அர்த்தமுள்ள அரட்டை!

22 அவதாரங்கள் விஷயம் இப்போத்தான் தெரியும். பிற்காலத்தில் இதை ஏன் வரிசை படுத்தியிருக்க வேண்டும்? அதுவும் பரிணாம வரிசைப் பிரகாரம்?? அவதார கதைகளில் சிறந்ததாகக் கருதப்படும் கதைகளையே வரிசைபடுத்தியிருக்கலாமோ என்று தோணுகிறது. தவிர கிருஷ்ண, ராம அவதாரங்கள் இதிகாசக் கதைகளாக இருப்பதாலோ என்னவோ நல்ல பேமஸ்! மற்றவைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்களே?

விலக்கப்பட்டன விளக்கங்கள்!! நன்றிங்க!
 
அவருக்கு விளம்பரம் எல்லாம் தேடல சுபி
ஆதன் நீ விளம்பரம் தேடவில்லை என்பதை நான் அறிவேன்.. மற்றவர்கள் அப்படி எண்ணிவிட கூடாதென்றுதான் உன் விளக்கத்தை நாடினேன்.. தவறெனில் மன்னிக்கவும்..!!

ஒரு படம் என்றால் பரவா இல்லை சுபி, தொடர்ந்து இது போன்ற படங்கள், மக்களை அவநம்பிக்கைக்கும், விரக்திக்கும், அச்சத்திற்கும், தனித்தியங்க முடியாது எனுன்ம் நிலைக்கும், முழுமுற்றாய் கெட்டுப் போன ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் எனும் தீர்மானதுக்கும் கொண்டு செல்வதாய் இருக்கிறது. இது போன்ற படங்கள் பாராட்டுக்கள் எவ்வளவு அவசியமோ, எதிர்ப்பு அவ்வளவும் அவசியம் என்று கருத வேண்டியிருக்கிறது.
ஏற்றுக்கொள்கிறேன் ஆதன்… இந்த உலகில் எந்த படைப்புமே முழுமைத்துவம் கொண்டதில்லை… நான் உட்பட..!! அதனால் ஒரு படைப்பை விமர்சிக்கும்போது அதில் நிறைகளை கொண்டாடி குறைகளை சுட்டுவதுதான் சரியான விமர்சனமாக இருக்கும்...!! நான் இந்த படத்தைபற்றி எந்த குறையும் சொல்லாததற்கு நீகூட எந்தலையில் குட்டலாம்..!! ஆனால் எந்த ஒருவிசயத்திலும் எது மிகுந்திருக்கோ அதுவே நம் பார்வையிலும் மனதிலும் நிறைந்துவிடுகிறது.. அந்த விதத்தில் இப்படத்தின் நிறைகள் முன்பு குறைகள் மறைந்துபோய் விட்டன… என்னை பொருத்தவரை இந்தபடம் சமூகத்தின் ஆத்மபலத்தை நாடி எடுக்கபட்டதாகவே எண்ணினேன்..!! நீ சுட்டிய பின்தான் இத்தகைய படங்கள் அப்படியொரு எதிர்மறை விளைவையும் சமூகத்தில் ஏற்படுத்த கூடுமோ என்று யோசிக்கவைக்கிறது..!! மாறுபட்ட சிந்தனை மாறுபட்ட கோணம்… வரவேற்கிறேன் நண்பனே..!!

அடுத்து நீ சொன்னதுபோல இன்றைக்கு சினிமா என்பது மண்சார்ந்த அத்தனை கலை வடிவங்களையும் தன்னகத்தே விழுங்கி ஒற்றை கலைவடிவமாய் விஸ்வரூபமெடுத்து நிற்கின்றபோதும் அதில் மண்சார்ந்த படைப்புகளை காணுதல் அரிதாக இருப்பது வருத்தமாகத்தான் உள்ளது…!! அதே சமயம் இன்னும் சினிமா என்பது வெறும்பொழுது போக்குசாதனம் என்ற ஒற்றை நிலையில் நின்றுகொண்டு படைப்புகளை விமர்சிப்பது குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதை போன்றுதான் தோன்றுகிறது..!! ஒரே படைப்பில் எல்லா தரப்பு மனிதர்களையும் திருப்திபடுத்த முடியாதுதான்… எனவே தற்காலிக சந்தோசம் தரும் மசாலா படங்களும் நிரந்தர ஆத்மதிருப்தியை நாடும் நல்ல படங்களும் மண்சார்ந்த பதிவுகளும் படைப்புகளும் வரவேற்கபட வேண்டியதே… இதில் ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டு குறைகூறுவது நிச்சயம் ஏற்கதக்கதல்ல என்று எண்ணுகிறேன்..!!

சாரு பெரும்பாலும் தன்னுடைய எல்லா கட்டுரைகளிலும் தன்னை பற்றி பேசுவது வழக்கம், இது சாரு மட்டுமல்ல சுபி பல எழுத்தாளர்களும் செய்வதுதான்
சரியாகதான் சொல்லியிருக்கிறாய்… நான்கூட எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தாத எதைபற்றியும் எழுதுவது கிடையாது.. மன்றத்தில் என்கவி அறிமுகத்திலேயே அதை சொல்லியிருப்பேன்..!! பார்த்தாயா இப்ப நானே என்னைபற்றி பேச ஆரம்பிச்சிட்டேன்.?!

சரி விசயத்துக்கு வருவோம்… சாரு சார் தன்னைபற்றி பேசுவதில் தவறேதுமில்லை… ஆனால் அவரதுபேச்சு முன்னுக்குபின் முரணாக இருப்பதுதான் அவரது வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அசூயை ஏற்படுத்துவதாக இருக்கிறது…!! உதாரணத்துக்கு மனதில் பட்டதை ஒளிக்காமல் மறைக்காமல் வெளியே சொல்லி விடுகிறேன்.. மனதில் பட்டதை எழுதாமல் மனதுக்குள்ளேயே அடக்கி வைத்திருந்தால் அது எனக்கு நானே செய்து கொள்ளும் துரோகம்(self abuse) என்று உண்மையாக நடந்துகொள்வதாக காட்டிக்கொள்ளும் அவர் எதற்காக பக்கத்தில் இருப்பவர்களையெல்லாம் சங்கடபடுத்தி வெளியேற வேண்டுமே என்ற தயக்கத்தில் பல்லை கடித்துக் கொண்டு இடைவேளை வரை பொய்யாக திரையரங்கில் அமர்ந்திருந்தாராம்… முடிந்தால் கேட்டு சொல்லுங்களேன்..?!

இந்த உண்மை யாரோ சொன்னதுதான்... மனிதன் என்பவன் கூடிவாழ கற்றுக்கொண்ட ஒரு சமூகவிலங்கு… அவனால் எப்போதும் தன்னைபற்றி மட்டுமே சிந்திக்க இயலாது… அதேபோல் சமூக அமைப்பில் இருந்துகொண்டு அவனால் தனித்தியங்கவும் முடியாது... அவனது ஒவ்வொரு செயலும் சமூகத்தில் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்கிறது..!! எனவே சொல்லோ செயலோ எழுத்தோ விளைவுகளை எண்ணிபார்த்து மற்றவர்களையும் கருத்தில்கொண்டு காரியமாற்றுவதே விவேகமானதாய் இருக்குமென நினைக்கிறேன்…!!

ஆதன்… மனிதர்களாகிய நாம் இன்று சமூகம், கலாச்சாரம், பண்பாடு என்ற கட்டுக்குள் நாகரிகமடைந்துவிட்டதாக எண்ணி கொண்டாலும் இன்னும் நம் ஆழ்மனதில் ஆதிகாலத்திலிருந்து இன்றுவரை தேங்கிவிட்ட மனிதமனத்தின் அழுக்குகள்/விகாரங்கள் வீரியம் குன்றாமல் வண்டல்மண் போல அடிமனதில் அமிழ்ந்துபோய் கிடக்கின்றன…!! அதை அப்படியே படியவிட்டு காலப்போக்கில் மடியவிடுவதுதான் சமூகத்துக்கு நலம் பயக்கும்..!! அதைவிடுத்து உண்மையாக இருக்கிறேன் வெளிப்படையாக இருக்கிறேன் என்று நமக்குள் இருக்கும் மன அழுக்குகளை நாம் எல்லோரும் வெளிக்கொணர ஆரம்பித்தால் அது துர்நாற்றத்துடன் சர்ப்பமென வெளிபட்டு மற்றவர்களையும் தீண்டி அவர்களுக்குள்ளும் விசத்தை ஊன்றவே செய்யும்..!! அதன் பயன் சமூகத்தில் வன்மத்தை வளர்ப்பதாக மட்டுமே இருக்கும்.. விளைவு நாம் மீண்டும் பின்னோக்கி பயணிக்க ஆரம்பித்துவிடுவோம்..!!

சாரு சார் தவறான புரிதலுடன், மனதை சுத்தபடுத்துவதாகவும் வெளிப்படையாக இருப்பதாகவும் கூறிக்கொண்டு அவரது கட்டுரைகளில் அவ்வப்போது அள்ளிக் கொட்டும் மனஅழுக்குகளை காட்டிலும் அதிகமான மனஅழுக்குகள்/விகாரங்கள் ஒவ்வொரு மனிதனிடத்தும் ஏன் உன்னிடத்திலும் என்னிடத்திலும்கூட இருக்கலாம்.. இருக்கிறது..!! ஆனால் ஏன் நாம் எல்லோரும் அதை பொதுவில் வெளிபடுத்திக் கொள்ள விரும்புவதில்லை அல்லது முடிவதில்லை என்று என்றாவது எண்ணியதுண்டா ஆதன்..?! ஒருவன் நேர்மறையான விசயங்களை மட்டும் எழுதுவதால் அவனை நேர்மையாளன் என்றோ எதிர்மறையான விசயங்களை எழுதுவதால் ஒருவனை சமூகத்துக்கு எதிரானவன் என்றோ நாம் ஒரு தீர்மானத்துக்கு வந்துவிட கூடாதுதான்..!! ஏனெனில் நிறைகளும் குறைகளும் எல்லா மனிதமனங்களிலும் நீக்கமற நிறைந்தே இருக்கின்றன... அதில் எதை நாம் வெளிப்படுத்துகிறோம் என்பதில் மட்டுமே நாம் எல்லோரும் வேறுபடுகிறோம்.. மாறுபடுகிறோம்..!! அதேபோல் ஒரு எழுத்தாளான் இப்படிதான் எழுதவேண்டும் என்று யாரும் வரையறுக்கவோ யாரையும் வற்புறுத்தவோ யாருக்கும் உரிமையில்லை… எழுதுவது என்பது அவரவர் விருப்பத்தையும் தனிபட்ட சுதந்திரத்தையும் சார்ந்தது…!!

அதேசமயம் மனிதன் என்பவன் சுதந்திரமானவன் என்பதை ஒப்புக் கொண்டாலும் சமூகம் என்ற கட்டமைப்புக்குள் இயங்கும்போது அவன் மனிதனாக வாழ்வதற்கான குறைந்தபட்ச நியதியென்று ஒன்று இருக்கிறது.. அது யாருக்கும் தீங்கின்றி வாழவேண்டும் என்பதே…!! அப்படியானால் ஒரு எழுத்தாளனுக்கான நியதி என்னவென்று எண்ணிப் பாருங்களேன்..!! எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார்கள்… எனவே நம் எழுத்தென்பது சமூகத்தை ஒருபடி உயர்த்தி பண்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை தவறியும் யார்மனதையும் புண்படுத்தாமல் இருந்தால் அதுவே நலம்தரும் செயல்தான்..!! அதை சாருசாரிடம் நாம் எதிர்பார்ப்பதில் என்ன பிழையிருக்க முடியும் ஆதன்..?! எதிர்பார்ப்பு என்பதே பிழைதான் எனில் என்பிழை களையப்பட வேண்டியதே நண்பா..!!
 
பத்து அவதார கால வரிசை

1. வராக அவதாரம்.

இதது முதலாம் மன்வந்தரம் சுயாம்புவ மனு காலத்தில் நடந்தது. இரண்யாட்சன் பூமியை பாயாய் சுருட்டி கடலில் ஒளிக்க மீட்டெடுத்து இரண்யாட்சனை ஒழித்த அவதாரம்

2. நரசிம்ம அவதாரம்

இது இரண்யாட்சன் மாண்ட பிறகு இரண்ய கசிபு பதவி ஏற்கிறான். இந்த இரணிய கசிபுவை அழிக்க எடுத்த அவதாரம்.

3. கூர்ம அவதாரம்

இது இரணிய கசிபுவின் மகன் பிரஹலாதனின் பேரன் மஹாபலி காலத்தில் எடுக்கப்பட்ட முதல் அவதாரம். அமிர்தம் கடைந்த பின் ஏற்பட்ட தேவாசுரப் போரில் மஹாபலி தோற்கிறான். அதன் பிறகே அவன் யாகங்கள் வேள்விகள் தவங்கள் என ஆரம்பிக்கிறான்.

4. வாமன அவதாரம்

இது மஹாபலி 100 வது அஸ்வமேத யாகம் செய்த போது எடுத்த அவதாரம்.

5. மச்ச அவதாரம்

இது 6 வது மன்வந்தரத்தின் முடிவில் பிரளயம் ஏற்பட்ட போது எடுத்த அவதாரம். ஆக முந்தைய அவதாரங்களுக்கு இது காலத்தால் பிந்தையது, இந்த பிரளயத்துக்கு பின்பே சூரியனின் மகன் வைவஸ்வதன் மனுவாக பதவி ஏற்கிறான். இவனே பரசுராமன், ராமன் கிருஷ்ணன் அனைவரின் பரம்பரைக்கும் காரணம். சூரிய குலம் இவரால் உண்டானது.

6. பரசுராம அவதாரம்

இவர் சூரிய குலத்தில் உதித்தவர். விசுவாமித்திரரின் தாய் பரசுராமருக்கு பாட்டி. அதனால் விசுவாமித்திரர் பரசுராமருக்கு தாய்மாமன். ஆனால் இருவருக்கும் ஒரே வயது

7. இராம அவதாரம்

சூரிய வம்சத்தில் பல தலைமுறைகளுக்குப் பின் தசரதருக்கு பிறந்தவர். இது திரேதா யுகத்தில்

8. கிருஷ்ண அவதாரம் / பலராம அவதாரம்

இது துவாபர யுகத்தின் கடைசியில் நடந்த அவதாரம்

9. புத்த அவதாரம்

புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் என்றே கருதப்படுகிறார். அவர் வேதம் பற்றி பேசாததால் அவரை தூக்கி விட்டி பலராமரை சேர்த்து விட்டார்கள்

10. கல்கி

இனிமேள்தான் நடக்கணுமாம்
 
பத்து அவதார கால வரிசை

1. வராக அவதாரம்.

இதது முதலாம் மன்வந்தரம் சுயாம்புவ மனு காலத்தில் நடந்தது. இரண்யாட்சன் பூமியை பாயாய் சுருட்டி கடலில் ஒளிக்க மீட்டெடுத்து இரண்யாட்சனை ஒழித்த அவதாரம்

2. நரசிம்ம அவதாரம்

இது இரண்யாட்சன் மாண்ட பிறகு இரண்ய கசிபு பதவி ஏற்கிறான். இந்த இரணிய கசிபுவை அழிக்க எடுத்த அவதாரம்.

3. கூர்ம அவதாரம்

இது இரணிய கசிபுவின் மகன் பிரஹலாதனின் பேரன் மஹாபலி காலத்தில் எடுக்கப்பட்ட முதல் அவதாரம். அமிர்தம் கடைந்த பின் ஏற்பட்ட தேவாசுரப் போரில் மஹாபலி தோற்கிறான். அதன் பிறகே அவன் யாகங்கள் வேள்விகள் தவங்கள் என ஆரம்பிக்கிறான்.

4. வாமன அவதாரம்

இது மஹாபலி 100 வது அஸ்வமேத யாகம் செய்த போது எடுத்த அவதாரம்.

5. மச்ச அவதாரம்

இது 6 வது மன்வந்தரத்தின் முடிவில் பிரளயம் ஏற்பட்ட போது எடுத்த அவதாரம். ஆக முந்தைய அவதாரங்களுக்கு இது காலத்தால் பிந்தையது, இந்த பிரளயத்துக்கு பின்பே சூரியனின் மகன் வைவஸ்வதன் மனுவாக பதவி ஏற்கிறான். இவனே பரசுராமன், ராமன் கிருஷ்ணன் அனைவரின் பரம்பரைக்கும் காரணம். சூரிய குலம் இவரால் உண்டானது.

6. பரசுராம அவதாரம்

இவர் சூரிய குலத்தில் உதித்தவர். விசுவாமித்திரரின் தாய் பரசுராமருக்கு பாட்டி. அதனால் விசுவாமித்திரர் பரசுராமருக்கு தாய்மாமன். ஆனால் இருவருக்கும் ஒரே வயது

7. இராம அவதாரம்

சூரிய வம்சத்தில் பல தலைமுறைகளுக்குப் பின் தசரதருக்கு பிறந்தவர். இது திரேதா யுகத்தில்

8. கிருஷ்ண அவதாரம் / பலராம அவதாரம்

இது துவாபர யுகத்தின் கடைசியில் நடந்த அவதாரம்

9. புத்த அவதாரம்

புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் என்றே கருதப்படுகிறார். அவர் வேதம் பற்றி பேசாததால் அவரை தூக்கி விட்டி பலராமரை சேர்த்து விட்டார்கள்

10. கல்கி

இனிமேள்தான் நடக்கணுமாம்
 
குருடர்கள் யானையைக் கண்ட கதையை பள்ளியில் படித்திருப்பீர்கள். பிள்ளையார் சதுர்த்தி கதையும் அப்படித்தான் ஆகிப்போனது.

சந்திரக் காலண்டரில் புரட்டாசி / சூரிய காலண்டரில் ஆவணி வளர்பிறைச் சதுர்த்தி அன்று பிள்ளையாரை பார்வதி தேவி, தான் உடல் தேய்க்க கலக்கிய மஞ்சள் மற்றும் கந்தப் பொடிகளை ஒரு உருவமாக பிடித்து தன் குளிக்குமிடத்துக்கு காவலாக வைத்து விட்டு குளிக்கச் சென்றதாக புராணம்.

அதனால் பிள்ளையார் என்று எதை பிடித்து வைத்தாலும் அது பிள்ளையார்தான்.

மராட்டிய சிவாஜி காலத்தில்தான் இந்த சதுர்த்தியை கொண்டாடுவது ஆரம்பமானது. எதிலாவது பிள்ளையார் சிலையை / அல்லது பிள்ளையார் என ஆவாஹணம் செய்து அதற்கு பூஜை செய்வதை பண்டிகையாக கொண்டாடத் தொடங்கினர்.

எந்த ஒரு சிலையோ, பொம்மையோ அல்லது உருண்டையோ, அதில் இறைவனை ஆவாஹணம் செய்து விட்டால் அது பூசையின்றி இருக்கக் கூடாது. அப்படி இருக்குமானால் அவற்றை கங்கையில் சேர்க்க வேண்டும்.

உதாரணமாக நாம் வீட்டில் யாக்கங்கள், பூஜைகள் செய்யும்பொழுது பிள்ளையார் என மஞ்சளில் உருட்டி வைப்போம். பூஜை முடிந்த பின் அவற்றை நீர் நிலைகளை கங்கையாக பாவித்து அதில் விடுவோம்.. ஓடும் நீரில் விடுவது சிறப்பு.

தினந்தோறூம் பூஜை செய்வது கடினம் என்பதாலும், மண், சந்தனம், சாணம் போன்றவற்றில் செய்த உருவங்கள் எளிதில் சிதையும் என்பதாலும், சில நாட்கள் பூஜை செய்த பின் அவற்றை நீர் நிலைகளில் சேர்த்து விடுவது மரபு. இது பிள்ளையாருக்கு மட்டுமல்ல, அனைத்து தற்காலிக மூர்த்திகளுக்கும் உரிய முறையாகும்.

சுதந்திர போராட்ட காலம் வரை அவரவர் வீட்டோடு இருந்த கணபதி சதிர்த்தியானது பொது விழாவாக மாறியது. சுதந்திர போராட்ட வீரர்கள் பொதுவில் கூடவும் மக்களுக்கு சுதந்திரப் பரப்புரைகளை கொண்டு சேர்க்கவும் பொதுவில் தெருவில் கணபதியை வைத்து வணங்கும் பழக்கம் உண்டானது. மக்களை ஓரிடத்தில் கூட்ட இது மறைமுகமாக பயன்பட்டது. அப்பொழுதுதான் ஊர்வலம் சென்று கரைக்கும் பழக்கமும் உண்டானது.

இன்று கணபதியை வைத்து வணங்குவதை விட ஊர்வலமாய் கொண்டு சென்று கரைப்பதே மனதை கவரும் நிகழச்சியாக மாறிவிட்டது.

பிள்ளையார் சதுர்த்தி விழாவில் தெருவை அடைத்து பந்தல் போடுவது, பெரிய அலங்காரமான சிலையை வைத்து தங்கள் பணபலத்தையும் செல்வாக்கையும் காட்ட முடிவது, கரைக்கச் செல்லும்பொழுது ஆட்டம், இசை, கொண்டாட்டம் என மனிதனின் கர்வத்துக்கு தீனி போடும் அத்தனை வசதிகளும் இருப்பதால் சிலரால் இந்த விழா தங்கள் பலத்தையும் செல்வாக்கையும் காட்டும் விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

பிள்ளையாருக்கு ஒரு சிறப்பு உண்டு. அவர் யானை. அவரின் மேற்கையில் அவர் பிடித்திருக்கும் ஒரு ஆயுதம் அங்குசம்.

யானயை கட்டுப்படுத்துவது அங்குசம். யானையின் கையில் அங்குசம் என்பதன் தத்துவம் தன்னடக்கம் ஆகும்.

சாபம் வாங்காத, கோபம் கொள்ளாத ஒரே தெய்வம் பிள்ளையார். தன்னடக்கமே அதன் முக்கிய காரணம்.

அந்த தெய்வத்தின் திருவிழாவை எவ்வளவு அடக்கமாக கொண்டாடுகிறோமோ அவ்வளவு நல்லது.
 
ஜயா வணக்கம்!
நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களை வலைதளத்தில் சந்திபதில் மகிழ்ச்சி!
பிள்ளையாரைப்பற்றி வந்த பதிவை முகநூலில் பகிர்ந்துகொள்ளும் போது ஓரு நன்பர் பதிலிடுகை இட்டதாவது
"Please understand sanaatana dharma is different from saivam & vainavam. Saivam n vainavam are the original religions of Tamils. Sanatanadharma is that of aryans. In Aryan's ancient belief there were no siva, Narayanan, umai, pillayaar n murugan. Murugan (goumaaram) is also Tamil vazhipaadu."
இதைப்பற்றி தங்களது கருத்தையும் குடும்பத்தினரது கருத்தையும் விழைகிறேன்
 
ஜயா வணக்கம்!
நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப உறுப்பினர்களை வலைதளத்தில் சந்திபதில் மகிழ்ச்சி!
பிள்ளையாரைப்பற்றி வந்த பதிவை முகநூலில் பகிர்ந்துகொள்ளும் போது ஓரு நன்பர் பதிலிடுகை இட்டதாவது
"Please understand sanaatana dharma is different from saivam & vainavam. Saivam n vainavam are the original religions of Tamils. Sanatanadharma is that of aryans. In Aryan's ancient belief there were no siva, Narayanan, umai, pillayaar n murugan. Murugan (goumaaram) is also Tamil vazhipaadu."
இதைப்பற்றி தங்களது கருத்தையும் குடும்பத்தினரது கருத்தையும் விழைகிறேன்
 
பிள்ளை அவர்களே அவர் சொல்வது உண்மைதான். இந்தியாவில் 80 க்கும் மேற்பட்ட சமயங்களும், இன்னும் பற்பல பிரிவுகளும் இருந்தன.

அத்தனை கடவுள்களையும் சம்யங்களையும் முழுமையாகவே பகுதிகளாகவே இந்துமதம் தன்னுள் ஈர்த்துக் கொண்டது.

உதாரணமாக சைவம். சைவம் என்பது ஆதி காலம் தொட்டே இங்கே இருக்கும் மதமாகும். முதற்சங்கத்தை ஆரம்பித்தது சிவன். அவருக்கு பின் தலைமையேற்றது முருகன். அப்பொழுது பிள்ளையார் இல்லை.

வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம் ஆகியவை பெருஞ்சமயங்கள். அதே போல் பௌத்தம், சமணம், சாங்க்யம், சாக்கியம், சார்வாகம் இப்படி எக்கச்சக்கமான பிறவும் இருந்தன, காளி, முனி, அங்காளி, ஐயனார், ஒவ்வொரு பகுதிகளிலும் பலப்பல துணை தெய்வங்கள்.

வேதத்தை எடுத்துக் கொண்டால் நேரடியாக இது இது தெய்வம் என்று சொல்லி இருக்காது. அதில் பரப்பிரம்மம் மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். மற்றபடி இயற்கை சக்திகள் விரிவு இருக்கும்.

இந்த வேதங்களையும் (அறிஞர்களுக்கானது) சமயங்களையும் (மக்களுடையது) இணைப்பதே புராணங்கள். பல சமய ஆய்வாளர்கள் முடிந்த வரை இந்தியாவின் அத்தனை கடவுள்களையும் எதாவது ஒரு வகையில் இணைத்தார்கள்,

உதாரணமாக

மாரி - ரேணுகா தேவியின் வடிவமானாள்
காளி - துர்க்கையின் படைத்தலைவி ஆனாள்
முனியப்பன் - காளியின் தம்பி ஆனான்
விருமாண்டி - பிரம்மனின் அவதாரம் ஆனான்
புத்தர் - விஷ்ணுவின் அவதாரம் ஆனார், மகாவீரர் - சிவனின் வடிவமானார்
இசக்கி, பேச்சி, சாஸ்தா இப்படி ஒவ்வொரு குறுதெய்வமும் அவதாரமாகவோ அல்லது பிறகதைகளாலோ இணைக்கப்பட்டனர்.

அனைத்து கதைகளும் திரட்டப்பட்டு புராணங்கள் உருவாகின. உதாரணமாக எங்கள் குலத்து புராணமான தேவாங்க புராணம் பிரம்மாண்ட புராணத்திலும் பத்ம புராணத்திலும் இடம்பெற்றது.

விஷ்ணு புராணத்திலோ பாகவதத்திலோ பிள்ளையாரை பார்ப்பது கடினம். இராமனோ, கிருஷ்ணனோ பிள்ளையார் பூஜை செய்யலை. சிவ பூஜைதான் செய்தனர்.

தமிழ் நாட்டில் சிவன், பார்வதி முருகன்... சற்று வடக்கே போனால் சிவன் பார்வதி வினாயகர். மகாபாரதத்தில் மார்க்கண்டேயர் கூறும் ஸ்கந்த புராணத்தில் கார்த்திகேயன் அக்னியின் புதல்வன்.

சனாதன தர்மம் என்பது வேதத்தை அடிப்படையாக கொண்ட வைதீக மதங்களை உருவாக்க பயன்படுவது ஆகும். இது மதம் அல்ல. மக்கள் எப்படி வாழவேண்டும் என்பதற்கான தர்ம நெறி வழிகாட்டி ஆகும்.

இவையெல்லாம் தர்மங்கள் இதை செய்
இவையெல்லாம் தர்மம்மல்ல இதைச் செய்யாதே

என வழிகாட்ட திரட்டப்பட்ட கருத்துக்களே சனாதன தர்மங்கள் ஆகும். இந்த தர்மத்தில் ஏறத்தாழ 72 சமயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இதனாலேயே இந்தியாவில் தோன்றிய சமயங்களில் தர்ம விஷயங்களில் ஒற்றுமை தெரியும்.

இதனாலேயே இந்திய மதங்களில் உள்ள ஒவ்வொரு கடவுளுக்கும் உறவு முறைகள் உண்டாக்கப்பட்டன.


தமிழ் நாட்டில் பிள்ளையார் பல்லவர் காலத்தில் வந்ததாகச் சொல்வர். புத்த சமயம்தான் நமது வழக்கு. சமண சமயம்தான் நமது வழக்கு. சைவ சமயம்தான் நமது வழக்கு. வைணவ சமயம்தான் வழக்கு. வைணவம் பிற்காலத்திலேயே இங்கு வந்தது. சைவம் முதலில் இருந்தே இங்கே இருந்தது.

எனவே

மதம் என்ற சொல் நம்முடையது அல்ல. அது பின்னால் வந்தது. இந்து என்ற சொல்லும் பின்னால் வந்தது.

சனாதன தர்மம் என சொன்னால் அது இறைவன் அடிப்படையிலான சமயத்தைக் குறிக்காது.

எப்படி 523 சமஸ்தானங்கள் இந்தியா ஆகினவோ அப்படி கிட்டத்தட்ட 80 சமயங்கள் சேர்ந்தது இந்து மதம். அரசியல் அமைப்பு இந்தியாவை பிணைப்பது போல் சனாதனம் என்னும் தர்மம் இவற்றிற்கு பொதுப்படையானது.

ஆக பிள்ளையாரை பிள்ளையாக சைவம் ஏற்றுக் கொண்டது. நாமும் ஏற்றுக் கொண்டோம்.


சனாதன தர்மம் ஆர்ய ஆதிக்கம் கொண்டது என்பது உண்மை. ஆகமங்கள் தென்னாட்டினுடையவை அவற்றை அது தள்ளித்தான் வைத்திருக்கிறது. முழுதுமாக உள் வாங்கவில்லை.
 
வினாயகர் வழிபாடு எப்பொழுது தோன்றியது எங்கே தோன்றியது உலகில் எங்கெங்கு இது பரவியது என்பவை போன்ற விடையங்களை தெரிந்துகொள்ள விழைகிறேன் தாமரை ஜயா.
 
தாமரை ஜயா! வணக்கம்!

சமிபத்தில் அறிந்து கொண்டேன்! ஷண்(ஆறு)மதங்கள் எனப்படும் ஆறுவகை சமயங்களை வழிபாட்டு முறைப்படி வகைப்படுத்தித்தந்தவர் மகாப்பெரியவர் எனப்படும் ஆதி சங்கரரென.
தங்கள் விளக்கத்திலும்
'வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம் ஆகியவை பெருஞ்சமயங்கள். அதே போல் பௌத்தம், சமணம், சாங்க்யம், சாக்கியம், சார்வாகம் இப்படி எக்கச்சக்கமான பிறவும்'
என குறிப்பு காட்டியுள்ளீர்கள் இதில் காணபத்யம் என்பது கனபதியை முதனிட்ட வழிபாட்டு முறைதானே?
 
தாமரை ஜயா! வணக்கம்!

சமிபத்தில் அறிந்து கொண்டேன்! ஷண்(ஆறு)மதங்கள் எனப்படும் ஆறுவகை சமயங்களை வழிபாட்டு முறைப்படி வகைப்படுத்தித்தந்தவர் மகாப்பெரியவர் எனப்படும் ஆதி சங்கரரென.
தங்கள் விளக்கத்திலும்
'வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம் ஆகியவை பெருஞ்சமயங்கள். அதே போல் பௌத்தம், சமணம், சாங்க்யம், சாக்கியம், சார்வாகம் இப்படி எக்கச்சக்கமான பிறவும்'
என குறிப்பு காட்டியுள்ளீர்கள் இதில் காணபத்யம் என்பது கனபதியை முதனிட்ட வழிபாட்டு முறைதானே?
 
காணபத்யம் என்பது கணபதியை முழு முதற் கடவுளாகக் கொண்ட சமயம்தான்.
 
Back
Top