கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? பாகம் 2

//கர்மாவும் அந்தக் கடவுளுக்கே,
விதியின் வலிமையையும் கடவுளுக்கே
அதன் பலனும் கடவுளுக்கே
கர்மாவின் வினையும் கடவுளுக்கே
//

எல்லாம் கடவுள் என்றால் கடவுளை அடையும் பிரயத்தனங்கள் எதற்காக ?

மறைகள் எதற்காக ?

வழிகாட்ட வந்த ஞானிகள் எதற்காக ?

ஒவ்வொரு பதிவிலும் என் சில கேள்விகளை தொடர்ந்து தவிர்த்து வந்திருக்குறீர்கள் இல்லையா ?

இப்போதைக்கு கடவுள் என்பது "கேள்வி"

நீங்கள் நான் சொல்வதை புரிந்துகொள்ள வில்லை ஆதான்

கடவுளை தேடுபவனும் கடவுள்
ஞானிகளும் கடவுளே
கடவுள் இல்லை என்பவனும் கடவுளே

சரி இவை ஏன் என்று மீண்டும் கேட்டால்?

ஏன் பிறக்கிறோம்? ஏன் இறக்கிறோம்?
இதுவே அதன் ஆரம்பம்? வாழ்க்கை என்றால் என்ன? ...................... கடைசியில் வரும் ஒரு கேள்வி கடவுள் இருக்கிறாரா? இல்லையா?

இது ஒரு வட்டம் இல்லை பூஜ்யம், வெறுமை, மாயை

பூஜ்யத்துள் ராஜ்யம் செய்வான் இறைவன்
 
பாகம் 2

மன்ற உறவுகள் அனைவரும் கண்ணியமான முறையில் இந்த திரியை கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது...

நீ எழுதுறதை எதோ நாங்கள் படிப்பதால், நீ கண்ட கருமாந்திர திரியை தொடங்கி என்ன வேண்டுமானாலும் எழுதுவாயா......... என்று நினைக்காமல், என்னுடையமனவோட்டத்தை புரிந்துக் கொண்டு, திரியில் பல உறவுகள் பங்கு பெற்றுவருவது மிகுந்த நிறைவை தருகிறது.. மற்றவர்களின் கருத்தைப் படிப்பதே பெரிய விஷயம் அதை உள்வாங்கிக் கொண்டு, அதை ஆமோதித்தோ அல்லது எதிர்தோ கருத்து போடுவது அதைவிட பெரிய விஷயம் காரணம்... இவை அனைத்திற்கு நேரம்
மிகவும் முக்கியம், ஒருவர் தன்னுடைய நேரத்தை ஒருவருக்காக செலவு செய்வதில் இருந்து தெரிந்து விடும் அந்த சந்திக்க போகும் நபரின் மதிப்பு..... சாதாரண மனிதர்களுக்கே இப்படி என்றால்... நாம் பேசிக் கொண்டு இருப்பது நம்மை காட்டிலும் மிகப்பெரிய சக்தி ஒன்றைப் பற்றி.... அதற்கான பொதுப் பெயர் தான் கடவுள்...... சோ, இதற்கு நேரம் செலவழிக்காமல் வேறு எதுக்கு நேரம் செலவழிப்பது..... நான் திரியின் ஆரம்பத்திலே சொல்லி விட்டேன், கடவுள் இருக்காரா இல்லையா என்பது
மிகப்பெரிய கேள்வி அதற்கு விடை கிடைத்தால், நம்முடைய மனித வாழ்க்கையின் பயனே முடிந்து விடும்... உலகமே முடிவதற்கு கூட வாய்ப்பு இருக்கிறது.. அதனால் இந்த திரியில் கண்டிப்பாக அந்த கேள்விக்கு விடை கிடைக்காது.... ஆனால் இந்த திரியை படிப்பதன் மூலம் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்..

சிறிது நேரத்திற்கு முன்பு தம்பி சூரியனிடம் பேசிக் கொண்டு இருந்த போது, திரியைப் பற்றி பேசினான், அதில் என்ன போடுவது என்றே தெரியவில்லை என்று கூறினான்.. ஏன் என்று கேட்டேன்... எனக்கு கடவுளை ஆதரிக்க வேண்டுமா எதிர்க்க வேண்டுமா என்றே தெரியவில்லை என்று கூறினான். உண்மையில் அவன் நிலை தான் எனக்கும், எனக்கு மட்டுமில்லை, உலகத்தில் பலருக்கும் அந்த நிலை தான். என் தாத்தா கும்பிட்டார், என் அப்பா கும்பிட்டார், அதனால் நான் கும்பிடுகிறேன், நாளை என்
மகனும் பேரனும் கண்டிப்பாக கும்பிடுவார்கள்.. இதற்கு பெயர் பக்தி இல்லை, நம்பிக்கை இல்லை, ஆன்மீகம் இல்லை..இந்த திரியில் அனுபவம் வாய்ந்தவர்களும் சில ஆன்மீகவாதிகளும், சில அறிஞர்களும் தரும் விளக்கங்கள் மூலமாக சில விஷயங்கள் நமக்கு தெளிவாகலாம். ஆன்மீகவாதியாக இருந்தால், நாம் ஏன் சாமி கும்பிடுகிறோம், எதற்காக அதற்கு பணிவிடை செய்கிறோம், இதிகாசங்கள் என்பது என்ன, எதற்காக சில கோட்பாடுகளை முன்னோர்கள் வகுத்தார்கள் போன்ற விஷயங்கள் தெளிவாகலாம். அல்லது விஞ்ஞானத்தை நம்புபவராக இருந்தால், அந்த உலக மகா சக்தி என்பது என்ன, எதற்காக நாம் அதை மதிக்க வேண்டும், நாளைய உலகில் கடவுள் என்று சொல்லப்படும் அந்த இயற்கை மகா சக்தி நம்மை வந்தடையுமா, அல்லது நாம் அதை அடைய முடியுமா.. இப்படி பட்ட சில தெளிவுகள் பிறக்கலாம்....முக்கியமாக நம்மிடம் இருக்கும் மூடநம்பிக்கைகள் அழியலாம்.. அதற்காக தான் இந்த திரி தொடங்கப்பட்டு இருக்கிறது.

இதில் சில உறவுகள் தங்களின் வாதங்கள் தான் சரி என்ற ரீதியில் பேசுவதையும் கவனித்தேன், உங்களுக்கு ஒரு விஷயத்தை நான் புரியவைக்க விரும்புகிறேன், இந்த திரியின் முடிவில் யாரும் ஜெயிக்கப் போவதுமில்லை, தோற்றுப்போவதுமில்லை...... நான் முதலிலே சொன்னதைப் போல நம்முள் இருக்கும், அனைத்து முகமூடிகளையும்
கழட்டி விட்டு இந்த திரியை நோக்கி நிர்வாணமாக வந்தால், இதில் இருக்கும் உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு செல்லலாம், ஆனால் வரும் போதே கை நிறைய கால் நிறைய மூளை நிறைய வாய் நிறைய நீங்கள் வந்தீர்கள் என்றால், இங்கிருந்து எடுத்துச் செல்ல எதுவும் இருக்காது... சோ இதுவரை கொடுத்த ஒத்துழைப்பைப் போல வரும்
பாகங்களிலும் இதே ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன்.... காரணம் மன்றத்திற்கு என்று சில வரைமுறைகள் இருக்கிறது.. அந்த விதிகளை நாம் மீற முடியாது. ஒருகட்டத்திற்கு மேல் செல்லும் பட்சத்தில் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.. பாவம் அவர்களை நாம் குறை சொல்ல முடியாது, அவர்கள் இருக்கும் பொறுப்பு
அப்படி, சோ அவர்களுக்கு வேலைக் கொடுக்காமல் இந்த திரியை நாம் நகர்த்த விரும்புகிறேன்... சரி நான் இப்போ திரிக்கு வருகிறேன்

இதுவரை வந்த பதில்கள் அனைத்தையும் படித்தேன், பங்காளி நிவாஸூம், மச்சான் ஆதனும்

"தக்காளி விடுறா வெட்டிப்புறேன்" என்ற ரீதியில் சொற்போர் நடத்தியதை கவனித்தேன்... நான் ஏற்கனவே சொன்னேனே, கீதை ஆகட்டும், குரான் ஆகட்டும், பைபில் ஆகட்டும் இவை அனைத்தும் எதோ ஒரு கட்டத்தில் கடவுள் சொன்னார் என்றும், கடவுள் சொல்ல எழுதப்பட்டது என்றும், கடவுளின் தூதுவரால் சொல்லப்பட்டு என்றும் நமக்கு யாரோ ஒருவரின் மூலமாக வாழையடி வாழையாக வந்துக் கொண்டு இருக்கிறது... அதற்காக அவை அனைத்தும் பொய் என்று சொல்ல வரவில்லை... இப்போ ஒரு பேச்சுக்கு நான், ஒருவனிடம்

"டேய் அது யாரு, ரொம்ப நாளா பார்த்துட்டே இருக்கேன் யாருனே தெரியலையே" என்ற வாக்கியத்தை சொல்கிறேன். அவன் மற்றொருவனிடம்

"டேய் தக்ஸு ரொம்ப நாள அந்த ஆள பார்த்துனே இருக்கானாம் டா" மற்றொவன், இன்னொருவனிடம்

"டேய் தக்ஸு, அந்த அள எப்படியாவது அடிச்சிடுவான்னு நினைக்கிறேன், ரொம்ப நாளா அவனை கட்டம் கட்டிட்டு இருக்கான்டா" இவன், அடுத்தவனிடம்

"விஷயம் தெரியுமா, நேத்து ஒருத்தன், ரயில் விபத்தில் அடிப்பட்டு செத்தானே, அவனை தக்ஸு தான் ரொம்ப நாளா கவனிச்சிட்டு இருந்தான், மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் மம்தா பெனர்ஜிக்கிட்ட சொல்லி தக்ஸு தான் கரைட்டா அவன் வரும் போது ரயிலை விட்டு இருக்கான்"


இதை நான் விளையாட்டாக சொன்னாலும், இந்த பிரச்சனை தான் நம்முடைய பல வரலாற்றிலும், பல இதிகாசங்களிலும், கிருஷ்ணர், இயேசு, நபி போன்ற இறைவன்களின் விஷயத்திலும் நடந்து இருக்கிறது.
நமக்கு விஷயத்தை கடத்தியவர்கள் அனைவரும் தங்களின் சொந்தக்கருத்தை அதில் சேர்த்து சேர்த்து, எது நடந்தது, எது அவர்களின் சேர்ப்பு என்று தெரியாமலே போய் விட்டது. எதுவாக இருந்தாலும் என்ன இவை அனைத்தும் உண்மையாக தான் இருக்கும் என்று நாமும் அவற்றை பின்பற்றி வருகிறோம். காரணம் இந்த மதங்களால் பெரும்பாலும் ஆரம்பத்தில் நன்மை தான், நடந்து இருக்கிறது. அதாவது எல்லா மதத்திலும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது... இதனால் குளிக்கிறோம், சுத்தமான உடைகளை அணிகிறோம், சுத்தமான உணவை உட்கொள்கிறோம், இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறோம். அனைத்து மதத்திலும் பிறருக்கு உதவ சொல்கிறது, அதனால் உன்னால் எனக்கு லாபம் என்னால் உனக்கு லாபம் என்ற முயூச்சுவல் உறவு முறையின் காரணமாக செல்கிறோம்.


ஆனால் ஒருகட்டத்தில் சிலரால் சேர்க்கப்பட்ட சகமனிதத்திற்கு எதிரான விஷயங்கள் அனைத்தும் இன்று மதங்களை தனிதனியாக துண்டாக நிற்கவைத்துக் கொண்டு இருக்கிறது. இன்று அந்த இறை நம்பிக்கை வெறியாக மாறி, அனைத்து மதங்களும், ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும், குண்டு வைத்து சிதற வைத்தும் சாவடித்துக் கொண்டு இருக்கிறோம். ஏன் நிகழ்காலத்திலே பாபர் மசூதி கேஸை எடுத்துக் கொண்டால், அந்த கேஸ் ஆரம்பித்தாலே மத்திய அரசில் இருந்து அனைவரும் பயப்படுகிறார்கள், இதுவரை தீர்ப்பே அதில் எழுத முடியவில்லையே, அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்தது, அடுத்து மேல் முறையீடு, அப்புறம் உச்ச நீதிமன்றம், அப்புறம் வன்முறை... உன் கோவிலா, என் கோவிலா என்று பேசி பேசி அந்த இடத்தில் சுடுகாட்டை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். அந்த இடத்தை இடித்து விட்டு பள்ளிகளை கட்டுங்கள் என்றும் நடுநிலைவாதிகள் கூறுகிறார்கள். அப்போ கூட அங்கு ராமகிருஷ்ணா மிஷன் ஸ்கூலா அல்லது, அல்லா மெட்டிரிக்குலேஷன் ஸ்கூல் கட்டுவதா என்ற பிரச்சனை செய்வார்கள்.... பிரச்சனை செய்பவர்கள் செய்துக் கொண்டே தான் இருப்பார்கள்...

அதனால் பங்காளியும் மச்சானும் மற்ற மேற்கொள்களைக் காட்டி பேசுவதை விட உங்கள் மனதில் இருப்பதை பேசுங்கள் நான் ஏற்கனவே சொன்னது போல இதில் யாரும் ஜெயிக்க போவதுமில்லை, தோற்றுப்போவதுமில்லை, இந்த திரியை படிப்பவர்களுக்கு எதாவது ஒருவிதத்தில் லாபம் இருக்க வேண்டுமே தவிற நஷ்டம் இருக்க கூடாது என்ற பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிக் கொள்கிறேன். இது அனைத்து உறவுகளுக்கும் என் வேண்டுகொள், காரணம் இந்த திரியின் தலைப்பு கத்தியின் மீது நடப்பதைப் போல, சோ நம்முடைய வார்த்தைகள் யோசித்து வர வேண்டும்.. அதனால் தான் சொன்னேன்.

நமக்கு தெரிந்த அனைத்து மத தெய்வங்களையும் ஒன்றாக சேர்த்து ஒப்புட்டு பார்த்தால், ஒன்றிடம் இல்லாதது மற்றொன்றிடம் இருக்கும், நம் சமூகம் எந்த மாதிரியோ, அந்த மாதிரி தான் இந்த சமூக கடவுளும் இருக்கும். இதை எதற்கு சொல்கிறேன் என்றால், மனிதன் உருவாக்கியதற்கு இதை விட பெரிய உதாரணம் வேறு எதுவும் தேவையில்லை. சில தெய்வங்கள் நேருக்கு எதிராக உருவாக்கப்பட்டு இருக்கிறது, அதாவது கோபமே சொரூபமாக கொண்ட தெய்வம் என்றால், உடனே ஒரு கூட்டம் சாந்தமே உருவான தெய்வம் என்று ஒன்றை கண்டுபிடித்து, கோபத்தை மட்டுமே பார்த்து போர் அடித்துப் போய் மாற்றத்திற்காக காத்துக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தை தனியாக பிரித்தான். இதைக் கண்ட கோபக்கார தெய்வத்தின் ஆட்கள், சாந்தமாக ஒரு தெய்வத்தை படைத்து, கோபமான தெய்வத்தின் மறு அவதாரம் தான் இது என்று மேலும் ஆட்கள் தங்களின் கூட்டத்தில் இருந்து குறையாமல் பார்த்துக் கொண்டனர். பெண்களை மட்டும் முன்னிலைப் படுத்தி பல தெய்வங்கள் ஒரு மதத்தில் இருப்பதை பார்த்த, ஒருவன் ஆண் மட்டுமே கடவுள் என்ற ரீதியில் ஒரு மதத்தை உருவாக்கினான். அதில் பெண்களுக்கு மற்ற மதத்தில் கிடைக்கும் மரியாதைகளும், சலுகைகளும் கிடையாது. இவை அனைத்தையும் பின் வருபவர்களுக்கு வாய் வழியாக சொல்லிக் கொண்ட இருக்க முடியாது என்பதால், எழுத்து வடிவாக எழுத ஆரம்பித்தான். பின்னர் அதை சுவாரஸ்யமாக எப்படி எழுதுவது
என்று யோசித்து இதிகாசங்களை உருவாக்கினான்.

நேத்து தான் நான் மளிகை சாமான் லிஸ்டு எழுதி கடையில் கொண்டு போய் கொடுத்தேன்.. அதை வாங்கி பார்த்த கடைக்கார நண்பன் சொன்னான்.

"சார் அடுத்த முறை லிஸ்டு கொடுக்கும் போது தமிழில் எழுதிட்டு வாங்க எனக்கு சீன மொழி தெரியாது" என்று சிரித்தான்.

"யோவ் தமிழ்ல தான்ய்யா எழுதி இருக்கேன்"

"அப்ப நீங்க ஒண்ணு பண்ணுங்க, இனிமே லிஸ்டுக்கு மேலே தமிழில் தான் எழுதி இருக்கேன்னு பெருசா இங்கிலிஷ்ல எழுதி குடுங்க" என்றான்.

அப்போ தான் நான் யோசித்தேன், இந்த கணிணி காலத்தில் நாம் கையில் எழுதுவதையே விட்டு விட்டோம், நம்முடைய எழுத்தே இப்போ பக்கத்தில் இருப்பவர்களுக்கு புரிய மாட்டுதே, அப்படி இருக்கும் போது, பல நூறு அல்லது பல ஆயிரம் நூற்றாண்டுக்கு முன்னர், எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளிலும், மிருகங்களின் தோல்களிலும், கற்களிலும் எழுதப்பட்டு இருக்கும் விஷயங்கள் எப்படி அதை கண்டுபிடிப்பவர்களுக்கு விளங்கி இருக்கும்......... கொஞ்சம் யோசித்து பாருங்கள்...
அப்போ கண்டுபிடித்தவர்களின் கற்பனையும் அவர்களின் சுயவிருப்பு வெறுப்புகளும் கண்டிப்பாக அதில் கலந்து இருக்கும் இல்லையா..... அப்போ இத்தனை நாள் நாம் படித்து வந்தது எல்லாம் உன்னைப் போல என்னைப் போல ஒரு மனிதன் சொன்னது என்றால், அப்போ நம் நம்பிக்கையின் ஆணிவேறே அறுந்து விட்டதாக ஆகிவிடும் இல்லையா....... சரி கடவுள் இருக்கிறார் என்ற பட்சத்தில் அவர் சொல்லும் விஷயங்கள் தான் நமக்கு சொல்லப்பட்டனவா என்ற கேள்வி வருகிறது.
அல்லது அவர் இதற்கு நேர் எதிரான சில கருத்துகளை சொல்லி இருக்கலாம் இல்லையா...... எல்லா புராணங்களிலும் பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக ஒரு வில்லன் இருக்கிறான். ஏன் அப்படி,... எல்லா மத இதிகாசங்களிலும் இந்த வில்லன் கண்டிப்பாக வருகிறான், வந்து கடவுளுக்கு தொல்லை கொடுக்கிறான், பின்னர் கடவுள் அவனை போராடி அழிக்கிறார். சோ, நம் வாழ்க்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை நாம் போராடி அழித்து வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டும்
என்பதே இந்த இதிகாசங்களை உருவாக்கியவர்களின் நோக்கம்.... மக்கள் அனைவரும் ஒத்துமையாக இருக்க ஒரு மிரட்டும் சக்தி, நம்பிக்கை சக்தி, புதிரான சக்தி மனிதனுக்கு தேவைப் பட்டது அது தான் இப்போ மதங்களாக மாறியது. பின்னர் ஒவ்வொரு மதத்தில் ஏற்பட்ட ஒப்பிடல் காரணமாக, நீ உயர்ந்தவனா, நான் உயர்ந்தவனா என்ற தர்கத்தில் தொடர்ந்து பல கூத்துகள் நடைபெற்றுக் கொண்டே வருகிறது...

சரி இந்த திரி திசை மாறாமல் போக உறவுகள் இதுவரை கொடுத்த ஒத்துழைப்பை பின்வரும் பகுதிகளிலும் தொடர்ந்து தர வேண்டிக் கொள்கிறேன்...

அடுத்து வரும் பகுதிகளில் பார்க்கப்போகும் விஷயங்களில்.....

1. எப்படி கடவுள் டோய்னு வந்து தரிசனம் கொடுத்து விட்டு, டான்னு மறைகிறார் என்று யோசித்தால், ஸ்டிபன் ஹாங்கிங்க்ஸ் சொன்ன டைம் தத்துவம் அதற்கு விடையளிக்கிறது...

2. கடவுள் ஏன் அழகாகவே இருக்கிறார், அவர் அசிங்கமா இருக்க கூடாதா... ஏன் அவர் மற்ற கிரங்களில் வாழும் ஏலியன்ஸா இருக்க கூடாதா..

3. நம்மைவிட திறமையானவரும், அறிவு மிக்கவரும், சக்தி வாய்ந்தவரும் தானே கடவுள்... அப்போ என்னை விட திறமை வாய்ந்த விஞ்ஞானிகள், அறிவு மிக்க அறிவாளிகள், சக்தி வாய்ந்த நாட்டின் அதிபர்கள் இவர்கள் எல்லாரும் கடவுளா..

4. காலப் பயணம் மேற்கொண்டால், கடவுளை நாம் தரிசிக்க முடியுமா...

5. இயற்கை என்பது என்ன...

இன்னும் பேசலாம்...
 
நண்பர்களே , கடவுளால் செய்யப்பட பல நல்ல நிகழ்வுகளை , தக்க நிரூபணங்களுடன் இங்கே எடுத்து சொல்லி என் சந்தேகத்தை தீர்த்து வைத்து மனத்தெளிவை ஏற்படுத்தினால் நான் உங்கள் கருத்தை ஏற்றுக் கொண்டு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வேன்

நீங்கள் குறிப்பிட்ட, மற்றும் இதுபோன்ற சில விடயங்களை விட, மற்றனைத்துமே நல்விடயங்கள்தானே நண்பரே...

நான் பிறந்தது கடவுளால் என்கின்றேன்...
நான் இறப்பது கடவுளால், அல்லது கடவுளில்லாததால் என்கின்றீர்கள்...

இதுதான் வித்தியாசம்...

*****

ரங்கராஜனின் பாகம் 2ஐ இன்னும் வாசிக்கவில்லை.
வாசித்ததும் தொடர்கின்றேன்...
 
ஆதன்,

சிறு தடங்களில் தொடர் முடியவில்லை. சரி விசயத்துக்கு வருவோம் நான் இதை மதத்தின் பெயரால் திசை மற்ற விரும்ப வில்லை. ஆனால் எந்த மதமாக இருந்தாலும் உட்கருத்து என்பது ஒன்றாகத்தான் இருக்கும்.

உங்கள் அனைத்து வாதங்களும் நான் நன்கு உணர்கிறேன். இங்கு ஒரு குழப்பம் என்வென்றால் நான் நிற்கும் புள்ளி வேரூ நீங்கள் நிற்கும் புள்ளி வேராக உள்ளதுதான் பிரச்சனை. நான் இப்பொழுதும் சொல்வது அதுதான்.

நீங்கள் கடவுளை தேடுவது என்பது இந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது கூடவும் கூடாது. நீங்கள் சொல்லும் இந்த வலி, கொலை, கணவன், மனைவி, நாகரீகம், காசு, பணம், குழந்தை, பெரியவர், சிறியவர், ஆண், பெண், விலங்கு, உயிருள்ளது, உயிரற்றது, ஆசை, கோபம், பாவம், துக்கம், கடமை, புனிதம், அசிங்கம், ஆடை, அவமானம், இழிதல், பழித்தல், கண்ணியம், நேர்மை, பச்சாதபம் இவரோடு ஒப்பிடக் கூடாது கடவுளை.

விலங்குகளை ஒப்பிட்டு மனிதனை காணலாம். மனிதத் தன்மை ஒப்பிட்டு கடவுளைத் தேடாதிர்கள்.

மூன்று வேலை உணவு கொண்டவனுக்கு மலர் அழகு.

மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவை பார்ப்பவனுக்கு பழையசாதம் அழகு

இதற்க்கு ஏன் கடவுள் வரவேண்டும்.


இந்த வாழ்வோடு ஒப்பிட்டு கடவுளை நான் தேடவில்லை, நான் சொல்ல வந்ததே வேறு நிவாஸ் ?

கடவுள் குறித்த ஆன்மிக பகுதியில் என் விவாதங்களை தேடினீர்களானால் புரியும் ?

இவ்வளவுதான் கடவுளா என்று இதே திரியில் உங்களை பார்த்து கேட்டுவிட்டு, வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளோடு நான் எப்படி ஒப்பிடுவேன்..

நான் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பது ஒன்றே ஒன்று, அது நாம் நினைக்கிற படி மட்டுமே கடவுள் இல்லை..

கந்தபுராணம் உதாரணம் பார்க்கவும்..

இதற்கு முன் உங்களின் கவிதை திரியில், நான் என்பதில் கடவுள் இல்லை என்று நீங்கள் சொன்ன போது இருக்கிறான் என்று வாதிட்டேன், யாம் வேறு நான் வேறு என்று நீங்கள் சொன்ன போது, இல்லை எல்லாம் ஒன்று என்று சொன்னேன்..

காரணம் இருக்கு, கடவுள் இல்லை என்று சொன்னவுடன், என்ன சொல்கிறோம் அது மூடத்தனம், இல்லை என்று சொன்னவனை இருக்கு என்று நம்ப வைக்க முயல்கிறோம், ஏன் முயல்கிறோம் என்று யோசித்து பாருங்களேன், நாம் நம்புவது தப்பாகிவிடோமோ எனும் குற்ற உணர்ச்சி மட்டுமே அதற்கு காரணமாக இருக்கிறது, இல்லை என்று சொல்பவனை மூடன் என்று சொல்லும் அளவுக்கு கடுமையான செல்கிறோமில்லையா ?

எல்லாம் அவனுக்கு என்று சொன்ன நீங்கள், இல்லை என்று சொல்வதை மூடத்தனம் என்று எப்படி வர்ணித்தீர்கள் ?

காரணம் இருக்கு, நாம் யாவரும் நம்மைவிட, நம்மை சார்ந்தவர்களைவிட, மதம், சாதி, கடவுளை அதீதம்மிக நேசிக்கிறோம், அந்த நேசிப்பின் உணர்வே, இந்த விவாதங்கள்..

போதிமரம் என்றால் புத்தன் நினைவுக்கு வருகிறான், புத்தன் என்றால் கண் மூடிய ஒரு சிலை ஞாபகத்துக்கு வருகிறது, யாருக்கும் புத்தன் என்றால் விழிப்புணர்வு என்று நியாபகத்துக்கு வருவதே இல்லை..

கௌத்தம புத்தனின் கதை ஒன்றை உதாரணம் சொன்னீங்க, அதை பற்றி பேசினப்ப, எந்த மாயாஜாலமும் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று சொன்னீங்க..

புத்தனை பற்றி பேசிவிட்டு, மாயாஜாலம் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று யோசிப்பதே தவறான அணுகு முறையில்லையா, ஆசைப்படாதே என்று சொன்னவன், எப்படி மாயாஜாலம் செய்வன், எப்படி போன ஒரு உயிரை கொண்டு வருவான் ?

அந்த தாய் புத்தனை புரிந்து கொள்ளவில்லை, ஒரு வேளை புரிந்து கொண்டிருந்தால் அங்கு சென்றிருக்க மாட்டார். நாமும் அவனை புரிந்து கொள்ளவில்லை, அதனால்தான் ஆசைப்படாமல் இருக்க ஆசைப்பட்டார் புத்தன் என்று தத்துவம் பேசுகிறோம் இல்லையா ?

இது போலத்தான் கிரிஷ்ணரில் இருந்து, அனைவரையும் தப்பாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்..

இஸ்லாத்தில் வஹி என்று சொல்வார்கள், வஹி என்றால் செய்தி..

இஸ்லாத் என்றவுடனே நினைவுக்கு வருவது இதுதான், உலகிலேயே தான் வாழும் காலத்தில் ஒரு மதத்தை தோற்றுவித்து, அதை ஒரு நாடு முழுக்க அல்லது சில நாடு முழுக்க பரப்பிய பெருமை நபிக்கு மட்டுமே சேரும், இதுவரை எந்த நெறியும் இப்படி பரவியதில்லை..

வஹி எனும் செய்தியாவது, அல்லாவிடம் இருந்து நபிக்கு வரும், நபி என்றால் தூதன் என்று பொருள். அவர் நபி என்பதே அவருக்கு 40 வயதான பிறகுதான் தெரியும் சரிங்களா ?

அந்த வஹியாவது அந்த குறிப்பிட்ட காலக்கட்டதுக்கு ஏற்றது, உதாரணமா ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், புனித போரான ஜிகாத் நடந்து கொண்டிருந்த காலத்தில், பலரும் உயிரிழந்தார்கள், துணையில்லாமல் பெண்களும் குழந்தைகளும், பெரிதும் துயருற்றார்கள், சிலபலர் பல கொடுமைக்கும் ஆளானார்கள், தவறானவர்களால் பாதுக்காப்பில்லாமல் வதைக்கப்பட்டார்கள், அதை பார்த்த நபி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார், அதனால் இனப்பெருக்கமும் நிகழும் இல்லையா அதனால் சொன்னார், அதையே இன்று கடைபிட்டிப்பது எவ்வளவு சரி சொல்லுங்கள்..

இது போலத்தான் எல்லா நெறிகளும் இருக்கும் இறைசெய்தியிலும் ஒரு கருத்திருக்கும், வஹி என்பது ஒவ்வொரு காலக்கட்டத்தில் இறங்குவது, பெரியார் சொன்ன கடவுள் இல்லை கொள்கை கூட இறைசெய்தி தான் என்னை பொருத்தவரை..

கடவுள் எங்கும் இருக்கிறான் என்றால் அவன் பெரியாரியத்திலும் இருக்கிறான், கம்யூனிசத்திலும் இருக்கிறான், மாலியத்திலும் இருக்கிறான், சிவ இயத்திலும் இருக்கிறான், கிறிஸ்துவத்திலும் இருக்கிறான், அல்லா இயத்திலும் இருக்க்கிறான், இன்ன பிற கடவுள்களிலும் இருக்கிறான்..

இல்லை என்பது தவரு என்பது உங்கள் வாதம், இல்லை என்பதிலும் கடவுள் இருக்கிறான் என்பது என் வாதம்..
 
Last edited:
இந்த வாழ்வோடு ஒப்பிட்டு கடவுளை நான் தேடவில்லை, நான் சொல்ல வந்ததே வேறு நிவாஸ் ?

கடவுள் குறித்த ஆன்மிக பகுதியில் என் விவாதங்களை தேடினீர்களானால் புரியும் ?

இவ்வளவுதான் கடவுளா என்று இதே திரியில் உங்களை பார்த்து கேட்டுவிட்டு, வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளோடு நான் எப்படி ஒப்பிடுவேன்..

நான் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பது ஒன்றே ஒன்று, அது நாம் நினைக்கிற படி மட்டுமே கடவுள் இல்லை..

கந்தபுராணம் உதாரணம் பார்க்கவும்..

இதற்கு முன் உங்களின் கவிதை திரியில், நான் என்பதில் கடவுள் இல்லை என்று நீங்கள் சொன்ன போது இருக்கிறான் என்று வாதிட்டேன், யாம் வேறு நான் வேறு என்று நீங்கள் சொன்ன போது, இல்லை எல்லாம் ஒன்று என்று சொன்னேன்..

காரணம் இருக்கு, கடவுள் இல்லை என்று சொன்னவுடன், என்ன சொல்கிறோம் அது மூடத்தனம், இல்லை என்று சொன்னவனை இருக்கு என்று நம்ப வைக்க முயல்கிறோம், ஏன் முயல்கிறோம் என்று யோசித்து பாருங்களேன், நாம் நம்புவது தப்பாகிவிடோமோ எனும் குற்ற உணர்ச்சி மட்டுமே அதற்கு காரணமாக இருக்கிறது, இல்லை என்று சொல்பவனை மூடன் என்று சொல்லும் அளவுக்கு கடுமையான செல்கிறோமில்லையா ?

எல்லாம் அவனுக்கு என்று சொன்ன நீங்கள், இல்லை என்று சொல்வதை மூடத்தனம் என்று எப்படி வர்ணித்தீர்கள் ?

காரணம் இருக்கு, நாம் யாவரும் நம்மைவிட, நம்மை சார்ந்தவர்களைவிட, மதம், சாதி, கடவுளை அதீதம்மிக நேசிக்கிறோம், அந்த நேசிப்பின் உணர்வே, இந்த விவாதங்கள்..

போதிமரம் என்றால் புத்தன் நினைவுக்கு வருகிறான், புத்தன் என்றால் கண் மூடிய ஒரு சிலை ஞாபகத்துக்கு வருகிறது, யாருக்கும் புத்தன் என்றால் விழிப்புணர்வு என்று நியாபகத்துக்கு வருவதே இல்லை..

கௌத்தம புத்தனின் கதை ஒன்றை உதாரணம் சொன்னீங்க, அதை பற்றி பேசினப்ப, எந்த மாயாஜாலமும் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று சொன்னீங்க..

புத்தனை பற்றி பேசிவிட்டு, மாயாஜாலம் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று யோசிப்பதே தவறான அணுகு முறையில்லையா, ஆசைப்படாதே என்று சொன்னவன், எப்படி மாயாஜாலம் செய்வன், எப்படி போன ஒரு உயிரை கொண்டு வருவான் ?

அந்த தாய் புத்தனை புரிந்து கொள்ளவில்லை, ஒரு வேளை புரிந்து கொண்டிருந்தால் அங்கு சென்றிருக்க மாட்டார். நாமும் அவனை புரிந்து கொள்ளவில்லை, அதனால்தான் ஆசைப்படாமல் இருக்க ஆசைப்பட்டார் புத்தன் என்று தத்துவம் பேசுகிறோம் இல்லையா ?

இது போலத்தான் கிரிஷ்ணரில் இருந்து, அனைவரையும் தப்பாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்..

இஸ்லாத்தில் வஹி என்று சொல்வார்கள், வஹி என்றால் செய்தி..

இஸ்லாத் என்றவுடனே நினைவுக்கு வருவது இதுதான், உலகிலேயே தான் வாழும் காலத்தில் ஒரு மதத்தை தோற்றுவித்து, அதை ஒரு நாடு முழுக்க அல்லது சில நாடு முழுக்க பரப்பிய பெருமை நபிக்கு மட்டுமே சேரும், இதுவரை எந்த நெறியும் இப்படி பரவியதில்லை..

வஹி எனும் செய்தியாவது, அல்லாவிடம் இருந்து நபிக்கு வரும், நபி என்றால் தூதன் என்று பொருள். அவர் நபி என்பதே அவருக்கு 40 வயதான பிறகுதான் தெரியும் சரிங்களா ?

அந்த வஹியாவது அந்த குறிப்பிட்ட காலக்கட்டதுக்கு ஏற்றது, உதாரணமா ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், புனித போரான ஜிகாத் நடந்து கொண்டிருந்த காலத்தில், பலரும் உயிரிழந்தார்கள், துணையில்லாமல் பெண்களும் குழந்தைகளும், பெரிதும் துயருற்றார்கள், சிலபலர் பல கொடுமைக்கும் ஆளானார்கள், தவறானவர்களால் பாதுக்காப்பில்லாமல் வதைக்கப்பட்டார்கள், அதை பார்த்த நபி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார், அதனால் இனப்பெருக்கமும் நிகழும் இல்லையா அதனால் சொன்னார், அதையே இன்று கடைபிட்டிப்பது எவ்வளவு சரி சொல்லுங்கள்..

இது போலத்தான் எல்லா நெறிகளும் இருக்கும் இறைசெய்தியிலும் ஒரு கருத்திருக்கும், வஹி என்பது ஒவ்வொரு காலக்கட்டத்தில் இறங்குவது, பெரியார் சொன்ன கடவுள் இல்லை கொள்கை கூட இறைசெய்தி தான் என்னை பொருத்தவரை..

கடவுள் எங்கும் இருக்கிறான் என்றால் அவன் பெரியாரியத்திலும் இருக்கிறான், கம்யூனிசத்திலும் இருக்கிறான், மாலியத்திலும் இருக்கிறான், சிவ இயத்திலும் இருக்கிறான், கிறிஸ்துவத்திலும் இருக்கிறான், அல்லா இயத்திலும் இருக்க்கிறான், இன்ன பிற கடவுள்களிலும் இருக்கிறான்..

இல்லை என்பது தவரு என்பது உங்கள் வாதம், இல்லை என்பதிலும் கடவுள் இருக்கிறான் என்பது என் வாதம்..

ஆதன் உண்மை ஆதன் உண்மை

நான் தேட வேண்டிய இன்னொரு கோணமும் புலப்படுகிறது

நான் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நீளும் என்ற என் எதிர்ப்பார்ப்பு பொய்க்கவில்லை

அலச வேண்டிய வேலை தொடரும் என்ற கணிப்பும் மெய்யாகியது

பார்க்கலாம் எவ்வளவுதூரம் என்னால் பயணித்து இலக்கு இருக்கும் திசையாவது அறிய இயலுமா என்று

வாழ்க்கையின் வளைவுகள் எவ்வளவுதான் என்னை வளைக்குமென்று
 
யப்பா...

கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? என்ற ஓட்டத்துக்கு எத்தனை பக்கங்கள்.. அத்தனையையும் படிக்க நேரம் போதாது..

ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடிகிறது. அந்த ஒன்றுக்கு ‘ஆத்மா’ர்த்தமாக என்றோ, ‘அக்னி’ப் பிரவேசம் என்றோ, ‘ஆதி’யன் பிறபு என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளலாம்.

கடவுள் உண்மை.. என்னில் இருக்கும் உணர்வுகள் எவ்வளவுக்கு உண்மையோ அந்தளவுக்குக் கடவுள் உண்மை.

எனக்கு உணர்வுகள் தந்த அனைத்தையும் கடவுள் தந்ததாக மற்றவர்கள் சொல்கிறார்கள்.

எனவே கடவுள் உணர்வு... உண்மை. கட்டுக்கதை இல்லை.

இந்த இடத்தில் இயற்கை இடைமறித்து இடைஞ்சல் செய்யும். அந்த இயற்கையை எனக்கு அடையாளம் காட்டிய வகையில் இயற்கையை எனக்குத் தந்ததும் என் உணர்வுகள்தான்..

அடித்துச் சொல்வேன்.. கடவுள் உணர்வு.. உணர்வு உண்மை.
 
யப்பா...

கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? என்ற ஓட்டத்துக்கு எத்தனை பக்கங்கள்.. அத்தனையையும் படிக்க நேரம் போதாது..

ஆனால் ஒன்றை மட்டும் சொல்ல முடிகிறது. அந்த ஒன்றுக்கு ‘ஆத்மா’ர்த்தமாக என்றோ, ‘அக்னி’ப் பிரவேசம் என்றோ, ‘ஆதி’யன் பிறபு என்றோ நீங்கள் பெயரிட்டுக் கொள்ளலாம்.

கடவுள் உண்மை.. என்னில் இருக்கும் உணர்வுகள் எவ்வளவுக்கு உண்மையோ அந்தளவுக்குக் கடவுள் உண்மை.

எனக்கு உணர்வுகள் தந்த அனைத்தையும் கடவுள் தந்ததாக மற்றவர்கள் சொல்கிறார்கள்.

எனவே கடவுள் உணர்வு... உண்மை. கட்டுக்கதை இல்லை.

இந்த இடத்தில் இயற்கை இடைமறித்து இடைஞ்சல் செய்யும். அந்த இயற்கையை எனக்கு அடையாளம் காட்டிய வகையில் இயற்கையை எனக்குத் தந்ததும் என் உணர்வுகள்தான்..

அடித்துச் சொல்வேன்.. கடவுள் உணர்வு.. உணர்வு உண்மை.

யப்பா...............

அமரன் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல

தல நீங்க சாதாரண ஆள் இல்ல தல,
 
இங்கு கடவுள் நம்பிக்கையைப் பற்றியும், அழிவுகளைப் பற்றியும் அதிகம் பேசி இருப்பதால் அங்கிருந்தே துவங்குகிறேன்....

பலரும் கேட்கும் கேள்வி..

கடவுள் ஏன் தன் மேல் பக்தி உள்ளவரையும் அழிக்கிறார்?

சரி...

உலகில் பிறந்த அனைவரும் ஏன் இறக்க வேண்டும்?

இதுவரை மனிதன் கண்டறிந்தவற்றில் பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ வாய்ப்பு உண்டு!!

இந்த பூமியில் தோன்றும் ஒரு உயிர் எப்போது தான் மகத்துவம் அடைந்ததாக கருதும்?
தனக்கென ஒரு மகப்பேறை உருவாக்கினால் தானே!!


ஆம், உயிர்கள் உற்பத்தி ஆவதில்லை (produce)...அவை ஒரே விதையிலிருந்து மீண்டும் மீண்டும் உருவாகிறன (reproduce)...
அதனால், தான் இதுவரை மனிதனால் செயற்கை கருவை உருவாக்க முடிந்தாலலும், அந்த கருவைக் கொண்டே இன்னொரு கருவை உருவாக்க முடியவில்லை!!

ஆக, ஒரு உயிர் தன்னில் இருந்து மற்றொரு உயிர் உருவாகினால் தான் மகத்துவம் அடைகிறது....

அப்படி உயிர்கள் உருவாகிக் கொண்டே போனால்....?

அது ஒரு முடிவிலியை (infinite state) நோக்கி செல்லும் என்கிறீர்களா?
இல்லை.. அது சிறிது வருடங்களிலேயே முற்று பெற்று விடும்...

எப்படி? "நிறை அழியாமை" (Conservation of Matter) என்றொரு விதி உண்டு..
அதாவது, இந்த அண்டத்தில் உள்ள மொத்த நிறையின் அளவு மாறாது என்பது தான்!

எனவே, அது தொடர்ந்தாலும், ஒரு கட்டத்தில் , ஒரு செறிவு நிலை (saturation) ஏற்பட்டு
உயிர் பெருக்கம் தேங்கி விடும்!!

அப்போதைய நிலை என்ன?
உயிர் தன் மகத்துவத்தை இழந்து விடும்...
(நிறை இருந்தால் தானே மற்றொரு உயிர் உருவாக!!)

அதுமட்டுமல்ல....
பசி... புசிக்க உணவு இல்லை!!
உயிர்கள் தங்களின் உணவுத்தேவைக்காக மற்ற எந்த உயிரையும் வேட்டையாட தயாராகும்..
தங்களை உருவாக்கிய உயிரையும், தான் உருவாக்கிய உயிரையும்...

ஆனால், மரணம் என்ற ஒன்றே இல்லை எனும் போது எப்படி கொல்வது/ அல்லது எப்படி உண்பது?

உயிர்கள் மொத்தமாக செறிவு நிலையை அடைந்து அதற்கு மேல் வளர்ச்சியின்றி அப்படியே தேங்கி விடும்!!

அதன் பிறகு, உயிருக்கும் உயிரற்ற பொருளுக்கும் என்ன வேறுபாடு?


இந்த நிலையைத் தவிர்க்க தான் கடவுளுக்கு ஒரு யுக்தி தேவைப்பட்டது..
அதன் பெயர் தான் மரணம்...

ஒரு உயிர் மரணிப்பதால் மற்றொரு உயிர் வாழ இந்த பூமியில் இடம் கிடைக்கிறது!!
ஆக,
இந்த பூமியில் ஒரு உயிர் தோன்றுவதற்கு மற்றொரு உயிர் மரிப்பது அவசியமாகிறது!!

எனது விவாதம் சிலருக்கு முட்டாள்தனமாகத் தெரியலாம்..
ஆனால், ஆராய்ந்து பாருங்கள்!!

உங்கள் மூதாதையர் ஒருவர் மீதமின்றி இன்று இருந்தால் உணவுக்கு என்ன செய்வீர்கள்?

அது எப்படி?
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகை எவ்வளவு?
இன்று இருப்பது எவ்வளவு?
என்று கணக்குப் போடாதீர்!!

எண்று எடுத்தாலும், பூமியின் (நிலத்தின்) நிறை நாம் விண்ணில் விட்ட செயற்கைக்கோள்களின் அளவு தான் குறைந்துள்ளது!!
மொத்த பூமி (பூமியின் காந்த விசை செயல்படும் தூரம்) என்று எடுத்தால்..சில வொயேஜர்களும், பயனீர்களும் தான் கம்மியாகி உள்ளது..
அண்டம் என்று எடுத்தால் அதுவும் இல்லை!!

அன்று மரமாக இருந்த நிறை இன்று எரிபொருளாக இருக்கிறது!!
அன்றைய டினோசரின் நிறை இன்று கரியாக கிடைக்கிறது..
நேற்று இறந்த கத்திரிக்காயின் நிறை கழிவுகளைத் தவிர்த்து சக்தி திசுவாய் உங்கள் உடலில் இருக்கிறது!


சரி...
அப்படியெனில்,
கடவுள் உயிர் பெருக்கத்தை மட்டும் தடை செய்யலாமே ?

முடியாது... ஏன்?
அப்படி உயிர் பெருக்கத்தைத் தடை செய்தால் உயிருக்கும் உயிரற்ற பொருளுக்கும் என்ன வேற்பாடு?
உயிர் என்பது தன் மகத்துவத்தை எப்படி அடையும்?

எனவே தான், கடவுளிடம் பக்தியுடன் இருப்பவருக்கும் சரி, அவரை எதிர்ப்பவருக்கும் சரி, அவரை நிந்திப்பவர்களுக்கும் சரி.... மரணமும் ஒன்று போலவே கிடைக்கிறது..
கடவுள் தன்னைத் துதிப்பவர்களிடம் கருணை காட்டி அவர்களை மரிக்காமல் காப்பாற்றினால், அவரைப் பாரபட்சமானவர் என்று மற்றவர்கள் தூற்றுவார்கள்...

எனவே, பாரபட்சமின்றி அனைவரும் பார்ப்பதால் தான் அவர் கடவுள்...

உலகில் ஒருவன் மரணிக்கத் தவறினாலும், அவர் கடவுள் என்கிற மதிப்பை இழந்து விடுவார்!!!


 
சரி...
மரணம் தான் முடிவென்றால், கடவுள் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட வயது அல்லது நிலையில் இறக்கும் படி செய்யலாமே?

அங்கு தான் இன்னொரு சூட்சமம் இருக்கிறது!!

கடவுள் படைத்தவற்றில் மனிதன் தான் மிகுந்த அறிவாளி.. மிகுந்த சுயநலவாதியும் கூட...
மனிதனின் பேராசைகளுள் ஒன்று "சாகாவரம்"

இந்த இந்நிலையில் இன்ன வயதில் மரணம் நிகழும் என்று அறிந்தால் அதைத் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வான்!!
அதைத் தடுக்கவே கடவுள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக இறக்க வைக்க வேண்டியதாயிற்று...

மனிதனால் இன்று வரை தன் மரணத்தைக் காலம் தாழ்த்த முடிந்துள்ளதே தவிர தவிர்க்க முடியவில்லை!!!

இதைத் தான் பல புரானக் கதைகளில் அசுரர்களாகவும், அவர்கள் கேட்கும் சாகாவரமாகவும், அதைக் கடவுள் மிகவும் நிட்பமாக எதிர்கொண்டு அவனைக் கொல்வதையுமாக காட்டுகிறார்கள்..

ஆனால், இந்த கருத்தை மனிதனுக்கு எத்தனை முறை எப்படி சொன்னாலும் புரிவது இல்லை!! கருத்தை எடுத்துக் கொள்ளாமல், மதத்தை எடுத்துக் கொள்கிறான்...

மனிதன் என்ன பாடுபட்டாலும், என்ன சேவை செய்தாலும், ...
சரி...
மரணம் மட்டும் நிச்சயம்!!!

இது எல்லா உயிர்களுக்கும் பொருந்தும்!!


ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய்...
ஒருவருக்கு இயற்கையாக தூக்கத்தில்..
மற்றொருவருக்கு மாரடைப்பால்..
இன்னொருவருக்கு விபத்தால்..
மற்றும் ஒருவரோ ஆட்கொல்லி நோயால்..
வேறொருவருக்கோ சாதாரண புல் தடுக்கலால்!!
சிலருக்கு கொலை; சிலருக்குத் தற்கொலை; வேறு சிலருக்கு தண்டனையாக தூக்கு...
இப்படி பல...

சில சமயம் கடவுளுக்கு ஒவ்வ்வொரு உயிராய் பறிக்க நேரம் இருப்பதில்லை..
அதற்கு அவர் உருவாக்கிய இயற்கை வழிகள் தான் புயல், பூகம்பம், வெள்ளம், இடி-மின்னல், சுனாமி, இன்னும் பல...


என்னடா இப்படி பயமுறுத்துகிறான் என்றூ பார்க்கிறீர்களா?
இது தான் உண்மை..

உண்மை சில சமயம் கசக்கும்.. ஆனால், அதை ஏற்று கொள்ளத் தான் வேண்டும்!!
 
கடவுள் நம்பிக்கை...
நம்பிக்கை

கடவுளை நம்பும் ஒருவருக்கும் கடவுளை நம்பாத ஒருவருக்கும் கடவுள் உண்மையா? கட்டுக்கதையா? என்ற கேள்வி எழுவதே நகைமுரண் இல்லையா?

கடவுள் என்பவன் எல்லாம் படைத்தவன் எல்லாம் தெரிந்தவன் தன்னிகரற்றவன் அவன் திட்டமிட்டபடியே யாவும் நிகழ்கின்றன என்றால்

அவன் விருப்பப்படி நடக்கிறான்?
அதைக் கேள்வி கேட்க நாம் யார்?

நான் கடவுளை நம்புகிறேனா? என்ற நேரடிக்கேள்விக்கு நான் பதில் சொல்லத் தயங்குவது என்னுள்ளிருக்கும் பயத்தாலே....
இந்தப் பயம் பாலோடு ஊட்டப்பட்டது.
 
நான் கடவுளை நம்புகிறேனா? என்ற நேரடிக்கேள்விக்கு நான் பதில் சொல்லத் தயங்குவது என்னுள்ளிருக்கும் பயத்தாலே....
இந்தப் பயம் பாலோடு ஊட்டப்பட்டது.

சத்தியம்..............
 
விதாதம் நன்றாகவே போய் கொன்டு இருக்கிறது.
கடவுளை பற்றி அராய்ச்சி செஞ்சா குழப்பம் தான் வரும். மதங்கள் சொல்வது என்ன கடவுள் சக்தி உண்டு அதை நம்புங்கள், ஏற்றுகொள்ளுங்கள் அவன் தரும் நன்மை தீமைகளை ஏற்று கொள்ளுங்கள் என்று சொல்கிறது.

நம்புங்கள் என்று சொல்வதின் நோக்கம் என்ன நம்பிக்கை என்றால் முழுக்க நம்ப வேன்டும், ஆராய்சி செய்யால் நம்ப வேன்டும். இது தான் கடவுள் நம்பிக்கை. எப்ப சாகறோம் எப்படி சாகிறோம் என்பது மேட்டர் அல்ல நம்பிக்கை உள்ளவர்கள் ஏற்று கொள்ளும் பக்குவம் உள்ளவர்கள் உயிருடன் இருக்கும் வரை மன அமைதியா நிம்மதியா இருப்பார்கள் இதுதானே சிம்பிள் கான்சப்ட்.

மெட்டீரியலிசம், பந்தம், பாசம், ஆசை இப்படி பட்ட விசயங்களில் தான் மனிதன் இயற்கையை உனர அல்லது ஏற்க மறுக்கிறான் இதனால் நிம்மதி இழக்கிறான். அடுத்தவனையும் நிம்மதி இழக்க செய்கிறான். அதிலிருந்து விடுபட விடுபட தான் இயற்கை சக்தி புரியும் கடவுள் புரியும் என்று மதங்கள் தெளிவா தான் சொல்லி இருக்கு.


அடுத்தது ஒரு விசயத்தை தெளிவு படுத்தி விடுகிறேன். முழுக்க ஆத்திகன் நாத்திகன் என்று யாருமே இல்லை. இந்த ஆத்திகன் நாத்திகன் மேட்டரெல்லாம் சந்தர்பத்துக்கு சமயத்துக்கு சூல் நிலைக்கு ஏற்ற மாதிரி நாமாக போட்டு கொள்ளும் வேசங்கள் தான். உன்மையான ஆத்திகன் கடவுளை நம்பி போய்கிட்டே இருப்பான் கடவுள் இருக்கு என்று சொல்லுவான் ஆனால் நிருபிச்சு கிட்டு இருக்க மாட்டான் (ஏன் என்றால் அது சையின்ஸ் அல்ல அது நம்பிக்கை). நாத்திகன் நம்பாம தன் வேலையை பாத்துகிட்டு போய் கிட்டு இருப்பான். நம்மள மாதிரி அரைகுறைகளும் சந்தேக பேர்வழிகளும் தான் இருக்கா இல்லையா விவாதம் செஞ்சு தானும் குழப்பி மத்தவங்களையும் குழப்பி விடுவது

கடவுள் இருந்துட்டு போறாரு அவரை எதுக்கு வனங்கனும் என்று கேட்டா அது மனிதனுக்குள்ள ஒரு கட்டுபாட்டை வளர்க்க தேவைபடுகிறது. வழிபாட்டு தளங்கள் எதுக்கு தேவைபடுது அது மனிதனின் ஒற்றுமையை ஏற்படுத்த அவ்வளவுதான்.

இங்கு மன்ற நன்பர்கள் ஒரு விசயத்தை தெரிஞ்சுகனும். வேதம், சாஸ்திரம் பைபிள் குரான் இன்னும் எதுவாக இருக்கட்டும் அனைத்தும் முழுக்க கற்று உனர்ந்தவர்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. மன்ற நன்பர்கள் மட்டுமல்ல உலகில் எங்குமே முழுக்க கற்று உனர்ந்தவர்கள் கிடையாது.


மதங்கள், கடவுள், வழிபாட்டு தளங்கள், இதிகாசங்கள் மூலம் தான் இன்று பல பிரச்சனை வருது என்று சொல்வது மிக மிக தவறான. பிரச்சனை மதங்களாலோ கடவுளாலோ அல்ல. பிரச்சனைகவள் வருவது நம்புவர்களா நம்பாதவர்களாலோ அல்ல. இடைசொருகலாலும் கூட பிரச்சனை வருவதில்லை.

பிரச்சனை எங்கிருந்து வருது என்று பார்த்தால் நம்புபவதாக நடிப்பவனும் நம்பாதவனாக நடிப்பவனும் செய்யும் விவாதங்கள் தான் ஆதிகாலத்தில் கசப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சோலைவனம் பாலைவனம் பனி பிரதேசம் இப்படி பட்ட இடங்களுக்கு ஏத்த வாழ்கைமுரையை அக்காலத்துக்கு ஏத்த மாதிரி மதங்கள் வழிகாட்டி இருக்கிறது. இதை எடுத்து எல்லா இடங்களிலும் தினிப்பது மற்ற மதங்களை அல்லது கடவுளை மனிதர்கள் மோசம் என்று சொல்வதாலும் தான் கசப்பு வளர்கிறது.

அடுத்தது மதங்கள் சொன்னதை முழுக்க புரிஞ்சுக்காட்டியும் கூட பரவாயில்ல அரைகுறையா புரிஞ்சா கூட பரவாயில்ல. தப்பும் தவறுமா புரிஞ்சுகிட்டா தான் பிரச்சனையே ஆரம்பிக்குது. இப்படி மாற்றி புரிந்து கொன்டவர்களால் தான் உலகில் உள்ள பல பிரச்சனைகளுக்கு மூலகர்த்தா ஆகிறார்கள்.

ரங்கராஜன் அடிகடி குறிப்பிடுகிறார் மதங்களாலும் கடவுளாலும் பிரச்சனை தீவிரவாதம் கலவரம் குண்டுவெடிப்பு வருகிறது என்று அது முற்றிலும் தவறு. வரலாற்றை சிம்பிளாக பார்த்தா பிரச்சனை போர் ஆக்கிரமிப்பு தினிப்பு எல்லாமே அன்று அரசர்களாலும் இன்று சில நாட்டு அரசுகளாலும் நடத்தபடுகின்றன. ஏதோ ஒரு ஆதயத்துக்காக நடத்துகிறார்கள். இதற்க்கு சில அரசியல் சக்திகள் மதத்தின் பெயரை பயன்படுத்துகிறார்கள். மக்கள் மதங்களை தவறாக படிச்சு புரிஞ்சுகிட்டது இவர்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்து விட்டது.

காஷ்மீர் பிரச்சனை இஸ்லாமியர்கள் சம்மந்தபட்ட பிரச்சனை அல்ல இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானுக்கு நேரரி எல்லை அங்கு இருக்கு கொஞ்சம் பயனம் செஞ்சா ரஷ்ய எல்லையும் நமக்கு அருகில் அதை தடுக்க வேன்டும். பிறகு சீனாவுக்கு பாக்கிஸ்தானுக்கு நேரடி எல்லை கரகோம் பாஸ் வழியாக அமைய வேண்டும். இதுக்காக தானே காஷ்மீர் பிரச்சனை இஸ்லாம் ஜிகாத் என்று பெயரில் ஆரம்பமாகி இன்று நடக்கிறது.

ஆப்கானிஸ்தான் ரஷ்யா அமெரிக்கா பிரச்சனை எல்லாம் எதற்காக தலீபனும்க் முஜாயிதினும் உருவாக்கியது எதற்காக கசாப்பியன் பகுதியிலிருக்கும் என்னைவளங்களை சுலபமாக கராச்சி துரைமுகம் வழியாக கொன்டு வர வழிதடம் வேன்டும். அதற்காக தான் குறுக்கே ஆப்கானிஸ்தானில் பல வருடங்களாக பிரச்சனை. ரஷ்யாவுக்கு எதிராக போர் ஜிகாத் என்ற பெயரில் நடத்த பட்டது. பிறகு ஆக்கிரிமிக்க அதே தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்த பட்டது.

இதே காரனம் தான் இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையும். தனக்கு என ஒரு நாடு ஆட்சி செல்வாக்கு அதிகாரம் என்ற ஜின்னாவுக்கு நோக்கம். பெரிய வலுவான நாடாக இந்தியா இருக்க கூடாது என்ற வல்லரசுகளின் நோக்கம். இது தான் பாக்கிஸ்தான் என்ற நாட்டை பிரிக்க மூல காரனம். அதற்க்கு மதம் மற்றும் பல பொய்கதைகள் பயன்படுத்த பட்டது.

ஈராக் போர், இன்று லிபியா நாளை ஈரான் எல்லாம் பெட்ரோலுக்காக நடத்த படுகிறது.

இப்படி டைப் அடிச்சுகிட்டே போனா நேரம் போவதே தெரியாது. ஆனால் வரலாற்றை அறிவுபூர்வமா பார்த்தா தெரியும் கலவரம் தீவிரவாதம் போர் இவை அனைத்துமே சிலரின் சுயநலத்துகாகவும் அல்லது அதை முறியடிப்பதற்காகவுமே நடத்தபட்டன.

இதற்க்கு மதங்களும் கடவுளும் பொருப்பேற்க்க முடியாது. எல்லாமே மனிதன் செயல்.

மனிதனின் கடவுள் நம்பிக்கை குறைய ஆராய்சி மூளை வளர வளர அமைதிக்கும் புரிதலுக்கு ஏற்படுத்திய மதங்களை நம்பாமல் அதிலிருந்து விலக விலக தப்பாக புரிய புரிய மனிதன் சிந்தித்தன் விளைவு தான் தான் இன்றைய கலவரங்களுக்கு பிரச்சனைகளுக்கும் காரனம்

மன்னிக்கவும் இன்று என் பதிவு அனைத்தும் பிரச்சனைகளுக்கு கடவுள் காரனம் அல்ல என்று சொல்லவே பல்கியாயிருச்சு. கடவுள் உன்மையா கட்டுகதையா என்ற விவாதங்களுக்கு பிறகு நான் கலந்து கொள்கிறேன்.

ரொம்ப பேசீட்டனோ?
(இன்னிக்கு ஓவரா விரல் வலிக்க என்னை டைப் அடிக்க வச்ச இந்த ரங்கராஜா மற்றும் நன்பர்கள் இது கடவுள் செயலா அல்லது உங்க லொள்ளு செயலா?)
இன்னொன்னு நான் கடவுளை பற்றி எழுத தான் ஆரம்பித்தேன். ஆனால் அதை விட்டுவிட்டு கலவரம் வரலாறு என்று எதையோ அடிச்சு தொல்லைச்சேன். இது கடவுள் செயலா அல்லது என் லொள்ளு செயலா?
 
இனிமேல் என் வாழ்க்கையில் கடவுள் இருக்கிறாரா இல்லையா போன்ற கேள்விகளுக்கு பதில் தரப்போவதில்லை.. இது சலித்துச் சொல்வதல்ல.... கடவுளை நன்கு புரிந்து கொண்டதால் சொல்கிறேன்.

இருக்கு ஆனா இல்லை/

இந்த ஒற்றை வார்த்தைதான் பதில்.... பார்த்தா காமெடியாத்தான் இருக்கும். ஆனால் பல அர்த்தங்களை உள்ளடக்கியது!!

தாமரை அண்ணாவின் கடவுள் இருக்கிறாரா இல்லையா திரியை ஒருமுறை அனைவரும் படிக்கலாம்!!
 
தாமரை அண்ணாவின் கடவுள் இருக்கிறாரா இல்லையா திரியை ஒருமுறை அனைவரும் படிக்கலாம்!!

சுட்டியை தாருங்கள் ஆதவா
 
உன்மையான ஆத்திகன் கடவுளை நம்பி போய்கிட்டே இருப்பான் கடவுள் இருக்கு என்று சொல்லுவான் ஆனால் நிருபிச்சு கிட்டு இருக்க மாட்டான் (ஏன் என்றால் அது சையின்ஸ் அல்ல அது நம்பிக்கை). நாத்திகன் நம்பாம தன் வேலையை பாத்துகிட்டு போய் கிட்டு இருப்பான். நம்மள மாதிரி அரைகுறைகளும் சந்தேக பேர்வழிகளும் தான் இருக்கா இல்லையா விவாதம் செஞ்சு தானும் குழப்பி மத்தவங்களையும் குழப்பி விடுவது?
வாத்தியாரே... வழக்கம்போல உண்மையை ’டொப்பு’ன்னு போட்டு உடைச்சிட்டு போறீங்களே நியாயமா இது..?:D!

சரி... தற்போதைக்கு கடவுள்பற்றிய என்னோட எண்ணம்..?! பெருசா ஒன்னுமில்லை... கோவப்பட்டா திட்டி தீக்கறதுக்கும்... தேவைப்பட்டா உரிமையோட தோள்ல கைப்போட்டு சுத்தறதுக்கும் எனக்கு கிடைச்ச ஒரு தோழமை கோட்பாடு அவ்வளவுதான்..!!:icon_rollout:
 
வணக்கம்!

இத் தமிழ் மன்றத்திற்கு நான் புதியவன்.

கடந்த ஒர் மணி நேரத்திற்கும் மேலாய் உங்களது இத்திரியை படித்து இப்பொழுதுதான், அடி முடி காணா என்றில்லாமல் கடைசி பக்கத்தைக் கண்டுள்ளேன்.

இம்மன்றத்தில் நான் இணைந்திருந்தாலும், இப்படி ஒர் பதிவை நான் காண்பேன் என்று நினைக்கவில்லை. படித்ததால் பின்னூட்டமும் இடுகிறேன்.

என் கருத்துக்களையும் பதிவிடலாம் என்றால், இம்மன்றம் பற்றி அறியா ஒர் பச்சிளம் குழைந்தையாக நான் இருப்பதால், உங்களை ஒர் திசைக்கு மாற்றிவிடுகிறேன்.

அதாவது இறைவன் இறைவன் என்று தேடி அழையும் நீங்கள் ஏன் சித்தர்களைப் பற்றிய விவரத்தை தேடக்கூடாது?

ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், ஏசு, அல்லா, புத்தன், என பலர் தோன்றுவதற்கு முன்னரே இறைவன் என்ற ஒன்றை தமிழர்களுக்கு சொல்லிவிட்டுச் சென்றவர்கள் இவர்கள்.

ஆம் உண்மை ஏசு, நபி, கௌதம புத்தர், மகாவீரர், சாய்பாபா, ராகவேந்திரர் இவர்கள் யாரும் தாங்கள் கடவுள் என்று கூறவில்லை, என்னோடு வாருங்கள் கடவுளை அடையலாம் என்று தான் கூறினார்கள், நாம் தான் அவர்களை கடவுளாக மாற்றிவிட்டோம்.

இந்த வாசகத்தை நீங்களும் ஏற்றுக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சி.

ஆகையால் சித்தர்கள் பற்றிய தேடலில் நீங்கள் இறங்கினால், இறைவன் என்பவர் எப்படி உருவாக்கப்பட்டார் என்ற உண்மை தெரியும்.

தமிழர்களாகிய நாம் இந்து-கிறிஸ்து-முஸ்லிம் என்ற வட்டத்தினால் சிதறுண்டு போகாமல், சித்தன் வழி என்னும் அவ்வெல்லோர்க்கும் முதன்மையான செய்திகளை தேடுங்கள். என்னும் நிறைய கேள்வியும் பதிலும் கிடைக்கும்.
 
அச்சோ! சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்

என்ற கதையால்லா ஆகிப்போச்சு!

10 நாளா சும்மா கிடந்த திரியில் எண்ணையை ஊத்திப்பிட்டேனா?
 
நண்பரே..

முல்லை முற்றத்தில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளுங்களேன்.

நீங்கள் காட்டிய் திசை உங்களுக்குப் பரிச்சயமானது போலத் தென்படுகிறது. மன்றத்தில் சித்தர்களைப் பற்றி பேசப்பட்டிருக்கு என்றாலும் நீங்களும் உங்கள் பங்குக்கு சொல்லுங்களேன்.
 
நண்பரே..

முல்லை முற்றத்தில் உங்களை அறிமுகஞ் செய்து கொள்ளுங்களேன்.

நீங்கள் காட்டிய் திசை உங்களுக்குப் பரிச்சயமானது போலத் தென்படுகிறது. மன்றத்தில் சித்தர்களைப் பற்றி பேசப்பட்டிருக்கு என்றாலும் நீங்களும் உங்கள் பங்குக்கு சொல்லுங்களேன்.

கண்டிப்பா சொல்லிட்டா போச்சு!

அப்புறம், சித்தர்கள் பற்றி நிறைவான பதில் கொண்டவர்கள் இறைவனை தேட மாட்டார்கள், பார்ப்பார்கள்.

அதற்காக நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என நினைத்துவிட வேண்டாம், நானும் அத்தேடலின் முதல் படிக்கட்டில் இருப்பவன்.
 
Back
Top