தாமரை
Facebook User
நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்களுக்காக இந்தத் திரி..
பல சுவையான விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்வோமாக.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் சென்ற வருடப் போட்டியில் நூலிழையில் வெற்றிக்கனியை தவறவிட்டது ஞாபகம் இருக்கலாம்.
சரி சரி
இந்த வருஷம் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விபரம் இங்கே
http://www.chennaisuperkings.com/Players/PlayersHome.aspx
துவக்க ஆட்டக்காரர்கள்
1. மேத்தீவ் ஹெய்டன்
இந்த வருடம் அனைத்து போட்டிகளிலும் விளையாடப் போகிறார் ஹெய்டன். வெல்டன் என்று சொல்ல வைப்பார் என்று எண்ணுகிறேன்.
உறுதியான துவக்கம் என்பது அனைத்து வகைப் போட்டிகளிலும் முக்கியமானது. ரன் வேகத்தை மட்டுப்படுத்த முக்கிய பந்துவீச்சாளர்களின் ஓவர்களைக் கபளீகரம் செய்யும் வாய்ப்பு முதல் நான்கு வீரர்களுக்கு உண்டு. இவரது துவக்கம் அணிக்கு உறுதியைத் தரும்.
2. பார்த்தீவ் படேல் / முரளி விஜய் / வித்யூத் சிவராமகிருஷ்ணன்
பார்த்தீவ் படேல் அல்லது முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கலாம். பார்த்தீவ் படேல் சென்ற வருடம் ஹெய்டனும் சற்று நன்றாகவே விளையாடினார். சிவராமகிருஷ்ணனும் ஒரு ஆட்டத்தில் சோபித்தார், இருந்தாலும் இந்த இடம் பார்த்தீவ் படேலுக்கு கிடைக்கக் கூடும்.
அபினவ் முகுந்த் சென்ற வருட ரஞ்சிப் போட்டிகளில் நன்கு விளையாடி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை
3. சுரேஷ் ரெய்னா
சென்ற வருடம் கலக்கிய கலக்கல் மறந்திருக்காது.
4. அல்பி மோர்கல்
இவரும் அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு உள்ளவர். இவருடைய ஆல்ரவுண்டர்த்தனம் அதுவும் தென்னாப்பிரிக்காவில் மிகவும் உதவும்.
5. ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப் / ஜேக்கப் ஓரம்.
முதல் ஏழெட்டு ஆட்டங்களுக்கு ஃபிளிண்டாஃபும் அதன் பின் ஜேக்கப் ஓரமும் விளையாடலாம். ஓரம் ஓரவஞ்சனை செய்து விட்டால் இந்த இடத்தில் ஒரு மட்டையாளர் (பெய்லி) சேர்க்கப்படலாம்.
6. பத்ரிநாத்
சென்ற வருடத்தில் மின்னிய இன்னொரு நல்ல பேட்ஸ்மென். இந்த வருடமும் கலக்குவார்.
7. தோனி
எதாவது சொல்லணுமா என்ன?
8. மன்பிரீத் கோனி
இவர் சென்ற வருடம் கலக்கினார். இந்த வருடம் உறுதியான இடம் பிடிப்பார்.
9. பாலாஜி / ஜோகிந்தர்சர்மா / பழனி அமர்நாத்
பாலாஜிக்கு அதிக வாய்ப்புண்டு.. மற்றபடி ஜோகிந்தர் ஷர்மா அல்லது பழனி அமர்நாத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம். .பழனி அமர்நாத் சென்ற வருடம் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.
10. முரளிதரன் / சுதீப் தியாகி / அஸ்வின்
முரளிதரன் இரண்டு நல்ல ஆல்ரவுண்டர்கள் இல்லாத பொழுது களமிறக்கப்படலாம். அஸ்வின் தோனியின் கணக்கில் எங்கே இருக்கிறார் என்று புரியவில்லை. சுழல் பந்து வீச்சு அவசியம், முரளீதரன் இல்லை என்றால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சுதீப் தியாகி பற்றிய நல்ல கணிப்புகள் உள்ளன. சென்ற வருடம் உடல்நிலை (ஸ்டிரெஸ் ஃப்ராக்சர்) காரணமாக விளையாடவில்லை. இம்முறை வாய்ப்பு கிடைக்கும்.
11. மக்கையா ந்டினி / திலன் துஷாரா
ஆடப்போவது ஆப்பிரிக்காவில் என்பதால் ந்டினி கண்டிப்பாக இடம் பிடிப்பார், இவரும் தொடர் முழுவதற்கும் ஆடுவார். அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை அல்லது அவர் காயம் பட்டான் திலன் துஷாரா இடம் பெறுவார்.
ஆரம்பகட்ட போட்டிகளில் வெற்றிகள் குவிக்கப்பட்டு செமிஃபைனல் இடம் உறுதியானால் மிச்சமிருக்கும் அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். அனிருத் ஸ்ரீகாந்த் எப்படியாவது ஓரிரு வாய்ப்புகள் பெறுவார் என்று நினைக்கிறேன். இம்முறையாவது அவர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் அது அவருடைய எதிர்காலத்தைப் பாதிக்கும். சென்ற ஐபிஎல் லில் ஒரு ஆட்டத்தில் வாய்ப்புக் கிடைத்ததில் 7 பந்துகளைச் சந்தித்து ஒரே ஒரு ரன் எடுத்தார், அவர் ஆறு பந்துகள் திணறி 7 ஆவது பந்தில் ஆட்டமிழந்த முறைதான் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் செய்தது. அளவு குறைவாக வீசப்பட்டு ஆஃப்சைடில் எழும்பி வந்த பந்தை முன்னோக்கி வந்து புல் செய்ய முயன்று அது மட்டையின் விளிம்பில் பட்டு கவர் பாயிண்ட் திசையில் பிடி கொடுத்தார். அந்தப் ஷாட் ஆடக்கூடிய நிலையில் அவர் இல்லை.
இம்முறை வாய்ப்பி கிடைக்குமா?
இது என்னுடைய ஆரம்பக் கணிப்பு.
தோனியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் அவர் எப்பொழுது இறங்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். எனவே அவர் மூன்றாமிடத்திலிருந்து ஏழாமிடம் வரை எப்போது வேண்டுமானாலும் களமிறங்கலாம்.
சூப்பர் கிங்க்ஸ் அனைத்து வீரர்களையும் தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. எனவே யாருக்கு வேண்டுமானாலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்த வருடம் இரண்டு ஆல்ரவுண்டர்களைச் சேர்ப்பதால் யாராவது பந்து வீச்சில் வலுவின்றி இருந்தால் சமாளிக்கலாம் என்பது எண்ணம்.
பேட்டிங்கில் வலுவாக இருப்பதால் (கோனி கூட விளாசுகிறாராம்) 4 பௌலர்கள் 2 ஆல்ரவுண்டர்கள் என்று அமைத்துக் கொள்வது நல்லது என நினைக்கிறேன். அல்லது ஒரு பௌலர் குறைக்கப்பட்டு ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் அதாவது ஐன்ஸ்டீன், விராஜ் கட்பே போல ஒருவர் சேர்க்கப்பட வாய்ப்பும் உண்டு. நிரூபிக்கப் பட்ட பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் (ஜெயசூர்யா, சேவக், யுவராஜ் சிங், யூசுஃப் பதான் போன்றவர்கள்) சென்னை கிங்க்ஸ் அணியில் இல்லாமல் இருப்பது ஒரு சின்னக் குறை, அது இதுபோன்ற அருமையான ஒரு வாய்ப்பை இழக்க வைக்கிறது.
அலசல்கள் தொடரும்.
பல சுவையான விஷயங்களை இங்கு பகிர்ந்து கொள்வோமாக.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் சென்ற வருடப் போட்டியில் நூலிழையில் வெற்றிக்கனியை தவறவிட்டது ஞாபகம் இருக்கலாம்.
சரி சரி
இந்த வருஷம் எப்படி இருக்கும் என்று பார்ப்போமா?
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி விபரம் இங்கே
http://www.chennaisuperkings.com/Players/PlayersHome.aspx
துவக்க ஆட்டக்காரர்கள்
1. மேத்தீவ் ஹெய்டன்
இந்த வருடம் அனைத்து போட்டிகளிலும் விளையாடப் போகிறார் ஹெய்டன். வெல்டன் என்று சொல்ல வைப்பார் என்று எண்ணுகிறேன்.
உறுதியான துவக்கம் என்பது அனைத்து வகைப் போட்டிகளிலும் முக்கியமானது. ரன் வேகத்தை மட்டுப்படுத்த முக்கிய பந்துவீச்சாளர்களின் ஓவர்களைக் கபளீகரம் செய்யும் வாய்ப்பு முதல் நான்கு வீரர்களுக்கு உண்டு. இவரது துவக்கம் அணிக்கு உறுதியைத் தரும்.
2. பார்த்தீவ் படேல் / முரளி விஜய் / வித்யூத் சிவராமகிருஷ்ணன்
பார்த்தீவ் படேல் அல்லது முரளி விஜய்க்கு வாய்ப்பு கிடைக்கலாம். பார்த்தீவ் படேல் சென்ற வருடம் ஹெய்டனும் சற்று நன்றாகவே விளையாடினார். சிவராமகிருஷ்ணனும் ஒரு ஆட்டத்தில் சோபித்தார், இருந்தாலும் இந்த இடம் பார்த்தீவ் படேலுக்கு கிடைக்கக் கூடும்.
அபினவ் முகுந்த் சென்ற வருட ரஞ்சிப் போட்டிகளில் நன்கு விளையாடி இருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை
3. சுரேஷ் ரெய்னா
சென்ற வருடம் கலக்கிய கலக்கல் மறந்திருக்காது.
4. அல்பி மோர்கல்
இவரும் அனைத்து போட்டிகளிலும் ஆட வாய்ப்பு உள்ளவர். இவருடைய ஆல்ரவுண்டர்த்தனம் அதுவும் தென்னாப்பிரிக்காவில் மிகவும் உதவும்.
5. ஆண்ட்ரு ஃபிளிண்டாஃப் / ஜேக்கப் ஓரம்.
முதல் ஏழெட்டு ஆட்டங்களுக்கு ஃபிளிண்டாஃபும் அதன் பின் ஜேக்கப் ஓரமும் விளையாடலாம். ஓரம் ஓரவஞ்சனை செய்து விட்டால் இந்த இடத்தில் ஒரு மட்டையாளர் (பெய்லி) சேர்க்கப்படலாம்.
6. பத்ரிநாத்
சென்ற வருடத்தில் மின்னிய இன்னொரு நல்ல பேட்ஸ்மென். இந்த வருடமும் கலக்குவார்.
7. தோனி
எதாவது சொல்லணுமா என்ன?
8. மன்பிரீத் கோனி
இவர் சென்ற வருடம் கலக்கினார். இந்த வருடம் உறுதியான இடம் பிடிப்பார்.
9. பாலாஜி / ஜோகிந்தர்சர்மா / பழனி அமர்நாத்
பாலாஜிக்கு அதிக வாய்ப்புண்டு.. மற்றபடி ஜோகிந்தர் ஷர்மா அல்லது பழனி அமர்நாத்திற்கு வாய்ப்பு கிடைக்கலாம். .பழனி அமர்நாத் சென்ற வருடம் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை.
10. முரளிதரன் / சுதீப் தியாகி / அஸ்வின்
முரளிதரன் இரண்டு நல்ல ஆல்ரவுண்டர்கள் இல்லாத பொழுது களமிறக்கப்படலாம். அஸ்வின் தோனியின் கணக்கில் எங்கே இருக்கிறார் என்று புரியவில்லை. சுழல் பந்து வீச்சு அவசியம், முரளீதரன் இல்லை என்றால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம். சுதீப் தியாகி பற்றிய நல்ல கணிப்புகள் உள்ளன. சென்ற வருடம் உடல்நிலை (ஸ்டிரெஸ் ஃப்ராக்சர்) காரணமாக விளையாடவில்லை. இம்முறை வாய்ப்பு கிடைக்கும்.
11. மக்கையா ந்டினி / திலன் துஷாரா
ஆடப்போவது ஆப்பிரிக்காவில் என்பதால் ந்டினி கண்டிப்பாக இடம் பிடிப்பார், இவரும் தொடர் முழுவதற்கும் ஆடுவார். அவரால் சரியாக சோபிக்க முடியவில்லை அல்லது அவர் காயம் பட்டான் திலன் துஷாரா இடம் பெறுவார்.
ஆரம்பகட்ட போட்டிகளில் வெற்றிகள் குவிக்கப்பட்டு செமிஃபைனல் இடம் உறுதியானால் மிச்சமிருக்கும் அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். அனிருத் ஸ்ரீகாந்த் எப்படியாவது ஓரிரு வாய்ப்புகள் பெறுவார் என்று நினைக்கிறேன். இம்முறையாவது அவர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாவிட்டால் அது அவருடைய எதிர்காலத்தைப் பாதிக்கும். சென்ற ஐபிஎல் லில் ஒரு ஆட்டத்தில் வாய்ப்புக் கிடைத்ததில் 7 பந்துகளைச் சந்தித்து ஒரே ஒரு ரன் எடுத்தார், அவர் ஆறு பந்துகள் திணறி 7 ஆவது பந்தில் ஆட்டமிழந்த முறைதான் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் செய்தது. அளவு குறைவாக வீசப்பட்டு ஆஃப்சைடில் எழும்பி வந்த பந்தை முன்னோக்கி வந்து புல் செய்ய முயன்று அது மட்டையின் விளிம்பில் பட்டு கவர் பாயிண்ட் திசையில் பிடி கொடுத்தார். அந்தப் ஷாட் ஆடக்கூடிய நிலையில் அவர் இல்லை.
இம்முறை வாய்ப்பி கிடைக்குமா?
இது என்னுடைய ஆரம்பக் கணிப்பு.
தோனியைப் பொறுத்தவரை பேட்டிங்கில் அவர் எப்பொழுது இறங்க வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார். எனவே அவர் மூன்றாமிடத்திலிருந்து ஏழாமிடம் வரை எப்போது வேண்டுமானாலும் களமிறங்கலாம்.
சூப்பர் கிங்க்ஸ் அனைத்து வீரர்களையும் தென்னாப்பிரிக்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளது. எனவே யாருக்கு வேண்டுமானாலும் விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம்.
இந்த வருடம் இரண்டு ஆல்ரவுண்டர்களைச் சேர்ப்பதால் யாராவது பந்து வீச்சில் வலுவின்றி இருந்தால் சமாளிக்கலாம் என்பது எண்ணம்.
பேட்டிங்கில் வலுவாக இருப்பதால் (கோனி கூட விளாசுகிறாராம்) 4 பௌலர்கள் 2 ஆல்ரவுண்டர்கள் என்று அமைத்துக் கொள்வது நல்லது என நினைக்கிறேன். அல்லது ஒரு பௌலர் குறைக்கப்பட்டு ஒரு பேட்டிங் ஆல்ரவுண்டர் அதாவது ஐன்ஸ்டீன், விராஜ் கட்பே போல ஒருவர் சேர்க்கப்பட வாய்ப்பும் உண்டு. நிரூபிக்கப் பட்ட பேட்டிங் ஆல்ரவுண்டர்கள் (ஜெயசூர்யா, சேவக், யுவராஜ் சிங், யூசுஃப் பதான் போன்றவர்கள்) சென்னை கிங்க்ஸ் அணியில் இல்லாமல் இருப்பது ஒரு சின்னக் குறை, அது இதுபோன்ற அருமையான ஒரு வாய்ப்பை இழக்க வைக்கிறது.
அலசல்கள் தொடரும்.
Last edited: