கணக்கு போடுங்கள்

ஜனகன்

New member
திருவாளர் செல்வம் பொங்கலுக்கு காய்கறி வாங்கச் சந்தைக்கு சென்றார். அவர் மனைவி ரூபா.100கொடுத்தனிப்பினார்.கத்தரிக்காய், முருங்கக்காய், பூசணிக்காய் மூன்றும் வாங்கி வந்தார். ரூபா.100 சரியாகி விட்டது. காய்கறிகளும் மொத்தம்100 இருந்தன. வீட்டிற்கு வந்தும் அவர் மனைவி விலை விபரத்தை கேட்டார். முருங்கக்காய் ரூபாய்க்கு ஒன்று, கத்தரிக்காய் ரூபாய்க்கு இருபது, பூசணிக்காய் ஐந்து ரூபாய்க்கு ஒன்று.ரூபா.100 க்கும் காய் கறிகள் வாங்கியிருக்கின்றேன்,.ஒவ்வொன்றிலும் எத்தனை, எத்தனை வாங்கி இருக்கின்றேன்.கணக்கு போட்டு சொல்என்றார்.செல்வத்தின் மனைவியோ மூளைக்கு வேலை கொடுக்க விரும்பவில்லை. காய் கறிகளை எண்ணத் தொடங்கினார். "ஆமா! ரூபா.100 -க்கும் காய்கள்தான் இருக்க்கு"ஆச்சரியாப்பட்டார், அவர் மனைவி.

நீங்கள் கணக்குப்போட்டு கண்டு பிடியுங்கள், ஒவ்வொரு காயிலும் எத்தனை வாங்கினாரென்று?
 
ஜனகன்

19 பூசணிக்காய்
80 கத்தரிக்காய்
1முருங்கைக்காய்

விடை சரியா
 
எடையை கூறுங்கள்.

ஒரு பையன் தன் தாத்தாவிடம் சொன்னான்,போன மாதம் பார்த்த போது என் எடையும், என் அண்ணன் எடையும்9:10 என்ற விகிதத்தில் இருந்தன. இப்போது என் எடையும் என் அண்ணன் எடையும் 8:9என்ற விகிதத்தில் இருக்கின்றன. என்று தன் தாத்தாவிடம் கதை விட்டான் பேரன்.
அப்போ போன மாதம் பார்த்த எடையை விட இப்போ உங்கள் இருவர் எடையும் குறைச்சிருக்கிறதா? என்று கேட்டார் தாத்தா.

"இல்லை, தாத்தா நான் முன்பை விட4 கிலோ எடை கூடியிருக்கிறேன்; அண்ணன் முன்பை விட 5 கிலோ எடை கூடியிருக்கிறான். விகிதாசாரத்தைப்பார்த்து எங்கள் எடை குறைந்திருக்கிறது என்று எண்ணினிர்களோ?" என்றான் பேரன். "
"அப்போ தனித்தனியே உங்கள் இருவர் எடை என்ன ?"அவனிடன் தாத்தா கேட்டார். "தாத்தா நாங்கள் எங்கள் எடையை சொல்ல மாட்டோம். நீங்கள் கண்டுபிடித்து கொள்ளுங்கள்"என்றான் பேரன். தாத்தாகண்டுபிடித்துக்கொண்டார்.

உங்களால் அண்ணன், தம்பி இருவரின் இப்போதைய எடையை கூற முடியுமா?
 
தம்பியின் முந்தய வயது 36 தற்போதயது 40
அண்ணனின் முந்தயவயது 40 தற்போதயது 45

அதாவது
தம்பி/அண்ணன்=9/10
(தம்பி+4)/(அண்ணன்+5)=8/9

விடையை சுருக்கினால் வந்திடும்.
 
உடனே விடை சொல்லி அசத்தி விட்டார் அன்பு.

அன்புரசிகன் தாத்தாவாயிட்டார் என்றும் தெரிகிறது.
 
அன்பு(தாத்தா ) சொன்னது சரியான விடை.
பாராட்டுக்கள்
 
வாழ்த்துக்கள் அன்பு....
இன்னும் கொஞ்சம் கடினமாக கொடுங்கள்...
 
கணக்கு பார்க்கவும்

அண்ணன் தம்பி இருவரும் சினிமாவுக்கு போகும்போது 5:4.என்ற விகிதத்தில் பணம் இருந்தது.
இருவரும் செலவழித்த ரூபாய் 4:3. என்ற விகிதத்தில்.
இப்போது இருவரிடத்திலும் தனித்தனியே ஆளுக்கு ரூபா 12.மீதமிருக்கிறது.
சினிமா பார்க்க கொண்டுபோன பணம் எவ்வளவு?
செலவழித்த பணம் எவ்வளவு?
 
தாத்தாவைக் கேட்டீங்கண்ணா சரியாப் பதில் சொல்லி இருப்பார். இப்ப பாருங்க. அன்பு பார்த்தும் பதில் சொல்லாமல் போயிட்டார். :)

நீங்கள் தரும் எல்லாக் கணக்கும் ஒன்றாக இருக்கட்டுமே.
 
தாத்தாவைக் கேட்டீங்கண்ணா சரியாப் பதில் சொல்லி இருப்பார். இப்ப பாருங்க. அன்பு பார்த்தும் பதில் சொல்லாமல் போயிட்டார். :)

அன்பு வந்து பார்த்திட்டு போநீர்களா??????????????
சொல்லவேயில்லை,
அமரன் உங்களுக்கு எப்படி? கணக்கு போடா முடியல்லையா?
 
அண்ணன் தம்பி இருவரும் சினிமாவுக்கு போகும்போது 5:4.என்ற விகிதத்தில் பணம் இருந்தது.
இருவரும் செலவழித்த ரூபாய் 4:3. என்ற விகிதத்தில்.
இப்போது இருவரிடத்திலும் தனித்தனியே ஆளுக்கு ரூபா 12.மீதமிருக்கிறது.
சினிமா பார்க்க கொண்டுபோன பணம் எவ்வளவு?
செலவழித்த பணம் எவ்வளவு?

அண்ணனிடம் 60 தம்பியிடம் 48. 60/12= 5, 48/12=4, 5:4
செலவழித்தது 4:3 அதாவது 48:36
60ல் 48ஐ கழித்தால் மீதம் 12 அண்ணனிடம் உள்ளது
48ல் 36ஐ கழித்தால் மீதம் 12 தம்பியிடன் உள்ளது.

ஆக, அவர்களிடம் இருந்தது 60:48
செலவழித்தது 48:36
 
எனக்கு ஒரு பெரியம்மாவும், ஒரு சித்தியும் உண்டு. என் அம்மா வயதை 7ஆல்பெருக்கி 8 ஆல் வகுத்தால், என் சித்தி வயதை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.
என் அம்மா வயதை8 ஆல் பெருக்கி 7 ஆல் வகுத்தால் என் பெரியம்மா வயதை கண்டு பிடித்துக்கொள்ளலாம்.
என் சித்தி வயதோடு என் வயதை கூட்டினாலும், என் பெரியம்மா வயதை தெரிந்து கொள்ளலாம். என் வயது 15.
நீங்கள் சொல்லுங்கள் என் அம்மா, சித்தி, பெரியம்மா வயதென்ன?
 
ஒருவர் தம் பிள்ளைகளுக்கு பரிசாக கொடுக்க கொஞ்ச பணம் வைத்திருந்தார். அதை அவர் நாலு பேருக்கு சமமாக பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொரு வருக்கும் எவ்வளவு ருபாய் கிடைக்குமோ, அதை விட ருபா ஆறு குறைவாக கிடைக்கும் ஐந்து பேருக்கு சமமாக பங்கிட்டால்.
அப்படியானால் ஆறு பேருக்கு சமமாக அந்த ருபாயை பங்கிட்டால்,
1. ஆளுக்கு எவ்வளவு ருபாய் கிடைக்கும்?
2. அவரிடம் முதலிருந்த மொத்த பணம் எவ்வளவு?
 
ஒருவர் தம் பிள்ளைகளுக்கு பரிசாக கொடுக்க கொஞ்ச பணம் வைத்திருந்தார். அதை அவர் நாலு பேருக்கு சமமாக பங்கிட்டு கொடுத்தால் ஒவ்வொரு வருக்கும் எவ்வளவு ருபாய் கிடைக்குமோ, அதை விட ருபா ஆறு குறைவாக கிடைக்கும் ஐந்து பேருக்கு சமமாக பங்கிட்டால்.
அப்படியானால் ஆறு பேருக்கு சமமாக அந்த ருபாயை பங்கிட்டால்,
1. ஆளுக்கு எவ்வளவு ருபாய் கிடைக்கும்?
2. அவரிடம் முதலிருந்த மொத்த பணம் எவ்வளவு?

மொத்தப்பணத்தை x என்று வைத்துக்கொண்டால்
x/5 என்பது (x/4)-6 க்கு சமம்.
இதை ஒரு சமன்பாடாக மாற்றினால்
x/5=(x/4)-6
x/5=(x-24)/4
5x-4x=120
அப்படியெனில் x என்பது ரூ.120 ஆகும். (மொத்தப்பணம்)

அதை அறுவருக்கு சமமாகப் பங்கிட, ஆறால் வகுக்கவேண்டும்.
ஒவ்வொருவருக்கும் ரூ.20 கிடைக்கும்.
 
Back
Top