கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? பாகம் 2

அருமையான திரி
படிக்க வேண்டிய பல கருத்துக்கள்.

செல்வா உங்களின் பதிவுகளுக்காகவும் காத்திருக்கிறேன்
 
சித்த்ர்களே

மகான் களாய் வலம் வந்தவர்களும்
தோற்றம் அளிப்பவர்களும்
வரபோகிறவர்களும்
சித்த்ர்களே............. இதில் மதம் என்ற வேறுபாடே கிடையாது.
கடவுள் நிலையை உணரலாமே தவிர பார்க்க முடியாது.
இதை உணர்ந்து கொண்டால் ஆத்திகனேது நாத்திகனேது......
 
கடவுள் உண்மையில் இருக்கிறார்.

அன்பர்களே! இறைவனை அப்படி இருப்பார் இப்படி இருப்பவர் என்று கூறும் இறை சிந்தனையாளர்களே எப்போதாவது நீங்கள் எவ்வாறு உள்ளீர்கள் உங்கள் ரூபம் தான் என்ன என்று என்றாவது அவரிடத்தில் கேட்டிருப்பீர்களா? அப்படி அவரிடத்தில் கேட்டுப்பாருங்கள் அவர் நிச்சயமாக உங்களிடத்தில் நான் இவ்வாறு தான் இருக்கிறேன் என்று சொல்லுவார் இது சத்தியம். அவர் எனக்கு சொன்ன சத்தியத்தை இங்கே சொல்கிறேன். எது இல்லையோ அதுவே மாயை. இந்த பூமி என்று ஒன்று இல்லவே இல்லை. அப்பொழுது நாம் எங்கிருந்து வந்தோம் நான், நீ என்பதே இல்லை என்பது தான் உண்மை. ஒன்றே ஒன்று மட்டும் தான் இருக்கிறது அதை மிஞ்சும் சக்தி எங்குமே இல்லை இறைவனும் அவ்வாறுதான் இருக்கிறார். அந்த மாபெரும் சக்தி அன்பு என்று தான்.ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நீங்கள் எந்த நிலையில் எப்படி இருந்தாலும் சரி நான் மிக கொடுமையான பாவங்களை செய்த்திருக்கிறேன் என்று நினைப்பவனுன் இறைவனை அடைய தகுதியானவர்களே. அவர் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறார் , அவன் மிகப்பெரிய கருணையாளன், அவன் எல்லோரையும் தூய்மையாக்க வல்லவன், அவன் எல்லா உயிர்களிடத்திலும் மிகப்பெரிய அன்பு வைத்திருக்கிறான், அவரை எங்கும் தேடவேண்டாம் உங்களுக்குள்ளே இருக்கிறார். அவர் மட்டும் தான் உண்மை மற்ற அனைத்தும் பொய். நீங்கள் யாரையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, நீங்களாக இறைவனிடத்தில் பிரியத்துடன் கேளுங்கள் அவர் எல்லோரிடத்திலும் அவர் விளையாட்டை விளையாடுவான் அவர் மகா அன்புள்ளவர் அவரை பார்த்து நாம் பயப்படத்தேவையில்லை பயந்தால் நாம் அவரை காணவே முடியாது. அவர் மீது அன்பு கொள்ளுங்கள் நீங்கள் அவர் எப்படி இருப்பார் என்று எந்த ரூபத்தில் வணங்குகிறீர்களோ அந்த ரூபத்திலே உங்களுக்கு காட்சி தந்து அவருடைய உண்மை வடிவத்தையும் காட்டுவார்.அதற்கு நாம் அவரிடத்தில் மெய்ஞ்ஞானத்தை கேட்க வேண்டும் அதுவே ஒன்றே அவரிடத்தில் கேட்க முடிந்த ஒன்று. மற்றவை அனைத்தும் தாற்காலிகமே அப்படி என்றால் நிலையில்லாதது என்று பொருள். ஆகவே நீங்கள் எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செய்தலே போதுமானது வேறெந்த மதமும், சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் இறைவனிடத்தில் நம்மை கொண்டு சேர்க்காது, எவரெல்லாம் இந்த சமுதாயத்தால் சொல்லப்படுகிற தாழ்ந்தோர்,வறுமையில்இருப்போர்என்று உள்ளார்களா அவர்களிடத்தில் அன்பு செய்யுங்கள் உதவி செய்யுங்கள் இறைவனை பார்ப்பீர்கள்.
 
இது மிகவும் சிந்திக்க வைக்கும் தலைப்பு. நான் ஏன் பிறந்தேன் என்ற பெயரில் எம்.ஜி.ஆர். நடித்த பழைய படத்தில் மேஜர் சுந்தரராஜன் எம்.ஜி.ஆரை பார்த்து ஒரு காட்சியில் "உங்களின் குல தெய்வம் எது?" என்று கேட்க அவர் "என்னை பெற்ற தாய்" என்று பதில் சொல்லுவார்.நமது தமிழ் மூதாட்டி அவ்வையார் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்று சொல்லி இருக்கிறார். நம்மை பெற்றவர்கள் உயிருடன் இருக்கும்வரை அவர்களுக்கு தொண்டு செய்தும் மறைந்த பின் அவர்களின் உருவங்களை நினைத்து வணங்கியும் காலம் கழித்தால் அதுவே மென்மையாகும் என்பது என் கருத்து. கடவுள் எங்கு இருக்கிறார் என்று கேட்டால் திருநாவுக்கரசர் சொல்கிறார்

"விறகில் தீயினால் பாலில் படுநெய்போல்
மறைய நின்றுளான் மாமணி சோதியான்"

என்று சொல்கிறார். இவரை போல் பல மகான்கள் பலவிதமாய் சொல்லி இருக்கிறார்கள். இவைகளை எல்லாம் நம்பலாமா வேண்டாமா என்று உணர்வுபூர்வமாக முன்னறி தெய்வங்களான அன்னை தந்தையரின் ஆலோசனைப்படி கேட்டு செயல் படலாம். திரி தொடர்ந்தால் இன்னும் பல நல்ல தகவல்கள் வெளியாகலாம்.
 
Back
Top