திரு அப்துல் கலாம் (1931- 2015)

ravisekar

New member
தமிழர் அறிவின் பெருமைச் சின்னம்
உயர்பதவி இந்தியரின் எளிமைக்கு (இறுதி?) உதாரணம்
கனவு காணுதலை சுடர் ஏற்றிய உத்வேகி
இளந்தலைமுறைக்கு உரம் கூட்டிய கர்மயோகி


இனி இப்படி ஒரு நற்குணங்கள் ததும்பும் மனிதர் தோன்ற பாரதத்தாய் எத்தனை நாள் காத்திருக்க வேண்டுமோ?
 
திரு அப்துல் கலாம் அவர்களின் அக்னி சிறகுகள் நூலிலிருந்து சில வரிகளை இங்கே நினைவு கூர்கிறேன்.


யாருமே தங்களை அற்பமானவர்கள் என்றோ நிராதவனவர்கள் என்றோ எப்போதும் நினைக்க கூடாது


நாம் அனைவருமே நமக்குள்ளே ஒரு தெய்வீக அக்னியுடன் பிறந்திருக்கிறோம். இந்த அக்னியை கொழுந்து விட வைத்து

அதன் பொன்னொளியை இந்த உலகத்தில் பரப்புவதற்காக முனைவது நமது கடமை


.........வெற்றி பெறவேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பது தான் வெற்றிக்கான சிறந்த வழி....



நீண்ட நாள் முழுவதும்

கணத்திற்கு கணம்

நேர்மையாய், துணிவாய்,

உண்மையாய் உழைக்கிறவன்

கரங்களே அழகிய கரங்கள்




பொருள் ஆதாயங்களுக்காகவும், பரிசு, பாராட்டுகளுக்காகவும் பணியாற்றும் கலாச்சாரத்தை வேரறுத்து விடவேண்டும்



உலக வழக்கப்படி எனக்கு எந்த பரம்பரை சொத்தும் இல்லை. நான் எதையும் சம்பாதிக்கவில்லை. எதையும் கட்டி வைக்கவில்லை. என்னிடம் எதுவும் கிடையாது.

குடும்பம் மகன்கள் மகள்கள் யாருமே எனக்கு கிடையாது.

இந்த மாபெரும் நாட்டில்

நான் நன்றாகவே இருக்கிறேன்

இதன் கோடிக்கணக்கான

சிறுவர் சிறுமிகளை பார்க்கிறேன்

எனக்குள்ளிருந்து அவர்கள்

வற்றாத புனிதத்தை முகந்து

இறைவனின் அருளை

எங்கும் பரப்ப வேண்டும்

ஒரு கிணற்றிலிருந்து

நீர் இறைக்கிற மாதிரி
 
அஞ்சலி

பார்க்கலாம் என்றே பழகினோம்; வல்லமை
சேர்க்கலாம் இன்மையைத் தீர்க்கலாம் - சோர்வினைப்
போக்கலாம் என்றுசொன்ன போராளி நம்மைவிட்டே
ஏகலாம் என்றுசென்ற(து) ஏன்?

--ரமணி, 28/07/2015

*****
 
கீழைநாடான் மேற்கோள், ரமணி கவிதை இரண்டும் கலாம் அவர்கள் புகழுக்கு அணி சேர்க்கின்றன. நன்றி நண்பர்களுக்கு.
 
Back
Top