அர்த்தமுள்ள அரட்டை!

இல் பொருள் உவமையணி பற்றி யோசிச்சிட்டுருக்கும்போது
சட்டென்று நினைவுக்கு வந்த சமீபகாலப் பாடலொன்று. திரு. விஜய டி. இராஜேந்தர் எழுதியது.

இது குழந்தைப் பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்

இதிலே வரும் குழந்தைப் பாடும் தாலாட்டு, இரவு நேர பூபாளம், மேற்கில் தோன்றும் உதயம் இவையனைத்தும் இல்பொருள் உவமையணிக்கு உதாரணங்கள்.
 
பலே! பலே! ஆட்டம் சூடுபிடித்து விட்டதே!

உட்கார்ந்த இடத்திலிருந்தே உடம்பு நோகாமல் இவ்வளவு விஷயங்களைக் கற்க முடிகிறதே, அதற்கு முதலில் தமிழ்மன்றத்துக்குதான் நன்றி சொல்லவேண்டும். அரிய பல செய்திகளை அள்ளித்தரும் ஆதன், செல்வா மற்றும் தாமரை அவர்களுக்கு நன்றிகள் பல.
 
தற்குறிப்பேற்ற அணி :

இயங்கு பொருள் இயங்காப்பொருள் ஆகிய இரண்டின் கண்ணும் இயல்பாக நிகழுந் தன்மையைப் பாவலன் தான் கருதிய வேறொன்றினை அவற்றின்கண் ஏற்றிச் சொல்லுவது தற்குறிப்பேற்ற அணியாகும்.


இஃது இரண்டு வகையினதாகும்.

1. இயங்கு பொருள் தற்குறிப்பேற்றம் :

மண்படுதோட் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொ லென்று பனிமதியம் போல்வதூஉம்
தேயுந் தெளிவிசும்பி னின்று.


இதன் பொருள் :

நிலவுலகத்தைத் தாங்கும் தோள் வலிமையை உடைய சோழனுடைய மதயானையானது, பகையரசர் வெண்கொற்றக் குடையைச் சீறிச்சிதைத்த சினத்தாலே நம் மேலும் வந்து பாயுமோ என்று குளிர்ந்த தெளிந்த வானத்தில் முழுநிலவும் தேயாமல் நிற்கும்.

2. இயங்காப்பொருள் தற்குறிப்பேற்றம் :

வேனில் வெயிற்குலர்ந்த மெய்வறுமை கண்டிரங்கி
வானின் வளஞ்சுரந்த வண்புயற்குத் - தானுடைய
தாதுமே தக்க மதுவுந் தடஞ்சினையாற்
போதுமீ தேந்தும் பொழில்.


இதன் பொருள் :

முதுவேனிற்காலத்து கதிரவனின் வெயில் வெம்மைக்கு ஆற்றாது, உலர்ந்த தமது மெய்வறுமை கண்டு இரங்கி, வானின்கண் நின்று மழைவளத்தைப் பொழிந்து தமது வாட்டம் நீக்கின முகிலுக்குப் பொழில்கள் தம்மிடமுள்ள மேன்மைமிக்க தாதுடன்கூடிய மலர்களையும் மதுவினையும், தம் பெரிய கிளைகளாகிய கைகளாலே மேல்நோக்கித் தாங்கி நிற்கும்.

பிறிது மொழிதல் அணி பின்னர்.
 
Last edited:
பிறிது மொழிதல் அணி :

இஃது ஒட்டணி என்றும் நுவலாநுவற்சி என்றும் சொல்லப்படும். இதில் நான்கு வகை உண்டு.

1. அடையும் பொருளும் அயல்பட மொழிதல்:

வெறிகொ ளினச்சுரும்பு மேய்ந்ததோர் காவிக்
குறைபடுதேன் வேட்டுங் குறுகும் - நிறைமதுச்சேர்ந்
துண்டாடும் தன்முகத்தே செவ்வி யுடையதோர்
வண்டா மரைபிரிந்த வண்டு.


இதன் பொருள் :

தன்னிடத்தில் அழகையும் வளப்பத்தையும் உடைய தாமரையிடம் குறைவற்ற நிறைமதுவைச் சேர்ந்து உண்டு களித்து விளையாடுகின்ற வண்டும், களித்த பல வண்டுகள் சேர்ந்து உண்டு வெறுத்துவிட்ட குறைபடு செங்கழுநீர்ப்பூவின் மதுவை விரும்பியும் சேரும்.

இப் பாடலில், தாமரை - தலைவி, காவி என்ற செங்கழுநீர்ப்பூ - பரத்தை, வண்டாமரை பிரிந்த வண்டு - தலைவன்.
இது, பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்கு வாயினேர்ந்த தோழி சொல்லியது.

2. அடை பொதுவாக்கிப் பொருள் வேறுபட மொழிதல் :

உண்ணிலவு நீர்மைத்தா யோவாப் பயன்சுரந்து
தண்ணளி தாங்கு மலர்முகத்துக் - கண்ணெகிழ்ந்து
நீங்க லரிய நிழலுடைத்தாய் நின்றெமக்கே
ஓங்கியதோர் சோலை யுளது.


இதன் பொருள் :

மனத்துள்ளே உண்டாகிய குணமுடைத்தாய்ப், பலருக்கும் மிகவும் உதவித் தண்ணளி யுடைத்தாகிய விரிந்த முகத்தையும், கண்ணோட்டத்தையு முடைத்தாய்ப் பிரிதற்கரிய சாயலோடு கூடி நிற்பதென ஒரு வள்ளல் மேலும்,
நடுவுண்டாகிய நீரை யுடைத்தாய் மாறாது பல வளங்களைக் கொடுத்துத் தட்பமுடைய வண்டுகளைத் தாங்கிய மலர்களைத் தோற்றத்திலே யுடைத்தாய் மதுச் சோர்ந்துவிட்டுப் போதற்கரிய நிழலுடைத்தாய் ஓங்கி நிற்பதென்று சோலை மேலுஞ் செலுத்துக.

3. அடை விரவிப் பொருள்வேறுபட மொழிதல் :

தண்ணளிசேர்ந் தின்சொன் மருவுந் தகைமைத்தாய்
எண்ணிய வெப்பொருளு மெந்நாளும் - மண்ணுலகில்
வந்து நமக்களித்து வாழு முகிலொன்று
தந்ததான் முன்னைத் தவம்.


இதன் பொருள் :

குறிர்ந்த அருளையும் இன்சொல்லையு முடைத்தாய், எல்லாரும் விரும்பிய எல்லாப்பொருளையும் காலம் வரையாது மண்ணுலகிலே பிறந்து எம்போல்வார்க்கு அளித்து வாழும் என்று ஒரு வள்ளல் மேலும்,
உலகத்தார்க்குக் குளிர்ச்சியோடு கூடக் கொடுக்கின்ற கொடை சேர்ந்து நன்றாம் புகழ் மருவி, எண்ணப்பட்ட எல்லாப் பொருளையும் எக்காலமும் உலகிற்குச் சேர்ந்து கொடுத்து வாழுமென, மேகத்தின் மேலுஞ் செலுத்துக.

உலகில் தோன்றும் பொருள்களுக்கு முதற் காரணம் நீராதலால் அக் காரணத்தை மேகங் கொடுப்ப அதன் செயலாகிய பொருளெல்லாம் புலப்படும்.

4. அடையை பெரு மாறுபாடுபடுத்துப் பொருள் வேறுபட மொழிதல்:

கடைகொ லுலகியற்கை காலத்தின் றீங்கால்
அதைய வரிதாயிற் றன்றே - அதைவோர்க்
கருமை யுடைத்தன்றி யந்தேன் சுவைத்தாய்க்
கருமை விரவாக் கடல்.


இதன் பொருள் :

மிகவும் தாழ்வுடைத்துப்போலும் உயர்ந்தோர் செய்தி, காலவியற்கையாலே மிடியாய்ய்ச் சென்று இரப்பவும் வறுமையுற்றது; சேர்வோர்க்குஅருமையின்றித் தேன்போலுங் கிளவியுமுடைத்தாய் வெகுளியில்லாக் கடல்.

இது வறுமையுற்றான் ஒரு வள்ளலைக் கொள்ள நின்றது. சேர்வோர்க்கு அருமையும், இனிமையில்லாமையும் கருமையும் கடலுக்கு உண்டென்க.

மேலே தந்தது தண்டியலங்காரத்தில் பிறிது மொழிதல் அணி பற்றிக் காணப்படும் பகுதியாகும்.

எளிய விளக்கமாகக் கூறினால்,

உவமானத்தை விளக்கிக் கூறி விட்டு உவமேயத்தைக் கூறாமல் உய்த்தறிய விட்டுவிடுவது பிறிது மொழிதல் அணியாகும்.

இதற்கான எளிய எடுத்துக்காட்டு :

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுந்துப் பெயின்!
 
Last edited:
ஆஹா... அருமை குணமதியவர்களே....
தொடர்ந்து கொடுங்கள் சுவைக்கக் காத்திருக்கிறோம்.

ஒரே ஒரு வேண்டுகோள்..

சங்கப் பாடல்களைக் கொண்டு விளக்கமளிக்கும் போது விளக்கங்கள் நமது நடைமுறைத் தமிழில் இருந்தால் என்போன்ற சாதாரணர்கள் எளிதாக விளங்கிக்கொள்வோம்.

முடிந்தவரை தற்கால கவிதைகள் பாடல்களிலிருந்து எடுத்துக் காட்டுகள் கொள்வோமா?

இலக்கணம் என்றாலே ஒருவிதமான முழுப்புள்ளி இடப்படாத வாக்கியங்களை அமைத்தல்தான் என்னை இலக்கணம் கற்பதிலிருந்தே ஓடவைத்தது.

என்போன்ற எளியர்களுக்காக இன்னும் சற்று சாதாரண தமிழில் எழுதினால் இன்னும் நன்றாக மனதில் பதியும்.

கண்டிப்பாகத் தொடர்ந்து எழுதுங்கள் கற்றுக்கொள்ளக் காத்திருக்கிறேன்.
 
நன்றி செல்வா.
எளிதாகப் புரியும்படித் தரவேண்டுமென்பதைக் கருத்தில் கொள்கிறேன்.
 
உண்மை தான் செல்வா.. உனக்கு நிறையவே பங்கிருக்கு..

நீயும் ஊதனும் டா.. ஏன்னா உன்னோட படிமங்களையும் எடுத்து பேசலாம் னு இருக்கேன்.. அதனால் நீயும் ஊது.. கேள்வி நிறைய கேளுடா.. தாமரை அண்ணாவை பேச வைக்கனும் இல்ல.. நிறைய புது விஷயம் கிடைக்கும்..

ஏம்பா.. அவனை இன்னும் ஊதச் சொல்றீகளே.. இருக்கிறது பத்தாதா..?
 
மக்கா ஊருக்கு வந்துட்டேன், அதான் மன்றம் பக்க அதிகமா வர முடியல..

நன்றி குணமதி தங்களின் விளங்கங்களுக்கு..

செவ்வாயில் இருந்து தொடர்ந்து பேசலாம்..

அமரு நீங்களும் ஊதுங்கோ...
 
நீயும் ஊதனும் டா.. ..

ஏற்கெனவே அவர் குண்டு கல்யாணம் மாதிரிதான் இருப்பதாக பார்த்தவர்கள் சொன்னார்கள். இன்னும் எவ்வளவு ஊதனும் அவர். பாவம்பா!!!!
 
பின்நவீனத்துவம் என்றால் என்ன ? சத்தியமாய் இதுவரை ஒன்றும் புரிந்ததில்லை. விளக்கவும்.
 
பின்நவீனத்துவம் என்றால் என்ன ? சத்தியமாய் இதுவரை ஒன்றும் புரிந்ததில்லை. விளக்கவும்.

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=448613&postcount=468

இந்த பதிவு உங்களுக்கு உதவும்..

அண்ணா குறிப்பிட்டிருக்கும் அந்த புத்தகத்தையும் வாங்கி படிங்க, நாம் இந்த திரியில் பின்னவீனம் பற்றி நிச்சயம் பேசலாம்..

இதுதான் பின்னவீனம் அதுதான் பின்னவீனம் என்று பின்னவீனத்தை ஒரு வட்டத்திற்குள் அடைக்க முடியாது, ஆனால் அதற்கென்று சில கோட்பாடுகள் உண்டு அதை புரிந்து கொள்வதன் மூலம், பின்னவீனத்தை புரிந்து கொள்ள இயலும்..

நவீனத்துவம், இசங்கள் எல்லாம் புரிந்து கொண்டால், பின்னவீனம் இன்னும் நல்ல புரியும்.. வாசிப்பை அதிகமாக்கினால் நிறைய கேள்விக்கு விடைக்கிடைக்கும், நிறைய கேள்வி உடைப்படும், நிறைய கேள்வி உயிர்க்கும்..
 
கீழ வா..

மேல வா..

கீழப் போ..

மேல போ..

இப்படி எல்லாம் சொல்றோம். இதுல என்ன பெரிய அர்த்தம்னு நானும் நினைச்சேன். தண்ணியைப் போட்டுட்டு (பச்சைத்தண்ணிப்பா) யோசிச்சா விசயம் இருக்கு.

ஒருத்தன் மேலே ஏறுகிறான்னு வைச்சுக்கலாம். ஒரு சமயத்தில அவன் முடியாதென நினைச்சு தடுமாறுகிறான் எனும் போது மேல வாப்பா என்றால், மேல இருந்து ஒருத்தர் கை கொடுக்கார்,, போயிடலாம், போகனும்னு அவனுக்குத் தோணும்.

அவன் அடிமேல அடிவாங்கிட்டான். அடுத்த அடி வைச்சா அடிமேல அடி விழுமெனும் நிலையில் கீழ வாப்பா, என்றால் நானிருக்கேன், கவலைப்படாமல் வா என்று அர்த்தம் கொள்வான். இதேப் போலத்தான் மேல போ, கீழ போ என்பனவும்.

சொல்லும் தொனியிலும் சக்தி உண்டு.

இப்படி நம் சொற்கள் சாமரமாகவோ சாட்டையாகவோ ஆவதில் நம் பங்குதான் முழுதும். சரிதானே..
 
வான்னு சொல்வது அம்மா
போன்னு சொல்றது அம்மா இல்லை அப்பா
போன்னு சொல்லுவார்
அதுதான் வித்தியாசம்
கீழேயோ மேலேயோ
அக்கறையுள்ளவர்கள் அழைப்பார்கள் அனுப்புவார்கள்
மற்றவர்கள் தள்ளுவார்கள்
 
Last edited:
அண்ணா அப்படியே இந்த மணிவிழா , பவள விழா , வெள்ளி விழா , தங்க விழா (கோல்டன் ஜுபிலி) பிளாட்டினம் விழா (பிளாட்டினம் ஜுபிலி) இதற்கும் விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும் ... வெகு சமீபத்தில் மதுரையில் ஒரு மனிதருக்கு மணிவிழா எடுத்து கொண்டாடபோகிறார்கள், நாங்கள் திண்டாட போகிறோம் .... :lachen001: :sprachlos020:
 
அண்ணா அப்படியே இந்த மணிவிழா , பவள விழா , வெள்ளி விழா , தங்க விழா (கோல்டன் ஜுபிலி) பிளாட்டினம் விழா (பிளாட்டினம் ஜுபிலி) இதற்கும் விளக்கம் கொடுத்தா நல்லா இருக்கும் ... வெகு சமீபத்தில் மதுரையில் ஒரு மனிதருக்கு மணிவிழா எடுத்து கொண்டாடபோகிறார்கள், நாங்கள் திண்டாட போகிறோம் .... :lachen001: :sprachlos020:

எல்லாத்துக்கும் விளக்கம் அங்கேயே இருக்கேப்பா!!...

மணிவிழா பேர்ல ஒரு பொதுக்கூட்டம் போடு..

அங்க இதையும் அவரையும் முடிச்சு போட்டு இரண்டு மணிநேரம் பேசு (மணி விழான்னா அறுபதாம் ஆண்டு விழாதானே.. அதைப்பற்றித்தானே எழுதி இருக்கேன்)

ஓவர் நைட்ல நீ பெரிய ஆள் ஆகிடுவ...
 
Back
Top