ஆதன்,
சிறு தடங்களில் தொடர் முடியவில்லை. சரி விசயத்துக்கு வருவோம் நான் இதை மதத்தின் பெயரால் திசை மற்ற விரும்ப வில்லை. ஆனால் எந்த மதமாக இருந்தாலும் உட்கருத்து என்பது ஒன்றாகத்தான் இருக்கும்.
உங்கள் அனைத்து வாதங்களும் நான் நன்கு உணர்கிறேன். இங்கு ஒரு குழப்பம் என்வென்றால் நான் நிற்கும் புள்ளி வேரூ நீங்கள் நிற்கும் புள்ளி வேராக உள்ளதுதான் பிரச்சனை. நான் இப்பொழுதும் சொல்வது அதுதான்.
நீங்கள் கடவுளை தேடுவது என்பது இந்த வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடியாதது கூடவும் கூடாது. நீங்கள் சொல்லும் இந்த வலி, கொலை, கணவன், மனைவி, நாகரீகம், காசு, பணம், குழந்தை, பெரியவர், சிறியவர், ஆண், பெண், விலங்கு, உயிருள்ளது, உயிரற்றது, ஆசை, கோபம், பாவம், துக்கம், கடமை, புனிதம், அசிங்கம், ஆடை, அவமானம், இழிதல், பழித்தல், கண்ணியம், நேர்மை, பச்சாதபம் இவரோடு ஒப்பிடக் கூடாது கடவுளை.
விலங்குகளை ஒப்பிட்டு மனிதனை காணலாம். மனிதத் தன்மை ஒப்பிட்டு கடவுளைத் தேடாதிர்கள்.
மூன்று வேலை உணவு கொண்டவனுக்கு மலர் அழகு.
மூன்று நாளைக்கு ஒருமுறை மட்டும் உணவை பார்ப்பவனுக்கு பழையசாதம் அழகு
இதற்க்கு ஏன் கடவுள் வரவேண்டும்.
இந்த வாழ்வோடு ஒப்பிட்டு கடவுளை நான் தேடவில்லை, நான் சொல்ல வந்ததே வேறு நிவாஸ் ?
கடவுள் குறித்த ஆன்மிக பகுதியில் என் விவாதங்களை தேடினீர்களானால் புரியும் ?
இவ்வளவுதான் கடவுளா என்று இதே திரியில் உங்களை பார்த்து கேட்டுவிட்டு, வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளோடு நான் எப்படி ஒப்பிடுவேன்..
நான் உங்களுக்கு புரிய வைக்க முயற்சிப்பது ஒன்றே ஒன்று, அது நாம் நினைக்கிற படி மட்டுமே கடவுள் இல்லை..
கந்தபுராணம் உதாரணம் பார்க்கவும்..
இதற்கு முன் உங்களின் கவிதை திரியில், நான் என்பதில் கடவுள் இல்லை என்று நீங்கள் சொன்ன போது இருக்கிறான் என்று வாதிட்டேன், யாம் வேறு நான் வேறு என்று நீங்கள் சொன்ன போது, இல்லை எல்லாம் ஒன்று என்று சொன்னேன்..
காரணம் இருக்கு, கடவுள் இல்லை என்று சொன்னவுடன், என்ன சொல்கிறோம் அது மூடத்தனம், இல்லை என்று சொன்னவனை இருக்கு என்று நம்ப வைக்க முயல்கிறோம், ஏன் முயல்கிறோம் என்று யோசித்து பாருங்களேன், நாம் நம்புவது தப்பாகிவிடோமோ எனும் குற்ற உணர்ச்சி மட்டுமே அதற்கு காரணமாக இருக்கிறது, இல்லை என்று சொல்பவனை மூடன் என்று சொல்லும் அளவுக்கு கடுமையான செல்கிறோமில்லையா ?
எல்லாம் அவனுக்கு என்று சொன்ன நீங்கள், இல்லை என்று சொல்வதை மூடத்தனம் என்று எப்படி வர்ணித்தீர்கள் ?
காரணம் இருக்கு, நாம் யாவரும் நம்மைவிட, நம்மை சார்ந்தவர்களைவிட, மதம், சாதி, கடவுளை அதீதம்மிக நேசிக்கிறோம், அந்த நேசிப்பின் உணர்வே, இந்த விவாதங்கள்..
போதிமரம் என்றால் புத்தன் நினைவுக்கு வருகிறான், புத்தன் என்றால் கண் மூடிய ஒரு சிலை ஞாபகத்துக்கு வருகிறது, யாருக்கும் புத்தன் என்றால் விழிப்புணர்வு என்று நியாபகத்துக்கு வருவதே இல்லை..
கௌத்தம புத்தனின் கதை ஒன்றை உதாரணம் சொன்னீங்க, அதை பற்றி பேசினப்ப, எந்த மாயாஜாலமும் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று சொன்னீங்க..
புத்தனை பற்றி பேசிவிட்டு, மாயாஜாலம் செய்யாமல் கடவுள் ஆனவன் என்று யோசிப்பதே தவறான அணுகு முறையில்லையா, ஆசைப்படாதே என்று சொன்னவன், எப்படி மாயாஜாலம் செய்வன், எப்படி போன ஒரு உயிரை கொண்டு வருவான் ?
அந்த தாய் புத்தனை புரிந்து கொள்ளவில்லை, ஒரு வேளை புரிந்து கொண்டிருந்தால் அங்கு சென்றிருக்க மாட்டார். நாமும் அவனை புரிந்து கொள்ளவில்லை, அதனால்தான் ஆசைப்படாமல் இருக்க ஆசைப்பட்டார் புத்தன் என்று தத்துவம் பேசுகிறோம் இல்லையா ?
இது போலத்தான் கிரிஷ்ணரில் இருந்து, அனைவரையும் தப்பாக புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறோம்..
இஸ்லாத்தில் வஹி என்று சொல்வார்கள், வஹி என்றால் செய்தி..
இஸ்லாத் என்றவுடனே நினைவுக்கு வருவது இதுதான், உலகிலேயே தான் வாழும் காலத்தில் ஒரு மதத்தை தோற்றுவித்து, அதை ஒரு நாடு முழுக்க அல்லது சில நாடு முழுக்க பரப்பிய பெருமை நபிக்கு மட்டுமே சேரும், இதுவரை எந்த நெறியும் இப்படி பரவியதில்லை..
வஹி எனும் செய்தியாவது, அல்லாவிடம் இருந்து நபிக்கு வரும், நபி என்றால் தூதன் என்று பொருள். அவர் நபி என்பதே அவருக்கு 40 வயதான பிறகுதான் தெரியும் சரிங்களா ?
அந்த வஹியாவது அந்த குறிப்பிட்ட காலக்கட்டதுக்கு ஏற்றது, உதாரணமா ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம், புனித போரான ஜிகாத் நடந்து கொண்டிருந்த காலத்தில், பலரும் உயிரிழந்தார்கள், துணையில்லாமல் பெண்களும் குழந்தைகளும், பெரிதும் துயருற்றார்கள், சிலபலர் பல கொடுமைக்கும் ஆளானார்கள், தவறானவர்களால் பாதுக்காப்பில்லாமல் வதைக்கப்பட்டார்கள், அதை பார்த்த நபி, ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னார், அதனால் இனப்பெருக்கமும் நிகழும் இல்லையா அதனால் சொன்னார், அதையே இன்று கடைபிட்டிப்பது எவ்வளவு சரி சொல்லுங்கள்..
இது போலத்தான் எல்லா நெறிகளும் இருக்கும் இறைசெய்தியிலும் ஒரு கருத்திருக்கும், வஹி என்பது ஒவ்வொரு காலக்கட்டத்தில் இறங்குவது, பெரியார் சொன்ன கடவுள் இல்லை கொள்கை கூட இறைசெய்தி தான் என்னை பொருத்தவரை..
கடவுள் எங்கும் இருக்கிறான் என்றால் அவன் பெரியாரியத்திலும் இருக்கிறான், கம்யூனிசத்திலும் இருக்கிறான், மாலியத்திலும் இருக்கிறான், சிவ இயத்திலும் இருக்கிறான், கிறிஸ்துவத்திலும் இருக்கிறான், அல்லா இயத்திலும் இருக்க்கிறான், இன்ன பிற கடவுள்களிலும் இருக்கிறான்..
இல்லை என்பது தவரு என்பது உங்கள் வாதம், இல்லை என்பதிலும் கடவுள் இருக்கிறான் என்பது என் வாதம்..