தங்கவேல்
New member
2009 மே மாதம் ஒன்றாம் தேதி மனாஸ் ஹோஸ்டிங் என்ற பெங்களூரைச் சேர்ந்த கம்பெனியிலிருந்து குறைந்த விலைக்கு அதிக Web Space தருகிறார்கள் என்ற ஆசையினால் ரூபாய் 1100 கட்டி Plesk 11 GB Web Space வாங்கினேன். அதனுடன் MSSqlDatabase இலவசம் என்றார்கள். ஏனென்றால் அன்றைக்கு MS Sql Dbக்கு தனியாக 1500 ரூபாய் கட்ட வேண்டி இருந்தது. குதி போட்டுக் கொண்டு வாங்கிய பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.
டேட்டா பேஸ் ஆக்டிவேட் செய்ய இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்ய வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒருமாதம் சென்ற பிறகுதான் டேட்டாபேஸ் பாஸ்வேர்ட், கண்ட்ரோல் பேனல் கொடுத்தார்கள். டேட்டாபேசை அப்லோட் செய்ய முனைந்தால் நம்பவே மாட்டீர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது. என்னிடமிருந்து பணம் பெற்ற பின் அவர்களின் நடவடிக்கையே மாறிவிட்டது. சரியான ரகளை செய்தார்கள். அவசியத் தேவைகளுக்கான அனுமதிகளை தர மறுத்தார்கள். ISAPI SOFTWARE INSTALL செய்ய அனுமதி கேட்டதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார்கள். கிட்டதட்ட ஐந்து மாதம் சென்று விட்டது.
கம்ப்ளெயிண்ட் டிக்கெட் பதிவு செய்யுங்கள் என்பார்கள். பதிவு செய்தால் பதிலே வராது. பெங்களூரில் இருக்கும் கம்பெனிக்கு போன் பண்ணியே வாழ்க்கை வெறுத்துப் போச்சு. சரி ஹெச்டிஎமெல் வெப் சைட்டையாவது அப்லோட் செய்யலாமென்று எண்ணி டொமைன் பெயரை வேறு பெயரில் மாற்றித்தரும்படி கேட்டதற்கு ஒரு மாதம் பதிலே இல்லை. நானும் பலமுறை டிக்கெட் அனுப்பி வைத்தேன். பலனில்லை. போனில் அழைத்து கத்து கத்து என்று கத்தினேன். கண்டுக்கவே மாட்டேனுட்டானுங்க. எங்களை என்னடா செய்யமுடியும்னு அவர்களின் நடவடிக்கைகள் கேட்காமல் என்னைக் கேள்வி கேட்டது. வேறு ஒருவராக இருந்தால் போனா போவுது என்று விட்டு விடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அவர்களை விடுவதாக இல்லை.
மனதுக்குள் திட்டத்தினை வகுத்துக் கொண்டு, இவர்களை ஒரு கை பார்ப்பது என்று முடிவு கட்டிக் கொண்டேன். வேறு மாற்று வழி இல்லாத சூழ் நிலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டின் கதவினைத் தட்டினேன். இணையம் மூலமாக ஆன்லைனில் கம்ப்ளெயிண்ட் புக் செய்தேன். அவர்களும் கம்பெனிக்கு மெயில் ஒன்றினை அனுப்பி வைத்தார்கள்.
விட்டேனா பார் என்று கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு மெயில் ஒன்றினையும் அனுப்பி வைத்தேன். இந்த மாதிரி உங்கள் மாநிலத்தில் இருக்கும் கம்பெனி என்னை சீட்டிங் செய்கிறார்கள் என்று விபரமாக எழுதி ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். சீஃப் மினிஸ்டரிடமிருந்து பதிலும் வந்தது. பிரச்சினையை கன்சர்ன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்ற மெயிலைப் பார்த்ததும் படு ஜாலியாகி விட்டது. மனாஸ் ஹோஸ்டிங்குக்கு காப்பி ஒன்றையும் அனுப்பி வைத்தேன்.
அவ்வளவுதான். முடிந்தது பிரச்சினை. அலறினார்கள் அலறி. போனில் பெரிய ரகளை செய்து விட்டேன். மீடியா, பிம், சியெம், பிரசிடெண்ட்,பத்திரிக்கைகள், சைஃபர் கிரைம் என்று அனைவருக்கும் கம்ப்ளைண்டு செய்யப் போகிறேன் என்றவுடன் ஏகப்பட்ட மன்னிப்புகளை கேட்டுக் கொண்டார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு நன்றி தெரிவித்து மெயில் ஒன்றினை அனுப்பினேன்.
ஆனால் இவர்களால் ஏற்பட்ட போன் செலவு, மன உளைச்சலுக்கு என்ன செய்வது? அதுதான் தெரியவில்லை.
இந்திய அரசியல் சட்டத்திலும் இதே பிரச்சினை இருக்கிறது. இன்றைக்கும் எண்ணற்ற விசாரணைக் கைதிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை விசாரணை முடிந்து கைதி விடுதலை செய்யப்பட்டால் இத்தனை நாட்கள் சிறையில் இருந்ததுக்கு சட்டத்தின் பதில்தான் என்ன?
எந்த வித முகாந்திரமும் இன்றி சிறைத்தண்டனையை அனுபவித்தருக்கு சட்டம் என்ன தந்து விடும்?
தொலைந்து போன வாழ்க்கையை திருப்பித் தருமா சட்டம்?
கடந்து போன நாட்களை திரும்பவும் அந்த விசாரணைக் கைதிக்கு தருமா சட்டம்?
சட்டத்தின் இது போன்ற கொடுமைகளை நீக்கினால்தான் அரசியலமைப்புச் சட்டம் - ஜன நாயகத்தன்மை கொண்டதாக இருக்கும்.
அதுவரை சட்டமும் ஒரு கொடுங்கோலன் தான்.
டேட்டா பேஸ் ஆக்டிவேட் செய்ய இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்ய வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒருமாதம் சென்ற பிறகுதான் டேட்டாபேஸ் பாஸ்வேர்ட், கண்ட்ரோல் பேனல் கொடுத்தார்கள். டேட்டாபேசை அப்லோட் செய்ய முனைந்தால் நம்பவே மாட்டீர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது. என்னிடமிருந்து பணம் பெற்ற பின் அவர்களின் நடவடிக்கையே மாறிவிட்டது. சரியான ரகளை செய்தார்கள். அவசியத் தேவைகளுக்கான அனுமதிகளை தர மறுத்தார்கள். ISAPI SOFTWARE INSTALL செய்ய அனுமதி கேட்டதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார்கள். கிட்டதட்ட ஐந்து மாதம் சென்று விட்டது.
கம்ப்ளெயிண்ட் டிக்கெட் பதிவு செய்யுங்கள் என்பார்கள். பதிவு செய்தால் பதிலே வராது. பெங்களூரில் இருக்கும் கம்பெனிக்கு போன் பண்ணியே வாழ்க்கை வெறுத்துப் போச்சு. சரி ஹெச்டிஎமெல் வெப் சைட்டையாவது அப்லோட் செய்யலாமென்று எண்ணி டொமைன் பெயரை வேறு பெயரில் மாற்றித்தரும்படி கேட்டதற்கு ஒரு மாதம் பதிலே இல்லை. நானும் பலமுறை டிக்கெட் அனுப்பி வைத்தேன். பலனில்லை. போனில் அழைத்து கத்து கத்து என்று கத்தினேன். கண்டுக்கவே மாட்டேனுட்டானுங்க. எங்களை என்னடா செய்யமுடியும்னு அவர்களின் நடவடிக்கைகள் கேட்காமல் என்னைக் கேள்வி கேட்டது. வேறு ஒருவராக இருந்தால் போனா போவுது என்று விட்டு விடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அவர்களை விடுவதாக இல்லை.
மனதுக்குள் திட்டத்தினை வகுத்துக் கொண்டு, இவர்களை ஒரு கை பார்ப்பது என்று முடிவு கட்டிக் கொண்டேன். வேறு மாற்று வழி இல்லாத சூழ் நிலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டின் கதவினைத் தட்டினேன். இணையம் மூலமாக ஆன்லைனில் கம்ப்ளெயிண்ட் புக் செய்தேன். அவர்களும் கம்பெனிக்கு மெயில் ஒன்றினை அனுப்பி வைத்தார்கள்.
விட்டேனா பார் என்று கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு மெயில் ஒன்றினையும் அனுப்பி வைத்தேன். இந்த மாதிரி உங்கள் மாநிலத்தில் இருக்கும் கம்பெனி என்னை சீட்டிங் செய்கிறார்கள் என்று விபரமாக எழுதி ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். சீஃப் மினிஸ்டரிடமிருந்து பதிலும் வந்தது. பிரச்சினையை கன்சர்ன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்ற மெயிலைப் பார்த்ததும் படு ஜாலியாகி விட்டது. மனாஸ் ஹோஸ்டிங்குக்கு காப்பி ஒன்றையும் அனுப்பி வைத்தேன்.
அவ்வளவுதான். முடிந்தது பிரச்சினை. அலறினார்கள் அலறி. போனில் பெரிய ரகளை செய்து விட்டேன். மீடியா, பிம், சியெம், பிரசிடெண்ட்,பத்திரிக்கைகள், சைஃபர் கிரைம் என்று அனைவருக்கும் கம்ப்ளைண்டு செய்யப் போகிறேன் என்றவுடன் ஏகப்பட்ட மன்னிப்புகளை கேட்டுக் கொண்டார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு நன்றி தெரிவித்து மெயில் ஒன்றினை அனுப்பினேன்.
ஆனால் இவர்களால் ஏற்பட்ட போன் செலவு, மன உளைச்சலுக்கு என்ன செய்வது? அதுதான் தெரியவில்லை.
இந்திய அரசியல் சட்டத்திலும் இதே பிரச்சினை இருக்கிறது. இன்றைக்கும் எண்ணற்ற விசாரணைக் கைதிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஒருவேளை விசாரணை முடிந்து கைதி விடுதலை செய்யப்பட்டால் இத்தனை நாட்கள் சிறையில் இருந்ததுக்கு சட்டத்தின் பதில்தான் என்ன?
எந்த வித முகாந்திரமும் இன்றி சிறைத்தண்டனையை அனுபவித்தருக்கு சட்டம் என்ன தந்து விடும்?
தொலைந்து போன வாழ்க்கையை திருப்பித் தருமா சட்டம்?
கடந்து போன நாட்களை திரும்பவும் அந்த விசாரணைக் கைதிக்கு தருமா சட்டம்?
சட்டத்தின் இது போன்ற கொடுமைகளை நீக்கினால்தான் அரசியலமைப்புச் சட்டம் - ஜன நாயகத்தன்மை கொண்டதாக இருக்கும்.
அதுவரை சட்டமும் ஒரு கொடுங்கோலன் தான்.