பட்டிமன்றம் - வாழ்க்கை.

கண்மணி.... சூழல் சூழல் அப்படிங்கறது மட்டும் தான் மனசில் எதிரொலிக்குது... கண்டிப்பா நான் இதை சிறந்த வாதமா எடுத்துக்கொள்ளப் போகிறேன்....

அமர் அண்ணாவுக்கு வச்சிட்டீங்களே ஆப்பு.... இந்தச் சூழ்நிலையில் நடுவர் எங்கே போனார்...?
 
ஆஹா! ஆஹா!

அசத்தலோ அசத்தல்.

இந்த பதிவு போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

எங்கே நடுவர் மற்றும் எதிரணியினர்?

கண்மணி அவர்களின் அசத்தல் வாதத்திற்கு என் பாராட்டுகள்.

நான் ஒரு முடிவு எடுத்து விட்டேன், இனிமேல் வெற்றிக்கனி தொடர்ந்து சுவைக்க, நான் கண்மணி அவர்கள் வாதிடும் அணியுடன் சேர்ந்து வாதிட இருப்பது தான். இது தான் சூழ்நிலையை பயன்படுத்தி வெல்வது என்பது :)
 
நன்றி கண்மணி..

சதுரங்கத்தில் ராணி சரியான வீரி.. சூரி.. நம்ம நடிகர்கள் கணக்கா (விஜய்காந்த் கணக்கா என்று சொன்ன காலம் மலை ஏறிப் போயிட்டுது. சுள்ளான் முதல் குண்டன் வரை சும்மா அந்தரத்தில் பறந்து பறந்து பின்னுறாங்கப்பா) வெளுத்து வாங்கி இருக்கார் கண்மணி. எல்லாக் காய்களையும் வெட்டி கடைசியில் எனக்கு செக்கு வைச்சு செக்கு மாடு மாதிரி தன் சொல்லுக்கு தலையாட்ட வேணும்கிறார். தலையாட்டித்தான் ஆக வேண்டும் எனும் அளவுக்கு வாதத்தை முன் வைத்திருக்கிறார். அருமையான திறமையான வாதம்.

நேற்று மாலையில் பொழுதுபோக்குத்திடலில் நானும் சில தோழர்களும் கதைத்துக்கொண்டு இருந்தோம். அடுத்தவங்களுக்கு இடைஞ்சல் குடுக்காமல் தோழர்கள் மருந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். மருந்து என்றால் என்ன என்று சொல்லத்தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் சொல்லுங்கள் என்று கேக்கும் ஒருவருக்காக*வேனும் சொல்லித்தான் ஆக வேண்டும். ஒரு ஆஃபை வாங்கி, கலக்க ஒரு லிட்டர் சோடா வாங்கி, சாப்பிட வாளிக்கணக்கில் கென்டக்கி சிக்கன் வாங்கி, என்னென்னமோ உணவு ஐட்டங்கள் குவித்து, துணைக்கு சிப்ஸ், இதுயாதி இத்யாதி வாங்கி, ஏழெட்டுப் பேர் ஒன்றாக இருந்து புகைக்காது குடியைக் குடிப்பதுதான் மருந்து சாப்பிடுவது. இதைத்தான் தீர்த்தம்னும் சொல்லுவாங்க. கோயில்ல அய்யர் கையில் கொடுக்கும் அளவுக்கே ஒவ்வொருவருக்கும் சரக்குக் கிடைக்கும். இந்த மாதிரியான மருந்து வேளையில் நானோ தனித்தவில் போல சாப்பாட்டு ஐட்டங்களை கவனித்துக்கொண்டு இருந்தேன். இதைக் கண்ட ஒருத்தனுக்குப் பொறுக்கலப் போல. உடனடியாக ஒரு மேட்டரை ஓபன் பண்ணினான். கல்யாணத்துக்குப் பிறகு துணைவி மது அருந்தினால் துணைவனென்ன செய்வான் என்று கேட்டான். கேட்டது பரவாயில்லை.. கூடவே ஒரு பிட்டையும் போட்டான். அமருதான் குடிக்காமல் இருக்கான். அதனால அவன்தான் நாட்டாமை என்றார். அந்த சூழலில் எனக்கு என்ன நினைவுக்கு வந்திருக்கும் என்று சொல்லத்தான் வேணுமா...

முதற்சுற்று நிறைவ*டையும் சூழலில் வந்து ஒருவனின் வெற்றி தோல்விக்கு சூழலே காரணம் என்பதன் சார்பாக வாதாடி சூழலிலிருந்து உதாரணங்களை உருவி எடுத்து பட்டிமன்றத்தில் புதியதொரு சூழலை சிருஷ்டித்து வெற்றிக்கனியை எட்டிப்பறிக்க வினயமாகவுன் விவரமாகவும் வாதக்கருத்துகளினை அள்ளி எறிந்து இக்கட்டான சூழலில் என்னைத் தள்ளி விட்டு ஓய்ந்திருக்கும் சூழல் சுழலைத் தொடர்ந்து முதற்சுற்றின் தொகுப்புரையை வழங்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கு. அதற்கு வசதியுரு சூழலை உருவாக்கி விட்டு விரைந்து வந்து தொகுப்புரை தந்து இரண்டாம் சுற்றை தொடக்கி வைக்கிறேன்.
 
அன்பர்களே..

பட்டிமன்றத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டோம். இனி ஒவ்வொரு தரப்பும் தத்தம் தரப்பின் அறுதியான கருத்தை நிறைவுரையாகத் தரவேண்டியதே மிச்சம். அந்த வகையில் வாழ்க்கையில் ஒருவனுடைய முன்னேற்றம் அவனிலேயே தங்கியுள்ளது என்ற அணியின் பேச்சாளர் பால்ராஜை அழைக்கிறேன்.

மற்றய இருதரப்பும் தத்தம் சகாவுடன் பேசி யார் நிறைவுரை வழங்குவது எனத் தீர்மானித்து தனிமடலில் அறியத்தர* வேண்டுகிறேன்
 
அய்யய்யோ... எப்படி இதை மிஸ் பண்ணினேன்... லாஸ்ட் ஓவர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ... 'அந்த'த் திரியையே கண் காணித்துக் கொண்டிருந்தேன்...

சில மணி நேரங்கள் அவகாசம் தேவை ...
அதற்கு முன் மற்ற டீம்கள் வாதம் செய்யத் தயார் என்றால் 'நோ ப்ராப்ளம்ஸ்.."
 
ஆஹா..

நானும் உங்களுக்கு தனிமடலிடத் தவறிவிட்டேன். மன்னிக்கவும். நேரம் எடுத்து தெம்புடன் வந்து கடைசி ஓவர் கணக்கா விளாசுங்க பாரா.
 
பாதி எழுதி முடித்தபோது வேலை குறுக்கிட்டது...
தாமதத்துக்கு வருந்துகிறேன்
இன்று இரவுக்குள் முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.....
 
அசச்சோ.. இதை எல்லாம் இங்கே சொல்லாதீங்க. பிறகு இதை வைச்சே வாதம் இழைத்திடுவார்கள் எதிர்கட்சியினர்.
 
வேலையா பட்டிமன்றமா என்ற கேள்விக்கு "நான்" தான் முடிவு எடுத்தேன்.. (வயிற்றுப் பிழைப்பு நடக்க வேண்டாமா..??)

எந்த சூழ்நிலையிலும் நாம்தான் முடிவு எடுக்கிறோம்...
 
சரி சரி.. சூழ்நிலைதான் உங்களை முடிவெடுக்கத் தூண்டிச்சு,,,

அதேமாதிரி அடுத்து ஏற்படும் சூழ்நிலைதான் நீங்கஎடுத்த முடிவு வெற்றியா இல்லையாங்கறதையும் தீர்மானிக்கப் போகுது,,

பதியும் போது மேனேஜர் பக்கத்தில் இல்லாத சூழ்நிலையாப் பார்த்து பதியுங்க,,, :D :D :D
 
இப்போதுள்ள சூழ்நிலையில்.... என் மேனேஜர் ... என் பொண்டாட்டிதான்.. தமிழில் எதாவது தட்டெழுத்து செய்யும்போது ஒரு சந்தேகத்துடன் ஒரு லுக் விடுகிறாள்... நான் என்ன செய்ய...?? (சரித்திரம் அப்படி... ஹி ஹி...):)

ஆனாலும் கீ வோர்ட்.... முக்கிய பதம் உங்களை முடிவெடுக்க ...:rolleyes::rolleyes:

சரி சரி.. சூழ்நிலைதான் உங்களை முடிவெடுக்கத் தூண்டிச்சு,,, அதேமாதிரி அடுத்து ஏற்படும் சூழ்நிலைதான் நீங்கஎடுத்த முடிவு வெற்றியா இல்லையாங்கறதையும் தீர்மானிக்கப் போகுது,, பதியும் போது மேனேஜர் பக்கத்தில் இல்லாத சூழ்நிலையாப் பார்த்து பதியுங்க,,, :D :D :D

நான் பிஸியாக டைப் அடித்துக் கொண்டிருக்கும்போது யாரும் டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்... உஷ்... :icon_ush::icon_ush:
 
அனைவருக்கும் மீண்டும் வணக்கம்.....
மீண்டும் வாய்ப்பளித்த சூழ்நிலைக்கும் சம்பந்தப் பட்ட எல்லோருக்கும் நன்றி....

பட்டிமன்றங்களில் ஒரு சுவாரசியமான விஷயம், ஒருவர் வாதம் செய்து முடித்தவுடன் அவர் சொன்னது எல்லாம் சரி என்று கேட்பவர்களை நம்ப வைப்பது...
அடுத்தவர் வாதம் தொடங்கியவுடன் ஒவ்வொரு பாயிண்டும் தவிடுபொடியாகக் கூடும்..

அற்புதமான சூழல்.. சற்றே வெட்டியாக இருக்கும் வேளைகளில் தற்போதைக்கு குடும்ப சூழ்நிலையில் இருப்பதால் வழக்கமாகத் திரியும் மற்ற பல இடங்களுக்கு உலவ முடியாததால், இங்கு கொஞ்சம் அதிகமாகவே வந்ததில், தற்செயலாக பார்த்த பட்டிமன்றம்... கேட்டவுடன் கிடைத்த வாய்ப்பு... ஆழமாக நம்புகிற தலைப்பு.. எல்லாம் சூழ்நிலைதான் அமைத்துத் தருகிறது... ஆனால் கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஹாய்யாக உட்கார்ந்து கொண்டிருந்தால் வாதங்கள் வந்து விடுமா?? இருக்கிற தம்மதூண்டு மூளையைக் கசக்கி விரல் நுனிகளை விசைப்பலகையில் தவழ விட்டு ஒவ்வொரு வாதத்தையும் எழுதிக் கொண்டிருக்கிறவன் "நான்" அல்லவா?? சீனத்தில் சுவர் நீளத்துக்கு ஒரு சூழல் கோட்டையை உருவாக்கியிருக்கிறார் கண்மணி.. அவருக்குக் கிடைத்த சூழலை நன்றாக பயன் படுத்திக் கொண்டிருக்கிறார்... அவரது வாதங்களை உருவாக்கியிருப்பது "அவர்" .... சூழ்நிலை அல்ல...!! எனவே சூழ்நிலைகள் சில வாய்ப்புக்களை உருவாக்கித் தருமே தவிர அதை உபயோகிப்பதும் உபயோகிக்காமல் இருப்பதும் "அவரவர்" கைகளில் .. அல்லது மனதில் அல்லவா உள்ளது??

'வேற்றுமைகளில் ஒற்றுமை' .. அடிக்கடி கேட்கும் ஒரு வாக்கியம்... ஆனால் இங்கு நான் காணும் 'ஒற்றுமைகளில் வேற்றுமை'.. அதாவது ஒரே விஷயத்தை மேற்கோள் காட்டி பல வித வித்தியாசமான தீர்வுகளை அளித்திருப்பது பிரமிக்க வைக்கிறது..குட்டிக் கதைகளைக் கூறி போதனைகளைக் கூறுவது பல பெரியவர்களின் வழக்கம்.. தென்கச்சி கோ சுவாமிநாதன் ஒரு நல்ல உதாரணம். ஆனால் பட்டி மன்றங்களிலும் பல இடங்களிலும் கதைகளை வைத்து பல விதமான வியாக்கியானங்களைத் தரும்போது சற்று சிந்திக்க வைத்து விடும்..

பலரும் பல முறை கேட்டிருக்கக் கூடிய ஒரு 'புட்டி'ப் பாட போதனை.
இரண்டு செடிச் சட்டிகளை எடுத்துக் கொள்ளவும்
ஒன்றில் தினமும் ஒரு குவளை தண்ணீர் ஊற்றவும்.
அடுத்த சட்டியில் தினமும் 90 சிசி டாஸ்மாக் ஊற்றவும்.
சில நாட்கள் கழிந்து என்ன நடந்திருக்கும்?? தண்ணீர் ஊற்றிய செடி நன்றாக வளர்ந்திருக்கும். டாஸ்மாக் ஊற்றிய செடி வாடிப் போயிருக்கும்..
இதில் இருந்து என்ன தெரிகிறது...?? மாரல் ஆஃப் தி ஸ்டோரி..
"தினமும் சற்று டாஸ்மாக் வயிற்றில் ஊற்றா விட்டால், வயிற்றில் செடி வளரும்"
சோம பானம் தாவரநாசினி என்பதும் ஓரளவுக்கு அறிவியல் ரீதியில் உண்மையும் ஆகும் என்றும் வாதாடுபவர்களும் இருக்கக் கூடும்.
நடுவர் சார்... ஜாக்கிரதை.. ஊற்றிக் கொடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் அவ்வப்போது 'உள்ளே'யும் கொஞ்சம் ஊற்றிக் கொள்வது சாலச் சிறந்தது..

இப்படித்தான் பல வாதங்களும் அமைந்திருக்கின்றன.. நமது 'வெற்றி தோல்வி' பற்றிய விவாதங்களிலும்... சில விஷயங்களை பிரித்துப் பின்னலாம்... பல விஷயங்களையும் 'திரி'த்தும் பின்னலாம்... !! தவறான லாஜிக்குகளை வைத்து என்னமா வாதாட்றாங்க நம்ம மக்கள்ஸ்...!!!

சரி.. இனி உள்ளே செல்வோம்....!!

வெற்றி தொல்வி இல்லை என்ற கட்சி எனக்குக் கொடுக்கப் பட்டிருந்தால், சும்மா நச்சுன்னு மூன்றே வரிகளில் முடித்திருப்பேன்."வெற்றி தோல்வி என்பது இல்லை.. அதானால் வேறு ஒன்றும் பேசுவதற்கு இல்லை.. நன்றி' என்று.....

இல்லாத ஒன்றை இல்லை என்று நிரூபிக்க இருக்கு என்று நறுக்குன்னு பல தடவை சொல்லி, பின்னர் இருக்கு ஆனால் இல்லை... அடடா... தலை சுற்றுகிறது....

சாதனையையும் வெற்றியையும் குழப்புகிறேன் என்ற வாதம் வைக்கப் பட்டிருக்கிறது.. குழப்புவதில் நான் மன்னன்.. அதிகம் குழப்பினால் தெளிவு பிறக்கும் என்பது எனது அனுபவம்.. ஸோ... ஒரு கை பார்க்கலாமா??

ஒரு வகுப்பில் 50 பேர் இருக்கிறார்கள்.. மதிப்பெண்கள் 40க்கும் மேல் பெற்றவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப் படுகிறார்கள். முதல் மூன்று அதிக மதிப்பெண் வாங்கினவர்கள் ராங்க் என்னும் சாதனை படைத்தவர்களாக கருதப் படுகிறார்கள். 40க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் வெற்றியைத் தவற விட்டவர்கள்.. அடுத்த வாய்ப்பில் வெற்றி பெற முடியும். சாதனை படைத்தவர்கள் வெற்றியாளர்கள் பட்டியலில் சேர்த்தி.. இங்கு 40 என்ற எல்லைக் கோடு சரியா தவறா? அல்லது கருணை மதிப்பெண்கள் கொடுப்பது பற்றி பல வித கண்ணோட்டங்கள் இருக்கக் கூடும். அந்தந்த விஷயத்தைப் பொறுத்தவரை இவற்றை மாற்ற வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம்.. ஆனால் வெற்றி தோல்வி என்று ஒன்றில்லை என்ற விதத்தில் பார்த்தால், எல்லாமே வெற்றிடம் ஆகிவிடும். இது பரீட்சையில் மட்டும் அல்ல அன்றாட வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நடப்புகளிலும் செயல் படுகிறது.

இன்னும் குழப்பிக் கொண்டே போகலாம்... ஆனால் இங்கு பட்டி மன்றத்தின் தலைப்பு "வெற்றி தோல்வி என்று ஒன்று இருக்கிறதா இல்லையா??" இருக்குது என்றால் நம் உள்ளேயா .?. வெளியேவா.??. (சூழல்).. என்பதே.. அப்படிப் பார்க்கும்போது "இல்லாத' ஒன்றைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட அல்லது வாதித்துக் கொண்டிருக்க வேண்டும்..??

இல்லாத வாதிகள் கூறிக் கொண்டிருப்பது .... "இருக்குது.. ஆனால் அது அநியாயம் ....அதனால் அது இல்லை..." என்ன லாஜிக் சார் இது..? இது இங்கு மட்டும் இல்லை.. பல இடங்களிலும் நான் கண்கூடாக கண்டுகொண்டிருக்கும் ஒரு வாதம்.. "வெற்றி எது ..? தோல்வி எது..." என்று கேட்டு ஸேம் ஸைட் கோல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது.. அலெக்சாண்டர், ராஜபக்ஷே, அமெரிக்கா-இராக், இந்தியா-பாக்கிஸ்தான்.. எல்லாமே சரித்திர நிகழ்வுகள்.. உலகத்தில் எங்கோ எந்த மூலையிலோ நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்...

ஒரு புலியின் வெற்றி மான் குட்டியின் தோல்வியாகலாம்...! எனது வெற்றி எனது நண்பனின் தோல்வி ஆகக் கூடும்..! நான் விட்டுக் கொடுத்தால் அவன் வெற்றி ஆகக் கூடும்.. விட்டுக் கொடுத்ததால் எனது வெற்றியாகவும் கருதலாம்.. நான் சாப்பிடும் பிரியாணி ஆட்டுக் குட்டியின் அல்லது கோழியின் தோல்வி.. ?? இவை எல்லாம் காட்டுவது ஒருவருக்கு வெற்றி என்பது மற்ற கோணத்தில் தோல்வியாகப் படலாம் என்பது.

இங்கு வெற்றி என்பது ஒருவனை முந்துவது அல்லது ஒரு இலக்கு என்பதை அடைவது என்ற குறுகிய கண்ணோட்டத்தில் வெற்றி - தோல்வியைப் பார்ப்பதால் தோன்றும் குழப்பமே.

நான் பேசிக்கொண்டிருக்கும் வெற்றி எனும் மன நிலை ... "எனது வெற்றி..." அது என் கையில்.. ஊரான் வீட்டுக் கையில் அல்லது நெய்யில் அல்ல .... அதாவது மற்றவர்களிடமோ சூழ்நிலையிலுமோ அல்ல என்பதே..

நாம் பிறந்தது வெற்றி.. அதன் பின்னர் விடும் ஒவ்வொரு மூச்சும் வெற்றி... மூச்சுப் போச்சு என்ற பின்னர் மரணமும் வெற்றி... எதற்காக வெளியே தேடவேண்டும்...? அல்லது மாயை என்று நினைக்க வேண்டும்...?? எல்லாமே நம் ஒவ்வொருவரின் 'உள்ளில்' அல்லவா இருக்கிறது...?

வெற்றி தோல்வி பற்றி எனது முதல் வாதத்தில் நான் குறிப்பிட்டிருந்ததை மீண்டும் ஒரு முறை நினைவு கூற விரும்புகிறேன்... வெற்றி தோல்வி என்பது இல்லாமல் இருந்திருந்தால் .இந்த சொற்களே புழக்கத்தில் இருக்காது.. வெற்றி தோல்வி என்பவை தூசுக்கு சமானம் என்று கருதும் மன நிலை.. ஆன்மீகத்தில் ... ஒரு வித நிர்வாண நிலையில் மட்டுமே சாத்தியம் என்று குறிப்பிட்டிருந்தேன்.. ஒரு விஷயத்தை அப்போது கூற விட்டு விட்டேன்.. ஆன்மீகம் என்பது infinity level என்ற நிலையாக இருக்கும் பட்சத்தில் சூன்யம்.. அல்லது வெற்றிடம்.. என்னும் ஒரு zero level-இலும் வெற்றி தோல்வியைப் பற்றி மறக்கும் அல்லது மரத்துப் போகும் நிலை உருவாகலாம்... உதாரணம்.. போதை, மயக்கம், புத்தி சுவாதீனம்...

நம்மைப் போன்ற சாதாரண மானுடர்கள் இந்த இரண்டு எல்லைகளுக்கு நடுவே அன்றாடம் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.. இந்த நிலைகளில் வெற்றி தோல்விகள் நமது மன நிலையைப் பொறுத்தும் ஓரளவுக்கும் சூழ்நிலையைப் பொறுத்தும் அமைகின்றன.. எனவே வெற்றி தோல்வி அறவே இல்லை என்னும் வாதத்தில் சற்றும் அர்த்தம் இருப்பதாகப் படவில்லை .. அப்படி இருப்பதுபோன்ற தோற்றம் ஆன்மீகத்தின் உச்சியில் அல்லது சூன்யநிலையின் பாதாளத்திலே மட்டுமே என்று கூறி "இல்லாத வாதிகள்" இல்லாமல் போய்விட்டதால் அடுத்ததாக ....சூழல் கோட்டையைத் தாக்க முயல்வோம்.

=============================================================================

'பொய்மையும் வாய்மை இடத்த..." என்று வள்ளுவர் கூறுகிறார் என்பதறாக எல்லோரும் அளவில்லாமல் புளுகத் தொடங்கி விடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள்.. இந்த உலகம் தாங்குமா...?? அதாவது 'புரை தீர்த்த நன்மை பயக்குமெனின்" என்ற அடை மொழியை மறந்து விட்டு....??
வள்ளுவர் கூற முயல்வது ஒரு விதி விலக்கு... Exception..... and Exceptions can not be made as Rules.. விதி விலக்குகள் விதிமுறைகள் ஆவதற்கு சற்று வாய்ப்பில்லை... பல இடங்களிலும் விதிமுறைகளையும் விதி விலக்குகளையையும் வைத்துக் கொண்டு 'சின்னப் புள்ளத்தனமா இல்ல இருக்கு..' என்ற விதத்தில் வியாக்கியனங்களையும் பார்க்கவும் அனுபவிக்கவும் நேர்ந்திருக்கிறது.. நிறுவனங்களில்....குடும்பங்களில்.....மன்றங்களில்.... எனவே அன்றாடம் நிகழும் செயல்பாடுகளை வைத்தே இம்மாதிரி விஷயங்களை ஆராய்வது சிறப்பாக இருக்கும்.

எனவேதான் துணுக்குறுகிறேன்... எப்போதாவது நிகழும் ஒரு சுனாமி.. அல்லது புயல்... நில நடுக்கம்.. (சில நாட்களுக்கு முன்பு எங்களுக்கும் அனுபவப்பட்டது..).. இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு சூழ்நிலைதான் நமது வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கின்றன என்று வாதாடுவது சுத்த அபத்தம்.. அப்படி என்றால் இன்றைக்கும் கடற்கரைக்கு யாரும் போக மாட்டார்கள்... தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பேட்டிங் பௌலிங் செய்வதை விட்டு விட்டு வருண பகவானுக்கு யாகம் செய்வதையே குறிக்கோளாக வைத்துக் கொள்ள நேரிடும்.

எனவே முதலாவது சூழ்நிலை என்பது நாம் அன்றாடம் நேரிடும் சூழல்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்..

கறார்.. அல்லது காண்ட்ராக்ட்ஸ்.. எல்லாவற்றிலும் ஒரு முக்கியமான அம்சம் (?) .. Force majeure Clause என்று சொல்லப்படும் ஒரு பாரா ஹி ஹி நான் இல்லை.. Para .. அல்லது பத்தி...பக்கம் பக்கமாக எழுதி வைத்திருக்கும் கறார்களில் எங்கோ ஒரு மூலையில் சின்ன எழுத்துக்களில் பொறித்து இருக்கும் இந்த விஷயம் ...நமது பாதுகாப்புக்காக.. இந்தப் பதங்களின் அர்த்தங்களை மட்டும் வைத்துக் கொண்டு காண்ட்ராக்டுகளை நடைமுறையில் செயல்பட நினைத்தால் ஒரு மண்ணும் நடக்காது.. அது ஒரு இன்ஸுரன்ஸ் போன்றது.. இதுபோன்ற கெட்ட சூழ்நிலைகள் அன்றாட நடைமுறையில் நடக்காது என்ற ஆக்ககரமான நம்பிக்கையில் செயல்பட்டாலேயே காரியங்களை சுமூகமாகக் கொண்டு செல்ல முடியும்..

ஸோ.. அன்றாட வாழ்க்கையில் சூழ்நிலையா ... நான் எனும் நானா.??
சூழ்நிலைதான் தீர்வு என்றால் 'நான்' ஏன் இருக்கிறேன்... ??

கொஞ்சம் ஆழமாகச் சென்று குழப்பி கிளர முயலுவோம்...

அழகான பச்சை நிற ஊர்தி... வாட்69 புட்டி கலரில் உள்ள பாட்டில் க்ரீன் கலர் கார்.. அற்புதமான ஹார்ஸ் பவர்.. தொழில் நுட்ப ரீதியாக அடுக்கிக் கொண்டே போகலாம்.. பெட்ரோல் ஃபுல் டாங்க்... குளிர்சாதன அமைப்பு... மெல்லிசை தரும் ம்யூசிக் சிஸ்டம்... வெளியே.... நல்ல சாலைகள்.. சாலைப் போக்குவரத்து விளக்குகள்.. இரண்டு பக்கமும் கடைகள்.. அலுவலகங்கள்... எங்கு செல்வது என்பதை அறிவிக்கும் ஜிபிஎஸ் அல்லது மாப்பு... (வடிவேலுவின் "மாப்பு" அல்ல... Map...).. மிக்க அழகான சூழ்நிலை... என்ன வேண்டும் இதற்கு மேல்...??

இத்தனையும் ... (அதாவது இவ்வளவு அழகான சூழ்நிலையும் ) போதுமா...? இன்னும் கொஞ்சம் வேண்டுமா...??
ஆனால் இதை எல்லாம் வைத்துக் கொண்டிருந்தால் போதுமா.. நாம் நினைக்கும் இடத்திற்குச் செல்ல ஒரு ஓட்டுனர்.. ட்ரைவர் ... வேண்டாமா...??
கார் தானாக ஓடுமா?? அதன் இலக்கைத் தான் அடைந்து விடுமா??

வாழ்க்கைப் பயணத்தில் அற்புதமான அந்த ஓட்டுனர்தான் நமது ஒவ்வொருவர் உள்ளேயும் அமைந்துள்ள "உள் மனம்" நம்மை அன்றாடம் இயக்கிக் கொண்டிருக்கும் இஞ்ஜின்... தூங்கும்போதும் விழித்திருக்கும் போதும் ... கோபத்தில் இருக்கும் போதும் போதையில் இருக்கும் போதும்.. சில வேளைகளில் ஆட்டோ பைலட் போல இயங்கும் ... சில வேளைகளில் வெளியே வந்து அந்நியன் போல தாண்டவமாடும்...

காரை ஓட்டும்போது சாலை வளைவு வரும்போது (சூழல்) ஸ்டீரிங் வீலை சுழற்றுவது, வேண்டிய நேரத்தில் (சூழல்) கியர் மாற்றுவது, ட்ராஃபிக் சிக்னல் சிவப்பு விளக்கு காண்பிக்கும்போது (சூழல்) ப்ரேக் போட்டு நிறுத்துவது, இருட்டும்போது (சூழல்) ஹெட்லைட்ஸ் ஆன் செய்வது, மழை வரும்போது (சூழல்) வைப்பர் போடுவது... அடுக்கிக் கொண்டே போகலாம்.. இதை எல்லாம் செய்வது யார் சார்...??

விமானப் பயணங்களில் ஆக்ஸிஜன் மாஸ்க் டெமான்ஸ்ட்ரேஷன் செய்யும்போது ஏர்ஹாஸ்டஸ்ஸை சற்று உன்னிப்பாக பார்க்கும் தருணமாகக் கருதினாலும், பின்னணியில் அந்தக் குரலில்.. "உங்களுடன் குழந்தை இருந்தால் முதல் உங்களைக் கவனித்துக் கொண்டு பின்னர் குழந்தைக்கு மாஸ்க் மாட்டி விடவும்...; படிப்பினை:::: --> நான் வெற்றிகரமாக செயல்பட்டால்தான் என்னைச் சுற்றி உள்ளவர்களைக் காப்பாற்ற முடியும்.. நான் நன்றாக இருந்தால் என்னைச் சார்ந்தவர்கள், என் ஊர், என் நாடு நன்றாக இருக்கும்.

ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்து விட்டால் எல்லாம் முடிந்தது என்றால்.... ஹாஹ் ஹாஹ் ஹாஹ் என்பதை தவிர என்ன சொல்வது என்று விழி பிதுங்கி முழிக்கிறேன்..

வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர் நீச்சல்
என்று ஏன் பாடவேண்டும்.. ??
பேசாமல் சூழல் அங்கிழுக்குகிறது.. போனால் போகட்டும் போடா என்று கடலுக்குள் சென்று மூழ்கி விடுவோமா??


நாதஸ்வர ஓசை.. வள வள என்று கூறாமல் ஒரு திருமண வைபவத்தை மனதுக்குள் கொண்டு வரவும்.. பேரும் பதினாறும் பெற்று வாழுங்கள் என்று எல்லோருடைய ஆசிகள்... பின்னர் .. ஊதுபத்தி.. பால் பழம்... அற்புதமான சூழ்நிலை.. அதிகம் கூறவேண்டியதில்லை.. ஆனாலும் சம்பந்தப் பட்டவர்கள் மனதுக்குள் ஊக்கம் பிறந்து 'செயல்'பட வில்லை என்றால் இதற்கெல்லாம் அர்த்தம் ஏதாவது இருக்கிறதா??

அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட நினைத்து விட்டால்.. தொடங்கி விட்டால்.. இது ஒன்றும் இல்லாமலேயே நடக்க வேண்டியது நடந்தே தீரும் அல்லவா?? ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் ஜாதகம் பொருத்தம் நேரம் எல்லாம் பார்த்து செய்யப் படுகிற திருமணங்கள் பல வெற்றிகரமாகாத நிலையில் ஒன்றுமே இல்லாமல் இரண்டு + இரண்டு கையெழுத்துக்களில் நடந்த ஒன்றிணைப்புகள் நல்ல விதமாக சுமூகமாக நடக்கின்றன.. (ஹி ஹி..) இதுவும் மனதின் உள்ளில் இருந்து வரும் வெற்றிதான்... சூழல்களை எதிர் கொண்டு வெற்றி பெருபவர்களுக்கு வாழ்த்துக்கள்...

குதிரையைத் தண்ணீர் தொட்டி வரை கொண்டு போகவே முடியும்... இது சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பது..
அது தண்ணீர் குடிப்பதும் குடிக்காமல் இருப்பது குதிரையின் மனம் படியே நடக்கும்.. இதுதான் செயல்பாடு..

எந்த ஒரு நல்ல ஆசிரியரையும் கேட்டுப் பாருங்கள்... .. Learning is an Active Process... என்று கூறுவார்கள் ... அதாவாது... You can never teach a person.. one can only be helped to Learn..."
அதாவது
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக...
என்று சொன்னாலும் கற்பிப்பது என்பதின் இலக்கணம்.. கற்க உதவுவது என்பதே....!
கசடறக் கற்பவன் மனதில் இருந்தே அந்த ஊக்கம் கற்பதன் ஆசை அல்லது வெறி ...அதன் பயனாக ... வெற்றி உருவாகுகிறது... யாராலும் எதையும் கற்பிக்க முடியாது...சூழல் உற்பட... எல்லோரும் அனுபவிக்கிற சூழல்களில் இருந்து சிலர் மட்டும் கற்க அல்லது வெற்றியைக் காண்பதுவே இதன் சாட்சி.

சூழ்நிலைகள் அற்புதமானவை... இல்லை என்று சொல்வதில் அர்த்தமே இல்லை...
ஆனால் சூழ்நிலைகள் மட்டுமே... அல்லது பெரும்பான்மையாக நம்மை ஆட்டிப் படைக்கின்றன என்று கூறுவது... லாஜிக் பயங்கரமாக இடிக்கிறது.
அப்படி என்றால் ஒரே சூழ்நிலையில் எல்லோரும் ஒரே இலக்கு அல்லது தீர்வுக்குச் சென்றிருக்க வேண்டும்... அல்லவா...?

கண்மணி அக்காவின் சில வாதங்களைக் கடன் வாங்கிக் கொள்வோம்

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

இப்போ "நீ எடுத்து கொண்டாயோ"... "(நீ) கொடுத்தாயோ"...?? என்பதை நன்றாக உச்சரிக்கவும்.. இப்போ தெளிவா இல்லை...??
அது அங்கிருந்தது.......... நீ எடுக்கா விட்டால் யாருக்கும் உதவாமல் அங்கேயே இருந்திருக்கும்.....
எனவே "எடுத்து கொண்ட நீ" பாராட்டுப்பட வேண்டியவன்/ள்.

"கொடுத்தாயோ'...??? டிட்டோ.... ஸேம்...

வேறு ஒரு இடத்தில் .... கட் அண்ட் பேஸ்ட்...."அதாவது சூழலுக்கு ஏற்ப உயிரினங்கள் தம்மை மாற்றிக் கொள்கின்றன." .. ஸோ தம்மை மாற்றி கொள்ளாத உயிரினங்கள் அழிகின்றன... யாரைப் பாராட்ட வேண்டும்?? சூழலையா?? மாற்றிக் கொண்ட உயிரினங்களையா..??

அடுத்தது....Quote: "100 மீட்டர் தூரத்தை 10 நொடியில் கடந்தார். இது வெற்றியா தோல்வியா? ....சிலர் 9 வினாடிகளில் ஓடி இருந்தால் அவர் தோற்றவர் ஆகிறார்.... etc " unquote. இப்போது சூழ்நிலையை ஆராய முயல்வோம்.. பெரிய ஸ்டேடியம்..ஆயிரக்கணக்கானவர்கள் இருந்து ஆர்ப்பரிக்கிறார்கள்.. நடத்துனர் ஒரு துப்பாக்கியை மேலே குறி பார்த்தபடி.. 'ஆன் யுவர் மார்க்... " என்றெல்லாம் சொல்லிவிட்டு "டுமீல்" என்று சுடுகிறார். எட்டுபேர் ஓடினால் அவர்கள் எல்லோருக்குமே ஒரே சூழ்நிலை.. ஆனால் காமெராவை Zoom செய்து கொண்டு முதல் வருபவரை உன்னிப்பாக கவனியுங்கள்.. ஓட்டப் பந்தயம் தொடங்கும் முன்பே மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டு ஒரு தீவிர நிலைக்கு வந்திருப்பார்.. செவிகளைத் தீட்டிக் கொண்டு நடத்துனரின் ஒவ்வொரு உச்சரிப்பையும் அணு அளவில் கேட்டு அந்த சத்தம் கேட்டதும் தனது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும் அவர் மனதில் இருந்து போகும் தந்திச் செய்திகள்.. அதை செயல்படுத்தி தசைகள் புடைத்து முன்னேறும் அந்த வேகம்.. ஓரக் கண்ணால் தனது பக்கம் ஓடுபவரைப் பார்த்து இன்னும் அதிகமாக்கும் அந்த வேகம்.. கடைசியில் அந்த நூல் தனது நெஞ்சில் படும்போது கிடைக்கிற அந்த வெற்றியின் சுகம்... இது எல்லாம் அவரை உள்ளே இருந்து ஊக்குவிக்கும் அவர் மனதில் இருந்து ஏற்படுபவைதானே...?? இல்லை என்றால் எட்டுபேரும் அதே வேகத்தில் அல்லவா ஓடி இருக்க வேண்டும்...??

இது போகட்டும்...இதே தூரத்தை நான் எட்டே செகண்டில் ஓடக்கூடும்...ஒரு வெறி நாய் என்னைத் துரத்தும் பட்சத்தில்...!! இதன் க்ரெடிட் அந்த நாய்க்கா?? நிச்சயமாக இல்லை... எனது மனதில் தோன்றும் அந்த மரண பயத்துக்கு அல்லவா...?? அதே நாயை எனது நண்பன் ஒரு முறைத்துப் பார்த்து ஒரு கல்லை எடுத்து ஓங்கினால் வடிவேலு சௌண்டுடன் வாலை மடக்கி வைத்த்டுக் கொண்டு ஓடும். ஒரே சூழ்நிலையில் வேறுபட்ட செயல்பாடுகள்...

அடுத்தது...."காந்தி அவமதிக்கப்படாமல் இருந்திருந்தால், அவரின் சூழலில் இருந்த அடிமைத்தனம் அவருக்குத் தெரியாமல் இருந்திருந்தால் அவரும் சாதாரணமாக இருந்து இறந்திருக்கலாம். அடிமைப்பாடு இல்லையென்றால் சுதந்திரப் போராட்டம் எதுக்கு?." தென் ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கானவர்கள் அவமாதிக்கப் பட்டிருக்கிறார்கள்... ஏன் ஆயிரம் காந்திகள் உருவாக வில்லை?? அந்த உள் மனம் ஒரு மோகன்லால் கரம்சந்திடம்தானே இருந்தது..??

"ஆப்பிள் கீழே விழுந்திருக்காவிட்டால் நியூட்டன் ஈர்ப்பு விசையைப் பற்றிச் சிந்தித்து இருக்கவே மாட்டார்.... " ஆப்பிள் மட்டுமா கீழே விழுகிறது?? எல்லா பொருட்களும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக கீழே விழுந்து கொண்டுதான் இருக்கின்றன.... நியூட்டன் மனதில் மட்டும் தோன்றியது ஏன்..?? அவர் மனம் அவரை "உள்ளே" இருந்து தூண்டியதனால் தானே??

நாம் எல்லோரும் குளத்தில் ஸ்விம்மிங் பூலில் பல முறை குளித்திருக்கிறோம். காலாகாலமாக கோடிக்கணக்கான மக்கள் இதுபோன்றே குளித்த சூழ்நிலையில் ஒருவன் மட்டும் திடீர் என்று யுரேக்கா என்று கத்திக் கொண்டு ஏன் ஓட வேண்டும்?? அவனது உள்ளில் தோன்றிய அந்த எண்ணப் பொறி அல்லவா?

எல்லா சிற்றரசர்களும் கப்பம் கட்டும் "சூழ்நிலை"யில் இருந்தார்கள்.. ஆங்கிலேயனுக்கு.. எங்கள் எட்டயபுரத்து கட்டபொம்மன் மட்டும் அதை எதிர்த்து பலருடைய மனதிலும் சுதந்திர எண்ணத்தை விதை விதைத்தானே... அவன் மனதின் உள்ளே இருந்த வீரமும் தைரியமும் தானே அதற்குக் காரணம்??

10 விழுக்காடு பெற்ற மாணவன் சிரித்தபோது, அவன் மனதில் இந்த ஏட்டுச் சுரைக்காய் எனக்கு உதவாது.. எனது வேறு திறன்களை அடையாளம் கண்டு வெல்லப் போகிறேன் என்ற அர்த்தம் இருந்தால் நிச்சயமாக அவன் வெற்றி பெறுவான்.

பாம்பு கருடனுக்கு சவால் விடுகிறது என்றால், கிடைத்த சூழ்நிலையை அந்த பாதுகாப்பை மனதில் வைத்து அந்த நிலையிலேயே தக்க வைத்துக் கொண்டதால்தான்.. கழுத்தில் சுற்றிக் கொண்டிருப்பது கஷ்டமாக இருக்கிறது.. நமது புற்றுக்கே போய்விடுவோம் என்று நினைத்திருந்தான், வழியிலேயே கருடன் ஒரே தூக்கு தூக்கியிருக்கும்...??

மகாபாரதம் முன்பு தொலைக் காட்சியில் காண்பிக்கப் பட்டபோது அந்தக் காட்சி இன்றும் பசுமையாக நினைவில் நிற்கிறது.. ஒரே சூழல்.. வில் போட்டியில் ஒரே சூழல்.. ஆனால் 'க்யா தேக் ரஹா ஹை??" .. எதைப் பார்க்கிறாய் என்ற கேள்விக்கு ஒருவர் வானத்தை பார்க்கிறேன் (ஆஸ்மான் தேக் ரஹா ஹூ).. மரத்தைப் பார்க்கிறேன் (பேட் கோ தே ரஹா ஹு) என்று பதில் அளித்தனர்.. அர்ஜுனன் மட்டுமே "பக்ஷி தேக் ரஹா ஹூ.. உஸ்கா ஆங்க் தேக் ரஹா ஹூ).. "பறவையைப் பார்க்கிறேன் அதன் கண்ணைப் பார்க்கிறேன்" என்ற தெளிவு இலக்குடன் பதில் கூறியதிலேயே வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று புரிந்திருக்கும்.. மீண்டும் வலியுறுத்த விரும்புவது.. ஒரே சூழல்.. கண்ணோட்டங்கள் வேறு வேறு...அவரவர் மனதைப் பொறுத்தது.. என்பதே.

எனவே பெரும்பாலான சூழ்நிலைகள் பொதுவாக நாம் எல்லோருக்கும் பல வாய்ப்புக்களை அளிக்கின்றன... அவற்றை 'கண்டு' கொள்வதும்... உபயோகிப்பதும்... செயல்படுத்துவதும்.. நமது உள்ளே இருந்து வரும் உள் மனதின் கட்டளைகள்... ஒரு சில சூழ்நிலைகளை உருவாக்குவதும் நமது கையில் இருக்கிறது.. எப்போவாவது ஒரு சில சூழ்நிலைகள் (பேரிடர்கள்) நம்மையே விழுங்கி விடக் கூடும்... எனவே முன்னெச்சரிக்கை என்ற உணர்வையும் நமது மனது பதிவு செய்து வைத்திருக்கிறது.. அதை நினைத்து சூழ்நிலையே எல்லாம் என்று நாம் ஹாய் யாக இருந்து விட்டால் 'அம்போ'தான்..

அம்பியின் மனதுக்குள் ரெமோவும் அந்நியனும் இருந்ததுபோல். நமது ஒவ்வொருவருக்குள்ளேயும் கொஞ்சம் சூன்யவாதி, கொஞ்சம் சூழ்நிலைவாதி, கொஞ்சம் தன்னிலைவாதி தம்மாத்தூண்டு ஆன்மீகவாதி எல்லோருமேயே குடியிருக்கிறார்கள் .. அவ்வப்போது நமது உணர்வுகளைப் பொறுத்து ஒவ்வொருவர் தலைதூக்கக் கூடும். சில உணர்வுகளை சூழ்நிலைகள் தூண்டக்கூடும் ஆனால் அவற்றை ஒரு நிலைக்குள் வைத்திருப்பது நமது மனதே.. மனப் பயிற்சியே..

காலையில் குளிர் நேரத்தில் போர்த்திக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறோம்.. கோழி கூவவில்லை அல்லது அலாரம் அடிக்கவில்லை என்ற சூழ்நிலைக்காக அடிமடி முட்டிக்கொண்டிருப்பதை படுக்கையிலேயே செய்யமுடியுமா என்ன?? நமது மனம் கட்டளையிட்டு நம்மை எழுப்பி அதற்கேற்ற சூழ்நிலையைத் தேடிப் போய் வேண்டிய விதத்தில் செயல்பட வைக்கிறது.

ஒரு வகையில் பார்க்கும்போது 'சூழ்நிலை' என்பது ஒரு மாயை...
மற்றவர்கள் வெற்றிக்கும் நமது சொந்த தோல்விகளுக்கும் நாம் ஒவ்வொருவரும் 'கண்டு பிடித்து'க் கொண்டிருக்கும் ஒரு சாக்குப் போக்கு...

வெற்றி கிடைத்தது என்றால் அது சூழ்நிலையைப் பொறுத்து இருக்கலாம்... ஆனால் வெற்றி பெற்றேன் என்றால் அது 'நான்' முயன்று பெற்றது....

'வாழும் கலை'ப் பயிற்சியில் 'நான்' கற்றது... கருவில் இருந்து பிறந்த நொடியில் இருந்து இறக்கும் நொடி வரை நான் தொடர்ந்து செய்வது.."சுவாசிப்பது"..
சூழலில் காற்று இருந்தாலும் மூச்சு இழுப்பதும் நான்.. வெளி விடுவதும் நான்..ஆனால் ஆட்டோமேட்டிக் ஆக செய்து வருவதால் அதை நாம் .. அதாவது நமது உள்மனம் அதை சூழல் என்ற பதத்துக்கு விட்டு விடுகிறது.. என்றைக்காவது சளி பிடித்து மூக்கு அடைத்துக் கொண்டால் தான் மூக்கு என்ற உறுப்பு இருப்பதையே உணர்கிறோம்..

கூற முனைவது என்ன என்றால் பல வெற்றிகளும் நாம் பெற்றவை... ஆனால் 'கிடைத்தவை' என்று சூழலுக்கு க்ரெடிட் கொடுப்பது ஒரு வழக்கமாகி விட்டது .. அதுவும் ஒரு வகையில் ஒரு மாயைதான்.. வெற்றி தோல்வி இல்லை என்று கூறுவது போலவே...

வெற்றியும் தோல்வியும் நமக்கு உள்ளேதான் என்பதில் ஏதாவது ஐயம் இருந்தால் உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்...

இது எல்லாவற்றிற்கும் மேலாக நான் இங்கு வெற்றி தோல்வி என்று கூற முனைந்து கொண்டிருப்பது ...தேர்விலோ.. தேர்தலிலோ.. போட்டியிலோ.. பதவியிலோ ... அல்ல.. வாழ்க்கையில்..; அது செல்வம், பொருள் அல்ல......: நமது மன நிலை.. அதைக் கட்டுப்படுத்துவது நமது உள்ளே இருந்து வருவதுதான்.. அதை நாம் அடையாளம் கண்டு கொண்டு காரை ஓட்டும் ஓட்டுனர் போன்று ஓட்ட பயின்று கொண்டோமானால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்.. இதுதான் 'நானும் ஓகே நீயும் ஓகே" நிலை.

இந்த வெற்றி நிலையை அடைய உள் நோட்டம் ..Introspection தேவை.. நம் மனதை ஆராய நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்...

உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்

எந்த சூழ்நிலையையும் தற்காலிகத் தொய்வுகளையும் சமாளித்து மேற்கொண்டு அமைதி நிலையுடன் (contented state of mind) வெற்றியுடன் நமது உள்ளத்தின் மூலமாய் எதிர்கொள்ள இறைவன் எல்லோரையும் வழி நடத்த வாழ்த்துக்கள் என்று கூறி வெற்றிகரமாக இதுவரை வாதிட்ட .. வாதிடப் போகிற நண்பர்களுக்கும் வாழ்த்துக் கூறி, வாய்ப்பளித்தமைக்கு மீண்டும் நன்றி கூறி வெற்றியுடன் விடை பெறுகிறேன்.;)
 
Last edited by a moderator:
முதல் சுற்றில் சற்று யோசித்தேன். பாரா அவர்கள் திரியைக் கிள்ளி இருக்காரே.. எரிவதுக்கு நேரம் வாய்ப்பளிக்காமல் போகுமோ என்று. கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தி விளாசி இருக்கிறார். சும்மா அந்தரத்தில் எத்தனை பந்துகள் மின்னியபடி.. அவை பௌன்டரிகளா சிக்சர்களா கேட்சா என்று வாழ்க்கையில் வெற்றிக்கு அவனே காரணம் என்ற அணியைச் சேர்ந்த நிறைவுரையாளர் வந்த பிறகு பார்க்கலாம். வாங்கப்பூ..
 
முதல் சுற்றில் சற்று யோசித்தேன். பாரா அவர்கள் திரியைக் கிள்ளி இருக்காரே.. எரிவதுக்கு நேரம் வாய்ப்பளிக்காமல் போகுமோ என்று. கிடைத்த நேரத்தை சரியாகப் பயன்படுத்தி விளாசி இருக்கிறார். சும்மா அந்தரத்தில் எத்தனை பந்துகள் மின்னியபடி.. அவை பௌன்டரிகளா சிக்சர்களா கேட்சா என்று வாழ்க்கையில் வெற்றிக்கு அவனே காரணம் என்ற அணியைச் சேர்ந்த நிறைவுரையாளர் வந்த பிறகு பார்க்கலாம். வாங்கப்பூ..

அய்யய்யோ அப்ப பாரா அவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதியும் உங்களுக்கு வாழ்க்கையில் வெற்றிக்கு ஒருவனே காரணம் என்பது அதில் துளி கூடத் தெரியலையா?

மனித முயற்சிக்கு நாங்களாவது 20 சதவிகிதம் பங்கு அளித்தோம்.. நீங்க இப்படி அத்துவானத்தில் அத்துவிட்டுட்டீங்களே அமரரே...

வாழ்வில் வெற்றி தோல்வி இல்லை என்று சொல்லும் நண்பர்களை அழைக்கப் போறீங்களா சூழ்நிலையில் தான் வெற்றி தங்கி இருக்கிறது என வாதாடப் போகும் எங்களையா?

இங்க சூழ்நிலை கொஞ்சம் கடினமாத்தான் இருக்கு, இணைய வேகம் ஆதவனூர்ல மிகக்குறைச்சலா இருப்பதால இதுக்கு ததிங்கிணதோம்..

அதனால கருணை கூர்ந்து வெற்றி தோல்வி இல்லை என்று வாதாடப்
போகும் அணியை அழையுங்கள்.
 
நடுவர் அவர்களும் மாட்ச் பார்த்துப் பார்த்து தூக்க மயக்கத்தில் இருந்திருக்கக் கூடும்.....:)

"முறை" தவறி நான் அழைக்கப் பட்டதை 'அங்கு' சுட்டிக் காட்டியிருந்தேன்..

சொல்லப் போனால் எனக்கும் கொட்டாவி வருகிறது...
 
Last edited:
எங்கள் அணியை அழைக்க எண்ணினார் நடுவர் என்று பொருள் கொண்டு எங்களின் தொகுப்புரையை பதிகிறேன்.

வாழ்க்கையில் வெற்றி உண்டா? அப்படி இருக்குமானால் அது எங்கே தங்கி இருக்கிறது.

இது தலைப்பு..

இங்கே இருக்கிற அந்தத் “தங்கி” என்ற வார்த்தையை தலைப்பைத் தந்த நடுவர் உட்பட எல்லோருமே கவனிக்கத் தவறி விட்டார்கள் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு அர்த்தமுள்ள வெற்றியின் போதும் மனித குலம் ஒரு சிறிய அளவு உயர்ந்திருக்கிறது… இன்று நாமிருக்கும் வீடுகள், சாலைகள், அணிந்திருக்கும் உடைகள், பள்ளிகள், கணினிகள், இணையம் என வாழ்க்கைத் தரம் என்று சொல்லுகிறோமே, அத்தனையும் சூழலில் தங்கிய வெற்றிகள்தான். தனிமனிதனில் அந்த வெற்றிகள் தங்கி இருந்தால் அவனோடு அழிந்து இருக்கும்.

பிறந்த குழந்தைக்கு கொடுக்கப்படுவது கள்ளிப்பாலா? தடுப்பூசியா?

அதற்குக் காரணம் என்ன?

தடுப்பூசி என்பது சூழலில் தங்கி இருக்கும் வெற்றிங்க..
கள்ளிப்பால் என்பது சூழலில் தங்கி இருக்கும் தோல்விங்க…

மற்றவங்க எல்லாம் வெற்றி தோல்விக்கு யார் காரணம் என்று பேசினாங்களே தவிர, வெற்றி எங்கே தங்கி இருந்தது?. எங்கே தங்கி இருக்கிறது? எங்கே தங்கப் போகிறது எனப் பேசாமல் இருப்பதற்குக் காரணம் என்ன? சிந்தியுங்கள். சுழலை சரியா கவனிக்கலை. அவ்வளவுதான்,

நான் எனது வாதத்தில் வெற்றி சூழலில் தங்கா விட்டால் அர்த்தமிழந்து போகிறது எனச் சொன்னதை நண்பர்கள் கவனித்து இருக்கலாம். அதாவது தங்கி என்ற வார்த்தையை நான் அப்பவே கவனிச்சுட்டேன்,

கார்ல் லூயிஸ் 8.96 வினாடிகளில் 100 மீட்டரைக் கடந்தது அப்போதைக்கு வெற்றிதான், ஆனால் அது சூழலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? இன்னொருத்தர் அதை முறியடித்து விட்டார்.. காலப்போக்கில் அது அழிந்து விடும். அதனால் அந்த வெற்றிக்கு அர்த்தம் காலத்தால் அழிந்து போகிறது. அது அர்த்தமிழந்த வெற்றி. பசிக்கு புலி புள்ளிமானை அடிப்பதைப் போல. அப்போதைய பசி தீர்ந்தது.

முதல் வாதத்தின் முடிவில் அழகா தொகுத்துக் கொடுத்திருந்தேன்,,

நமது கடமை செயல் செய்வது மட்டுமே! இதைமட்டும்தான் பால்ராசண்ணே மிகவும் சிரமப்பட்டு விளக்கிகிட்டு இருக்கார்.
வெற்றி தோல்விக்கு சூழல்தான் மிக முக்கிய காரணம்..- இதை மறைக்க முயற்சி செய்துகிட்டு இருக்கார்.

சூழலுக்கு தேவையில்லாத செயல் வெட்டிச் செயல். – இதை யாரும் மறுக்கவில்லை-

சூழலின் தேவையே மனிதனின் என்ன செய்யவேண்டும் என்பதை அடையளப்படுத்துகிறது– இதையும் யாரும் மறுக்கலை.

அச்செயலின் வெற்றி தோல்வி என்பது சூழலால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. – இதையும் யாரும் மறுக்கலை

சூழல் இல்லா விட்டால் அது வெறும் செயல்தான். காலத்தால் அது அழிந்துவிடும். – இதையும் யாரும் மறுக்கலை .

சூழல் என்பது மாற்றத்திற்கு உட்பட்டது. எனவே வெற்றி என எண்ணியது தோல்வியும் ஆகலாம் தோல்வி என எண்ணியது வெற்றியும் ஆகலாம். சூழலில் காலம் தாண்டி வாழும் மாற்றத்தை விளைவிக்கும் செயல்களே நிலைக்கின்றன, மற்றவை அர்த்தமற்றவை ஆகின்றன. – இதையும் யாரும் மறுக்கலை.

வாழ்க்கையில் வெற்றி தோல்வி உண்டு. அவை முக்கியமும் கூட – இதை ஒத்துக்கறாங்க வெற்றி என்பது உண்டுன்னு வாதாடும் மக்கள்.

பால்ராசண்ணனின் முதல் வாதத்திற்கும் இரண்டாம் வாதத்திற்கும் உள்ள வித்தியாசம் சூழல்தான் என்பதை அவர் தெள்ளத் தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார். இப்ப சூழல் மறுபடி மாறுதே அண்ணா! என்ன செய்யலாம்.

புலி புள்ளிமானை வெற்றி பெறும் வரை வாழ்கிறது, அதன் வாழ்விலும் முயற்சி வெற்றி இருக்கு. ஆனால் புலிகளின் எண்ணிக்கை குறையக் காரணம், அவற்றின் வெற்றி சூழலில் போய் தங்கவில்லை. அதனாலதாணுங்கண்ணா.

மனிதனின் அர்த்தமுள்ள வெற்றியோ சூழலில் தங்குகிறது. மனித குலத்தின் வாழ்க்கைத் தரத்தை ஒரு நேனோ மி,மீ அளவுக்கு உயர்த்துகிறது. எடிசன் மின்சார விளக்கு கண்டுபிடிக்க, மின்சாரம் கண்டுபிடித்த வெற்றி, சூழலில் “தங்கி” இருந்தது மிக முக்கிய காரணம் என்பதை மறைக்கப் பார்க்கிறார்.

தவறான லாஜிக்குகள் எது என்பது இப்போது விளங்கிவிடும்.,

நாம் பிறந்தது வெற்றி – அதுசரிங்க அந்த வெற்றிக்குக் காரணம் யார்?
நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் வெற்றி - ஏன் நிலாவிலோ செவ்வாயிலோ விட்டுப் பாக்க வேண்டியது தானே? காத்தில்லாட்டி?
மரணமும் வெற்றி – தற்கொலை வெற்றியா?


அன்றாட வாழ்க்கையில் சூழ்நிலையா? நான் எனும் நானா? சூழ்நிலைதான் தீர்வு என்றால் “நான் “ எங்கே இருக்கிறேன்.

கேள்வி நல்ல கேள்விதான். ஆனால் இதற்கான பதில் இந்தச் சூழ்நிலையிலேயே உள்ளது.,

தாமரை அண்ணா ஆ!பத்து பதில்களில் அவரோட சாதனையைப் பற்றி கேட்ட போது சொன்ன வார்த்தைகளை ஆழமா கவனிங்க

உலகம் – தாமரை < உலகம்

சூழலில் இந்தச் சமன்பாடு அர்த்தமுள்ளதாக இருக்கணும்னு சொல்லி இருக்காருங்க.. எவ்வளவு பெரிய தத்துவம். தாமரையின் சாதனைகள் உலகம் என்னும் சூழலில் தங்கணும் என்றுதான் சொல்லி இருக்கார். அதாவது நமது செயல்கள் சூழலில் ஒரு சிறிய அளவேனும் மாற்றம் ஏற்படுத்த வேண்டும், அப்போது சூழலில் நாம் பங்கு பெற்று விடுகிறோம். சூழல் என்பது என்ன என்பதை முன்னரே என் வாதத்தில் விளக்கி இருந்தேன். நாம் செய்த செயல்களின் விளவுகள் கூட சூழலில் கலந்து புதிய சூழலாக வருகின்றன.

கார் ஓட்டுவதைப் பற்றி பால்ராசண்ணன் சொன்னார். ஓட்டுனருக்கு எப்படி ஓட்ட பழக்கமானது என்பதை சாமர்த்தியமாக மறைத்து விட்டதாக எண்ணிக்கொண்டிருக்கிறார் பால்ராசு..

உருளை வடிவம் எளிதாக நகரக் கூடியது என்று மரங்களை உருட்டித் தெரிந்து கொண்ட வெற்றி – சூழலில் தங்கியது. இதை உபயோகித்து

உருளை வடிவத்தின் மேல் கனமான பொருட்களை வைத்துச் செல்லலாம் என்று கண்டறிந்த வெற்றி சூழலில் தங்கியது, இதை உபயோகித்து

சக்கரமும் அச்சும் அச்சாணியும் கண்டு பிடித்த வெற்றி சூழலில் தங்கியது.. அதை உபயோகித்து

வண்டி என்பதைக் கண்டு பிடித்த வெற்றி சூழலில் தங்கியது.

அதன் பிறகு இப்படிப் பலப் பல வெற்றிகள் சூழலில் தங்கிய பின்னால் உண்டாகிய காரை, சூழலில் ஓட்டக் கற்றுக் கொண்ட ஓட்டுனர்..

ஸ்டார்ட் செய்து, பிரேக்கை விட்டு ஆக்ஸிலேட்டரை மிதித்து ஸ்டியரிங் வீலை திருப்புவது மாபெரும் சாதனை என்று சொல்றாரே பால்ராசண்ணன். இது ஞாயமுங்களா?

யாரோ உழவன் விதைத்தறுத்தை யாரோ வியாபாரி இவங்க வீட்டுக்குக் கொண்டுவந்து தர, அதை மனைவியோ அம்மாவே ருசியா ஆக்கித்தர அதை எத்தனையோ பேர் சேர்ந்து கட்டிய வீட்டில் உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைத்த நேரத்தினாலும், பலத்தினாலும், எத்தனையோ கோடி பேர் சேர்ந்து உண்டாக்கிய காரினாலும் தான் காரோட்டம் நடந்ததே தவிர காலை வைத்து எதையோ அழுத்தி கையால் எதையோ திருகியதால் மட்டும் அல்ல.

ஆனா ஒண்ணு, நம்முடைய ஒவ்வொரு சிறு செயலுக்கும் சூழலில் தங்கி உள்ள எத்தனை எத்தனை வெற்றிகள் காரணமாக இருக்கின்றன என்பதை பால்ராசண்ணா தனக்கே தெரியாமல் ஒத்துகிட்டார்னே சொல்லணும்.

ஒருவனுடைய வெற்றி அவனோடே தங்கி விட்டால் இதெல்லாம் நடக்குமுங்களா? வெற்றிகள் சூழலில் தங்கி இருக்கின்றன. சூழலுக்குப் போய் தங்கவிருக்கின்றன.
ஆக பட்டிமன்ற தலைப்பிற்கான வாதம் இங்கேயே முடிஞ்சு போச்சி!!!

அழகான பச்சை நிற ஊர்தி – வண்ணங்கள் உண்டாக்குவதில் பெற்ற வெற்றி, சக்கரம், வண்டி, இஞ்சின், கியர்கள், ஆக்ஸில்கள், கார்புரேட்டர், இரப்பர் சக்கரங்கள், அதிர்வு தாங்கிகள், ஸ்பாஞ்ச் (சொகுசு இருக்கை) இப்படிப் பலப் பல சமூகத்தில் கண்ட வெற்றிகளில் “தங்கிவிட்ட” தொகுப்பு!

ஹார்ஸ்பவர் : இதுவும் சமூகத்தில் சூழலில் தங்கி உள்ள தொடர் வெற்றிகளின் தொகுப்பு. அதானுங்க எத்தனை தலைமுறை ஆராய்ட்சி இதில் தங்கி இருக்கு தெரியுமா?

பெட்ரோல் : கண்டு பிடிப்பு, சுத்தகரிப்பு, இப்படி பல வெற்றிகளின் தொகுப்பு. இதுவும் சூழலில் தங்கி உள்ள வெற்றிகளின் தொகுப்பு
குளிர் சாதன அமைப்பு : இதுவும் சூழலில் தங்கி உள்ள வெற்றிகளின் தொகுப்பு


மியூசிக் சிஸ்டம் : இதுவும் சூழலில் தங்கி உள்ள வெற்றிகளின் தொகுப்பு

நல்ல சாலைகள் : இதுவும் சூழலில் தங்கி உள்ள வெற்றிகளின் தொகுப்பு

விளக்குகள் : இதுவும் சூழலில் தங்கி உள்ள வெற்றிகளின் தொகுப்பு

ஜி,பி.எஸ் ; இதுவும் சூழலில் தங்கி உள்ள வெற்றிகளின் தொகுப்பு

மேப் : இதுவும் சூழலில் தங்கி உள்ள வெற்றிகளின் தொகுப்பு

டிரைவர் : இவருக்கு ஓட்டுவது எப்படித் தெரிந்தது? சாவி எங்கிருந்து கிடைத்தது? ஆக்சிலேட்டர், பிரேக் எல்லாம் எப்படித் தெரிந்தது? மாட்டு வண்டியைக் கூட பார்க்காத ஒருவன் காரை எப்படி ஓட்ட முடியும்? ஓட்டும் அறிவை பெற்றது சூழலில் இருந்து

ஓட்டுவது – (இப்போ பால்ராசண்ணனை நான் செய்வதல்ல) கார் டிரைவர் காரை ஓட்டுவது. இது செயல். இதைத்தான் நாம் எப்பவோ ஒத்துகிட்டாச்சே.. அப்புறம் எதிர்க்க வேண்டியது ஒண்ணும் இல்ல.

இந்தச் சின்ன பங்கிற்கு நான் கொடுத்த பரிசு இருபது சதம். காரை ஓட்டினா பத்தாது. எங்க போகணும் என்று இலக்கு வேணும். அதை நிர்ணயிப்பது சூழல். அந்தப் பயணத்தின் பலனான வெற்றி சூழலில் ஒரு சின்ன மாறுதலை உண்டாக்கி அந்தச் சூழலில் போய்த் தங்கணும். அதுதான் வெற்றிப் பயணம். இல்லைன்னா வெட்டிப் பயணம்.

நாம் வெற்றிகளை இப்படித் தாங்கி நிற்கும் சூழலின் அர்த்தமுள்ள பகுதியாக வாழவேண்டும் என்பதே வாழ்க்கையின் நோக்கம் என்பதை இப்பொழுது இப்பட்டிமன்றத்தை வாசித்து வரும் ஒவ்வொருவரும் புரிந்து கொண்டிருப்பார்கள்.

சூழல் மட்டுமே எல்லாவற்றிற்கும் காரணம் யாரும் ஒண்ணும் செய்யாதீர்கள் என நாங்கள் சொல்லவில்லை. தனிமனித முயற்சி என்னும் ஒரு சின்ன பங்கிற்கு 20 சதவிகித உரிமை கொடுக்கிறோமே அது எவ்வளவு பெரிய மதிப்பு என்பது கார்பயணத்தைப் பற்றி அதில் உள்ள சூழலில் தங்கிய வெற்றிகளைப் பற்றி விளக்கிய போது புரிந்திருக்கும். வெறும் காற்றில் கையை அசைத்தால் கார் திரும்பாதுங்க அண்ணே! காலை பூமியின் மீது உதைத்தால் காரில் போகும் வேகம் கிடைக்காதண்ணே.. அவையெல்லாம் சூழலில் தங்கிய வெற்றிகள் என்ற “ஞானோதயம்” இனிமேலாவது உண்டாகட்டுமண்ணே!

செயலுக்கு நாம் அதீத மதிப்பு கொடுக்கும் காரணம் செயல் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தைத் தருவதற்காகவே.. குதிரை அதுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார். அண்ணனுக்கு ஒரு பாட்டில் குளுக்கோஸ் ஏத்துங்கய்யா! அப்பவாவது சூழலை புரிஞ்சுக்குவார். (ஹி ஹி)

குதிரை தண்ணீர் குடிக்க காரணம் தாகம். தாகத்துக்கு காரணம் கழிவுகளில் தண்ணீர் குறைந்தது., கழிவுகளுக்கு காரணம் வளர்சிதை மாற்றம். வளர்சிதை மாற்றங்களுக்குக் காரணம் சூழல். (அடங்கொப்புரானே இன்னும் ஆழமா தோண்டினா பூமியில் பொத்தலே விழுந்திரும் போல). ஆக மேலோட்டமா பார்த்தா குதிரை அதுவா தண்ணி குடிச்ச மாதிரி தெரிஞ்சாலும், சூழல்தான் குதிரையத் தண்ணி குடிக்க வச்சது எனப் புரியும், குடிக்காட்டி குதிரை செத்துப் போகும்ணே..

இப்பதான் குதிரை தண்ணி குடிச்சதெல்லாம் ஒரு வெற்றியா என செல்வா கேட்பார். அந்த வெற்றி சூழலில் போய் தங்குமானால் அது வெற்றிதான். இல்லாட்டி அர்த்தமில்லாத செயல்.

கில்லி படத்தில் கலங்கரை விளக்கத்தில் பெயர் பொறித்து இருப்பார்கள். அவ்வளவு உயரம் ஏறி என் கையால் கிறுக்கினேன் என விவரம் புரியாதவர்கள் பெருமிதப் பட்டுக்கொள்ளக் கூடும். ஆனால் அந்த கலங்கரை விளக்கத்தின் அஸ்திவாரத்தில் இருந்து உச்சி விளக்கு வரைக்கும் வெற்றிகள் தங்கி இருப்பதை ஊனக்கண்கள் காண மறந்தாலும் மறுத்தாலும் கண்மணியின் ஞானக் கண்களுக்கு நன்கு தெரியும். இன்று மன்ற மக்களுக்கும் தெரியத் தொடங்கி விட்டது. கலங்கரை விளக்கம் உருவான கதையை அறிந்தவன், அதில் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என அறிந்தவன் கிறுக்கல்களைப் போற்ற மாட்டான் இல்லையா?


You can never teach a person.. one can only be helped to Learn..."

அப்படின்னு ஏன் சொன்னார்? இதை பால்ராசாண்ணா எங்கிருந்து கத்துகிட்டார்? தானா வருதுன்னு சொல்லாதீங்க…

பால்ராசண்ணன் மாதிரி நாம வஞசனை வைக்க மாட்டோம். எடுத்ததுக்கு 10 மார்க் கொடுத்ததுக்கு 10 மார்க் ஆக இருபது மார்க் கொடுத்திருக்கமில்ல… ஏன்னா இப்ப நீங்க எடுத்தது சூழலில் இன்னொருவர் கொடுத்து வைத்தது.. அப்போ அவருக்கு எத்தனை மார்க்? அவருக்கு சூழலில் இன்னொருவர் கொடுத்தது.. அவருக்கு.. … .. ஆக மல்டி லெவல் மார்க்கெட்டிங் சங்கிலித் தொடர் போல வெற்றியைப் பங்கு பிரிச்சா நான் கொடுத்த 20 மார்க் ரொம்பவே அதிகமா தோணும்.

நீங்க எடுத்தாலும் அர்த்தமுள்ள வெற்றியைச் சூழலுக்கு கொடுக்கா விட்டால் பிரயோசனம் இல்லை. அந்த வெற்றியை நீங்க மட்டும் அனுபவிச்சா அழிந்து அர்த்தமிழந்து விடும். நீ – நீ இதற்கு முன்பும் இடையிலும் பின்னரும் எவ்வளவு சூழல் இருக்கிறது என்பது மக்களுக்கு இப்போ நல்லாவே தெரியும்.


சூழலுக்குத் தக்கவாறு தங்களை உயிரினங்கள் மாற்றிக் கொண்டன. அப்படிங்கறார். சரிங்க.. அது எப்படி? ஒரு மிருகம் மரத்தில தலையை மாட்டிகிட்டு இழுத்துகிட்டு ஒட்டகச் சிவிங்கி ஆயிருச்சா? தலை நீண்ட ஒட்டகச் சிவிங்கி உண்டாக எத்தனை தலைமுறைகள் ஆச்சுன்னு தெரியுமா?

அர்த்தமுள்ள வெற்றிகள் எதுவுமே தனி வெற்றிகள் இல்லை. அவை தொடர் வெற்றிகள்

சூழல்தான் இத்தனை சிறுவெற்றிகளை இணைத்து பெருவெற்றிகளாக நிலை நிறுத்திகிட்டு இருக்கு.


ஆகா! எல்லோரும் மனசில நினைச்சா 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜெயிக்கலாமாம். அதுக்கு முன்னால உண்ட உணவு, கற்று கொடுக்கப்பட்ட உடற் பயிற்சிகள், சாப்பாடு போட்டு வளர்த்த அப்பா அம்மா, எப்படி ஓடனா வேகமாக ஓடலாம்னு கத்துக் கொடுத்த கோச்.. இத்தனையும் காற்றில் பறக்க விட்டுட்டு மனசில நினைச்சார் வேகமா ஓடினார்னு சொன்னீங்களே அதுதானுங்க கூத்து. உலக சாதனைகள் உடைக்கப்படக் காரணம் சூழ்நிலையில் வெற்றி நுணுக்கங்கள் தங்கி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதால் பால்ராசண்ணே!

பால்ராசண்ணாவைத் துரத்த என்றே ஒரு வெறிநாய் வளக்கப் போறேன். சிவா அண்ணாவின் லொள்ளிக் கொள்ளும் இரவுகள் கதையை எதுக்கும் பால்ராசண்ணா படித்து விடவும். (பார்த்தீங்களா இது சூழல்) முடிஞ்சா பால்ராசண்ணா வெற்றி பெறட்டும். இன்னிக்கு வெறிநாய்களை வெற்றி கொள்ள பல்லாயிரம் வழிகள் உள்ளதால் பால்ராசண்ணே உலக சாதனை ஒன்றையும் உடைக்கப் போறதில்லை… அவர் 8 செகண்டுக்குள்ள ஓடுறது அவ்வளவு எளிதல்ல,


உதாரணங்கள் போதும் உங்களுக்கு ஞானோதயம் தருகிறேன்.

மனிதனுக்கும் – விலங்குகளுக்கும் உள்ள வித்தியாசம் சூழலை மனிதன் புரிந்து கொண்டதுதான். அதைப் புரிந்த மனிதனின் வெற்றிகள் தங்கிய சூழல்தான் சமுதாயம்.

மனிதனின் ஒவ்வொரு அர்த்தமுள்ள செயலின் வெற்றியும் சூழலில் ஒரு சின்ன மாற்றத்தை உண்டாக்கின. அந்தச் சூழல் மாற்றம் என்ற வெற்றியானது அடுத்த செயலுக்கு வழிவகுத்தது.

இப்படி ஒவ்வொரு வெற்றிக் கல்லாக வைத்துக் கட்டப்பட்ட மிகப் பிரம்மாண்டமான கட்டிடமாக சூழலில் தங்கிய வெற்றிகள் இன்றைய மனித சமுதாயத்தை அடையாளப்படுத்துகின்றன.

இத்தனை வெற்றிகளை தன்னுள் தங்க வைத்துக் கொண்ட சூழல் என்னும் பிரம்மாண்டமான மேடை மீது நின்று கொண்டு.. இன்று நான், நான் தான் காரணம் என்று வெறிகொண்டலைவது முட்டாள்தனம்.

அதற்கு மாறாக சூழல் என்பது வெற்றிகளின் தொகுப்பு.. என்பதைப் புரிந்து கொண்டு சூழலின் மகத்துவத்தையும் பிரம்மாண்டத்தையும் புரிந்து கொண்டு சூழலில் நாமும் பங்கு கொள்வதால் மட்டுமே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ இயலும்.

இப்படி சூழலில் தங்கிய வெற்றிகள் உண்டாக்கிய சூழல் இல்லாட்டி பால்ராசண்ணே இப்பொ வேட்டைக்குப் போயிருப்பாரு.. நான் கிழங்கு, கனி வகைகள் தேடிகிட்டு இருப்பேன்... காரோட்டுவதா? விடுதலைப் போராட்டமா? ஒரே போராட்டம் உயிர்வாழ மட்டுமே...

பூமியின் மேல் நிற்பவனுக்கு பூமி சுற்றுவது புரியாது... அது மாதிரிதான் சூழல் புரியாததால பால்ராசண்ணண் தான் தான் எல்லாம்னு அறியாம பேசிட்டாரு.. டாலமி சொன்னப்ப அவரை மிரட்டி பணிய வச்ச உலகம், கோபர்நிகஸ் சொல்லி கலிலியோ ஆதாரம் காட்டின பின்னால் நம்பினது.

ஒரு சின்ன விஷயம் நெருப்பு உண்டாக்குவது. தீப்பெட்டி எடுத்து உரசி உண்டாக்குகிறோம். அதுக்கு தீப்பெட்டி தொழிற்சாலையில் குச்சியில் ஒரு மருந்தை நனைக்கிறோம். அட்டைப் பெட்டிய்ல் உரச இன்னொரு மருந்து பூசறோம். அந்த மருந்தைகளை தயாரிப்பது வேறு ஒருவர். மரத்தை வெட்டுவது வேறு ஒருவர்.. அதைச் சீவி பெட்டியாக்குவதும் குச்சியாக்குவதும் வேறு ஒருவர்.. அந்த மருந்துக் கலவைகளை தயாரித்தவர் இன்னொருவர். அதற்கு மூலப் பொருட்களை பிரித்தெடுத்தவர் இன்னொருவர். இதைக் கண்டு பிடித்தவர் இன்னொருவர்.


தீப்பெட்டி வாங்கி குச்சி உருவி உரசின பால்ராசண்ணே தானே தீயை உண்டாக்கியதா நம்புகிறார். ஆனால் நடுவரும் மக்களும் இப்பொழுது உண்மையை அறிந்து கொண்டு விட்டீர்கள். தீர்ப்பைச் சொல்லிடுங்க.

சின்ன தீக்குச்சிக்கே இவ்வளவு வெற்றிகள் சேரணும் என்றால்..... நிலவில் காலடி வைக்க???

இப்போது நடுவர் என்ன கேட்டாரோ அதற்கான பதிலும், என்ன கேட்க நினைத்தாரோ அதற்கான பதிலும் இரண்டும் இங்கே இருக்கிறது.

முதல் வாதத்தில் அவர் என்ன கேட்க நினைத்தாரோ அதற்கு ..

சூழலுக்கு தேவையில்லாத செயல் வெட்டிச் செயல்.
சூழலின் தேவையே மனிதனின் என்ன செய்யவேண்டும் என்பதை அடையளப்படுத்துகிறது.
அச்செயலின் வெற்றி தோல்வி என்பது சூழலால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது.
நமது கடமை செயல் செய்வது மட்டுமே!(20 சதவிகிதம்)
வெற்றி தோல்விக்கு சூழல்தான் மிக முக்கிய காரணம்..-
சூழல் இல்லா விட்டால் அது வெறும் செயல்தான். காலத்தால் அது அழிந்துவிடும். சூழல் என்பது மாற்றத்திற்கு உட்பட்டது. எனவே வெற்றி என எண்ணியது தோல்வியும் ஆகலாம் தோல்வி என எண்ணியது வெற்றியும் ஆகலாம். சூழலில் காலம் தாண்டி வாழும் மாற்றத்தை விளைவிக்கும் செயல்களே நிலைக்கின்றன, மற்றவை அர்த்தமற்றவை ஆகின்றன. .


இப்போதைய தொகுப்புரையில் அவர் என்ன கேட்டு இருக்கிறாரோ அதற்கு பதில்

அர்த்தமுள்ள வெற்றிகள் சூழலில் மாற்றம் உண்டாக்கி தங்கி விடுகின்றன.
அவை அடுத்த செயல்களுக்கான அடிக்கற்கள் ஆகின்றன.. புதிய சூழல் உண்டாகிறது, புதிய தேவைகள், புதிய இலக்குகள்..
மீண்டும் செயல்களை மனிதன் செய்கிறான் (20 சதவிகிதம்)
மீண்டும் இன்னொரு அர்த்தமுள்ள வெற்றி சூழலில் சேர்கிறது.. சூழல் மாறுகிறது..
மீண்டும் மீண்டும் சூழல் மாற்றம்.
கோடானு கோடி வெற்றிகள் இன்று நம்காலடியில் படிந்து இறுகி உண்டான பிரம்மாண்டமான சூழல் மேடையில் நிற்கிறோம் நாம்.



விசைப்பலகையின் மீது எதிரணியினரோ, நடுவரோ அல்லது வாசகர்களோ கையை வைக்கும் பொழுது ஒரு கணம் சிந்தியுங்கள். அ என்ற ஒரு பொத்தானை அழுத்துவது மட்டுமே தனி மனித முயற்சி. அது அ என்று திரையில் தோன்றி இணையத்தில் பலருக்கும் தெரிவதற்கு சூழலும், சூழலில் தங்கி உள்ள கோடானு கோடி வெற்றிகளும்தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்ளக் கடவீராக. (இதற்கு பின்னால் உள்ள உழைப்புகளுக்கும் வெற்றிகளுக்கும் முன்னால் என் எண்ணங்கள் மிகச் சிறிய தூசுதான் பால்ராசண்ணே!)

இதைப் புரிந்து கொண்ட பின்னால், சூழலை உணர்ந்து மன்றத்தில் நாம் படைக்கும் படைப்புகள் சூழலில் நல்ல வளர்ச்சியை உண்டாக்கும் அர்த்தமுள்ள வெற்றிகளைத் தரும் பதிவுகளாக இருக்கட்டும். அந்தப் பதிவுகள் இன்னும் கோடானு கோடி அர்த்தமுள்ள பதிவுகளை உருவாக்கத் தூண்டட்டும். நான் இதைப் படைத்தேன் என்ற கர்வம் தலைக்கேறாமல் மேலும் மேலும் வெற்றிகளை சூழலில் தங்க வைப்போமாக.

நடுவருக்கு இப்பொழுது ஞானம் தோன்றிவிட்டது என நினைக்கிறேன்

குழந்தைகளா, எங்க பதில் சொல்லுங்க?

அர்த்தமுள்ள வெற்றி எங்கே தங்கி இருக்கு?

சூழலிலே!



சூழலின் பிரம்மாண்டத்தை வணங்கி விடை பெறும்
 
Last edited:
யப்பா சாமி....இப்பவே கண்ணைக்கட்டுதே......

ஒவ்வொருத்தரும் யாருக்கும் சளைச்சவங்களில்லங்கற மாதிரி வெளுத்துக் கட்டுறாங்க. மேடையில நடக்குற பட்டிமன்ற நிகழ்ச்சியிலக் கூட, கூட்டத்தோட கைத்தட்டலுக்காக கொஞ்சம் கிம்மிக்ஸ் எல்லாம் செய்வாங்க. ஆனா...இங்க...சொல்ல வந்தக் கருத்தை நல்லா ஆணித்தரமா சொல்றாங்க.

பால்ராஜோட வாதத்தைப் படிச்சிட்டு வாய்ப் பிளந்தா....அடுத்ததா செல்வா பிண்ணுறாரு....அவரு பிண்ணிப் பெடலெடுக்கறதுக்குள்ள...கண்மணி....பத்தாயிரம் வாலாவா...படபடன்னு சும்மா பொளந்து கட்டிட்டாங்க....அடுத்து வந்த பரம்ஸ்....அடி வயித்தைக் கலக்க வெச்சுட்டாரு(எதிரணியினருக்குத்தான்)...

ரொம்ப ரொம்ப அருமையான இந்த பட்டிமன்றத்துக்கு மகுடம் வெச்ச மாதிரி அமரனோட நடுவர் உரை. கலக்குறாரு எங்க பாஸ்.

மொத்தத்துல....நட்சத்திர திரி இது. அதனால என் சார்பா ஐந்து நட்சத்திரங்கள்.

கலக்குங்க மக்களே. வாழ்த்துகள்.
 
அன்பர்களே..

பட்டிமன்றத்தின் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டோம். இனி ஒவ்வொரு தரப்பும் தத்தம் தரப்பின் அறுதியான கருத்தை நிறைவுரையாகத் தரவேண்டியதே மிச்சம். அந்த வகையில் வாழ்க்கையில் ஒருவனுடைய முன்னேற்றம் அவனிலேயே தங்கியுள்ளது என்ற அணியின் பேச்சாளர் பால்ராஜை அழைக்கிறேன்.

மற்றய இருதரப்பும் தத்தம் சகாவுடன் பேசி யார் நிறைவுரை வழங்குவது எனத் தீர்மானித்து தனிமடலில் அறியத்தர* வேண்டுகிறேன்

பட்டி மன்றத்தில் பங்கேற்க வாய்ப்பு தந்த நடுவருக்கு என் நன்றிகள். வாதங்களை முதலில் மிக ஆர்வத்துடன் தொடங்கி அதற்கு மன்றத்து நண்பர்கள் பலர் நண்பர் ப.ரா. நடுவர் உட்பட பாராட்டியது கண்டு மகிழ்ந்தேன். தொடர்ந்து வந்த சகோதரி கண்மணி அவர்களின் வாதங்களையும் நண்பர் ப.ரா. அவர்களின் வாதங்களையும் ரசித்தேன். எனது அணியில் நண்பர் செல்வா என்னை விட திறம்பட வாதிட வல்லவர் என்பதால் நடுவரின் வேண்டுகோளுக்கிணங்க நண்பர் செல்வாவை நிறைவுரை வழங்குமாறு வேண்டி அவருக்கு தனி மடல் ஒன்று அனுப்பியுள்ளேன். எனது வாதங்களை பாராட்டிய நல்லிதயங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
 
மனிதனுக்கும் இயற்கைச் சூழலுக்கும் நடக்கும் போட்டி போல பால்ராஜ் அவர்களுக்கும் கண்மணி அவர்களும் கருத்துப் போட்டி நடந்திருக்கு. இதில் உள்ள நல்ல விசயம் என்ன என்றால் இந்தப் போட்டி ஆரோக்கியமாக இருப்பதுதான். இதற்கு மேலும் எங்களால சொல்ல முடியும் என்று கங்கணம் கட்டியும் கட்டி விட்டும் தயாராகக் காத்திருக்கும் வெற்றி தோல்வி இல்லை என்ற அணியின் ராக்கெட் செல்வாவை அன்புடன் அழைக்கிறேன்.
 
பால்ராசண்ணா... பின்னிட்டீங்க.... கண்மணியும் நீங்களும் நேரில் பேசினா எப்படி இருக்கும்....?!?!?..

கண்மணி நீங்களும் அசத்திட்டீங்க... படிக்கிறவங்களுக்கு தான் உஸ்ஸ்ஸ்... அப்பப்பா....
 
Back
Top