தாமரை
Facebook User
பூமியின் பொசிஸன், சூரியன், அந்த நட்சத்திரம் கொண்டு கண்டு பிடிக்கலாம் இல்லையா?
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ளே தொலைவு (ஆண்டின் எந்த நாளாக இருந்தாலும்) நமக்குத் தெரியும். ஆக, பூமிக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் வைத்து சூரியனுக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் கண்டு பிடிக்கலாம். இது ட்டான் கோணம். மற்றும் சூரிய - பூமி தூரம் இது அடுத்துள்ள பக்கம். வைத்து கணக்கிடலாம் இல்லையா?
முடியாது.. திரிகோணமிதி விதிகளின்படி,
இரண்டு பக்கங்கள் மற்றும் ஒரு கோணம்..
அல்லது
இரண்டு கோணங்கள் ஒரு பக்கம் இருந்தால்.. மற்றவற்றைக் கணக்கிடலாம்.
நீங்க சொன்னதில் ஒரு பக்கம் - சூரியன் பூமி தூரம் தெரியும்..
ஒரு கோணம் - பூமி - நட்சத்திரம் தெரியும்.
ஆனால் சூரியன் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கும் உள்ள கோணம் சரியாகத் தெரியாது. அதற்கு நட்சத்திரத்தின் தூரம் தெரியணும்..
இன்னொரு சந்தேகம்... ஜனவரி மாதம் நாம் ஒரு நட்சத்திரம் கிழக்கே (எதோ ஒரு திசையில்) பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 5, 6 , 7 மாதம் கழித்து பூமி சூரியனின் அந்த பக்கம் வந்து விடும் போது... நான் ஜனவரியில் பார்த்த அதே நட்சத்திரத்தை பார்க்க முடியுமா?
6 மாதங்களுக்கு மேல் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டுமானால் அது வடக்கு அல்லது தெற்கு திசையில் தெரிய வேண்டும். கிழக்கு - மேற்கு திசையில் அதிகபட்சம் 6 மாதம்தான்.
ஆனால் செயற்கைக் கோள்கள் மூலம் அதற்கு மேலும் பார்க்கலாம்.
அப்புறம்... பூமியின் துருவ மாற்றம் பற்றி கேள்வி பட்டீர்களா? அதாவது மின் காந்தக் கொடுகளின் திசை மாற்றம். வடக்கில் இருந்து தெற்கு பக்கம் மாறுவதற்கான காலம் வந்து விட்டது. எப்பொது வேண்டு மானாலும் மாறலாம். அப்படி மாறும் காலத்தில் (ஒரு வாரமோ.. ஒரு மாதமோ) சூரியனிடமிருந்து வரும் கதிர் வீச்சை தடுக்க பூமியின் காந்தப் புலம் இருக்காது. இதனால் பூமியில் வாழும் உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் மற்றும் கடல் அழிய வாய்ப்பு உண்டு. இது பற்றி உங்கள் கருத்து? இப்போது கூட அரோரா (துருவ ஒளிப் பிரகாசம்) வந்ததே...
இதனால் சில இடங்கள் அழியும் நேரத்தில் புதிய நிலப்பகுதிகள் தோன்றலாம். கண்டங்களின் பெயர்ச்சிகள் நடக்கலாம். ஆனால் ஸ்விட்ச் போட்டவுடன் பல்ப் எரிவதைப் போல ஒரு நாளில் வடதுருவம் தென்துருவம் ஆகி, பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றும் என்பது மிகைப்பட்ட கற்பனை.. அட்லாண்டிக் கடலின் அடியில் இருக்கும் கனிமப் படிவுகளின் அமைப்பைக் கொண்டு இந்த காந்தப் புலமாற்றம் நடப்பதை அளந்திருக்கிறார்கள்.
ஹோமோ எரக்டஸ் என்ற மனித இனங்களும் அதன் முன்னோர்களும் பல காந்தப் புல மாற்றங்களைத் தாண்டி வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் ஹோமோ சாபியன்ஸ் என்னும் அவர்களின் சகோதரர்களான நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால் காந்தப் புல மாற்றத்தினால் ஒரு பேரழிவு நிகழ்ந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ளே தொலைவு (ஆண்டின் எந்த நாளாக இருந்தாலும்) நமக்குத் தெரியும். ஆக, பூமிக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் வைத்து சூரியனுக்கும் அந்த நட்சத்திரத்துக்கும் உள்ள கோணம் கண்டு பிடிக்கலாம். இது ட்டான் கோணம். மற்றும் சூரிய - பூமி தூரம் இது அடுத்துள்ள பக்கம். வைத்து கணக்கிடலாம் இல்லையா?
முடியாது.. திரிகோணமிதி விதிகளின்படி,
இரண்டு பக்கங்கள் மற்றும் ஒரு கோணம்..
அல்லது
இரண்டு கோணங்கள் ஒரு பக்கம் இருந்தால்.. மற்றவற்றைக் கணக்கிடலாம்.
நீங்க சொன்னதில் ஒரு பக்கம் - சூரியன் பூமி தூரம் தெரியும்..
ஒரு கோணம் - பூமி - நட்சத்திரம் தெரியும்.
ஆனால் சூரியன் மற்றும் அந்த நட்சத்திரத்திற்கும் உள்ள கோணம் சரியாகத் தெரியாது. அதற்கு நட்சத்திரத்தின் தூரம் தெரியணும்..
இன்னொரு சந்தேகம்... ஜனவரி மாதம் நாம் ஒரு நட்சத்திரம் கிழக்கே (எதோ ஒரு திசையில்) பார்க்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு 5, 6 , 7 மாதம் கழித்து பூமி சூரியனின் அந்த பக்கம் வந்து விடும் போது... நான் ஜனவரியில் பார்த்த அதே நட்சத்திரத்தை பார்க்க முடியுமா?
6 மாதங்களுக்கு மேல் ஒரு நட்சத்திரத்தைப் பார்க்க வேண்டுமானால் அது வடக்கு அல்லது தெற்கு திசையில் தெரிய வேண்டும். கிழக்கு - மேற்கு திசையில் அதிகபட்சம் 6 மாதம்தான்.
ஆனால் செயற்கைக் கோள்கள் மூலம் அதற்கு மேலும் பார்க்கலாம்.
அப்புறம்... பூமியின் துருவ மாற்றம் பற்றி கேள்வி பட்டீர்களா? அதாவது மின் காந்தக் கொடுகளின் திசை மாற்றம். வடக்கில் இருந்து தெற்கு பக்கம் மாறுவதற்கான காலம் வந்து விட்டது. எப்பொது வேண்டு மானாலும் மாறலாம். அப்படி மாறும் காலத்தில் (ஒரு வாரமோ.. ஒரு மாதமோ) சூரியனிடமிருந்து வரும் கதிர் வீச்சை தடுக்க பூமியின் காந்தப் புலம் இருக்காது. இதனால் பூமியில் வாழும் உயிரினங்களில் பாதிக்கும் மேற்பட்டவைகள் மற்றும் கடல் அழிய வாய்ப்பு உண்டு. இது பற்றி உங்கள் கருத்து? இப்போது கூட அரோரா (துருவ ஒளிப் பிரகாசம்) வந்ததே...
இதனால் சில இடங்கள் அழியும் நேரத்தில் புதிய நிலப்பகுதிகள் தோன்றலாம். கண்டங்களின் பெயர்ச்சிகள் நடக்கலாம். ஆனால் ஸ்விட்ச் போட்டவுடன் பல்ப் எரிவதைப் போல ஒரு நாளில் வடதுருவம் தென்துருவம் ஆகி, பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றும் என்பது மிகைப்பட்ட கற்பனை.. அட்லாண்டிக் கடலின் அடியில் இருக்கும் கனிமப் படிவுகளின் அமைப்பைக் கொண்டு இந்த காந்தப் புலமாற்றம் நடப்பதை அளந்திருக்கிறார்கள்.
ஹோமோ எரக்டஸ் என்ற மனித இனங்களும் அதன் முன்னோர்களும் பல காந்தப் புல மாற்றங்களைத் தாண்டி வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் ஹோமோ சாபியன்ஸ் என்னும் அவர்களின் சகோதரர்களான நாம் அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. சொல்லப்போனால் காந்தப் புல மாற்றத்தினால் ஒரு பேரழிவு நிகழ்ந்ததாக இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.