அர்த்தமுள்ள அரட்டை!

ஆன்மீகவாதி தாமரைஅண்ணாத்த அவர்களுக்கு நமஸ்காரம்,ஸ்வீட்காரத்துடன் ஒரு கேள்வி,
என் மிக நெருங்கிய கல்லூரி காலத்தியதோழி. அவளுக்கு தியானம்,மூச்சுப்பயிற்சி முதலியவற்றில் ஈடுபாடு அதிகம்.அவள்முறைப்படி யோகா எதுவும் பயின்றது இல்லை.தியானத்தில் அடிக்கடி அமர்வாள்.திடீரென மிகவும் செய்வதற்கு அரிதான யோகா போஸ்சர்களையும் முத்திரைகளையும் செய்ய ஆரம்பித்து விட்டாள்.எப்படிடி என்று கேட்டால் தானாக வருகிறது என்று கூறுகிறாள், எங்களுக்கு அவள் செய்வது யோகா தானா என்றே சந்தேகம்.ஒரு யோகா பயிற்சியாளரிடம் கேட்ட போது இவை ஹடயோகம் அட்வான்ஸ் போஸ்ட்சர்ஸ் என்று கூறினார்.என்னால் நம்ப இயலவில்லை.யாரும் முறையாக கற்றுத்தராமலே யோகா நம் உள்ளே இருந்து வருவதற்கான சாத்தியம் உண்டா?இதை பற்றி உங்கள் கருத்து என்ன?

சில சமயம் அரிதாக இது மாதிரி நிகழ்வதுண்டு. உதாரணமா இதுவரை தண்ணியில நான் முழுகினதில்லை.. நீச்சல் தெரியாத காலத்தில் இருந்தே. (அதுக்காக நான் முழுகாம இருக்கேன் அப்படின்னு சொல்லிடாதீங்க)..

நம்ம ஊரில பாட்டிங்க குழந்தைங்களை குளிப்பாட்டறதை பாத்திருக்கீங்களா? பார்ட்டியைப் பார்க்காம பாட்டியை உன்னிப்பா கவனிச்சா சில பாட்டிகள் குழந்தைகளின் கை கால்களை நல்லா இழுத்து விட்டு நீவி குளிப்பாட்டுவாங்க. இதனால் எலும்புகள் தசை நார்கள் இளகி வளரும். இதனால் கைகாலை வித விதமா வளைக்கர மாதிரி உடம்பு ரொம்ப வளைந்து தரும்..

சிறுவயதில் இப்படி அவங்களுக்குத் தெரியாமலேயே அவர்கள் உடல் இப்படிப் பக்குவப் படுத்தப் பட்டு இருந்து, அவங்க உடலை வளைச்சி நெளிச்சி வேலை செய்யற டைப்பாவும் இருந்தா இது மிகவும் சாத்தியமே...

முரளிதரனுக்கு இரப்பர் மாதிரியான மணிக்கட்டுகள் இருக்குது இல்லையா? அது மாதிரி எங்க காலேஜ்ல படிச்ச ஆமை தியாகராஜனுக்கும் இருந்தது. அவன் நடு விரலை பின்பக்கம் வளைச்சு, மணிக்கட்டுக்குப் பக்கத்தில தொடுவான்னா பார்த்துக்கங்களேன்.

அடம் பண்ணாம உடம்பு ஹடயோகம் பண்ணுதுன்னா, அட அது ஒரு யோகந்தான்..

அந்தக் குளிப்பாட்டறக் கலை இப்ப பார்க்கவே முடியறதில்ல...

குழந்தையை தொடவே பயப்படறாங்களே!!!
 
தெரியுங்கண்ணா தெரியும்.

சிவசிந்தனை என்றால் சிவா அண்ணா தன்னைப்பற்றி சிந்திக்கும் சிந்தனை தான...ஏன்னா எல்லாருக்குள்ளயும் சிவம் இருக்கே.இன்னும் சொன்னால்...அகம் பிரம்மாஸ்மி.:lachen001::lachen001:ஏன்ன அவர் தான தலைமை குரு. அதனால் தான் அப்படிசொன்னேன்.சிவ..சிவ..

அது அகம் பிரம்மாஸ்மி இல்ல..

அகம் என்றால் வீடு. அது அஹ்ம் பிரம்மாஸ்மி. நான் கடவுள்

அகம் பிரம்மாஸ்மி என்றால் பொண்டாட்டி தாசன் அப்படின்னு அர்த்தம் பண்ணிக்கலாம். ஒரு வேளை சிவா.ஜி அண்ணாவுக்கு அது பொருத்தமா இருந்தாலும் இருக்கலாம்.
 
அகம் பிரம்மாஸ்மி என்றால் பொண்டாட்டி தாசன் அப்படின்னு அர்த்தம் பண்ணிக்கலாம். ஒரு வேளை சிவா.ஜி அண்ணாவுக்கு அது பொருத்தமா இருந்தாலும் இருக்கலாம்.

இருக்கலாம் இருக்கலாம்.

ஒத்து ஊதும்
ஆரென்
 
வாங்க மக்களே.....தாமரை சொன்னா சரியாத்தான் இருக்கும்

மன்றம் சேர்ந்த புதுசுல...அதாவது 28.05.2007 ல ஒரு கவிதையை மன்றத்துல பதிஞ்சேன் அதப் பாருங்க...

"என்னவளை எனக்கு தந்த
இறைவா உனக்கு நன்றி!
வேரோடு பறித்து
வேறிடம் நட்ட செடி
வேர் பிடிக்கவே
குறைந்தபட்ச நாட்களுண்டு!
இல்லறத்தில் இணைந்த
அடுத்த நொடி முதல்
என் இதயம் கலந்தாள்!

பாரதப்போரில்,
தன் சேனை வேண்டுமா
தான் வேண்டுமா என
பார்த்தன் கேட்டபோது,
சேனை ஒதுக்கி கண்ணனை வேண்டிய
அர்ச்சுனனைப்போல,
சொந்தங்களை ஒதுக்கி
என் சொந்தமாய் வந்தவள் என்னவள்!

முதல் குழந்தையை ஈன்றபோது
அதை இரண்டாவது குழந்தையென
இந்த முதல் குழந்தைக்கு காட்டினாளே...
அவள் உயர்திணையில் உயர்திணை!
இளவரசனோடு ஒரு இளவரசியுமிருந்தால்
இல்லம் பூரணமாகுமென ஆசைப்பட்டாலும்,
இறைவன் தருவதை, ஏதாகிலும்
ஏற்கத்தானே வேண்டுமென சொன்னபோது,
விஞ்ஞானம் மெய்ஞானம் எதற்கு
மகள் தருகிறேன் நான் உனக்கு என
மகளையே தந்தாயே..
எப்படி செய்தாய் இந்த
செப்படி வித்தை?

மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரமென்றாலும்
இவள் எனக்கு சிறப்புவரம்!
மனைவியைப் போற்றினால்
எள்ளிநகையாட எத்தனையோ பேருண்டு
தூற்றலெல்லாம் போகட்டும்!
நீ எனக்கு தாயானபோது
நான் உனக்கு தாசனாவதில் தயக்கமில்லை!"

ஒத்து ஊதும் ஆரெனும் சரியாத்தான் ஊதியிருக்கீங்க....ஹி...ஹி...
 
அன்பு உறவுகளுக்கு வணக்கம்..

இந்த பகுதியில் படிமம், குறியீடு பற்ற அரட்டை அடிக்கலாம் என்று ஆசைப்படுகிறேன்..

எனக்கு தெரிஞ்சதை இந்த பகுதியில் சொல்கிறேன்.. நீங்களுக்கும் உங்களுக்கு தெரிஞ்சத சொல்லுங்க. படிமம், குறியீடு குறித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களையும் இந்த பகுதியில் கேளுங்க. நான் பதில் சொல்றேன் சொல்லல, தாமரை அண்ணா பதில் சொல்லுவார் னு சொல்றேன் ;)

இலக்கியங்கள் காலத்துக்கு ஏற்ற மொழிநடை, கருப்பொருள், உவமைகளோடு மாறி வந்திருக்கிறது..

முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் கொண்டுத்தான் சங்ககாலத்தில் பாடல்கள் இயற்றப்பட்ட தமிழுக்கு இந்த மாற்றங்கள் பொருந்தாத ஒன்று..

இலக்கிய களங்களில், கவிதை களம் மிக சக்தி வாய்ந்தது, சவால்கள் பல நிறைந்தது. மற்ற உரைநடை இலக்கியங்களில் எந்த கருத்தையும் நேரடியாக சொல்ல முடியும், சொல்வது தவருமில்லை. கவிதையிலும் ஒரு பொருளை மிக நேரடியாக சொல்வதன் மூலன், மற்ற உரை நடை இலக்கியங்களுக்கும் கவிதைக்கும் உண்டான வேறுபாடு இல்லாமல் போகிறது. அதனால் கவிதைக்கு என்று ஒரு மொழி, நடை, நயம், வடிவம் எல்லாம் தேவைப்படுகிறது..

கவிதை ஒரு சக்தி வாய்ந்த களம் என்று ஏன் சொன்னேன் என்றால், அது சொல்ல முயன்ற கருத்தில் இருந்து விலகி, விலகி, விலகி துரமாய் போய் அதை வாசிப்பவர்கள் அர்த்தம் புரிந்து கொள்ளகிற சாத்தியங்கள் மிக அதிகமானதாய் இருப்பதால் கவிதை களம் மிக பலமானதாய் இருக்கிறது, சொல்லாதையும் சொல்லும் கவிதைகள் என்று தைரியமாய் சொல்ல முடிகிறது..

தற்போது கவிதைகளில் அதிகமாய் பேசப்படுகிற குறியீடு, படிமம் என்பதெல்லாம் தமிழுக்கு புதிதல்ல. ஆனாலும் இந்த வார்த்தைகள் தாம் நமக்கு புதியன.

குறியீடு(symbol), படிமம்(image).

இந்த குறியீடும், படிமமும் புதுக்கவிதை காலத்தில் தமிழில் அதிகம் புழங்கப்பட ஆரம்பித்த வார்த்தைகள். தமிழில் குறியீடு என்பது முன்பே இருந்தாலும், அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பேசப்பட்ட ஆரம்பித்தது புதுக்கவிதை காலத்தில்தான் என்றும் சொல்ல இயலும்..

கோழி ஒரு கூட்டிலே..
சேவல் ஒரு கூட்டிலே..
கோழிக் குஞ்சி ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே..

பசுவைத் தேடி கன்னுக்குட்டி
பால் குடிக்க ஓடுது
பறவை கூட இரையெடுத்து
பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
தாத்தா தெரியுமா
பாத்தா புரியுமா
தனித்தனியா பிரிஞ்சிருக்க
எங்களால முடியுமா
எங்களால முடியுமா
கோழி ஒரு கூட்டிலே......

இந்த பாடலில் குறியீடு படிமம் எல்லாமே இருக்கு.. இவை புதுக்கவிதைக்கு முந்தைய திராவிட காலத்தில் எழுதப்பட்ட பாடல்.

குறியீடு - கோழி, சேவல், கோழிக் குஞ்சு

படிமம் - அன்பில்லாத காடு, பசுவைத் தேடி கன்னுக்குட்டி
பால் குடிக்க ஓடுது, பறவை கூட இரையெடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது

அம்மா அப்பா பிரிந்திருப்பதையும், குறியீட்டால் சொல்லி இருக்கும் கவிஞர், பிள்ளைகள் வாடுவதை "அன்பில்லாத காட்டிலே" எனும் படிமத்தால் சொல்கிறார்..

புதுகவிதைக்கு முன்னோடொயான நா.காமரசன் விலைமகளிர் பற்றிய கவிதையை இப்படி ஆரம்பிக்கிரார்..

"நாங்கள் ரஜினியின் குழந்தைகள்"


இங்கு ரஜினி என்பதுதான் படிமம், ரஜினிஷ்(ஓஷோ)வை சொல்கிறார்..

ஓஷோவின் மிக பிரசித்தமான தத்துவம் சிற்றின்பம் மூலம் பேரின்பத்தை அடைதல்.. இப்பொழுது புரியும் அவரேன் ரஜினியின் குழந்தைகள் என்று ஆரம்பிக்கிறார் என்று, வறுமைக்காக விலைமகளாக இவர்களின் பேரின்பமானது உணவுதான், சிற்றின்பத்தின் மூலம் தாங்களும் பேரின்பத்தைதான் அடைகிறோம் என்ற வண்ணமாக எழுதப்பட்ட படிமம்..

ஒரு படிமத்தை சரியாகா புரிந்து கொள்வது அத்தனை சுலபமில்லை என்றாலும் படிமங்கள் புரிந்து கொள்ள முடியாதவைகள் அல்ல. அவை நம்மை சுற்றி நிகழ்கிற நிகழ்வுகளில் இருந்தும், நமக்கு தெரிந்த விஷயங்களில் இருந்து, நமக்கு புரிகிற மொழியாலுமே எடுக்க/புனைய படுகின்றன..

படிமம் கவிதையோடு புரியாமல் போனாலும், படிமத்தின் காட்சி நமக்கு தெரிந்தவையாகவே இருக்கின்றன..

தொடர்வோம்..
 
Last edited:
வைரமுத்துவின் முதிர்கன்னி கவிதையில்
கற்புள்ள கருவாடு என்று அந்த கன்னி தன்னை சொல்லிக்கொள்வதை நல்லதொரு படிமம் என்று விமர்சித்திருந்தனர். அது குறியீடு போல் தெரிகிறதே..?
 
அருமையான முயற்சி, ஆதன். இதனால் என் போன்ற பலரும் பயனடைவார்கள் என்பது உறுதி. பாராட்டுகிறேன். தொடருங்கள்.
 
வைரமுத்துவின் முதிர்கன்னி கவிதையில்
கற்புள்ள கருவாடு என்று அந்த கன்னி தன்னை சொல்லிக்கொள்வதை நல்லதொரு படிமம் என்று விமர்சித்திருந்தனர். அது குறியீடு போல் தெரிகிறதே..?

நல்ல கேள்வி சுஜா..

கவிதை நுட்பம்(peotic engineering) என்று சொல்வார்களே, அதற்கு ஒரு அழகிய எடுத்துக்காட்டு இந்த படிமம் + குறியீடு..

கற்புள்ள கருவாடு..

கருவாடு என்று மட்டும் சொல்லி இருந்தால் இது வெறும் குறியீடா மட்டும் இருந்திருக்கும்.. இறந்த மீன் காய்வதால் கருவாடாகிறது, அவளின் இளமை கருவாடை போல காய்ந்துவிட்டதை குறியீடாக கொள்ளலாம்..

கற்புள்ள என்று வார்த்தையும் சேர்வதால் இது படிமம் ஆகிறது..

கற்பின் தன்மையை, கல்யாணமாகாத*தால் இன்னும் கன்னிமையுடையவளாய் இருக்கிறாள் என்னும் காரணத்தை காட்சி படுத்துகிறது..

கற்புள்ள கருவாடு என்று சொல்லி முதிர்கன்னிகளை அப்படியே கண்முன் கொண்டு வந்துவிடுகிறார், அதனால் இது படிமமாகிறது..

இன்னும் ஒரு உதாரணம் சொன்னால் தெளிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

சமாதானத்துக்கும் குறீயிடாக புறாவை சொல்லலாம்..

அதே சமாதானத்தின் படிமமாக மஹாத்மாவை சொல்லலாம்..

மஹாத்மா எனும் போது அவரின் குணம், வழி, கருத்து, வாழ்க்கை, செயல் என்று எல்லாமே கண்முன் வருவதால் இது படிமமாகிறது..

தொடர்வோம்..
 
Last edited:
அருமையான முயற்சி, ஆதன். இதனால் என் போன்ற பலரும் பயனடைவார்கள் என்பது உறுதி. பாராட்டுகிறேன். தொடருங்கள்.

உங்களுடைய அது கவிதையை தான் அடுத்த பதிவில் எடுக்க இருக்கேன் அக்கா..

பாராட்டுக்கு நன்றிங்கக்கா..
 
Last edited:
நம்ம தமிழ் இலக்கணத்திலெயே

உவமையணி
உருவக அணி
தற்குறிப்பேற்ற அனி
பிறிது மொழிதல் அணி

இப்படிப்பட்ட அணி வகைகள் இதைத்தானே சொல்லுது ஆதன்...

அன்பில்லாக் காடு... பாட்டை தற்குறிப்பேற்ற அணியாக கொள்ளலாம்.. மற்றவர்கள் கூறும் பொய்யுரைகளால் பிரிக்கப்பட்டு சந்தேகம் என்னும் கூட்டிலே அடைக்கப்பட்ட அன்னை தந்தையர், கவனிப்பாரற்றுப் போன குழந்தைகள் இவர்களை நாம் காணும் சேவல் கோழி குஞ்சுகள் என்னும் காட்சியில் தன்னுடைய காட்சியை கவிஞன் ஏற்றிச் சொல்கிறார்.


படிமம் என்று நாம் புதுசா ஒன்றைச் சொன்னாலும்... எல்லாமே பழசுதான்...

கற்புள்ள கருவாடு என்றால் கல்யாணமாகமல் வாடிப் போன முதிர்கன்னிகள் மட்டுமா? ஏன் திருமணம் நடந்தும், வாழ்க்கையில் காட்டப்படும் அன்பு வற்றி உலர்ந்து போன கருவாடுகளாக எத்தனையோ மகளிர் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள்..

குறியீடு என்பதை பிறிது மொழிதல் அணி எனலாம்.
படிமம் என்பதை தற்குறிப்பேற்ற அணி எனலாம்..

சரிதானே!!!
 
நம்ம தமிழ் இலக்கணத்திலெயே

உவமையணி
உருவக அணி
தற்குறிப்பேற்ற அனி
பிறிது மொழிதல் அணி

நன்றிங்கண்ணா..
இதனை பற்றி சொல்லனும் என்றி இருந்தேன் அண்ணா.. இன்னும் கொஞ்சம் பதிவுகள் போன பிறகு...

உவமையணி : உவமானத்திற்கு உவமேயத்திற்கு நடுவில் போல, அன்ன, நேர, நிகர போன்ற உவமை உருப்புகள் வந்தால் அது உவமையணி ஆகும்..

மலர் அன்ன விழி.. அமுதமொழி ( அமுதம் போன்ற மொழி)

மலர் - உவமானம்

விழி - உவமேயம்..

இது போன்று அது.. அது போன்று இது என்று சொல்லும் போது, எனக்கு செல்வராஜ் ஜெகதீசனின் கவிதை ஒன்று ஞாபகத்துக்கு வருகிறது..


இன்னபிறவும்

அநேகமாய்
முடிவதில்லை.

அழகைப் பற்றிய
அவதானிப்பை

அப்படியே
கைமாற்றிவிட.

அதிகபட்சம்
முடிவதெல்லாம்

அதைப்போல
இது என்பதாய்

இன்னொன்றை
இணையாய்ச் சொல்லி

இப்படித்தான்
இருக்கிறது

இன்னபிறவும்
இவ்வாழ்வில்.

இந்த கவிதையையும், இன்ன பிற கவிதைகளையும் பின் வரும் பதிவுகளில் பேசுவோம்..

உருவக அணி: உவமானதுக்கு உவமேயத்தையும் பிரித்து நோக்க முடியாதவாறு உவமையை கையாள்வது உருவக அணி ஆகும்..

விழிமலர், மொழிஅமுதம்..

பிறிதுமொழிதல் அணி : உவமானத்தை சொல்லிவிட்டு உவமேயத்தை சொல்லாமல் விடுவது பிறிது மொழிதல் அணி.

//உமணர்
வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம்
மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக்
கருங் கால் வெண் குருகு வெரூஉம்
//

எனும் நற்றிணைப்பாட்டு பிறிது மொழிதல் அணிக்கு எடுத்துக்காட்டாகும்..

உப்பு விற்கும் வணிகர்கள், தம் வண்டியை மணலில் செலுத்துகையில், அதன் சக்கரம் உண்டாக்கும் ஒலியை கேட்டு, அருகுள்ள வயலில் இருக்கும் நாரைகள் அஞ்சும் என்பது உவமானம்..

உவமேயம் : தலைவன் தலைவியை விரைந்து வந்து மணம் முடிக்கும் போது, ஊரார்கள் அலர்த்துற்றுவதற்கு அஞ்சி அமைதியாகுவர் என்பது உட்பொருள்..

தற்குறிப்பேற்றல் அணி : தன்னை சுற்றி நிகழும் இயல்பான விஷயங்களில் கவிஞன் தன்குறிப்பை ஏற்றி சொல்லுதல் தற்குறிப்பேற்றல்..

எ.டு:
உன் ஒரு பார்வை நோய்தந்தது
உன் மறு பார்வை மருந்தானது

தொடர்வோம்....
 
தண்டியலங்காரம் அப்படிங்கற இலக்கண நூல் 35 வகையான அணிகளை பட்டியல் போடுது. அவை

28 தன்மை , உவமை, உருவகம் , தீவகம் ,
பின்வரு நிலையே , முன்ன விலக்கே ,
வேற்றுப் பொருள் வைப்பே , வேற்றுமை , விபாவனை ,
ஒட்டே , அதிசயம் , தற்குறிப்பேற்றம்,
ஏது , நுட்பம் , இலேசம் , நிரல் நிறை ,
ஆர்வ மொழி, சுவை , தன் மேம்பாட்டு உரை ,
பரியாயம்மே , சமாயிதம் , உதாத்தம்,
அரிது உணர் அவநுதி , சிலேடை, விசேடம் ,
ஒப்புமைக் கூட்டம் , மெய்ப்படு விரோதம் ,
மாறுபடு புகழ்நிலை , புகழாப் புகழ்ச்சி ,
நிதரிசனம் , புணர்நிலை , பரிவருத்தனையே,
வாழ்த்தொடு , சங்கீரணம் , பாவிகம் இவை
ஏற்ற செய்யுட்கு அணி ஏழ்-ஐந்தே.



உவமை அணியில் மாத்திரம் எத்தனை வகைகள் தெரியுமா?

அதுவே,
விரியே , தொகையே, இதரவிதரம்,
உரைபெறு சமுச்சயம் , உண்மை, மறுபொருள் ,
புகழ்தல் , நிந்தை , நியமம் , அநியமம் .
ஐயம் , தெரி தரு தேற்றம் , இன்சொல் ,
எய்திய விபரீதம் , இயம்புதல் வேட்கை,
பலபொருள் , விகாரம் , மோகம் , அபூதம் ,
பலவயின் போலி , ஒருவயின் போலி ,
கூடா உவமை , பொதுநீங்கு உவமை ,
மாலை, என்னும் பாலது ஆகும் . உரை

33 அற்புதம் , சிலேடை , அதிசயம் , விரோதம்,
ஒப்புமைக் கூட்டம் , தற்குறிப்பேற்றம்,
விலக்கே , ஏது என வேண்டவும்படுமே . உரை

34 மிகுதலும் , குறைதலும் , தாழ்தலும் , உயர்தலும் ,
பால் மாறுபடுதலும் , பாகுபாடு உடைய .


1) விரி உவமை
2) தொகை உவமை
3) இதரவிதர உவமை
4) சமுச்சய உவமை
5) உண்மை உவமை
6) மறுபொருள் உவமை
7) புகழ் உவமை
8) நிந்தை உவமை
9) நியம உவமை
10) அநியம உவமை
11) ஐய உவமை
12) தெரிதரு தேற்ற உவமை 13) இன்சொல் உவமை
14) விபரீத உவமை
15) இயம்புதல் வேட்கை உவமை
16) பலபொருள் உவமை
17) விகார உவமை
18) மோக உவமை
19) அபூத உவமை
20) பலவயிற்போலி உவமை
21) ஒருவயிற்போலி உவமை
22) கூடா உவமை
23) பொதுநீங்கு உவமை
24) மாலை உவமை.


http://www.tamilvu.org/library/libindex.htm

இங்கே போய், தண்டியலங்காரம் எடுத்து பாருங்க...
 
தண்டியலங்காரம் படிக்க கிடைத்த வாய்ப்பை தவரவிட்டு விட்டேன்..

ஊருக்கு சென்றால் எடுத்துவர வேண்டும்..

வாங்கி வைத்த புத்தகங்கள் பல கவனிப்பின்றி பெயர் தெரியாத பூச்சிக்கெல்லாம் படுக்கயறையாகவும், வசிப்பிடமாகவும் மாறிவிட்டிருக்கிறது..

ம்ம்ம் ஐடியா... இதை வச்சுக் கூட ஒரு கவிதை எழுதலாமே..
 
தமிழ் விர்ச்சுவல் யுனிவர்சிடி பக்கங்களில் உரையோடு உள்ளது தண்டி அலங்காரம்.

கவிதைகளில் செய்யுள்களில் செய்யும் சித்திர விசித்திர நுட்பங்கள் பலவற்றுக்கு நமக்கு பெயர் தெரியாம போயிடுது.. ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட்டால் கண்டுபிடிச்சிடலாம்..
 
இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்...

இந்த பொறிய உருவாக்கினதுல எனக்கும் பங்கிருக்குனு (உண்மைதானே ஆதன்?) எல்லாருக்கும் சொல்லிக்கிறேன்... :)

நல்லா ஊதுங்க...

குளிர் காய நான் தயார்....
 
தமிழ் விர்ச்சுவல் யுனிவர்சிடி பக்கங்களில் உரையோடு உள்ளது தண்டி அலங்காரம்.

கவிதைகளில் செய்யுள்களில் செய்யும் சித்திர விசித்திர நுட்பங்கள் பலவற்றுக்கு நமக்கு பெயர் தெரியாம போயிடுது.. ஆனால் கொஞ்சம் கஷ்டப்பட்டால் கண்டுபிடிச்சிடலாம்..

சென்னை பல்கலைகழகத்தின் தளம் தான் அது அண்ணா..

நீங்க சொல்வது உண்மைதான் அண்ணா... தண்டியலங்காரம் படிச்சா இன்னும் நிறைய புதிய விஷயங்கள் புலப்படும், தெரிந்து வைத்திருக்கும் விஷயங்கள் மேலும் ஆழமா புரிந்து கொள்ளவும், தவறாய் புரிந்து கொண்டவைகளை சரி செய்து கொள்லவும் உதவியா இருக்கும்..


படிக்க ஆரம்பிக்கனும் அண்ணா..
 
இந்த பொறிய உருவாக்கினதுல எனக்கும் பங்கிருக்குனு (உண்மைதானே ஆதன்?) எல்லாருக்கும் சொல்லிக்கிறேன்... :)

நல்லா ஊதுங்க...

குளிர் காய நான் தயார்....

உண்மை தான் செல்வா.. உனக்கு நிறையவே பங்கிருக்கு..

நீயும் ஊதனும் டா.. ஏன்னா உன்னோட படிமங்களையும் எடுத்து பேசலாம் னு இருக்கேன்.. அதனால் நீயும் ஊது.. கேள்வி நிறைய கேளுடா.. தாமரை அண்ணாவை பேச வைக்கனும் இல்ல.. நிறைய புது விஷயம் கிடைக்கும்..
 
// இன்னும் ஒரு உதாரணம் சொன்னால் தெளிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்..

சமாதானத்துக்கும் குறீயிடாக புறாவை சொல்லலாம்..

அதே சமாதானத்தின் படிமமாக மஹாத்மாவை சொல்லலாம்..

மஹாத்மா எனும் போது அவரின் குணம், வழி, கருத்து, வாழ்க்கை, செயல் என்று எல்லாமே கண்முன் வருவதால் இது படிமமாகிறது..

தொடர்வோம்.. //

இப்போது புரிகிறது. சிறந்த உதாரணம். நன்றி ஆதன் அண்ணா. இன்னும் தொடர எனது வாழ்த்துகள்.
 
அன்பில்லாக் காடு... பாட்டை தற்குறிப்பேற்ற அணியாக கொள்ளலாம்.. மற்றவர்கள் கூறும் பொய்யுரைகளால் பிரிக்கப்பட்டு சந்தேகம் என்னும் கூட்டிலே அடைக்கப்பட்ட அன்னை தந்தையர், கவனிப்பாரற்றுப் போன குழந்தைகள் இவர்களை நாம் காணும் சேவல் கோழி குஞ்சுகள் என்னும் காட்சியில் தன்னுடைய காட்சியை கவிஞன் ஏற்றிச் சொல்கிறார்.

அண்ணா ஒரு சந்தேகம்...

தற்குறிப்பேற்ற அணி என்பதற்கு விளக்கமாக :

இயல்பாக நடக்கும் நிகழ்ச்சியில் கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக் கூறுவது தற்குறிப்பேற்ற அணி என்று பத்தாம் வகுப்பில் படித்த ஞாபகம்.

அதற்கு உதாரணங்களாக சொல்லப்படும் கவிதைகள்.

புல்லரைக் காணாது இப்
புல்லும் நுனி சாய்த்ததோ

நாட்டிலுள்ள புல்லர்களை- அற்பர்களைக் பார்க்கக் கூடாது என்று புல் நுனி சாய்ந்திருப்பதாக கவிஞர் கூறுகிறார்.

இதே போல சிலப்பதிகாரப் பாடலொன்றையும் கூறுவர்.

(பாடல் மறந்து விட்டது இறுதி வரிதான் ஞாபகம் உள்ளது.)
வாரல் என்பது போல் மறித்துக் கை காட்ட

காற்றிலாடும் மதுரைக் கோட்டைக் கொடிகள்..
கோவல கண்ணகியரைப் பார்த்து இங்கே வராதீர்கள்..
வந்தால் தீங்கு நேரும் என்று தடுப்பதற்காக ஆடுவதாக
இளங்கோ கூறியிருப்பார்....

இங்கே... அது பொருந்துமா என்பது புரியவில்லை எனக்கு.

கோழி ஒரு கூட்டிலும் சேவல் ஒரு கூட்டிலும் அடைக்கப்படுவது இயல்பான நிகழ்வா?

அதோடு அன்பில்லாக் காடு என்பது இல்பொருள் உவமையணி என எண்ணுகிறேன்.

அன்பில்லாத காடு என்றால் என்ன பொருள்... இங்கேத் தனிமையைச் சுட்டுவதற்காக சொல்லப்பட்டிருக்கும் என எண்ணுகிறேன்.

இன்னும் யோசிச்சுட்டு வரேன்...
 
Back
Top