பட்டிமன்றம் - வாழ்க்கை.

அமரன்

Moderator
Staff member
வணக்கம் மக்களே.
கடந்த வாரம் புத்தகக் கடைக்குப் போயிருந்தேன். ஒரு அடுக்கைப் பார்த்ததும் திகைச்சுட்டேன். வாழ்க்கையில் ஜெயிப்பது எப்படி?; வாழ்வை வெற்றி கொள்வது எப்படி?; வென்றவர் சென்ற பாதை; வெற்றிக்குச் சில வழிகள்; இப்படி ஏகப்பட்ட புத்தகங்கள் அணிவகுத்து இருந்தன. எனக்கு திகைப்பு ஒருபக்கமும் பயம் ஒருபக்கமும் வந்து பேதி தந்ததுச்சு.

நான் வாழ்க்கையில ஜெயிச்சுட்டேனா.. தோத்துட்டேனா.. வெற்றியை நோக்கிச் போறேனா.. தோல்வியை சந்திக்கப் போறேனா.. என ஒரே குழப்பம். அது போதாதென்று நம்ம செல்வர் வந்து இன்னொரு தொல்லை குடுத்தார். அமரா.. வாழ்க்கை என்ன பந்தயமா.. சவாலா.. போர்க்களமா.. வெற்றி தோல்வி அடைவதுக்குன்னு அவரும் தன் பங்குக்கு குழப்பத்தில் பங்கெடுக்க ஒவ்வொருத்தனும் என்னைப் பார்த்து ஒரு மார்க்கமாச் சிரிச்சுட்டுப் போறளவுக்கு நிலைமை மோசமானது. அனல் காத்துல தலை வேறு கலைஞ்சிருந்துச்சா அவனவன் பார்வையால பைத்தியமே பிடிச்சுடும் போலாச்சு என் நிலமை.

இந்தமாதிரிக் கேள்விகள் பலருக்கு தோன்றி இருக்கலாம். அந்த வகையில் இது சப்பந்தமாக அலசுவது ஆரோக்கியமானதாக இருக்கும்னு நினைச்சு அதையே முதலாவது பட்டிமன்றத் தலைப்பாக்கிட்டேன் - நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

ஆக பட்டிமன்றத் தலைப்பு...
வாழ்க்கையில் வெற்றி தோல்வி இருக்கா? இல்லையா?

பொதுவாப் பட்டிமன்றங்கள்ள இரு தரப்பினர் இருப்பர். இங்கேயும் இருக்கு என்று ஒரு தரப்பு.. இல்லை என்று ஒரு தரப்பு.. ஒவ்வொரு தரப்பிலும் மூவராக அறுவர் பங்கெடுக்கும் பட்டிமன்றமாக கொண்டு செல்ல யோசித்திருக்கேன். ஒரு வேளை ஆறு பேரை விட அதிகமானோர் பங்குபெற விரும்பம் தெரிவித்தால், தரப்பை மூன்றாக்கலாம் என்று யோசித்திருக்கேன்.


  1. வாழ்க்கையில் வெற்றி தோல்வி இருக்கு.
  2. வாழ்க்கையில் ஒருவனது வெற்றி/தோல்வி அவனிலேயே தங்கியுள்ளது
  3. வாழ்க்கையில் ஒருவனது வெற்றி/தோல்வி சுற்றுச் சூழலில் தங்கியுள்ளது.
இப்ப நீங்க என்ன செய்யனும்னா வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பதே இல்லை என்ற தலைப்பின் கீழ் வாதாட விருப்பமா அல்லது வாழ்க்கையில் வெற்றி தோல்வி இருக்கு என்ற தலைபபுக்கு ஆதரவாக வாதாட விருப்பமா என்பதை எனக்கு தனிமடலில் தட்டி விடுங்கள். ஆகாஸ்ட் 27 ஆம் திகதிக்கு முன்னதாக விருப்பம் சொல்லுங்க.
 
வணக்கம் நண்பர்களே!

குருவி தலையில் பனங்காய் வைச்சாக் கூடப் பரவாயில்லை. எறும்பின் தலையில பாறாங்கல்லை வைச்சுட்டாங்க.ஏதோ என்னால் முடிஞ்சளவுக்கு திறம்படச் செய்ய முயற்சிக்கிறேன்.

எந்தவித முகவுரையும் இல்லாமல் நேரடியாக களங்காண்போம்.

வாழ்க்கையில் வெற்றி தோல்வியே இல்லை என்ற அணியில் மதுரைமைந்தனும் செல்வாவும் இருக்க..

வாழ்க்கையில் ஒருவனது வெற்றி தோல்வி அவனிலேயே தங்கி உள்ளது என்ற அணியில் விக்ரமும் பால்ராஜும் இருக்க..

வாழ்க்கையில் ஒருவனது வெற்றி தோல்வி சூழலில் தங்கியுள்ளது என்ற அணியில் பரஞ்சோதி அண்ணனும் கண்மணியும் இருக்க..

கருத்து யுத்தத்தை சங்கூதித் தொடக்கி வைக்கிறேன்.

விதிகளை இங்கே பாருங்க.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=21071

முதலில் வாழ்க்கையில் வெற்றி தோல்வியே இல்லை என்ற அணியிலிருந்து கருத்துக்கணை தொடுக்க மதுரை மைந்தன் அவர்களை அழைக்கிறேன்.

நகைச்சுவையில் நயமேற்றி எதிரணி பயப்பட எல்லாருக்கும் பயன்பட தொடுங்க கணைகளை மதுரைமைந்தரே..

பட்டிமன்றம் முடியும்வரை பார்வையாளர் குரல்களைக் கட்டுக்குள் வைத்திருங்கள். பட்டிமன்றத்தின் முடிவில் தனியாக ஒரு திரி ஆரம்பிக்கப்படும். அது செல்லும் பாதையின் பிரகாரம் பார்வையாளர் குரல் கூடமாகவோ பார்வையாளர் பங்காளராகும் மேன்முறையீட்டு மன்றமாகவோ அமையும்.
 
Last edited:
இரு பிரிவுக்கு அதிகமாக வாதிட்டால் அது 'சுழலும் சொற்போர்' என்ற வகையில் வரும் என்று எண்ணுகிறேன்.

வாருங்கள் மதுரை அண்ணா!

உங்களின் கலகலப்பான வாதம் கேட்க காத்திருக்கிறோம்..

அமரனண்ணா..

பார்வையாளர்களான நாங்கள் இடையிடையே வாதிப்போருக்கு பின்னூட்டம் இடலாமா?
 
பட்டிமன்றத்தில் பங்கேற்க எனக்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி. எனது அணியில் நண்பர் செல்வா இருப்பது 'தம்பி உடையான் பட்டிமன்றத்திற்கு அஞ்சான்' என்று கூற வைக்கிறது.

வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேச வந்திருக்கிறேன். வாழ்க்கையின் இலக்கு என்ன? நாம் எதை நோக்கி செல்கிறொம் என்று அறிய முடியாத நிலையில் அதில் வெற்றி தோல்வி என்பது அர்த்தமில்லாதது. வாழ்க்ககையில் வெற்றி கடந்து போகும். தோல்வியும் அதே மாதிரி தான்.

நாம் வெற்றி என்று எதை குறிப்பிடுகின்றோம்? பொருளற்ற வாழ்க்கையில் பொருளீட்டுதல் வெற்றி ஆகாது. இதற்கு உதாரணமாக சமீபத்தில் மறைந்த ஆங்கில பாப் இசை அரசன் மைக்கேல் ஜாக்ஸனை காணலாம். உலகத்தின் அனைத்து மக்களின் இதயங்களை கவர்ந்து பெரும் பொருள் ஈட்டி வெற்றி பெற்றார் என்றால் அவரது சொந்த வாழ்க்கையில் சிறு பருவத்திலிருந்து பல சோகங்களை சந்தித்து தனிமையில் வாடி இறுதியில் நிம்மதியாக உறங்க முடியாமல் போதை பொருளுக்கு அடிமையாகி அகால மரணம் அடைந்தார். இது அவருக்கு ஏற்பட்ட பெரும் தோல்வி.

வாழ்க்கையில் எப்பேது தோல்விகள் நின்றுவிடுகின்றனவோ அப்போது வெற்றிகளும் நின்று விடுகின்றன. தோல்விகளெ வெற்றிக்கு படிக்கல் என்பார்கள். ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்லவிழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

வெற்றி என்பது ஒவ்வொரு முறையும் முதல் இடத்தைப் பெறுவது என்று பொருள் அன்று. வெற்றிக் கொம்புகளின் உச்சாணியில் பலருக்கு இடமில்லை. அதனால் மற்றவர்கள் தோற்றவர்கள் என்று ஆகாது. ஒரவரின் செயல்பாடு கடந்த முறையை விட சிறந்தது என்றால் அதுவே அவருக்கு வெற்றி. வெற்றியும் தோல்வியும் இரவு பகல் போல மாறி மாறி வரும்.

ஒரு வெற்றி அல்லது தோல்வி என்பதை எந்த அளவு கோள் வைத்து நிர்ணயம் செய்கிறோம?. கண்ணதாசனின் இந்த பாடல் என் நினைவுக்கு வருகிறது.

" புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை".

ஒவ்வொரு வெற்றிக்கு பின்னும் வெற்றியடைய அவர்கள் இழந்தவைகளைப் பற்றி கேட்டுப் பாருங்கள். அப்போது தெரியும் ஒரு வெற்றி எத்தனை இழப்புகளும் வேதனைகளும் உள்வாங்கியுள்ளது என்று. அப்படியானால் அவர்கள் பெற்ற வெற்றியை மட்டும் எப்படி கொண்டாடி களிக்க அவர்களால் முடியும்? எப்படி அவர்களை " ஒரு வெற்றியாளர் " என்று சொல்லிவிட முடியும்? எத்தனை கோடி மனிதர்கள் தோல்வியுடன் வாழ்க்கையில் நிம்மதியோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது மனிதனாய் பிறக்கும் எல்லோருமே வெற்றி அல்லது தோல்விகளை பெறுவதற்காகவே படைக்கப்படுகிறார்களா என்ன ?

தோல்விகளை வாழ்க்கையின் இறுதிவரைக்கும் கண்ட ஒருவரால் தான் வெற்றியின் இலக்கு பற்றி சரியாக சொல்ல முடியும். அவரால் தான் எப்படியெல்லாம் முயன்றால் தோல்விகளை தவிர்க்க முடியும் என்றும் சொல்ல முடியும். வாழ்க்கையில் சிலர் மட்டும் வெற்றி பெறுகிறார்கள். பலர் தோல்வி அடைந்துவிடுகிறார்கள். இதை நாம் கண்கூடாகக் கண்டு வருகின்றோம். இதே போல் ஒரு செயலில் இறங்குகிறோம்; சில சமயங்களில் வெற்றி கிடைக்கின்றது. பல சமயங்ககளில் தோல்வியே முடிவாகின்றது.

நாம் இறக்கும்வரைக்கும் இலட்சியங்களிலான, சிக்கலான வலைகளால் நம்மை நாமே கட்டிக்கொண்டு ஒவ்வொரு சிக்கலாய் விடுவித்துக்கொண்டுஇ இலட்சியங்களை ஈடேற்றிக்கொண்டு வருகையில் நாம் இறந்துவிடுவோமென வைத்துக்கொள்வோம். நாம் வாழ்க்கையை வென்றுவிட்டோமா? இதற்கான பதிலைச் சொல்லப்போவது யார்? நாமா? நாம்தான் மரணித்துவிட்டோமே..? நம் இறப்பின் பிற்பாடு நம்மைச் சூழ இருப்பவர்கள்தான் நாம் வாழ்க்கையை வென்றோமா? அல்லது தோற்றோமா? எனச் சொல்லப்போகிறார்கள். நம் இறப்பின் பின்னர் அவர்களது பாராட்டுக்களால் அல்லது வசைபாடல்களால் நமக்கு என்ன பயன்?.

இவற்றையெல்லாம் யோசிக்கும்போது ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரெகுமான் பாடிய மாதிரி 'எல்லா வெற்றிகளும் எல்லா தோல்விகளும் இறைவன் ஒருவனுக்கே' என்பதால் வாழ்க்கையில் வெற்றி தோல்வி இல்லை என்று முடிக்கின்றேன். நடுவர் அவர்கள் எனக்கு சாதகமாக தீர்ப்பு அளிப்பார் என நம்புகிறேன். எனது பேச்சில் குறைகள் இருக்கலாம். எத்தனை குறைகள் இருக்கோ அதற்கு தகுந்த மாதிரி கழித்துக் கொண்டு கை தட்டுங்கள். நன்றி. வணக்கம்.


 
சபாஷ் மதுரையண்ணா!

ஆணித்தரமான வாதம்.அடுக்கடுக்கான எடுத்துக்காட்டுகள். அசைக்கமுடியாத கருத்துகள்!

உங்க டண் டனா டண்'ணில் எதிரணி(கள்) டரியலாகி இருப்பாங்க!

யாருப்பா அடுத்து வரப்போவது?

வாங்க!!
 
நல்லதொரு வாதத்தைத் தெளிவாக அளித்திருக்கிறார் மதுரை மைந்தன் ஐயா அவர்கள்.

வெற்றி தோல்வி பற்றிக் கவலைப் படவேண்டிய அவசியம் இல்லை. அதனால் பயனும் இல்லை என்று சொல்லி

அடுத்து வாதிட வருபவர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறார்.

பாராட்டுக்கள்.
 
தனக்கு ஒதுக்கப்பட்ட காலத்தில் தன் ஆணித்தரமான வாதத்தை வைத்த் மதுரை மைந்தனுக்கு :aktion033::aktion033::aktion033:

பட்டி மன்ற நடுவரைக் காணோமே!...

வந்து, தன் கருத்தை பதிவு செய்து, அடுத்த கட்சியினரை வாதத்தை வைக்க அழைக்க வேண்டாமோ


:icon_clap: அமரன்! :icon_clap: அமரன்!! :icon_clap: அமரன்!!!
 
அன்பர்களே.. ஒன் த ஸ்பொட் பாராட்டு மிகுந்த உற்சாகமளிக்கும். அந்த வகையில் வாதக்கருச்சிதைவு ஏற்படாதவாறு உங்கள் கைதட்டல்களை வாதாட்ட வல்லுனர்களுக்குக் கொடுங்கள்.
 
கருத்தை நயம்பட உரைத்த மதுரை அவர்களுக்கு நன்றி.

விளையாட்டிலோ போட்டிகளிலோ சண்டையிலோ வெற்றி தோல்வி இருக்க்கும். ஏனெனில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு கண்ணுக்குத் தெரியும். வாழ்க்கையில் அப்படி ஒரு இலக்கு இல்லாத போது வெற்றி தோல்வி எப்படி இருக்கும். நியாயமாகத்தான் கேட்டிருக்கார் மதுரை. கேட்டதோட விடாமல் சாட்சியங்களை நிறுத்தி எதிரணிக்கு நெருக்கடி கொடுத்ததோடு எனக்கும் கொடுத்திருக்கார். வெறுமனோ கொடுத்திருக்கார் என்று சொல்றதால பெட்டி கை மாறிடிச்சுன்னு நினைச்சுடாதீங்க.

வாழ்க்கையில வெற்றி தோல்வி இருக்கு என்றால் இலக்கு இருக்க வேணும். இலக்கு இருந்தால் இலக்கை இயம்ப வேணும். இலக்கை இயம்பினால் அது இலக்கியம் ஆகிவிடுகிறது. இலக்கியம் என்றாலே நம்மாளுங்களுக்கு பன்னிக் காய்ச்சல் பயம். பீதி.. பேதி.. தற்கால பொருளாதார சரிவுச் சிக்கல்.. இப்படி இருந்தால் நிலையில் எப்படி வாழ முடியும்? அருமையாகக் கேட்டிருக்கார்.

என் வாழ்க்கையின் இலக்கு என்ன. யோசிக்கிறேன்.. அஞ்சு வயசில ஆரஞ்சு மிட்டாய் கேட்டுப் பெற்றேன்.. அது இலக்கா.. பத்து வயசில வாத்தியார் மண்டையில் குட்ட வேணும் என ஆசைப்பட்டு முடியாமல் போச்சு. அது இலக்கா.. எட்டாவது படிக்கும்போது கூடப்படிக்கிற பொண்ணின் கையைப் பிடிச்சுட்டு நட்டக்க விரும்பி பிடிச்சு நடந்தேன்.. அது இலக்கா.. பத்தாவதை பக்காவாப் பாஸ் பண்ண நினைச்சு செஞ்சேன்.. அது இலக்கா.. இப்படி ஆசைப்பட்டு, விருப்பட்டதுகள் வாழ்க்கையின் இலக்கா? அடைஞ்சு, அடையாமல் போனதுகள்தான் வெற்றி தோல்வியா..? கேக்குறார் மதுரை..

இதெல்லாம் இலக்கே அல்ல. இதிலடைந்ததெல்லாம் வெற்றி தோல்வியே அல்ல. இவை வாழ்க்கையில் ஏற்பட்ட முன்னடைவு, பின்னடைவுகளே அன்றி வெற்றி தோல்வி இல்லவே இல்லை என்று மிகவும் அற்புதமாகவும் ஆணித்தரமாகவும் கருத்துரைத்து எதிரணியினரை மூளையைக் கசக்க வைச்சுட்டார்.

அடுத்ததாக வாழ்க்கையில் ஒருவனது வெற்றி தோல்விக்கு அவனே காரணம் என்ற அணியின் சார்பாக வாதாட விக்ரத்தை அழைக்கிறேன். வாங்க விக்ரம்.. உங்கள் மூளையின் அளவை எல்லாருக்கும் காட்டுங்க..
 
ஆரம்பமே அசதத்தலா அமைந்து விட்டது.அதற்கு மதுரை மைந்தமுக்கு பாரட்டுகள்
 
நல்லதொரு ஆரம்பம்... ஒரு ஓரமாய் அமர்ந்து கைதட்டி கொண்டிருக்கிறோம் தொடருங்கள் களை கட்டடும்...:aktion033: :aktion033:

சந்தேகம்: இடையில் இப்படி கருத்துக்கள் பதியலாமா?
 
ஆஹா....விக்ரம் வராரா...? இனிமே பட்டிமன்றம் களைகட்டும். அசத்துங்க விக்ரம்.
 
விக்ரம் சில நாள் விடுப்பில் இருப்பதால் பால்ராஜை அரங்கம் அழைக்கிறேன்
 
நண்பர் பால்ராஜ் தொடர்வதற்கு முன் வெற்றி தோல்வி பற்றிய நகைசுவை ஒன்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.

ப்ளஸ் டூ தேர்வில் 98 விழக்காடுகளை பெற்ற மாணவி அழுது கொண்டிருந்தாள். ஆனால் அதே தேர்வில் 10 விழுக்காடுகளைப் பெற்று தேற தவறிய மாணவர் சிரித்துக் கொண்டிருந்தார். மாணவி அழுதது ஒரு மதிப்பெண்ணில் முதன்மை இடம் தவறிவிட்டதற்காக. மாணவர் சிரித்தது தான் அப்படி என்ன எழுதினோம் அதற்கு 10 விழுக்காடுகள் கிடைத்ததே என்று.
 
ஏறக்குறைய கடைசியில்தான் என் 'முறை' வருகிறது ...என்று சோம்பேறித்தனமாக இருந்து விட்டேன்.. ஒரு நாள் அவகாசம் தேவை.. நாளை எனது வாதங்களைச் சமர்ப்பிக்கிறேன்...
 
பட்டி மன்றத்தில் பங்கெடுக்க வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி....!!

வெற்றி..தோல்வி... சரி..தவறு... கறுப்பு வெள்ளை... மேடு பள்ளம்... இனிப்பு கசப்பு.. அடுக்கிக் கொண்டே போகலாம்.. இவை ஒன்றுமே இல்லாமலே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்குபவர்களில் ஒருவன் அடியேன் நானும்...

துரதிருஷ்டவசமாக, இயற்கை அப்படிப் படைக்கவில்லையே....!
சின்னப் பிஞ்சுகள் கூட இன்று பட்டிமன்றங்களில் அருமையாக வாதிக்கும் ஒரு பாயிண்ட்... பிறப்பே ஒரு வெற்றி.. விவரிக்கத் தேவை இல்லை என்றே என்று நினைக்கிறேன்... கோடிக்கணக்கான அணுக்களில் ஒன்று எப்படியோ வேகமாக எக்செட்ரா எக்செட்ரா.... .... அதுதான் 'நாம்' என்று பிட்டுப் பிட்டு வைக்கின்றன இன்றைய வாண்டுகள்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் (இது தோல்வியா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி...!) நடுவே பல பல ஆயிரக்கணக்காக சின்னச் சின்ன வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சில பெரிய வெற்றி தோல்விகளையும் விரல் விட்டு எண்ணக்கூடிய மாபெரும் வெற்றி அல்லது அகல பாதாள்த் தோல்விகளையும் கடந்து வருகிறோம்...ஒரு சிலர் மூழ்கி விடவும் கூடும்.

எனவே வெற்றி தோல்வி என்று ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியே சற்று அர்த்தமத்ததோ என்ற ஐயம் எழுகிறது.. இது இல்லையென்றால்..நல்லது-கெட்டது, இனிப்பு-கசப்பு, விருப்பு-வெறுப்பு என்று ஒன்றுமே இல்லாத பிரபஞ்சம் வெற்றிடம் ஆகிவிடும்.. எனது கருத்தில் இது ஆன்மீகத்தில் மட்டுமே சாத்தியம்.

சின்னஞ்சிறிசுகள் கனாக் கண்டு வலம் வந்த ஒரு தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்றை பல மாதங்களுக்கு முன்பாக ரசித்து (ஓரளவுக்கு வேறு வழியில்லாமல்.. சானல்கள் இல்லாததால்) காணுவது உண்டு. அதில் ஒரு காட்சியில் வரும் வசனம் .... என்னை வெகுவாகக் கவர்ந்தது..."பிரச்சினையில் அளவு நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது" என்று ஓர் இளம் ஆசிரியர் மாணவிக்கு ஆறுதல் கூறுவது.. ஏற்கனவே பலமுறை பல இடங்களில் கேட்டதுதான்.. ஆனாலும் சில காட்சிகளில் வரும்போது மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. எனவே சமீப காலங்களில் நான் பன்னோட்டப் பிரியன்.. (பல் நோட்ட..?) அதாவது பல கோணங்களில் இருந்து ஆராய்வது என்பது பழக்கமாகப் போய் விட்டது.

எனவே பட்டிமன்றத்தில் தலைப்பை மூன்று தரப்பிலும் இருந்து நோட்டம் விட்டபோது, மூன்றுமே ஓரளவுக்கு உண்மை என்பது புலப்பட்டது. எனவே எது அதிக உண்மை என்பதே பட்டிமன்றத்தில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விக்கு பதிலாக இருக்க முடியும்.

நண்மர் மதுரை மைந்த அற்புதமான கருத்துக்களைத் தந்திருக்கிறார். அவருக்கு என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்.

முதலாவது வெற்றி-தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தொடங்கிய வாதம், அதற்குப் பிறகு வெற்றி பற்றி 25 முறையும் தோல்வி பற்றி 15 முறையும் பேசி தொடரப் பட்டிருக்கிறது. திரும்பத் திரும்ப வாசித்துப் பார்க்கும் போது வெற்றி அல்லது தோல்வியில் பல விஷயங்களிலும் தெளிவு இல்லாதது குறிப்பிடப்பட்டிருக்கிறது. நிர்ணயிக்கும் விதம், தோல்விதான் வெற்றியின் படிக்கட்டு எல்லாமே ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.. ஆனால் இந்த வாதங்கள் வெற்றி தோல்வி என்றவை இருக்கின்றன என்பதையே பறை சாற்றுகின்றன. இல்லையென்றால் ஏன் கவிஞர் "வெற்றி பெற்ற மனிதரெல்லாம் .".. என்று தத்துவக் கவிதை புனையவேண்டும்... ?? அவன் புத்தி சாலியாகவோ முட்டாளாகவோ இருக்கலாம்.. பெற்றது "வெற்றி" என்பது அல்லவா முக்கியம்...? . நண்பர் ம.மை.யின் வாதங்களில் ஒவ்வொரு இடத்திலும் நான் ஒத்துப் போகிறேன்.. ஏன் என்றால் ஒவ்வொரு இடத்திலும் வெற்றி-தோல்வி இருக்கிறது என்ற கருத்து எதிரொலிக்கிறது .... ஆனால் இதில் சில இடங்களில் தெளிவு இல்லை... அளவுகோல்கள் வேறுபடுகின்றன .... என்பதே திரும்பத் திரும்ப வலியுறுத்தப் படுகிறது.

"வெற்றி எது...? தோல்வி எது..?" என்பது ஒரு மிகப் பெரிய கேள்வி... இதைச் சில கோணங்களில் இருந்து ஆராய முயலுவோம்....

நிலா நிலா ஓடி வா என்று கேட்டு வளர்ந்த நாம், அந்த நிலவைச் சுற்றி வர விண்கலம் ஏவி விட்ட நமது அறிவியல் வல்லுனர்களின் சாதனையைப் பாராட்டுகிறோம். இரண்டு வருடம் சுற்ற வேண்டிய கலம், வேறு ஏதாவது கிரகத்தைப் பார்த்து அங்கு சென்று விட்டதா என்று தெரியவில்லை. ஆனாலும் "மிஷன் சக்ஸஸ்" .. சேகரிக்க வேண்டிய தகவல்களைச் சேகரித்தாயிற்று எனவே 'வெற்றி"தான் என்று திருப்திப் பட்டுக்கொள்ளும் குழு.. அவர்களைக் குற்றம் சொல்லுவதற்காகவோ ஏளனப்படுத்துவதற்காகவோ இதை நான் கூறவில்லை... 'அவர்களைப் பொருத்தவரை அது வெற்றி' என்பதைக் கூறுவதற்காகவே சொல்கிறேன்.

வெகு தூரத்தில் ஒரு சிறிய ஊரில் ஓர் அனாதை விடுதி.. அதை நடத்துபவர் தட்டுத்தடுமாறி பண வசதியின்றி அங்கும் இங்கும் புரட்டி ஒவ்வொரு வாரமும் அந்தக் குழந்தைகளுக்கு உணவு உண்ண நிதி சேகரித்தவுடன் விடும் அந்தப் பெருமூச்சு... அது அவரைப் பொருத்தவரை நிச்சயமாக வெற்றிதான் அல்லவா..??

இந்த இரண்டையும் ஒரு மூன்றாவது மனிதரின் கோணத்தில் இருந்து பார்க்கும்போது ....... ஒரு சிலர் தலை சிறந்த அறிவியல் சாதனையை மெச்சக் கூடும்.. உலகத்தில் ஒரு சில நாடுகளே செய்த சாதனையைச் செய்து நம் நாட்டை தலை நிமிர்ந்து நடக்கச் செய்த சாதனை.. உண்மைதான். அதே நேரம் ஒரு சிலர் முணு முணுக்கவும் கூடும்... 'தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனின் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்' என்று முழங்கிய பாரதியின் பாரத மண்ணில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக் கோட்டின் கீழே இருந்து பசியில் தவிக்கும்போது .....கோடிக்கணக்காக விரயம் (?) செய்து படங்கள் எடுத்தது சாதனையா...? என....!

எனவே நான் வலியுறுத்த விரும்புவது, வெற்றி தோல்வி என்பது எங்கும் இருக்கவே செய்கிறது.. ஆனால் ஒருவருக்கு வெற்றியாகத் தெரிவது இன்னொருவருக்கு தோல்வியாகப் புலப்படக் கூடும். ஏன் ... ஒரு நாள் எனக்கு வெற்றியாகத் தோன்றியது இன்னொரு நாள் தோல்வியாகப் படலாம்.. இது மனம் சம்பந்தப் பட்ட விஷயம்.. அதற்காக வெற்றி தோல்வி என்பதே கிடையாது என்று நினைத்தால் சரியா என்பது கேள்விக் குறியாகவே தெரிகிறது.

இனி "ஒருவரின் வாழ்க்கை" என்ற விஷயத்துக்குள் நுழைவோம்... பிறந்த நாள் முதல் இறக்கும் நாள் வரை ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணித்துளியிலும்கூட ஆயிரக்கணக்கான வெற்றிகளைச் சந்திக்கிறோம்..இயல்பாக வருவதால் அவைகளை நாம் வெற்றியாகக் கருதுவதில்லை.. ஏன் நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் கூட வெற்றி அல்லவா..? அது இல்லையென்றால் உயிர் போச்சு..அல்லவா?? நம் எதிர்ப்பார்ப்புக்கள் சில நிறைவேறாத போது 'தோல்வி' என்று துவண்டு விடத் தூண்டுகிறது நமக்குள் உறங்கிக் கிடக்கும் உள்மனம்..

சின்னச் சின்ன வெற்றிகள் கூட மனதுக்கு ஒரு மகிழ்ச்சி, திருப்தி, நிறைவு போன்ற உணர்வுகளைத் தந்து நமக்குள் இருக்கும் படைப்புத் திறன்களை ஊக்குவிக்கின்றன. நமது பழைய வெற்றிகள்...மனதுக்குள் புதைந்து கிடக்கும் புத்துணர்வு மூலம் ... இன்னும் பல பல வெற்றிகளைப் பெற்றிட வழிவகுக்கின்றன... இதைத்தான் வெற்றியைப் போல் வெற்றிகரமான ஒன்று இல்லை... Nothing suceeds like Sucess ..என்று கூறப்படுகிறதோ என்னவோ..?

மிகப் பெரிய வெற்றிகள் சற்றே ஆபத்தானவை... ஒவ்வொருவரும் அதை அணுகுவது அல்லது ஏற்றுக் கொள்ளுவதைப் பொறுத்து இருக்கக் கூடும்.. Managing Sucess ..கொஞ்சம் நுட்பமாக ஆராய வேண்டியது. திடீர் என்று செல்வந்தர் ஆவது, வேகமான பதவி உயர்வு சிலர் வாழ்க்கையில் விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதை பலரும் அன்றாட வாழ்க்கையில் சந்தித்திருப்போம். எனவே ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் வெற்றிகளைக் கவனமாகக் கையாளுவது அவசியும்.. இதுவும் அவரவர் மனம் சம்பந்தப் பட்டதே.. வெற்றிகள் தலைக்கனத்தைக் கொடுத்தால் வாழ்க்கையைக் கெடுக்கும், எவ்வளவு உயரத்தில் செல்லுகிறோமோ அவ்வளவு உயரத்தில் இருந்து விழ் வாய்ப்பு இருக்கிறது என்பது மனதில் பதிந்து விட்டால் பின்னர் அனாயாசமாக இதைச் சமாளித்து விடலாம். மைக்கேல் ஜாக்சன் விஷயத்தில் இது ஓரளவுக்கு சம்பவித்திருக்கலாம்.. ஆனால் அவர் மரணம் தோல்வியா?? அல்லது விடுதலை என்ற வெற்றியாகவும் இருக்கலாம் என்பதும் வேறொரு கோணத்தில் இருந்து அலசும் போது புலப்படும்.

நண்பர் ம.மை. பின்னர் அளித்த குட்டிக் கதையில் கூட, வெற்றியைத் தோல்வியாகப் பாவித்து அழும் அந்த மாணவியின் மனோபாவம் திருத்தவேண்டியது என்பதைக் குறிக்கலாம் அல்லது அந்த ஒரு சில கண்ணிர்த்துளிகள் அடுத்த முறை முதல் மாணவியாக வரத்தூண்டும் உதவுகோலாகவும் இருக்கக் கூடும். அந்த மாணவியின் மனோபலத்தைப் பொறுத்தே அவளது எதிர்காலம் திகழும்.

தோல்விகள் ... யாருக்கும் பொதுவாகவே பிடிப்பதில்லை... துக்கம், துயரம், ஏமாற்றம், மற்றும் பல எதிர்மறைச் சிந்தைகளை மனதில் விதைத்து விட்டுச் சென்று விடுகின்றன.. சாதிக்கக் கூடிய வெற்றிகளைக் கூட தடை செய்யும் பழைய எண்ணங்களை களையும் திண்ணமும் ஒவ்வொருவர் மனதிலேயே இருக்கிறது.

ஒரு குழந்தை எழுந்து நடப்பதற்குள் எத்தனை முறை தவழ்ந்து எழுந்து விழுந்து பின்னர் தட்டு தடுமாறி ஒவ்வொரு நடையாக நடக்கத் தொடங்குகிறது..?? குழந்தைகளிடத்திருந்து படிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது.. unconditioned mind.. நாம் வளரும்போது பல எண்ணங்கள் மனதில் விதைக்கப் படுவதாலோ என்னவோ பல இடங்களிலும் சிறு தோல்விகளில் கூட சோர்வடையச் செய்கிறது.. எனவே நல்லெண்ணங்களை வளர்த்துக் கொண்டவர் ஒவ்வொருவர் மனதிலும் நண்பர் ம.மை. கூறியது போல் "தோல்விகளே வெற்றிக்குப் படிக்கல்" என்ற எண்ணத்தை பதியச் செய்து விட்டால் "விழுந்த போதெல்லாம் எழ ஏதுவாக இருக்கும்.. இதுவும் அவரவர் மனதிலேயே இருக்கின்றது. "மனதில் உறுதி வேண்டும்" என்று கவி சும்மாவா சொன்னார்..??

ஏ ஆர் ரஹ்மான் சாதாரணமாகக் கூறுவது "எல்லா புகழும் இறைவனுக்கு" என்றே... அட் லீஸ்ட் நான் கேட்டவரை.. தோல்வியை இறைவனுக்கு சமர்ப்பிப்பதை விட தோல்வியில் இறைவன் ஊன்றுகோலாக நம்மைத் தாங்குவதே இயல்பு..

அடுத்தது ...... வெற்றி தோல்வியும்... சுற்றுச் சூழலும்
சுற்று சூழல் ஒரு மிக முக்கியமான அம்சம்.. ஒரு விதத்தில் எப்பொழுதும் கூறப்படும் ஒரு வார்த்தை "வெற்றி வாய்ப்பு" .. Probability of Sucess in a given situation.. பல இடங்களிலும் சூழல் வெற்றியில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது என்பது கண்கூடாகக் காணும் உண்மை.. ஒரு ஏழை செல்வம் தீட்டுவதை விட ஒரு செல்வந்தன் தன் செல்வத்தை பன் மடங்காற்றுவது, கிரிக்கெட்டில் நல்ல பேட்டிங் பிட்ச் கிடைத்தால் சென்சுரி போடுவது, இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் நல்ல சூழ்நிலையில் மட்டும் வெற்றி பெற முடிவது சோம்பேறித்தனத்தை வளர்க்கும்.. ஒரு சிலர் எல்லாவற்றையும் சூழ்நிலைக்கே விட்டுவிட்டு முயற்சியே செய்யாமல் இருக்கும் நிலையையும் வளர்க்கும்.

காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்தது என்ற பழமொழிக்கேற்ப சில வெற்றிகளை நாம் சந்தித்திருக்கக் கூடும்.. மற்றவர்கள் சூழ்நிலைகளால் பதவி உயர்வு போன்றவைப் பெற்றதையும் கண்டிருக்கலாம். இது குறுகிய கால லாபமாகவே இருக்கும். எனவே கடின உழைப்பு, முயற்சி உதவுவது போல சூழ்நிலை மட்டும் உதவாது. நல்ல சூழ்நிலையாக இருந்தாலும் சற்றே எதிர்மறையான சூழ்நிலையாக இருந்தாலும் ஒவ்வொருவர் வெற்றியை அடையத் தூண்டுவது அவரவர் முயற்சியே.. தெளிவான இலக்கு (முழு வாழ்க்கைக்கும் இலக்கு வைப்பது கடினமாக இருக்கலாம்.. சின்னச் சின்ன அன்றாடைய குறிக்கோள்கள் micro goals. அல்லது குறுங்கால இலக்குகள் short term targets), செயல்முறைத் திட்டங்கள் (action plan), அவ்வப்போது பின்னோக்கிப் பார்த்து (monitoring) வேண்டிய மாற்றங்களை அமைத்துக் கொள்வது எல்லாமே அவரவர் கையில்தான் இருக்கிறது.

எனவே சூழ்நிலைகள் .. வெற்றி தோல்விக்கு ஓரளவு காரணமாக இருக்கலாம்.. ஆனால் அதை நம்பியே இருப்பது அபாயமானது. அவரவர் முயற்சியும் உழைப்புமே சிறந்த வெற்றி அல்லது எதிர்மறைச் சூழ்நிலைகளை எதிர் நோக்கும் சக்தியாக விளங்கும்.

வெற்றியோ தோல்வியோ ஒரு முடிவு அல்ல... காலச் சக்கரம் சுழலும்போது ஒவ்வொருவர் வாழ்விலும் அவ்வப்போது இவை மாறி மாறி வரக்கூடும்.
இவைகளை... வெற்றியாக இருந்தாலும் சரி தோல்வியாக இருந்தாலும் சரி.. சமாளிக்கும் திறன் அவரவர் கையிலேயே.. அல்லது மனதிலேயே இருக்கிறது.

எனது நண்பர் ஒருவர் அடிக்கடி ஸெட் தியரி Set Theory-யை மேற்கோள் காட்டிப் பேசுவது சுவாரசியமாக இருக்கும்.. அவரது பாணியில் சில பாயிண்ட்-களைக் கூறி புராணத்தை முடிக்கிறேன்...

ஒவ்வொருவர் வாழ்வில் ஏற்படும் குட்டிக் குட்டி வெற்றி தோல்விகளை குட்டி குட்டி வட்டங்களாக வரைந்து கொள்வோம். பெரிய வெற்றி தோல்விகளை சற்று பெரிதாகவும்.

இப்போது ஒரு Dotted Line இல் வரையும் ஒரு சற்றே பெரிய வட்டம்.. இது நமது சமாளிப்புத் திறனை அடையாளம் காட்டும் வட்டமாகக் கருதவும்.

சூழ்நிலைவாதிகளின் (அதாவது சூழ்நிலைகளை மட்டுமே நம்பியிருப்பவர்கள்) இந்த வட்டம் ஒவ்வொரு வெற்றி தோல்வியைச் சுற்றி அவ்வப்போது ஜம்ப் பண்ணிக் கொண்டே இருக்கும்.

ஆன்மீகவாதிகளின் வட்டம் மிகப் பெரியது almost infinity radius ...அந்த வட்டத்துக்குள் இந்தச் சின்னஞ்சிறு வட்டங்கள் குட்டி நட்சத்திரங்களைப்போல புள்ளிகளாகத் தெரியக் கூடும்.. அதாவது வெற்றி தோல்விகள் மிகச் சிறியதாக ... அப்படி ஒன்றே இல்லை என்னும் அளவுக்கு...!! ஆனால் அந்த அளவு ஆன்மீகவாதிகள் உலகில் இருக்கிறார்களா என்பது சந்தேகமே.. விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் இருக்கக் கூடும்... ஏறக் குறைய "நான் கடவுள்" நிலை..!

நம்ம கட்சி 'தன்னிலைவாதிகள்' ... நமது மனதை ஒருநிலைப் படுத்திக் கொண்டு எத்தனை வெற்றி தோல்வி வட்டங்களை சமாளிக்கிறோமோ அவ்வளவு பெரிதாக மட்டும் இருக்கும்.. அவ்வப்போது நமது வட்டத்தின் வெளியே இருக்கும் வெற்றியையோ தோல்வியையோ தழுவ நேரிடும்போது மனம் சற்றே தடுமாறக் கூடும்.

இந்த வெற்றி நிலை எவ்வளவு பெரிதாக இருக்க முடியும் என்பது ஒவ்வொருவர் மனதிலேயே இருக்கிறது.
அதை அடைய ... அந்த நிலையில் தொடர ... ஒவ்வொருவரும் தமது மனநிலையை பக்குவப்படுத்தி தோல்விகளை அனாயாசமாக நேரிட்டு வெற்றிகளையும் கவனத்துடன் கையாண்டு வெற்றிகரமான அல்லது திருப்திகரமான வாழ்க்கையை அமைத்து வாழ்வதற்கு வாழ்த்துக்கள் கூறி வாய்ப்புத் தந்தமைக்கு மீண்டும் நன்றி கூறி விடை பெறுகிறேன். (எனது தமிழ் அறிவு குறைவு எனவே குறைகளைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.)
 
நல்ல வாதம் பால்ராஜ்.. அழகான வாதம்.. அது இல்லை இது இல்லை என்று வாதாடாமல், மூன்றும் உண்டு.. ஆனால் மூன்றில் அதிகப்படியானதும் அர்த்தமுள்ளதும் இதுதான் என்று வாதாடிய விதம் அபாரம்.

வாழ்த்துக்கள்..

அமரரே அடுத்த வாதியை அழைக்கலாமே!!
 
பிரமாதம் பால்ராஜ். அடுக்கடுக்கான வாதக்கனைகளை தொடுத்து அடுத்த போட்டியாளரை சிந்திக்க வைத்துவிட்டீர்கள். நீங்கள் சொன்னக் கருத்துக்களும் மிக ஆழமாய் சிந்திக்க வேண்டியவையே.

பார்ப்போம் அடுத்துவரும் பங்காளரின் வாதத்திறமையை. பட்டிமன்றம் களை கட்டுகிறது சபாஷ்.
 
Last edited by a moderator:
நல்ல வாதம் பால்ராஜ்.. அழகான வாதம்.. அது இல்லை இது இல்லை என்று வாதாடாமல், மூன்றும் உண்டு.. ஆனால் மூன்றில் அதிகப்படியானதும் அர்த்தமுள்ளதும் இதுதான் என்று வாதாடிய விதம் அபாரம்.

வாழ்த்துக்கள்..

அமரரே அடுத்த வாதியை அழைக்கலாமே!!

என்னது வாதியா, மேலே இருவரின் வாதத்தை கண்டு, பீதியில் பேதியாகும் நிலை, சரி சரி நாளை என் பதிவை பதிகிறேன். அதுவரை பொறுத்திருங்க, இப்போ சூழ்நிலை சரியில்லை :)
 
நன்றி பாரா. நல்லவாதம்.

தேற்றத்தை நிறுவுவது போல கருத்துகளை முன் வைத்திருக்க்றீர்கள். இன்னும் எளிமையாகச் சொன்னால் பிரிச்சுமேய்ஞ்சிருக்கிறீர்கள்.

கீரைக்கடைக்கு எதிர்க்கடை வேணும். எதிர்க்கடை இருந்தால்தான் சுவாரசியம் இருக்கும். சுவாரசியம் இருந்தால்தான் பிடிப்புப் பிறக்கும். எனவேதான் எல்லாவற்றிலும் எதிர்<>புதிர் இரட்டையை இயற்கை தந்திருக்கு. வாழ்க்கையில் வெற்றி தோல்வியும் அப்படித்தான் ஒட்டி இருக்கு. அதை ஒத்துக்காம வெற்றி தோல்வியே இல்லை என்று சொல்றதும் அதைச் சொல்றதுக்கு வெற்றி தோல்வியையே பயன்படுத்துவதும்.. என்ன கொடுமை இது.. அப்படின்னு நல்லாவே கேட்டிருக்கார் மதுரைமைந்தன் அணியினரை.

அதோட விட்டாரா.. குதிரை மேல ஏறிட்டு சும்மா இருந்தா சவாரில வெற்றி கிடைச்சுடுமா. கடைசில இருந்து முன்னால வந்தவரு என்று வஞ்சகமில்லா கிண்டல் பண்ணமாட்டாங்க. அது போல வாய்ப்புகள்ள ஏறி சும்மா இருந்தால் சரியா.. இல்லைன்னா வாய்ப்புத்தான் "வா ராசா.. நீ போக வேண்டிய இடத்துக்குத்தான் போயிட்டு இருக்கேன். வந்து ஏறிக்கோ" என்று லிப்டு குடுக்குமா.. ஏற மறுத்தால் "அழுதுடுவேன்"ன்னு சொல்லி புளுதியில் விழுந்து புரண்டு அடம்பிடிக்குமா.. தொடுத்தார்ல* அடுக்கடுக்கா கேள்வி.. போட்டார்ல பெரியபெரிய குண்டு....>>>>சூழலில் தான் வெற்றி தோல்வி தங்கியுள்ளது என்று வாதாட வந்திருப்போர் மேல....

இதுக்கு பிறகும் ஏதாவது பேசப்போறீங்க.. பேசுங்க..

வாங்க பரஞ்சோதிண்ணா..
 
Back
Top