நல்ல விவாதம்தான். இதில் கலந்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே.
கடவுள்..அதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.
ஒருசில கணங்களில் நம்மை அறியாமல் நடந்துவிடும் சில செயல்களில் , நம்சக்தியைத் தாண்டிய ஒரு காரியத்தை நாம் செய்துவிடிருக்கக் கூடும். அல்லது பிறர் நமக்கு செய்திருக்கக் கூடும். இதில் நாம் வியப்பது என்னவென்றால், மனித சக்தியென்று நாம் வரையறுத்த எல்லையை மீறி இச்செயல்கள் நடப்பதால் இன்னொரு சக்தி கண்டிப்பாக இதில் இடைப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான்.
நமக்கு புரிபடாத செயல்கள், சக்திகள், உண்மைகள் எல்லாம் நம்மை ஒரு முடிவிற்கு வர வைக்கிறது. அதுவே கடவுள். பாம்பின் விஷத்தில் மரணம் கண்டவுடன் பாம்பை வணங்கினோம். இடியின் ஓசையும் மின்னலின் ஒளியும் பயமுறுத்தியதால் அதையும் வணங்கினோம். அடிமைகளாக வாழ்ந்து தவித்தவர்களுக்கு விடிவெள்ளியாக வந்து விடியலுக்கு வித்திட்டவர்கள் கடவுள் ஆனார்கள். மன அமைதியில்லாமல் தவித்த மனிதனுக்கு அமைதியின் தத்துவத்தை போதித்து வாழ்ந்தவர்கள் கடவுள் ஆனார்கள். யாரும் கண்டிராத விண்ணுலகம் பற்றிப் பேசி அதற்கான கோட்பாடுகளை வகுத்தவர்கள். மனிதர்களில் இருந்து வேறுபட்டமையால். கடவுள் ஆனார்கள்.
நல்லொழுக்கம் அனைவருக்கும் நல்வாழ்வைத் தரும் அதை பின்பற்றவேண்டும், ஆனால் அதை மறுப்பவர்களை என்ன செய்வது. எனவே ஒழுக்கம் மோட்சம் தரும், ஒழுக்கமின்மை நரகம் தரும் என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
புரியாத சக்திகள் உலகில் உள்ளவரை கடவுள்களும் அதனை தாங்கிவரும் தூதுவர்களும் மக்களிடம் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.
கடவுள்..அதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.
ஒருசில கணங்களில் நம்மை அறியாமல் நடந்துவிடும் சில செயல்களில் , நம்சக்தியைத் தாண்டிய ஒரு காரியத்தை நாம் செய்துவிடிருக்கக் கூடும். அல்லது பிறர் நமக்கு செய்திருக்கக் கூடும். இதில் நாம் வியப்பது என்னவென்றால், மனித சக்தியென்று நாம் வரையறுத்த எல்லையை மீறி இச்செயல்கள் நடப்பதால் இன்னொரு சக்தி கண்டிப்பாக இதில் இடைப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான்.
நமக்கு புரிபடாத செயல்கள், சக்திகள், உண்மைகள் எல்லாம் நம்மை ஒரு முடிவிற்கு வர வைக்கிறது. அதுவே கடவுள். பாம்பின் விஷத்தில் மரணம் கண்டவுடன் பாம்பை வணங்கினோம். இடியின் ஓசையும் மின்னலின் ஒளியும் பயமுறுத்தியதால் அதையும் வணங்கினோம். அடிமைகளாக வாழ்ந்து தவித்தவர்களுக்கு விடிவெள்ளியாக வந்து விடியலுக்கு வித்திட்டவர்கள் கடவுள் ஆனார்கள். மன அமைதியில்லாமல் தவித்த மனிதனுக்கு அமைதியின் தத்துவத்தை போதித்து வாழ்ந்தவர்கள் கடவுள் ஆனார்கள். யாரும் கண்டிராத விண்ணுலகம் பற்றிப் பேசி அதற்கான கோட்பாடுகளை வகுத்தவர்கள். மனிதர்களில் இருந்து வேறுபட்டமையால். கடவுள் ஆனார்கள்.
நல்லொழுக்கம் அனைவருக்கும் நல்வாழ்வைத் தரும் அதை பின்பற்றவேண்டும், ஆனால் அதை மறுப்பவர்களை என்ன செய்வது. எனவே ஒழுக்கம் மோட்சம் தரும், ஒழுக்கமின்மை நரகம் தரும் என்ற விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.
புரியாத சக்திகள் உலகில் உள்ளவரை கடவுள்களும் அதனை தாங்கிவரும் தூதுவர்களும் மக்களிடம் வந்துகொண்டேதான் இருப்பார்கள்.