல்லது சானாவோ செய்யவேண்டியதாய் இருந்திருக்கும்..:icon_b::icon_b: அவர்கள் உணர்வுள்ளவர்கள்தானே செய்திருப்பார்கள்(ளா?):icon_b:
 
ஏம்பா அறிவுக்கும் உணர்வுக்கும் இருக்கும் வித்தியாசத்தை நீயே சரியாச் சொல்லிட்ட.. தானா முன்வருவது எந்திரன் முன்னாலேயே செய்கிறான் இல்லையா?

உணர்வு வருவதற்கு முன்னால பிட்டடிக்க ஐடியா குடுக்கலையா என்ன? மாடிக்குப் போய் ஆன்சரை புரஜக்ட் பண்ணுதில்ல. அதையெல்லாம் கேட்டுட்டா செஞ்சது? அதே மாதிரி உணர்வில்லாட்டியும் ஆபரேஷன் செய்யறேன்னு சொல்லி இருக்கும். உணர்வுக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசம் என்னன்னா,

ஆப்ரேஷன் பண்ணும்போது ” பையன் உன்னமாதிரியே இருக்கான், பார்க்கிறயா? என்று சிட்டி பேசுவது உள்ள உணர்வு.

அது ஆறுதல் சொல்லுகிற, உள்ள உணர்வைப் புரிந்து கொள்கிற உணர்வு.
ஒருவேளை அதைச் செய்யாமல் இருந்திருந்தால் டாக்டரோ அல்லது சானாவோ செய்யவேண்டியதாய் இருந்திருக்கும்..:icon_b::icon_b: அவர்கள் உணர்வுள்ளவர்கள்தானே செய்திருப்பார்கள்(ளா?):icon_b:

சனா படிக்கும்பொழுது அதுக்கு ஹெல்ப் பண்றார் சிட்டி. சனா இப்போ ஒரு அட்மின் மாதிரி, பரிட்சையை எப்படி எழுதப் போறேனோ என்று தெரியலைன்னு கவலைப் படற அட்மினுக்கு “ஹெல்ப்” பன்றார் சிட்டி. அதனால அவரா முன்வந்து செஞ்சாலும் சனாவோட கமாண்ட் சைலண்டா இருக்குன்னுதான் சொல்லுவேன். இப்போ நமக்கு ஏதாவது டரபுல்சூட் இருக்குன்னா நாம காண்டாக்ட் பண்றதில்லையா? அது ஏதாவது பதில் சொல்லும் அல்லது சப்ப கட்டு கட்டும் (விண்டோஸ் எல்லாம் அப்படித்தான் :)) சிட்டி அந்த சமயத்தில டாஸ்க் கம்ப்லீட்டட் நு ஒரு டயலாக் சொல்லும் அது கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருக்கலாம்...

ஆனா எந்தவித கட்டளைகளுமில்லாமல் தானா முன்வருவது இந்த பிரசவ சீன்லதானே??
 
சனா படிக்கும்பொழுது அதுக்கு ஹெல்ப் பண்றார் சிட்டி. சனா இப்போ ஒரு அட்மின் மாதிரி, பரிட்சையை எப்படி எழுதப் போறேனோ என்று தெரியலைன்னு கவலைப் படற அட்மினுக்கு “ஹெல்ப்” பன்றார் சிட்டி. அதனால அவரா முன்வந்து செஞ்சாலும் சனாவோட கமாண்ட் சைலண்டா இருக்குன்னுதான் சொல்லுவேன். இப்போ நமக்கு ஏதாவது டரபுல்சூட் இருக்குன்னா நாம காண்டாக்ட் பண்றதில்லையா? அது ஏதாவது பதில் சொல்லும் அல்லது சப்ப கட்டு கட்டும் (விண்டோஸ் எல்லாம் அப்படித்தான் :)) சிட்டி அந்த சமயத்தில டாஸ்க் கம்ப்லீட்டட் நு ஒரு டயலாக் சொல்லும் அது கொஞ்ச நேரம் கழிச்சு வந்திருக்கலாம்...

ஆனா எந்தவித கட்டளைகளுமில்லாமல் தானா முன்வருவது இந்த பிரசவ சீன்லதானே??

அந்த சீனிலும் இந்த சீனிலும் ஸ்டேடஸ் ஒண்ணுதான்.. அங்க படிக்கலைன்னு சானா சொல்ல பிட்டடி என்கிறான். இங்க தாயும் பிள்ளையும் பொழைக்கறது கஷ்டம் என்று சொல்ல இல்ல முடியும் என்கிறது. இப்படிச் செய்யலாம் என்கிறது.

ஆக இரண்டிலும் ஒரே கண்டிஷன் தான். நான் ஒத்துகிட்ட அந்த ஆதரவா பேசுதே அதுதான் வித்தியாசம்.
 
அந்த சீனிலும் இந்த சீனிலும் ஸ்டேடஸ் ஒண்ணுதான்.. அங்க படிக்கலைன்னு சானா சொல்ல பிட்டடி என்கிறான். இங்க தாயும் பிள்ளையும் பொழைக்கறது கஷ்டம் என்று சொல்ல இல்ல முடியும் என்கிறது. இப்படிச் செய்யலாம் என்கிறது.

ஆக இரண்டிலும் ஒரே கண்டிஷன் தான். நான் ஒத்துகிட்ட அந்த ஆதரவா பேசுதே அதுதான் வித்தியாசம்.

அப்டீன்றீங்க??? :icon_hmm:
சரி ஓகே!! :icon_b:
 
தாமரையும், ஆதவாவும் எந்திரனை அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சி மேயறாங்கப்பா.....சூப்பர் அலசல். இடைவெளிவிட்டு படம் பார்க்கப்போவதும் நல்லதுதான். படம் பார்க்கும்போது இந்த அலசல்கள் கட்டாயம் நினைவுக்கு வரும்.

அசத்துங்க.
 
இதுக்கு அடுத்த சீன் சானாவின் பிறந்த நாள். வைரமாலை வாங்கப்போகும் போது வசீகரனுடன் வாதாடும் எந்திரன் அப்பா - மகன் சண்டையை அழகா படம் பிடிச்சுக் காட்டுது,

வைர நெக்லஸ் வாங்கித்தராட்டி ஸ்டிரைக், சார்ஜ் பண்ணிக்காம உண்ணாவிரதம் இருப்பேன் ஆகியவை நமக்குச் சிரிப்பை வரவழைத்தாலும், உள்ள உணர்வுகளின் வலிமையை காட்ட உபயோகப்படும் காட்சிகள். கடவுள் என்று அழைத்த அதே வாய் உண்ர்ச்சிவசப்பட்ட போது சண்டை போடுது. எதிர்த்து பேசுது. அடம் பிடிக்குது..

தான் ஒரு இயந்திரம் என்பதை அதுக்கு அப்பப்ப ஞாபகப் படுத்த வேண்டிய நிலை.

பிறந்த நாள் பார்ட்டீக்கு சூப்பரா சூட் போட்டுக் கொண்டு கிளம்பும் போதும் சரி ஹேர்ஸ்டைலை மாத்தி மாத்தி அழகு பார்க்கும் போதும் சரி மனிதனா மாறிய இயந்திரத்தைத் தான் பார்க்கிறோம். இரஜினி ஸ்டைலைக் காட்டறேன் பேர்வழின்னு இந்தக் காட்சிகளில் சொதப்பாமல் ஒரு இயந்திரத்தின் உற்சாகத் துள்ளலை அழகாக் கொண்டு வந்திருக்காங்க. அன்னிக்கு லீவு வேற சொல்லி வசீகரனை டிரைவராக்கிடுது எந்திரன்.

வசீகரனுக்கும் எந்திரனுக்கும் இருக்கும் அந்த உறவு மிகுந்த நயத்தோடு வெளிப்படுவது எந்திரனுக்கு உணர்வுகள் புகுத்தப்பட்ட பின்னாலதான். ஒரு செல்லத்தம்பி / மகன் போன்ற உணர்வை வெளிக்கொண்டுவருவதில் சங்கரும் / இரஜினியும் வெற்றி பெற்றிருக்காங்க என்றே சொல்லணும். இந்தக் காட்சிகளை நல்ல தம்பிகள் / மகன்கள் கொண்டவர்கள் கண்டிப்பா மிகவும் ஒன்றிப் பார்க்கிற மாதிரி அமைச்சிருக்காங்க.

வைர நெக்லஸைக் பரிசளிக்கும் எந்திரன், அதை ஒப்புக் கொள்ளும் சானா ஒரே ஒரு வார்த்தைச் சொல்லி இருந்தா கதை அங்கியே முடிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.

பூம் பீம் ரோபோடா பாட்டில் அந்த வரி வருது...

எஃகினிலே பூத்தவனே
எங்கள் காதலைச் சேர்த்தவனே
திருமணத் திருநாள் தெரியுமுன்னே - நீ
எங்கள் பிள்ளையோ?


பாடலில் இந்த வரியை சேர்த்திருக்காங்க. உண்ர்வுகள் வந்த பின்பு சானா இந்த வார்த்தைகளை ஒரு முறைகூட உச்சரிப்பதில்லை.

பாய்ஃபிரண்ட் - டாய்ஃபிரண்ட் என்று குழப்பும் சானா மேல இருக்கும் வரிகளைப் பாடியதாக காட்டியிருப்பதுதான் தப்பு. அந்த வரிகள் கதைக்கு ஒப்பலை. ஏன்னா எந்திரனை மகனா ஒரு வினாடி கூட சானா பார்க்கலை. நீ எங்கள் பிள்ளை மாதிரி என்று ஒரு முறை கூட சானா சொல்லலை. மெஷினும் மனுஷியும் காதலிக்க முடியாது என்று சொல்கிறாளே தவிர தான் வசீகரனைத் தவிர வேற யாரையும் லவ் பண்ணமாட்டேன் என்றும் சொல்லலை. ஆக எந்திரன் வழிதவற முக்கியக் காரணமா சொல்லணும்னா, எந்திரனை சானாவாலும், வசீகரனாலும் சரியா வழிநடத்த முடியலைங்கற காரணம்தான். சானாவோட வாதங்கள் எந்திரன் மெஷின் என்பதை அதிகமா ஹைலைட் பண்ணுவது கதை திருப்பம் கொள்ள உதவுது என்றாலும் அந்தப் பாட்டில் வரும் எங்கள் பிள்ளையோ என்ற வரிதான் உதைக்குது. அவனைப் பிள்ளையா சானா ஒரு வினாடி கூட நினைக்கலை.

அந்த நடனத்திற்கு அப்புறன் நடக்கும் விவாதத்தில் உள்ள பஞ்ச் வசனம் ட்ரெய்லர்ல வந்த வசனம்

"நான் உன்னைப் படைச்சவன். சானா என் காதலி, அவளை நீ காதலிப்பது நீ செய்யறதுக்குப் பேர் துரோகம்"

" எனக்கு சானாவை பிடிச்சிருக்கு. அவளை எனக்கு விட்டுக் கொடுத்திருங்க. அது உங்க அறிவியல் ஆராய்ட்சிக்கு நீங்க செய்யற பெரிய தியாகம்"

அது மட்டுமல்ல.. வசீகரனை விட தான் உயர்ந்தவன். தனக்கு முதுமை கிடையாது. இறப்பு கிடையாது. கடைசி வரை கண்கலங்காமல் காப்பாத்துவேன். வசீகரனுக்கு சமைக்கக் கூடத் தெரியாது.. நான் 24 வகையாச் சமைப்பேன் என அடுக்கிகிட்டே போகுது.

சானாவால் இந்தக் காட்சியில் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை. தன்னோட காதலோட தன்மையை எடுத்துச் சொல்லாம மனுஷன் மெஷின்னு பேசறா.. ஒரு டாக்டரா பேசறாளே தவிர பொண்ணா? ஸாரி...

சானா . வசீகரன் இவர்களின் இந்தத் தடுமாற்றம் தான் கதையைத் திருப்ப உதவுது. வசீகரன் இந்தச் சம்பவத்திலும் தன்னுடைய முட்டாள்தனத்தை மீண்டும் நிரூபிக்கிறார். எந்திரன் எப்பொழுது எதிர்வாதாட ஆரம்பிச்சிருச்சோ, எப்பொழுது தன் இச்சைதான் பெருசு என நினைக்க ஆரம்பிச்சிச்சோ அப்பவே இராணுவ உபயோகத்திற்கு இது லாயக்கில்லை என அவரா புரிஞ்சிகிட்டு இருக்கணும். ஆனால் புரிஞ்சிக்கலை.

கதையை மேலும் நடத்துவது வசீகரனின் முட்டாள்தனங்கள்தான்,


தொடரும்
 
தாமரையும், ஆதவாவும் எந்திரனை அக்கு வேறா ஆணி வேறா பிரிச்சி மேயறாங்கப்பா.....சூப்பர் அலசல். இடைவெளிவிட்டு படம் பார்க்கப்போவதும் நல்லதுதான். படம் பார்க்கும்போது இந்த அலசல்கள் கட்டாயம் நினைவுக்கு வரும்.

அசத்துங்க.

சிவா.ஜி, உங்க எதிர்பார்ப்பை முடிந்த வரை நிறைவேற்றுவோம்.. முதலில் கதையோட்டத்தை அலசிட்டு, அப்புறம் பாடல்கள், கிராஃபிக்ஸ் அப்படி அலசலாம். கூடவே வாங்க...

சங்கர் இந்தப் படத்தில் தன் டச்சான சிஸ்டத்தில் உள்ள குறைபாட்டைக் காட்டவும் செய்திருக்கார்.

அமெரிக்கா இந்த மாதிரி ஆராய்ட்சிகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கும். தசாவதாரத்தில் கமல் காட்டி இருப்பார்.

நம்ம நாட்டில் நாம கஷ்டப்பட்டு செய்து கோண்டு போனால் அது சொட்டை, இது சொள்ளை என்று ஆயிரம் காரணம் சொல்லி ஒதுக்கித் தள்ளிட்டு வெளிநாட்டு ஆயுதங்களுக்கு கமிஷன் வாங்கிகிட்டு ஆர்டர் குடுப்பாங்க

அதை மட்டும் லைட்டா கொஞ்சமா தொட்டிருக்கார்.
 
ஆவேசமாய் சிட்டியை வெட்டிக்கொலை செய்யும்போதும்,
நிதானமாய் சிட்டி தற்கொலை செய்துகொள்ளும்போதும்
என் மகள் தேம்பியதைக் கண்டு என்னுள் எழுந்தது வேதனை!
 
தலிவரு சிட்டிக்கு விக்குதானே மாட்டி விடுவாரு? அது எப்படிங்க விதவிதமா மாறும்????

சிட்டி கொடுத்த வைர நெக்லஸை சனா பார்த்ததும் ஒரு மெஷின் நம்மளுக்கு கொடுத்திருக்கேன்னு ஆச்சரியப்படறா? அதை வார்த்தையாலும் சொல்லுவா. அதனாலதான் வசீகரனுக்கு பொறாமை வரும்படியா சிட்டி கொடுக்கிற நெக்லஸை மாட்டிக்குவா. இதில் என்ன ஸ்பெஷல்னா... ரஜினி பொறாமைப் படற அந்த காட்சிகள் ரொம்ப நல்லா இருக்கும். அருமையான நடிப்பை தலைவர் வெளிப்படுத்தியிருப்பார்.

தவிர, வசீகரன் வெறும் மெக்கானிக்கே தவிர, விவாதங்கள் செய்யும், உணர்வுகளைப் புரிந்து கொள்ளும், காதலை எடுத்துச் சொல்லும், தடுமாற்றங்களற்ற அறிவுரை கூறும் ஒரு சராசரி மனிதனாகக் கூட இல்லை என்பதே உண்மை!

உங்கள் பதிவில் இரண்டு சொற்குற்றங்கள் உள்ளன. முதலாவது பூம் பூம் ரோபோடா, இரண்டாவது சானா இல்லை சனா!! (ஹேஹே கண்டுபிடிச்சிட்டோம்ல...)
 
ஆவேசமாய் சிட்டியை வெட்டிக்கொலை செய்யும்போதும்,
நிதானமாய் சிட்டி தற்கொலை செய்துகொள்ளும்போதும்
என் மகள் தேம்பியதைக் கண்டு என்னுள் எழுந்தது வேதனை!

ரொம்ப தீவிர ரசிகையோ???
எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். அப்பறம் சீ சீ, இந்த பழம் புளிக்கும் நு சொல்லுவாங்க. :)
 
தலிவரு சிட்டிக்கு விக்குதானே மாட்டி விடுவாரு? அது எப்படிங்க விதவிதமா மாறும்????


உங்கள் பதிவில் இரண்டு சொற்குற்றங்கள் உள்ளன. முதலாவது பூம் பூம் ரோபோடா, இரண்டாவது சானா இல்லை சனா!! (ஹேஹே கண்டுபிடிச்சிட்டோம்ல...)

விக்கில் இருப்பது முடிதானே விதம் விதமா நிலை மின்சாரத்தைப் பாய்ச்சினால் முடி விதவிதமா நிக்குமே.. (முன்ன பின்ன தலை சீவி இருந்தா தெரியும்....)

சொற்குற்றங்களுக்கும் எழுத்துப் பிழைக்கும் 6 வித்தியாசங்களைச் சொல்லு பார்ப்போம்.. அப்பவாவது உனக்குச் சரியா குற்றம் சொல்ல வருதான்னு பார்ப்போம். ஹா ஹா ஹா
 
விக்கில் இருப்பது முடிதானே விதம் விதமா நிலை மின்சாரத்தைப் பாய்ச்சினால் முடி விதவிதமா நிக்குமே.. (முன்ன பின்ன தலை சீவி இருந்தா தெரியும்....)

சொற்குற்றங்களுக்கும் எழுத்துப் பிழைக்கும் 6 வித்தியாசங்களைச் சொல்லு பார்ப்போம்.. அப்பவாவது உனக்குச் சரியா குற்றம் சொல்ல வருதான்னு பார்ப்போம். ஹா ஹா ஹா

மின்சாரம் பாய்ச்சினா கருகிப்போயிடாது???? முடி எதால் ஆனதுன்னு விளக்கம் சொல்லலைன்னு சொல்லலாம்.. இந்தமாதிரி மின்சாரம் பாய்ச்சிட்டு இருந்தா எப்படி குடும்பம் நடத்திறதாம்?? அதான் சனா யோசிச்சிருப்பாளோ?

எழுத்துப்பிழைன்னா ஏதாவது ஒரு இடத்தில வந்திருக்கும்., ஆனா, ஆரம்பித்தில் சானா ஆனவர் கடைசி வரைக்கும் சானாவாகவே இருக்காரே!!!! அப்படியென்றால் இதை எழுத்துப்பிழை லிஸ்டில் சேர்க்க முடியாது (ஹிஹி)
 
மின்சாரம் பாய்ச்சினா கருகிப்போயிடாது???? முடி எதால் ஆனதுன்னு விளக்கம் சொல்லலைன்னு சொல்லலாம்.. இந்தமாதிரி மின்சாரம் பாய்ச்சிட்டு இருந்தா எப்படி குடும்பம் நடத்திறதாம்??

அது எசி இல்லாம டிசி தானே அது ஒண்ணும் பண்ணாது..!! :D:D:D

அதான் சனா யோசிச்சிருப்பாளோ?

இந்த சின்னப் புள்ளையை யாரு இங்கே விட்டது :icon_rollout:, எப்படியெல்லாம் கேள்வி கேட்கிறாரு..!! :D:D:D
 
மின்சாரம் பாய்ச்சினா கருகிப்போயிடாது???? முடி எதால் ஆனதுன்னு விளக்கம் சொல்லலைன்னு சொல்லலாம்.. இந்தமாதிரி மின்சாரம் பாய்ச்சிட்டு இருந்தா எப்படி குடும்பம் நடத்திறதாம்?? அதான் சனா யோசிச்சிருப்பாளோ?

http://entertainment.webshots.com/album/38999648IVFroO
 
Back
Top