இவரை பாருங்க, உதவுங்க

பரஞ்சோதி

மன்ற ஆலோசகர்
துபாய் மருத்துவமனையில் சுயநினைவிழந்த நிலையில் இந்தியர் ஒருவர் கடந்த ஒரு மாதமாக அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வ*ருகிறார்.

img100.jpg


இந்திய மக்களுக்கு பல்வேறு சமுதாயப் பணிகளை ஆற்றிவரும் ஈமான் அமைப்பின் குழுவினர் அதன் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹா தலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர்களை வாரந்தோறும் சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

அவ்வாறு சென்ற பொழுது இந்தியர் ஒருவர் கடந்த ஒரு மாத காலமாக அவசர சிகிச்சைப் பிரிவில் நினைவிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அறிந்து அவரைப் பார்த்து வந்தனர்.

இவர் யார் என்பதற்கான எவ்வித சான்றுகளும் அவரிடம் இல்லாத நிலையில் மருத்துவமனியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவரைப் பார்க்கையில் தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலத்தைச் சேர்ந்தவராக* இருக்கலாம் என கருத்தப்படுகிற*து.

தமிழ் பேசும் போது மட்டும் இவரது பார்வை மேலும் கீழும் வருகிறது. எனவே இவர் குறித்து தகவல் தெரிந்தால் ஈமான் மக்கள் தொடர்பு செயலாளர் ஏ. முஹம்மது தாஹாவை 050 467 4399 / 050 51 96 433 எனும் அலைபேசியில் அல்லது muduvaihidayath@gmail.com என்ற மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு தகவல் கிடைக்கும் பட்சத்தில் இவர் பத்திரமாக அவரது குடும்பத்தாரிடம் சேர்ப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
 
மனசு ரொம்ப வருத்தப்படுது பரம்ஸ் அண்ணா.... இந்த நண்பர் சீக்கிரம் குணமடைந்து தன்னைப்பற்றிய விவரங்களை தெரிவித்து நலம் பெற்று குடும்பத்தாருடன் சேர பிரார்த்திக்கிறோம்.
 
இவரிடமிருந்து எந்த தகவலும் இல்லமால் அந்த குடும்பத்தினர் படும் வேதனை நினைத்தால் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது.விரைவில் குணமடைந்து தனது குடும்பத்தினரிடம் சேர பிராத்தனை செய்வோம்
 
வெளிநாட்டில் ஈமான் போன்ற அமைப்புகள் சேவை பாராட்டத்தக்கது..

கூடிய விரைவில் இவர் குணமடைய பிராத்திப்போம்..
 
வெளிநாட்டில் உள்ள ஈமான் அமைப்பினரின் சேவை மிகவும் போற்ற தக்கது இது போன்ற தகவல்களை சமூக வலைதளங்களில் (பேஸ் புக் ) அவசியம் வெளிவிட வேண்டும் .இது அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் .மேலும் அவர் மிகவிரைவில் நலம் பெறவும் அவர் பிரிவில் வாடும் அவர் குடும்பத்தினர் நலம் பெறவும் இறைவனை வேண்டுகிறேன்.
 
Back
Top