உலக கோப்பை 2010 - கால்பந்து

வாகையாளர் யார்?

  • உருகுவே

    Votes: 1 5.6%
  • கானா

    Votes: 0 0.0%
  • நெதர்லாந்து

    Votes: 4 22.2%
  • பிரேசில்

    Votes: 3 16.7%
  • ஆர்ஜன்ரீனா

    Votes: 1 5.6%
  • ஜேர்மனி

    Votes: 7 38.9%
  • பரகுவே

    Votes: 0 0.0%
  • ஸ்பெயின்

    Votes: 2 11.1%

  • Total voters
    18
  • Poll closed .

Mano.G.

Facebook User
உலக கிண்ணம் 2010

1_Mandela.jpg



உலக கிண்ண காற்பந்து 2010 போட்டி
நாளை 11ம் நாள் ஜூன் 2010 தென் ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகிரது 32 நாடுகள் இதில் பங்கு கொள்கின்றனர்.

உலகமெங்கும் இதே பேச்சு , காபிக்கடை, ஆபிஸ், பஸ், உணவகம் எங்கும் எதிலும் காற்பந்து .
இம்முறை யார் இத்ந்த போட்டியில் எந்த அணி வெற்றி கொள்ளும்,

ஜெர்மனியில் கடந்த உலககிண்ண போட்டியில்
இத்தாலி பிரான்சுடன் இறுதி போட்டியில் பங்கெடுத்து வாகை சூடியது


இந்த ஆண்டு எந்த அணி வெற்றி பெரும்
பொருந்திருந்து பார்ப்போம்.

மனோ.ஜி
 
இந்தமுறை பிரேசிலுக்கு வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அர்ஜென்டினாவும் நன்றாகவே இருக்கிறது. நடப்புச் சாம்பியன் இத்தாலிக்கு முதலிடம் கிடைப்பது சிரமம்தான்.

திருவிழா முடியட்டும்...யார் ஜெயிப்பாங்கன்னு சொல்றேன்...ஹி...ஹி...
 
உலக கோப்பை கால்பந்து திருவிழா
தென்ஆப்ரிக்காவில் நாளை தொடக்கம்

ஜோகன்னஸ்பர்க், ஜூன் 10

உலக கோப்பை கால்பந்து திருவிழா தென் ஆப்ரிக்காவில் நாளை கோலகலமாக தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் தென்ஆப்ரிக்கா & மெக்சிகோ (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.
உலகிலேயே அதிக நாடுகள் பங்கேற்கும், அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் உலக கோப்பை கால்பந்து போட்டி தென்ஆப்ரிக்காவில் நாளை தொடங்கி வரும் ஜூலை மாதம் 11ம் தேதி வரை நடக்கிறது. உலக கோப்பை போட்டி முதல் முறையாக தென்ஆப்ரிக்காவில் நடக்கிறது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், பிரேசில், அர்ஜென்டினா உட்பட 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 32 அணிகள் 8 பரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

போட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கிறது. லீக் சுற்றின் முடிவில் 8 பிரிவிலும் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடத்தைப் பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்திய சுற்றில் விளையாட தகுதி பெறும். இந்த சுற்று முதல் போட்டிகள் நாக்&அவுட் முறையில் நடக்கும்.
போட்டி நடக்கவுள்ள தென் ஆப்ரிக்காவில் எங்கு திரும்பினாலும் உலக கோப்பை போஸ்டர்களும் பிரமாண்ட பேனர்களும் தான் கண்களை நிறைக்கின்றன. ஜோகன்னஸ்பர்க், டர்பன், கேப் டவுன்...என்று 9 நகரங்களில் 10 புத்தம் புது ஸ்டேடியங்கள் போட்டிகளை நடத்துவதற்கு தயாராக உள்ளது.

உலகம் முழுவதும் இருந்து லட்சக் கணக்கான ரசிகர்களின் படையெடுப்பில் தென் ஆப்ரிக்கா திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறது. இவர்கள் தங்குவதற்காக ஓட்டல்கள், பிரத்யேக உணவகங்கள், மதுபான பார்கள், உற்சாகமூட்டும் அழகிகள், தீவிரவாத தாக்குதலை சமாளிக்க அதிரடி பாதுகாப்பு என்று எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி போல தங்களுக்குப் பிடித்தமான வீரர் அல்லது அணியை ஆதரிக்க இந்திய ரசிகர்கள் தயாராகிவிட்டனர். உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரே விளையாட்டு கால்பந்துதான். ரசிகர்களை விட வெறியர்கள் எண்ணிக்கை அதிகம். சேம் சைடு கோல் போட்ட வீரரை சுட்டுத் தள்ளிய கொடூரம் எல்லாம் அரங்கேறி இருக்கிறது.

கிளப் போட்டியில் அபிமான அணி தோற்றாலே மைதானத்தை அதகளமாக்கி விடுவார்கள் இந்த ரவுடி ரசிகர்கள். இது வரை நடந்துள்ள 18 உலக கோப்பை போட்டியில் 7 நாடுகள் கோப்பையை வென்றுள்ளன.
பிரேசில் அணி 5 முறை கோப்பையை கொள்ளை அடித்துள்ளது. எல்லா போட்டியிலும் விளையாடிய ஒரே அணி என்ற பெருமையும் அதற்குத்தான். நடப்பு சாம்பியன் இத்தாலி 4 முறையும், ஜெர்மனி 3 முறையும் சாம்பியனாகி உள்ளன.

வழக்கம் போல இந்த முறையும் பிரேசில் அணிதான் பேவரைட். இந்த அணியின் நட்சத்திர வீரர்கள் மைகான், கபு, கார்லோஸ் ஆகியோரின் ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் இப்போதே சீட் போட்டு காத்திருக்கிறார்கள். எனினும், நட்சித்திர வீரர் ரொனால்டினோ விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.
மரடோனா பயிற்சியில் அர்ஜென்டினாவும் உறுமிக் கொண்டிருக்கிறது. இந்த அணியின் லயனல் மெஸ்ஸி பெயரைக் கேட்டாலே எதிரணி கோல் கீப்பர்களுக்கு கண்கள் கிறு கிறுக்கும். உலகின் தலைசிறந்த வீரருக்கான பிபா விருதை தொடர்ந்து 2வது முறையாக தட்டிச் சென்றவர்.
பார்சிலோனா அணிக்காக கடந்த சீசனில் 47 கோல் போட்டு அசத்தியிருக்கிறார். கிளப் அணிக்காக காட்டும் சாகசம், தாய்நாட்டு அணிக்காக விளையாடும்போது மிஸ் ஆவது மெஸ்ஸிக்கு பெரிய சாபக் கேடாக இருந்து வருகிறது. இந்த உலக கோப்பையில் அதற்கு விமோசனம் கிடைக்க வேண்டும் என்று அர்ஜென்டினா ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.
இங்கிலாந்தின் வேய்ன் ரூனி, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, டேவிட் வில்லா (ஸ்பெயின்), டிடியர் ட்ரோக்பா (ஐவரி கோஸ்ட்), மலோவ்டா (பிரான்ஸ்), பாஸ்டியன் (ஜெர்மனி) என்று அணிக்கு ஒரு அசகாய சூரர் இருப்பதால் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை.
சில சாதா அணிகள் தாதா அணிகளுக்கு தண்ணி காட்டுவதுதான் கால்பந்து உலக கோப்பையில் கவர்ச்சியான அம்சம்.

கேமரூன், கானா, நைஜீரியா அணிகளுடன் மோதும் போது எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

நள்ளிரவு போட்டி தவிர மாலை 5 மணி, இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டிகளை இந்திய ரசிகர்கள் ரிலாக்சாக பார்க்கலாம். எல்சிடி டிவி, நண்பர்கள், பீர் பாட்டில் என்று கனகச்சிதமாக திட்டமிடும் பார்ட்டிகளும் திருவிழாக் கொண்டாட்டத்துக்கு தயாராகி விட்டனர்.

20100610a_008101002.jpg



20100610a_008101009.jpg

நன்றி - தினகரன்
 
இந்த முறை யார் கோப்பையை தட்டிச்செல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம். பயனுள்ள பதிவு....பகிர்வுக்கு நன்றி!
 
பயனுள்ளப் பதிவுக்கு நன்றி அறிஞரே. எல்லா போட்டிகளையும் பார்க்க முடியாது..நள்ளிரவுப் போட்டிகளை பார்க்க முடியும். இந்த நாட்டு நேரப்படி இரவு எட்டு மணி. எனவே பார்க்கலாம்.
 
நல்ல தகவல் பகிர்வு... நன்றி அறிஞரே.


உலக கோப்பை கால்பந்து திருவிழா
தென்ஆப்ரிக்காவில் நாளை தொடக்கம்

கேமரூன், கானா, நைஜீரியா அணிகளுடன் மோதும் போது எவ்வளவு பெரிய அணியாக இருந்தாலும் உள்ளூர ஒரு நடுக்கம் இருந்து கொண்டே இருக்கும்.

எல்லாம் சரி ஆனால் நடுக்கம் ஏன்??
 
நானும் பிரேசில் ரசிகனே,

ஆனால் இந்த குழுவில் ரொனல்டின்கொ இல்லாதது
சற்று மனவருத்தம் அளிக்கிரது.

பொருத்திருந்து பார்ப்போம்
 
அணிகள்
அணிப் பிரிவுகள்
போட்டி கால அட்டவணை
போட்டி நடக்குமிடங்கள்
வீரர்களின் நிழற்படம்
போட்டி நடக்கும் இடங்களின் நிழற்படம்

அனைத்தும் இதில் உண்டு. இதைத் பதிவிறக்கம் செய்து கோப்பை xls கோப்பாக பெயர் மாற்றம் செய்யவும்.


கோப்பை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
 
காற்பந்து உலகக் கோப்பை 2010 பற்றி எதுவுமே தெரியாதவர்கள், தெரிந்து கொள்ள இங்கே சொடுக்குங்கள்..!! :D:D:D
 
Last edited:
இந்தியா இந்த விளையாட்டில் ஆர்வம் காட்டாதது கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
 
இந்தியாவில் நிச்சயம் திறமையான வீரர்கள் உள்ளனர்.... மிகப் பிரமாதமாக விளையாடக்கூடிய ஆட்டக்காரர்கள் உள்ளனர்... நமக்கு ஏனோ இதுவரை உலககோப்பையில் விளையாடும் அதிர்ஷ்டம் கிட்டவே இல்லை.... இந்திய அரசு முறையாக அவர்களை ஊக்குவித்தால், மீடியாக்களும் தட்டிக்கொடுத்தால்.. நிச்சயம் கால்பந்தில் இந்தியா சாதிக்கலாம்... நான் ஒரு மிக தீவிர ரசிகன் கால்பந்தாட்டத்திற்கு. இந்தியா இல்லாத அட்டவணையைப் பார்க்கும்போது மனம் சங்கடமாகத்தான் உள்ளது..
 
விளையாடும் மைதானம் கால்பந்து விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். கிரிக்கெட் மைதானத்திற்கு இவ்வளவு செலவு செய்பவர்கள், இதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.

அதுபோல் இந்த விளையாட்டை சிறு பிராயத்திலிருந்து விளையாடும்படி நம் பள்ளிகளும் முனைப்பில் இறங்கவேண்டும், அப்படி செய்தால் இன்னும் இருபது வருடத்தில் நாமும் உலகக்கிண்ணத்தில் விளையாடலாம். இது நடக்குமா?
 
விளையாடும் மைதானம் கால்பந்து விளையாடுவதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். கிரிக்கெட் மைதானத்திற்கு இவ்வளவு செலவு செய்பவர்கள், இதையும் கொஞ்சம் கவனித்தால் நன்றாக இருக்கும்.

அதுபோல் இந்த விளையாட்டை சிறு பிராயத்திலிருந்து விளையாடும்படி நம் பள்ளிகளும் முனைப்பில் இறங்கவேண்டும், அப்படி செய்தால் இன்னும் இருபது வருடத்தில் நாமும் உலகக்கிண்ணத்தில் விளையாடலாம். இது நடக்குமா?

60ம் , 70ம் ஆண்டுகளில் மலேசியா,
தென் கொரியா, ஜப்பான் நடுகளின் விளையாட்டுசம தரத்தில் இருந்தது, அப்பொழுது மலேசிய விளையாட்டாளர்கள் பல இனத்தவர்களை கொண்டிருந்தனர்.
மலேசிய இந்தியர்களும் , சீன இனத்தவர்களும் அதிகம் இருந்தனர், போக போக இனப்பாகுபாடு காரணமாக திறமைக்கு அங்கிகாரம் அளிக்கப்படாமல், இன்நாட்டு விளையாட்டுத்தரம் கீழ்நிலைக்கு தள்ளபட்டுள்ளது. தற்போதைய உலக காற்பந்த்து தர பட்டியலில்
147 வது இடம் மலேசியாவிற்க்கு
 
இன்று கானா - செர்பியாவுடன் மோதி (1-0)
வெற்றி பெற்று விட்டது....
இங்கு ஒரே கோலாகலம்....கொண்டாட்டம் தான்....
மக்கள் குழு குழுவாகப் பிரிந்து நகரைச் சுற்றி வந்து
வெற்றியினைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்....
 
நேற்று நடந்த ஜேர்மனி-அவுரேலியா போட்டியை ஈபிள் கோபுர முன்றலில் ரம்மியமான சூழலில் பார்த்தேன். பாவம்பா அவுட்ஸ்திரேலியா.. சந்து பொந்தெல்லாம் கொண்டு போய் அடிச்ச மாதிரி அடிச்சாலும் என்னமாத் தாங்கினாப்பா..

தென்கொரியா அணியினர் கடந்த உலகச் சுற்றுக்கு முந்தைய சுற்றில் காட்டிய விளையாட்டை இம்முறையும் காட்டி உள்ளனரே..
 
நேற்று நடந்த ஜேர்மனி-அவுரேலியா போட்டியை ஈபிள் கோபுர முன்றலில் ரம்மியமான சூழலில் பார்த்தேன். ..

ஓ அப்ப, இந்த போட்டிகள் தென் ஆபிரிக்காவில் நடக்கலையா...??? :icon_ush:

ஈபிள் கோபுர முன்றலில்தானா நடக்குது...??
? :confused::confused:
 
பிரேசில் வட கொரியா ஆட்டத்தை
நேரடி ஒளிபரப்பில் கண்டேன்,
பிரேசிலின் முதல் கோல் மைக்கோனின்
அபார திறமை, கோல் அடிக்க வாய்பில்லாத
அங்களில் புகுத்திய கோல் அபாரம்.

[media]http://www.youtube.com/watch?v=i16XaIy3gCk[/media]
 
Last edited:
தென் ஆப்ரிக்கா - உருகுவேக்கு இடையான ஆட்டம் இடைவேளையில் இருக்கிறது.
இதுவரை தென் ஆப்ரிக்க கோல் எதுவும் அடிக்கவில்லை. உருகுவே ஒரு கோல் அடித்து முன்னணியில் இருக்கிறது.

பார்க்கலாம் இடைவேளைக்குப் பிறகு தென்ஆப்ரிக்காவின் எழுச்சி எப்படி இருக்கும் என்று...?
 
Back
Top