லிட்டில் ஜீனியஸ்(விஜய்)

இதுவரை நடத்தப்பட்ட பல வினாடி வினா நிகழ்ச்சிகளை அப்படியே கொஞம் நவீன சாயம் பூசி புது வடிவம் கொடுத்துள்ளார்கள்.ஆனாலும் நிகழ்ச்சியைக் கண்டதும் என் மனதில் பட்ட இரு விசயங்களை தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

1.தமிழ் நாட்டில் இத்தனை ( http://www.schools.tn.nic.in/SS/SS1to5.pdf )அரசுப் பள்ளிகள் இருந்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகளை சார்ந்த மாணவர்கள மட்டும் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சி நடத்துவது ஏன்?அறிவைப் பெருக்கவா அல்லது மெட்ரிகுலேசன் கல்லாவை நிரப்பவா?

2.சரி நிகழ்ச்சிதான் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கென்றாலும் அதில் முதல் சுற்று கிராக் த திருக்குறளாம் அய்யோ அதில் கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில்..குறைந்தபட்சம் அங்காவது தமிழ் இலக்கியம் வரலாறு பற்றிய கேள்விகளை தமிழில் கேட்கலாமல்லவா?.......
 
Last edited:
அரசுப்பள்ளிகளில் யாராவது கொஞ்சம் சிரத்தை எடுத்து மாணவ மாணவிகளை அனுப்பவேண்டும். அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரம் எங்கே இருக்கிறது. சொல்லிக்கொடுப்பதற்கே சரியான ஆசிரியர்கள் இல்லை.
 
அரசு தமிழ் பள்ளிகூடங்களில் படிக்கும் மாணவர்கள்
மிகவும் புத்திசாலிகள்'
அனால் அவர்களின் ஆசிரியர்கள் தான் சந்தேககுறி?
 
அந்தத் தொகுப்பாளர் இருக்கிறாரே.. அவருக்கு யாராவது "ழ' உச்சரிப்பைச் சொல்லிக் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்...!!
 
Back
Top