நண்பர்
திரு .ரங்கராஜன் அவர்களுக்கு எனது வணக்கங்கள்
உங்கள் ஆக்கம்
கடவுள் இருக்கிறானா இல்லையா, இல்லையா என்பது ஆராய்வது இந்த திரியின் நோக்கம் அல்ல, ...... அது முடியவும் முடியாது..... தலைப்பு அப்படி இருந்தும், இதில் நாம் பேசப் போவது அதை சார்ந்த மற்ற பல விஷயங்களை தான் .......இந்த விஷயத்தை சென்டிமென்டாக பார்க்காமல், கடவுள் என்ற சக்தியை விஞ்ஞானப் பூர்வமாகவும், மெய்ஞானப்பூர்வமாக பார்க்க விரும்பப்படுகிறேன்..
நண்பரே , நீங்கள் கடவுள் சார்ந்த விசயத்தைப் பற்றி மட்டும் ஆராய்ச்சி செய்ய விழைந்திருக்கிறீர்கள் .
ஆனால் நான் , கடவுள் என்ற ஒரு கருத்தை , நம்பிக்கையின் ஆதாரத்தை ஆராய்ச்சி செய்ய எண்ணுகிறேன் .
எனது இந்த எண்ணம் முட்டாள்தனமானது என்றுகூட நீங்கள் நினைக்கலாம் . கடவுளை ஆராய்வது என்பது எந்த மனிதனாலும் இயலாத காரியம் என்றும் நீங்கள் நினைக்கலாம் .
ஆனால் நண்பரே , மனிதன் தொடர்ந்து முயற்சி செய்து செய்தேதான் ஒவ்வொன்றாய் இந்த உலகில் கண்டு பிடித்தான் . தன்னால் முடியாது என்று அவன் நினைத்து இருந்தால் இந்த உலகில் நாம் இன்று நிதர்சனமாய் காணும் உண்மைகள் நம் அறிவுக்கு எட்டாமலே போயிருக்கும் .
எனவே எவ்வளவு பெரிய காரியமானாலும் , அதை முயன்றுதான் பார்ப்போமே என்றுதான் நான் நினைத்து என் ஆக்கங்களை படைத்து இருக்கிறேன்
ஒரு பொருளோ அல்லது ஒரு கோட்பாடோ , ஒரு கொள்கையோ , எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிருபிக்கப் பட்டால்தானே பின் தொடர்ந்து அதனை சார்ந்த விசயங்களை ஆராயமுடியும் .
இங்கு கொள்கையே , கோட்பாடே நிரூபணம் ஆகாமல் கேள்விக்குறியுடன் நின்றால் பின் எப்படி , எதன் அடிப்படையில் அந்த கோட்பாடை சார்ந்த விசயங்களை ஆராய்வது ?
கடவுள் இங்குதான் இருக்கிறார் , அவர் இப்படிதான் இருக்கிறார் , இன்ன வேலைதான் அவர் செய்துகொண்டு இருக்கிறார் என்று யார் ஒருவராலும் மற்றொருவருக்கு நிருபித்து காட்ட முடியாது . நான் இதை ஒத்துக் கொள்கிறேன் .
ஆனால் " இந்த ஒரு நிகழ்வின் காரணமாக நான் ஆணித்தரமாக சொல்கிறேன் , இந்த உலகில் கடவுள்தன்மை என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது " என்று எவரேனும் ஏதாவது ஒரு நிகழ்வை உதாரணத்திற்கு கூறி கடவுள் மீது அசைக்க முடியாத , மறுக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும் நமக்கு என்பதே என் எண்ணம் . இவ்வாறு மறுக்க இயலாத நம்பிக்கை கடவுள் மீது வந்தால்தானே பின் அவர் சார்ந்த விசயங்களை ஆராயமுடியும்
உங்கள் கருத்து
பல சம்பவங்களையும் கருத்துகளையும் சொல்லி விட்ட இந்த வாக்கியத்தை நீங்கள் எழுதியது உங்களின் கருத்தில் நீங்கள், நிலையாக இல்லை என்பதைப் போல இருக்கிறது..
ஆம் நண்பரே , நான் என் கருத்தில் நான் நிலையாக இல்லை .
நான் , கடவுளே இல்லை என்று கூறி எனது இந்த கருத்துதான் மிகச் சரியானது என்று வாதாடித விரும்பவில்லை .
அதே சமயம் என் தரப்பு வாதத்தை வெறுமனே மேம்போக்காக எவ்வித நிரூபணமும் இல்லாமல் கூறாமல் , தக்க ஆதரங்களுடன் , சம்பவங்களின் அடிப்படையில் கூற விரும்பினேன் .
எனவே தான் பல சம்பவங்களை இங்கு கூறியிருக்கிறேன்
கடவுள் நம்பிக்கை பொய்யாய் போய்விட்ட சம்பவங்களை நான் இங்கு எடுத்து கூறியிருக்கிறேன் . இதேபோல் கடவுள் இருக்கிறார் , அவர் தன்னை நம்பியவரை காப்பாற்றத்தான் செய்கிறார் என்பதை எவரேனும் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் எடுத்து கூறுவாரேயானால் நான் நிச்சயம் கடவுள் மீது நம்பிக்கை கொள்வேன் .
எனது இந்த முயற்சி , கடவுளைப் பற்றி நான் தெளிவான விசயங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதே
எனது கருத்து
எனவே நமக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒருவன் இருக்கிறானா ? அல்லது இல்லையா ? என்ற ஆராய்ச்சியே தேவை இல்லை
நண்பரே , நான் இவ்வாறு கூறியதால்
உங்கள் மனம் வருந்தியிருந்தால் , இந்த சிறியவனை மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .
தங்களது இந்த திரியே தேவை அற்றது என்ற அர்த்தத்தில் நான் இதை கூறவில்லை . தவறாக நினைத்துக் கொள்ளவேண்டாம் .
நான் கூறிய அந்த வார்த்தைகள் , கடவுள் மீதான எனது ஆதங்கத்தினால் எழுதப்பட்ட வார்த்தைகளே .
நல்லவர்கள் துன்பத்தினால் வருந்தி வாடுவதும் , பொல்லாதோர் சீருடனும் , சிறப்புடனும் வாழ்வதும் இன்றைய உலகில் மிக யதார்த்தமாக நாம் காண்கின்ற ஒன்றாக இருக்கிறது .
ஏன் இந்த நிலைமை ? ஏன் கடவுள் நல்லவர்களை காத்து இரட்சிக்காமல் , பொல்லோருக்கு துணையாக நிற்கிறான் ?
என்று மனம் வெதும்பி , நல்லவர்களுக்கு உதவாத கடவுள் இருந்தால் என்ன ? இல்லாமல் போனால் என்ன ? என்ற விரக்தியின் காரணமாக எழுதப்பட்ட வார்த்தைகள்
"
இந்த பூவுலகில் ஒருவேளை சோற்றுக்கு மனிதனை தவிக்கவிட்டுவிட்டு அவன் பட்டினியால் இறந்தபின்பு அவனுக்கு சொர்கலோகத்தில் இடமளிப்பேன் என்று சொல்லும் கடவுளை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் "
இதை கூறியது
சுவாமி விவேகனந்தர்
உங்கள் கருத்து
உங்களை வழிநடத்துவது எது, எதோ ஒரு
சக்தியா
விதியா
மெய்ஞானமா
விஞ்ஞானமா
அல்லது
கடவுளா...
நண்பரே , நானும் அதையேதான் கேட்கிறேன் விடை தெரிந்துகொள்ளும் ஆவலுடன் .
உங்களுக்கு விடை தெரிந்தால் கூறுங்கள் , நான் அதை மறுக்க இயலாதபடியான நிகழ்வுகளின் அடிப்படையில் .
உங்களது விளக்கமான பதில் மனத்தெளிவை ஏற்படுத்துமானால் எனக்கு மிக்க மகிழ்ச்சியே .
நானே இப்படி ஒரு திரியை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்து நம் மன்றத்திற்கு வந்தேன் . எனக்கு முன் நீங்கள் இந்த திரியை உருவாக்கி , எனக்கு உதவி இருக்கிறீர்கள் .
தங்களுக்கு நன்றிகள் பல .