முரளிராஜா
New member
திமுக தேர்தல் அறிக்கை
ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி
முதியவர்களுக்கு டவுன்பஸ்களில் இலவச பயணம்
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்
பெண்களுக்கு இலவச கிரைண்டர்
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின்படி `கிரைண்டர்' அல்லது `மிக்சி' இலவசமாக வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை, மார்ச்.20- தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.
கருணாநிதி வெளியிட்டார்
தி.மு.க. தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதனை பொதுச் செயலாளர் க.அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதனை கருணாநிதி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
இலவச கிரைண்டர்
பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம். இதன் மூலம் 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.
தாய்மார்களின் சிரமங் களை பெரிதும் அறிந்துள்ள தி.மு.க. கடந்த முறை அவர்களுக்காக இலவச கலர் டி.வி. வழங்கியதுபோல- இந்த முறை அவர்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்சி என்ற இரண்டில் ஒன்றை அவர்களது விருப்பம்போல வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
கர்ப்பிணிப் பெண்களுக் கான நிதி உதவியை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
திருமண நிதி உதவி
திருமண நிதி உதவியை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி மானியம் ரூ.75 ஆயிரம் என்பது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.
மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ரூ.2 லட்சம் மானியம்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருமானத்திற்கு வழி வகுக்கக்கூடிய பொருளாதார திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளை ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்க நடவடிக்கை எடுப்போம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் ரூ.21/2 லட்சம் கடனுதவி; ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டு அவற்றில் ரூ.2 லட்சத்தை மானியமாக வழங்குவோம்.
விசைப்படகுக்கு மாதந்தோறும் மானிய விலையில் வழங்கும் டீசல் 1500 லிட்டரில் இருந்து 2000 லிட்டராகவும், நாட்டுப் படகுக்கு 300 லிட்டரிலிருந்து 500 லிட்டராகவும் வழங்க வகை செய்வோம்.
இலவச லேப்டாப்
அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும்; பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்க்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்குவோம்.
இலவச பஸ் பாஸ்
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500லிருந்து ரூ.750 ஆக வழங்குவோம்.
நெசவாளர்கள்
கூட்டுறவு சங்கங்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த 60 வயதான அனைத்து நெசவாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவோம். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 100 யூனிட் என்பது 200 யூனிட்டாக உயர்த்துவோம். புதிய விசைத்தறி நிறுவனம் அமைப்பவர்களுக்கு வங்கி கடனுக்கு வட்டி மானியம் வழங்குவோம். மூடிக் கிடக்கும் 13 கூட்டுறவு நூற்பாலைகளில் 5 ஆலைகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்வோம். பட்டு துணிகளுக்கு ஆண்டு முழுவதும் 10 சதவிகித சிறப்பு தள்ளுபடி மானியம் வழங்குவோம்.
திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற பகுதிகளில் சாயக் கழிவு நீரை ஆவியாக்கும் முறையை பயன்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வோம்.
தலித் கிறித்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சிறுபான்மை சமுதாயத்தினருக்கான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.
மகப்பேறு விடுப்பு 4 மாதங்கள்
சென்னை - பெங்களூர் - மதுரை - கன்னியாகுமரி போன்ற சிறப்பு வழித்தடங்களை ஏற்படுத்துவோம். கந்து வட்டி கொடுமை நீங்க வழிவகை காண்போம்.
திருக்கோயில்களின் இடங்களை பாதுகாப்பதற்கும், கோயில்களுக்கு வருவாய் ஈட்டக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக, ``நில வங்கி'' ஒன்றை நிறுவுவோம்.
ஆறாவது ஊதியக்குழு மற்றும் ஒரு நபர் குழுவினால் களையப்படாமல் எஞ்சியிருக்கும் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாகக் களைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். மார்ச், ஜுன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களின் இறுதியில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கும் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிடுவோம். மகப்பேறு விடுப்பு 4 மாதங்களாக உயர்த்தப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் உப்பு மானிய விலையில் வழங்குவோம். விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து இலவச கலர் டி.வி., எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கப்படும்.
மணல் கடத்தல், அரிசி கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்பதற்கு சட்டரீதியான வழிவகை காண்போம்.
இளநீர், பதநீர் போன்றவற்றின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் கமிஷனுடைய பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.
இந்த தேர்தல் அறிக்கையினை பற்றி நமது மன்ற உறுப்பினர்கள்
விவாதிக்கலாமே
ஏழைகளுக்கு 35 கிலோ இலவச அரிசி
முதியவர்களுக்கு டவுன்பஸ்களில் இலவச பயணம்
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர்
பெண்களுக்கு இலவச கிரைண்டர்
தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அவர்களுடைய விருப்பத்தின்படி `கிரைண்டர்' அல்லது `மிக்சி' இலவசமாக வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னை, மார்ச்.20- தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று மாலை நடந்தது.
கருணாநிதி வெளியிட்டார்
தி.மு.க. தேர்தல் அறிக்கையை தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட அதனை பொதுச் செயலாளர் க.அன்பழகன் பெற்றுக் கொண்டார்.
தி.மு.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அதனை கருணாநிதி வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
இலவச கிரைண்டர்
பரம ஏழைகளான அந்தியோதயா குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்குவோம். இதன் மூலம் 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.
தாய்மார்களின் சிரமங் களை பெரிதும் அறிந்துள்ள தி.மு.க. கடந்த முறை அவர்களுக்காக இலவச கலர் டி.வி. வழங்கியதுபோல- இந்த முறை அவர்களுக்காக இலவச கிரைண்டர் அல்லது மிக்சி என்ற இரண்டில் ஒன்றை அவர்களது விருப்பம்போல வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
கர்ப்பிணிப் பெண்களுக் கான நிதி உதவியை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
திருமண நிதி உதவி
திருமண நிதி உதவியை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்.
கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் உதவி மானியம் ரூ.75 ஆயிரம் என்பது ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும்.
மாநிலங்கள் சுயாட்சி பெறுவதற்கான அரசமைப்புச் சட்டத்தை திருத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ரூ.2 லட்சம் மானியம்
வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு வருமானத்திற்கு வழி வகுக்கக்கூடிய பொருளாதார திட்டங்கள், கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைகளை ஒருங்கிணைத்து வழங்கி, அவர்களை வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்க நடவடிக்கை எடுப்போம்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் ரூ.21/2 லட்சம் கடனுதவி; ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டு அவற்றில் ரூ.2 லட்சத்தை மானியமாக வழங்குவோம்.
விசைப்படகுக்கு மாதந்தோறும் மானிய விலையில் வழங்கும் டீசல் 1500 லிட்டரில் இருந்து 2000 லிட்டராகவும், நாட்டுப் படகுக்கு 300 லிட்டரிலிருந்து 500 லிட்டராகவும் வழங்க வகை செய்வோம்.
இலவச லேப்டாப்
அரசு கல்லூரிகளிலும், அரசு உதவிபெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயில வரும்; பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியர்க்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்குவோம்.
இலவச பஸ் பாஸ்
60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கு அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவோம். முதியோர், ஆதரவற்ற பெண்கள், விதவைகள், மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.500லிருந்து ரூ.750 ஆக வழங்குவோம்.
நெசவாளர்கள்
கூட்டுறவு சங்கங்களில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த 60 வயதான அனைத்து நெசவாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்குவோம். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 100 யூனிட் என்பது 200 யூனிட்டாக உயர்த்துவோம். புதிய விசைத்தறி நிறுவனம் அமைப்பவர்களுக்கு வங்கி கடனுக்கு வட்டி மானியம் வழங்குவோம். மூடிக் கிடக்கும் 13 கூட்டுறவு நூற்பாலைகளில் 5 ஆலைகளை இயக்கிட நடவடிக்கை மேற்கொள்வோம். பட்டு துணிகளுக்கு ஆண்டு முழுவதும் 10 சதவிகித சிறப்பு தள்ளுபடி மானியம் வழங்குவோம்.
திருப்பூர், கரூர், ஈரோடு போன்ற பகுதிகளில் சாயக் கழிவு நீரை ஆவியாக்கும் முறையை பயன்படுத்த தீவிர முயற்சி மேற்கொள்வோம்.
தலித் கிறித்தவர்களும் ஆதிதிராவிடர் பட்டியலில் இடம்பெறுவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். சிறுபான்மை சமுதாயத்தினருக்கான ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை விரைவில் செயல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்துவோம். சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டு வரும் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை மேலும் உயர்த்த பரிசீலிப்போம்.
மகப்பேறு விடுப்பு 4 மாதங்கள்
சென்னை - பெங்களூர் - மதுரை - கன்னியாகுமரி போன்ற சிறப்பு வழித்தடங்களை ஏற்படுத்துவோம். கந்து வட்டி கொடுமை நீங்க வழிவகை காண்போம்.
திருக்கோயில்களின் இடங்களை பாதுகாப்பதற்கும், கோயில்களுக்கு வருவாய் ஈட்டக்கூடிய வகையில் பயன்படுத்துவதற்கும் ஏதுவாக, ``நில வங்கி'' ஒன்றை நிறுவுவோம்.
ஆறாவது ஊதியக்குழு மற்றும் ஒரு நபர் குழுவினால் களையப்படாமல் எஞ்சியிருக்கும் முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளை விரைவாகக் களைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வோம். மார்ச், ஜுன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களின் இறுதியில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கும் ஆண்டு ஊதிய உயர்வு வழங்கிடுவோம். மகப்பேறு விடுப்பு 4 மாதங்களாக உயர்த்தப்படும்.
குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒரு கிலோ அயோடின் உப்பு மானிய விலையில் வழங்குவோம். விடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து இலவச கலர் டி.வி., எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்பு வழங்கப்படும்.
மணல் கடத்தல், அரிசி கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கடுமையாக தண்டிப்பதற்கு சட்டரீதியான வழிவகை காண்போம்.
இளநீர், பதநீர் போன்றவற்றின் விற்பனையை ஊக்கப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் கமிஷனுடைய பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வோம்.
இந்த தேர்தல் அறிக்கையினை பற்றி நமது மன்ற உறுப்பினர்கள்
விவாதிக்கலாமே
Last edited: