அர்த்தமுள்ள அரட்டை!

வான்னு சொல்வது அம்மா
போன்னு சொல்றது அம்மா இல்லை அப்பா
போன்னு சொல்லுவார்
அதுதான் வித்தியாசம்
கீழேயோ மேலேயோ
அக்கறையுள்ளவர்கள் அழைப்பார்கள் அனுப்புவார்கள்
மற்றவர்கள் தள்ளுவார்கள்

அரட்டை அடிக்கலாம்ன்னு இங்கே வந்தா......??????என்னாங்க சொல்ல வரீங்க....:D:D

அர்த்தம் புரியாத
மணியா:D
 
அரட்டை அடிக்கலாம்ன்னு இங்கே வந்தா......??????என்னாங்க சொல்ல வரீங்க....:D:D

அர்த்தம் புரியாத
மணியா:D

இதில் கூட அர்த்தப் பொலிவு (பொழிவு..) இருக்குங்கறேன்,

என்ன சொல்லப் போறீங்க என்றால் இனிமேல்தான் சொல்லணும்
என்ன சொல்ல வர்ரீங்க என்றால் சொல்லியாச்சி ஆனால் புரியலை என்று அர்த்தம்.
இப்படி வாங்க, போங்க என்று சொல்லுவதிலும் அர்த்தம் இருக்கு இல்லையா?

அம்மா என்றுமே நம்மை அருகில் வைத்துக் கொள்ள விரும்புவார். அதனால் எப்பவுமே வா என்றுதான் அழைப்பார்.

அப்பாவுக்கோ உலகமெல்லாம் மகன் பார்க்கணும். மகனை உலகமெல்லாம் போற்றணும் என்ற ஆசை இருக்கும் அதனால் போ என்று சொல்லுவார்.

கீழே போ, மேலே வா என்றோ

மேலே போ, கீழே வா என்றோ அவரவர் இருக்கும் இடத்திற்கேற்ப நம் மீது அக்கறை உள்ளவர்கள் சொல்வார்கள். வா என்பது அழைப்பு.. போ என்பது அனுப்புதல்

ஆனால் மற்றவர்களுக்கு நாம் இருக்கும் இடம் தேவைப்படுவதால் நம்மை நாம் இருக்கும் இடத்தில் இருந்து அகற்றும் பொருட்டு போ போ என்று தள்ளுவார்கள்.

அதைத்தான் சொன்னேன்...

வா - போ என்று சொல்வதில் நாம் செல்லும் திசை சொல்பவர் இருக்கும் திசை இரண்டு மட்டுமல்ல.. சொல்பவரின் எண்ணமும் கலந்திருக்குன்னு சொல்றேன்.

(என்னை (எண்ணை) விளக்கம் கேட்டால் விளக்கெண்ணை தானே கிடைக்கும்..:eek::eek::eek:)
 
பேருந்தில் எனக்கு முன் 'கரம், சிரம், புறம், நீட்டாதீர் ' என்றொரு அறிவிப்பு இருக்கக் கண்டேன். அதன் அர்த்தம் விளங்கவில்லை. யாராவது விளக்குங்களேன்.

கரம் என்றால் கை.
சிரம் என்றால் தலை
புறம் என்றால் வெளியே..

பேருந்தின் சாளரத்தின் அருகே அமர்ந்திருப்பவர்கள் கைகளை அல்லது தலையை சாளரத்தின் வழியே வெளியே நீட்டக்கூடும். பயணத்தின் போது இது சில நேரம் விபத்திற்கு வழி வகுக்கும். எனவே

கைகள், மற்றும் தலையை வெளியே நீட்டாதீர்கள் என்பதை ஒரு இலயத்தோடு சொல்வதற்காக

கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்று எழுதி இருக்கிறார்கள்.

பேருந்து பயணத்தில் எச்சரிக்கைக்காகச் சொல்லப்படும் இது வாழ்க்கைப் பயணத்திற்கும் உதவும்.

கரம் சிரம் புறம் நீட்டாதே என்றால்

வெளிமனிதர்கள் வெளிநாடுகளிடம் கையேந்தாதே..

உன் விஷயம் தவிர மற்றவர்கள் விஷயங்களில் தலையை நீட்டாதே என்றும் பொருள் தரும்..

நல்லது தானே.

இந்த வினாவிடை இந்த இடத்திற்கு பொருத்தமில்லை என்பதால் அர்த்தமுள்ள அரட்டைக்கு மாற்றக் கோருகிறேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21297

அம்மா, அங்கே இப்படி அனைத்து விஷயங்களைப் பற்றியும் மிக விரிவாகப் பேசலாம்.
 
கரம் என்றால் கை.
சிரம் என்றால் தலை
புறம் என்றால் வெளியே..

பேருந்தின் சாளரத்தின் அருகே அமர்ந்திருப்பவர்கள் கைகளை அல்லது தலையை சாளரத்தின் வழியே வெளியே நீட்டக்கூடும். பயணத்தின் போது இது சில நேரம் விபத்திற்கு வழி வகுக்கும். எனவே

கைகள், மற்றும் தலையை வெளியே நீட்டாதீர்கள் என்பதை ஒரு இலயத்தோடு சொல்வதற்காக

கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்று எழுதி இருக்கிறார்கள்.

பேருந்து பயணத்தில் எச்சரிக்கைக்காகச் சொல்லப்படும் இது வாழ்க்கைப் பயணத்திற்கும் உதவும்.

கரம் சிரம் புறம் நீட்டாதே என்றால்

வெளிமனிதர்கள் வெளிநாடுகளிடம் கையேந்தாதே..

உன் விஷயம் தவிர மற்றவர்கள் விஷயங்களில் தலையை நீட்டாதே என்றும் பொருள் தரும்..

நல்லது தானே.

இந்த வினாவிடை இந்த இடத்திற்கு பொருத்தமில்லை என்பதால் அர்த்தமுள்ள அரட்டைக்கு மாற்றக் கோருகிறேன்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21297

அம்மா, அங்கே இப்படி அனைத்து விஷயங்களைப் பற்றியும் மிக விரிவாகப் பேசலாம்.

அடப்பாவமே! நான் பிழை திருத்தக் கொடுத்த வாக்கியத்தை அவங்க அங்கே பிழைதிருத்திக் கொடுத்திருக்காங்க. அவங்க புரியாமல் விளக்கம் கேட்கிறதா எல்லாரும் நினைத்துவிட்டீர்களா, என்ன?
 
அடப்பாவமே! நான் பிழை திருத்தக் கொடுத்த வாக்கியத்தை அவங்க அங்கே பிழைதிருத்திக் கொடுத்திருக்காங்க. அவங்க புரியாமல் விளக்கம் கேட்கிறதா எல்லாரும் நினைத்துவிட்டீர்களா, என்ன?

ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டுட்டேன் இல்ல!! என்ன செய்ய.. பரசுராமர் சத்ரியர்கள் குலத்தையே பூண்டோட அழிப்பேன் என்று சபதம் போட்ட மாதிரி கேள்விகள் இனத்தையே பூண்டோட அழிப்பேன் என எனக்குள்ள நான் சத்தியம் பண்ணி இருக்கறேன்னு நினைக்கிறேன்...:eek::eek::eek::eek:
 
:D:D:D:D:D:D....
அடக்க முடியாத சிரிப்புடன்
மணியா.....:D
 
:D:D:D:D:D:D....
அடக்க முடியாத சிரிப்புடன்
மணியா.....:D

முடியாத? விரும்பாத? எது சரி தல?

கவர் பண்ணறதும் ரிக்கவர் பண்றதும் நம்ம வலது கை இடதுகை மாதிரி..

:cool::cool::cool::cool::cool:

இந்தப் பகுதிக்கு வராதவங்களை இப்படியும் இழுத்து வருவோமில்ல...:icon_b::icon_b::icon_b:
 
குப்புற விழுந்தாலும் உங்களுக்குமீசையில் மண்ணு ஒட்டவே ஒட்டாதே..:icon_ush::p அப்படித் தானே தாமரை அண்ணா..:aetsch013::aetsch013:

விளையாட்டுக் கேள்வியையும் கேள்விச் செல்வர் விட்டு வைக்க மாட்டீங்கறார்... :D:D ஆனால், தாமரை பதில்களில் என் கேள்விக்கான பதில் இன்னும் தராமல் இருக்கிறது. :rolleyes::fragend005::icon_rollout:
 
கரம்,சிரம்,புறம்.இந்த மூன்றிற்க்கும் அர்த்தம் தந்து இன்னும் அதே மூன்றிக்கும் வேரோரு அர்த்தமும் தந்தீர்கள் ரெம்ப நல்லா இருந்து நன்றி
 
கருட புராணத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் குறிக்கப்படுகின்றன
அதில்...

மச்சாவதாரம் - மீன் - நீரில் வாழும் உயிரினமாக இருந்தோம்
கூர்மாவதாரம் - ஆமை - நீரிலிருந்து நிலத்திற்கு வரும் உயிரினமாக இருந்தோம்
வராகவதாரம் - பன்றி - முற்றிலும் நீரிலிருந்து விடுபட்டு நிலத்தில் வாழ்ந்தோம்
நரசிம்மாவதாரம் - தலை சிங்கம் - உடல் மனிதன் - உயிரனங்களிலிருந்து வித்தியாசப்பட்டோம். இது மனிதக் குரங்குகளைக் கூறுவதாக கருத்துக்கள் நிலவுகிறது.
வாமனவதாரம் - குள்ளமனிதன் - இது முழுக்க நியண்டர்தால் மனிதனைக் காட்டுகிறது.
பரசுராம அவதாரம் - கோடாரியுடன் மனிதன் - நவீன உலகில் புகுந்துகொண்ட முழு மனிதனைக் காட்டுகிறது. கையிலிருக்கும் கோடாரி அக்காலத்தைய நவீன ஆயுதம், மரங்கள் வெட்டி நவீன உலகம் படைத்தான்
ராமாவதாரம் - அரசன், நாடு, என நாகரீக உலகிற்கு வருகிறான். திருமணம், குழந்தைகள், பிரச்சனைகள் என எல்லாம் இராமன் கதையில் இருக்கிறது,
கிருஷ்ணாவதாரம் - மனிதனின் மனதில் இருக்கும் தந்திரங்கள், மாயங்கள், காமம், விளையாட்டு, குழந்தைமை போன்றவை மெருகேறிய காலம் இது. மஹாபாரத்தில் கிருஷ்ணன் தயவின்றி பாண்டவர்களால் ஜெயித்திருக்க முடியாது. ஏனெனில் சூழ்ச்சிகள்!! உண்மையில் கெளரவர்கள் பக்கம் பலம் இருந்தது. எனவே கிருஷ்ணவதாரம் மூலம் மனிதன் சூழ்ச்சிகளைக் கற்றுக் கொண்டான் என்று சொல்லலாம்.
புத்தாவதாரம்/பலராம அவதாரம் - வட இந்தியாவில் புத்தாவதாரம் குறிப்பிடப்படுகிறது. இராம, கிருஷ்ண அவதாரங்களிலிருந்து மனிதன் கற்றுக் கொண்ட பாடம் ”விளைவுகள்” மனிதன் ஆன்மவளத்தை வளர்த்துக் கொண்டான்.
கல்கி - இது இன்னும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஒன்பது அவதாரங்களோடு நின்றுவிடுவதால் அடுத்து என்னவாக இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் அவதாரம் எடுக்கப்படவில்லை என்று சொல்லலாம்..

எனில்..... மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிந்தது இந்தியாவா?? அல்லது ஒவ்வொரு பரிணாமத்தின் போதும் மாற்றத்தின் போதும் உண்மையிலேயே கடவுள் தோன்றினாரா?

ஒரு டவுட்டு.. கிளியர் பண்ணுங்களேன்.
 
இது மீண்டும் அதே கேள்விதான்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
:D:D:D:D
 
கரம்: அவனுக்கு கை நீளம். பாக்கெட் பத்திரம்!
சிரம்: புறம்=>முடி! அகம் => காலி!
புறம்: புறம்=>வழுக்கை!
 
இது மீண்டும் அதே கேள்விதான்
கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
:D:D:D:D

அப்படியும் வெச்சுக்கலாம்.. ஆனால் நான் அதை எதிர்பார்க்கவில்லை.
கடவுள் பற்றிய விவாதங்கள் ஏற்கனவே மன்றத்தில் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால்,

ஆரியர்கள் அல்லது இந்தோ ஆரியர்கள் புத்திசாலிகளா? பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்குமளவுக்கு புத்திசாலிகளா?
இதுதான் கேள்வி!

தாமரை அண்னா.. புராணங்கள் படித்த உங்களை இங்கே எதிர்பார்க்கிறேன். புராணங்களின் வழியே நமக்குச் சொன்ன அறிவியல் உண்மைகள் என்னென்ன?
 
கேரள பத்மநாப சுவாமி கோவிலில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அளவில் சமஸ்தான நகைக்ள் கண்டறியப்பட்டிருக்கிறது. கேரள மாநில பட்ஜெட்டே முப்பதாயிரம் தான்... சரி...

ஒரு சாதாரண சமஸ்தான மன்னரின் நகைகளே இவ்வளவு என்றால்.... ராஜராஜன் போன்ற மாபெரும் மன்னரின் நகைகள் எவ்வளவு இருக்கும்?? இந்தியாவில் 17 முறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்ற கஜினி எத்தனை கிலோ ஆபரணங்களை அள்ளிச் சென்றிருப்பான்? குறிப்பாக சோம்நாத் கோவில் கொள்ளை பல கிலோக்கள் தேருமாம்..... ஒவ்வொரு ராஜாக்களும் அள்ள அள்ள தங்கம் வைத்திருந்தார்கள் என்று படிக்கிறோம்... அத்தனையையுமா கொ(வெ)ள்ளைக்காரன் தட்டிக் கொண்டு சென்றுவிட்டான்???

ஆஹா.... அத்தனையும் தங்கமய்யா தங்கம்......... தங்கமட்டுமல்ல, வயிர வயிடூரியங்களும் ரத்தின கற்களும் அடங்கும்... அதுவும் ஜோஸியக்காரன் தரும் டம்மி கற்கள் அல்ல.. மதிப்பு மிகுந்த அரிய கற்கள்!!!

சரி... இத்தனை தங்கம் எங்கிருந்து வந்தது? இந்தியாவில் பண்டைய சுரங்கங்கள் இருந்ததற்கான சுவடுகள் ஏதுமில்லையே? வானிலிருந்து கொட்டியதா?
 
அப்படியும் வெச்சுக்கலாம்.. ஆனால் நான் அதை எதிர்பார்க்கவில்லை.
கடவுள் பற்றிய விவாதங்கள் ஏற்கனவே மன்றத்தில் நடத்தப்பட்டிருக்கின்றன. ஆனால்,

ஆரியர்கள் அல்லது இந்தோ ஆரியர்கள் புத்திசாலிகளா? பரிணாம வளர்ச்சியைக் கண்டுபிடிக்குமளவுக்கு புத்திசாலிகளா?
இதுதான் கேள்வி!


தாமரை அண்னா.. புராணங்கள் படித்த உங்களை இங்கே எதிர்பார்க்கிறேன். புராணங்களின் வழியே நமக்குச் சொன்ன அறிவியல் உண்மைகள் என்னென்ன?

ஆதவா எதற்கும் "வால்காவிலிருந்து கங்கைவரை" படித்து பாருங்கள். அதுவே முழவதுமாய் இருக்கும் என்று சொல்ல இயலாது, ஆனால் அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பலவிடயங்கள் உண்மை என்று புலப்படும். அவர்களுக்கு தொழில் மாடுமேய்த்தல் மட்டுமே அதனால்தான் இன்றுவரை அவர்கள் பொங்கலில் மட்டுப் பொங்கலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அதுபோல் திராவிட வீர விளையாட்டுகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பு பார்வை இருப்பதை இன்றும் கண்கூடாக காணலாம்.

இதுபோல் பல விடயங்களில் காரண மூலங்கள் அப்புத்தகத்தில் சரியாக விளக்கப் பட்டிருக்கும். நீங்கள் அறிய நினைக்கும் விடை அதில் கிடைக்கலாம். மதத்தை எப்படி தோற்றுவித்தார்கள்? கடவுளுக்கு எப்படி வடிவம் கொடுக்கப்பட்டது? சாஸ்த்திர சம்பரதாயங்கள் எப்படி உருவாகின?சாதிகள் எப்படி வகுக்கப் பட்டது? இதற்க்கான நேரடி பதிலை இங்கு பதிப்பிட இயலாது, அது பலரை காயப்படுத்தலாம்.
 
Last edited:
கேரள பத்மநாப சுவாமி கோவிலில் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கோடி ரூபாய் அளவில் சமஸ்தான நகைக்ள் கண்டறியப்பட்டிருக்கிறது. கேரள மாநில பட்ஜெட்டே முப்பதாயிரம் தான்... சரி...

ஒரு சாதாரண சமஸ்தான மன்னரின் நகைகளே இவ்வளவு என்றால்.... ராஜராஜன் போன்ற மாபெரும் மன்னரின் நகைகள் எவ்வளவு இருக்கும்?? இந்தியாவில் 17 முறை படையெடுத்து கொள்ளையடித்துச் சென்ற கஜினி எத்தனை கிலோ ஆபரணங்களை அள்ளிச் சென்றிருப்பான்? குறிப்பாக சோம்நாத் கோவில் கொள்ளை பல கிலோக்கள் தேருமாம்..... ஒவ்வொரு ராஜாக்களும் அள்ள அள்ள தங்கம் வைத்திருந்தார்கள் என்று படிக்கிறோம்... அத்தனையையுமா கொ(வெ)ள்ளைக்காரன் தட்டிக் கொண்டு சென்றுவிட்டான்???

ஆஹா.... அத்தனையும் தங்கமய்யா தங்கம்......... தங்கமட்டுமல்ல, வயிர வயிடூரியங்களும் ரத்தின கற்களும் அடங்கும்... அதுவும் ஜோஸியக்காரன் தரும் டம்மி கற்கள் அல்ல.. மதிப்பு மிகுந்த அரிய கற்கள்!!!

சரி... இத்தனை தங்கம் எங்கிருந்து வந்தது? இந்தியாவில் பண்டைய சுரங்கங்கள் இருந்ததற்கான சுவடுகள் ஏதுமில்லையே? வானிலிருந்து கொட்டியதா?
உண்மையில் இதற்க்கான சான்றுகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை ஆனால் ஒரு கால கட்டத்தில், அதாவது பிரிட்டீஷ் படைஎடுப்பிர்க்கு முன்னால் என்றுகூட வைத்துக்கொள்ளலாம். அதுவரைக்கும் நாம் உலக பணக்கார நாடுகளில் தலைசிறந்த நாடாகத்தான் திகழ்ந்து வந்துள்ளது.

அப்பொழுதைய அலக்ஸ்சான்டரின் இலக்கு கூட இந்தியாவை நோக்கித்தான் இருந்துள்ளது. அதற்க்கு பின்தான். முக்கமதுமூர், கஜினி முகமது என்று வரலாறு. இப்படி பட்ட நாட்டில் தங்கம், வைரம், முத்து ஆகியவற்றின் பிறப்பிடமாக திகழ்ந்து வந்துள்ளது.

அதிலும் தென்னித்தியாவில் உலகின் தலைசிறந்த முத்துகள் பாண்டிய ராஜ்யத்தில் கிடைத்ததாகவும், அதற்காக பல நாட்டினரும் தமிழ்நாட்டில் குவிந்ததாகவும் மெஹஸ்தனிஸ் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கடாரம் என்று சொல்லப்பட்ட இன்றைய மலேசியா, இந்தோனேசியா, ஆகிய இடங்களில் ஒரு பகுதி தீவு சொர்ணத்தீவு என்றும் அழைக்கப்பட்டு தமிழரின் நட்பில், வணிகத்தில், ஆளுகையில் உட்பட்டிருந்துள்ளது.

அவ்வளவு செல்வச்செழிப்பன நாடு இன்று இருக்கும் நிலைமை சொல்ல இயலாது. பெரும்பகுதி தங்கங்கள், வைரங்கள் அந்நிய படை எடுப்பின் பொழுது புதைக்கப்பட்டுவிட்டது. மீதி அவர்களால் கொள்ளையடிக்கப் பட்டுவிட்டது.
 
Last edited:
ஆதவா எதற்கும் "வால்காவிலிருந்து கங்கைவரை" படித்து பாருங்கள். அதுவே முழவதுமாய் இருக்கும் என்று சொல்ல இயலாது, ஆனால் அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் பலவிடயங்கள் உண்மை என்று புலப்படும். அவர்களுக்கு தொழில் மாடுமேய்த்தல் மட்டுமே அதனால்தான் இன்றுவரை அவர்கள் பொங்கலில் மட்டுப் பொங்கலுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள். அதுபோல் திராவிட வீர விளையாட்டுகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பு பார்வை இருப்பதை இன்றும் கண்கூடாக காணலாம்.

இதுபோல் பல விடயங்களில் காரண மூலங்கள் அப்புத்தகத்தில் சரியாக விளக்கப் பட்டிருக்கும். நீங்கள் அறிய நினைக்கும் விடை அதில் கிடைக்கலாம். மதத்தை எப்படி தோற்றுவித்தார்கள்? கடவுளுக்கு எப்படி வடிவம் கொடுக்கப்பட்டது? சாஸ்த்திர சம்பரதாயங்கள் எப்படி உருவாகின?சாதிகள் எப்படி வகுக்கப் பட்டது? இதற்க்கான நேரடி பதிலை இங்கு பதிப்பிட இயலாது, அது பலரை காயப்படுத்தலாம்.

நீங்கள் ஆரியர்களின் தொழில் மாடு மேய்த்தல் மட்டுமே என்று சொல்கிறீர்களா? அல்லது அந்த புத்தகம் சொல்கிறதா?

கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. ஆரியர்கள் தான் மதம், ஆன்மீகம், கல்வி, அறிவியல், மருத்துவம் போன்ற அனைத்தையும் வளர்த்தார்கள் என்பதற்குச் சான்றுகளே இருக்கின்றன. அதற்காக திராவிடர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களும்தான்...

தவிர மாட்டுப் பொங்கல் திராவிட பண்டிகையாயிற்றே??

கடவுளின் தோற்றம், கடவுளுக்கு வடிவம், சாஸ்திரம், சம்பிரதாயம், சாதி போன்ற அனைத்தும் காயப்படுத்தாமலேயே பேசமுடியும். நம் மன்றத்திலேயே பேசியிருக்கிறார்கள். எனக்கு தோற்றம், வளர்ச்சி, பாதை போன்ற அனைத்தின் விரிவாக அல்லாவிடினும் அடிப்படையாகவேனும் தெரியும். திரும்பத் திரும்ப அதைப் பேச விரும்பவில்லை. :) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விடுத்து, ஆரியர் புராணங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை மட்டுமே எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்!!
 
நீங்கள் ஆரியர்களின் தொழில் மாடு மேய்த்தல் மட்டுமே என்று சொல்கிறீர்களா? அல்லது அந்த புத்தகம் சொல்கிறதா?

வரலாறு என்பதே புத்தகம்தானே, அதன் வடிவம் மட்டும் மாறுகிறது அவ்வளவுதான். எதுவாய் இருந்தாலும் அவர்களின் ஆதி தொழில் மாடுமேய்த்தல் என்பது மறுக்க இயலாது. அதுபோல் அவர்களுக்கு விவசாயத்தில் ஈடுபாடு கிடையாது என்பது இன்றுவரை கண்கூடாக தெரியும் ஒரு உண்மை.

கொஞ்சம் வேடிக்கையாக இருக்கிறது. ஆரியர்கள் தான் மதம், ஆன்மீகம், கல்வி, அறிவியல், மருத்துவம் போன்ற அனைத்தையும் வளர்த்தார்கள் என்பதற்குச் சான்றுகளே இருக்கின்றன. அதற்காக திராவிடர்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்களும்தான்...

நானும் இல்லையென்று சொல்லவில்லையே :)

தவிர மாட்டுப் பொங்கல் திராவிட பண்டிகையாயிற்றே??

ஆமாம் திராவிடர் பண்டிகைதான். அதை யாரும் மறுக்க இயலாது. விவசயத்தை சார்ந்த இருப்பதினால் தெய்வமாக விழிபடப் படுகிறது அதற்குத்தான் மாட்டுப்பொங்கல். நான்குநாள் பொங்கலில் அவர்கள் சிறப்பாக முதன்மையாக கொண்டாடுவது மாட்டுப்பொங்கல் மட்டும்தான்.

கடவுளின் தோற்றம், கடவுளுக்கு வடிவம், சாஸ்திரம், சம்பிரதாயம், சாதி போன்ற அனைத்தும் காயப்படுத்தாமலேயே பேசமுடியும். நம் மன்றத்திலேயே பேசியிருக்கிறார்கள். எனக்கு தோற்றம், வளர்ச்சி, பாதை போன்ற அனைத்தின் விரிவாக அல்லாவிடினும் அடிப்படையாகவேனும் தெரியும். திரும்பத் திரும்ப அதைப் பேச விரும்பவில்லை. :) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை விடுத்து, ஆரியர் புராணங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை மட்டுமே எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்!!


இங்கே முடிந்துவிட்டது ஆதவா.

இருந்தாலும் நானும் இதைப்பற்றி பேச விரும்பவில்லை. ஆனால் அதனுள் நுழைந்து அதைப்பற்றி பேசும்போது விளைவுகள் ஏதும் ஏற்படாமல் பேசுவது முழுமையான கருத்தினை அடையமுடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.:)

இதையே நான் வேறு விதமாக தாமரை பதில்கள் திரியில் தாமரை அண்ணாவை கேட்டிருக்கிறேன். பதில் இன்னும் இடவில்லை என்று நினைக்கிறன் . இருந்தாலும் பார்க்கலாம் எந்த அளவுக்கு விளக்கம் கிடைக்கிறது என்று. தாமரை அண்ணா வந்தால் தான் தெரியும்:sprachlos020:
 
ஆரியர்கள் அந்நியர்கள்(இந்தியாவுக்கு) மற்றும் அறிவுள்ளவர்கள்(அவர்களின் சுயத்துக்கு மட்டுமே) ஆனால்...இந்தியாவின் கலாச்சாரத்துக்கு தேவையில்லாதவர்கள். இப்போதும்....இலங்கைத் தமிழர்களை முழுமூச்சாய் எதிர்ப்பவர்கள் அவர்கள்தான். காரணம் அவர்களின் ரத்தத்திலேயே இருப்பதுதான். அதாவது...அவர்களுக்கென்று...சொந்த நாடுமில்லை...சொந்த மொழியுமில்லை...ஆனாலும் அவர்களை சகித்திக்கொண்டிருக்கும் இந்தியர்கள்.....நல்லவர்களா.......பேடிகளா.....தெரியலையே ஆதவா.....
 
கருட புராணத்தில் விஷ்ணுவின் அவதாரங்கள் குறிக்கப்படுகின்றன
அதில்...

மச்சாவதாரம் - மீன் - நீரில் வாழும் உயிரினமாக இருந்தோம்
கூர்மாவதாரம் - ஆமை - நீரிலிருந்து நிலத்திற்கு வரும் உயிரினமாக இருந்தோம்
வராகவதாரம் - பன்றி - முற்றிலும் நீரிலிருந்து விடுபட்டு நிலத்தில் வாழ்ந்தோம்
நரசிம்மாவதாரம் - தலை சிங்கம் - உடல் மனிதன் - உயிரனங்களிலிருந்து வித்தியாசப்பட்டோம். இது மனிதக் குரங்குகளைக் கூறுவதாக கருத்துக்கள் நிலவுகிறது.
வாமனவதாரம் - குள்ளமனிதன் - இது முழுக்க நியண்டர்தால் மனிதனைக் காட்டுகிறது.
பரசுராம அவதாரம் - கோடாரியுடன் மனிதன் - நவீன உலகில் புகுந்துகொண்ட முழு மனிதனைக் காட்டுகிறது. கையிலிருக்கும் கோடாரி அக்காலத்தைய நவீன ஆயுதம், மரங்கள் வெட்டி நவீன உலகம் படைத்தான்
ராமாவதாரம் - அரசன், நாடு, என நாகரீக உலகிற்கு வருகிறான். திருமணம், குழந்தைகள், பிரச்சனைகள் என எல்லாம் இராமன் கதையில் இருக்கிறது,
கிருஷ்ணாவதாரம் - மனிதனின் மனதில் இருக்கும் தந்திரங்கள், மாயங்கள், காமம், விளையாட்டு, குழந்தைமை போன்றவை மெருகேறிய காலம் இது. மஹாபாரத்தில் கிருஷ்ணன் தயவின்றி பாண்டவர்களால் ஜெயித்திருக்க முடியாது. ஏனெனில் சூழ்ச்சிகள்!! உண்மையில் கெளரவர்கள் பக்கம் பலம் இருந்தது. எனவே கிருஷ்ணவதாரம் மூலம் மனிதன் சூழ்ச்சிகளைக் கற்றுக் கொண்டான் என்று சொல்லலாம்.
புத்தாவதாரம்/பலராம அவதாரம் - வட இந்தியாவில் புத்தாவதாரம் குறிப்பிடப்படுகிறது. இராம, கிருஷ்ண அவதாரங்களிலிருந்து மனிதன் கற்றுக் கொண்ட பாடம் ”விளைவுகள்” மனிதன் ஆன்மவளத்தை வளர்த்துக் கொண்டான்.
கல்கி - இது இன்னும் எடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதாவது மனிதனின் பரிணாம வளர்ச்சி ஒன்பது அவதாரங்களோடு நின்றுவிடுவதால் அடுத்து என்னவாக இருக்கும் என்ற யூகத்தின் அடிப்படையில் அவதாரம் எடுக்கப்படவில்லை என்று சொல்லலாம்..

எனில்..... மனிதனின் பரிணாம வளர்ச்சியைக் கண்டறிந்தது இந்தியாவா?? அல்லது ஒவ்வொரு பரிணாமத்தின் போதும் மாற்றத்தின் போதும் உண்மையிலேயே கடவுள் தோன்றினாரா?

ஒரு டவுட்டு.. கிளியர் பண்ணுங்களேன்.

அவதாரங்களை நாம் இப்படி வரிசைப்படுத்தினாலும் பாகவத புராணத்தில் காணப்படும் காலக்கணக்கு என்ன சொல்கிறது?

அக்காலக் கணக்கின் படி முதல் அவதாரம் மச்ச அவதாரம் அல்ல. கூர்ம அவதாரமும் அல்ல. வராக அவதாரத்தையே முதல் அவதாரமாக பாகவதப் புராணம் சொல்கிறது. அதனாலேயே வராக பெருமானுக்கு ஆதிவராகப் பெருமாள் என்றப் பெயரும் உண்டு.

அவதாரங்களப் பற்றிய ஒரு ஆலோசனை.. ஏன் பரசுராமனே இராவணனை கொன்றிருக்கக் கூடாது. இருவருமே சம காலத்தில் வாழ்ந்தவர்களாகவே தெரிகிறது. கோதண்டம் என்னும் தன் வில்லை இராமனுக்கு அளிக்கிறான் பரசுராமன்.

அவதாரங்களில் ஒரு அடுக்கு இருக்கிறது. இராவணன் பிறன் மனை கவர்ந்தான். அவனைத் தண்டிக்க முதலில் கடவுள் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டி இருந்தது. பிறன்மனைக் கவர்ந்தானை தண்டிக்க ஏகபத்தினி விரதனாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினால் இராமனாக பிறந்து வளர்ந்து வாழ்ந்துகாட்டி பிறகு தண்டனையைக் கையில் எடுக்கிறான்.

மச்ச அவதாரம் எடுத்துக் கொள்வோம்.

ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்ததே ஒரு மன்வந்தரமாகும். ஒவ்வொரு மன்வந்தரமும் முடியும் நேரத்தில் ஒரு பிரளயம் (பேரூழிக் காலம்) ஏற்படுமாம். அத்தகைய பிரளயம், ஆறாவது மன்வந்தரத்தின் முடிவிலும் ஏற்பட்டது. பொதுவாக ஒரு மன்வந்தரத்தின் முடிவில்தான் படைப்புக் கடவுளான நான்முகன் ஓய்வெடுப்பாராம். அவ்வாறு அவர் ஓய்வெடுக்கும் தருணத்தில், "ஹயக்ரீவன்' (சோமுகாசுரன் என்றும் சொல்வது உண்டு) என்ற அசுரன், அவருடைய வாக்கிலிருந்து வேதங்களைத் திருடிவிட்டான். (பிரம்மதேவனுடைய வாக்கிலிருந்து வேதத்தை அபகரிப்பது என்பது அவருடைய வாக்கிலிருந்து வரும் வேத சப்த உச்சாரணத் திறனைக் கவர்வது).

அசுரனை அழித்து, வேதங்களை திரும்பவும் பிரம்மனிடம் ஒப்படைக்கத் திருவுள்ளம் கொண்டார் பகவான். உடனே பிரம்மாண்டமான "மச்ச' உருவம் எடுத்தார். ஏனெனில் வேதங்களைக் கவர்ந்த அசுரன், ஆழ்கடலில்தான் சென்று பதுங்கியிருந்தான்.

திருமால், மீனாக அவதரிக்க வேறொரு காரணமும் இருந்தது. சத்தியவரதன் என்ற அரசனுக்கும், அவனைப் போன்ற மற்ற பக்தர்களுக்கும் பிரம்ம ஞானத்தை உபதேசிப்பதற்காகவும் இந்த மத்ஸ்யவதாரம் காரணமாக அமைந்தது. இதை ஸ்ரீமத் பாகவத புராணம் இயம்பும்.

யோசித்து பாருங்கள் மீனுக்கு இமைகள் கிடையாது. உறக்கத்தில் தொலைந்ததை மீட்க விழி மூடா மச்சமாக அவதாரம்.

அதே போல் அமிர்தம் கடைந்தெடுக்கத் தேவைப்பட்டது பொறுமை. அப்பொறுமையின் வடிவாக கூர்ம அவதாரம்.
வராக அவதாரம் பற்றிய இரு கதைகள் உண்டு. ஒன்று பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் யார் உயர்ந்தவர் என்ற போட்டி. இரண்டு இரணியாட்சன் கடலில் அமிழ்த்திய உலகை மீட்பது. உலகை அழிவிலிருந்து காக்க தேவையானவை என்னென்ன என்பதை பன்றியிடம் இருந்து நம்மால் கற்க முடியும். அவை எதையும் தின்னும் ஆனால் பசி வந்தால் மட்டுமே. எதையும் சேர்த்து வைத்துக் கொள்ளாது. சில சமயம் தன்னுடைய குட்டியையே கூட உண்டுவிடும். இப்படி வாழ்க்கைப் போராட்டத்தில் பன்றியின் அளவிற்கு எந்த உயிரினத்திற்கும் அக்கறை கிடையாது. வாழவேண்டும் என்பதன் சின்னமே பன்றி என்று கூட சொல்லலாம்.

அதேபோல் மனித மிருகமாக வாழ்ந்த இரணியகசிபுவை (தன் மகனையே கொல்லத் துணிந்தவனை) அழிக்க மிருக மனிதனாகவும், 100 அசுவமேத யாகம் செய்து உயர்ந்து அனைத்தையும் ஆள நினைத்த மாவலியை வாமன ரூபமாக குள்ளனாகவும், நாட்டை ஆண்டாலும் காட்டாச்சி செய்வோரை அழிக்க காட்டில் பிறந்து வாழ்ந்த பரசு இராமனாகவும், சூழ்ச்சிகள், சதிகள் செய்வோரை அழிக்க அதில் தேர்ந்த கிருஷ்ணனாகவும் இப்படி ஒவ்வொரு முறையும் தன்னைத் தகுதி படுத்திக் கொண்ட பிறகே தீமையைத் தட்டிக் கேட்பதாக இருக்கின்றன் அவதாரக் கதைகள்.

அவதாரங்கள் பிற்காலத்திலேயே வரிசை படுத்தப்பட்டன, கருட புராணமும் பாகவதமும் 22 அவதாரங்கள் என்கின்றன. அவதாரங்களை நாலு வகைப்படுத்தவும் செய்கின்றன. மோகினி, தன்வந்திரி, வியாஸ, தத்தாத்ரேய, சனக, ஹயக்ரீவ அவதாரங்கள் பல புராணங்களிலும் உண்டு.

எனவே பத்து அவதாரங்கள் என வரிசைப் படுத்தப்பட்டது பிற்காலத்தில் ஆகும்.
 
Back
Top